MithraPrasath
SM Exclusive
அத்தியாயம் 7
கௌதமை வெளியே கொண்டு வந்து விடலாம் என்று நடராஜர் கூறியவுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் கோர்ட்டிற்கு கிளம்பினால் சௌந்தர்யா. அப்படி என்ன தான் ஆதாரம் கிடைச்சிருக்கும் என்று அவளுக்குள் கேள்வியும் எழும்பியது. ஆனால் அதை நடராஜரிடம் கேட்க நினைத்த மறுநிமிடமே அவள் ‘அத கொஞ்ச நேரத்துல தான் தெரிஞ்சுக்க போறோமே அப்பறம் எதுக்கு, நாம கெளதம் வெளில வந்த உடனே என்ன பண்ணனும் அப்டின்னு தான் யோசிக்கணும்...’ மனதில் நினைத்து கொண்டிருந்தாள். சந்தோஷத்தில் கற்பனை கனவில் மிதந்து கொண்டிருந்தாள்.
கோர்ட் வந்த உடன் கெளதமை தேடினாள். கான்ஸ்டபில் முத்து வெளியே நிற்பதை பார்த்த பின் வேகமாக அவனை தேடினால், அவனை உள்ளே அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்தனர். அவனிடம் பேச வாய்ப்பு கிடைக்க வில்லை. அவனுக்கு இன்று தாம் வெளியே வந்து விடுவோம் என்று தெரியாமலே இருக்கட்டும், அவருக்கு அப்போ தான் அது நடக்கும் போது இன்ப அதிர்ச்சியா இருக்கும்.
நடராஜரை பார்த்த பலரும் ‘எதுக்கு உடம்பு சரி இல்லாதப்போ வந்தீங்க..?’ என்று கேட்டு கொண்டிருந்தனர். அவரோ எல்லாவற்றையும் கேட்டு விட்டு சிரித்தே மழுப்பினார், எவருக்கும் பதில் தரவில்லை. முருகன் கொலை கேஸ் ஸ்டார்ட் ஆனது. எல்லாரும் வந்தனர். நடராஜரை பார்த்த அரசு வக்கீல் அதிர்ச்சி ஆனார். தனது அருகில் இருந்த மற்றொரு வக்கீலிடம்,
“என்னையா... நீ ஏதோ நடராஜருக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்ன... ஆனா அவரு வந்து நிக்கிறாரு..?!” என்று காதுக்குள் குசு குசு என்று பேசினார்.
“எனக்கு தெரிஞ்சு அவரு நேத்து தான் ஹாஸ்பிட்டல இருந்து வீட்டுக்கு வந்துருக்காறரு... அதான் நான் அவரு வர மாட்டாருன்னு சொன்னேன்...”
அரசு வக்கீல் நடராஜரை பார்த்து, “என்ன சார்... நீங்க எதுக்கு வந்தீங்க..? உங்களுக்கு தான் உடம்பு சரி இல்லையே...”
நடராஜர் பதில் பேசாமல் சிரிக்கவே செய்தார். அரசு வக்கீல் விடாமல்,
“கேஸ் முக்கியம் தான்.. அதுக்காக இப்டி உடம்பு சரி இல்லாதப்போ கூட வந்து கேஸ் நடத்தனுமா...? என்ன சார்...?!”
“எனக்கு உடம்பு சரி இல்ல தான்... இருந்தாலும் நான் கேஸ முடிக்காம இதுல இருந்து விலக மாட்டேன்...”
நடராஜரது பதில் அரசு வக்கிலுக்கு கோபத்தை தந்தது, ‘எதிர் கட்சி வக்கீலாக இருந்தாலும் இப்படி அக்கறையோடு நலம் விசாரித்தால் இப்டி சிடு சிடுன்னு பேசுறாரு... இவரு என்ன ஆளோ’ என்று நினைத்து எரிச்சல் பட்டார். நீதிபதி வருவதை பார்த்ததும் எல்லாரும் எழுந்து நிற்கின்றனர். நீதிபதி அமர்ந்ததும் எல்லாரும் அமர்கின்றனர். நீதிபதியும் நடராஜரை பார்த்ததும் அதிர்ச்சியானார். பின் அவரும் எல்லோரை போலும்,
“என்ன நடராஜர் உடம்பு சரி ஆகிடுச்சா...? நேத்து தான் ஹாஸ்பிட்டல இருந்து வந்தீங்கன்னு கேள்வி பட்டேன்...?!” என்று அக்கறையோடு கேக்க,
“எனக்கு இப்போ ஓகே சார்... பரவா இல்லை...” என்று நடராஜர் பதில் கூறினார், இருந்தும் அவருக்கு அங்கு நிற்பதே ஏதோ போல் இருந்தது. களைப்பு அவரது முகத்தில் தெளிவாக தெரிந்தது. நிற்க முடியாமல் சிறிது நேரத்திற்கு ஒரு முறை பெரு மூச்சு விட்டு கொண்டு ஷேரில் அமர்வதும் எழுவதும் என்று அன்கம்பர்ட்டாக உணர்ந்தார்.
“ஓகே பாத்துக்கோங்க...” என்று கூறிவிட்டு கேசை தொடங்க சொல்லுகிறார். கேஸ் ஸ்டார்ட் ஆனதும் அரசு வக்கீல் எழுந்து லாஸ்ட் கேஸ் விசாரணை பற்றி கூறி தொடங்கினார். அப்போது நீதிபதி,
“சந்தோஷ கண்டு பிடிச்சுட்டீங்களா..? இன்ஸ்பெக்டர கூப்பிடுங்க விசாரிக்க..” என்று சொல்லவும், இன்ஸ்பெக்டர் முரளி வந்து கூண்டில் ஏறி நிற்கிறார். அரசு வக்கீல் அவரிடம் கேள்வி கேட்கிறார்.
“என்ன முரளி நீங்க சந்தோஷ் எங்க இருக்கான்னு கண்டு பிடிச்சாச்சா..?”
“இல்ல சார்... நாங்க நியரஸ்ட் டிஸ்ட்ரிக்ல எல்லாத்துலயும் தேடிட்டு இருக்கோம்... இன்னும் எந்த ஒரு இன்பர்மேசனும் கிடைக்கல... அதுவும் இல்லாம நாங்க அவனோட காலேஜ் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் விசாரிச்சுருக்கோம்... எந்த இம்ப்ருவுமென்ட்டும் இல்ல...”
“எந்த முன்னேற்றமும் இல்ல அப்டினா என்ன சொல்ல வர்றீங்க...? எந்த வகையிலையும் தகவல் கிடைக்கலயா..? சந்தோஷ் பேமிலி கிட்ட விசாரிச்சீங்களா..? அவுங்க வந்துருக்காங்களா..?”
“நாங்க சந்தோஷ் பேமிலி கிட்டயும் விசாரிச்சோம்... அவுங்க வீட்டு போன் நம்பர்க்கு வர்ற கால் ட்ரேஸ் பண்ணோம்... அப்டியும் எதுவும் கிடைக்கல... அவனோட ப்ரெண்ட்ஸ்க்கும் எந்த தகவலும் தெரியல...
எப்டியும் அவனுக்கு பணம் தேவை படும், அதுனால ஏடிம் யூஸ் பண்ணுவான்னு செக் பண்ணினோம்... அவன் ஓடி போன அன்னைக்கு இங்க பஸ் ஸ்டாண்ட்ல வச்சு பணம் எடுத்ததுக்கு அப்பறம் எங்கயும் அவன் யூஸ் பண்ணவும் இல்ல, எந்த ட்ரான்ஸாக்சனும் பண்ணல...”
நீதிபதி, “நீங்க நைட் நம்ம ஊருல ஏடிம் யூஸ் பண்ணதா சொன்னீங்க... அப்போ என்ன டைம்..?”
“சார் அப்போ டைம் ரெண்டரை இருக்கும்...” என்று இன்ஸ்பெக்டர் தயங்கி யோசித்து கொண்டே சொல்ல,
“கரெக்டான டைம் தெரியாதா அப்போ...” எரிச்சலோடு முகம் சுருங்கியது. பின், “கேஸ்க்கு இது இம்பார்டென்ட் அப்டின்னு தெரியாதா... போலீஸ் ஆபீசர்க்கு அதெல்லாம் தெரிஞ்சுருக்கனும்... என்ன நீங்க வேலை பாக்குறீங்க..?”
இன்ஸ்பெக்டர் பதில் பேசாததால் எரிச்சலுடன் மீண்டும் கேள்வி கேக்கிறார் நீதிபதி.
“அட்லீஸ்ட் அவன் எந்த பஸ் ஏறினான்னு செக் பண்ணுணீங்களா..?”
“சார்... அவன் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஊருக்குள போற பஸ்ல தான் ஏறி போனான்.”
“அப்போ ஊருக்குள்ள நல்லா தேடி பாத்தீங்களா..?”
“எஸ் சார்... அவன் இங்க இல்லை. அதுவும் இல்லாம அவன் 3 மணிக்கு மேல ஊருக்கு வெளில போய் மதுரைக்கு பஸ் ஏறி போயிருக்கான். மதுரைல தேடிட்டு தான் சார் இருக்கோம்...”
நீதிபதி எதோ குறித்து வைத்து கொண்டு இருக்கவும் அரசு வக்கீல்
“ம்ம்ம்... ஓகே நீங்க போங்க...” என்று இன்ஸ்பெக்டரை போக சொல்லுகிறார்.
நடராஜர் அமர்ந்தே இருக்கிறார், எழுந்து எதுவும் விசாரிக்க வில்லை. அவர் முகம் வாடி இருந்தது. நடராஜரை பார்த்த சௌந்தர்யா விற்கு கோபம் வந்தது. ‘நாம வேற ஒருத்தர கூட வர சொல்லி நடத்த சொன்னோம், அவரு அப்டி கூட பண்ணாம இப்டி உடம்பு சரி இல்லாதப்ப வந்து இப்போ கஷ்ட பட்டுட்டு, நம்மளையும் கஷ்ட படுத்துறாரு. ஏதோ ஆதாரம் கிடைச்சுருக்குன்னு சொன்னாரு, அதையும் சொல்ல மாட்டுறாரு...’ என்று மனதில் திட்டி, வருந்தி கொண்டிருந்தாள்.
அரசு வக்கீல் நீதிபதியிடம் சந்தோஷ் பேமிலிய விசாரிக்கணும் என்று சொல்ல, நீதிபதி வேண்டாம் தேவை இல்லை என்று மறுத்து விடுகிறார். பின் சைமனை விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறார். பர்மிசன் கொடுக்கவும், சைமனை அழைக்க அவன் கூண்டில் வந்து ஏறுகிறான். இன்று வரை சைமன் கௌதமை நேராக பார்க்கவில்லை. அது கெளதமுக்கு சந்தேகத்தை கொஞ்சமும் ஏற்படுத்த வில்லை. இன்றும் அவனை நம்பி கொண்டிருந்தான், அவன் ஒரு முறையாவது நம்மை பார்ப்பான் என்று. ஆனால் சைமனோ கெளதமை நிமிர்ந்தே பாராமல் மற்றவர்களை பார்த்தே பேசினான்.
“சைமன் நீங்க அன்னைக்கு கௌதம் முருகன் பொணத்த ரோட்டுல எறிஞ்சத பார்த்தா சொன்னீங்க... அப்போ வேற யாரெல்லாம் இருந்தாங்க...”
“இல்ல சார்... அன்னைக்கு அங்க வேற யாரும் இல்லை...”
“வேற ஏதாவது வண்டி இருந்துச்சா..?”
“வண்டி எதுவும் நான் பார்க்கல சார்...”
“சரி வண்டி எதுவுமே இல்ல.., அப்போ நீங்க கிட்ட போய் பாத்தீங்களா முருகன..?”
“இல்ல சார்...”
“ஏன் நீங்க போய் பார்க்கல..?”
“எனக்கு அப்போ போய் பார்க்க தோனல சார்... அதுவும் கெளதம் முருகன எதுக்கு இப்டி தூக்கி போடுறான்னு தெரியலையே அப்டின்னு குழம்பி இருந்தேன், அதுனால நான் அப்டியே திரும்பி போயிட்டேன்.”
நடராஜர் உடனே எழுந்து வந்து, “அதெப்புடி நீங்க கெளதம் தான் தூக்கி எறிஞ்சான்னு சொல்லுறீங்க..? நீங்க தூக்கி போடும் போது முகத்தை பாத்தீங்களா..?”
“இல்ல சார்... ரோட்டுக்கு அந்த பக்கம் மரத்துக்கு பக்கத்துல வெளிச்சம் இல்ல அதுனால முகம் தெரியல, அதுவும் நானும் இந்த பக்கம் செடிக்கு பின்னாடி நின்னு பார்த்ததாள தெளிவா தெரியல.. நான் கிட்ட போய் பாக்க போனப்போ அங்க கெளதம் தான் சார் உட்காந்து இருந்தான். அதுவும் அங்க வேற யாருமே இல்ல சார்...”
கௌதமை வெளியே கொண்டு வந்து விடலாம் என்று நடராஜர் கூறியவுடன் மிகவும் மகிழ்ச்சியுடன் கோர்ட்டிற்கு கிளம்பினால் சௌந்தர்யா. அப்படி என்ன தான் ஆதாரம் கிடைச்சிருக்கும் என்று அவளுக்குள் கேள்வியும் எழும்பியது. ஆனால் அதை நடராஜரிடம் கேட்க நினைத்த மறுநிமிடமே அவள் ‘அத கொஞ்ச நேரத்துல தான் தெரிஞ்சுக்க போறோமே அப்பறம் எதுக்கு, நாம கெளதம் வெளில வந்த உடனே என்ன பண்ணனும் அப்டின்னு தான் யோசிக்கணும்...’ மனதில் நினைத்து கொண்டிருந்தாள். சந்தோஷத்தில் கற்பனை கனவில் மிதந்து கொண்டிருந்தாள்.
கோர்ட் வந்த உடன் கெளதமை தேடினாள். கான்ஸ்டபில் முத்து வெளியே நிற்பதை பார்த்த பின் வேகமாக அவனை தேடினால், அவனை உள்ளே அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்தனர். அவனிடம் பேச வாய்ப்பு கிடைக்க வில்லை. அவனுக்கு இன்று தாம் வெளியே வந்து விடுவோம் என்று தெரியாமலே இருக்கட்டும், அவருக்கு அப்போ தான் அது நடக்கும் போது இன்ப அதிர்ச்சியா இருக்கும்.
நடராஜரை பார்த்த பலரும் ‘எதுக்கு உடம்பு சரி இல்லாதப்போ வந்தீங்க..?’ என்று கேட்டு கொண்டிருந்தனர். அவரோ எல்லாவற்றையும் கேட்டு விட்டு சிரித்தே மழுப்பினார், எவருக்கும் பதில் தரவில்லை. முருகன் கொலை கேஸ் ஸ்டார்ட் ஆனது. எல்லாரும் வந்தனர். நடராஜரை பார்த்த அரசு வக்கீல் அதிர்ச்சி ஆனார். தனது அருகில் இருந்த மற்றொரு வக்கீலிடம்,
“என்னையா... நீ ஏதோ நடராஜருக்கு உடம்பு சரி இல்லைன்னு சொன்ன... ஆனா அவரு வந்து நிக்கிறாரு..?!” என்று காதுக்குள் குசு குசு என்று பேசினார்.
“எனக்கு தெரிஞ்சு அவரு நேத்து தான் ஹாஸ்பிட்டல இருந்து வீட்டுக்கு வந்துருக்காறரு... அதான் நான் அவரு வர மாட்டாருன்னு சொன்னேன்...”
அரசு வக்கீல் நடராஜரை பார்த்து, “என்ன சார்... நீங்க எதுக்கு வந்தீங்க..? உங்களுக்கு தான் உடம்பு சரி இல்லையே...”
நடராஜர் பதில் பேசாமல் சிரிக்கவே செய்தார். அரசு வக்கீல் விடாமல்,
“கேஸ் முக்கியம் தான்.. அதுக்காக இப்டி உடம்பு சரி இல்லாதப்போ கூட வந்து கேஸ் நடத்தனுமா...? என்ன சார்...?!”
“எனக்கு உடம்பு சரி இல்ல தான்... இருந்தாலும் நான் கேஸ முடிக்காம இதுல இருந்து விலக மாட்டேன்...”
நடராஜரது பதில் அரசு வக்கிலுக்கு கோபத்தை தந்தது, ‘எதிர் கட்சி வக்கீலாக இருந்தாலும் இப்படி அக்கறையோடு நலம் விசாரித்தால் இப்டி சிடு சிடுன்னு பேசுறாரு... இவரு என்ன ஆளோ’ என்று நினைத்து எரிச்சல் பட்டார். நீதிபதி வருவதை பார்த்ததும் எல்லாரும் எழுந்து நிற்கின்றனர். நீதிபதி அமர்ந்ததும் எல்லாரும் அமர்கின்றனர். நீதிபதியும் நடராஜரை பார்த்ததும் அதிர்ச்சியானார். பின் அவரும் எல்லோரை போலும்,
“என்ன நடராஜர் உடம்பு சரி ஆகிடுச்சா...? நேத்து தான் ஹாஸ்பிட்டல இருந்து வந்தீங்கன்னு கேள்வி பட்டேன்...?!” என்று அக்கறையோடு கேக்க,
“எனக்கு இப்போ ஓகே சார்... பரவா இல்லை...” என்று நடராஜர் பதில் கூறினார், இருந்தும் அவருக்கு அங்கு நிற்பதே ஏதோ போல் இருந்தது. களைப்பு அவரது முகத்தில் தெளிவாக தெரிந்தது. நிற்க முடியாமல் சிறிது நேரத்திற்கு ஒரு முறை பெரு மூச்சு விட்டு கொண்டு ஷேரில் அமர்வதும் எழுவதும் என்று அன்கம்பர்ட்டாக உணர்ந்தார்.
“ஓகே பாத்துக்கோங்க...” என்று கூறிவிட்டு கேசை தொடங்க சொல்லுகிறார். கேஸ் ஸ்டார்ட் ஆனதும் அரசு வக்கீல் எழுந்து லாஸ்ட் கேஸ் விசாரணை பற்றி கூறி தொடங்கினார். அப்போது நீதிபதி,
“சந்தோஷ கண்டு பிடிச்சுட்டீங்களா..? இன்ஸ்பெக்டர கூப்பிடுங்க விசாரிக்க..” என்று சொல்லவும், இன்ஸ்பெக்டர் முரளி வந்து கூண்டில் ஏறி நிற்கிறார். அரசு வக்கீல் அவரிடம் கேள்வி கேட்கிறார்.
“என்ன முரளி நீங்க சந்தோஷ் எங்க இருக்கான்னு கண்டு பிடிச்சாச்சா..?”
“இல்ல சார்... நாங்க நியரஸ்ட் டிஸ்ட்ரிக்ல எல்லாத்துலயும் தேடிட்டு இருக்கோம்... இன்னும் எந்த ஒரு இன்பர்மேசனும் கிடைக்கல... அதுவும் இல்லாம நாங்க அவனோட காலேஜ் ப்ரெண்ட்ஸ் எல்லாரையும் விசாரிச்சுருக்கோம்... எந்த இம்ப்ருவுமென்ட்டும் இல்ல...”
“எந்த முன்னேற்றமும் இல்ல அப்டினா என்ன சொல்ல வர்றீங்க...? எந்த வகையிலையும் தகவல் கிடைக்கலயா..? சந்தோஷ் பேமிலி கிட்ட விசாரிச்சீங்களா..? அவுங்க வந்துருக்காங்களா..?”
“நாங்க சந்தோஷ் பேமிலி கிட்டயும் விசாரிச்சோம்... அவுங்க வீட்டு போன் நம்பர்க்கு வர்ற கால் ட்ரேஸ் பண்ணோம்... அப்டியும் எதுவும் கிடைக்கல... அவனோட ப்ரெண்ட்ஸ்க்கும் எந்த தகவலும் தெரியல...
எப்டியும் அவனுக்கு பணம் தேவை படும், அதுனால ஏடிம் யூஸ் பண்ணுவான்னு செக் பண்ணினோம்... அவன் ஓடி போன அன்னைக்கு இங்க பஸ் ஸ்டாண்ட்ல வச்சு பணம் எடுத்ததுக்கு அப்பறம் எங்கயும் அவன் யூஸ் பண்ணவும் இல்ல, எந்த ட்ரான்ஸாக்சனும் பண்ணல...”
நீதிபதி, “நீங்க நைட் நம்ம ஊருல ஏடிம் யூஸ் பண்ணதா சொன்னீங்க... அப்போ என்ன டைம்..?”
“சார் அப்போ டைம் ரெண்டரை இருக்கும்...” என்று இன்ஸ்பெக்டர் தயங்கி யோசித்து கொண்டே சொல்ல,
“கரெக்டான டைம் தெரியாதா அப்போ...” எரிச்சலோடு முகம் சுருங்கியது. பின், “கேஸ்க்கு இது இம்பார்டென்ட் அப்டின்னு தெரியாதா... போலீஸ் ஆபீசர்க்கு அதெல்லாம் தெரிஞ்சுருக்கனும்... என்ன நீங்க வேலை பாக்குறீங்க..?”
இன்ஸ்பெக்டர் பதில் பேசாததால் எரிச்சலுடன் மீண்டும் கேள்வி கேக்கிறார் நீதிபதி.
“அட்லீஸ்ட் அவன் எந்த பஸ் ஏறினான்னு செக் பண்ணுணீங்களா..?”
“சார்... அவன் பஸ் ஸ்டாண்ட்ல இருந்து ஊருக்குள போற பஸ்ல தான் ஏறி போனான்.”
“அப்போ ஊருக்குள்ள நல்லா தேடி பாத்தீங்களா..?”
“எஸ் சார்... அவன் இங்க இல்லை. அதுவும் இல்லாம அவன் 3 மணிக்கு மேல ஊருக்கு வெளில போய் மதுரைக்கு பஸ் ஏறி போயிருக்கான். மதுரைல தேடிட்டு தான் சார் இருக்கோம்...”
நீதிபதி எதோ குறித்து வைத்து கொண்டு இருக்கவும் அரசு வக்கீல்
“ம்ம்ம்... ஓகே நீங்க போங்க...” என்று இன்ஸ்பெக்டரை போக சொல்லுகிறார்.
நடராஜர் அமர்ந்தே இருக்கிறார், எழுந்து எதுவும் விசாரிக்க வில்லை. அவர் முகம் வாடி இருந்தது. நடராஜரை பார்த்த சௌந்தர்யா விற்கு கோபம் வந்தது. ‘நாம வேற ஒருத்தர கூட வர சொல்லி நடத்த சொன்னோம், அவரு அப்டி கூட பண்ணாம இப்டி உடம்பு சரி இல்லாதப்ப வந்து இப்போ கஷ்ட பட்டுட்டு, நம்மளையும் கஷ்ட படுத்துறாரு. ஏதோ ஆதாரம் கிடைச்சுருக்குன்னு சொன்னாரு, அதையும் சொல்ல மாட்டுறாரு...’ என்று மனதில் திட்டி, வருந்தி கொண்டிருந்தாள்.
அரசு வக்கீல் நீதிபதியிடம் சந்தோஷ் பேமிலிய விசாரிக்கணும் என்று சொல்ல, நீதிபதி வேண்டாம் தேவை இல்லை என்று மறுத்து விடுகிறார். பின் சைமனை விசாரிக்க வேண்டும் என்று கூறுகிறார். பர்மிசன் கொடுக்கவும், சைமனை அழைக்க அவன் கூண்டில் வந்து ஏறுகிறான். இன்று வரை சைமன் கௌதமை நேராக பார்க்கவில்லை. அது கெளதமுக்கு சந்தேகத்தை கொஞ்சமும் ஏற்படுத்த வில்லை. இன்றும் அவனை நம்பி கொண்டிருந்தான், அவன் ஒரு முறையாவது நம்மை பார்ப்பான் என்று. ஆனால் சைமனோ கெளதமை நிமிர்ந்தே பாராமல் மற்றவர்களை பார்த்தே பேசினான்.
“சைமன் நீங்க அன்னைக்கு கௌதம் முருகன் பொணத்த ரோட்டுல எறிஞ்சத பார்த்தா சொன்னீங்க... அப்போ வேற யாரெல்லாம் இருந்தாங்க...”
“இல்ல சார்... அன்னைக்கு அங்க வேற யாரும் இல்லை...”
“வேற ஏதாவது வண்டி இருந்துச்சா..?”
“வண்டி எதுவும் நான் பார்க்கல சார்...”
“சரி வண்டி எதுவுமே இல்ல.., அப்போ நீங்க கிட்ட போய் பாத்தீங்களா முருகன..?”
“இல்ல சார்...”
“ஏன் நீங்க போய் பார்க்கல..?”
“எனக்கு அப்போ போய் பார்க்க தோனல சார்... அதுவும் கெளதம் முருகன எதுக்கு இப்டி தூக்கி போடுறான்னு தெரியலையே அப்டின்னு குழம்பி இருந்தேன், அதுனால நான் அப்டியே திரும்பி போயிட்டேன்.”
நடராஜர் உடனே எழுந்து வந்து, “அதெப்புடி நீங்க கெளதம் தான் தூக்கி எறிஞ்சான்னு சொல்லுறீங்க..? நீங்க தூக்கி போடும் போது முகத்தை பாத்தீங்களா..?”
“இல்ல சார்... ரோட்டுக்கு அந்த பக்கம் மரத்துக்கு பக்கத்துல வெளிச்சம் இல்ல அதுனால முகம் தெரியல, அதுவும் நானும் இந்த பக்கம் செடிக்கு பின்னாடி நின்னு பார்த்ததாள தெளிவா தெரியல.. நான் கிட்ட போய் பாக்க போனப்போ அங்க கெளதம் தான் சார் உட்காந்து இருந்தான். அதுவும் அங்க வேற யாருமே இல்ல சார்...”