• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kuyili 13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
ஹாய் ஃபிரண்ட்ஸ் ,

சாரி இன்னைக்கு கொஞ்சம் வேலை இருந்ததுனால பதிவு கொடுக்கிறது தாமதம் ஆகிவிட்டது .படிச்சுட்டு உங்க கருத்தை சொல்லுங்க.

கொஞ்சம் அவசரம் அவசரமாக எழுதியது .எழுத்துப் பிழை இருந்தால் பொறுத்துக் கொள்ளவும் .

வெண்பா .
 




Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
வீட்டுக்குச் சென்ற மயில்வாகனன் கிருபாவை நன்றாக கவனிக்க ஆரம்பித்தான். எல்லோரும் இருக்கும் பொழுது சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருப்பவள் யாரும் இல்லாத தனிமை நேரங்களில் பார்த்தால் சோகமாக அமர்ந்து வானத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்.
அனைவரும் ஒன்றாக அமர்ந்து தொலைக்காட்சி பார்க்கும் பொழுது கூட ஏதாவது காதல் காட்சிகள் வந்தால் உடனே யாருடைய கவனத்தையும் கவராமல் தன்னுடைய அறைக்கு எழுந்து சென்று விடுகிறாள்.

இது எல்லாம் ஒரு வாரமாக பார்த்துக் கொண்டிருந்த மயில்வாகனனிற்கு ஒருவேளை குயில் சொன்னது உண்மை தானோ என்று தோன்றியது.குயிலி சொல்லும் பொழுது கூட அப்படி எல்லாம் இருக்காது இவள் ஏதோ தப்பாக புரிந்து கொண்டிருக்கிறாள் என்று தான் நினைத்தான்.

ஏனெனில் அவளுக்கு இனிமேல் மற்ற பெண்களைப் போல் கல்யாணம் ஆகுமா என்று நினைத்து வருந்திக் கொண்டிருக்கலாம் என்று அவன் நினைத்தால் அவள் சொல்லியதை அவன் பெரிதாய் நினைக்கவில்லை.

இப்பொழுது அவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது ஒருவேளை உண்மையிலேயே கிருபாவுக்கு லவ் ஃபெயிலியர் ஆக இருக்குமா என்று யோசித்துக் கொண்டே இருந்தான் .பின்பு அவளுடைய ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் ஏதாவது லவ் ஃபெயிலியர் போஸ்ட் இருக்கா என்று பார்க்கலாம் என்று நினைத்தவன் அவளுடைய அக்கௌன்ட் தேட அவள் அதில் இல்லை என்பதைக் காட்டியது.

அவனுக்கு மிகவும் ஆச்சரியம் .ஏனென்றால் முன்பு எல்லாம் அவள் பேஸ்புக்கிலும் இன்ஸ்டாகிராமிலும் தான் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பாள்.அவள் செல்லும் இடங்களை எல்லாம் போட்டோ எடுத்து ஸ்டேடஸாக போட்டு விடுவாள்.முன்பு எல்லாம் எப்பொழுதும் போனும் கையுமாகத் தான் வலம் வந்து கொண்டிருப்பாள்.இந்த சம்பவத்திற்கு பிறகு தான் எல்லாம் முற்றிலுமாக மாறிவிட்டது.

மயில்வாகணன் கூட அவளை கடிந்து கொண்டு இருப்பான் இப்படியெல்லாம் அதிக நேரம் சோசியல் மீடியாவில் வேஸ்ட் பண்ணாதே என்று .ஆனால் அவள் அதைக் கேட்டதே கிடையாது.அவளுக்கு அது மிகவும் பிடித்தமான ஒன்று என்றதால் யாருடைய பேச்சையும் கேட்காமல் அதைப் பார்த்துக் கொண்டேதான் இருப்பாள்.

அடுத்த நாள் காலை அவளிடம் கேட்க "அது அந்த இன்ஸிடண்டிக்கு அப்புறம் அது எல்லாம் பிடிக்காம டேலிட் பண்ணிட்டேன்" என்று மலிப்பிவிட்டு அந்த இடத்தை விட்டு உடனே நகர்ந்து விட்டாள். அவனுக்கு அவள் பதிலில் திருப்தி இல்லை.

அந்தச் சம்பவத்திற்குப் பிறகு அவள் எதிலுமே ஈடுபாடு காட்டாமல் இருந்தால் .அவள் ஒருவேளை அதை உபயோகிக்காமல் இருந்திருந்தால் அவனுக்கு சந்தேகம் வந்து இருக்காது .ஆனால் அவள் அதை டெலிட் செய்தது அவனுக்கு மிகப்பெரிய சந்தேகத்தை உருவாக்கியது.

கிருபாவை பற்றி வேறு யாரிடமும் அவனால் கேட்க முடியவில்லை. ஏனெனில் அவனுடைய தங்கைகள் மற்றும் வீட்டு உறுப்பினர்கள் யாருக்கும் இந்த விஷயம் தெரியாது .அதனால் அவனே இதை ஹாண்டில் செய்ய நினைத்தான் அவள் குளிக்க சென்ற நேரம் அவனுடைய மொபைலை எடுத்தவன் வாட்ஸ் அப்பை ஓப்பன் செய்து அவளுடைய சேட் ஹிஸ்டிரீயைப் பார்த்தான்.

அவனுக்கு அவன் செய்வது தப்பு என்று தெரியும் இருந்தாலும் வேறுவழியில்லாமல் இதைச் செய்தான்.சேட்களை ஓபன் செய்யாமல் யாருடன் எல்லாம் பேசி இருக்கிறாள் என்று பார்த்தான். அவள் பேசியது எல்லாம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் மட்டுமே இருந்தது.

என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது கைத்தவறி கான்டக்ட் கிளிக் ஆகி விட அதில் முதல் காண்டாக்ட் ஆக அம்மு என்ற எண் இதயக் குறிபோட்டு பதிவாகி இருந்தது. யாருடா இந்த அம்மு என்று நினைத்தவன் வாட்ஸ் அப்பை ஓப்பன் பண்ணி பார்க்க அப்படியே அமர்ந்துவிட்டான்.

அந்த அம்மு என்று பதிவாகி இருந்த எண்ணிடம் எந்த சாட்டும் இல்லை. அந்த எண் பிளாக் செய்யப்பட்டிருந்தது.அப்பொழுது கிருபா வெளியே வரும் சத்தம் கேட்க உடனே போனை எடுத்த இடத்தில் வைத்தவன் தன் அறைக்குச் சென்று விட்டான்.

சிறிது நேரம் என்ன செய்யலாம் என்று யோசித்தவன் பின்பு அர்ஜுனை தொடர்பு கொண்டான்.அர்ஜுனன் தொடர்புகொண்டு தன்னுடைய தோட்டத்திற்கு வரச் சொன்னவன் அவனும் அங்கு சென்றான் .

அதற்குள் மயில்வாகனனனிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை .எதையோ நினைத்து பயந்து கடவுளிடம் எல்லாம் பிரார்த்தனை வைத்து இருந்தான்.அர்ஜுன் வந்ததும் அவனை ஒரு சங்கடமான முகபாவனையுடன் வரவேற்றவன் அவனிடம் நடந்த விஷயங்களைச் சொன்னான்.

ஒரு வாரம் கழித்து ...

அன்று செவ்வாய்க்கிழமை மாலை கல்லூரி முடிந்து வந்து கிருபா விடம் மயில்வாகனன் "நாம வெளியே போலாம் .கிளம்பி ஒரு செவன் ஓ க்ளாக் போல ரெடியாயிரு" என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் தொலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டு அப்படியே வெளியில் சென்றான்.

அவன் வரும்பொழுது அவள் கிளம்பாமல் இருக்க "கண்டிப்பா நீ வந்து தான் ஆகணும் கிருபா. எனக்கு ரொம்ப வேண்டிய பட்டவங்க...உன்னையும் அவங்களுக்கு நல்லா தெரியும். இன்னைக்கு உன்னையும் வர சொல்லி ரொம்ப கேட்டுக்கிட்டாங்க அதனால்தான் கூப்பிட்டேன்" என்று சொல்ல வேறு வழி இல்லாமல் கிளம்பிச் சென்றாள்.

எத்தனையோ முறை "யாரைப் பார்க்கப் போகிறோம்?" என்று கிருபா கேட்ட கேள்விக்கு மயில்வாகனன் சர்ப்ரைஸ் என்று சொல்லிக் கொண்டே காரை ஓட்டினான். போகும் பொழுது குயிலியின் வீட்டுக்குச் சென்று அவளையும் அழைத்துக்கொண்டு சென்றார்கள்.

குயிலியைப் பார்த்ததும் கிருபாவுக்கு உற்சாகமாகிவிட்டது ."நீங்களும் வரீங்களா?" என்று கேட்க "ஆமாடா பட்டு. என்னையும் இன்வைட் பண்ணிருக்காங்க"என்று சொல்ல "அக்கா யாரைப் பார்க்கப் போகிறோம்?" என்று அவளிடமும் கேட்க மெல்லிய புன்னகை உதிர்த்த குயிலி "அங்க போய் பார்த்துக்கலாம்" என்றாள்.

வெண்மேகம் ஹோட்டலில் குடில்கள் தள்ளித்தள்ளி அமைக்கப்பட்டிருக்கும்.அந்த ஹோட்டலின் முன்பு கார் சென்று நின்றது .கிருபாவால் இறங்கவே முடியவில்லை .அந்த ஹோட்டலை ஏதோ பேயைப் பார்ப்பது போல் பார்த்து வைத்தாள்.

இரண்டு மூன்று முறை குயிலி அவளை அழைத்தவுடன் தான் நிமிர்ந்து குயிலியைப் பார்த்தவள் பின்பு காரிலிருந்து இறங்கினாள்.அந்த குடிலுக்கு உள்ளே டேபிள்கள் போடப்பட்டு இருக்கும். உள்ளே சென்ற கிருபா அங்கு உட்கார்ந்திருந்தவனைப்
 




Last edited:

Venba

SM Exclusive
Author
Joined
Mar 25, 2018
Messages
1,217
Reaction score
3,967
Location
Coimbatore
பார்த்தவுடன்அப்படியே நின்று விட்டாள் .அவளால் நிற்க கூட முடியவில்லை குயிலியின் கையை பிடித்துக் கொண்டாள்.

எவ்வளவு முயன்றும் கண்களில் கண்ணீர் துளி இரண்டு வந்துவிட்டது.கண்ணை துடைப்பது போல் யாருக்கும் தெரியாமல் அதைத் துடைத்தவளை யாரும் பார்க்கவில்லை என்றாலும் சுஜித் பார்த்துவிட்டான்.

சுஜித் அர்ஜுனின் தம்பி. அர்ஜுன் தான் இவர்களை "வாங்க !வாங்க!" என்று வரவேற்றான்.சுஜித் கிருபாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனுடைய பார்வையை சந்திக்க முடியாத கிருபா அப்படியே தலை குனிந்து விட்டாள்.

எல்லோரும் அமர்ந்ததும் மயில்வாகனன் கிருபாவிடம்" இது நம்ம சுஜித் தோட ட்ரீட் தான் கிருபா .அவன் தான் உன்னை கண்டிப்பா கூட்டிட்டு வரணும் என்று சொன்னான்"என்றான். "நீயும் அவனும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் தானே. அதனாலதான் அவன் உன்னையும் கூட்டிட்டு வர சொன்னான்.அவன்கிட்ட உன்னோட கான்டக்ட் நம்பர் இல்லையாம்மா" என்றவன் பின்பு சிரித்துக்கொண்டே "அவன் கிட்ட நம்ம எல்லோருக்கும் எதுக்கு ட்ரீட் வைக்கிறான் என்று கேளு கிருபா" என்றான்.

அவள் ஒன்றும் கேட்காமல் மீண்டும் மயில்வாகனனையேபார்த்தாள்.இதைப் பார்த்த அர்ஜுன்" உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாச்சும் சண்டையா?ஏன் வந்ததிலிருந்து ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லை ?" என்று கேட்ககிருபா பதட்டமாக சுஜித்தை பார்த்தாள்.

ஆனால் அவன் தன்னிடம் கேள்வி கேட்கவில்லை என்பது போல் அமைதியாக அமர்ந்து இருக்க வேறு வழி இல்லாமல் கிருபாவை "அப்படியெல்லாம் இல்லை அண்ணா .பார்த்து ரொம்ப நாளாச்சு இல்ல அது தான் எப்படி பேசறதுன்னு தெரியல" என்று மழுப்ப அதற்குள் வெயிட்டர் வந்து விட்டார்.

அர்ஜுனிடம் ஏதோ பேசி சமாளித்தவள் பின்பு சுஜித்தை பார்க்க அவன் கண்களில் அப்படி ஒரு கோபம் இருந்தது .வந்ததிலிருந்து யாருடனும் பேசாமல் இருந்தவன் இப்பொழுது பேச ஆரம்பித்தான்" சண்டை எல்லாம் இல்லனா. மேடம் கொஞ்சம் ரொம்ப பிஸியா இருந்ததால அவங்க என்கிட்ட பேசலை" என்று அவள் முகத்தை பார்த்துக் கொண்டே சொல்ல சுஜித்தை ஒரு பார்வை பார்த்த கிருபா அப்படியே தலை குனிந்து கொண்டாள்.
அவன் தூரமாக இருக்கும் பொழுது அவன் வேண்டாம் என்று சொன்ன மனம் இப்பொழுது பக்கத்தில் பார்க்கும்போது அவன் கண்டிப்பாக வேண்டும் என்று சொல்ல என்ன செய்வது என்று தெரியாமல் அந்தப் பாவையாள் மிகவும் நொந்து போனாள்.
சுஜித் அவளை ஆராய்ச்சி கண்ணோடு பார்த்துக் கொண்டிருந்தான்.அவளுடைய முகம் அவனுக்கு கலையிலந்து போய் இருந்ததைப் போல் இருந்தது. அவளுடைய வெண்மை நிறம் சற்று மட்டுப்பட்டிருந்தது.நல்ல அடர்த்தியான முடி இப்பொழுது காணாமல் போய் முடி மிகவும் சன்னமாக இருந்தது .

அவளிடம் அவன் உணர்ந்த மிகப்பெரிய வித்தியாசம் அன்று அவள் சுடிதாரில் வந்திருந்தாள்.எப்பொழுதும் கிருபாவிற்கு மாடர்ன் உடைகள் என்றால் பிரியம் ஜாஸ்தி. எப்பொழுதும் அதையே அணிய விரும்புவாள்.சுஜித் அவளை அதட்டி உருட்டி மிரட்டியதால் மட்டுமே சின்ன உடைகளை அவள் அணிய மாட்டாள்.

அவள் சிறுவயதில் யுஎஸ்ஸில் வளர்ந்ததால் அவளுக்கு அது தப்பாகத் தெரியவில்லை. ஜீன்ஸ், டியூனிக் டாப்ஸ் ,ஸ்கேர்ட்ஸ் போன்ற ஆடைகள் அவளிடம் ஏராளம் இருந்தன. ஆனால் சுடிதார் மட்டும் எப்பொழுதும் இருக்காது. எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் சுஜித்தால் அந்தப் பழக்கத்தை மட்டும் மாற்ற முடியவில்லை.

காலேஜுக்கு கூட லேக்கின் டாப் தான் அணிந்து செல்வாள்.கேட்டால் "எனக்கு துப்பட்டா போடறது ரொம்ப அன்கம்பர்டபுலாக இருக்கு"என்று சொல்வாள்.சுஜித் எவ்வளவோ முறை அவளை ஆடை மாற்றச் சொல்லி அவள் கேட்கவே இல்லை. அவனும் அவளுடன் சண்டை போட்டுப் பார்த்து விட்டான்,கெஞ்சிப் பார்த்துவிட்டான்,கொஞ்சி பார்த்துவிட்டான் எதற்கும் அவள் பிடிகொடுக்கவில்லை.

ஒரு கட்டத்துக்கு மேல் அவனும் ஒன்றும் செய்ய முடியாமல் அவளை விட்டு விட்டான். ஆனால் இப்பொழுது அவளை சுடிதாரில் பார்த்தவுடன் அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகிவிட்டது.

தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த அர்ஜுன் மயில்வாகனனும் இப்பொழுது தங்கள் பேச்சுக்குள் மற்ற மூவரையும் இழுத்தனர். மயில்வாகனன் கிருபா விடம் "இன்னைக்கு சுஜித் ஏன் ட்ரீட் கொடுக்கிறான் அப்படின்னா அவன் யூ எஸ் ல இருக்குற ஒரு தமிழ் பொண்ண லவ் பண்ணிட்டு இருக்கான் .அடுத்த மாசம் அவளை இங்கே கூட்டிட்டு வரானாம் "என்றான்.

கேட்ட கிருபாவின் காதுகள் அதை நம்பவில்லை அதற்குப் பிறகு மயில்வாகனன் பேசியது எதுவும் அவளுக்கு கேட்கவில்லை.கண்களில் கண்ணீர் வந்து விட்டது அவள் குனிந்து கொண்டு இருந்ததால் அவள் அழுவது யாருக்கும் தெரியவில்லை .

இரண்டு நிமிடத்திற்கு மேல் பேசிய மயில்வாகனன் பின்பு அவளிடம் ஒன்றும் பதில் வராதுபோக மயில்வாகனன் குயிலியைப் பார்க்க குயிலி அவளைத் தொட்டு எழுப்ப அவளிடமிருந்து பதில் வரவே இல்லை.

" கிருபா என்ன ஆச்சு?"என்று பயந்து போன குயிலி அவள் முகத்தை நிமிர்த்த அவள் வலுக்கட்டாயமாக முகத்தை நிமிர்த்தி வில்லை.பின்பு கண்ணீரைத் துடைத்தவள் நிமிர்ந்தாள் .முகம் செக்கச்செவேலென்று சிவந்திருந்தது.

கமரிய தொண்டையை சரி செய்தவள் "நான் கொஞ்சம் ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிட்டு வரேன்" என்றவள் அப்படியே எழுந்து அங்கிருந்தே பின் பக்கத்திற்கு சென்று விட்டாள்.

அங்கு ஒரு செயற்கைக்குளம் அமைத்து இருந்தனர். அதற்கு பக்கத்தில் பெஞ்சுகள் போடப்பட்டிருக்க அந்த பெஞ்ச் ஒன்றில் சென்று அமர்ந்தவள் தலையை கால்களின் மேல் வைத்துகுலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.

அவள்தான் இனி தான் சுஜித்திற்கு வேண்டாம் என்று எண்ணி அவனை விட்டு வந்தாள். ஆனால் இப்பொழுது அவன் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்தவுடன் அவளால் அதைத் தாங்க முடியவில்லை.குலுங்கி குலுங்கி அழுதவளின் அருகில் ஒரு நிழல் தெரிந்தது ....

குயிலி புதனன்று வருவாள் ...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top