- Joined
- Jan 17, 2018
- Messages
- 1,547
- Reaction score
- 7,648
அத்தியாயம் – 8
அன்றைய இரவில், பவித்ரசெல்வியை அலங்கரித்து அபிஜித்தின் அறைக்குள் அனுப்பி வைத்தனர். பவியோ, வெட்கப்பட்டு அறைக்குள் நுழைந்து அவன் முகம் பார்க்க தயங்கி குனிந்து கொண்டு இருந்தாள்.
அவனோ, உள்ளே வந்தவளின் வெட்கத்தை எல்லாம் கவனிக்காமல், அவளை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்று கட்டிலில் அமர வைத்து அவளிடம் அன்று பாட்டி வீட்டில் என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டு இருந்தான்.
“சொல்லு டா விது செல்லம், எப்படி பாட்டியை நீ சம்மதிக்க வச்ச?” என்று அவளை பார்த்து ஆவலுடன் கேட்டான்.
உள்ளே சிறிது பயமும், வெட்கமும் போட்டி போட வந்தவளை பிடித்து, இப்படி ஒரு கேள்வி கேட்டு வைப்பான் என்று எதிர்பார்க்காததால் அவளுக்கு சப்பென்றானது.
அவனோ, அவளின் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தானே தவிர வேறு பார்வை பார்க்கவில்லை. அதில் கடுப்பாகி, உடை மாற்றும் அறைக்கு சென்று இரவு உடையை உடுத்திக் கொண்டு வந்து அவனை முறைத்து விட்டு படுத்து விட்டாள்.
“ஏய் விது குட்டி, ப்ளீஸ் ப்ளீஸ் இப்படி எல்லாம் செய்யாத டா செல்லம். எத்தனை நாள் கேட்கணும் நினைச்சேன், இப்போ தான் சான்ஸ் கிடைச்சு இருக்கு சொல்லு டா குட்டி” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தான்.
“ஒரு வாரமும் ஜல்சா தான் ஆடிகிட்டு இருந்தோம், பேசாம படுத்து தூங்குங்க எனக்கு தூக்கம் வருது” என்று முறுக்கிக் கொண்டாள்.
“செல்லம் ப்ளீஸ், சொல்லு டா மாமா பாவம் ல செல்லாகுட்டி. நீ என்ன கேட்டாலும், மாமா தரேன் டா, இட்ஸ் எ டீல்” என்று அவன் கூறவும், அவனின் அந்த டீலில் யோசித்துவிட்டு, எழுந்து அமர்ந்தாள்.
“நீங்க டீல் போட்டதால நான் இப்போ உங்களுக்கு சொல்லுறேன், ஆனா நான் கேட்டதை நீ தரல அப்புறம் நான் உங்க பாட்டி வீட்டுல போய் தங்கிக்குவேன் சொல்லிட்டேன்” என்று பதில் டீல் போட்டுவிட்டு சொல்ல ஆரம்பித்தாள்.
“அரே லட்கி, யஹாங் ஆயோ” என்று சத்தம் போட்டு கூப்பிட்டார் பாட்டி அவளை.
வேலை செய்யும் பெண்ணை கூப்பிடுகிறார் என்று நினைத்து, பவித்ரா அவள் அதை கண்டுகொள்ளாமல் கொண்டு வந்து இருந்த கதை புக்கில் மூழ்கி இருந்தாள்.
அதற்குள் பாட்டி எழுந்து, அவளின் அருகே வந்து அவரின் கை தடியை வைத்து அவளை தட்டி கூப்பிட்டார். கதை புக்கில் மூழ்கி இருந்தவள், தன்னை தட்டி கூப்பிடுவது யார் என்று பார்த்தாள். அங்கே பாட்டி, அவளை தான் கோபமாக பார்த்துக் கொண்டு இருந்தார்.
“என்ன டா இது? இந்த பாட்டி ஏன் நம்மள முறைச்சு பார்க்குறாங்க? நாம என்ன தப்பு செய்தோம்?” என்று வாய் விட்டே புலம்பிக் கொண்டு இருந்தாள்.
“மெய்ன் தும்ஹேன் புலாதா ஹூன், தும் முஜே நஹின் சுனாதே?” (“நான் உன்னை கூப்பிடுறேன், உனக்கு காது கேட்கலையா”) என்று ஹிந்தியில் அவளை திட்டிக் கொண்டு இருந்தார்.
“என்ன டா இது? இவங்க என்ன பேசுறாங்கனே எனக்கு புரியல, எப்படி நான் பதில் சொல்லுறது” என்று முழித்தாள்.
“ஹே லட்கி! தும் இஸ் சே தக் க்யோன் ஹோ?” (“ஏய் பொண்ணு! ஏன் இப்படி முளிக்குற?”) என்று கேட்டார்.
“முஜே ஹிந்தி நஹி பதா!” (“எனக்கு ஹிந்தி பேச தெரியாது,”) என்று ஒருவாறு எப்பொழுதோ படித்ததை, நியாபகப்படுத்தி கூறிவிட்டாள்.
அதைக் கேட்ட பாட்டி தான், நொந்து போய் விட்டார். பேரனின் மனைவி எப்படி எல்லாம் இருக்க வேண்டும், என்று அவர் ஒரு கற்பனை வைத்து இருந்தார்.
இப்பொழுது ஹிந்தி பேச தெரியாத ஒருத்தியிடம், அவர் எப்படி பேசி பழகுவார், அவரின் கற்பனையை எப்படி அவளுக்கு புரிய வைப்பார்?. சோர்ந்து போய் அங்கே இருந்த ஈசி ஷேரில், அமர்ந்து கொண்டார்.
இதைப் பார்த்த பவித்ரசெல்வி, வரும் பொழுது இங்கே பார்த்த அவரின் கம்பீரத்தையும், இப்படி தளர்ந்து போய் அமர்ந்து இருப்பதையும் பார்த்து கலங்கி விட்டாள்.
அவளுக்கு அவர் இப்படி இருப்பது, அவரின் இயல்பு இல்லை என்று புரிந்து விட்டது. என்ன செய்வது என்று பலவாறாக யோசித்துவிட்டு, அதன் பிறகு ஒரு வழி கிடைத்து விட்ட மகிழ்ச்சியில், அவரின் முகத்தில் மலர்ச்சியை கொண்டு வர சிரித்துக் கொண்டே அவள் அவரருகே சென்று, அவரின் கால் அருகே அமர்ந்து கொண்டாள்.
ஆனால் அவரின் முகத்தை பார்த்தவள், ஏதோ சரியில்லை என்று எண்ணி அவரின் தோளில் ஆதரவாக, தன் கையை தூக்கி வைத்து அவருக்கு நான் இருக்கிறேன் என்று உணர்த்தினாள். என்னவென்று பார்த்தவரிடம், அங்கே பவித்ரசெல்வி பதற்றத்துடன் இருப்பதை கண்டு, புருவம் உயர்த்தி என்னவென்று கேட்டார்.
“தாதி க்யா ஹை? தும் டிக் ஹோ நா!”(“பாட்டி என்ன ஆச்சு? நல்லா தான இருந்தீங்க!”) என்று பதற்றம் குறையாமல் கேட்டாள்.
“நீ.... நீ.. இப்போ ஹிந்தி பேசுற நல்லா”என்று திக்கி திணறி கேட்டார்.
“கூகிள் இருக்க பயமேன் பாட்டி. இன்னும் ஒரு வாரம் எப்படி அப்புறம் உங்க கூட பேசாம இருக்க முடியும் என்னால” என்று ஹிந்தியில் அவள் கூறவும், அவர் சிரித்தார்.
அதன் பிறகு, அவர் சகஜமாக பவித்ராவிடம் உரையாட ஆரம்பித்தார். அவளோ பேசி பேசியே, பாட்டியை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள்.
அவருக்கு பேரன் அபிஜித் என்றால் மிகவும் பிடிக்கும், பிடிக்கும் என்பதை விட அவன் என்றால் உயிர். பேரனை கை பிடிக்க போகும் பெண், அவனை சந்தோஷமாக வைத்துக் கொள்வாளா என்று சிறு கவலை அவருள் எழுந்து கொண்டே இருந்தது.
இப்பொழுது பவித்ராவை பார்த்த பிறகு, அவளுடன் பழகிய பிறகு அவருக்கு அவளை பிடித்தது மட்டுமில்லாமல் தன் சொந்த பேத்தியாவே பாவித்து வந்தார். அவளோ, பாட்டியின் சந்தோசம் தான் முக்கியம் என்பது போல் அவரிடம் அவளுடைய வால்தனத்தை எல்லாம் காட்டிக் கொண்டு இருந்தாள்.
“பேட்டி! யஹாங் ஆத்தி ஹை!”(பேத்தி! இங்க வா கொஞ்சம்)
“தாதி ஆயோ”(வரேன் பாட்டி) என்று கூறிக் கொண்டே அவள் அங்கே வந்தாள்.
“ரொம்ப நாள் ஆகிடுச்சு, நான் டான்ஸ் ஆடி. என் காலேஜ் டேஸ் ல, நான் தான் நல்லா ஆடுவேன் தெரியுமா! இப்போ ஆடனும் போல இருக்கு, வரியா ஆடுவோம்” என்று அவர் அழைக்கவும், பவித்ராவிற்கு கேட்கவா வேண்டும், சேர்ந்து ஆட தொடங்கிவிட்டாள்.
அது மட்டுமில்லாமல், அவருக்கு தமிழ் குத்து பாட்டுக்கு நடனம் ஆட வேறு கற்றுக் கொடுத்தாள். எப்பொழுது எல்லாம் தோன்றுகிறதோ, அப்பொழுது எல்லாம் இருவரும் பாட்டை ஹை வால்யும் வைத்து, ஆட்டம் ஆடிக் கொண்டு இருப்பர்.
இங்கே அபிஜித்க்கு வேலை எதுவும் ஓடவே இல்லை, பாட்டிக்கு பிடிக்கவில்லை என்றால் அதன் பின் ஒன்றும் செய்ய முடியாது. வீட்டில் அவர் வைத்தது தான் சட்டம், அதை அவன் நன்கு அறிவான்.
அவன் பேஷன் டிசைன் எடுத்து படிக்க நினைக்க, அவனின் பாட்டியோ குடும்ப தொழிலை கவனிக்க management படிப்பை எடுக்க கூறினார். அவன் எவ்வளவு எடுத்துக் கூறியும், அவர் முடியாது என்று கூறி விட்டார்.
அதன் பிறகு, மனதை தேற்றிக் கொண்டு, அவன் முழு நேரமும் குடும்பத்திற்காக மட்டுமே உழைக்க ஆரம்பித்தான். படிப்பு கூட அவன் பாட்டி தேர்ந்தெடுக்க சொன்னதை தான் எடுத்து படித்தான்.
இப்பொழுது, அவனின் விதுவை அவர் ஏற்றுக் கொள்வாரா என்று மிகப் பெரிய குழப்பத்தில் இருந்தான். ஆகையால் ஒரு வாரம் முடியவும், அவனே சென்றான் அங்கே பாட்டிக்கு அவளை பிடித்து இருக்கிறதா என்று கேட்க.
அன்றைய இரவில், பவித்ரசெல்வியை அலங்கரித்து அபிஜித்தின் அறைக்குள் அனுப்பி வைத்தனர். பவியோ, வெட்கப்பட்டு அறைக்குள் நுழைந்து அவன் முகம் பார்க்க தயங்கி குனிந்து கொண்டு இருந்தாள்.
அவனோ, உள்ளே வந்தவளின் வெட்கத்தை எல்லாம் கவனிக்காமல், அவளை பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்று கட்டிலில் அமர வைத்து அவளிடம் அன்று பாட்டி வீட்டில் என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டு இருந்தான்.
“சொல்லு டா விது செல்லம், எப்படி பாட்டியை நீ சம்மதிக்க வச்ச?” என்று அவளை பார்த்து ஆவலுடன் கேட்டான்.
உள்ளே சிறிது பயமும், வெட்கமும் போட்டி போட வந்தவளை பிடித்து, இப்படி ஒரு கேள்வி கேட்டு வைப்பான் என்று எதிர்பார்க்காததால் அவளுக்கு சப்பென்றானது.
அவனோ, அவளின் பதிலை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தானே தவிர வேறு பார்வை பார்க்கவில்லை. அதில் கடுப்பாகி, உடை மாற்றும் அறைக்கு சென்று இரவு உடையை உடுத்திக் கொண்டு வந்து அவனை முறைத்து விட்டு படுத்து விட்டாள்.
“ஏய் விது குட்டி, ப்ளீஸ் ப்ளீஸ் இப்படி எல்லாம் செய்யாத டா செல்லம். எத்தனை நாள் கேட்கணும் நினைச்சேன், இப்போ தான் சான்ஸ் கிடைச்சு இருக்கு சொல்லு டா குட்டி” என்று கெஞ்சிக் கொண்டு இருந்தான்.
“ஒரு வாரமும் ஜல்சா தான் ஆடிகிட்டு இருந்தோம், பேசாம படுத்து தூங்குங்க எனக்கு தூக்கம் வருது” என்று முறுக்கிக் கொண்டாள்.
“செல்லம் ப்ளீஸ், சொல்லு டா மாமா பாவம் ல செல்லாகுட்டி. நீ என்ன கேட்டாலும், மாமா தரேன் டா, இட்ஸ் எ டீல்” என்று அவன் கூறவும், அவனின் அந்த டீலில் யோசித்துவிட்டு, எழுந்து அமர்ந்தாள்.
“நீங்க டீல் போட்டதால நான் இப்போ உங்களுக்கு சொல்லுறேன், ஆனா நான் கேட்டதை நீ தரல அப்புறம் நான் உங்க பாட்டி வீட்டுல போய் தங்கிக்குவேன் சொல்லிட்டேன்” என்று பதில் டீல் போட்டுவிட்டு சொல்ல ஆரம்பித்தாள்.
“அரே லட்கி, யஹாங் ஆயோ” என்று சத்தம் போட்டு கூப்பிட்டார் பாட்டி அவளை.
வேலை செய்யும் பெண்ணை கூப்பிடுகிறார் என்று நினைத்து, பவித்ரா அவள் அதை கண்டுகொள்ளாமல் கொண்டு வந்து இருந்த கதை புக்கில் மூழ்கி இருந்தாள்.
அதற்குள் பாட்டி எழுந்து, அவளின் அருகே வந்து அவரின் கை தடியை வைத்து அவளை தட்டி கூப்பிட்டார். கதை புக்கில் மூழ்கி இருந்தவள், தன்னை தட்டி கூப்பிடுவது யார் என்று பார்த்தாள். அங்கே பாட்டி, அவளை தான் கோபமாக பார்த்துக் கொண்டு இருந்தார்.
“என்ன டா இது? இந்த பாட்டி ஏன் நம்மள முறைச்சு பார்க்குறாங்க? நாம என்ன தப்பு செய்தோம்?” என்று வாய் விட்டே புலம்பிக் கொண்டு இருந்தாள்.
“மெய்ன் தும்ஹேன் புலாதா ஹூன், தும் முஜே நஹின் சுனாதே?” (“நான் உன்னை கூப்பிடுறேன், உனக்கு காது கேட்கலையா”) என்று ஹிந்தியில் அவளை திட்டிக் கொண்டு இருந்தார்.
“என்ன டா இது? இவங்க என்ன பேசுறாங்கனே எனக்கு புரியல, எப்படி நான் பதில் சொல்லுறது” என்று முழித்தாள்.
“ஹே லட்கி! தும் இஸ் சே தக் க்யோன் ஹோ?” (“ஏய் பொண்ணு! ஏன் இப்படி முளிக்குற?”) என்று கேட்டார்.
“முஜே ஹிந்தி நஹி பதா!” (“எனக்கு ஹிந்தி பேச தெரியாது,”) என்று ஒருவாறு எப்பொழுதோ படித்ததை, நியாபகப்படுத்தி கூறிவிட்டாள்.
அதைக் கேட்ட பாட்டி தான், நொந்து போய் விட்டார். பேரனின் மனைவி எப்படி எல்லாம் இருக்க வேண்டும், என்று அவர் ஒரு கற்பனை வைத்து இருந்தார்.
இப்பொழுது ஹிந்தி பேச தெரியாத ஒருத்தியிடம், அவர் எப்படி பேசி பழகுவார், அவரின் கற்பனையை எப்படி அவளுக்கு புரிய வைப்பார்?. சோர்ந்து போய் அங்கே இருந்த ஈசி ஷேரில், அமர்ந்து கொண்டார்.
இதைப் பார்த்த பவித்ரசெல்வி, வரும் பொழுது இங்கே பார்த்த அவரின் கம்பீரத்தையும், இப்படி தளர்ந்து போய் அமர்ந்து இருப்பதையும் பார்த்து கலங்கி விட்டாள்.
அவளுக்கு அவர் இப்படி இருப்பது, அவரின் இயல்பு இல்லை என்று புரிந்து விட்டது. என்ன செய்வது என்று பலவாறாக யோசித்துவிட்டு, அதன் பிறகு ஒரு வழி கிடைத்து விட்ட மகிழ்ச்சியில், அவரின் முகத்தில் மலர்ச்சியை கொண்டு வர சிரித்துக் கொண்டே அவள் அவரருகே சென்று, அவரின் கால் அருகே அமர்ந்து கொண்டாள்.
ஆனால் அவரின் முகத்தை பார்த்தவள், ஏதோ சரியில்லை என்று எண்ணி அவரின் தோளில் ஆதரவாக, தன் கையை தூக்கி வைத்து அவருக்கு நான் இருக்கிறேன் என்று உணர்த்தினாள். என்னவென்று பார்த்தவரிடம், அங்கே பவித்ரசெல்வி பதற்றத்துடன் இருப்பதை கண்டு, புருவம் உயர்த்தி என்னவென்று கேட்டார்.
“தாதி க்யா ஹை? தும் டிக் ஹோ நா!”(“பாட்டி என்ன ஆச்சு? நல்லா தான இருந்தீங்க!”) என்று பதற்றம் குறையாமல் கேட்டாள்.
“நீ.... நீ.. இப்போ ஹிந்தி பேசுற நல்லா”என்று திக்கி திணறி கேட்டார்.
“கூகிள் இருக்க பயமேன் பாட்டி. இன்னும் ஒரு வாரம் எப்படி அப்புறம் உங்க கூட பேசாம இருக்க முடியும் என்னால” என்று ஹிந்தியில் அவள் கூறவும், அவர் சிரித்தார்.
அதன் பிறகு, அவர் சகஜமாக பவித்ராவிடம் உரையாட ஆரம்பித்தார். அவளோ பேசி பேசியே, பாட்டியை தன் பக்கம் இழுத்துக் கொண்டாள்.
அவருக்கு பேரன் அபிஜித் என்றால் மிகவும் பிடிக்கும், பிடிக்கும் என்பதை விட அவன் என்றால் உயிர். பேரனை கை பிடிக்க போகும் பெண், அவனை சந்தோஷமாக வைத்துக் கொள்வாளா என்று சிறு கவலை அவருள் எழுந்து கொண்டே இருந்தது.
இப்பொழுது பவித்ராவை பார்த்த பிறகு, அவளுடன் பழகிய பிறகு அவருக்கு அவளை பிடித்தது மட்டுமில்லாமல் தன் சொந்த பேத்தியாவே பாவித்து வந்தார். அவளோ, பாட்டியின் சந்தோசம் தான் முக்கியம் என்பது போல் அவரிடம் அவளுடைய வால்தனத்தை எல்லாம் காட்டிக் கொண்டு இருந்தாள்.
“பேட்டி! யஹாங் ஆத்தி ஹை!”(பேத்தி! இங்க வா கொஞ்சம்)
“தாதி ஆயோ”(வரேன் பாட்டி) என்று கூறிக் கொண்டே அவள் அங்கே வந்தாள்.
“ரொம்ப நாள் ஆகிடுச்சு, நான் டான்ஸ் ஆடி. என் காலேஜ் டேஸ் ல, நான் தான் நல்லா ஆடுவேன் தெரியுமா! இப்போ ஆடனும் போல இருக்கு, வரியா ஆடுவோம்” என்று அவர் அழைக்கவும், பவித்ராவிற்கு கேட்கவா வேண்டும், சேர்ந்து ஆட தொடங்கிவிட்டாள்.
அது மட்டுமில்லாமல், அவருக்கு தமிழ் குத்து பாட்டுக்கு நடனம் ஆட வேறு கற்றுக் கொடுத்தாள். எப்பொழுது எல்லாம் தோன்றுகிறதோ, அப்பொழுது எல்லாம் இருவரும் பாட்டை ஹை வால்யும் வைத்து, ஆட்டம் ஆடிக் கொண்டு இருப்பர்.
இங்கே அபிஜித்க்கு வேலை எதுவும் ஓடவே இல்லை, பாட்டிக்கு பிடிக்கவில்லை என்றால் அதன் பின் ஒன்றும் செய்ய முடியாது. வீட்டில் அவர் வைத்தது தான் சட்டம், அதை அவன் நன்கு அறிவான்.
அவன் பேஷன் டிசைன் எடுத்து படிக்க நினைக்க, அவனின் பாட்டியோ குடும்ப தொழிலை கவனிக்க management படிப்பை எடுக்க கூறினார். அவன் எவ்வளவு எடுத்துக் கூறியும், அவர் முடியாது என்று கூறி விட்டார்.
அதன் பிறகு, மனதை தேற்றிக் கொண்டு, அவன் முழு நேரமும் குடும்பத்திற்காக மட்டுமே உழைக்க ஆரம்பித்தான். படிப்பு கூட அவன் பாட்டி தேர்ந்தெடுக்க சொன்னதை தான் எடுத்து படித்தான்.
இப்பொழுது, அவனின் விதுவை அவர் ஏற்றுக் கொள்வாரா என்று மிகப் பெரிய குழப்பத்தில் இருந்தான். ஆகையால் ஒரு வாரம் முடியவும், அவனே சென்றான் அங்கே பாட்டிக்கு அவளை பிடித்து இருக்கிறதா என்று கேட்க.