Madhumitha
மண்டலாதிபதி
வல்லமை தாராயோ 29 – மதுமிதா
துளி அமைப்பில் ஆரம்ப நாளிலிருந்து இணைந்து செயல்படுவதில் சுரேகாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதிலும் தான் எழுதிய கதையிலிருந்து ராம்குமார் என்னும் அதே பெயருடன், அதே அபுதாபியிலிருந்து, தென்றல்நகரின் நீராதாரங்களை இயற்கை வளங்களைக் காக்கும் முயற்சியில் அத்தனை ஈடுபாட்டுடன் ஊர்ப் பாசத்துடன் நேரில் வந்து நின்றவனைப் பார்த்து, தான் எழுதிய கதாபாத்திரம் அப்படியே உயிருடன் முன்னால் வந்து நின்றதில் பெரிதும் உவப்படைந்தாள்.
கட்சி சார்பற்ற, இன, சாதி, மத பேதமில்லாத, தலைவர் தொண்டர் பேதமில்லாது, உறுப்பினர் ஒவ்வொருவருமே பொறுப்புடன் செயல்படும் அமைப்பாக துளி அமைப்பு இருந்தது.
Save Water Thendralnagar என்று ஆரம்பிக்கப்பட்ட சேவை அமைப்பு 'துளி' என்னும் பெயருடன் தென்றல்நகர் பகுதியில் உள்ள ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர் ஆதாரங்களில் தூர் வாரி சுத்தப்படுத்தவும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த விதையினை அனைவரின் உள்ளங்களிலும் ஊன்றியவன் ராம்குமார்.
தென்றல்நகரின் இயற்கை வளத்தை பாதுகாக்கும் முனைப்பு இருந்த ஒவ்வொருவரும் இதில் மனமுவந்து கலந்து கொண்டனர். இன்னும் ஊருக்காக சேவைப் பணியாற்ற விரும்புவோரும் துளி அமைப்பில் இணைந்து வருகின்றனர்.
தென்றல் நகரில் இந்த அமைப்பின் முதல் கூட்டம் ஆரம்பித்த பின்பு முதல் சேவைப் பணியாக கடம்பன்குளம் கண்மாயில் தூர் வாரும்பணி நடைபெற்றது.
ஒற்றுமையுடன் இணைந்து இராஜபாளைய வளங்களை காப்போம். வருக.
என்று அப்போது பேஸ்புக்கில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.
சுரேகாவும் தன்னுடைய முகநூலில் மகிழ்வுடன் அந்த செய்தியைப் பகிர்ந்துகொண்டாள்.
தென்றல் நகரில் துளி அமைப்பின் முதல் கூட்டம் ஆரம்பித்த பின்பு முதல் சேவைப் பணியாக கடம்பன்குளம் கண்மாயில் தூர் வாரும்பணி நடைபெற்றது.
அக்டோபர் 23 ஆம் நாள் நடந்த இந்தப் பணியில் தென்றல்நகர் கல்லூரி மாணவர்களும், பாய்ஸ் டவுன் பள்ளி மாணவர்களும், வாழும் கலை அமைப்பு உறுப்பினர்களும், தன்னார்வத்தொண்டர்களும், சேவை அமைப்புகளும் இணைந்து கடம்பன்குளம் கண்மாயில் இறங்கி தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
அக்டோபர் 27 ஆம் நாள் தென்றல்நகரில் பாரதி நகர், ஆர். ஆர். நகர், அரசு மருத்துவமனை, திருவனந்தபுரம் தெரு ஆகிய இடங்களில் 'துளி' அமைப்பிலிருந்து இருநூறு மரக்கன்றுகள் நடப்பட்டன.
இது ஒரு இயக்கமாக சிறுதுளி பெருவெள்ளமாக வளர்ந்து வருகிறது.
திங்கள் கிழமை 7.11.2016 மாலை துளி அமைப்பின் கூட்டம் லட்சுமி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. துளி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டு அவரவர் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள்:
1. சீமைக் கருவேல மரங்கள் முற்றிலும் ஒழிப்பு,
2. முக்கிய கண்மாய்களை தூர்வாரும் பணி,
3. தூய்மையான இராஜை என்ற இலக்கை அடைய அனைவரின் ஒத்துழைப்பு.
முதற்கட்டமாக சீமைக் கருவேல மரங்களை அழிக்க அரசுடன் இணைந்து துளி அமைப்பும், பள்ளி கல்லூரி மாணவர்களும், வாழும் கலை இயக்கத்தை சேர்ந்தவர்களும் ஒன்று கூடி பணியாற்றினோம். இது குறித்து நம் துளி அமைப்பினர் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்த அமைப்புடன் இணைந்து பணியாற்ற விரும்பும் பொதுமக்கள் துளி பேஸ்புக் பேஜின் இன்பாக்சில் தொடர்பு கொள்ளலாம்.
இணைந்து செயல்படுவோம் அனைவரும். நம்
தென்றல்நகரை வரும் சந்ததிகளுக்கு வளத்துடன் பாதுகாத்து அளிப்போம்.
துளி பேஜ் கவர் போட்டோவினை ஷேர் செய்துள்ளேன்.
லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
இது வரையில் ஆரம்பத்திலிருந்து நடந்த பணிகளின் அனைத்து விபரங்களும் இங்கே படங்களுடன் அளித்துள்ளனர்.
துளி அமைப்பில் சேவைப் பணியில் இணைந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
சேவைப் பணி மென்மேலும் சிறக்கட்டும் துளி நிறுவனர் ராம்குமார் மற்றும் துளி குழுவினருக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்.
பெரண்டைக்குளம் கண்மாய் சீமைக்கருவேலமரம் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் இந்தப் புகைப்படம் அதற்கென நிகழ்ந்த சீரிய அர்ப்பணிப்புணர்வுடன் நிகழ்ந்த சேவைப்பணியை உங்களுக்கு உணர்த்தும்.
இனி வரும் ஒரு மழைக்காலத்தில் முன்பைப் போலவே இந்தக் கண்மாயில் நீர் நிறைந்திருக்க அதையும் இப்படி புகைப்படம் எடுத்து இங்கே அளிக்கும் நாள் தொலைவில் இல்லை.
இனி் தூர் வாருவதும் சாலையில் வேலி அமைப்பதும் அடுத்த கட்ட பணிகள்.
தென்றல்நகரில் துளி அமைப்பின் இந்த செயல்பாடுகளுக்கு பொருளாதார உதவிகள் செய்ய விரும்புபவர்கள் செய்யலாம். தன்னார்வத் தொண்டர்களாக உதவி செய்யலாம். இவை சாத்தியமில்லை என்பவர்களும் வாழ்த்தி moral support அளிக்கலாம்.
இப்படி எழுதி முகநூலில் பகிர்ந்துகொண்டு தன் மகிழ்வை வெளிப்படுத்தினாள்.
***
துளியின் அடுத்த நிகழ்வாக மேலே குறிப்பிடப்பட்ட பிரண்டைக் குளம் கண்மாயில் சீமைக்கருவேலமரங்களை அகற்றி தூர்வாரும் பணி செய்ய பேரணி நிகழ்ச்சி நிச்சயிக்கப்பட்ட நாளில் நூலகத்துக்கான அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவ வரும் நபரை சந்திக்க இருப்பதை முதலிலேயே எதுவும் குறிப்பாகவும் தெரிவித்திருக்கவில்லை.
தென்றல்நகர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அவர்களையும் அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் ஊர் மக்களையும் சேர்ந்து பிளாஸ்டிக் பைகள் தண்ணீர் பாட்டில்கள் குப்பையாக சேரும் அவலத்தினை மாற்றும் விழிப்புணர்வுப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. துளி அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களும், உறுப்பினர்களும் இரண்டு இரண்டு பேராக ஒவ்வொரு பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று மாணவச் செல்வங்களை, குறிப்பிட்ட நாள் ஞாயிறு காலை எட்டு மணிக்குள் தாலுகா அலுவலகம் முன்பு ஒன்று கூட வேண்டும் பன்னிரண்டு மணிக்குள் திரும்பி விடலாம் என்று இந்த விபரங்கள் இருக்கும் அறிக்கையைக் கொடுத்து வந்தனர்.
பேரணியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அவர்கள் பெயர்களில் சர்டிபிகேட் கொடுக்க முடிவு செய்து, நிகழ்வு முடிந்ததும், யார் யார் எந்தப் பள்ளியில் கல்லூரியில் அழைப்பு கொடுக்க சென்றார்களோ அவர்களே அந்தந்த பள்ளி கல்லூரிகளுக்குப்போய் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கொடுக்க ஒப்புக் கொண்டனர்.
சிலர் ரூபாவின் பள்ளியில் இரண்டு நாட்கள் நேரம் ஒதுக்கிச் சேர்ந்து, பேரணியில் செல்லும்போது எடுத்துச் செல்ல வாசகங்கள் பொறித்த அறிவிப்புப் பலகைகளைத் தயார் செய்தனர்.
சத்தாக சாப்பிடுவதற்கு சத்து மாவு உருண்டையும், குடிப்பதற்கு சுக்கு மல்லிக்காப்பியும் அரவிந்த் ஹெர்பலில் இருந்த தர ஒப்புக்கொண்டனர்.
சனிக்கிழமை மாலை மறுநாளுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்காக முக்கிய உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. குழு பிரிக்கப்பட்டு யார் யார் எந்த குழுவில் இருக்க வேண்டும் என்ன செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு குழுவுக்கும் முன்னால் பாதுகாப்பாக சில மாணவர்கள் போக வேண்டும். துளி அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள் ஒரு ஆண் ஒரு பெண் முன்னால் பக்கவாட்டில் இருக்க வேண்டும். பள்ளி மாணவிகள் நடுவில் இருக்க வேண்டும். உடன் வரும் ஆசிரியர்களும் இருக்கலாம். அதே போல் பின்னால் துளி உறுப்பினர்கள் இருவர் மற்றும் சில தன்னார்வத் தொண்டர்கள் இருக்கவேண்டும். பேரணியில் வாசகங்களை முன்னே இருப்பவர் சொன்னால், மற்றவர்கள் எல்லோரும் மீதி வாசகத்தைச் சொல்ல வேண்டும் என்று பல முன்னேற்பாடு மனத்தயாரிப்புகள் நடந்து முடிந்தன.
வழியில் யாராவது எதிர்மறையாகப் பேசினால் யாரும் உணர்வு வேகத்தில் பேசிடக்கூடாது. அமைதியாக பதில் அளிக்க வேண்டும். யாராவது கோபமாகப் பேசினால் எனக்கு போன் பண்ணுங்க என்றான் ராம்குமார்.
ஏன் ஏதாவது பிரச்சினை வரும்னு எதிர்பார்த்து பாதுகாப்பாக இருக்கணுமா ராம்குமார் என்றதும், பாபு அப்படி இல்லைம்மா. நமக்கு அனுமதி குடுத்துட்டாங்க. ஆனா எழுத்து மூலமான அனுமதி நம் கையில் இல்லை. அதனால தான். நிச்சயம் பிரச்சினை இருக்காது. கலெக்டர் அனுமதி குடுத்தாச்சு. அவர் ஊரில் இல்லைங்கறதால் வரல. எம் எல் ஏ விடமும் சொல்லி இருக்கிறோம். அவர் வர்றேன்னு சம்மதம் தெரிவிச்சிருக்கிறாங்க. நேரம் குடுத்தால் அவரை நேரில் அழைக்கணும். என்றான்
முத்துமணி அந்தப் பகுதி மக்கள் பிரண்டைக்குளத்தில் குப்பையைப் போடறாங்க. நாம இப்போ அங்கே தூர் வாருகிறோம்னா எதிர்ப்பு வரக்கூடாதில்லையா. எல்லோரும் ராம்குமார் பெயரைப் போட்டுக்குடத்துடலாம் என்றதும், ஆமா அதுதான் நல்லது முதலில் அடி விழுந்தாலும் என் மேல்தான் விழணும், யாரும் பிரச்சினையில் மாட்டக் கூடாது என்று ராம்குமார் சொல்ல, பிரச்சினை என்றால் எல்லோருக்கும்தான் உன்னை மட்டும் கைகாட்ட முடியாது என்று நெகிழ்வாகவும், உற்சாகமாகவும் மகிழ்வாகவும் பேசினார்கள்.
ஒவ்வொரு குழுவும் எந்தத் தெரு வழியாகப் போய் எந்தத் தெரு வழியாக வரணும் என்றும் வெயிலுக்கு முன்னால் மதிய உணவுக்கு முன்னால் கோஷங்களை முடித்துவிட்டு தாலுகா அலுவலகத்துக்கே வந்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
கூட்டம் முடியும்போது போனில் ஏதோ தகவல் வந்ததும், சட்டென்று அனைவரும் இணைந்து வெளியில் கிளம்பினார்கள். சுரேகா மெதுவாக வந்து யாரைப் பார்க்க எங்கே போகிறார்கள் என்று புரியாமல் வெளியே வந்தாள். அப்போது ரூபாவும் அங்கே வந்து அக்கா எல்லோரும் தங்கபாண்டியன் எம் எல் ஏ வைப் பார்க்கப் போறாங்க. பத்து நிமிடத்தில் அவர் ஆபீசிலிருந்து போயிடுவார்னு எல்லோரும் போறாங்க. நீங்க போகணுமென்றால் அவங்களோடு போங்க. நான் வீட்டுக்குப் போறேன்மா என்றாள்.
அதற்குள் அனைவரும் பரபரப்பாக கிளம்பி விட்டிருந்தனர். சுரேகா வீட்டுக்கு இப்போது போனால் தான் மறுநாள் காலையில் சீக்கிரமாக பேரணி நிகழ்வுக்கு வர முடியுமென்று வீட்டுக்குப் போய்விட்டாள்…
துளி அமைப்பில் ஆரம்ப நாளிலிருந்து இணைந்து செயல்படுவதில் சுரேகாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. அதிலும் தான் எழுதிய கதையிலிருந்து ராம்குமார் என்னும் அதே பெயருடன், அதே அபுதாபியிலிருந்து, தென்றல்நகரின் நீராதாரங்களை இயற்கை வளங்களைக் காக்கும் முயற்சியில் அத்தனை ஈடுபாட்டுடன் ஊர்ப் பாசத்துடன் நேரில் வந்து நின்றவனைப் பார்த்து, தான் எழுதிய கதாபாத்திரம் அப்படியே உயிருடன் முன்னால் வந்து நின்றதில் பெரிதும் உவப்படைந்தாள்.
கட்சி சார்பற்ற, இன, சாதி, மத பேதமில்லாத, தலைவர் தொண்டர் பேதமில்லாது, உறுப்பினர் ஒவ்வொருவருமே பொறுப்புடன் செயல்படும் அமைப்பாக துளி அமைப்பு இருந்தது.
Save Water Thendralnagar என்று ஆரம்பிக்கப்பட்ட சேவை அமைப்பு 'துளி' என்னும் பெயருடன் தென்றல்நகர் பகுதியில் உள்ள ஏரி, குளம், கண்மாய் போன்ற நீர் ஆதாரங்களில் தூர் வாரி சுத்தப்படுத்தவும் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்னும் உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த விதையினை அனைவரின் உள்ளங்களிலும் ஊன்றியவன் ராம்குமார்.
தென்றல்நகரின் இயற்கை வளத்தை பாதுகாக்கும் முனைப்பு இருந்த ஒவ்வொருவரும் இதில் மனமுவந்து கலந்து கொண்டனர். இன்னும் ஊருக்காக சேவைப் பணியாற்ற விரும்புவோரும் துளி அமைப்பில் இணைந்து வருகின்றனர்.
தென்றல் நகரில் இந்த அமைப்பின் முதல் கூட்டம் ஆரம்பித்த பின்பு முதல் சேவைப் பணியாக கடம்பன்குளம் கண்மாயில் தூர் வாரும்பணி நடைபெற்றது.
ஒற்றுமையுடன் இணைந்து இராஜபாளைய வளங்களை காப்போம். வருக.
என்று அப்போது பேஸ்புக்கில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.
சுரேகாவும் தன்னுடைய முகநூலில் மகிழ்வுடன் அந்த செய்தியைப் பகிர்ந்துகொண்டாள்.
தென்றல் நகரில் துளி அமைப்பின் முதல் கூட்டம் ஆரம்பித்த பின்பு முதல் சேவைப் பணியாக கடம்பன்குளம் கண்மாயில் தூர் வாரும்பணி நடைபெற்றது.
அக்டோபர் 23 ஆம் நாள் நடந்த இந்தப் பணியில் தென்றல்நகர் கல்லூரி மாணவர்களும், பாய்ஸ் டவுன் பள்ளி மாணவர்களும், வாழும் கலை அமைப்பு உறுப்பினர்களும், தன்னார்வத்தொண்டர்களும், சேவை அமைப்புகளும் இணைந்து கடம்பன்குளம் கண்மாயில் இறங்கி தூய்மைப்பணியில் ஈடுபட்டனர்.
அக்டோபர் 27 ஆம் நாள் தென்றல்நகரில் பாரதி நகர், ஆர். ஆர். நகர், அரசு மருத்துவமனை, திருவனந்தபுரம் தெரு ஆகிய இடங்களில் 'துளி' அமைப்பிலிருந்து இருநூறு மரக்கன்றுகள் நடப்பட்டன.
இது ஒரு இயக்கமாக சிறுதுளி பெருவெள்ளமாக வளர்ந்து வருகிறது.
திங்கள் கிழமை 7.11.2016 மாலை துளி அமைப்பின் கூட்டம் லட்சுமி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. துளி உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் பலரும் கலந்து கொண்டு அவரவர் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள்:
1. சீமைக் கருவேல மரங்கள் முற்றிலும் ஒழிப்பு,
2. முக்கிய கண்மாய்களை தூர்வாரும் பணி,
3. தூய்மையான இராஜை என்ற இலக்கை அடைய அனைவரின் ஒத்துழைப்பு.
முதற்கட்டமாக சீமைக் கருவேல மரங்களை அழிக்க அரசுடன் இணைந்து துளி அமைப்பும், பள்ளி கல்லூரி மாணவர்களும், வாழும் கலை இயக்கத்தை சேர்ந்தவர்களும் ஒன்று கூடி பணியாற்றினோம். இது குறித்து நம் துளி அமைப்பினர் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். விரைவில் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்த அமைப்புடன் இணைந்து பணியாற்ற விரும்பும் பொதுமக்கள் துளி பேஸ்புக் பேஜின் இன்பாக்சில் தொடர்பு கொள்ளலாம்.
இணைந்து செயல்படுவோம் அனைவரும். நம்
தென்றல்நகரை வரும் சந்ததிகளுக்கு வளத்துடன் பாதுகாத்து அளிப்போம்.
துளி பேஜ் கவர் போட்டோவினை ஷேர் செய்துள்ளேன்.
லைக் செய்து இணைந்து கொள்ளுங்கள்.
இது வரையில் ஆரம்பத்திலிருந்து நடந்த பணிகளின் அனைத்து விபரங்களும் இங்கே படங்களுடன் அளித்துள்ளனர்.
துளி அமைப்பில் சேவைப் பணியில் இணைந்து செயல்படுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
சேவைப் பணி மென்மேலும் சிறக்கட்டும் துளி நிறுவனர் ராம்குமார் மற்றும் துளி குழுவினருக்கு உளங்கனிந்த வாழ்த்துகள்.
பெரண்டைக்குளம் கண்மாய் சீமைக்கருவேலமரம் அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் இந்தப் புகைப்படம் அதற்கென நிகழ்ந்த சீரிய அர்ப்பணிப்புணர்வுடன் நிகழ்ந்த சேவைப்பணியை உங்களுக்கு உணர்த்தும்.
இனி வரும் ஒரு மழைக்காலத்தில் முன்பைப் போலவே இந்தக் கண்மாயில் நீர் நிறைந்திருக்க அதையும் இப்படி புகைப்படம் எடுத்து இங்கே அளிக்கும் நாள் தொலைவில் இல்லை.
இனி் தூர் வாருவதும் சாலையில் வேலி அமைப்பதும் அடுத்த கட்ட பணிகள்.
தென்றல்நகரில் துளி அமைப்பின் இந்த செயல்பாடுகளுக்கு பொருளாதார உதவிகள் செய்ய விரும்புபவர்கள் செய்யலாம். தன்னார்வத் தொண்டர்களாக உதவி செய்யலாம். இவை சாத்தியமில்லை என்பவர்களும் வாழ்த்தி moral support அளிக்கலாம்.
இப்படி எழுதி முகநூலில் பகிர்ந்துகொண்டு தன் மகிழ்வை வெளிப்படுத்தினாள்.
***
துளியின் அடுத்த நிகழ்வாக மேலே குறிப்பிடப்பட்ட பிரண்டைக் குளம் கண்மாயில் சீமைக்கருவேலமரங்களை அகற்றி தூர்வாரும் பணி செய்ய பேரணி நிகழ்ச்சி நிச்சயிக்கப்பட்ட நாளில் நூலகத்துக்கான அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உதவ வரும் நபரை சந்திக்க இருப்பதை முதலிலேயே எதுவும் குறிப்பாகவும் தெரிவித்திருக்கவில்லை.
தென்றல்நகர் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, அவர்களையும் அந்தப் பகுதி விவசாயிகள் மற்றும் ஊர் மக்களையும் சேர்ந்து பிளாஸ்டிக் பைகள் தண்ணீர் பாட்டில்கள் குப்பையாக சேரும் அவலத்தினை மாற்றும் விழிப்புணர்வுப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. துளி அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களும், உறுப்பினர்களும் இரண்டு இரண்டு பேராக ஒவ்வொரு பள்ளிக்கும், கல்லூரிக்கும் சென்று மாணவச் செல்வங்களை, குறிப்பிட்ட நாள் ஞாயிறு காலை எட்டு மணிக்குள் தாலுகா அலுவலகம் முன்பு ஒன்று கூட வேண்டும் பன்னிரண்டு மணிக்குள் திரும்பி விடலாம் என்று இந்த விபரங்கள் இருக்கும் அறிக்கையைக் கொடுத்து வந்தனர்.
பேரணியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் அவர்கள் பெயர்களில் சர்டிபிகேட் கொடுக்க முடிவு செய்து, நிகழ்வு முடிந்ததும், யார் யார் எந்தப் பள்ளியில் கல்லூரியில் அழைப்பு கொடுக்க சென்றார்களோ அவர்களே அந்தந்த பள்ளி கல்லூரிகளுக்குப்போய் கலந்துகொண்ட மாணவர்களுக்கு கொடுக்க ஒப்புக் கொண்டனர்.
சிலர் ரூபாவின் பள்ளியில் இரண்டு நாட்கள் நேரம் ஒதுக்கிச் சேர்ந்து, பேரணியில் செல்லும்போது எடுத்துச் செல்ல வாசகங்கள் பொறித்த அறிவிப்புப் பலகைகளைத் தயார் செய்தனர்.
சத்தாக சாப்பிடுவதற்கு சத்து மாவு உருண்டையும், குடிப்பதற்கு சுக்கு மல்லிக்காப்பியும் அரவிந்த் ஹெர்பலில் இருந்த தர ஒப்புக்கொண்டனர்.
சனிக்கிழமை மாலை மறுநாளுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்காக முக்கிய உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. குழு பிரிக்கப்பட்டு யார் யார் எந்த குழுவில் இருக்க வேண்டும் என்ன செய்யவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஒவ்வொரு குழுவுக்கும் முன்னால் பாதுகாப்பாக சில மாணவர்கள் போக வேண்டும். துளி அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள் ஒரு ஆண் ஒரு பெண் முன்னால் பக்கவாட்டில் இருக்க வேண்டும். பள்ளி மாணவிகள் நடுவில் இருக்க வேண்டும். உடன் வரும் ஆசிரியர்களும் இருக்கலாம். அதே போல் பின்னால் துளி உறுப்பினர்கள் இருவர் மற்றும் சில தன்னார்வத் தொண்டர்கள் இருக்கவேண்டும். பேரணியில் வாசகங்களை முன்னே இருப்பவர் சொன்னால், மற்றவர்கள் எல்லோரும் மீதி வாசகத்தைச் சொல்ல வேண்டும் என்று பல முன்னேற்பாடு மனத்தயாரிப்புகள் நடந்து முடிந்தன.
வழியில் யாராவது எதிர்மறையாகப் பேசினால் யாரும் உணர்வு வேகத்தில் பேசிடக்கூடாது. அமைதியாக பதில் அளிக்க வேண்டும். யாராவது கோபமாகப் பேசினால் எனக்கு போன் பண்ணுங்க என்றான் ராம்குமார்.
ஏன் ஏதாவது பிரச்சினை வரும்னு எதிர்பார்த்து பாதுகாப்பாக இருக்கணுமா ராம்குமார் என்றதும், பாபு அப்படி இல்லைம்மா. நமக்கு அனுமதி குடுத்துட்டாங்க. ஆனா எழுத்து மூலமான அனுமதி நம் கையில் இல்லை. அதனால தான். நிச்சயம் பிரச்சினை இருக்காது. கலெக்டர் அனுமதி குடுத்தாச்சு. அவர் ஊரில் இல்லைங்கறதால் வரல. எம் எல் ஏ விடமும் சொல்லி இருக்கிறோம். அவர் வர்றேன்னு சம்மதம் தெரிவிச்சிருக்கிறாங்க. நேரம் குடுத்தால் அவரை நேரில் அழைக்கணும். என்றான்
முத்துமணி அந்தப் பகுதி மக்கள் பிரண்டைக்குளத்தில் குப்பையைப் போடறாங்க. நாம இப்போ அங்கே தூர் வாருகிறோம்னா எதிர்ப்பு வரக்கூடாதில்லையா. எல்லோரும் ராம்குமார் பெயரைப் போட்டுக்குடத்துடலாம் என்றதும், ஆமா அதுதான் நல்லது முதலில் அடி விழுந்தாலும் என் மேல்தான் விழணும், யாரும் பிரச்சினையில் மாட்டக் கூடாது என்று ராம்குமார் சொல்ல, பிரச்சினை என்றால் எல்லோருக்கும்தான் உன்னை மட்டும் கைகாட்ட முடியாது என்று நெகிழ்வாகவும், உற்சாகமாகவும் மகிழ்வாகவும் பேசினார்கள்.
ஒவ்வொரு குழுவும் எந்தத் தெரு வழியாகப் போய் எந்தத் தெரு வழியாக வரணும் என்றும் வெயிலுக்கு முன்னால் மதிய உணவுக்கு முன்னால் கோஷங்களை முடித்துவிட்டு தாலுகா அலுவலகத்துக்கே வந்து விட வேண்டும் என்று முடிவு செய்தனர்.
கூட்டம் முடியும்போது போனில் ஏதோ தகவல் வந்ததும், சட்டென்று அனைவரும் இணைந்து வெளியில் கிளம்பினார்கள். சுரேகா மெதுவாக வந்து யாரைப் பார்க்க எங்கே போகிறார்கள் என்று புரியாமல் வெளியே வந்தாள். அப்போது ரூபாவும் அங்கே வந்து அக்கா எல்லோரும் தங்கபாண்டியன் எம் எல் ஏ வைப் பார்க்கப் போறாங்க. பத்து நிமிடத்தில் அவர் ஆபீசிலிருந்து போயிடுவார்னு எல்லோரும் போறாங்க. நீங்க போகணுமென்றால் அவங்களோடு போங்க. நான் வீட்டுக்குப் போறேன்மா என்றாள்.
அதற்குள் அனைவரும் பரபரப்பாக கிளம்பி விட்டிருந்தனர். சுரேகா வீட்டுக்கு இப்போது போனால் தான் மறுநாள் காலையில் சீக்கிரமாக பேரணி நிகழ்வுக்கு வர முடியுமென்று வீட்டுக்குப் போய்விட்டாள்…