அத்தியாயம் – 42
வசந்த் வெளியே செல்வதைப் பார்த்த பூவிழி, “நான் துகிலனுக்கு தோழியாக மாறியதே உங்களோட நட்பை அவனுக்கு புரிய வைக்கத்தான்.. அதுவும் வசந்தோட ஐடியாதான் கமழி..” என்று கூறியவள் கமழினியைப் பார்த்து, “உனக்கு கிடைத்த நண்பன் போல எனக்கும் ஒரு நண்பன் வேண்டும் என்ற சுயநலமும் மனதில் இருந்தது கமழி..” என்று கூறியவள் கமழினி முகத்தைப் பார்த்துவிட்டு கடந்த காலத்தின் நினைவுகளோடு மூல்கிப்போனாள்..
தன்னுடைய படிப்பு முடிந்ததும் கருணையின் அடிப்படையில் தந்தையின் வேலை தனக்கு கிடைக்க முதல் இரண்டு வருடமும் வேறொரு ஊரில் வேலை செய்துவிட்டு மூன்றாவது வருடத்தின் தொடக்கத்தில் திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டு சாரதாம்மா வேலை செய்யும் அதே பள்ளிக்கு வந்து சேர்ந்தாள் பூவிழி..
அவள் திருச்சி மாற்றலான விஷயத்தை அழகர் மூலம் வசந்திற்கு தெரியவர வசந்த் கிருஷ்ணாவிடம் உதவி கேட்டதும் அவன் சாரதாம்மாவை பூவிழிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.. சராதாம்மாவிற்கு ஏற்கனவே எல்லா விஷயமும் தெரிந்திருக்க தன்னுடைய மகனின் தவறைத் திருத்த நினைத்தவர் பூவிழியை அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்..
அன்று மாலை நேரத்தில் பூவிழியோடு வீட்டிற்கு நுழைந்த தன்னுடைய அம்மாவைப் பார்த்த துகிலன், “அம்மா இவங்க யாரு..?” என்று கேட்டதும் பூவிழி துகிலனைப் பார்த்திட்டு அமைதியாக நிற்க, “இந்த பொண்ணோட பெயர் பூவிழி. இவளோட அப்பா வாத்தியார் கண்ணா.. உன்னோட அப்பாவிற்கு ரொம்பவே நெருங்கிய நண்பர். இப்போ இந்த பொண்ணு வீட்டில் இவளுக்கு என்று யாரும் இல்லை..” என்று சொல்லவும், “இவங்களோட அப்பா..” என்று கேட்டான் துகிலன்..
துகிலனின் பார்வை பூவிழியின் மீது இருந்தாலும் கவனம் முழுவதும் அம்மா சொல்லும் விஷயத்தில் இருந்தது.. துகிலனின் முகம் பார்த்த பூவிழி மனம், ‘கமழிக்கு ஏற்ற ஜோடிதான்..’ என்று நினைத்துக்கொண்டு அமைதியாக நின்றாள்..
“இவளோட அப்பா இறந்துவிட்டார்.. இவளுக்கு என்று யாரும் இல்லடா.. நான் வேலை செய்யும் அதே பள்ளியில் தான் இவளும் வேலை செய்கிறாள்..” என்று பூவிழியைத் துகிலனுக்கு அறிமுகம் செய்தார்.. பூவிழியின் முகம் பார்த்த துகிலன் அதன்பிறகு எதுவும் கேட்காமல் அவனின் அறைக்குள் சென்றுவிட்டான்..
அவன் சென்றதும் தன்னுடைய அறைக்கு அழைத்து சென்றவர், “இது என்னோட அறை பூவிழி.. நீ இங்கேயே இருப்பது என்றாலும் இரு.. இல்ல உனக்கு என்று கொடுத்திருக்கும் வீட்டில் இருப்பது என்றாலும் இரு..” என்று சொல்லவும், “இல்லம்மா நான் இங்கேயே இருக்கிறேன்..” என்று சொல்ல சரியென்று கூறியவர் அறையைவிட்டு வெளியே சென்றார்..
சராதாம்மா அறையைவிட்டு வெளியே சென்றதும் பூவிழி துகிலனைப் பற்றி யோசிக்க அவனோ வெளியே கிளம்பிச் சென்றான்.. அவன் சென்றதும் அறைக்கு வெளியே வந்தவள், “அம்மா துகில் யார் கூடவும் பேச மாட்டாரா..?” என்று சாதாரணமாக கேட்டாள்..
அவளின் கேள்வியில் சிரித்த சராதாம்மா, “அவன் இதுவரை என்னிடமே சரி என்ற வார்த்தைக்கு அதிகமாக பேசியது இல்ல.. அப்புறம் எப்படிம்மா மற்றவர்களுடன் பேசுவான்..” என்று கேட்டவர், “அவனிடம் பேசும் பொழுது கொஞ்சம் சாக்கிரதையாக இரு.. இல்லையென்றால் எல்லாமே வீணாகப் போய்விடும்..” என்று எச்சரிக்கை செய்தார்..
அவர் சொன்னதை மனதில் நன்றாக பதியவைத்துக் கொண்டவளுக்கு சாரதாம்மாவை ரொம்பவே பிடித்துவிட காலையில் எழுந்ததும் குளித்து முடித்து வெளியே வருபவள் அவருக்கு தன்னால் முடிந்த வேலைகளை செய்து கொடுத்துவிட்டு அவருடனே பள்ளிக்கூடம் செல்வது இப்படியே நாட்கள் நகர்ந்தது.. கிட்டத்தட்ட இரண்டு வாரமாக வெளியே செல்வதும் உள்ளே வருவதுமாக இருந்தவன் ஒருநாள் சந்தோசத்தோடு வீட்டின் உள்ளே நுழைந்தான்..
அவன் வீட்டின் உள்ளே நுழையும் பொழுது, “அம்மா எங்கே இருக்கீங்க.. இங்கே ஒரு நிமிஷம் வாங்க...” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தவனை அமைதியாக பார்த்த வண்ணம் ஹாலில் அமர்ந்திருந்தாள் பூவிழி.. ஏதோ ஒரு புக் எடுக்க அறைக்குள் சென்றவர் வேகமாக வெளியே வந்து, “என்ன கண்ணா வரும் பொழுதே அழைப்பு எல்லாம் பலமாக இருக்கிறது..?” என்று கேட்டார்..
அவரின் கேள்வியில் சிரித்த முகத்தோடு, “அம்மா நாளைக்கு என்ன நாள் தெரியுமா..?” என்று கேட்டான்.. அவனின் கேள்வியில் பூவிழி யோசிக்க சராதாம்மா நொடி கூட தாமதிக்காமல், “தாமரை இல்லம் தொடங்கி நாளையோடு ஒரு வருடம் முடிந்துவிட்டது இல்ல..” என்று கேட்டார்..
அவரின் பதிலில் துகிலனின் முகம் பிரகாசமாக, “சூப்பர் அம்மா.. நாளையோடு தாமரை இல்லம் தொடங்கி ஒருவருடம் முடிந்தது.. அம்மா நாளைக்கு என்ன பண்ணலாம் என்று யோசித்தேன்.. அங்கே இருக்கும் எல்லோருக்கும் புதுத்துணி எடுத்து வைத்திருக்கிறேன்.. குட்டிஸ்க்கு நிறைய பொம்மை வாங்கி இருக்கிறேன்.. அப்புறம் நல்ல நர்ஸ் அவங்களை கவனித்து கொள்ள முழுநேரம் வேலைக்கு நியமித்து இருக்கிறேன்.. எல்லோருக்கும் மெடிக்கல் கேப் ஏற்பாடு பண்ணி இருக்கிறேன்..” என்று அவன் பட்டியலிட அதை கேட்ட பூவிழிக்கு தலையே சுற்றியது..
அதைப் பார்த்த துகிலன், “பூவிழி என்னங்க உட்கார்ந்துகொண்டு தூங்கறீங்க..?” என்று கேட்டதும், “நீங்க சொல்வதை எல்லாம் கேட்டால் எனக்கு அதிர்ச்சியாகவும் இருக்கும் அதே அளவு ஆச்சரியமாகவும் இருக்கு..” என்று கூறினாள் பூவிழி..
அவளின் முகத்தைப் பார்த்த துகிலன் தன்னுடைய அம்மாவின் பக்கம் திரும்பி, “அம்மா இவங்களிடம் நம்முடைய இல்லம் பற்றி சொல்லவே இல்லையா..?” என்று கேட்டதும், “எனக்கு நினைவு இல்லடா..” என்று கூறியவர், “நீ அவளிடம் சொல்லி நான் உங்கள் இருவருக்கும் சாப்பிட ஏதாவது செய்கிறேன்..” என்று சமையலறைக்குள் நுழைந்தார்..
அவர் செல்வதைப் பார்த்த துகிலன், “ஸாரிங்க.. உங்களை பூவிழி என்று பெயர் சொல்லி கூப்பிட்டுவிட்டேன்..” என்று சொல்ல சிரித்தவள், “நீங்க பூவிழி என்றே கூப்பிடுங்க துகில்.. எனக்கு உங்களைவிட சின்ன வயதுதான்..” என்று கூறியவள், “இந்த ‘ங்’ மட்டும் வேண்டாம்..” என்று சொல்லவும் துகிலனும் உடனே சரியென்றான்..
பிறகு அவளே, “இப்பொழுது சொல்லு துகில்.. அது என்ன தாமரை இல்லம்..” என்று கேட்டதும் அவ்வளவு சீக்கிரம் தன்னுடைய மனதில் இருப்பதை யாரிடமும் சொல்லாத துகிலன் பூவிழியிடம், “நான் என்னோட மனதின் திருப்திக்காக தொடங்கிய இல்லம் இது பூவிழி.. இந்த ஒருவருடமாக இந்த இல்லம் தான் என்னோட மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது..” என்று சொல்ல பூவிழிக்கு அந்த பெயர் மட்டும் எங்கோ இடித்தது..
“இந்த ‘தாமரை..’ என்ற பெயர்..?” என்றவள் இழுக்கவும், “தாமரை என்பதற்கு காரணம் என்ன என்று கேட்காதீங்க.. அதை நான் இப்பொழுது சொல்ல முடியாது..” என்று கூறியவனின் முகம் நொடி பொழுதில் மாறிவிட எழுந்து சென்றுவிட்டான்..
அன்றில் இருந்தே அவனின் தனிப்பட்ட விசயத்தில் தலையிடாமல் இருந்தாள் பூவிழி.. அவனோடு மறுநாள் அவனின் இல்லத்திற்கு செல்ல வெளியே வந்தவள் துகிலன் பக்கத்தில் இருக்கும் வீட்டினருடன் சண்டை போடுவது தெரிய அவள் அருகில் சென்றாள்..
அவள் அருகில் வருவதைக் கவனிக்காதவன், “ஒரு பொண்ணு மத்தவங்க வீட்டில் வந்து தங்கினால் இப்படித்தான் கதைகட்டி விடுவீங்களா..? அவங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது.. அவங்க கணவரோடு சின்ன பிரச்சனை அதுதான் எங்கள் வீட்டில் வந்து தங்கி இருக்காங்க..” என்று சொல்லிக்கொண்டிருக்க அவனின் அருகில் வந்த பூவிழிக்கு முதலில் எதுவும் புரியாமல் நின்றாள்..
அப்பொழுதுதான் அவளைப் பார்த்த துகிலன், “பூவிழி உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது தானே..?” என்று கேட்டதும், ‘எனக்கு திருமணம் நடந்தது இவனுக்கு எப்படி தெரியும்..?’ என்ற அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் பூவிழி.. அவளின் முகத்தைப் பார்த்தவன், “என்ன அதிர்ச்சியோடு பார்க்கிறாய்..? என்னிடம் மட்டும் எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொன்ன.. இப்பொழுது ஒன்றும் பேசாமல் நிற்கிறாய்.. அப்போ பொய் சொன்னாயா..?” என்று அதட்டலுடன் கேட்டான்..
அப்பொழுதுதான், ‘இவன் என்னை திருமணம் ஆகிவிட்டது என்று சொல்ல சொல்கிறான்..’ என்று புரிந்து கொண்டவள், “எனக்கு திருமணம் ஆகிவிட்டதுதான்.. நான் எதுக்கு உன்னிடம் தேவை இல்லாமல் பொய் சொல்ல வேண்டும்..” என்று கேட்டவளுக்கு மனதிற்குள் திக் திக் என்று இருக்க, “இப்பொழுது நம்பிறீங்களா..?” என்று எதிர்வீட்டுப் பெண்ணைப் பார்த்து கேட்டான் துகிலன்..
வசந்த் வெளியே செல்வதைப் பார்த்த பூவிழி, “நான் துகிலனுக்கு தோழியாக மாறியதே உங்களோட நட்பை அவனுக்கு புரிய வைக்கத்தான்.. அதுவும் வசந்தோட ஐடியாதான் கமழி..” என்று கூறியவள் கமழினியைப் பார்த்து, “உனக்கு கிடைத்த நண்பன் போல எனக்கும் ஒரு நண்பன் வேண்டும் என்ற சுயநலமும் மனதில் இருந்தது கமழி..” என்று கூறியவள் கமழினி முகத்தைப் பார்த்துவிட்டு கடந்த காலத்தின் நினைவுகளோடு மூல்கிப்போனாள்..
தன்னுடைய படிப்பு முடிந்ததும் கருணையின் அடிப்படையில் தந்தையின் வேலை தனக்கு கிடைக்க முதல் இரண்டு வருடமும் வேறொரு ஊரில் வேலை செய்துவிட்டு மூன்றாவது வருடத்தின் தொடக்கத்தில் திருச்சிக்கு மாற்றம் செய்யப்பட்டு சாரதாம்மா வேலை செய்யும் அதே பள்ளிக்கு வந்து சேர்ந்தாள் பூவிழி..
அவள் திருச்சி மாற்றலான விஷயத்தை அழகர் மூலம் வசந்திற்கு தெரியவர வசந்த் கிருஷ்ணாவிடம் உதவி கேட்டதும் அவன் சாரதாம்மாவை பூவிழிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.. சராதாம்மாவிற்கு ஏற்கனவே எல்லா விஷயமும் தெரிந்திருக்க தன்னுடைய மகனின் தவறைத் திருத்த நினைத்தவர் பூவிழியை அவர்களின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார்..
அன்று மாலை நேரத்தில் பூவிழியோடு வீட்டிற்கு நுழைந்த தன்னுடைய அம்மாவைப் பார்த்த துகிலன், “அம்மா இவங்க யாரு..?” என்று கேட்டதும் பூவிழி துகிலனைப் பார்த்திட்டு அமைதியாக நிற்க, “இந்த பொண்ணோட பெயர் பூவிழி. இவளோட அப்பா வாத்தியார் கண்ணா.. உன்னோட அப்பாவிற்கு ரொம்பவே நெருங்கிய நண்பர். இப்போ இந்த பொண்ணு வீட்டில் இவளுக்கு என்று யாரும் இல்லை..” என்று சொல்லவும், “இவங்களோட அப்பா..” என்று கேட்டான் துகிலன்..
துகிலனின் பார்வை பூவிழியின் மீது இருந்தாலும் கவனம் முழுவதும் அம்மா சொல்லும் விஷயத்தில் இருந்தது.. துகிலனின் முகம் பார்த்த பூவிழி மனம், ‘கமழிக்கு ஏற்ற ஜோடிதான்..’ என்று நினைத்துக்கொண்டு அமைதியாக நின்றாள்..
“இவளோட அப்பா இறந்துவிட்டார்.. இவளுக்கு என்று யாரும் இல்லடா.. நான் வேலை செய்யும் அதே பள்ளியில் தான் இவளும் வேலை செய்கிறாள்..” என்று பூவிழியைத் துகிலனுக்கு அறிமுகம் செய்தார்.. பூவிழியின் முகம் பார்த்த துகிலன் அதன்பிறகு எதுவும் கேட்காமல் அவனின் அறைக்குள் சென்றுவிட்டான்..
அவன் சென்றதும் தன்னுடைய அறைக்கு அழைத்து சென்றவர், “இது என்னோட அறை பூவிழி.. நீ இங்கேயே இருப்பது என்றாலும் இரு.. இல்ல உனக்கு என்று கொடுத்திருக்கும் வீட்டில் இருப்பது என்றாலும் இரு..” என்று சொல்லவும், “இல்லம்மா நான் இங்கேயே இருக்கிறேன்..” என்று சொல்ல சரியென்று கூறியவர் அறையைவிட்டு வெளியே சென்றார்..
சராதாம்மா அறையைவிட்டு வெளியே சென்றதும் பூவிழி துகிலனைப் பற்றி யோசிக்க அவனோ வெளியே கிளம்பிச் சென்றான்.. அவன் சென்றதும் அறைக்கு வெளியே வந்தவள், “அம்மா துகில் யார் கூடவும் பேச மாட்டாரா..?” என்று சாதாரணமாக கேட்டாள்..
அவளின் கேள்வியில் சிரித்த சராதாம்மா, “அவன் இதுவரை என்னிடமே சரி என்ற வார்த்தைக்கு அதிகமாக பேசியது இல்ல.. அப்புறம் எப்படிம்மா மற்றவர்களுடன் பேசுவான்..” என்று கேட்டவர், “அவனிடம் பேசும் பொழுது கொஞ்சம் சாக்கிரதையாக இரு.. இல்லையென்றால் எல்லாமே வீணாகப் போய்விடும்..” என்று எச்சரிக்கை செய்தார்..
அவர் சொன்னதை மனதில் நன்றாக பதியவைத்துக் கொண்டவளுக்கு சாரதாம்மாவை ரொம்பவே பிடித்துவிட காலையில் எழுந்ததும் குளித்து முடித்து வெளியே வருபவள் அவருக்கு தன்னால் முடிந்த வேலைகளை செய்து கொடுத்துவிட்டு அவருடனே பள்ளிக்கூடம் செல்வது இப்படியே நாட்கள் நகர்ந்தது.. கிட்டத்தட்ட இரண்டு வாரமாக வெளியே செல்வதும் உள்ளே வருவதுமாக இருந்தவன் ஒருநாள் சந்தோசத்தோடு வீட்டின் உள்ளே நுழைந்தான்..
அவன் வீட்டின் உள்ளே நுழையும் பொழுது, “அம்மா எங்கே இருக்கீங்க.. இங்கே ஒரு நிமிஷம் வாங்க...” என்ற அழைப்புடன் வீட்டிற்குள் நுழைந்தவனை அமைதியாக பார்த்த வண்ணம் ஹாலில் அமர்ந்திருந்தாள் பூவிழி.. ஏதோ ஒரு புக் எடுக்க அறைக்குள் சென்றவர் வேகமாக வெளியே வந்து, “என்ன கண்ணா வரும் பொழுதே அழைப்பு எல்லாம் பலமாக இருக்கிறது..?” என்று கேட்டார்..
அவரின் கேள்வியில் சிரித்த முகத்தோடு, “அம்மா நாளைக்கு என்ன நாள் தெரியுமா..?” என்று கேட்டான்.. அவனின் கேள்வியில் பூவிழி யோசிக்க சராதாம்மா நொடி கூட தாமதிக்காமல், “தாமரை இல்லம் தொடங்கி நாளையோடு ஒரு வருடம் முடிந்துவிட்டது இல்ல..” என்று கேட்டார்..
அவரின் பதிலில் துகிலனின் முகம் பிரகாசமாக, “சூப்பர் அம்மா.. நாளையோடு தாமரை இல்லம் தொடங்கி ஒருவருடம் முடிந்தது.. அம்மா நாளைக்கு என்ன பண்ணலாம் என்று யோசித்தேன்.. அங்கே இருக்கும் எல்லோருக்கும் புதுத்துணி எடுத்து வைத்திருக்கிறேன்.. குட்டிஸ்க்கு நிறைய பொம்மை வாங்கி இருக்கிறேன்.. அப்புறம் நல்ல நர்ஸ் அவங்களை கவனித்து கொள்ள முழுநேரம் வேலைக்கு நியமித்து இருக்கிறேன்.. எல்லோருக்கும் மெடிக்கல் கேப் ஏற்பாடு பண்ணி இருக்கிறேன்..” என்று அவன் பட்டியலிட அதை கேட்ட பூவிழிக்கு தலையே சுற்றியது..
அதைப் பார்த்த துகிலன், “பூவிழி என்னங்க உட்கார்ந்துகொண்டு தூங்கறீங்க..?” என்று கேட்டதும், “நீங்க சொல்வதை எல்லாம் கேட்டால் எனக்கு அதிர்ச்சியாகவும் இருக்கும் அதே அளவு ஆச்சரியமாகவும் இருக்கு..” என்று கூறினாள் பூவிழி..
அவளின் முகத்தைப் பார்த்த துகிலன் தன்னுடைய அம்மாவின் பக்கம் திரும்பி, “அம்மா இவங்களிடம் நம்முடைய இல்லம் பற்றி சொல்லவே இல்லையா..?” என்று கேட்டதும், “எனக்கு நினைவு இல்லடா..” என்று கூறியவர், “நீ அவளிடம் சொல்லி நான் உங்கள் இருவருக்கும் சாப்பிட ஏதாவது செய்கிறேன்..” என்று சமையலறைக்குள் நுழைந்தார்..
அவர் செல்வதைப் பார்த்த துகிலன், “ஸாரிங்க.. உங்களை பூவிழி என்று பெயர் சொல்லி கூப்பிட்டுவிட்டேன்..” என்று சொல்ல சிரித்தவள், “நீங்க பூவிழி என்றே கூப்பிடுங்க துகில்.. எனக்கு உங்களைவிட சின்ன வயதுதான்..” என்று கூறியவள், “இந்த ‘ங்’ மட்டும் வேண்டாம்..” என்று சொல்லவும் துகிலனும் உடனே சரியென்றான்..
பிறகு அவளே, “இப்பொழுது சொல்லு துகில்.. அது என்ன தாமரை இல்லம்..” என்று கேட்டதும் அவ்வளவு சீக்கிரம் தன்னுடைய மனதில் இருப்பதை யாரிடமும் சொல்லாத துகிலன் பூவிழியிடம், “நான் என்னோட மனதின் திருப்திக்காக தொடங்கிய இல்லம் இது பூவிழி.. இந்த ஒருவருடமாக இந்த இல்லம் தான் என்னோட மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது..” என்று சொல்ல பூவிழிக்கு அந்த பெயர் மட்டும் எங்கோ இடித்தது..
“இந்த ‘தாமரை..’ என்ற பெயர்..?” என்றவள் இழுக்கவும், “தாமரை என்பதற்கு காரணம் என்ன என்று கேட்காதீங்க.. அதை நான் இப்பொழுது சொல்ல முடியாது..” என்று கூறியவனின் முகம் நொடி பொழுதில் மாறிவிட எழுந்து சென்றுவிட்டான்..
அன்றில் இருந்தே அவனின் தனிப்பட்ட விசயத்தில் தலையிடாமல் இருந்தாள் பூவிழி.. அவனோடு மறுநாள் அவனின் இல்லத்திற்கு செல்ல வெளியே வந்தவள் துகிலன் பக்கத்தில் இருக்கும் வீட்டினருடன் சண்டை போடுவது தெரிய அவள் அருகில் சென்றாள்..
அவள் அருகில் வருவதைக் கவனிக்காதவன், “ஒரு பொண்ணு மத்தவங்க வீட்டில் வந்து தங்கினால் இப்படித்தான் கதைகட்டி விடுவீங்களா..? அவங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது.. அவங்க கணவரோடு சின்ன பிரச்சனை அதுதான் எங்கள் வீட்டில் வந்து தங்கி இருக்காங்க..” என்று சொல்லிக்கொண்டிருக்க அவனின் அருகில் வந்த பூவிழிக்கு முதலில் எதுவும் புரியாமல் நின்றாள்..
அப்பொழுதுதான் அவளைப் பார்த்த துகிலன், “பூவிழி உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது தானே..?” என்று கேட்டதும், ‘எனக்கு திருமணம் நடந்தது இவனுக்கு எப்படி தெரியும்..?’ என்ற அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தாள் பூவிழி.. அவளின் முகத்தைப் பார்த்தவன், “என்ன அதிர்ச்சியோடு பார்க்கிறாய்..? என்னிடம் மட்டும் எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொன்ன.. இப்பொழுது ஒன்றும் பேசாமல் நிற்கிறாய்.. அப்போ பொய் சொன்னாயா..?” என்று அதட்டலுடன் கேட்டான்..
அப்பொழுதுதான், ‘இவன் என்னை திருமணம் ஆகிவிட்டது என்று சொல்ல சொல்கிறான்..’ என்று புரிந்து கொண்டவள், “எனக்கு திருமணம் ஆகிவிட்டதுதான்.. நான் எதுக்கு உன்னிடம் தேவை இல்லாமல் பொய் சொல்ல வேண்டும்..” என்று கேட்டவளுக்கு மனதிற்குள் திக் திக் என்று இருக்க, “இப்பொழுது நம்பிறீங்களா..?” என்று எதிர்வீட்டுப் பெண்ணைப் பார்த்து கேட்டான் துகிலன்..