MithraPrasath
SM Exclusive
அத்தியாயம் 14
உள்ளே சென்று இன்ஸ்பெக்டரிடம் “நான் கிளம்புறேன் சார்.. ரொம்ப தல வழியா இருக்கு.”
“நீ கிளம்பு முருகன். அதான் எல்லாம் முடிஞ்சதே. அடுத்து நாளைக்கு கெளதம் வெளில வந்துருவான் நீ ஆசை பட்ட மாதிரி. சந்தோஷமா போ..” என்று கூறிவிட்டு தேவேந்திரனின் அம்மாவிடம் வாக்குமூலம் வாங்கி கொண்டு அவர்களும் கிளம்புகின்றனர்.
முருகன் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிந்ததை இன்ஸ்பெக்டர் கவனிக்க வில்லை. முருகன் சௌந்தர்யா கூறியதை இன்ஸ்பெக்டரிடம் கூறாமலே சென்றான். அவன் மிகவும் குழப்பத்தில் இருந்தான்.
அங்கிருந்து கிளம்பி சௌந்தர்யாவை பார்க்க செல்கிறான். அவளை பார்த்ததும்,
“வாங்க..”
“நீ எதுக்கு அந்த விஷயத்த இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்ல கூடாதுன்னு சொன்ன..?!” என்று குழப்பத்தோடு கேட்டான்.
“அவன் ரொம்ப பயந்து போய் இருக்கான். அவனுக்கோ, அவனோட குடும்பத்துக்கோ ஏதாவது கெடுதல் வந்துடுமோ அப்டின்னு நினைச்சு ரொம்ப கவலை படுறான். அதான் வேணாம்ன்னு சொன்னேன்.”
“இதுக்கு எதுக்கு கவலை படனும். நாம போலீஸ் கிட்ட சொன்னா அவுங்களே அவனுக்கு பாதுகாப்பு கொடுப்பாங்க.. அப்பறம் என்ன..?”
“இல்ல வேண்டாம் இருக்கட்டும். இப்டி ஒரு சாட்சி இருக்குறது வெளில தெரிய வேண்டாம். யாருக்குமே சொல்லாத, சைமன் சந்தோஷ் கிட்ட கூட சொல்லாத. அப்போ தான் நல்லது. அது பாதுகாப்பா இருக்கும்.”
“சரி..” என்று யோசித்தவாறே கூறினான். “நீ யாரு சாட்சினே சொல்லவே இல்ல, ஏன்..?”
“நாளைக்கு சொல்லுறேன். எதுவுமே கேக்காத. நாளைக்கு எப்டியும் தெரிஞ்சுடும்ல..”
“நீ சொல்லுறது எனக்கு என்னம்மோ தப்பா படுது. அது யாருன்னும் சொல்ல மாட்டுற, சாட்சி இருக்குன்னும் யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னும் சொல்லுற, நாளைக்கு நீ சொன்ன அவனுக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா..?!” குழப்பத்தோடு சந்தேகத்தோடு கேட்டான்.
“நான் சொல்லுறத கேளு.. நீ யார் கிட்டயும் சொல்லாத.. நாளைக்கு நானே அவன பத்திரமா கூட்டிட்டு வருவேன். இனி எந்த பிரச்சனையும் வராது. நம்பு.”
“நீ என்கிட்டே மட்டுமாது சொல்லு யாருன்னு..?” விடாபிடியாக கேட்டு கொண்டே இருந்தான். ஆனாலும் அவள் பிடிவாதமாக சொல்லவே இல்லை.
“அத விடு முருகன். நீ கிளம்பு, நேரம் ஆச்சு. மணி இப்போவே ஒன்பது ஆச்சு. நாளைக்கு சீக்கிரம் கோர்ட்க்கு போகணும்ல..”
“சரி நான் கிளம்புறேன். வேற ஏதாவது பிரச்சனைனா எனக்கு கண்டிப்பா கால் பண்ணு. நான் வர்றேன்.” அவன் கிளம்பினான்.
வண்டி ஓட்டி கொண்டே நடப்பதை நினைத்து பார்த்தவாறே சென்றான். சௌந்தர்யா ஏன் அப்டி சொல்லி இருப்பாள் என்று எண்ணி கொண்டே இருந்தான். அப்போது தான் அந்த தேவேந்திரனின் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. வீட்டிற்கு வேகமாக சென்றான்.
வீட்டிருக்குள் நுழைந்தான். அவனது சித்தப்பா டிவி பார்த்து கொண்டிருக்கிறார். அவன் சென்று அருகில் அமர்ந்தான்.
“வாப்பா முருகா.. காதம்பரி, உன் ப்ரெண்ட் வீட்டுலலாம் நான் சொன்னத சொல்லிட்டயா..?”
“சொல்லிட்டேன் சித்தப்பா..”
அவன் அருகில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்தான். ‘இத எப்டி கேக்குறது, தப்பா நினைச்சு கிட்டா..? கேக்காம இருக்கவும் முடியல..’
“நீ பாருப்பா, வெளில வேலை இருக்கு, நான் கிளம்புறேன்.”
“ஒரு நிமிஷம் சித்தப்பா.. ஒன்னு கேக்கணும்.”
“என்ன..? கேளு.”
“அது வந்து இந்த கெளதம் கேசுல கொலை பண்ணது யாருன்னு தெரிஞ்சுருச்சு.”
சிவசங்கர் முகம் மாறியது. வேகமாக, “யாரு..?” என்று கேட்டார்.
“கந்துவட்டி பாலு...”
சிவசங்கர் பேசவே இல்லை. ஏதோ யோசனையிலே நடந்து கொண்டு இருந்தார்.
“அது மட்டும் இல்ல சித்தப்பா.. இறந்து போனது நம்ம கிட்ட ரொம்ப வருசத்துக்கு முன்னாடி வேலை பார்த்த அழகேந்திரன், அவரோட பையன் தேவேந்திர முருகன்..”
வேகமாக திரும்பி, “என்ன சொல்லுற..? உனக்கு எப்டி தெரியும்..? அந்த பாலுவ பிடிச்சுட்டாங்களா..? அவன் தான் சொன்னானா..?”
“ஆமாம். அவரு பேரு மட்டும் தான் சொன்னாரு. நாங்க அவனோட வீட்டுல விசாரிக்க போனப்போ தான் எனக்கு இதெல்லாம் தெரிஞ்சது.” சித்தப்பா யோசனையில் அப்டியே நின்றார். “உங்களுக்கு அவன தெரியுமா சித்தப்பா..?”
யோசித்தார் எதுவும் பேசவில்லை.
“சித்தப்பா..?!” என்றான்.
“ம்ம்.. சொல்லுப்பா, என்ன கேட்ட..?”
“அந்த தேவேந்திர முருகன தெரியுமா..?”
“ம்ம்.. தெரியும்ப்பா.. அவன நான் தான் பாலு கிட்ட சேர்த்து விட்டேன். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அவன் அவுங்க அப்பா பார்த்த வேலையவே எனக்கும் கொடுங்க அப்டின்னு என்கிட்ட வந்து கேட்டான்.
அப்போ இங்க யாரும் தேவை இல்லைன்னு நான் தான் அவன அங்க பாலு கிட்ட சேர்த்து விட்டேன். அதுக்கு அப்பறம் நான் அவன பார்க்கல..”
“அப்டியா சித்தப்பா..” என்றான். அவ்ளோ தான் எல்லாம் நல்லதா தான் போச்சு. அவன் நம்ம கிட்ட வேலை பார்த்து இப்டி பணத்த அடிச்சுருந்தா என்ன ஆகுறது..? என்று எண்ணி சந்தோஷ பட்டான்.
சித்தப்பா கிளம்பி வெளியே செல்கிறார். அவன் ரூமுக்கு சென்றான். நாளை நடக்க போறதை கற்பனை செய்து சந்தோஷத்தில் இருந்தான். அப்போது தான் கால் வந்தது. அட்டென்ட் செய்து பேசுகிறான்.
“ஹலோ முருகா..” சைமன் பேசுகிறான்.
“ஹ்ம்ம் சொல்லு...”
“என்னடா சவுண்ட் கம்மியா இருக்கு..?”
“அப்டி இல்ல. ரொம்ப டயர்டா இருக்கு, அதான். நீ என்னன்னு சொல்லு..”
“சௌந்தர்யா வீட்டுக்கு போனேன். நம்ம சூர்யாவ பார்த்தேன்.”
“யாரு..?!” என்று யோசித்து கொண்டே கேட்டான்.
“அதான்டா நம்ம கெளதம் கடைக்கு பூ கட்டி கொடுப்பாங்கல அவுங்க பையன் சூரிய பிரசாத்.. அவன் தான்.”
முருகனுக்கு தெரிய வந்ததும் “ம்ம்ம்... அவன் எதுக்கு அங்க வந்தான்..?”
“டேய்..! அவன் தான் கொலைய பார்த்த நேரடி சாட்சியாம்... சௌந்தர்யா சொல்லுறா..” ஓ..! அவன் தானா என்று மனதில் நினைத்து கொண்டான் முருகன். “அதுமட்டும் இல்ல.. அந்த கொலைய” என்று பேசி கொண்டிருக்கும் போதே சௌந்தர்யா வந்து சைமனிடம் இருந்து போனை பிடுங்கி கட் செய்தாள்.
போன் கட் ஆனதும் புரியாமல் குழப்பத்தில் மறுபடியும் கால் செய்தான். சுவிட்ச் ஆப் என்று வருகிறது. பின் அதை தான் சௌந்தர்யா நம்ம கிட்டயே சொன்னாலே... வேற எதுவும் இருக்காது என்று எண்ணி மனதை சமாதான படுத்தி கொண்டான்.
அங்கு சௌந்தர்யாவிடம் கோபமாக சைமன், “எதுக்கு இப்டி பண்ண..?” என்று கேட்டான். அவளிடம் பதில் வரவில்லை. முறைத்து கொண்டே நின்றாள்.
“என்ன சொல்லு..? எதுக்கு கட் பண்ணி சுவிட்ச் ஆப் பண்ண..?” என்று எரிச்சல் பட்டு கொண்டே கேட்டான்.
கோபத்தை குறைக்க கண்களை மூடி திறந்து பேரு மூச்சு விட்டாள், பின், “இத யார் கிட்டயும் சொல்லாதன்னு சொன்னேன்ல..?” என்று அமைதியாக கேட்டாள்.
சைமனுக்கு அவள் ஏன் அவ்வாறு சொல்லுகிறாள் என்று புரிய வில்லை.
“ஏன் நம்ம முருகனுக்கு தெரிஞ்சா என்ன..? அவன் எவ்ளோ நல்லவன், அவன் கெளதம் வெளில வரணும்ன்னு எவ்ளோ மெனகெடுறான் அத நீ புரிஞ்சுகாம இப்டி பண்ணாத..”
உள்ளே சென்று இன்ஸ்பெக்டரிடம் “நான் கிளம்புறேன் சார்.. ரொம்ப தல வழியா இருக்கு.”
“நீ கிளம்பு முருகன். அதான் எல்லாம் முடிஞ்சதே. அடுத்து நாளைக்கு கெளதம் வெளில வந்துருவான் நீ ஆசை பட்ட மாதிரி. சந்தோஷமா போ..” என்று கூறிவிட்டு தேவேந்திரனின் அம்மாவிடம் வாக்குமூலம் வாங்கி கொண்டு அவர்களும் கிளம்புகின்றனர்.
முருகன் முகத்தில் ஏதோ மாற்றம் தெரிந்ததை இன்ஸ்பெக்டர் கவனிக்க வில்லை. முருகன் சௌந்தர்யா கூறியதை இன்ஸ்பெக்டரிடம் கூறாமலே சென்றான். அவன் மிகவும் குழப்பத்தில் இருந்தான்.
அங்கிருந்து கிளம்பி சௌந்தர்யாவை பார்க்க செல்கிறான். அவளை பார்த்ததும்,
“வாங்க..”
“நீ எதுக்கு அந்த விஷயத்த இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்ல கூடாதுன்னு சொன்ன..?!” என்று குழப்பத்தோடு கேட்டான்.
“அவன் ரொம்ப பயந்து போய் இருக்கான். அவனுக்கோ, அவனோட குடும்பத்துக்கோ ஏதாவது கெடுதல் வந்துடுமோ அப்டின்னு நினைச்சு ரொம்ப கவலை படுறான். அதான் வேணாம்ன்னு சொன்னேன்.”
“இதுக்கு எதுக்கு கவலை படனும். நாம போலீஸ் கிட்ட சொன்னா அவுங்களே அவனுக்கு பாதுகாப்பு கொடுப்பாங்க.. அப்பறம் என்ன..?”
“இல்ல வேண்டாம் இருக்கட்டும். இப்டி ஒரு சாட்சி இருக்குறது வெளில தெரிய வேண்டாம். யாருக்குமே சொல்லாத, சைமன் சந்தோஷ் கிட்ட கூட சொல்லாத. அப்போ தான் நல்லது. அது பாதுகாப்பா இருக்கும்.”
“சரி..” என்று யோசித்தவாறே கூறினான். “நீ யாரு சாட்சினே சொல்லவே இல்ல, ஏன்..?”
“நாளைக்கு சொல்லுறேன். எதுவுமே கேக்காத. நாளைக்கு எப்டியும் தெரிஞ்சுடும்ல..”
“நீ சொல்லுறது எனக்கு என்னம்மோ தப்பா படுது. அது யாருன்னும் சொல்ல மாட்டுற, சாட்சி இருக்குன்னும் யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னும் சொல்லுற, நாளைக்கு நீ சொன்ன அவனுக்கு ஏதாவது பிரச்சனை வந்துச்சுன்னா..?!” குழப்பத்தோடு சந்தேகத்தோடு கேட்டான்.
“நான் சொல்லுறத கேளு.. நீ யார் கிட்டயும் சொல்லாத.. நாளைக்கு நானே அவன பத்திரமா கூட்டிட்டு வருவேன். இனி எந்த பிரச்சனையும் வராது. நம்பு.”
“நீ என்கிட்டே மட்டுமாது சொல்லு யாருன்னு..?” விடாபிடியாக கேட்டு கொண்டே இருந்தான். ஆனாலும் அவள் பிடிவாதமாக சொல்லவே இல்லை.
“அத விடு முருகன். நீ கிளம்பு, நேரம் ஆச்சு. மணி இப்போவே ஒன்பது ஆச்சு. நாளைக்கு சீக்கிரம் கோர்ட்க்கு போகணும்ல..”
“சரி நான் கிளம்புறேன். வேற ஏதாவது பிரச்சனைனா எனக்கு கண்டிப்பா கால் பண்ணு. நான் வர்றேன்.” அவன் கிளம்பினான்.
வண்டி ஓட்டி கொண்டே நடப்பதை நினைத்து பார்த்தவாறே சென்றான். சௌந்தர்யா ஏன் அப்டி சொல்லி இருப்பாள் என்று எண்ணி கொண்டே இருந்தான். அப்போது தான் அந்த தேவேந்திரனின் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. வீட்டிற்கு வேகமாக சென்றான்.
வீட்டிருக்குள் நுழைந்தான். அவனது சித்தப்பா டிவி பார்த்து கொண்டிருக்கிறார். அவன் சென்று அருகில் அமர்ந்தான்.
“வாப்பா முருகா.. காதம்பரி, உன் ப்ரெண்ட் வீட்டுலலாம் நான் சொன்னத சொல்லிட்டயா..?”
“சொல்லிட்டேன் சித்தப்பா..”
அவன் அருகில் அமர்ந்து யோசித்து கொண்டிருந்தான். ‘இத எப்டி கேக்குறது, தப்பா நினைச்சு கிட்டா..? கேக்காம இருக்கவும் முடியல..’
“நீ பாருப்பா, வெளில வேலை இருக்கு, நான் கிளம்புறேன்.”
“ஒரு நிமிஷம் சித்தப்பா.. ஒன்னு கேக்கணும்.”
“என்ன..? கேளு.”
“அது வந்து இந்த கெளதம் கேசுல கொலை பண்ணது யாருன்னு தெரிஞ்சுருச்சு.”
சிவசங்கர் முகம் மாறியது. வேகமாக, “யாரு..?” என்று கேட்டார்.
“கந்துவட்டி பாலு...”
சிவசங்கர் பேசவே இல்லை. ஏதோ யோசனையிலே நடந்து கொண்டு இருந்தார்.
“அது மட்டும் இல்ல சித்தப்பா.. இறந்து போனது நம்ம கிட்ட ரொம்ப வருசத்துக்கு முன்னாடி வேலை பார்த்த அழகேந்திரன், அவரோட பையன் தேவேந்திர முருகன்..”
வேகமாக திரும்பி, “என்ன சொல்லுற..? உனக்கு எப்டி தெரியும்..? அந்த பாலுவ பிடிச்சுட்டாங்களா..? அவன் தான் சொன்னானா..?”
“ஆமாம். அவரு பேரு மட்டும் தான் சொன்னாரு. நாங்க அவனோட வீட்டுல விசாரிக்க போனப்போ தான் எனக்கு இதெல்லாம் தெரிஞ்சது.” சித்தப்பா யோசனையில் அப்டியே நின்றார். “உங்களுக்கு அவன தெரியுமா சித்தப்பா..?”
யோசித்தார் எதுவும் பேசவில்லை.
“சித்தப்பா..?!” என்றான்.
“ம்ம்.. சொல்லுப்பா, என்ன கேட்ட..?”
“அந்த தேவேந்திர முருகன தெரியுமா..?”
“ம்ம்.. தெரியும்ப்பா.. அவன நான் தான் பாலு கிட்ட சேர்த்து விட்டேன். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி அவன் அவுங்க அப்பா பார்த்த வேலையவே எனக்கும் கொடுங்க அப்டின்னு என்கிட்ட வந்து கேட்டான்.
அப்போ இங்க யாரும் தேவை இல்லைன்னு நான் தான் அவன அங்க பாலு கிட்ட சேர்த்து விட்டேன். அதுக்கு அப்பறம் நான் அவன பார்க்கல..”
“அப்டியா சித்தப்பா..” என்றான். அவ்ளோ தான் எல்லாம் நல்லதா தான் போச்சு. அவன் நம்ம கிட்ட வேலை பார்த்து இப்டி பணத்த அடிச்சுருந்தா என்ன ஆகுறது..? என்று எண்ணி சந்தோஷ பட்டான்.
சித்தப்பா கிளம்பி வெளியே செல்கிறார். அவன் ரூமுக்கு சென்றான். நாளை நடக்க போறதை கற்பனை செய்து சந்தோஷத்தில் இருந்தான். அப்போது தான் கால் வந்தது. அட்டென்ட் செய்து பேசுகிறான்.
“ஹலோ முருகா..” சைமன் பேசுகிறான்.
“ஹ்ம்ம் சொல்லு...”
“என்னடா சவுண்ட் கம்மியா இருக்கு..?”
“அப்டி இல்ல. ரொம்ப டயர்டா இருக்கு, அதான். நீ என்னன்னு சொல்லு..”
“சௌந்தர்யா வீட்டுக்கு போனேன். நம்ம சூர்யாவ பார்த்தேன்.”
“யாரு..?!” என்று யோசித்து கொண்டே கேட்டான்.
“அதான்டா நம்ம கெளதம் கடைக்கு பூ கட்டி கொடுப்பாங்கல அவுங்க பையன் சூரிய பிரசாத்.. அவன் தான்.”
முருகனுக்கு தெரிய வந்ததும் “ம்ம்ம்... அவன் எதுக்கு அங்க வந்தான்..?”
“டேய்..! அவன் தான் கொலைய பார்த்த நேரடி சாட்சியாம்... சௌந்தர்யா சொல்லுறா..” ஓ..! அவன் தானா என்று மனதில் நினைத்து கொண்டான் முருகன். “அதுமட்டும் இல்ல.. அந்த கொலைய” என்று பேசி கொண்டிருக்கும் போதே சௌந்தர்யா வந்து சைமனிடம் இருந்து போனை பிடுங்கி கட் செய்தாள்.
போன் கட் ஆனதும் புரியாமல் குழப்பத்தில் மறுபடியும் கால் செய்தான். சுவிட்ச் ஆப் என்று வருகிறது. பின் அதை தான் சௌந்தர்யா நம்ம கிட்டயே சொன்னாலே... வேற எதுவும் இருக்காது என்று எண்ணி மனதை சமாதான படுத்தி கொண்டான்.
அங்கு சௌந்தர்யாவிடம் கோபமாக சைமன், “எதுக்கு இப்டி பண்ண..?” என்று கேட்டான். அவளிடம் பதில் வரவில்லை. முறைத்து கொண்டே நின்றாள்.
“என்ன சொல்லு..? எதுக்கு கட் பண்ணி சுவிட்ச் ஆப் பண்ண..?” என்று எரிச்சல் பட்டு கொண்டே கேட்டான்.
கோபத்தை குறைக்க கண்களை மூடி திறந்து பேரு மூச்சு விட்டாள், பின், “இத யார் கிட்டயும் சொல்லாதன்னு சொன்னேன்ல..?” என்று அமைதியாக கேட்டாள்.
சைமனுக்கு அவள் ஏன் அவ்வாறு சொல்லுகிறாள் என்று புரிய வில்லை.
“ஏன் நம்ம முருகனுக்கு தெரிஞ்சா என்ன..? அவன் எவ்ளோ நல்லவன், அவன் கெளதம் வெளில வரணும்ன்னு எவ்ளோ மெனகெடுறான் அத நீ புரிஞ்சுகாம இப்டி பண்ணாத..”