• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Manam Nirainthavale(ne)...! - 41

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 41

மறுநாள் காலை அழகாக விடிந்துவிட தன்னுடைய அறையில் குளித்துவிட்டு வெளியே வந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த பூவிழியின் அருகில் அமர்ந்தாள்.. தன்னருகே யாரோ அமரும் ஆரவாரம் கேட்டு திரும்பிப் பார்த்த பூவிழி அது கமழினி என்றதும் எதுவும் பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டு அமைதியாக இருந்தாள்..

அவளின் அமைதியிலேயே கமழினி பூவிழியின் மனதை உணர்ந்து கொண்டாள்.. இருவரும் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த வண்ணம் வந்த வசந்த், “என்ன வீடே ரொம்ப அமைதியாக இருக்கிறது..?” என்று கேட்டபடியே அவர்களின் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து இருவரையும் பார்த்தான்..

அவனின் கேள்வியில் கமழினி அமைதியாக இருக்க பூவிழியும் ஒன்றும் பேசாமல் காயை நறுக்கினாள்.. இருவரின் அமைதியைப் பார்த்த வசந்த், ‘அவன் ஒருத்தன் ஊருக்கு கிளம்பி போனானே.. அவன் சென்று சேர்ந்தானா என்று கூட கவலைப்படாமல் இருக்கிறாளே...’ என்று கமழினிக்கும் சேர்த்து கவலைப்பட்ட வசந்த் துகிலனுக்கு அழைத்தான்..

வசந்த் கமழினியின் மீது பார்வையைச் செலுத்தியவண்ணம் வேண்டுமென்றே பூவிழிடம், “துகிலனுக்குதான் பூவிழி..” என்று மறைமுகமாக கமழினிக்கு அறிவித்தான்.. அவன் சொன்னதும் கமழினி எழுந்து அவளின் அறைக்குள் சென்றுவிட்டாள்.. அவள் எழுந்து செல்வதைக் கவனித்த பூவிழி வசந்தை முறைத்தாள்..

அவளின் முறைப்பை கண்டவன், “என்ன..?” என்று இடதுபுருவம் உயர்த்திக்கேட்டதும், “அவளே இன்றுதான் ஏதோ சொல்ல வந்தால் அதை அவளே முதலில் ஆரம்பிக்கட்டும் என்று நான் அமைதியாக எல்லாத்தையும் கெடுத்துவிட்டு கேட்கும் கேள்வியைப் பாரு..” என்று அவனிடம் சண்டை போட்டாள்..

இதை எல்லாம் அறையில் இருந்து கேட்ட கமழினிக்கு மனம் வலித்தது.. என்னவோ அவள் என்றும் இல்லாத தனிமையை இன்று அவளின் மனம் உணர கண்கள் இரண்டும் கலங்கியது.. தன்னுடைய கண்ணீரைத் துடைத்த வண்ணம் படுக்கையில் அமர்ந்தவள் அவளின் கைகள் இரண்டும் உடனே துகிலனுக்கு அழைக்க அவளின் எண்ணைப் பார்த்தவன் உடனே எடுத்தான்..

“ஹலோ தாமரை என்னடா..?” என்று கேட்டதும், “துகில் என்னோடு யாருமே பேசாமல் அமைதியாக இருக்காங்க.. எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.. இந்த வசந்த் கூட என்னிடம் பேசாமல் இருக்கிறான்..” என்று வருத்தத்துடன் கமழினி சொன்னதும் துகிலனின் முகத்தில் புன்னகை அரும்பியது..

அவன் கிளம்பி வந்து முழுவதுமாக ஒரு நாள் கூட முடியாத நிலையில் அவனுக்கு அழைத்து, ‘வசந்த் என்னோடு பேசாமல் இருக்கிறான்..’ என்று சொல்லும் அளவுக்கு அவளின் மனதில் ஆழமாக தான் இருப்பதை உணர்ந்தவனுக்கு மனம் நிறைந்தது.. அதற்குள் அவனுக்கு வசந்திடம் இருந்து அழைப்பு வர, “தாமரை ஒரு நிமிடம் லைனில் இரு..” என்று சொல்லிவிட்டு வசந்த் அழைப்பை ஏற்றான்..

அவனின் அழைப்பை எடுத்த மறுநொடியே, “வசந்த் நீ அப்புறம் பேசுடா.. நான் இங்கே கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு உடனே போனை வைக்க அதையெல்லாம் கவனித்த பூவிழி, “என்ன ஆச்சு வசந்த்..?” என்று கேட்டதும், “எங்கோ வெளியே செல்கிறான் போல உடனே வைத்துவிட்டான்..” என்று கூறினான்..

வசந்த் போனை வைத்தும், “ஹலோ தாமரை..” என்று அழைத்தவனின் குரலில் இருந்த காதலில் கரைந்து போன கமழினி, “துகில் உனக்கு வருத்தமாக இல்லையா..?” என்று கேட்டதும் துகிலன் அவள் பேசிய பேச்சை நினைத்து மனம் வருந்துகிறாள் என்று உணர்ந்தவன், “நீயே போன் பண்ணிருக்க.. அதுக்கு நான் வருத்தபடுவேனா..?” என்று கேட்டதும் அவளின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது..

இருவரின் மனதிலும் காதல் இருந்தாலும் இன்றுதான் அவர்கள் இருவரும் முதல் முதலாக போனில் பேசுகின்றனர்.. இதுநாள் வரையில் இருவரும் போனில் பேசியது இல்லை.. அவள் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், “உனக்கு எப்பொழுது எக்ஸாம் முடியுது..?” என்று குரலில் குறும்பு கூத்தாடக் கேட்டான் துகிலன்..

அவனின் கேள்விக்கு, “இன்னும் இரண்டு நாளில் எக்ஸாம் ஆரம்பிக்கிறது..” என்று பதில் சொன்னவள், “மாமா நீ எப்பொழுது இங்கே வருவாய்..?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.. அவள், ‘மாமா..’ என்று உரிமையோடு அழைத்ததில் திகைத்து நின்றான் துகிலன்.. அவனின் மனம் சந்தோஷத்தில் துள்ளியது..

‘கண்ணாத்தாள் அம்மா சொன்னது போலவே துகில் என்மேல் உயிரையே வைத்திருக்கிறான்.. நான்தான் இவனை புரிந்து கொள்ளாமல் கோபத்தில் ஏதேதோ பேசிட்டேன்..’ என்று நினைத்தவளை துகிலனின் குரல் கலைத்தது..

“தாமரை நீ என்ன சொல்லி கூப்பிட்ட..?” என்று ஆர்வத்துடன் துகிலன் கேட்டதும், “அது எல்லாம் ஒண்ணுமில்ல..” என்று கூறியவள், “துகில் நான்தான் உன்னை புரிந்துக் கொள்ளவே இல்லை.. ஸாரிடா..” என்று மன்னிப்பு கேட்கவும் அவள் பேச்சை மாற்றிவிட்டதை உணர்ந்தவன், ‘எப்படி பேச்சை மாற்றுகிறாள் பாரு..’ என்று நினைத்தான் துகிலன்..

“ஸாரி எல்லாம் வேண்டாம்.. நீ நல்ல எக்ஸாம் எழுது.. நான் வசந்தை பேச சொல்கிறேன்.. மனதை போட்டு குழப்பிக்கொள்ளாதே..” என்று வருத்தத்துடன் கூறியவன், “நான் அங்கே வர மாட்டேன் தாமரை.. உன்னோட முடிவு எதுவாக இருந்தாலும் எனக்கு ஓகே.. மீண்டும் மீண்டும் வந்து மனம் வருத்தப்பட நான் தயாராக இல்ல..” என்று கூறியவன் போனை வைத்தான்..

அவன் போனை வைத்தும் கமழினியின் கண்கள் கலங்கியது.. தன்னுடைய வார்த்தைகள் அவனின் மனதை எந்த அளவுக்கு பதித்து இருக்கிறது என்று உணர்ந்தவளுக்கு கண்கள் இரண்டும் கலங்கியது..

ஹாலில் அமர்ந்திருந்த வசந்த், ‘துகிலன் எடுத்த வேகத்தில் எதற்கு அலைப்பை வைத்துவிட்டான்..?’ யோசித்தவண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தான் வசந்த்.. பூவிழி காய் நறுக்கியதும் எழுந்து சென்று சமையலைத் தொடங்கினாள்.. பூவிழி சென்றதும் கமழினியின் அறையை எட்டிப்பார்த்தான் வசந்த்..

அவளோ படுக்கையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.. அதை பார்த்தவன், ‘இவளுக்கு அவனோட காதல் என்றுதான் புரியுமோ..’ என்று நினைத்தவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. வசந்த் முகத்தை கேள்வியாக பார்த்தவண்ணம் ஏதோ எடுக்க அவளின் பின்னோடு அறைக்குள் வந்த பூவிழி, கமழினி அழுவதைப் பார்த்து, “கமழி எதுக்கு இப்பொழுது அழுகிறாய்..?” என்று கேட்டதும் அவளால் அழுகையை அடக்க முடியாமல் பூவிழியின் தோளில் சாய்ந்து அழுதுவிட்டாள்...

அவள் அழுவதைத் தாங்க முடியாத பூவிழி, “இங்கே பாருடா.. அக்கா சொல்கிறேன் இல்ல அழுகாதே..” என்று அவளை தோளில் சாய்த்து அவளின் முதுகை வருடி ஆறுதல் படுத்தினாள்.. மெல்ல மெல்ல கமழினியின் அழுகை குறைந்ததும் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து கமழினியின் கையில் கொடுத்தாள் பூவிழி..

அவளிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தவள், “அக்கா நேற்று நான் எங்கே போனேன் தெரியுமா..?” என்று கேட்டாள்.. அவளின் முகத்தை பார்த்த பெரியவள், “காலேஜ் தானே போனாய்..?” என்று கேட்டதும் இல்லை என்று தலையசைத்தவளைப் பார்த்து பூவிழி அதிர்ச்சியுடன் நின்றாள்..

அவளின் முகத்தில் இருந்த அதிர்ச்சியைப் பார்த்தவண்ணம் அறைக்குள் நுழைந்த வசந்த், “என்ன நடக்குது இங்கே..? நீ எதுக்கு இப்பொழுது அதிர்ந்து நிற்கிற..?” என்று கேட்டதும் சுயநினைவுக்கு வந்த பூவிழி, “அப்பொழுது நேற்று எங்கேடி போனாய்..?” என்று கேட்டாள்..

அவளின் கேள்விக்கு சிரித்தவள், “நேற்று உங்கள் இருவரின் மனதையும் புரியாமல் கஷ்டப்படுத்திவிட்டு காலேஜ் கிளம்பி போன பொழுது கண்ணாத்தாள் அம்மாவை பார்க்க நேர்ந்தது..” என்று கூறியவளைப் பார்த்து திகைத்து நின்றான் வசந்த்.. இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை.. அவங்க எப்படி இங்கே வந்தாங்க என்று புரியாமல் குழப்பத்தோடு நின்றான் வசந்த்..

கணவன் – மனைவி இருவரையும் சாதாரணமாக பார்த்தவள், “துகிலன் சென்றதும் நீ சொன்ன விஷயம் எல்லாம் என்னை ரொம்ப குழப்பிவிட்டது அக்கா.. எப்படி யோசித்தும் விடை தெரியல.. அண்ணாவிடமோ, கிருஷ்ணாவிடமோ உண்மையைக் கேட்க எனக்கு மனசு வரல..” என்று தன்னுடைய மனநிலை முழுவதையும் கூறியவளை அவர்கள் இருவரும் அமைதியோடு பார்த்தனர்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அவர்கள் இருவரின் அமைதியைப் பார்த்த கமழினி, “இருவரும் சேரில் உட்காருங்க..” என்று கூறியவள் அவர்கள் அமர்ந்ததும் நேற்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.. நேற்று அவள் கல்லூரிக்கு செல்லும் வழியில் ஒரு திருப்பத்தில் அவள் கண்ணாத்தாளை சந்திக்க நேரிட்டது..

இவளுக்கு முன்னாடியே இவளைப் பார்த்துவிட்ட கண்ணாத்தாள், “கமழி..” என்று அழைக்கவும் திரும்பிப் பார்த்தவள் உடனே அவர்களை அடையாளம் கண்டு, “என்னம்மா நல்ல இருக்கீங்களா..? தம்பி என்ன பண்ணுகிறான்..?” என்று கேட்டதும், அவரின் முகத்தில் புன்னகை பரவியது.. அவரின் முகத்தை பார்த்தவள், “என்னம்மா..?” என்று கேட்டாள்..

அவளின் தெளிவில் இருந்தே, ‘அவளுக்கு குணமாகிவிட்டது..’ என்று உணர்ந்துக்கொண்டவர், “கமழி உனக்கு எல்லாம் நினைவு வந்துவிட்டதா..?” என்று கேட்டவர் அருகில் இருந்த பூங்காவைக் காட்டி, “உன்னோடு கொஞ்சநேரம் பேசணும்..” என்று சொல்லவும் அவளின் மனதிலும், ‘இவரிடம் உண்மையைக் கேட்டால் என்ன..?’ என்று யோசித்துக்கொண்டே அவரின் பின்னோடு நடந்தாள்...

பூங்காவின் உள்ளே நுழைந்தவர் ஓரமாக ஒரு சிமிண்ட் பெஞ்சில் சென்று அமர அவரின் அருகில் இவளும் சென்று அமர, “கமழி கண்ணு உனக்கு நான் சொல்லணும் என்று இல்ல இருந்தாலும் சில விஷயம் உன்னிடம் சொல்லணும் கண்ணா..” என்று கூறியவர் கமழினியின் முகத்தை புன்னகையோடு பார்த்தார்..

அவளோ அவரை புரியாமல் பார்க்க, “உனக்கு இப்பொழுது கல்யாணம் ஆகிவிட்டது.. துகில் தம்பி உன்னோட கணவன்...” என்றவர் கூறியதும், “அவர் என்னை என்ன கேள்வி கேட்டார் தெரியுமா அம்மா..?” என்றவள் வருத்ததுடன் கேட்டதும் அவளின் முகத்தில் இருந்தே அவளின் மனதில் இருக்கும் வலியை உணர்ந்தவர் அவளிடம் மனம்விட்டு பேச தொடங்கினார்..

“வாழ்க்கையில் எல்லாம் நினைத்த நேரத்தில் நினைத்த வண்ணம் நடக்கணும் என்று நினைக்க கூடாது கண்ணு..” என்று கூறியவர் அவளின் முகத்தை வருடி கொடுத்துவிட்டு, “எல்லா பெண்களுக்கும் தனக்கு வரும் கணவனின் மனதில் வேற எந்த பெண்ணும் இருக்கக்கூடாது என்று நாம் விரும்புவது போலவே ஆண்களுக்கும் தன்னுடைய மனைவியாக வருபவள் மனதில் தான் மட்டுமே உயர்ந்த இடத்தில் இருக்கணும் என்று நினைப்பார்கள்.. சிலர் வாய்விட்டு சொல்லுவாங்க.. சிலர் எதுவுமே சொல்ல மாட்டாங்க..” என்று துகிலனின் பேச்சிற்கு மனதின் முதிர்ச்சியோடு அவளுக்கு விளக்கம் கொடுத்தார் கண்ணாத்தாள்..

அவர் சொன்னதை எல்லாம் பொறுமையாக கேட்டவள், “அப்போ அவர் சொன்னது சரி என்று சொல்லவரீங்களா..?” என்று தயக்கத்தோடு கேட்டவளின் தலையை வருடியவர், “நீ பேசியது மட்டும் சரி என்று நினைக்கிறாயா கண்ணு..” என்று கேட்டு அவளை யோசிக்க வைத்தார்.. அவள் யோசனையோடு அவரின் முகத்தை குழப்பத்துடன் பார்த்தாள்..

“அவர் கேட்டது தவறுதான் இல்லை என்று சொல்ல மாட்டேன்.. ஆனால் அதற்காக நீயும் வாய்விட்டு இருக்கக்கூடாது.. உன்மீதும் தவறு இருக்குமா..!! புரிதலோடு வந்த காதல் திட்டமிடப்பட்ட சதியால் இத்தனை பிரச்சனை உங்கள் நால்வருக்கும் வந்திருக்கிறது..” என்று அவளுக்கு புரியும் வண்ணம் எடுத்து கூறினார் கண்ணாத்தாள்..

பிறகு அவளின் முகம் தெளியாமல் இருப்பதைக் கண்டவர், “உன்னை ஏமாற்ற வேண்டும் என்று அந்த தம்பி நினைத்திருந்தால் இன்று நீயும் ஒரு ஜடமாக இருப்பாய் கண்ணு.. வாழ்க்கையில் ஆயிரம் மரண அடிகள் விழுகத்தான் செய்யும்.. ஆனால் அதையெல்லாம் கடந்து வந்தாக வேண்டும்.. உனக்கு நல்ல வாழ்க்கை அமைத்திருக்கிறது அதை நீயே கெடுத்துக் கொள்ளாத கண்ணு..” என்றவர் அவளின் மீது உள்ள பாசத்தில் சொல்லவும் அவளின் கண்கள் கலங்கியது..

அவள் அழுதுவிட அவளின் முகத்தை நிமிர்த்தியவர், “என்ன கண்ணு ஆச்சு.. எதுக்கு இப்பொழுது சின்னபிள்ளை போலவே அழுகிறாய்..?” என்று கேட்டதும் அவள் நேற்று வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாம் அவரிடம் கூறினாள் கமழினி..

கமழினி சொல்வதை எல்லாம் பொறுமையாகக்கேட்டு முடித்த கண்ணாத்தாள், “நீ வெளியே போ என்று சொன்னதும் உன்னோட மனம் கஷ்டப்படகூடாது என்று போயிருக்கும் அந்த தம்பியின் காதல் உனக்கு புரியலையா கண்ணு.. அவனுக்கு உன்மீது காதல் அதிகம் கண்ணா.. நீதான் அவனை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய்..” என்று கூறியவர் அவளை யோசிக்க விட்டுவிட்டு அந்த இடத்தில் இருந்து எழுந்தார்..

அவரின் முகத்தை நிமிர்ந்து பார்த்த கமழினி, “அம்மா நான் என்னோட கணவருடன் உங்க வீட்டிற்கு வருகிறேன்..” என்று சொல்ல அவளின் நெற்றியில் முத்தமிட்டவர், “நீங்க நால்வரும் சேர்ந்து வீட்டுக்கு வாங்கடா.. அம்மா வீட்டிற்கு வர சொல்லிட்டா வருவாய்..?” என்று கேட்டவர், “நன்றாக யோசித்து நல்ல முடிவு எடுமா..” என்று சொல்லிவிட்டு சென்றார்..

அவர் சென்றதும் அந்த இடத்திலேயே அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தாள்.. நேற்று அவளுக்கு நினைவு வந்ததும், ‘துகிலனின் முகத்தில் வந்த சந்தோஷம்.. அடுத்தநொடியே தான் போ என்று சொன்னதும் எதுவும் பேசாமல் சென்றது.. வசந்த் சொன்ன வார்த்தைகள்.. பூவிழி யோசிக்க சொன்ன ராதாவின் விஷயம்..’ என்று எல்லாவற்றையும் யோசித்தாள்..

அவள் யோசிக்க யோசிக்க குழப்பமேகம் எல்லாம் களைந்துவிட அவளின் மனம் நிறைந்த துகிலனின் முகம் மட்டும் அவளின் கண்முன்னே வந்து நிற்க அவளுக்கு தான் சொன்ன வார்த்தையின் வீரியமும், அதன் மூலம் அவன் அனுபவித்த வலியும் புரிந்துவிட்டது.. கண்ணாத்தாள் சென்ற பிறகு கிட்டத்தட்ட மாலை நேரம் வரையில் பூங்காவில் அமர்ந்திருந்தவள் பிறகுதான் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்..

அங்கே நடந்தது அனைத்தையும் கூறியவள், “அக்கா நீ சொல்லும் பொழுது எனக்கு ஒன்றும் புரியல கோபம்தான் வந்தது.. ஆனால் அவருக்கும் ஒரு மனசு இருக்கும் இல்ல.. அதிலும் சில ஆசைகள் இருக்கும் இல்ல..?” என்று கண்ணீரோடு கேட்டவள் நேற்று இரவு துகிலனுக்கு அழைத்து மன்னிப்பு கேட்டதையும் சொன்னாள்..

அவள் எல்லாம் சொல்லி முடிக்க அவளின் அருகில் அமர்ந்த வசந்த், “நேற்று நான் கூட இருவரையும் இணைத்துவைத்து தவறு செய்துவிட்டோமோ என்று கூட யோசித்தேன் கமழி.. ஆனால் இப்பொழுது மனசுக்கு ரொம்ப நிறைவாக இருக்கிறது..” என்று கூறியவன் பூவிழியின் முகத்தைப் பார்க்க அவளோ புன்னகையோடு இருவரையும் பார்த்தாள்..

பிறகு, “உங்களோட நட்பு இதே புரிதலோடு இருக்க வேண்டும்.. ஹப்பாடா இரண்டு நாளாக மனதில் இருந்த வருத்தம் எண்ணம் போன இடம் தெரியல.. என்னோட நண்பனை மறந்துவிடாதே கமழி.. அப்புறம் அக்காவுக்கு கேட்ட கோபம் வரும்..” என்று சொல்லவும் அவளை முறைத்தாள் கமழினி..

“அக்கா எங்க நட்பு இருக்கட்டும் உனக்கு எப்படி துகிலை தெரியும்.. உங்களுக்கு இடையே எப்படி இப்படி ஒரு நட்பு மலர்ந்தது..?” என்று கேட்டவள், “ஆனால் உங்கள் இருவருக்கும் இடையே ஏன் நட்பு மலரணும்..?” என்று புரியாமல் கேட்டதும் வசந்த் வாய்விட்டு சிரித்த வண்ணம், “உன்னோட கணவனுக்கு நமது நட்பை புரிய வைக்க வேண்டாமா..?” என்று கேட்டதும் கமழினி புரியாமல் பார்த்தாள்..

அவளின் பார்வையை உணர்ந்த பூவிழி, “வசந்த் அவளுக்கு ஒன்றும் புரியல.. நான் அவளிடம் சொல்கிறேன்.. நீங்க போங்க..” என்று சொல்ல வசந்த் சேரில் இருந்து எழுந்ததும், “வசந்த்..” என்று அழைத்தவளை அவன் திரும்பிப் பார்க்க, “எனக்கு துகிலைப் பார்க்கணும் போல இருக்குடா..” என்று கூறினாள்..

அவளின் முகத்தைப் பார்த்தவன், “ஒரு பொருள் தன்னுடைய கையில் இருக்கும் பொழுது அதோட அருமை நமக்கு தெரியாது.. அதுவே அது தொலைந்து போனால் தான் அதோட மதிப்பு நமக்கு தெரியும்...” என்று கூறியவன், “அவனோட காதலின் அருமை நீ ஒரு மாதம் அவனை விட்டு பிரிந்து இருந்தால் தான் தெரியும்.. அதனால் இதுக்கு மட்டும் வசந்த் ஹெல்ப் பண்ணவே மாட்டேன்..” என்று கூறியவனை முறைந்தாள் கமழினி..

அவள் முறைப்பதைப் பார்த்து பூவிழி சிரிக்க, “போடா லூசு.. ஒரு ஹெல்ப் கூட செய்ய மாட்டேன் என்று சொல்ற நீ எல்லாம் என்னோட நண்பனே கிடையாது போடா..” என்று சொல்ல, “ஹப்பாடி இப்பொழுது ஒரு விஷயம் கன்பாம்..” என்று கூறியவனை இப்பொழுது பூவிழி புரியாமல் பார்த்தாள்..

பூவிழி பார்வையை உணர்ந்தவன், “பூவிழி அவளிடம் இருந்து கற்றுகொள்.. பாரு ஒரு நாள் பிரிந்ததும் என்ன தவியாய் தவிக்கிறாள்.. நீயும் இருக்கிறாயே..” என்று சொல்ல, “ஏன் நாங்க தவிக்கவே இல்லையோ..?” என்று கேட்டவள், “இவளின் மனசு முழுக்க நிறைந்து இருப்பவன் துகிலன் என்று நினைக்கும் பொழுதே ரொம்ப சந்தோசமாக இருக்கிறது..” என்று கூறினாள் பூவிழி..

கமழினி அமைதியாக இருப்பதைப் பார்த்த வசந்த், “எக்ஸாம் எழுதி முடி.. நானே உன்னை அவனிடம் அழச்சிட்டு போகிறேன்..” என்று சொல்லவும் அவளும் சரியென்று தலையசைக்க வசந்த் வெளியே சென்றான்.. பூவிழி கமழினியிடன் தங்களின் நட்பினை சொல்ல தொடங்கினாள்..

ம(ண)னம் நிறைந்தவ(ளே)(னே) தொடரும்..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top