பார்த்தவுடன்அப்படியே நின்று விட்டாள் .அவளால் நிற்க கூட முடியவில்லை குயிலியின் கையை பிடித்துக் கொண்டாள்.
எவ்வளவு முயன்றும் கண்களில் கண்ணீர் துளி இரண்டு வந்துவிட்டது.கண்ணை துடைப்பது போல் யாருக்கும் தெரியாமல் அதைத் துடைத்தவளை யாரும் பார்க்கவில்லை என்றாலும் சுஜித் பார்த்துவிட்டான்.
சுஜித் அர்ஜுனின் தம்பி. அர்ஜுன் தான் இவர்களை "வாங்க !வாங்க!" என்று வரவேற்றான்.சுஜித் கிருபாவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனுடைய பார்வையை சந்திக்க முடியாத கிருபா அப்படியே தலை குனிந்து விட்டாள்.
எல்லோரும் அமர்ந்ததும் மயில்வாகனன் கிருபாவிடம்" இது நம்ம சுஜித் தோட ட்ரீட் தான் கிருபா .அவன் தான் உன்னை கண்டிப்பா கூட்டிட்டு வரணும் என்று சொன்னான்"என்றான். "நீயும் அவனும் நல்ல ஃப்ரெண்ட்ஸ் தானே. அதனாலதான் அவன் உன்னையும் கூட்டிட்டு வர சொன்னான்.அவன்கிட்ட உன்னோட கான்டக்ட் நம்பர் இல்லையாம்மா" என்றவன் பின்பு சிரித்துக்கொண்டே "அவன் கிட்ட நம்ம எல்லோருக்கும் எதுக்கு ட்ரீட் வைக்கிறான் என்று கேளு கிருபா" என்றான்.
அவள் ஒன்றும் கேட்காமல் மீண்டும் மயில்வாகனனையேபார்த்தாள்.இதைப் பார்த்த அர்ஜுன்" உங்க ரெண்டு பேருக்குள்ள ஏதாச்சும் சண்டையா?ஏன் வந்ததிலிருந்து ரெண்டு பேரும் பேசிக்கவே இல்லை ?" என்று கேட்ககிருபா பதட்டமாக சுஜித்தை பார்த்தாள்.
ஆனால் அவன் தன்னிடம் கேள்வி கேட்கவில்லை என்பது போல் அமைதியாக அமர்ந்து இருக்க வேறு வழி இல்லாமல் கிருபாவை "அப்படியெல்லாம் இல்லை அண்ணா .பார்த்து ரொம்ப நாளாச்சு இல்ல அது தான் எப்படி பேசறதுன்னு தெரியல" என்று மழுப்ப அதற்குள் வெயிட்டர் வந்து விட்டார்.
அர்ஜுனிடம் ஏதோ பேசி சமாளித்தவள் பின்பு சுஜித்தை பார்க்க அவன் கண்களில் அப்படி ஒரு கோபம் இருந்தது .வந்ததிலிருந்து யாருடனும் பேசாமல் இருந்தவன் இப்பொழுது பேச ஆரம்பித்தான்" சண்டை எல்லாம் இல்லனா. மேடம் கொஞ்சம் ரொம்ப பிஸியா இருந்ததால அவங்க என்கிட்ட பேசலை" என்று அவள் முகத்தை பார்த்துக் கொண்டே சொல்ல சுஜித்தை ஒரு பார்வை பார்த்த கிருபா அப்படியே தலை குனிந்து கொண்டாள்.
அவன் தூரமாக இருக்கும் பொழுது அவன் வேண்டாம் என்று சொன்ன மனம் இப்பொழுது பக்கத்தில் பார்க்கும்போது அவன் கண்டிப்பாக வேண்டும் என்று சொல்ல என்ன செய்வது என்று தெரியாமல் அந்தப் பாவையாள் மிகவும் நொந்து போனாள்.
சுஜித் அவளை ஆராய்ச்சி கண்ணோடு பார்த்துக் கொண்டிருந்தான்.அவளுடைய முகம் அவனுக்கு கலையிலந்து போய் இருந்ததைப் போல் இருந்தது. அவளுடைய வெண்மை நிறம் சற்று மட்டுப்பட்டிருந்தது.நல்ல அடர்த்தியான முடி இப்பொழுது காணாமல் போய் முடி மிகவும் சன்னமாக இருந்தது .
அவளிடம் அவன் உணர்ந்த மிகப்பெரிய வித்தியாசம் அன்று அவள் சுடிதாரில் வந்திருந்தாள்.எப்பொழுதும் கிருபாவிற்கு மாடர்ன் உடைகள் என்றால் பிரியம் ஜாஸ்தி. எப்பொழுதும் அதையே அணிய விரும்புவாள்.சுஜித் அவளை அதட்டி உருட்டி மிரட்டியதால் மட்டுமே சின்ன உடைகளை அவள் அணிய மாட்டாள்.
அவள் சிறுவயதில் யுஎஸ்ஸில் வளர்ந்ததால் அவளுக்கு அது தப்பாகத் தெரியவில்லை. ஜீன்ஸ், டியூனிக் டாப்ஸ் ,ஸ்கேர்ட்ஸ் போன்ற ஆடைகள் அவளிடம் ஏராளம் இருந்தன. ஆனால் சுடிதார் மட்டும் எப்பொழுதும் இருக்காது. எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் சுஜித்தால் அந்தப் பழக்கத்தை மட்டும் மாற்ற முடியவில்லை.
காலேஜுக்கு கூட லேக்கின் டாப் தான் அணிந்து செல்வாள்.கேட்டால் "எனக்கு துப்பட்டா போடறது ரொம்ப அன்கம்பர்டபுலாக இருக்கு"என்று சொல்வாள்.சுஜித் எவ்வளவோ முறை அவளை ஆடை மாற்றச் சொல்லி அவள் கேட்கவே இல்லை. அவனும் அவளுடன் சண்டை போட்டுப் பார்த்து விட்டான்,கெஞ்சிப் பார்த்துவிட்டான்,கொஞ்சி பார்த்துவிட்டான் எதற்கும் அவள் பிடிகொடுக்கவில்லை.
ஒரு கட்டத்துக்கு மேல் அவனும் ஒன்றும் செய்ய முடியாமல் அவளை விட்டு விட்டான். ஆனால் இப்பொழுது அவளை சுடிதாரில் பார்த்தவுடன் அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகிவிட்டது.
தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்த அர்ஜுன் மயில்வாகனனும் இப்பொழுது தங்கள் பேச்சுக்குள் மற்ற மூவரையும் இழுத்தனர். மயில்வாகனன் கிருபா விடம் "இன்னைக்கு சுஜித் ஏன் ட்ரீட் கொடுக்கிறான் அப்படின்னா அவன் யூ எஸ் ல இருக்குற ஒரு தமிழ் பொண்ண லவ் பண்ணிட்டு இருக்கான் .அடுத்த மாசம் அவளை இங்கே கூட்டிட்டு வரானாம் "என்றான்.
கேட்ட கிருபாவின் காதுகள் அதை நம்பவில்லை அதற்குப் பிறகு மயில்வாகனன் பேசியது எதுவும் அவளுக்கு கேட்கவில்லை.கண்களில் கண்ணீர் வந்து விட்டது அவள் குனிந்து கொண்டு இருந்ததால் அவள் அழுவது யாருக்கும் தெரியவில்லை .
இரண்டு நிமிடத்திற்கு மேல் பேசிய மயில்வாகனன் பின்பு அவளிடம் ஒன்றும் பதில் வராதுபோக மயில்வாகனன் குயிலியைப் பார்க்க குயிலி அவளைத் தொட்டு எழுப்ப அவளிடமிருந்து பதில் வரவே இல்லை.
" கிருபா என்ன ஆச்சு?"என்று பயந்து போன குயிலி அவள் முகத்தை நிமிர்த்த அவள் வலுக்கட்டாயமாக முகத்தை நிமிர்த்தி வில்லை.பின்பு கண்ணீரைத் துடைத்தவள் நிமிர்ந்தாள் .முகம் செக்கச்செவேலென்று சிவந்திருந்தது.
கமரிய தொண்டையை சரி செய்தவள் "நான் கொஞ்சம் ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிட்டு வரேன்" என்றவள் அப்படியே எழுந்து அங்கிருந்தே பின் பக்கத்திற்கு சென்று விட்டாள்.
அங்கு ஒரு செயற்கைக்குளம் அமைத்து இருந்தனர். அதற்கு பக்கத்தில் பெஞ்சுகள் போடப்பட்டிருக்க அந்த பெஞ்ச் ஒன்றில் சென்று அமர்ந்தவள் தலையை கால்களின் மேல் வைத்துகுலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்து விட்டாள்.
அவள்தான் இனி தான் சுஜித்திற்கு வேண்டாம் என்று எண்ணி அவனை விட்டு வந்தாள். ஆனால் இப்பொழுது அவன் வேறு ஒரு பெண்ணை விரும்புகிறான் என்று தெரிந்தவுடன் அவளால் அதைத் தாங்க முடியவில்லை.குலுங்கி குலுங்கி அழுதவளின் அருகில் ஒரு நிழல் தெரிந்தது ....
குயிலி புதனன்று வருவாள் ...