Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
நண்பர்கள் தின வாழ்த்துக்களோடு இந்த பதிவு.
6. மனச்சுமை
அந்த வீட்டின் முகப்பறையில் அரவிந்தன் தெளிவற்ற நிலையில் அமர்ந்திருக்க நளினி அவரிடம்,
"என்னங்க இது புது குழப்பம் ?" என்று மெலிதான குரலில் வினவினார்.
அரவிந்தன் பதில் பேசாமல் யோசனையோடு சபரியை பார்க்க, அவரோ அடங்கா கோபத்தோடு இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தார்.
யாருக்குமே இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்வதென்றே புரியவில்லை.
ரஞ்சன், சங்கீதா, மோகன் என்று மூவரும் அங்கேதான் இருந்தனர். அவர்களுக்கும் ஓரளவுக்கும் விஷயம் பிடிபட்டது.
இந்த விஷயம் மோகனுக்கு அதீத ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அதுவும் குருவை பற்றி தான் மரியாதையின்றி பேசிய போது ஷிவாணிக்கு ஏற்பட்ட கோபம் இயல்பானதல்ல என்பது இப்போது புரிந்தது.
தான்ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே. அது எத்தனை உண்மை என்று எண்ணிமிட்டு கொண்டான்.
ஆனால் நடந்தேறிய நிகழ்வை பற்றி இந்த நொடிவரை அறியாதவள் ஷிவானிதான்.
சபரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்திருக்க அரவிந்தன் அவரை பொறுமையோடு அணுகி,
"வேதாவை போய் சமாதானப்படுத்து சபரி" என்றார்.
தன் மாமனின் வார்த்தைக்கு மறுபேச்சே பேசமாட்டார் சபரி. அந்தளவுக்கு மரியாதை. விருப்பமில்லையெனினும் அவர் சொன்ன வார்த்தைக்காக தன் அறைக்கு சென்றார்.
"ஏன் மீ இப்படி அழுதிட்டிருக்கீங்க?... என்ன மீ ஆச்சு?" என்று ஷிவானி தன் அம்மாவிடம் கெஞ்சலாய் கேட்டு கொண்டிருக்க,
"நீ போ வாணிம்மா... நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன்" என்றார் சபரி இறுக்கமான பார்வையோடு!
ஷிவாணி குழப்பமுற தன் தந்தையை ஏறிட்டு, "என்னதான் நடந்துச்சு ? வந்துட்டு போனவர் யாரு டேட் ?" என்று கேள்வி எழுப்ப,
வேதா அந்த நொடியே தன் அழுகையை விழுங்கி கொண்டு, "பதில் சொல்லுங்க... உங்க பொண்ணு கேட்கிறா இல்ல" என்று கேட்டு தன் கணவனை உக்கிரமாய் நோக்கினார்.
அழுது சிவந்திருந்த அந்த விழிகளில் எவ்வளவு வலியும் வேதனை இருந்ததோ அந்தளவுக்கு கோபம் இருந்தது.
ஷிவானி இருவரையும் மாறி மாறி பார்க்க,
சபரிக்கும் கோபம் தலைதூக்கியது.
அவர் அதனை தன் மகள் முன்னிலையில் காட்டி கொள்ள விரும்பாமல், "வாணிம்மா நீ போ" என்றார்.
"நீ இங்கேயே இரு... எதுவாயிருந்தாலும் உன் டேட் உன் முன்னாடியே பேசட்டும்" என்று வேதா சொல்ல யார் சொல்வதை கேட்பதென்று புரியாமல் ஷிவானி ரொம்பவும் சங்கடமாய் உணர்ந்தாள்.
சபரி சிரமப்பட்டு தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவர், "வேண்டாம் வேதா... இந்த விஷயத்தை பத்தி பேசின்னா நமக்குள்ள தேவையில்லாம பிரச்சனைதான் வளரும்" என்று அமர்த்தலாகவே உரைக்க,
"முடியாது... எனக்கு இந்த விஷயத்தை பத்தி இப்பவே பேசனும்" என்று வேதா கோபமாய் உரைத்தார்.
"இரண்டு பேரும் எந்த விஷயத்தை பத்தி பேசிட்டிருக்கீங்க" என்று ஷிவானி இருவரிமும் பொதுப்படையாக கேள்வி எழுப்ப,
சபரிக்கு கோபம் பொங்கியது.
அவர் தன் மனைவியிடம், "வேதா விட்டுடு... அப்புறம் பேசிக்கலாம்" என்று பல்லை கடித்து கொண்டு சொல்ல,
"விட்டுடுவா... இது வரைக்கும் நான் உங்களுக்காக விட்டதெல்லாம் பத்தலயா? இன்னும் என்கிட்ட என்னங்க இருக்கு விடறதுக்கு" என்றவர் தாளமுடியாமல் முகத்தை புதைத்து கொண்டு கண்ணீர் வடிக்க, ஷிவானியின் மனம் ரொம்ப இளகியது.
"ப்ளீஸ் மீ... அழாதீங்க" என்றவளின்
விழியிலும் நீர் எட்டி பார்க்க, சபரிக்கு அந்த நொடி கோபத்தை விட்டொழித்தே தீர வேண்டிய கட்டாயம் நேரிட்டது.
"சரி... இப்போ என்னதான் பண்ணனும்ங்கிற" என்றவர் மனைவியிடம் இறங்க,கணவனை ஒரு சில நொடிகள் ஆச்சர்யமாய் பார்த்தவள் பின் சற்று தெளிவுபெற்று,
"நாம எல்லோருமா போய் சிவானி நிச்சியதார்த்தத்துக்கு எங்க குடும்பத்தில இருக்கிறவங்க மரியாதையா அழைக்கனும்" என்று அழுத்தமாய் வேதா சொல்லி முடித்த மறுகணம்,
சபரி அவரை எரிப்பது போல் பார்த்தார்.
அப்போது ஷிவானி,
"ஆமா ப்பா... நானே சொல்லனும்னு நினைச்சேன்... தாத்தா வீடு இங்கதானே இருக்கு... கூப்பிடுவோம்... எனக்கும் அவங்கள எல்லாம் பார்க்கனும் போல ஆசையா இருக்கு" என்றாள் ஆவல் ததும்பிய விழிகளோடு!
சபரி பொறுக்க முடியாமல், "என்ன பேசிற வாணி... அவங்க எல்லாம் சேர்ந்து அப்பாவை எப்படி அவமானப்படுத்தினாங்கன்னு உனக்கு நான் சொல்லி இருக்கேன் இல்ல... அதெல்லாம் நீ மறந்திட்டியா?" என்று கோபமாக கேட்கவும் ஷிவாணி குற்றவுணர்வோடு தலையை கவிழ்ந்து கொண்டாள்.
வேதா கணவனை பார்த்து, "என் பொண்ணுகிட்ட இப்படி சொல்லி சொல்லியே என் குடும்பத்தோடு ஓட்ட விடாம பண்ணிட்டீங்க இல்ல" என்றவர் சீற்றத்தோடு வினவ,
"ஆமான்டி ஓட்ட விடாம பண்ணிட்டேன்... எனக்கு உன் பொண்ணுக்கு அவங்க வேண்டாம்... நீ வேணா போய் ஓட்டிக்கோ" என்று வார்த்தைகளை கடித்து துப்பினார் சபரி.
பிரச்சனை தீவிரமாகி கொண்டே போவதை ஷிவானி கண்டுகொண்டாலும் கையறு நிலையில் அவள் என்ன செய்வதென்று புரியாமல் விழிக்க,
வேதா தன் கணவனை நோக்கி, "என் குடும்பம் வேண்டாம்னா நானும் வேண்டாம்... உங்க பொண்ணோட நிச்சியதார்த்தத்தை நீங்களே நடத்திக்கோங்க" என்று சொன்ன மறுகணம் சபரியும் ஷிவானியும் அதிர்ந்தனர்.
"என்ன மீ? இப்படியெல்லாம் சொல்றீங்க"
"வரலன்னா போடி... என் பொண்ணு நிச்சியதார்த்தத்தை எப்படி நடத்தனும்னு எனக்கு தெரியும்" என்று அசாதாரணமாய் சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து அகன்றுவிட,
வேதா விரக்தியுற தன் மகளை நோக்கி,
"பார்த்தியா வாணிம்மா... உங்க டேட் என்னை எவ்வளவு சுலபமா தூக்கி எறிஞ்சிட்டாருன்னு... அவருக்கு நான் முக்கியமே இல்லை... என் உணர்வுகளை பத்தி அவருக்கு கவலையே இல்லை... ஆனா நான் மட்டும் அவர் மானம் கௌரவம் எல்லாத்தை சாகிற வரைக்கும் தூக்கி சுமக்கனும்... சே... ஏன்டா பொம்பள ஜென்மமா பொறந்தோம்னு இருக்கு" என்று தலையில் அடித்து கொள்ள,
இவர்கள் இடையில் நிகழ்ந்த சம்பாஷணையில் அதிகமாய் காயப்பட்டு நின்றது ஷிவானிதான்.
வேதனையோடு அவள் அந்த அறையை விட்டு வெளியேற,
அப்போது சபரி நளினியிடமும் அரவிந்தனிடமும் தன் மனைவி சொன்னதை பாடமாய் படித்து கொண்டிருந்தார்.
ஷிவானி களையிழந்த முகத்தோடு அவர்கள் முன்னிலையில் வந்து நிற்க தன் மகள் கலங்கி நிற்பதை பார்த்தவர், "வாணிம்மா" என்றவர் அழைத்தபடி ஷிவானியின் அருகாமையில் செல்ல,
அவள் உடனே தன் தந்தையின் தோள் மீது சாய்ந்தபடி கண்ணீர் பெருக்க, அதனை பார்த்து அவர் உள்ளம் கலங்கி போனார்.
"என்ன வாணிம்மா?" வேதனையோடு அவர் கேட்க,
அவள் கண்ணீரோடு,
"ப்ளீஸ் டேட்... எனக்கு இந்த எங்கேஜ்மேன்ட் வேண்டாம்... இந்த விஷயத்துக்காக நீங்க இரண்டு பேரும் இப்படி சண்டை போட்டுகிறதை என்னால பார்க்க முடியல... ப்ளீஸ் நாம மலேசியாவுக்கே போயிடலாம்... " என்று தழுதழுத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தவளை அணைத்து பிடித்து அவர் அமைதியடைய செய்ய,
அவள் வெகுநேரம் தன் தந்தையிடம் அழுது அழுது உணவு உண்ணாமல் கூட உறங்கி போயிருந்தாள்.
இன்னமும் குழந்தைத்தனம் மாறாமல் இருந்த ஷிவாணியின் அந்த கண்ணீர் சபரியின் மனதை கரைத்திருந்தது.
அதே நேரம் ஆரவிந்தனும் சபரியிடம், "நாமெல்லாம் போய் வேதா வீட்டில இன்விடேஷன் வைச்சிட்டு வந்திருவோமே... அதுதான் முறையும் கூட" என்க,
சபரி ஆழமான யோசனையோடு, "அது மரியாதை தெரியாத குடும்பம் மாமா... பார்த்தீங்க இல்ல... காலையில அவ தம்பி... நாமெல்லாம் இருக்கும்னு மட்டு மரியாதை இல்லாம பேசிட்டு போனத" என்றதும் நளினி முந்திக் கொண்டு,
"ஆமா ஆமா... கொஞ்சங் கூட மரியாதையே தெரியாதவன்" என்றார்.
"நீ வேற சும்மா ஏத்திவிடாதே" என்று அரவிந்தன் மனைவியை அடக்கிவிட்டு,
சபரியிடம் திரும்பி, "கொஞ்சம் அந்த தம்பி நிலைமையில இருந்து யோசிச்சி பாரு சபரி... அவன் இடத்தில நீயும் உன் இடத்தில நானும் இருந்தா உனக்கும் இதே கோபம் வந்திருக்கும்" என்றார்.
சபரி கர்ஜனையான பார்வையோடு திரும்பியவன், "அப்போ அவங்க பக்கம்தான் நியாயம் இருக்குன்னு சொல்றீங்களா? நான் என்னைக்காவது மரியாதை குறைவா உங்ககிட்ட நடந்திருப்பேனா மாமா... ஆனா அந்த குடும்பத்தில இருக்கையவங்க நான் அந்த வீட்டோட மூத்த மருமகன் கூட பார்க்காம என்னை அவமானப்படுத்தினாங்க...
அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்... பிஸ்னஸ் பண்ண கொஞ்சம் பணம் கம்மியாயிருந்ததுன்னு கேட்டேன்... அதுக்கு பணத்துக்காகதான் என் பொண்ணை கல்யாணம் பண்ணிங்களான்னு அவங்க அப்பாரு கேட்டுட்டாரு... போதாக் குறைக்கு அவளோட சித்தப்பன் சித்தப்பன் மகன் அயித்தன் மகன்னு எல்லாம் என்னை அடிக்க கை ஓங்கின்னு வந்தானுங்க... அதை எல்லாம் நான் எப்படி மறக்க...
வேதாவை நான் காதலிச்சி கல்யாணம் பண்ணிட்டேன் என் எல்லாம் சேர்ந்து ஒரு சின்ன விஷயத்தை ஊதி பெரிசாக்கி... எங்க உறவையே அத்துவிட்டுட்டு...
இப்ப வந்து அவன் தம்பி கேட்கிறான்... அப்படி என்ன அவங்க ஐயனும் ஆத்தாவும் செஞ்சிட்டாங்கன்னு... பொடி பையன்... நடந்ததெல்லாம் அவனுக்கு என்ன தெரியும்... வந்துட்டா பெரிசா தாய்மாமனாம் இல்ல" என்றுரைக்கும் போதே அவர் முகம் அத்தனை உக்கிரமாய் மாறியிருந்தது.
அரவிந்தன் அவன் தோளை தொட்டு, "அப்ப என்ன பண்ணலாம்னு சபரி... நிச்சயத்துக்கான ஏற்பாடெல்லாம் நிறுத்திடலாமா?" என்று கேட்க,
நளினி பதறி கொண்டு, "என்னங்க பேசிறீங்க?" என்று அதிர சபரி அப்போது,
"எதுக்கு நிறுத்தினும்? அதெல்லாம் வேண்டாம்... அவங்கள போய் கூப்பிடனும் அவ்வளவுதானே... கூப்பிட்டா போச்சு" என்றவர் சொல்ல அரவிந்தனுக்கும் நளினிக்கும் மனம் லேசாய் நிம்மதி பெற்றது.
இந்த விஷயத்தை குறித்து வேண்டா வெறுப்பாய் மனைவிடம் சபரி சொல்ல வேதாவின் ஆதங்கமும் லேசாய் அடங்கியிருந்தது.
அவர்கள் எல்லோரும் வேதாவின் குடும்பத்தை நிச்சயத்திற்கு அழைக்க புறப்பட்டனர்.
குரு அப்போதுதான் மெஸ்ஸிலிருந்து கிளம்பி தன் வீட்டை அடைந்திருந்தான்.
பழமையை அப்படியே பறைசாற்றும் மச்சு வீடு அது. மனசோர்வோடு அப்படியே வீட்டின் வெளிதிண்ணையில் அமர்ந்து கொண்டான் குரு.
சுப்புவும் அவன் உடனிருந்தான்.
"என்னல... நானும் காலையில இருந்து பார்க்குதேன்... என்னவோ போல இருக்க... ஏதாச்சும் பிரச்சனையா வே" என்று கேட்க,
"ஏன்ல இப்படி கேள்வி கேட்டு என்னை உசுரை எடுக்க... கிளம்பு வே" என்று கோபமாக தன் நண்பனிடம் எகிறினான் குரு.
6. மனச்சுமை
அந்த வீட்டின் முகப்பறையில் அரவிந்தன் தெளிவற்ற நிலையில் அமர்ந்திருக்க நளினி அவரிடம்,
"என்னங்க இது புது குழப்பம் ?" என்று மெலிதான குரலில் வினவினார்.
அரவிந்தன் பதில் பேசாமல் யோசனையோடு சபரியை பார்க்க, அவரோ அடங்கா கோபத்தோடு இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தார்.
யாருக்குமே இந்த பிரச்சனையை எப்படி எதிர்கொள்வதென்றே புரியவில்லை.
ரஞ்சன், சங்கீதா, மோகன் என்று மூவரும் அங்கேதான் இருந்தனர். அவர்களுக்கும் ஓரளவுக்கும் விஷயம் பிடிபட்டது.
இந்த விஷயம் மோகனுக்கு அதீத ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அதுவும் குருவை பற்றி தான் மரியாதையின்றி பேசிய போது ஷிவாணிக்கு ஏற்பட்ட கோபம் இயல்பானதல்ல என்பது இப்போது புரிந்தது.
தான்ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே. அது எத்தனை உண்மை என்று எண்ணிமிட்டு கொண்டான்.
ஆனால் நடந்தேறிய நிகழ்வை பற்றி இந்த நொடிவரை அறியாதவள் ஷிவானிதான்.
சபரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்திருக்க அரவிந்தன் அவரை பொறுமையோடு அணுகி,
"வேதாவை போய் சமாதானப்படுத்து சபரி" என்றார்.
தன் மாமனின் வார்த்தைக்கு மறுபேச்சே பேசமாட்டார் சபரி. அந்தளவுக்கு மரியாதை. விருப்பமில்லையெனினும் அவர் சொன்ன வார்த்தைக்காக தன் அறைக்கு சென்றார்.
"ஏன் மீ இப்படி அழுதிட்டிருக்கீங்க?... என்ன மீ ஆச்சு?" என்று ஷிவானி தன் அம்மாவிடம் கெஞ்சலாய் கேட்டு கொண்டிருக்க,
"நீ போ வாணிம்மா... நான் அம்மாகிட்ட பேசிக்கிறேன்" என்றார் சபரி இறுக்கமான பார்வையோடு!
ஷிவாணி குழப்பமுற தன் தந்தையை ஏறிட்டு, "என்னதான் நடந்துச்சு ? வந்துட்டு போனவர் யாரு டேட் ?" என்று கேள்வி எழுப்ப,
வேதா அந்த நொடியே தன் அழுகையை விழுங்கி கொண்டு, "பதில் சொல்லுங்க... உங்க பொண்ணு கேட்கிறா இல்ல" என்று கேட்டு தன் கணவனை உக்கிரமாய் நோக்கினார்.
அழுது சிவந்திருந்த அந்த விழிகளில் எவ்வளவு வலியும் வேதனை இருந்ததோ அந்தளவுக்கு கோபம் இருந்தது.
ஷிவானி இருவரையும் மாறி மாறி பார்க்க,
சபரிக்கும் கோபம் தலைதூக்கியது.
அவர் அதனை தன் மகள் முன்னிலையில் காட்டி கொள்ள விரும்பாமல், "வாணிம்மா நீ போ" என்றார்.
"நீ இங்கேயே இரு... எதுவாயிருந்தாலும் உன் டேட் உன் முன்னாடியே பேசட்டும்" என்று வேதா சொல்ல யார் சொல்வதை கேட்பதென்று புரியாமல் ஷிவானி ரொம்பவும் சங்கடமாய் உணர்ந்தாள்.
சபரி சிரமப்பட்டு தன் கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவர், "வேண்டாம் வேதா... இந்த விஷயத்தை பத்தி பேசின்னா நமக்குள்ள தேவையில்லாம பிரச்சனைதான் வளரும்" என்று அமர்த்தலாகவே உரைக்க,
"முடியாது... எனக்கு இந்த விஷயத்தை பத்தி இப்பவே பேசனும்" என்று வேதா கோபமாய் உரைத்தார்.
"இரண்டு பேரும் எந்த விஷயத்தை பத்தி பேசிட்டிருக்கீங்க" என்று ஷிவானி இருவரிமும் பொதுப்படையாக கேள்வி எழுப்ப,
சபரிக்கு கோபம் பொங்கியது.
அவர் தன் மனைவியிடம், "வேதா விட்டுடு... அப்புறம் பேசிக்கலாம்" என்று பல்லை கடித்து கொண்டு சொல்ல,
"விட்டுடுவா... இது வரைக்கும் நான் உங்களுக்காக விட்டதெல்லாம் பத்தலயா? இன்னும் என்கிட்ட என்னங்க இருக்கு விடறதுக்கு" என்றவர் தாளமுடியாமல் முகத்தை புதைத்து கொண்டு கண்ணீர் வடிக்க, ஷிவானியின் மனம் ரொம்ப இளகியது.
"ப்ளீஸ் மீ... அழாதீங்க" என்றவளின்
விழியிலும் நீர் எட்டி பார்க்க, சபரிக்கு அந்த நொடி கோபத்தை விட்டொழித்தே தீர வேண்டிய கட்டாயம் நேரிட்டது.
"சரி... இப்போ என்னதான் பண்ணனும்ங்கிற" என்றவர் மனைவியிடம் இறங்க,கணவனை ஒரு சில நொடிகள் ஆச்சர்யமாய் பார்த்தவள் பின் சற்று தெளிவுபெற்று,
"நாம எல்லோருமா போய் சிவானி நிச்சியதார்த்தத்துக்கு எங்க குடும்பத்தில இருக்கிறவங்க மரியாதையா அழைக்கனும்" என்று அழுத்தமாய் வேதா சொல்லி முடித்த மறுகணம்,
சபரி அவரை எரிப்பது போல் பார்த்தார்.
அப்போது ஷிவானி,
"ஆமா ப்பா... நானே சொல்லனும்னு நினைச்சேன்... தாத்தா வீடு இங்கதானே இருக்கு... கூப்பிடுவோம்... எனக்கும் அவங்கள எல்லாம் பார்க்கனும் போல ஆசையா இருக்கு" என்றாள் ஆவல் ததும்பிய விழிகளோடு!
சபரி பொறுக்க முடியாமல், "என்ன பேசிற வாணி... அவங்க எல்லாம் சேர்ந்து அப்பாவை எப்படி அவமானப்படுத்தினாங்கன்னு உனக்கு நான் சொல்லி இருக்கேன் இல்ல... அதெல்லாம் நீ மறந்திட்டியா?" என்று கோபமாக கேட்கவும் ஷிவாணி குற்றவுணர்வோடு தலையை கவிழ்ந்து கொண்டாள்.
வேதா கணவனை பார்த்து, "என் பொண்ணுகிட்ட இப்படி சொல்லி சொல்லியே என் குடும்பத்தோடு ஓட்ட விடாம பண்ணிட்டீங்க இல்ல" என்றவர் சீற்றத்தோடு வினவ,
"ஆமான்டி ஓட்ட விடாம பண்ணிட்டேன்... எனக்கு உன் பொண்ணுக்கு அவங்க வேண்டாம்... நீ வேணா போய் ஓட்டிக்கோ" என்று வார்த்தைகளை கடித்து துப்பினார் சபரி.
பிரச்சனை தீவிரமாகி கொண்டே போவதை ஷிவானி கண்டுகொண்டாலும் கையறு நிலையில் அவள் என்ன செய்வதென்று புரியாமல் விழிக்க,
வேதா தன் கணவனை நோக்கி, "என் குடும்பம் வேண்டாம்னா நானும் வேண்டாம்... உங்க பொண்ணோட நிச்சியதார்த்தத்தை நீங்களே நடத்திக்கோங்க" என்று சொன்ன மறுகணம் சபரியும் ஷிவானியும் அதிர்ந்தனர்.
"என்ன மீ? இப்படியெல்லாம் சொல்றீங்க"
"வரலன்னா போடி... என் பொண்ணு நிச்சியதார்த்தத்தை எப்படி நடத்தனும்னு எனக்கு தெரியும்" என்று அசாதாரணமாய் சொல்லிவிட்டு அவர் அங்கிருந்து அகன்றுவிட,
வேதா விரக்தியுற தன் மகளை நோக்கி,
"பார்த்தியா வாணிம்மா... உங்க டேட் என்னை எவ்வளவு சுலபமா தூக்கி எறிஞ்சிட்டாருன்னு... அவருக்கு நான் முக்கியமே இல்லை... என் உணர்வுகளை பத்தி அவருக்கு கவலையே இல்லை... ஆனா நான் மட்டும் அவர் மானம் கௌரவம் எல்லாத்தை சாகிற வரைக்கும் தூக்கி சுமக்கனும்... சே... ஏன்டா பொம்பள ஜென்மமா பொறந்தோம்னு இருக்கு" என்று தலையில் அடித்து கொள்ள,
இவர்கள் இடையில் நிகழ்ந்த சம்பாஷணையில் அதிகமாய் காயப்பட்டு நின்றது ஷிவானிதான்.
வேதனையோடு அவள் அந்த அறையை விட்டு வெளியேற,
அப்போது சபரி நளினியிடமும் அரவிந்தனிடமும் தன் மனைவி சொன்னதை பாடமாய் படித்து கொண்டிருந்தார்.
ஷிவானி களையிழந்த முகத்தோடு அவர்கள் முன்னிலையில் வந்து நிற்க தன் மகள் கலங்கி நிற்பதை பார்த்தவர், "வாணிம்மா" என்றவர் அழைத்தபடி ஷிவானியின் அருகாமையில் செல்ல,
அவள் உடனே தன் தந்தையின் தோள் மீது சாய்ந்தபடி கண்ணீர் பெருக்க, அதனை பார்த்து அவர் உள்ளம் கலங்கி போனார்.
"என்ன வாணிம்மா?" வேதனையோடு அவர் கேட்க,
அவள் கண்ணீரோடு,
"ப்ளீஸ் டேட்... எனக்கு இந்த எங்கேஜ்மேன்ட் வேண்டாம்... இந்த விஷயத்துக்காக நீங்க இரண்டு பேரும் இப்படி சண்டை போட்டுகிறதை என்னால பார்க்க முடியல... ப்ளீஸ் நாம மலேசியாவுக்கே போயிடலாம்... " என்று தழுதழுத்த குரலில் சொல்லிக் கொண்டிருந்தவளை அணைத்து பிடித்து அவர் அமைதியடைய செய்ய,
அவள் வெகுநேரம் தன் தந்தையிடம் அழுது அழுது உணவு உண்ணாமல் கூட உறங்கி போயிருந்தாள்.
இன்னமும் குழந்தைத்தனம் மாறாமல் இருந்த ஷிவாணியின் அந்த கண்ணீர் சபரியின் மனதை கரைத்திருந்தது.
அதே நேரம் ஆரவிந்தனும் சபரியிடம், "நாமெல்லாம் போய் வேதா வீட்டில இன்விடேஷன் வைச்சிட்டு வந்திருவோமே... அதுதான் முறையும் கூட" என்க,
சபரி ஆழமான யோசனையோடு, "அது மரியாதை தெரியாத குடும்பம் மாமா... பார்த்தீங்க இல்ல... காலையில அவ தம்பி... நாமெல்லாம் இருக்கும்னு மட்டு மரியாதை இல்லாம பேசிட்டு போனத" என்றதும் நளினி முந்திக் கொண்டு,
"ஆமா ஆமா... கொஞ்சங் கூட மரியாதையே தெரியாதவன்" என்றார்.
"நீ வேற சும்மா ஏத்திவிடாதே" என்று அரவிந்தன் மனைவியை அடக்கிவிட்டு,
சபரியிடம் திரும்பி, "கொஞ்சம் அந்த தம்பி நிலைமையில இருந்து யோசிச்சி பாரு சபரி... அவன் இடத்தில நீயும் உன் இடத்தில நானும் இருந்தா உனக்கும் இதே கோபம் வந்திருக்கும்" என்றார்.
சபரி கர்ஜனையான பார்வையோடு திரும்பியவன், "அப்போ அவங்க பக்கம்தான் நியாயம் இருக்குன்னு சொல்றீங்களா? நான் என்னைக்காவது மரியாதை குறைவா உங்ககிட்ட நடந்திருப்பேனா மாமா... ஆனா அந்த குடும்பத்தில இருக்கையவங்க நான் அந்த வீட்டோட மூத்த மருமகன் கூட பார்க்காம என்னை அவமானப்படுத்தினாங்க...
அப்படி நான் என்ன தப்பு பண்ணிட்டேன்... பிஸ்னஸ் பண்ண கொஞ்சம் பணம் கம்மியாயிருந்ததுன்னு கேட்டேன்... அதுக்கு பணத்துக்காகதான் என் பொண்ணை கல்யாணம் பண்ணிங்களான்னு அவங்க அப்பாரு கேட்டுட்டாரு... போதாக் குறைக்கு அவளோட சித்தப்பன் சித்தப்பன் மகன் அயித்தன் மகன்னு எல்லாம் என்னை அடிக்க கை ஓங்கின்னு வந்தானுங்க... அதை எல்லாம் நான் எப்படி மறக்க...
வேதாவை நான் காதலிச்சி கல்யாணம் பண்ணிட்டேன் என் எல்லாம் சேர்ந்து ஒரு சின்ன விஷயத்தை ஊதி பெரிசாக்கி... எங்க உறவையே அத்துவிட்டுட்டு...
இப்ப வந்து அவன் தம்பி கேட்கிறான்... அப்படி என்ன அவங்க ஐயனும் ஆத்தாவும் செஞ்சிட்டாங்கன்னு... பொடி பையன்... நடந்ததெல்லாம் அவனுக்கு என்ன தெரியும்... வந்துட்டா பெரிசா தாய்மாமனாம் இல்ல" என்றுரைக்கும் போதே அவர் முகம் அத்தனை உக்கிரமாய் மாறியிருந்தது.
அரவிந்தன் அவன் தோளை தொட்டு, "அப்ப என்ன பண்ணலாம்னு சபரி... நிச்சயத்துக்கான ஏற்பாடெல்லாம் நிறுத்திடலாமா?" என்று கேட்க,
நளினி பதறி கொண்டு, "என்னங்க பேசிறீங்க?" என்று அதிர சபரி அப்போது,
"எதுக்கு நிறுத்தினும்? அதெல்லாம் வேண்டாம்... அவங்கள போய் கூப்பிடனும் அவ்வளவுதானே... கூப்பிட்டா போச்சு" என்றவர் சொல்ல அரவிந்தனுக்கும் நளினிக்கும் மனம் லேசாய் நிம்மதி பெற்றது.
இந்த விஷயத்தை குறித்து வேண்டா வெறுப்பாய் மனைவிடம் சபரி சொல்ல வேதாவின் ஆதங்கமும் லேசாய் அடங்கியிருந்தது.
அவர்கள் எல்லோரும் வேதாவின் குடும்பத்தை நிச்சயத்திற்கு அழைக்க புறப்பட்டனர்.
குரு அப்போதுதான் மெஸ்ஸிலிருந்து கிளம்பி தன் வீட்டை அடைந்திருந்தான்.
பழமையை அப்படியே பறைசாற்றும் மச்சு வீடு அது. மனசோர்வோடு அப்படியே வீட்டின் வெளிதிண்ணையில் அமர்ந்து கொண்டான் குரு.
சுப்புவும் அவன் உடனிருந்தான்.
"என்னல... நானும் காலையில இருந்து பார்க்குதேன்... என்னவோ போல இருக்க... ஏதாச்சும் பிரச்சனையா வே" என்று கேட்க,
"ஏன்ல இப்படி கேள்வி கேட்டு என்னை உசுரை எடுக்க... கிளம்பு வே" என்று கோபமாக தன் நண்பனிடம் எகிறினான் குரு.
Last edited: