Madhumitha
மண்டலாதிபதி
வல்லமை தாராயோ 32 – மதுமிதா
மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தாள் சுரேகா. மென்சூரியன் மெல்ல எழுந்து வண்ணங்களை வானமெங்கும் இறைத்தபடி மலர்ந்து கொண்டிருந்தது. இருள் மறைந்து ஒளி பிறக்கும் இந்த இளங்காலைப் பொழுது தான் எத்தனை ரம்மியமானது.
மலைகளின் வெளிகளுக்கு காலையில் உணவுதேடிச் சென்று மாலையில் கூடடையத் திரும்பிச் செல்லும் பறவைகளின் வரிசை புவியியலையும் பறவைகளின் வரலாறையும் அல்லவா எழுதிச் செல்லுகிறது.
சுற்றிலும் தெரியும் மரங்களின் மலர்களின் காட்சி எந்தப் பருவத்தில் இலையுதிரும் எப்பருவத்தில் செழித்து பலனளிக்கும் எனும்
தாவரவியலின் நுட்பத்தையும் அன்றோ எடுத்துக்காட்டுகிறது.
காலையில் நடைப்பயிற்சியில் சூரியனின் பயண வழிப்பாதையை உத்தராயணம் தட்சிணாயணம் எனக் காட்டியும், இரவுகளில் நிலவின் பௌர்ணமி வரையிலான வளர்ச்சியையும் அமாவாசை வரையிலான தேய்வையும் நட்சத்திரங்களின் சிமிட்டலையும் காட்டி வான சாஸ்திரத்தை கற்பிக்கிறதே.
மொட்டைமாடி என்பது வெறும் மொட்டைமாடி மட்டுமல்ல. மொட்டை மாடி ஒரு பிரபஞ்சகண்ணாடி.
வத்தல், வடாம் போட, துவைத்த துணிகள் காயவைக்க மட்டுமல்ல மொட்டைமாடி என்பதை அறியும் தருணம் இங்கே எத்தனை பேருக்கு கிடைத்துள்ளது.
குளிர்கால நடைப்பயிற்சி கூடமாகவும், உடற்பயிற்சி, தியானம், மூச்சுப்பயிற்சிக்கான களமாகவும் இருக்கும் மொட்டை மாடி பல அதிசயங்களைக் கொண்டு வந்து சேர்க்கும். அதுவும் அததற்கான நேரங்களில் மட்டுமே அளிக்கும். காற்றின் ஸ்பரிசம், மனதைத் துடைத்து பளிச்சிடச் செய்யும்.
பலவித உருவங்களைக் காட்டிச் செல்லும் மேகக்கூட்டம், கண்சிமிட்டி நெருங்கப் பார்க்கும் நட்சத்திரக்கூட்டம் என எந்த நேரமென்றில்லாது எல்லா நேரங்களிலும் நட்பின் அணைப்பாய் ஆறுதல் தரும்.
நடைப்பயிற்சியின் போது எத்தனையோ புது சிந்தனைகள் எழுவதை அவதானித்திருக்கிறாள். சட்டென்று ஒரு முடிவு பிடிபடும். அடுத்த என்ன காரியம் செய்ய வேண்டும் என்னும் புது சிந்தனை உதயமாகும். அதை நடைமுறைப்படுத்தும்போது சரியான உள்ளுணர்வு சரியான நேரத்தில் கிடைத்தது என்பதை உணர்ந்திருந்தாள். ஆமாம். மொட்டைமாடி பிரபஞ்ச கண்ணாடி மட்டுமல்ல. மொட்டைமாடி ஒரு போதிமரம். ’மொட்டைமாடி எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கொரு சேதி தரும்’ என்று பாடி விட்டு நடையைத் தொடர்ந்தாள். காற்று மெல்ல தவழ்ந்து உடலையும் மனதையும் குளிர்வித்துக் கொண்டிருந்தது.
காற்று தான் எத்தனை மகத்துவம் பொருந்தியது. கண்களால் காண இயலா 'காற்றின் மகத்துவம்' காலங்களால் போற்றப் படவேண்டியது. உணர மட்டுமே இயலும் காற்று கணந்தோறும் வாழவைக்கும் மனிதகுலத்துக்கான வரம்.
காற்று உயிர்களை வாழ்விக்கச் செய்யவல்லது. காற்றுவெளி மண்டலமே பூமியைக் கதிர்களின் தீங்கிலிருந்து காக்கும் கவசமாகவும் உள்ளது. காற்று இல்லையேல் வாழ்வில்லை. உயிரில்லை. உலகில்லை.
நாம் சுவாசிக்கும் தூய காற்று நுரையீரல்களை நிரப்பி, இரத்தத்தை சுத்திகரித்து, உடலை ஆரோக்கியமாக இயங்கச் செய்கிறது. ஓட்டம், நடை, விளையாட்டு, உடற்பயிற்சி, நடனம், உடலை வருத்தும் வேலை என வியர்வை வழிய செய்யும் அனைத்துப் பணிகளும் அதிக கொள்ளளவில் காற்றினை நுரையீரலுக்கு அனுப்பி உடலை சீராக இயங்கச் செய்கிறது.
மூச்சுக்காற்று பல சந்தர்ப்பங்களில் உணர்வுகளை மாற்றியமைக்கும் வல்லமையுடையது. கோபமாக இருக்கும்போது 1,2,3 பத்து வரை எண்ணுங்கள் என்று சொல்வர்.கோபம் குறைய வேண்டுமென்பதற்காக. கண்ணைமூடிக் கொண்டு மூச்சினை மெதுவாக,நன்றாக,முழுவதுமாக உள் இழுத்து வெளியிடவேண்டும். மூச்சுப் பயிற்சி செய்தால் உணர்வுகளை நம் வசப்படுத்தும் சக்தி அதிகரிக்கும். முற்காலங்களில்,முனிவர்கள் காடுகளுக்குச் சென்று தவம் செய்தது தங்கள் உணர்வுகளைத் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கே.காட்டிற்கோ,மலையுச்சிக்கோ கடும் பயணம் செல்ல வேண்டாம். இருக்கும் இடத்திலிருந்தே மூச்சுப் பயிற்சி மூலம் உணர்வுகளை,எண்ணங்களை நம் வசம் செய்யலாம். மந்திரம் மாயம் எதுவுமில்லை. மனமிருந்தால் போதும்.
மூச்சுப் பயிற்சியினை ஆரம்பித்து விட்டால், அந்த அமைதி எப்போதும் உடனிருக்கும்படி பார்த்துக் கொள்ள இயலும். எந்த சூழலிலும். இந்த அமைதியெனும் போதையினை ஒருமுறை அனுபவித்துவிட்டால், புகை, குடி... போன்ற வேறெந்த போதையும் முன்னே நிற்க இயலாது.
மூச்சுக் காற்றின் முறையான,முழுமையான உள் இழுப்பில் அறிவின் மற்றோர் ஊற்றுக்கண் திறப்பது திண்ணம்.
உடல்நலத்தை, மனநலத்தை காக்கும் காற்றெனும் வரப்பிரசாதம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றல்லவா. காற்றினை மாசுபடாது காத்து அடுத்த தலைமுறையினருக்கு பொக்கிஷமாக அளிக்கும் பணியை சரியாகத்தான் நாம் செய்கிறோமா.
நீரை நிலத்தை மாசுபடுத்தியாகி விட்டது. மலைகளை இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறோம். தூய்மையான காற்றையும் இல்லாமல் செய்து ஆக்சிஜனை விலைக்கு வாங்கும் காலத்துக்கு வந்துவிட்டோம் என்பது மனித குலத்துக்கு பெரும் வீழ்ச்சி அல்லவா.
நீண்ட ஆங்கில் வி போன்ற வரிசையில் பறந்த பறவைக் கூட்டம் கவனத்தைக் கலைத்தது. சற்றும் ஓய்வின்றி மேற்குத்தொடர்ச்சி மலையை நோக்கி அவை பறந்து கொண்டிருந்தன.
ஓய்வே இல்லாமல் தான் சூரியன் இயங்குகிறது, நட்சத்திரங்களும், காற்றும் என இயற்கை களைப்பு என்ற ஒரு வார்த்தை இன்றியே தொடர்ந்து இயங்குகிறது. சட்டென்று நினைவுக்கு வந்தாள்.
“அக்கா நூலகத்துக்கான கட்டடம் கட்டுறதுக்கு இடம் இல்லைன்னா நூலகத்தை அருகில் இருக்கும் அரசுப்பள்ளிக்கு மாத்தணும்னு கடிதம் வந்திருக்குக்கா” என்று நூலகர் சொன்னதும் அதிர்ந்து போய் விட்டாள் சுரேகா. அத்தனை வருடப் பணிகளும் விழலுக்கு இறைத்த நீராகிவிடுமோ?
“நான் இப்போ வர்றேன் லைப்ரரிக்கு. அந்தக் கடிதத்தைப் பார்க்கணும்.
இல்லக்கா வீட்டுக்கு கிளம்பிட்டேன்.”
“அப்போ அதை போட்டோ எடுத்து வாட்ஸப்பில் அதை அனுப்பறீங்களா?”
“வேணாங்க்கா”
“இல்லம்மா அது என்னன்னு விபரம் பார்க்கதான். நான் பேஸ்புக்கில் இதை எழுதறேன். உங்களுக்கு வந்த கடிதத்தை போட்டோவாகப் போட மாட்டேன். சரி ஒண்ணு பண்ணுங்க. பக்கத்தில் அரசு பள்ளிக்கூடம் இல்லைன்னு அவங்களுக்கு பதில் கடிதம் எழுதுங்க. அவங்க அப்படிதானே நமக்கு பதில் தர்றாங்க”
“என்னக்கா. இப்படி சொல்லுறீங்க”
“ஆமாம்மா. அவங்களுக்கு நீங்க இதை எழுதுங்க. அதுக்குள்ள வேற என்ன பண்ணலாம்னு பார்க்கலாம். இத்தனை அமைப்புகள் நம்ம ஊரில் நமக்கு நம்ம லைப்ரரிக்கு ஆதரவா இருக்கிறாங்களே. நேரடியா எல்லா அமைப்புகளும் சேர்ந்து போராட்டம் ஒண்ணு அறிவிச்சிடலாம். வேறவழியில்லை” என்று சொல்லி இருந்தாள்.
இன்றைக்கு அனைத்து அமைப்புகளுக்கும் நண்பர்களுக்கும் இதைச் சொல்ல வேண்டும். வீட்டு வேலைகளை சீக்கிரம் முடித்தால் தான் தொலைபேசியில் பேச முடியும் என்று மாடியிலிருந்து இறங்கினாள்.
ஆனல், இப்போது எதற்கு இந்தப் போராட்டம். இந்த போராட்டத்தால் என்ன பலன். என்னதான் நல்ல விஷயம் நடக்க முடியும். ஆலைப் போராட்டம், வனங்களை அழித்து சாலைகள் வேண்டாம் என்னும் வாழ்க்கை ஆதார போராட்டங்களே அரசின் மனதை அசைக்க இயலவில்லையே.
இல்லை இல்லை இப்படி மனம் தளர்ந்து விடக்கூடாது. ஏதாவது செய்ய வேண்டும்.
ஒரு ஊரை எடுத்துக்கொண்டால் அதில் எத்தனை மதுக்கடைகள் இருக்கின்றன. அத்தனை சினிமா தியேட்டர்கள் இருக்கின்றன. எத்தனை மருத்துவமனைகள் இருக்கின்றன. சென்னையிலேயே தேவ நேயப்பாவாணர் நூலகம், கன்னிமரா நூலகம் இருக்கும்போதும் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. இங்கே நாம் ஒவ்வொரு வருடமும் கட்டும் நூலக செஸ் வரிப் பணம் எங்கே போகிறது? அந்தப் பணத்திலேயே கட்டலாமே… தென்றல் நகருக்கான இந்த பெண்கள் நூலகத்துக்கான கட்டடம் கட்ட எம் எம் ஏ தனது ஃபண்ட்டிலிருந்து தருவதாகச் சொன்னாரே முதலில் அவரிடம் பேசலாம் என்று முடிவு செய்தாள்.
வேலைகள் முடிந்ததும் மொபைலை எடுத்தாள். முதலில் எம் எல் ஏ தங்கபாண்டியன் அவர்களுக்கு தொலைபேசினாள்.
“வணக்கம்மா. என்ன விஷயம்” உதவியாளர் பேசாமல் அவரே பேசினார்.
“வணக்கங்க. நூலக விஷயமா பேசணும்”
“சொல்லுங்கம்மா”
“நூலகத்துக்கான கட்டடம் கட்டுறதுக்கு இடம் இல்லைன்னா நூலகத்தை அருகில் இருக்கும் அரசுப்பள்ளிக்கு மாத்தணும்னு கடிதம் வந்திருக்குன்னு லைப்ரேரியன் சொன்னாங்க. என்ன பண்ணறதுன்னு தெரியல. நம்ம தென்றல்நகர் எல்லா அமைப்புகளும் சேர்ந்து போராட்டம் நடத்தலாம்னு தோணுது. இன்னும் எந்த அமைப்புக்கும் பேசல. நீங்க நூலகத்துக்கான இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்க சம்மதம் சொன்னீங்கன்னா அவங்க எல்லோர்டயும் பேசணும். உங்களுக்கு எப்போ வசதிப்படும்னு கேட்கிறதுக்காக பேசினேன். நீங்க இங்கே இருக்கிறீங்களா. சென்னையில் இருக்கிறாங்களான்னு தெரிஞ்சுக்கலாம்னு. இந்த மூணு நாட்களுக்குள் இருந்தா நல்லா இருக்கும்”
“இங்கேதாம்மா இருக்கிறேன். கண்டிப்பா செய்யலாம். நான் தேதியும் நேரமும் சொல்லறேன்”
“ரொம்ப நன்றிங்க. ஆனா ஆலைப் போராட்டம், சாலை போராட்டங்களுக்கு நடுவில் இது தேவையான்னும் இருக்கு”
“நான் உடனே உங்களை கூப்பிடறேன்மா” என்று போனை வைத்து விட்டார்.
பெண்கள் முக்கியத்துவம் குறித்து ஒரு கட்டுரை வேணும்மா என்று சுகன்யா கேட்டது நினைவுக்கு வந்தது. சுரேகாவுக்கு ஒரு நிமிடம் எதுவும் தோன்றவில்லை. பெண் வீட்டில் வீட்டுக்காக செய்யும் வேலைகள் மட்டுமே அவளுடைய குடும்பத்துக்கு முக்கியம். அவளுடைய மற்ற எந்தப் பணிகளும் குடும்பத்துக்கு தேவையில்லாத விஷயமே. எழுத்துலகிலோ அவள் என்னென்ன சிரமங்களுக்கு இடையில் எழுத வருகிறாள் என்பது தேவையே இல்லாத விஷயம். இந்த நூலக விஷயம் வேறு ஒரு முடிவில்லாத இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. இதில் என்ன எழுதுவது.
மொபைல் ஒலித்தது.
“எம் எல் ஏ தான்மா பேசறேன். மேலே பேசிட்டேன். உங்க நூலகம் இப்படியே இருக்கலாம். எங்கேயும் மாத்த வேணாம்னு சொன்னேன். அங்கே சரின்னு சொல்லிட்டாங்க. லைப்ரரிக்கு நாம கேட்ட அந்த இடம் டி ஆர் ஓ நேரடியாக வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருக்கிறாங்க”
“ரொம்ப நன்றிங்க”
போனை வைத்த உடனே லைப்ரேரியனிடம் இருந்து போன் வந்தது.
“அக்கா என்ன பண்ணலாம்”
“இப்பதான்மா எம் எல் ஏ பேசினாரு. நம்ம லைப்ரரிய எங்கேயும் மாத்த வேணாமாம். மேலே அவர் பேசிட்டாராம்”
“அப்ப நான் என்ன பண்ணட்டும்?”
“நீங்க பக்கத்துல பள்ளி எதுவும் இல்லைன்னு பதில் எழுதிடுங்க போதும். லைப்ரரிக்கு நாம கேட்ட அந்த இடம் டி ஆர் ஓ நேரடியாக வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருக்கிறாங்களாம். இதையும் சொன்னார்“
இது ஒரு தொடர்கதை தானோ.
பெண்ணின் பெருமையைப் பேசும் கட்டுரையினை இப்போது எழுத வேண்டும். அதற்கு முன்பு பேஸ்புக் வந்தாள்.
மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தாள் சுரேகா. மென்சூரியன் மெல்ல எழுந்து வண்ணங்களை வானமெங்கும் இறைத்தபடி மலர்ந்து கொண்டிருந்தது. இருள் மறைந்து ஒளி பிறக்கும் இந்த இளங்காலைப் பொழுது தான் எத்தனை ரம்மியமானது.
மலைகளின் வெளிகளுக்கு காலையில் உணவுதேடிச் சென்று மாலையில் கூடடையத் திரும்பிச் செல்லும் பறவைகளின் வரிசை புவியியலையும் பறவைகளின் வரலாறையும் அல்லவா எழுதிச் செல்லுகிறது.
சுற்றிலும் தெரியும் மரங்களின் மலர்களின் காட்சி எந்தப் பருவத்தில் இலையுதிரும் எப்பருவத்தில் செழித்து பலனளிக்கும் எனும்
தாவரவியலின் நுட்பத்தையும் அன்றோ எடுத்துக்காட்டுகிறது.
காலையில் நடைப்பயிற்சியில் சூரியனின் பயண வழிப்பாதையை உத்தராயணம் தட்சிணாயணம் எனக் காட்டியும், இரவுகளில் நிலவின் பௌர்ணமி வரையிலான வளர்ச்சியையும் அமாவாசை வரையிலான தேய்வையும் நட்சத்திரங்களின் சிமிட்டலையும் காட்டி வான சாஸ்திரத்தை கற்பிக்கிறதே.
மொட்டைமாடி என்பது வெறும் மொட்டைமாடி மட்டுமல்ல. மொட்டை மாடி ஒரு பிரபஞ்சகண்ணாடி.
வத்தல், வடாம் போட, துவைத்த துணிகள் காயவைக்க மட்டுமல்ல மொட்டைமாடி என்பதை அறியும் தருணம் இங்கே எத்தனை பேருக்கு கிடைத்துள்ளது.
குளிர்கால நடைப்பயிற்சி கூடமாகவும், உடற்பயிற்சி, தியானம், மூச்சுப்பயிற்சிக்கான களமாகவும் இருக்கும் மொட்டை மாடி பல அதிசயங்களைக் கொண்டு வந்து சேர்க்கும். அதுவும் அததற்கான நேரங்களில் மட்டுமே அளிக்கும். காற்றின் ஸ்பரிசம், மனதைத் துடைத்து பளிச்சிடச் செய்யும்.
பலவித உருவங்களைக் காட்டிச் செல்லும் மேகக்கூட்டம், கண்சிமிட்டி நெருங்கப் பார்க்கும் நட்சத்திரக்கூட்டம் என எந்த நேரமென்றில்லாது எல்லா நேரங்களிலும் நட்பின் அணைப்பாய் ஆறுதல் தரும்.
நடைப்பயிற்சியின் போது எத்தனையோ புது சிந்தனைகள் எழுவதை அவதானித்திருக்கிறாள். சட்டென்று ஒரு முடிவு பிடிபடும். அடுத்த என்ன காரியம் செய்ய வேண்டும் என்னும் புது சிந்தனை உதயமாகும். அதை நடைமுறைப்படுத்தும்போது சரியான உள்ளுணர்வு சரியான நேரத்தில் கிடைத்தது என்பதை உணர்ந்திருந்தாள். ஆமாம். மொட்டைமாடி பிரபஞ்ச கண்ணாடி மட்டுமல்ல. மொட்டைமாடி ஒரு போதிமரம். ’மொட்டைமாடி எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கொரு சேதி தரும்’ என்று பாடி விட்டு நடையைத் தொடர்ந்தாள். காற்று மெல்ல தவழ்ந்து உடலையும் மனதையும் குளிர்வித்துக் கொண்டிருந்தது.
காற்று தான் எத்தனை மகத்துவம் பொருந்தியது. கண்களால் காண இயலா 'காற்றின் மகத்துவம்' காலங்களால் போற்றப் படவேண்டியது. உணர மட்டுமே இயலும் காற்று கணந்தோறும் வாழவைக்கும் மனிதகுலத்துக்கான வரம்.
காற்று உயிர்களை வாழ்விக்கச் செய்யவல்லது. காற்றுவெளி மண்டலமே பூமியைக் கதிர்களின் தீங்கிலிருந்து காக்கும் கவசமாகவும் உள்ளது. காற்று இல்லையேல் வாழ்வில்லை. உயிரில்லை. உலகில்லை.
நாம் சுவாசிக்கும் தூய காற்று நுரையீரல்களை நிரப்பி, இரத்தத்தை சுத்திகரித்து, உடலை ஆரோக்கியமாக இயங்கச் செய்கிறது. ஓட்டம், நடை, விளையாட்டு, உடற்பயிற்சி, நடனம், உடலை வருத்தும் வேலை என வியர்வை வழிய செய்யும் அனைத்துப் பணிகளும் அதிக கொள்ளளவில் காற்றினை நுரையீரலுக்கு அனுப்பி உடலை சீராக இயங்கச் செய்கிறது.
மூச்சுக்காற்று பல சந்தர்ப்பங்களில் உணர்வுகளை மாற்றியமைக்கும் வல்லமையுடையது. கோபமாக இருக்கும்போது 1,2,3 பத்து வரை எண்ணுங்கள் என்று சொல்வர்.கோபம் குறைய வேண்டுமென்பதற்காக. கண்ணைமூடிக் கொண்டு மூச்சினை மெதுவாக,நன்றாக,முழுவதுமாக உள் இழுத்து வெளியிடவேண்டும். மூச்சுப் பயிற்சி செய்தால் உணர்வுகளை நம் வசப்படுத்தும் சக்தி அதிகரிக்கும். முற்காலங்களில்,முனிவர்கள் காடுகளுக்குச் சென்று தவம் செய்தது தங்கள் உணர்வுகளைத் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கே.காட்டிற்கோ,மலையுச்சிக்கோ கடும் பயணம் செல்ல வேண்டாம். இருக்கும் இடத்திலிருந்தே மூச்சுப் பயிற்சி மூலம் உணர்வுகளை,எண்ணங்களை நம் வசம் செய்யலாம். மந்திரம் மாயம் எதுவுமில்லை. மனமிருந்தால் போதும்.
மூச்சுப் பயிற்சியினை ஆரம்பித்து விட்டால், அந்த அமைதி எப்போதும் உடனிருக்கும்படி பார்த்துக் கொள்ள இயலும். எந்த சூழலிலும். இந்த அமைதியெனும் போதையினை ஒருமுறை அனுபவித்துவிட்டால், புகை, குடி... போன்ற வேறெந்த போதையும் முன்னே நிற்க இயலாது.
மூச்சுக் காற்றின் முறையான,முழுமையான உள் இழுப்பில் அறிவின் மற்றோர் ஊற்றுக்கண் திறப்பது திண்ணம்.
உடல்நலத்தை, மனநலத்தை காக்கும் காற்றெனும் வரப்பிரசாதம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றல்லவா. காற்றினை மாசுபடாது காத்து அடுத்த தலைமுறையினருக்கு பொக்கிஷமாக அளிக்கும் பணியை சரியாகத்தான் நாம் செய்கிறோமா.
நீரை நிலத்தை மாசுபடுத்தியாகி விட்டது. மலைகளை இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறோம். தூய்மையான காற்றையும் இல்லாமல் செய்து ஆக்சிஜனை விலைக்கு வாங்கும் காலத்துக்கு வந்துவிட்டோம் என்பது மனித குலத்துக்கு பெரும் வீழ்ச்சி அல்லவா.
நீண்ட ஆங்கில் வி போன்ற வரிசையில் பறந்த பறவைக் கூட்டம் கவனத்தைக் கலைத்தது. சற்றும் ஓய்வின்றி மேற்குத்தொடர்ச்சி மலையை நோக்கி அவை பறந்து கொண்டிருந்தன.
ஓய்வே இல்லாமல் தான் சூரியன் இயங்குகிறது, நட்சத்திரங்களும், காற்றும் என இயற்கை களைப்பு என்ற ஒரு வார்த்தை இன்றியே தொடர்ந்து இயங்குகிறது. சட்டென்று நினைவுக்கு வந்தாள்.
“அக்கா நூலகத்துக்கான கட்டடம் கட்டுறதுக்கு இடம் இல்லைன்னா நூலகத்தை அருகில் இருக்கும் அரசுப்பள்ளிக்கு மாத்தணும்னு கடிதம் வந்திருக்குக்கா” என்று நூலகர் சொன்னதும் அதிர்ந்து போய் விட்டாள் சுரேகா. அத்தனை வருடப் பணிகளும் விழலுக்கு இறைத்த நீராகிவிடுமோ?
“நான் இப்போ வர்றேன் லைப்ரரிக்கு. அந்தக் கடிதத்தைப் பார்க்கணும்.
இல்லக்கா வீட்டுக்கு கிளம்பிட்டேன்.”
“அப்போ அதை போட்டோ எடுத்து வாட்ஸப்பில் அதை அனுப்பறீங்களா?”
“வேணாங்க்கா”
“இல்லம்மா அது என்னன்னு விபரம் பார்க்கதான். நான் பேஸ்புக்கில் இதை எழுதறேன். உங்களுக்கு வந்த கடிதத்தை போட்டோவாகப் போட மாட்டேன். சரி ஒண்ணு பண்ணுங்க. பக்கத்தில் அரசு பள்ளிக்கூடம் இல்லைன்னு அவங்களுக்கு பதில் கடிதம் எழுதுங்க. அவங்க அப்படிதானே நமக்கு பதில் தர்றாங்க”
“என்னக்கா. இப்படி சொல்லுறீங்க”
“ஆமாம்மா. அவங்களுக்கு நீங்க இதை எழுதுங்க. அதுக்குள்ள வேற என்ன பண்ணலாம்னு பார்க்கலாம். இத்தனை அமைப்புகள் நம்ம ஊரில் நமக்கு நம்ம லைப்ரரிக்கு ஆதரவா இருக்கிறாங்களே. நேரடியா எல்லா அமைப்புகளும் சேர்ந்து போராட்டம் ஒண்ணு அறிவிச்சிடலாம். வேறவழியில்லை” என்று சொல்லி இருந்தாள்.
இன்றைக்கு அனைத்து அமைப்புகளுக்கும் நண்பர்களுக்கும் இதைச் சொல்ல வேண்டும். வீட்டு வேலைகளை சீக்கிரம் முடித்தால் தான் தொலைபேசியில் பேச முடியும் என்று மாடியிலிருந்து இறங்கினாள்.
ஆனல், இப்போது எதற்கு இந்தப் போராட்டம். இந்த போராட்டத்தால் என்ன பலன். என்னதான் நல்ல விஷயம் நடக்க முடியும். ஆலைப் போராட்டம், வனங்களை அழித்து சாலைகள் வேண்டாம் என்னும் வாழ்க்கை ஆதார போராட்டங்களே அரசின் மனதை அசைக்க இயலவில்லையே.
இல்லை இல்லை இப்படி மனம் தளர்ந்து விடக்கூடாது. ஏதாவது செய்ய வேண்டும்.
ஒரு ஊரை எடுத்துக்கொண்டால் அதில் எத்தனை மதுக்கடைகள் இருக்கின்றன. அத்தனை சினிமா தியேட்டர்கள் இருக்கின்றன. எத்தனை மருத்துவமனைகள் இருக்கின்றன. சென்னையிலேயே தேவ நேயப்பாவாணர் நூலகம், கன்னிமரா நூலகம் இருக்கும்போதும் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. இங்கே நாம் ஒவ்வொரு வருடமும் கட்டும் நூலக செஸ் வரிப் பணம் எங்கே போகிறது? அந்தப் பணத்திலேயே கட்டலாமே… தென்றல் நகருக்கான இந்த பெண்கள் நூலகத்துக்கான கட்டடம் கட்ட எம் எம் ஏ தனது ஃபண்ட்டிலிருந்து தருவதாகச் சொன்னாரே முதலில் அவரிடம் பேசலாம் என்று முடிவு செய்தாள்.
வேலைகள் முடிந்ததும் மொபைலை எடுத்தாள். முதலில் எம் எல் ஏ தங்கபாண்டியன் அவர்களுக்கு தொலைபேசினாள்.
“வணக்கம்மா. என்ன விஷயம்” உதவியாளர் பேசாமல் அவரே பேசினார்.
“வணக்கங்க. நூலக விஷயமா பேசணும்”
“சொல்லுங்கம்மா”
“நூலகத்துக்கான கட்டடம் கட்டுறதுக்கு இடம் இல்லைன்னா நூலகத்தை அருகில் இருக்கும் அரசுப்பள்ளிக்கு மாத்தணும்னு கடிதம் வந்திருக்குன்னு லைப்ரேரியன் சொன்னாங்க. என்ன பண்ணறதுன்னு தெரியல. நம்ம தென்றல்நகர் எல்லா அமைப்புகளும் சேர்ந்து போராட்டம் நடத்தலாம்னு தோணுது. இன்னும் எந்த அமைப்புக்கும் பேசல. நீங்க நூலகத்துக்கான இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்க சம்மதம் சொன்னீங்கன்னா அவங்க எல்லோர்டயும் பேசணும். உங்களுக்கு எப்போ வசதிப்படும்னு கேட்கிறதுக்காக பேசினேன். நீங்க இங்கே இருக்கிறீங்களா. சென்னையில் இருக்கிறாங்களான்னு தெரிஞ்சுக்கலாம்னு. இந்த மூணு நாட்களுக்குள் இருந்தா நல்லா இருக்கும்”
“இங்கேதாம்மா இருக்கிறேன். கண்டிப்பா செய்யலாம். நான் தேதியும் நேரமும் சொல்லறேன்”
“ரொம்ப நன்றிங்க. ஆனா ஆலைப் போராட்டம், சாலை போராட்டங்களுக்கு நடுவில் இது தேவையான்னும் இருக்கு”
“நான் உடனே உங்களை கூப்பிடறேன்மா” என்று போனை வைத்து விட்டார்.
பெண்கள் முக்கியத்துவம் குறித்து ஒரு கட்டுரை வேணும்மா என்று சுகன்யா கேட்டது நினைவுக்கு வந்தது. சுரேகாவுக்கு ஒரு நிமிடம் எதுவும் தோன்றவில்லை. பெண் வீட்டில் வீட்டுக்காக செய்யும் வேலைகள் மட்டுமே அவளுடைய குடும்பத்துக்கு முக்கியம். அவளுடைய மற்ற எந்தப் பணிகளும் குடும்பத்துக்கு தேவையில்லாத விஷயமே. எழுத்துலகிலோ அவள் என்னென்ன சிரமங்களுக்கு இடையில் எழுத வருகிறாள் என்பது தேவையே இல்லாத விஷயம். இந்த நூலக விஷயம் வேறு ஒரு முடிவில்லாத இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. இதில் என்ன எழுதுவது.
மொபைல் ஒலித்தது.
“எம் எல் ஏ தான்மா பேசறேன். மேலே பேசிட்டேன். உங்க நூலகம் இப்படியே இருக்கலாம். எங்கேயும் மாத்த வேணாம்னு சொன்னேன். அங்கே சரின்னு சொல்லிட்டாங்க. லைப்ரரிக்கு நாம கேட்ட அந்த இடம் டி ஆர் ஓ நேரடியாக வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருக்கிறாங்க”
“ரொம்ப நன்றிங்க”
போனை வைத்த உடனே லைப்ரேரியனிடம் இருந்து போன் வந்தது.
“அக்கா என்ன பண்ணலாம்”
“இப்பதான்மா எம் எல் ஏ பேசினாரு. நம்ம லைப்ரரிய எங்கேயும் மாத்த வேணாமாம். மேலே அவர் பேசிட்டாராம்”
“அப்ப நான் என்ன பண்ணட்டும்?”
“நீங்க பக்கத்துல பள்ளி எதுவும் இல்லைன்னு பதில் எழுதிடுங்க போதும். லைப்ரரிக்கு நாம கேட்ட அந்த இடம் டி ஆர் ஓ நேரடியாக வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருக்கிறாங்களாம். இதையும் சொன்னார்“
இது ஒரு தொடர்கதை தானோ.
பெண்ணின் பெருமையைப் பேசும் கட்டுரையினை இப்போது எழுத வேண்டும். அதற்கு முன்பு பேஸ்புக் வந்தாள்.