அத்தியாயம் – 41
மறுநாள் காலை அழகாக விடிந்துவிட தன்னுடைய அறையில் குளித்துவிட்டு வெளியே வந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த பூவிழியின் அருகில் அமர்ந்தாள்.. தன்னருகே யாரோ அமரும் ஆரவாரம் கேட்டு திரும்பிப் பார்த்த பூவிழி அது கமழினி என்றதும் எதுவும் பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டு அமைதியாக இருந்தாள்..
அவளின் அமைதியிலேயே கமழினி பூவிழியின் மனதை உணர்ந்து கொண்டாள்.. இருவரும் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த வண்ணம் வந்த வசந்த், “என்ன வீடே ரொம்ப அமைதியாக இருக்கிறது..?” என்று கேட்டபடியே அவர்களின் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து இருவரையும் பார்த்தான்..
அவனின் கேள்வியில் கமழினி அமைதியாக இருக்க பூவிழியும் ஒன்றும் பேசாமல் காயை நறுக்கினாள்.. இருவரின் அமைதியைப் பார்த்த வசந்த், ‘அவன் ஒருத்தன் ஊருக்கு கிளம்பி போனானே.. அவன் சென்று சேர்ந்தானா என்று கூட கவலைப்படாமல் இருக்கிறாளே...’ என்று கமழினிக்கும் சேர்த்து கவலைப்பட்ட வசந்த் துகிலனுக்கு அழைத்தான்..
வசந்த் கமழினியின் மீது பார்வையைச் செலுத்தியவண்ணம் வேண்டுமென்றே பூவிழிடம், “துகிலனுக்குதான் பூவிழி..” என்று மறைமுகமாக கமழினிக்கு அறிவித்தான்.. அவன் சொன்னதும் கமழினி எழுந்து அவளின் அறைக்குள் சென்றுவிட்டாள்.. அவள் எழுந்து செல்வதைக் கவனித்த பூவிழி வசந்தை முறைத்தாள்..
அவளின் முறைப்பை கண்டவன், “என்ன..?” என்று இடதுபுருவம் உயர்த்திக்கேட்டதும், “அவளே இன்றுதான் ஏதோ சொல்ல வந்தால் அதை அவளே முதலில் ஆரம்பிக்கட்டும் என்று நான் அமைதியாக எல்லாத்தையும் கெடுத்துவிட்டு கேட்கும் கேள்வியைப் பாரு..” என்று அவனிடம் சண்டை போட்டாள்..
இதை எல்லாம் அறையில் இருந்து கேட்ட கமழினிக்கு மனம் வலித்தது.. என்னவோ அவள் என்றும் இல்லாத தனிமையை இன்று அவளின் மனம் உணர கண்கள் இரண்டும் கலங்கியது.. தன்னுடைய கண்ணீரைத் துடைத்த வண்ணம் படுக்கையில் அமர்ந்தவள் அவளின் கைகள் இரண்டும் உடனே துகிலனுக்கு அழைக்க அவளின் எண்ணைப் பார்த்தவன் உடனே எடுத்தான்..
“ஹலோ தாமரை என்னடா..?” என்று கேட்டதும், “துகில் என்னோடு யாருமே பேசாமல் அமைதியாக இருக்காங்க.. எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.. இந்த வசந்த் கூட என்னிடம் பேசாமல் இருக்கிறான்..” என்று வருத்தத்துடன் கமழினி சொன்னதும் துகிலனின் முகத்தில் புன்னகை அரும்பியது..
அவன் கிளம்பி வந்து முழுவதுமாக ஒரு நாள் கூட முடியாத நிலையில் அவனுக்கு அழைத்து, ‘வசந்த் என்னோடு பேசாமல் இருக்கிறான்..’ என்று சொல்லும் அளவுக்கு அவளின் மனதில் ஆழமாக தான் இருப்பதை உணர்ந்தவனுக்கு மனம் நிறைந்தது.. அதற்குள் அவனுக்கு வசந்திடம் இருந்து அழைப்பு வர, “தாமரை ஒரு நிமிடம் லைனில் இரு..” என்று சொல்லிவிட்டு வசந்த் அழைப்பை ஏற்றான்..
அவனின் அழைப்பை எடுத்த மறுநொடியே, “வசந்த் நீ அப்புறம் பேசுடா.. நான் இங்கே கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு உடனே போனை வைக்க அதையெல்லாம் கவனித்த பூவிழி, “என்ன ஆச்சு வசந்த்..?” என்று கேட்டதும், “எங்கோ வெளியே செல்கிறான் போல உடனே வைத்துவிட்டான்..” என்று கூறினான்..
வசந்த் போனை வைத்தும், “ஹலோ தாமரை..” என்று அழைத்தவனின் குரலில் இருந்த காதலில் கரைந்து போன கமழினி, “துகில் உனக்கு வருத்தமாக இல்லையா..?” என்று கேட்டதும் துகிலன் அவள் பேசிய பேச்சை நினைத்து மனம் வருந்துகிறாள் என்று உணர்ந்தவன், “நீயே போன் பண்ணிருக்க.. அதுக்கு நான் வருத்தபடுவேனா..?” என்று கேட்டதும் அவளின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது..
இருவரின் மனதிலும் காதல் இருந்தாலும் இன்றுதான் அவர்கள் இருவரும் முதல் முதலாக போனில் பேசுகின்றனர்.. இதுநாள் வரையில் இருவரும் போனில் பேசியது இல்லை.. அவள் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், “உனக்கு எப்பொழுது எக்ஸாம் முடியுது..?” என்று குரலில் குறும்பு கூத்தாடக் கேட்டான் துகிலன்..
அவனின் கேள்விக்கு, “இன்னும் இரண்டு நாளில் எக்ஸாம் ஆரம்பிக்கிறது..” என்று பதில் சொன்னவள், “மாமா நீ எப்பொழுது இங்கே வருவாய்..?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.. அவள், ‘மாமா..’ என்று உரிமையோடு அழைத்ததில் திகைத்து நின்றான் துகிலன்.. அவனின் மனம் சந்தோஷத்தில் துள்ளியது..
‘கண்ணாத்தாள் அம்மா சொன்னது போலவே துகில் என்மேல் உயிரையே வைத்திருக்கிறான்.. நான்தான் இவனை புரிந்து கொள்ளாமல் கோபத்தில் ஏதேதோ பேசிட்டேன்..’ என்று நினைத்தவளை துகிலனின் குரல் கலைத்தது..
“தாமரை நீ என்ன சொல்லி கூப்பிட்ட..?” என்று ஆர்வத்துடன் துகிலன் கேட்டதும், “அது எல்லாம் ஒண்ணுமில்ல..” என்று கூறியவள், “துகில் நான்தான் உன்னை புரிந்துக் கொள்ளவே இல்லை.. ஸாரிடா..” என்று மன்னிப்பு கேட்கவும் அவள் பேச்சை மாற்றிவிட்டதை உணர்ந்தவன், ‘எப்படி பேச்சை மாற்றுகிறாள் பாரு..’ என்று நினைத்தான் துகிலன்..
“ஸாரி எல்லாம் வேண்டாம்.. நீ நல்ல எக்ஸாம் எழுது.. நான் வசந்தை பேச சொல்கிறேன்.. மனதை போட்டு குழப்பிக்கொள்ளாதே..” என்று வருத்தத்துடன் கூறியவன், “நான் அங்கே வர மாட்டேன் தாமரை.. உன்னோட முடிவு எதுவாக இருந்தாலும் எனக்கு ஓகே.. மீண்டும் மீண்டும் வந்து மனம் வருத்தப்பட நான் தயாராக இல்ல..” என்று கூறியவன் போனை வைத்தான்..
அவன் போனை வைத்தும் கமழினியின் கண்கள் கலங்கியது.. தன்னுடைய வார்த்தைகள் அவனின் மனதை எந்த அளவுக்கு பதித்து இருக்கிறது என்று உணர்ந்தவளுக்கு கண்கள் இரண்டும் கலங்கியது..
ஹாலில் அமர்ந்திருந்த வசந்த், ‘துகிலன் எடுத்த வேகத்தில் எதற்கு அலைப்பை வைத்துவிட்டான்..?’ யோசித்தவண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தான் வசந்த்.. பூவிழி காய் நறுக்கியதும் எழுந்து சென்று சமையலைத் தொடங்கினாள்.. பூவிழி சென்றதும் கமழினியின் அறையை எட்டிப்பார்த்தான் வசந்த்..
அவளோ படுக்கையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.. அதை பார்த்தவன், ‘இவளுக்கு அவனோட காதல் என்றுதான் புரியுமோ..’ என்று நினைத்தவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. வசந்த் முகத்தை கேள்வியாக பார்த்தவண்ணம் ஏதோ எடுக்க அவளின் பின்னோடு அறைக்குள் வந்த பூவிழி, கமழினி அழுவதைப் பார்த்து, “கமழி எதுக்கு இப்பொழுது அழுகிறாய்..?” என்று கேட்டதும் அவளால் அழுகையை அடக்க முடியாமல் பூவிழியின் தோளில் சாய்ந்து அழுதுவிட்டாள்...
அவள் அழுவதைத் தாங்க முடியாத பூவிழி, “இங்கே பாருடா.. அக்கா சொல்கிறேன் இல்ல அழுகாதே..” என்று அவளை தோளில் சாய்த்து அவளின் முதுகை வருடி ஆறுதல் படுத்தினாள்.. மெல்ல மெல்ல கமழினியின் அழுகை குறைந்ததும் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து கமழினியின் கையில் கொடுத்தாள் பூவிழி..
அவளிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தவள், “அக்கா நேற்று நான் எங்கே போனேன் தெரியுமா..?” என்று கேட்டாள்.. அவளின் முகத்தை பார்த்த பெரியவள், “காலேஜ் தானே போனாய்..?” என்று கேட்டதும் இல்லை என்று தலையசைத்தவளைப் பார்த்து பூவிழி அதிர்ச்சியுடன் நின்றாள்..
அவளின் முகத்தில் இருந்த அதிர்ச்சியைப் பார்த்தவண்ணம் அறைக்குள் நுழைந்த வசந்த், “என்ன நடக்குது இங்கே..? நீ எதுக்கு இப்பொழுது அதிர்ந்து நிற்கிற..?” என்று கேட்டதும் சுயநினைவுக்கு வந்த பூவிழி, “அப்பொழுது நேற்று எங்கேடி போனாய்..?” என்று கேட்டாள்..
அவளின் கேள்விக்கு சிரித்தவள், “நேற்று உங்கள் இருவரின் மனதையும் புரியாமல் கஷ்டப்படுத்திவிட்டு காலேஜ் கிளம்பி போன பொழுது கண்ணாத்தாள் அம்மாவை பார்க்க நேர்ந்தது..” என்று கூறியவளைப் பார்த்து திகைத்து நின்றான் வசந்த்.. இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை.. அவங்க எப்படி இங்கே வந்தாங்க என்று புரியாமல் குழப்பத்தோடு நின்றான் வசந்த்..
கணவன் – மனைவி இருவரையும் சாதாரணமாக பார்த்தவள், “துகிலன் சென்றதும் நீ சொன்ன விஷயம் எல்லாம் என்னை ரொம்ப குழப்பிவிட்டது அக்கா.. எப்படி யோசித்தும் விடை தெரியல.. அண்ணாவிடமோ, கிருஷ்ணாவிடமோ உண்மையைக் கேட்க எனக்கு மனசு வரல..” என்று தன்னுடைய மனநிலை முழுவதையும் கூறியவளை அவர்கள் இருவரும் அமைதியோடு பார்த்தனர்..
மறுநாள் காலை அழகாக விடிந்துவிட தன்னுடைய அறையில் குளித்துவிட்டு வெளியே வந்தவள் ஹாலில் அமர்ந்திருந்த பூவிழியின் அருகில் அமர்ந்தாள்.. தன்னருகே யாரோ அமரும் ஆரவாரம் கேட்டு திரும்பிப் பார்த்த பூவிழி அது கமழினி என்றதும் எதுவும் பேசாமல் முகத்தை திருப்பிக்கொண்டு அமைதியாக இருந்தாள்..
அவளின் அமைதியிலேயே கமழினி பூவிழியின் மனதை உணர்ந்து கொண்டாள்.. இருவரும் அமைதியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த வண்ணம் வந்த வசந்த், “என்ன வீடே ரொம்ப அமைதியாக இருக்கிறது..?” என்று கேட்டபடியே அவர்களின் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து இருவரையும் பார்த்தான்..
அவனின் கேள்வியில் கமழினி அமைதியாக இருக்க பூவிழியும் ஒன்றும் பேசாமல் காயை நறுக்கினாள்.. இருவரின் அமைதியைப் பார்த்த வசந்த், ‘அவன் ஒருத்தன் ஊருக்கு கிளம்பி போனானே.. அவன் சென்று சேர்ந்தானா என்று கூட கவலைப்படாமல் இருக்கிறாளே...’ என்று கமழினிக்கும் சேர்த்து கவலைப்பட்ட வசந்த் துகிலனுக்கு அழைத்தான்..
வசந்த் கமழினியின் மீது பார்வையைச் செலுத்தியவண்ணம் வேண்டுமென்றே பூவிழிடம், “துகிலனுக்குதான் பூவிழி..” என்று மறைமுகமாக கமழினிக்கு அறிவித்தான்.. அவன் சொன்னதும் கமழினி எழுந்து அவளின் அறைக்குள் சென்றுவிட்டாள்.. அவள் எழுந்து செல்வதைக் கவனித்த பூவிழி வசந்தை முறைத்தாள்..
அவளின் முறைப்பை கண்டவன், “என்ன..?” என்று இடதுபுருவம் உயர்த்திக்கேட்டதும், “அவளே இன்றுதான் ஏதோ சொல்ல வந்தால் அதை அவளே முதலில் ஆரம்பிக்கட்டும் என்று நான் அமைதியாக எல்லாத்தையும் கெடுத்துவிட்டு கேட்கும் கேள்வியைப் பாரு..” என்று அவனிடம் சண்டை போட்டாள்..
இதை எல்லாம் அறையில் இருந்து கேட்ட கமழினிக்கு மனம் வலித்தது.. என்னவோ அவள் என்றும் இல்லாத தனிமையை இன்று அவளின் மனம் உணர கண்கள் இரண்டும் கலங்கியது.. தன்னுடைய கண்ணீரைத் துடைத்த வண்ணம் படுக்கையில் அமர்ந்தவள் அவளின் கைகள் இரண்டும் உடனே துகிலனுக்கு அழைக்க அவளின் எண்ணைப் பார்த்தவன் உடனே எடுத்தான்..
“ஹலோ தாமரை என்னடா..?” என்று கேட்டதும், “துகில் என்னோடு யாருமே பேசாமல் அமைதியாக இருக்காங்க.. எனக்கு மனசுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.. இந்த வசந்த் கூட என்னிடம் பேசாமல் இருக்கிறான்..” என்று வருத்தத்துடன் கமழினி சொன்னதும் துகிலனின் முகத்தில் புன்னகை அரும்பியது..
அவன் கிளம்பி வந்து முழுவதுமாக ஒரு நாள் கூட முடியாத நிலையில் அவனுக்கு அழைத்து, ‘வசந்த் என்னோடு பேசாமல் இருக்கிறான்..’ என்று சொல்லும் அளவுக்கு அவளின் மனதில் ஆழமாக தான் இருப்பதை உணர்ந்தவனுக்கு மனம் நிறைந்தது.. அதற்குள் அவனுக்கு வசந்திடம் இருந்து அழைப்பு வர, “தாமரை ஒரு நிமிடம் லைனில் இரு..” என்று சொல்லிவிட்டு வசந்த் அழைப்பை ஏற்றான்..
அவனின் அழைப்பை எடுத்த மறுநொடியே, “வசந்த் நீ அப்புறம் பேசுடா.. நான் இங்கே கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு உடனே போனை வைக்க அதையெல்லாம் கவனித்த பூவிழி, “என்ன ஆச்சு வசந்த்..?” என்று கேட்டதும், “எங்கோ வெளியே செல்கிறான் போல உடனே வைத்துவிட்டான்..” என்று கூறினான்..
வசந்த் போனை வைத்தும், “ஹலோ தாமரை..” என்று அழைத்தவனின் குரலில் இருந்த காதலில் கரைந்து போன கமழினி, “துகில் உனக்கு வருத்தமாக இல்லையா..?” என்று கேட்டதும் துகிலன் அவள் பேசிய பேச்சை நினைத்து மனம் வருந்துகிறாள் என்று உணர்ந்தவன், “நீயே போன் பண்ணிருக்க.. அதுக்கு நான் வருத்தபடுவேனா..?” என்று கேட்டதும் அவளின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது..
இருவரின் மனதிலும் காதல் இருந்தாலும் இன்றுதான் அவர்கள் இருவரும் முதல் முதலாக போனில் பேசுகின்றனர்.. இதுநாள் வரையில் இருவரும் போனில் பேசியது இல்லை.. அவள் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், “உனக்கு எப்பொழுது எக்ஸாம் முடியுது..?” என்று குரலில் குறும்பு கூத்தாடக் கேட்டான் துகிலன்..
அவனின் கேள்விக்கு, “இன்னும் இரண்டு நாளில் எக்ஸாம் ஆரம்பிக்கிறது..” என்று பதில் சொன்னவள், “மாமா நீ எப்பொழுது இங்கே வருவாய்..?” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.. அவள், ‘மாமா..’ என்று உரிமையோடு அழைத்ததில் திகைத்து நின்றான் துகிலன்.. அவனின் மனம் சந்தோஷத்தில் துள்ளியது..
‘கண்ணாத்தாள் அம்மா சொன்னது போலவே துகில் என்மேல் உயிரையே வைத்திருக்கிறான்.. நான்தான் இவனை புரிந்து கொள்ளாமல் கோபத்தில் ஏதேதோ பேசிட்டேன்..’ என்று நினைத்தவளை துகிலனின் குரல் கலைத்தது..
“தாமரை நீ என்ன சொல்லி கூப்பிட்ட..?” என்று ஆர்வத்துடன் துகிலன் கேட்டதும், “அது எல்லாம் ஒண்ணுமில்ல..” என்று கூறியவள், “துகில் நான்தான் உன்னை புரிந்துக் கொள்ளவே இல்லை.. ஸாரிடா..” என்று மன்னிப்பு கேட்கவும் அவள் பேச்சை மாற்றிவிட்டதை உணர்ந்தவன், ‘எப்படி பேச்சை மாற்றுகிறாள் பாரு..’ என்று நினைத்தான் துகிலன்..
“ஸாரி எல்லாம் வேண்டாம்.. நீ நல்ல எக்ஸாம் எழுது.. நான் வசந்தை பேச சொல்கிறேன்.. மனதை போட்டு குழப்பிக்கொள்ளாதே..” என்று வருத்தத்துடன் கூறியவன், “நான் அங்கே வர மாட்டேன் தாமரை.. உன்னோட முடிவு எதுவாக இருந்தாலும் எனக்கு ஓகே.. மீண்டும் மீண்டும் வந்து மனம் வருத்தப்பட நான் தயாராக இல்ல..” என்று கூறியவன் போனை வைத்தான்..
அவன் போனை வைத்தும் கமழினியின் கண்கள் கலங்கியது.. தன்னுடைய வார்த்தைகள் அவனின் மனதை எந்த அளவுக்கு பதித்து இருக்கிறது என்று உணர்ந்தவளுக்கு கண்கள் இரண்டும் கலங்கியது..
ஹாலில் அமர்ந்திருந்த வசந்த், ‘துகிலன் எடுத்த வேகத்தில் எதற்கு அலைப்பை வைத்துவிட்டான்..?’ யோசித்தவண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தான் வசந்த்.. பூவிழி காய் நறுக்கியதும் எழுந்து சென்று சமையலைத் தொடங்கினாள்.. பூவிழி சென்றதும் கமழினியின் அறையை எட்டிப்பார்த்தான் வசந்த்..
அவளோ படுக்கையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.. அதை பார்த்தவன், ‘இவளுக்கு அவனோட காதல் என்றுதான் புரியுமோ..’ என்று நினைத்தவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. வசந்த் முகத்தை கேள்வியாக பார்த்தவண்ணம் ஏதோ எடுக்க அவளின் பின்னோடு அறைக்குள் வந்த பூவிழி, கமழினி அழுவதைப் பார்த்து, “கமழி எதுக்கு இப்பொழுது அழுகிறாய்..?” என்று கேட்டதும் அவளால் அழுகையை அடக்க முடியாமல் பூவிழியின் தோளில் சாய்ந்து அழுதுவிட்டாள்...
அவள் அழுவதைத் தாங்க முடியாத பூவிழி, “இங்கே பாருடா.. அக்கா சொல்கிறேன் இல்ல அழுகாதே..” என்று அவளை தோளில் சாய்த்து அவளின் முதுகை வருடி ஆறுதல் படுத்தினாள்.. மெல்ல மெல்ல கமழினியின் அழுகை குறைந்ததும் அருகில் இருந்த தண்ணீரை எடுத்து கமழினியின் கையில் கொடுத்தாள் பூவிழி..
அவளிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தவள், “அக்கா நேற்று நான் எங்கே போனேன் தெரியுமா..?” என்று கேட்டாள்.. அவளின் முகத்தை பார்த்த பெரியவள், “காலேஜ் தானே போனாய்..?” என்று கேட்டதும் இல்லை என்று தலையசைத்தவளைப் பார்த்து பூவிழி அதிர்ச்சியுடன் நின்றாள்..
அவளின் முகத்தில் இருந்த அதிர்ச்சியைப் பார்த்தவண்ணம் அறைக்குள் நுழைந்த வசந்த், “என்ன நடக்குது இங்கே..? நீ எதுக்கு இப்பொழுது அதிர்ந்து நிற்கிற..?” என்று கேட்டதும் சுயநினைவுக்கு வந்த பூவிழி, “அப்பொழுது நேற்று எங்கேடி போனாய்..?” என்று கேட்டாள்..
அவளின் கேள்விக்கு சிரித்தவள், “நேற்று உங்கள் இருவரின் மனதையும் புரியாமல் கஷ்டப்படுத்திவிட்டு காலேஜ் கிளம்பி போன பொழுது கண்ணாத்தாள் அம்மாவை பார்க்க நேர்ந்தது..” என்று கூறியவளைப் பார்த்து திகைத்து நின்றான் வசந்த்.. இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை.. அவங்க எப்படி இங்கே வந்தாங்க என்று புரியாமல் குழப்பத்தோடு நின்றான் வசந்த்..
கணவன் – மனைவி இருவரையும் சாதாரணமாக பார்த்தவள், “துகிலன் சென்றதும் நீ சொன்ன விஷயம் எல்லாம் என்னை ரொம்ப குழப்பிவிட்டது அக்கா.. எப்படி யோசித்தும் விடை தெரியல.. அண்ணாவிடமோ, கிருஷ்ணாவிடமோ உண்மையைக் கேட்க எனக்கு மனசு வரல..” என்று தன்னுடைய மனநிலை முழுவதையும் கூறியவளை அவர்கள் இருவரும் அமைதியோடு பார்த்தனர்..