• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Love Guru -1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhagyasivakumar

மண்டலாதிபதி
Author
Joined
Jul 29, 2019
Messages
171
Reaction score
335
Location
Tamilnad
வழக்கமாக லவ் குரு நிகழ்ச்சி அந்த ரேடியோவில் ஒளிபரப்பாகி கொண்டிருக்க "நீங்கள் பார்க்கும் இந்த நிகழ்ச்சி 91.1fm...நான் உங்க லவ் குரு அடுத்து யாருன்னா நம்ப ராதா சொல்லியிருக்காங்க அவங்களோட அழகான காதல் கதையை பற்றி என்னனு பார்த்திங்கன்னா "இரண்டு பேரும் உயிருக்கு உயிரா காதலிச்சி காதல் கைகூடாமல் இரண்டு பேரும் பிரிந்து தனிமையில் வாட...அவருக்கு தற்போது கல்யாணம் ஆகிவிட்ட நிலையில் ராதா.....பழைய காதலை நினைத்து நினைத்து கல்யாணம் செய்து கொள்ளாமலே வாழ....இப்படிப்பட்ட உண்மையான காதல் இன்னும் வாழந்துகொண்டு தான் இருக்கிறது என்று லவ் குரு சொல்வதை நம் கதாநாயகி "வீரா" அதைக்கேட்டு கொண்டிருக்க....பக்கத்தில் இருந்த அவளுடைய ஹாஸ்டல் ரூம்மெட் சத்யா"ஏய் மச்சி இந்த நிகழ்ச்சி கேக்காத டி...லவ் பன்ற ஆசையே போயிடும் ஒழுங்கா படுத்து தூங்கு . நாளைக்கு செமஸ்டர் வேற படிச்சதே மறந்துரும் போல....

ஹாஹா அதெல்லாம் உனக்கு நேக்கு மெமரி ஸ்டோரேஜ் அதிகம் ????

Rowdy calling ..

Rowdy calling ...

னு அழைப்பு வர...வீரா அதை ஆன் செய்து "ஹலோ உனக்கு என்ன இப்ப???எதுக்கு எப்ப பாரு கால் பண்ணி தொல்லை பண்ற??என்று கேட்க

"உன்னை கட்டிக்க தான்". என்று பதில் வந்தது

"என்ன???நீ என்னையே கட்டிக்க போறியா...??நீயே ஒரு ரவுடி அன்னைக்கு ஒரு அப்பாவிய போட்டு அந்த அடி அடிச்சிட்டு இருந்த..உனக்கு லவ்வா ??? அப்படினா என்னனு தெரியுமா டா உனக்கு???"என்று அவள் கேட்க

"கொஞ்சம் நிறுத்து அவன் ஒன்னும் அப்பாவி எல்லாம் இல்லை.... உன் பின்னாடி சுத்துனான் அதான் அடிச்சன். லவ்வுனு பெருசா எனக்கு ஒன்னும் தெரியாது ஆனால் எனக்கு உன்னை புடிச்சிருக்கு அம்புட்டு தான்." என்று சற்று விரைப்பாக கூற

"இங்க பாரு உன் எண்ணம் வேறு என் எண்ணம் வேறு நீ ....எனக்கும் என் குடும்பத்துக்கும் சரிவரமாட்ட புரியுதா தயவு செய்து என் வழில என்னை விடு ப்ளீஸ்."

அவனும் போனை வச்சிட்டு எதுவும் பேசாதவனாய் மௌனம் காத்திருக்க அன்றிரவு அப்படியே கழிந்தது.
........................................

மாங்கல்யம் தந்துனானேனா மவஜீவன ஏத்துனா....னு மந்திரங்கள் முழங்க வீராவுக்கும் அந்த ரவுடி (தனுஷ்) க்கும் திருமணம் நடைப்பெற்றது .
(நான் மேல சொன்னதுக்கும் கல்யாணம் ஆனதுக்கும் இடையே 4 மாத இடைவேளி)

எப்படி எலியும் பூனையுமா இருந்த இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆச்சு ?? ஒரு வேளை பயங்கரமா இம்ப்ரஸ் பண்ணியிருப்பானோ. ???ஒருவேளை காலம் இவங்களை சேர்த்து வச்சதோ ????

எதுவாக இருந்தாலும் போக போக தெரியும். சரி வாங்க இப்ப என்ன நடக்கிறது னு பார்ப்போம்.

"ஹலோ...னு சிட்டிகை போட்டு கூப்பிட்ட வீராவை பார்த்து என்ன என்று புருவம் அசைத்தான் தனுஷ்."

"இங்க பாருங்க ரவுடி சார் ...ஏதோ கல்யாணம் பண்ணிட்டிங்க... அதுக்காக அட்வாண்டேஜ் எடுக்கலானு நினைச்சிறாதிங்க புரியுதா . என்னோட படுக்கை கீழ தான் எப்பவுமே .

"ஓ.....இதை தான் சொல்ல வந்தியா என் அன்பு ராட்சசியே????உன் உடலுக்கு ஆசைப்பட்டு காதலிச்சனு தப்பு கணக்கு போடாத புரியுதா. நான் உன்னை கல்யாணம் பன்ன காரணம் வேற.....ஓகே வா..குட் நைட்."

என்ன ????வேற என்ன காரணம் இருக்கும் ஏதோ புதுசா சொல்றானே இவன். ஏய் இப்ப சொல்லு என்ன காரணம் என்னை கல்யாணம் பன்னதுக்கு??

"ஒன்னுல...இப்ப அதெல்லாம் சொல்ல அவசியம் இல்லை. ஆனால் என்னோட தேவை பூர்த்தி ஆனவுடன் நானே உன்னை விட்டு போயிடுவேன் வீரா பை....இப்போதைக்கு குட்நைட் னு சொல்லிட்டு பெட்டில் சாய்ந்து படுத்துக்கொண்டு உறங்கினான். ஆனால் அவளுக்கு தான் தூக்கமே வரவில்லை. மறுநாள் எப்பவும் போல கிளம்பி காலேஜ் க்கு போயிட்டா. அவளுடைய மாமனார் தான் வண்டியில் விட்டாரு . காலேஜ் வாசலில் இருந்து வகுப்பறையை நோக்கி நடந்து வந்துக்கொண்டிருக்க சத்யாவும் சக தோழிகளும் சூழ்ந்து கொள்ள "என்ன டி நேத்து ??? தடபுடலாக நடந்தது போல முதலிரவு னு நக்கலா கேக்க....அவர்களை முறைத்தபடி நடந்தாள். எல்லோரும் விலகி செல்ல ........சத்யா மட்டும் அவளிடம் "மச்சி என்ன நடந்தது" னு வினவ....

"எதுவும் தங்களுக்குள் நடக்கவில்லை அவன் என் கழுத்தில் தாலி கட்டியதுக்கும் காரணம் வேறு "என்றபடி பதிலளிக்க சத்யாவுக்கு அதிர்ச்சி.
அன்று வகுப்பு முடிந்ததுமே கூட்டிட்டு போக மாமனார் வருவாறு என்று காத்திருந்த வீராவுக்கு அதிர்ச்சி ஏனெனில் வந்தது தனுஷ்.

"ஏய் ரவுடி நீயேன் வந்த உங்க...அப்பா தானே வருவதாக சொன்னார்" என்று சற்று கோபத்துடன் கேள்வியை அவன் முன் சமர்ப்பிக்க

"ஹாஹா இனி நான் தான் வருவேன் கவலையே படாத." என்று கண் சிமிட்டியபடி தனுஷ் நக்கலடிக்க..

இந்த சூழ்நிலையை கையாளும் விதமாக தன் அருகில் இருக்கும் தோழியிடம் "ஏய் சத்யா நீயும் வாடி ட்ரிபில்ஸ் போலாம் " வீரா அழைக்க

"நான் வரலை தாயே நீ போ...." சொல்லிவிட்டு அவள் அந்த இடத்தை விட்டு அடி எடுத்து செல்ல.

மீண்டும் அவளை நிறுத்தி கட்டாய படுத்தி மூவரும் பைக்கில் சென்றனர். மூவரும் போகும் வழியெங்கும் அமைதியே வெல்லும் என்பது போல் மௌனமாக இருக்க சட்டென்று "ஏம்மா தங்கச்சி உனக்கு எப்ப கல்யாணம் னு தனுஷ் கேக்க...."

"அண்ணே எனக்கு கல்யாணம் வேணாம்."என்று சத்யா பதிலளிக்க

எதுக்கு??? என்று வினவியவுடன்

"ம்ம்ம் நடக்கிறது எல்லாம் பார்த்தா பயமா இருக்கிறது அதான் கல்யாணம் வேணாம் சொன்னேன்..." என்று ஜாடமாடையில் வீராவை நோக்கி அவள் உரைக்க

"ஹாஹா எங்க கதை வேற தங்கச்சி நீ இதையெல்லாம் பார்த்து பயந்து கல்யாணம் வேணானு விட்றாத சரி சரி உங்க வீடு எங்க சொல்லு இறக்கி விடுறேன். "

"ம்ம்ம் இதோ வீடு கிட்டயே வந்தாச்சு அண்ணே....இறக்கி விடுங்க பை". என்று சத்யா கிளம்ப. இப்போ வீராவும் தனுஷும் பைக்கில் தனியே அமர்ந்து வீட்டை நோக்கி செல்லும் சூழ்நிலை..இருவரும் சமாதானத்தோடு செல்வார்களா?

தொடரும்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top