Madhumitha
மண்டலாதிபதி
வல்லமை தாராயோ 25 – மதுமிதா
சுரேகாவின் மாமியாருக்கு உடல்நலமில்லையென்று அவரைப் பார்க்க ராதா வந்திருந்தாள்.
வயோதிகத்தின் காரணமாக நடக்கும்போது லேசான தடுமாற்றம் இருக்கிறது. லோ பிரஷருக்கான மாத்திரை மட்டும் தினமும் தொடர்ந்து மறந்து விடாமல் சாப்பிடணும். வேறு பிரச்சினை இல்லை என்று டாக்டர் சொல்லி இருந்தார்.
குசல விசாரிப்புகளுக்குப் பிறகு இப்போது என்ன எழுதுகிறாய் என்று ராதா சுரேகாவை கேட்டாள்.
வல்லமை தாராயோ ங்கிற தலைப்பில் 15 அத்தியாயங்கள் எழுதி இருக்கிறேன். பாரேன் என்று லேப்டாப்பைத் திறந்தாள்.
இதுல எப்ப நான் படிக்கிறது. படிக்கிற புத்தகமா இல்லையா
புத்தகமாவா… புத்தகமெல்லாம் எப்போ வருமோ… நம்ம லைப்ரரி விஷயத்தை கொஞ்சம் எழுதினேன் ராதா. அப்புறம் அதை எடுக்காம அப்படியே வெச்சுட்டேன். எப்படி வந்திருக்குதுன்னு பார்த்து சொல்லேன். நீ நான் நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இதுல இருக்கிறோம்… நம்ம போராட்டம் எல்லாமும் இதுல வருது…
அசோக் உள்ளே வருவது தெரிந்ததும், லேப்டாப்பை மூடிவைத்தாள்.
பிரிண்ட் அவுட் எடுத்து வெச்சிருந்தேன். எங்கே வெச்சேன்னு தெரியல.
நாளைக்கு பிரிண்ட் அவுட் எங்கே இருக்குன்னு பாத்து தேடி எடுத்து குடுக்கிறேன் ராதா என்றாள்.
எழுந்து பின்வாசல் கதவைத் திறக்க வந்தவள் சட்டென நினைவு வந்து
நிலைக்கண்ணாடிக்கு அருகில் இருந்த செல்பில் இருந்த பிரிண்ட் அவுட்டை ராதாவிடம் கொடுத்தாள்.
மூக்குக்கண்ணாடிக்குள் இருக்கும் கண்கள் மின்ன அதை வாங்கிக்கொண்டு வீட்டின் பின் வாசல் வழியாக ராதா கிளம்பிப் போய்விட்டாள்.
என்னம்மா எழுதறே. ராதாட்ட சொல்லிட்டு இருந்தியே என்றார் அத்தை.
லைப்ரரி விஷயத்தை எழுதிட்டிருக்கேன் அத்தை. அதைச் சொன்னேன்.
இருங்க உங்க மகன் வந்தாச்சு. அவருக்கு சாப்பாடு வெச்சுட்டு வந்துடறேன்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உன்னோடது எங்கே வெச்சிருக்கிறே சுரேகா என்றபடி உள்ளே வந்தான் அசோக்.
நீங்க தாங்க பத்திரமா உங்க போட்டோவோட சேர்த்து எடுத்து வெச்சிருந்தீங்க
இதையெல்லாம் எப்படி பத்திரமா வெச்சுக்கணும்னு நினைவிருக்காது. மத்த வேலையெல்லாம் சரியா செய்வே
அமைதியாக எதுக்கு போட்டோ எப்போ வேணும் என்று கூட கேட்காமல் எதுவும் பேசாமல் உள்ளே போனாள்.
மறுநாள் மாலையில் ராதா வந்தாள்.
வா வா ராதா
முழுக்க படிச்சுட்டேன் சுரேகா. நல்லா இருக்கு.
நல்லா இருக்குங்கறது இருக்கட்டும். இதுல வாசிக்கிறப்போ இருக்குற குறைகள் எதுனா இருந்தா அதைப் பத்தி சொன்னீன்னா. சரி செய்ய தோதாக இருக்கும் ராதா. பத்தாவது அத்தியாயம் எழுத வர்றப்போ மூணாவது நாலாவது அத்தியாயத்தில் இப்படி வேற மாதிரி மாத்தி எழுதி இருக்கலாமேன்னு தோணுது. வாசக பார்வையில் வாசிக்கிறவங்களுக்கு வாசிக்கப் பிடிக்கிறது போல எழுதறது முக்கியமில்லையா…
ஆமா எனக்கும் சில இடங்கள்ல அப்படி இருக்குன்னு தோணுது. ஆனா நல்லா தான் எழுதி இருக்கிறே
எங்கே வாசிக்கும் போது இங்க சரி செய்தால் நல்லா இருக்குனு அப்படி தோணுது அதைத்தான் சொல்லேன் ராதா. அதை வெச்சு நான் சரி பண்ணிக்கிறேன்
எழுதுனது நல்லா இருக்கு. நிகழ்வுகள் எல்லாம் நல்லா இருக்கு. ஆனா எல்லாமே போராட்டம் கொலை மரணம்னு சோகமா இருக்கிறார் போலயே இருக்குது சுரேகா.
குழந்தை பொறந்தது, கல்யாண விஷயம்னு கலந்துதான் எல்லாம் எழுத நினைத்திருந்தேன் தான். சரி செஞ்சு எழுதறேன்.
வேற எனக்கு சொல்லத் தெரியல சுரேகா. எல்லாமே எனக்குத் தெரிஞ்ச நிகழ்வுகளா இருக்கிறதுனால, நானும் லைப்ரரி விஷயங்கள்ல கூடவே இருந்ததுனால, நம்ம லைப்ரரிக்குத் தொடர்பில்லாத வேற யாராவது இதை வாசிச்சுட்டு சொன்னால் தான் சரியா வரும்.
வேற யாருகிட்ட காட்டறதுன்னு தெரியலயே…
சரி எழுதி என்ன பண்ணப்போறே. எதுனா போட்டிக்கு அனுப்பப் போறியா
இப்ப எதுவும் முடிவு பண்ணல. நினைவில் இருக்கிறதை எழுதி வெச்சுடணும்னு மட்டும் தான் எழுதி இருக்கிறேன். எந்தப் போட்டிக்கும் அனுப்பற எண்ணம் இல்ல. ஆனா எழுத ஆரம்பிச்சதும் வருகிற ஒரு போதை இருக்கில்ல அது பிடிச்சிருக்கு.
போதையா பிடிச்சிருக்கா… அதென்ன போதை…
இல்ல ராதா எழுத உட்காரும் வரையில நான் வேறாக இருக்கிறேன். எழுத உட்கார்ந்துட்டா என்ன பண்ணறேன்னு எனக்கே தெரியல. எழுதி முடிச்ச பிறகு பார்க்கும்போது இத்தனையும் நானே எழுதினதான்னு தோணுது. அதனால தான் அப்படியே எழுதிடறேன். பின்னாடி சரி செஞ்சுக்கலாம். இந்த ஃப்ளோவை நிறுத்த வேணாம்னு. அதனால் தான் எங்கேயெல்லாம் சரி செய்யணும்னு கேக்கறேன்.
அப்போ நான் சொல்லறதைக் கேளு. நல்லா எழுதறே. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கதை போல நல்லா இருக்கு. ஆனா தனித்தனியா இருக்கு. தினமலர் வாரமலர்லயும் கல்கியிலயும் சிறுகதைப் போட்டி இந்த வாரம் அறிவிச்சிருக்கிறாங்க. அதுக்கு எழுதி அனுப்பேன்.
சிறுகதைப் போட்டிக்கு எழுத நேரம் இருந்தா அப்போ பாத்துக்கலாம். அதுவும் இதுபோல தானா எழுதறது போல நடந்தா அப்போ அனுப்பிக்கலாம். இப்போ ஒவ்வொரு அத்தியாயத்திலயும் தனித்தனியா இருக்கிற மாதிரி தோணுற எல்லாத்தையும் எப்படி நாவல்ல இணைக்கலாம்னு கத்துக்கிட்டா சரி செஞ்சுடலாம். நாவல் எப்படி எழுதறதுன்னு தெரியாமலே தான் 15 அத்தியாயம் வரைக்கும் வந்திருக்கு. அதே மாதிரி எல்லாத்தையும் இணைச்சு நாவாலா ஆக்கறதையும் கத்துக்கிட்டா போச்சு.
அப்போ நாவல் எழுத கத்துக்க தான் எழுதினயா
இல்ல ராதா. இத்தனை வருட நூலக போராட்டமும் ஒரு ஆவணமா இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன். அரசாங்கம் இந்த விஷயத்துல எப்படி நடந்துக்குது… உயிர்ப்போராட்ட விஷயங்களில் கவனம் செலுத்தாதது போல… கண் துடைப்பு போல செயல்படுகிற அரசைப் பத்தி எழுத நினைக்கிறேன். ஆனா அதை எப்படி எழுதணும்னு தெரியாததால தோணினபடி எழுதி வெச்சிருக்கிறேன்.
ஏன் சுரேகா இப்படியே இருக்கிறே. ஆரம்பத்தில் இருந்தது போலவே இப்பவும் இத்தனை வருஷத்துக்குப் பிறகும் இப்படியே இருக்கிறே. என்று தணியும் உன் நூலக மோகம்…
கையை நீட்டி நாடகபாணியில் என்று தணியும் உன் நூலக மோகம் என்று ராதா கூறியதும் விழுந்து விழுந்து சிரித்தாள் சுரேகா.
சட்டென முகம் மாறியது. தீவிரமான முகத்துடன் ராதாவை தீர்க்கமாகப் பார்த்தாள்.
இந்த உயிர் போகும் வரையிலும் இப்படிதான் இருக்க முடியும் ராதா.
இப்படி பேசாதே சுரேகா. இதென்ன பழக்கம்
சரி நம்ம நூலகத்துக்கு இடம் கிடைக்கிற வரையிலும்னு வெச்சுக்கோயேன்
ஒருவேளை கிடைக்கலைன்னா
ம் ஒரு வேளை நம்ம நூலகத்துக்கு சொந்தமா இடம் கிடைக்கலைன்னா… அது இந்த அரசாங்கத்துக்கான தோல்வி ராதா. நான் இப்போ எழுதறது அதுக்கு ஆதாரமா என்னிக்கும் இருக்கும்.
சுரேகாவின் மாமியாருக்கு உடல்நலமில்லையென்று அவரைப் பார்க்க ராதா வந்திருந்தாள்.
வயோதிகத்தின் காரணமாக நடக்கும்போது லேசான தடுமாற்றம் இருக்கிறது. லோ பிரஷருக்கான மாத்திரை மட்டும் தினமும் தொடர்ந்து மறந்து விடாமல் சாப்பிடணும். வேறு பிரச்சினை இல்லை என்று டாக்டர் சொல்லி இருந்தார்.
குசல விசாரிப்புகளுக்குப் பிறகு இப்போது என்ன எழுதுகிறாய் என்று ராதா சுரேகாவை கேட்டாள்.
வல்லமை தாராயோ ங்கிற தலைப்பில் 15 அத்தியாயங்கள் எழுதி இருக்கிறேன். பாரேன் என்று லேப்டாப்பைத் திறந்தாள்.
இதுல எப்ப நான் படிக்கிறது. படிக்கிற புத்தகமா இல்லையா
புத்தகமாவா… புத்தகமெல்லாம் எப்போ வருமோ… நம்ம லைப்ரரி விஷயத்தை கொஞ்சம் எழுதினேன் ராதா. அப்புறம் அதை எடுக்காம அப்படியே வெச்சுட்டேன். எப்படி வந்திருக்குதுன்னு பார்த்து சொல்லேன். நீ நான் நம்ம ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இதுல இருக்கிறோம்… நம்ம போராட்டம் எல்லாமும் இதுல வருது…
அசோக் உள்ளே வருவது தெரிந்ததும், லேப்டாப்பை மூடிவைத்தாள்.
பிரிண்ட் அவுட் எடுத்து வெச்சிருந்தேன். எங்கே வெச்சேன்னு தெரியல.
நாளைக்கு பிரிண்ட் அவுட் எங்கே இருக்குன்னு பாத்து தேடி எடுத்து குடுக்கிறேன் ராதா என்றாள்.
எழுந்து பின்வாசல் கதவைத் திறக்க வந்தவள் சட்டென நினைவு வந்து
நிலைக்கண்ணாடிக்கு அருகில் இருந்த செல்பில் இருந்த பிரிண்ட் அவுட்டை ராதாவிடம் கொடுத்தாள்.
மூக்குக்கண்ணாடிக்குள் இருக்கும் கண்கள் மின்ன அதை வாங்கிக்கொண்டு வீட்டின் பின் வாசல் வழியாக ராதா கிளம்பிப் போய்விட்டாள்.
என்னம்மா எழுதறே. ராதாட்ட சொல்லிட்டு இருந்தியே என்றார் அத்தை.
லைப்ரரி விஷயத்தை எழுதிட்டிருக்கேன் அத்தை. அதைச் சொன்னேன்.
இருங்க உங்க மகன் வந்தாச்சு. அவருக்கு சாப்பாடு வெச்சுட்டு வந்துடறேன்.
பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உன்னோடது எங்கே வெச்சிருக்கிறே சுரேகா என்றபடி உள்ளே வந்தான் அசோக்.
நீங்க தாங்க பத்திரமா உங்க போட்டோவோட சேர்த்து எடுத்து வெச்சிருந்தீங்க
இதையெல்லாம் எப்படி பத்திரமா வெச்சுக்கணும்னு நினைவிருக்காது. மத்த வேலையெல்லாம் சரியா செய்வே
அமைதியாக எதுக்கு போட்டோ எப்போ வேணும் என்று கூட கேட்காமல் எதுவும் பேசாமல் உள்ளே போனாள்.
மறுநாள் மாலையில் ராதா வந்தாள்.
வா வா ராதா
முழுக்க படிச்சுட்டேன் சுரேகா. நல்லா இருக்கு.
நல்லா இருக்குங்கறது இருக்கட்டும். இதுல வாசிக்கிறப்போ இருக்குற குறைகள் எதுனா இருந்தா அதைப் பத்தி சொன்னீன்னா. சரி செய்ய தோதாக இருக்கும் ராதா. பத்தாவது அத்தியாயம் எழுத வர்றப்போ மூணாவது நாலாவது அத்தியாயத்தில் இப்படி வேற மாதிரி மாத்தி எழுதி இருக்கலாமேன்னு தோணுது. வாசக பார்வையில் வாசிக்கிறவங்களுக்கு வாசிக்கப் பிடிக்கிறது போல எழுதறது முக்கியமில்லையா…
ஆமா எனக்கும் சில இடங்கள்ல அப்படி இருக்குன்னு தோணுது. ஆனா நல்லா தான் எழுதி இருக்கிறே
எங்கே வாசிக்கும் போது இங்க சரி செய்தால் நல்லா இருக்குனு அப்படி தோணுது அதைத்தான் சொல்லேன் ராதா. அதை வெச்சு நான் சரி பண்ணிக்கிறேன்
எழுதுனது நல்லா இருக்கு. நிகழ்வுகள் எல்லாம் நல்லா இருக்கு. ஆனா எல்லாமே போராட்டம் கொலை மரணம்னு சோகமா இருக்கிறார் போலயே இருக்குது சுரேகா.
குழந்தை பொறந்தது, கல்யாண விஷயம்னு கலந்துதான் எல்லாம் எழுத நினைத்திருந்தேன் தான். சரி செஞ்சு எழுதறேன்.
வேற எனக்கு சொல்லத் தெரியல சுரேகா. எல்லாமே எனக்குத் தெரிஞ்ச நிகழ்வுகளா இருக்கிறதுனால, நானும் லைப்ரரி விஷயங்கள்ல கூடவே இருந்ததுனால, நம்ம லைப்ரரிக்குத் தொடர்பில்லாத வேற யாராவது இதை வாசிச்சுட்டு சொன்னால் தான் சரியா வரும்.
வேற யாருகிட்ட காட்டறதுன்னு தெரியலயே…
சரி எழுதி என்ன பண்ணப்போறே. எதுனா போட்டிக்கு அனுப்பப் போறியா
இப்ப எதுவும் முடிவு பண்ணல. நினைவில் இருக்கிறதை எழுதி வெச்சுடணும்னு மட்டும் தான் எழுதி இருக்கிறேன். எந்தப் போட்டிக்கும் அனுப்பற எண்ணம் இல்ல. ஆனா எழுத ஆரம்பிச்சதும் வருகிற ஒரு போதை இருக்கில்ல அது பிடிச்சிருக்கு.
போதையா பிடிச்சிருக்கா… அதென்ன போதை…
இல்ல ராதா எழுத உட்காரும் வரையில நான் வேறாக இருக்கிறேன். எழுத உட்கார்ந்துட்டா என்ன பண்ணறேன்னு எனக்கே தெரியல. எழுதி முடிச்ச பிறகு பார்க்கும்போது இத்தனையும் நானே எழுதினதான்னு தோணுது. அதனால தான் அப்படியே எழுதிடறேன். பின்னாடி சரி செஞ்சுக்கலாம். இந்த ஃப்ளோவை நிறுத்த வேணாம்னு. அதனால் தான் எங்கேயெல்லாம் சரி செய்யணும்னு கேக்கறேன்.
அப்போ நான் சொல்லறதைக் கேளு. நல்லா எழுதறே. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கதை போல நல்லா இருக்கு. ஆனா தனித்தனியா இருக்கு. தினமலர் வாரமலர்லயும் கல்கியிலயும் சிறுகதைப் போட்டி இந்த வாரம் அறிவிச்சிருக்கிறாங்க. அதுக்கு எழுதி அனுப்பேன்.
சிறுகதைப் போட்டிக்கு எழுத நேரம் இருந்தா அப்போ பாத்துக்கலாம். அதுவும் இதுபோல தானா எழுதறது போல நடந்தா அப்போ அனுப்பிக்கலாம். இப்போ ஒவ்வொரு அத்தியாயத்திலயும் தனித்தனியா இருக்கிற மாதிரி தோணுற எல்லாத்தையும் எப்படி நாவல்ல இணைக்கலாம்னு கத்துக்கிட்டா சரி செஞ்சுடலாம். நாவல் எப்படி எழுதறதுன்னு தெரியாமலே தான் 15 அத்தியாயம் வரைக்கும் வந்திருக்கு. அதே மாதிரி எல்லாத்தையும் இணைச்சு நாவாலா ஆக்கறதையும் கத்துக்கிட்டா போச்சு.
அப்போ நாவல் எழுத கத்துக்க தான் எழுதினயா
இல்ல ராதா. இத்தனை வருட நூலக போராட்டமும் ஒரு ஆவணமா இருந்தா நல்லா இருக்குமேன்னு நினைச்சேன். அரசாங்கம் இந்த விஷயத்துல எப்படி நடந்துக்குது… உயிர்ப்போராட்ட விஷயங்களில் கவனம் செலுத்தாதது போல… கண் துடைப்பு போல செயல்படுகிற அரசைப் பத்தி எழுத நினைக்கிறேன். ஆனா அதை எப்படி எழுதணும்னு தெரியாததால தோணினபடி எழுதி வெச்சிருக்கிறேன்.
ஏன் சுரேகா இப்படியே இருக்கிறே. ஆரம்பத்தில் இருந்தது போலவே இப்பவும் இத்தனை வருஷத்துக்குப் பிறகும் இப்படியே இருக்கிறே. என்று தணியும் உன் நூலக மோகம்…
கையை நீட்டி நாடகபாணியில் என்று தணியும் உன் நூலக மோகம் என்று ராதா கூறியதும் விழுந்து விழுந்து சிரித்தாள் சுரேகா.
சட்டென முகம் மாறியது. தீவிரமான முகத்துடன் ராதாவை தீர்க்கமாகப் பார்த்தாள்.
இந்த உயிர் போகும் வரையிலும் இப்படிதான் இருக்க முடியும் ராதா.
இப்படி பேசாதே சுரேகா. இதென்ன பழக்கம்
சரி நம்ம நூலகத்துக்கு இடம் கிடைக்கிற வரையிலும்னு வெச்சுக்கோயேன்
ஒருவேளை கிடைக்கலைன்னா
ம் ஒரு வேளை நம்ம நூலகத்துக்கு சொந்தமா இடம் கிடைக்கலைன்னா… அது இந்த அரசாங்கத்துக்கான தோல்வி ராதா. நான் இப்போ எழுதறது அதுக்கு ஆதாரமா என்னிக்கும் இருக்கும்.