MithraPrasath
SM Exclusive
அத்தியாயம் 9
அடியாட்கள் இருவரும் கத்தியை மறைத்து கொண்டே முருகனுக்கு அருகில் செல்கின்றனர். முருகன் காரில் இருந்து இறங்கியதும் எதிரில் இருந்து ஒருவர் அவனை “முருகா வா...” என்று கூறி கொண்டே கையை பிடிக்க, அதை கவனியாமல் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சுத்தி பார்த்தவாறே, அடியாள் ஒருவன் கத்தியை எடுத்து குத்துகிறான்.
முருகனின் கை பிடித்த அவரின் கையில் கத்தி குத்த, அது முருகன் கைகளிலும் குத்தி ரத்தம் சொட்டுகிறது. கத்தியில் குத்திய பிறகு கவனித்து மறுபடியும் முருகனை அந்த அடியாள் குத்த கத்தியை முன் நீட்டி கொண்டு வர, முருகன் ரத்தம் சொட்ட, சொட்ட அவனை தள்ளி விடுகிறான்.
அதற்குள் கோர்ட் கலவரம் அடைய, இன்ஸ்பெக்டர் பக்கம் திரும்புகிறான் அந்த மற்றொரு அடியாள். இன்ஸ்பெக்டர் ஓடிடு அப்டின்னு மெதுவாக சைகையோடு சொல்ல அடியாட்கள் வேகமாக எழுந்து ஓடுகின்றனர். அதற்கு பின் இன்ஸ்பெக்டர் வந்து வேறு ஒரு போலீஸ் பிடிக்க அனுப்புகிறார். அதற்குள் அவர்கள் தப்பித்து விடுகின்றனர்.
போலீஸ் வந்து அவர்கள் தப்பித்து விட்டார்கள் என்று கூறவும் இன்ஸ்பெக்டர் மனதினுள் சந்தோசமடைகிறார். யாருக்கும் சந்தேகம் வரவிடாமல், “வேகமா போய் பிடிக்க மாட்டீங்களா..?” என்று திட்டுகிறார். முருகனிடம் திரும்பி, “வா தம்பி ஹாஸ்பிட்டல் போகலாம்...” என்று கூறுகிறார்.
முருகன், “இல்ல சார்... எனக்கு அவ்ளோ அடிபடல... அண்ணாக்கு தான் ரொம்ப அடி பட்டுருக்கு... அவுங்கள நீங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க... நான் உள்ளே போகணும்...”
‘அய்யோ இவன் உள்ளே போனா அப்பறம் பிரச்சன தான்.. இவன இங்க இருந்து கூட்டிட்டு போயே ஆகணும்...’ என்று இன்ஸ்பெக்டர் மனதில் நினைத்து கொண்டே, “இல்ல நீங்க ஹாஸ்பிட்டல் வாங்க... அப்பறம் வந்து கோர்ட்க்குள போகலாம்... எப்டி ரத்தம் வருது பாருங்க... வாங்க...” என்று கூறி கொண்டே அவனை கட்டாய படுத்துகிறார்.
“இல்ல சார்... நான் வர மாட்டேன்... இத்தனை நாளா என்னால என் ப்ரெண்ட் இப்டி கஷ்ட படுறத இனியும் அனுமதிக்க முடியாது... என்ன விடுங்க சார்... நான் உள்ளே போயிட்டு வந்து பேசுறேன்...”
பேசி கொண்டே கோர்ட்க்குள் செல்கிறான். உடனே தடுக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் இன்ஸ்பெக்டர் அவன் பின்னே செல்கிறார். கோர்ட்க்குள் அரசு வக்கீல் விசாரித்து கொண்டிருக்கிறார்.
“எப்டி சார் அத சொல்லுறீங்க..? நாங்க எப்டி நம்புறது..? அதுவும் இப்போ முருகன் உயிரோட இல்லைன்னு நீங்க என்னனாலும் சொல்லலாமா..?”
காதம்பரி, “இல்ல சார்... அது தான் உண்மை... அதுவும் நாங்க இத்தனை நாளா அண்ணாக்கு தெரிஞ்சவுங்க வீட்டுல தான் தங்கியிருந்தோம்... அவரு கூட இங்க வந்துருக்காரு...” என்று கூறி கொண்டே திரும்பி தேடுகிறாள்.
“எங்கம்மா...? யாருமே அப்டி வந்த மாதிரி தெரியலையே...”
சந்தோஷ் உடனே, “இல்ல சார்... நிஜமா வந்தாரு... வெளில எங்கயாது இருப்பாரு...”
“நீங்க சொல்லுற கதைய நாங்க நம்ப முடியாது... எங்களுக்கு ஆதாரம் வேணும்...”
இருவரும் பேச முடியாமல் நிற்க, சிரித்து கொண்டே அரசு வக்கீல்,
“சார்... இவன் சந்தோஷ் கெளதம் இரண்டு பேரும் சேர்ந்து தான் கொலை பண்ணிருக்காங்க... இப்போ தன்னோட காதலான காப்பாத்த இந்த பொண்ணு பொய் சொல்லுது... அது தான் சார் உண்மை...”
“இல்ல சார்...”
என்று ஒரு சத்தமான குரல் கேட்டு அனைவரும் திரும்ப, அங்கு முருகன் நிற்கிறான்.
மறுபடியும் முருகன், “இல்ல சார்... சந்தோஷ் சொல்லுறது உண்மை...”
தன்னுடைய கண்ணையே தன்னால் நம்ப முடியாதது போல் அனைவரும் அப்படியே உறைந்து முருகனையே பார்த்து கொண்டு இருந்தனர். கெளதம்க்கு இன்று சந்தோசத்தில் தலை கால் புரிய வில்லை. தான் கைதியாக கோர்ட்டில் நிற்கிறோம் என்பது கூட மறந்தது. சந்தோசத்தில் என்ன செய்கிறோம் என்று புரியவில்லை.
“முருகா....! முருகா...!” என்று ஆனந்த கூச்சலிட, அங்கு கூட்டத்தில் அமர்ந்திருந்த சைமனுக்கு ஆனந்தத்தில் கண்களில் இருந்து கண்ணீர் வழிய எழுந்து அவனுக்கு அருகில் செல்கிறான். சந்தோஷ், காதம்பரி இருவரும் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். சௌந்தர்யா முருகனை பார்த்ததும் மனதில் இவன் உயிரோட வந்துட்டானா... நல்ல வேளை இவன் இப்போ வந்தான்... இனி அவர ஈஸியா வெளில கொண்டு வந்துடலாம்.... என்று நினைத்தாள்.
சைமன் முருகன் அருகில் சென்று கதறி அழுக, முருகன் கட்டி பிடித்து சமாதானம் செய்ய, அங்கு பெரும் சந்தோச நிகழ்வுகளாய் நடந்தன.
கெளதம்க்காக வாதாடும் வக்கீல் உடனே எழுந்து, “சார்... இவர் தான் கொலை செய்ய பட்டதா சொன்ன முருகன்...” என்று கூறவும், நீதிபதி சற்று முன்பு தன்னிடம் குடுத்த முருகன் போட்டோவை எடுத்து பார்க்கிறார். பார்த்ததும் அது முருகன் என்பது தெளிவாக தெரிந்தது. முருகனை பார்த்து, “நீங்க இங்க கூண்டுக்கு வந்து பேசுங்க...” என்று கூறுகிறார். முருகன் கூண்டில் ஏறி நிற்கிறான்.
வக்கீல் விசாரிக்கிறார், “இத்தனை நாளா எங்க இருந்தீங்க முருகன்..? சந்தோஷ் சொல்லுறது உண்மையா..?”
“ஆமாம் சார்... சந்தோஷயும் காதம்பரியையும் நான் தான் ஓடி போக வச்சேன்... சித்தப்பா தங்கச்சிக்கு அவசர அவசரமா மாப்பிள்ளை பாத்தாரு... காதம்பரிக்கு இதுல விருப்பம் இல்லன்னு எனக்கு புரிஞ்சது...
அதுவும் தங்கச்சி சந்தோஷ் கூட கல்யாணம் நடக்கலைனா நான் செத்து போய்டுவேன் அப்டின்னு சொன்னா...
அதான் நான் சித்தப்பா கிட்ட இப்போ கல்யாணத்துக்கு அவசர பட வேண்டாம் அப்டின்னு சொன்னேன்.... ஆனா அவரு நல்ல சம்பந்தம் முடிச்சா தங்கச்சி நல்ல வாழுவான்னு சொல்லிட்டு இருந்தாரு... அதுவும் சந்தோஷ் வேற சாதின்னு அவனுக்கு காதம்பரிய கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்லிடாரு..
அதுனால தான் இப்டி ஒரு முடிவு எடுத்தேன். அன்னைக்கு நைட் சித்தப்பா வீட்டுக்கு வர லேட் ஆச்சு, அத சாதகமா பயன்படுத்தி சந்தோஷ வீட்டுக்கு வர சொன்னேன். அவன் வரவும் காதம்பரிய அவன் கூட அனுப்பி வச்சேன்.
நான் வீட்டுக்கு வந்தப்ப சித்தப்பா காதம்பரிய ரொம்ப தீவிரமா தேடிட்டு இருந்தாரு... ஊருக்குள்ள இருந்தா மாட்டிப்பாங்க, அதனால அவுங்கள வேற இடத்துக்கு அனுப்பி வைக்க யோசிச்சு அவுங்கள தேட போறமாதிரி சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போய் அவுங்கள கொடைக்கானல்ல இருக்க எங்க தாத்தாக்கு தெரிஞ்ச ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்பி வச்சேன்.”
“சரி நீங்க தான் சந்தோஷ், காதம்பரி ஓடி போக ஹெல்ப் பண்ணுனீங்க... அப்பறம் எதுக்கு கெளதம் வீட்டுக்கு போனீங்க...?”
“சார் நான் கெளதம் பார்த்து மன்னிப்பு கேக்க போனேன்... ஆனா அங்க போகவும் என் மனசு கேக்காம அவன் கிட்ட கொஞ்சம் கடுமையா நடந்து கிட்டேன்..”
“அப்டி அன்னைக்கு என்ன பேசுனீங்க... என்ன நடந்தது கெளதம் வீட்டுல..?”
“சார்... அதுவந்து நான் கெளதம் வீட்டுக்கு போனேன்.. அவன் என்ன பாக்கவும் ரொம்ப சந்தோஷ பட்டான். என் கிட்ட ரொம்ப சாதரணமா பேசினான்...
அத பார்த்து எனக்கு பழசு ஞாபகம் வந்து அவன் கிட்ட என்று கூறி கொண்டிருக்கும் போதே அவனுக்கு கண்களின் முன்பு அன்று நடந்தது நிழலாடியது
முருகன் ‘நான் உன்னை தான் ரொம்ப நம்பினேன்... ஆனா நீ என்னை ரொம்ப கஷ்ட படுத்திட்ட... அதுவும் என்னையே நீ ஏமாத்திட்ட’
கெளதம் ‘நான் எப்போவுமே உன்னை ஏமாத்த நினைச்சது இல்ல...’
முருகன் ‘பொய் சொல்லாதா... உனக்கு சந்தோஷ், காதம்பரிய பத்தி ஏற்கனவே தெரிஞ்சு இருந்தும் என்கிட்டே இருந்து மறைச்சுட்ட...’
கெளதம் ‘நான் வேணும்ன்னு மறைக்கலை... என்னை மன்னிச்சுடு...’
முருகன் ‘நான் சின்ன வயசுள இருந்து அப்பா, தாத்தா அப்டின்னு யார் யார் மேல பாசம் வச்சேனோ அவுங்க எல்லாரும் என்னை ஏமாத்திட்டு போய்ட்டாங்க... அவுங்க எல்லார் போன பின்னாடி உன்னை தான் நான் ரொம்ப நம்பிட்டு இருந்தேன்... ஆனா நீ என்னையே ஏமாத்திட்ட...
பாசம் வைக்க யாரும் இல்லாம அனாதயா தான் நான் இருக்கணும் போல... ‘
கெளதம் ‘நான் உன் மேல பாசம் ரொம்ப வச்சுருக்கேன்...’
முருகன் ‘பொய்... நான் உன்கிட்ட இதுவரைக்கும் எந்த விஷயத்தையும் மறைச்சது இல்ல... ஆனா நீ என்கிட்ட எவ்ளோ பெரிய விஷயத்த மறைச்சுட்ட... இதுல இருந்தே நீ என் மேல எவ்ளோ பாசமா இருந்துருக்கன்னு எனக்கு புரிஞ்சது...
எதுக்கு என்ன ஏமாத்தின... ஏன் இப்டி பண்ண சொல்லு, சொல்லு...
அடியாட்கள் இருவரும் கத்தியை மறைத்து கொண்டே முருகனுக்கு அருகில் செல்கின்றனர். முருகன் காரில் இருந்து இறங்கியதும் எதிரில் இருந்து ஒருவர் அவனை “முருகா வா...” என்று கூறி கொண்டே கையை பிடிக்க, அதை கவனியாமல் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று சுத்தி பார்த்தவாறே, அடியாள் ஒருவன் கத்தியை எடுத்து குத்துகிறான்.
முருகனின் கை பிடித்த அவரின் கையில் கத்தி குத்த, அது முருகன் கைகளிலும் குத்தி ரத்தம் சொட்டுகிறது. கத்தியில் குத்திய பிறகு கவனித்து மறுபடியும் முருகனை அந்த அடியாள் குத்த கத்தியை முன் நீட்டி கொண்டு வர, முருகன் ரத்தம் சொட்ட, சொட்ட அவனை தள்ளி விடுகிறான்.
அதற்குள் கோர்ட் கலவரம் அடைய, இன்ஸ்பெக்டர் பக்கம் திரும்புகிறான் அந்த மற்றொரு அடியாள். இன்ஸ்பெக்டர் ஓடிடு அப்டின்னு மெதுவாக சைகையோடு சொல்ல அடியாட்கள் வேகமாக எழுந்து ஓடுகின்றனர். அதற்கு பின் இன்ஸ்பெக்டர் வந்து வேறு ஒரு போலீஸ் பிடிக்க அனுப்புகிறார். அதற்குள் அவர்கள் தப்பித்து விடுகின்றனர்.
போலீஸ் வந்து அவர்கள் தப்பித்து விட்டார்கள் என்று கூறவும் இன்ஸ்பெக்டர் மனதினுள் சந்தோசமடைகிறார். யாருக்கும் சந்தேகம் வரவிடாமல், “வேகமா போய் பிடிக்க மாட்டீங்களா..?” என்று திட்டுகிறார். முருகனிடம் திரும்பி, “வா தம்பி ஹாஸ்பிட்டல் போகலாம்...” என்று கூறுகிறார்.
முருகன், “இல்ல சார்... எனக்கு அவ்ளோ அடிபடல... அண்ணாக்கு தான் ரொம்ப அடி பட்டுருக்கு... அவுங்கள நீங்க ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க... நான் உள்ளே போகணும்...”
‘அய்யோ இவன் உள்ளே போனா அப்பறம் பிரச்சன தான்.. இவன இங்க இருந்து கூட்டிட்டு போயே ஆகணும்...’ என்று இன்ஸ்பெக்டர் மனதில் நினைத்து கொண்டே, “இல்ல நீங்க ஹாஸ்பிட்டல் வாங்க... அப்பறம் வந்து கோர்ட்க்குள போகலாம்... எப்டி ரத்தம் வருது பாருங்க... வாங்க...” என்று கூறி கொண்டே அவனை கட்டாய படுத்துகிறார்.
“இல்ல சார்... நான் வர மாட்டேன்... இத்தனை நாளா என்னால என் ப்ரெண்ட் இப்டி கஷ்ட படுறத இனியும் அனுமதிக்க முடியாது... என்ன விடுங்க சார்... நான் உள்ளே போயிட்டு வந்து பேசுறேன்...”
பேசி கொண்டே கோர்ட்க்குள் செல்கிறான். உடனே தடுக்கவும் முடியாமல் விடவும் முடியாமல் இன்ஸ்பெக்டர் அவன் பின்னே செல்கிறார். கோர்ட்க்குள் அரசு வக்கீல் விசாரித்து கொண்டிருக்கிறார்.
“எப்டி சார் அத சொல்லுறீங்க..? நாங்க எப்டி நம்புறது..? அதுவும் இப்போ முருகன் உயிரோட இல்லைன்னு நீங்க என்னனாலும் சொல்லலாமா..?”
காதம்பரி, “இல்ல சார்... அது தான் உண்மை... அதுவும் நாங்க இத்தனை நாளா அண்ணாக்கு தெரிஞ்சவுங்க வீட்டுல தான் தங்கியிருந்தோம்... அவரு கூட இங்க வந்துருக்காரு...” என்று கூறி கொண்டே திரும்பி தேடுகிறாள்.
“எங்கம்மா...? யாருமே அப்டி வந்த மாதிரி தெரியலையே...”
சந்தோஷ் உடனே, “இல்ல சார்... நிஜமா வந்தாரு... வெளில எங்கயாது இருப்பாரு...”
“நீங்க சொல்லுற கதைய நாங்க நம்ப முடியாது... எங்களுக்கு ஆதாரம் வேணும்...”
இருவரும் பேச முடியாமல் நிற்க, சிரித்து கொண்டே அரசு வக்கீல்,
“சார்... இவன் சந்தோஷ் கெளதம் இரண்டு பேரும் சேர்ந்து தான் கொலை பண்ணிருக்காங்க... இப்போ தன்னோட காதலான காப்பாத்த இந்த பொண்ணு பொய் சொல்லுது... அது தான் சார் உண்மை...”
“இல்ல சார்...”
என்று ஒரு சத்தமான குரல் கேட்டு அனைவரும் திரும்ப, அங்கு முருகன் நிற்கிறான்.
மறுபடியும் முருகன், “இல்ல சார்... சந்தோஷ் சொல்லுறது உண்மை...”
தன்னுடைய கண்ணையே தன்னால் நம்ப முடியாதது போல் அனைவரும் அப்படியே உறைந்து முருகனையே பார்த்து கொண்டு இருந்தனர். கெளதம்க்கு இன்று சந்தோசத்தில் தலை கால் புரிய வில்லை. தான் கைதியாக கோர்ட்டில் நிற்கிறோம் என்பது கூட மறந்தது. சந்தோசத்தில் என்ன செய்கிறோம் என்று புரியவில்லை.
“முருகா....! முருகா...!” என்று ஆனந்த கூச்சலிட, அங்கு கூட்டத்தில் அமர்ந்திருந்த சைமனுக்கு ஆனந்தத்தில் கண்களில் இருந்து கண்ணீர் வழிய எழுந்து அவனுக்கு அருகில் செல்கிறான். சந்தோஷ், காதம்பரி இருவரும் நிம்மதி பெரு மூச்சு விட்டனர். சௌந்தர்யா முருகனை பார்த்ததும் மனதில் இவன் உயிரோட வந்துட்டானா... நல்ல வேளை இவன் இப்போ வந்தான்... இனி அவர ஈஸியா வெளில கொண்டு வந்துடலாம்.... என்று நினைத்தாள்.
சைமன் முருகன் அருகில் சென்று கதறி அழுக, முருகன் கட்டி பிடித்து சமாதானம் செய்ய, அங்கு பெரும் சந்தோச நிகழ்வுகளாய் நடந்தன.
கெளதம்க்காக வாதாடும் வக்கீல் உடனே எழுந்து, “சார்... இவர் தான் கொலை செய்ய பட்டதா சொன்ன முருகன்...” என்று கூறவும், நீதிபதி சற்று முன்பு தன்னிடம் குடுத்த முருகன் போட்டோவை எடுத்து பார்க்கிறார். பார்த்ததும் அது முருகன் என்பது தெளிவாக தெரிந்தது. முருகனை பார்த்து, “நீங்க இங்க கூண்டுக்கு வந்து பேசுங்க...” என்று கூறுகிறார். முருகன் கூண்டில் ஏறி நிற்கிறான்.
வக்கீல் விசாரிக்கிறார், “இத்தனை நாளா எங்க இருந்தீங்க முருகன்..? சந்தோஷ் சொல்லுறது உண்மையா..?”
“ஆமாம் சார்... சந்தோஷயும் காதம்பரியையும் நான் தான் ஓடி போக வச்சேன்... சித்தப்பா தங்கச்சிக்கு அவசர அவசரமா மாப்பிள்ளை பாத்தாரு... காதம்பரிக்கு இதுல விருப்பம் இல்லன்னு எனக்கு புரிஞ்சது...
அதுவும் தங்கச்சி சந்தோஷ் கூட கல்யாணம் நடக்கலைனா நான் செத்து போய்டுவேன் அப்டின்னு சொன்னா...
அதான் நான் சித்தப்பா கிட்ட இப்போ கல்யாணத்துக்கு அவசர பட வேண்டாம் அப்டின்னு சொன்னேன்.... ஆனா அவரு நல்ல சம்பந்தம் முடிச்சா தங்கச்சி நல்ல வாழுவான்னு சொல்லிட்டு இருந்தாரு... அதுவும் சந்தோஷ் வேற சாதின்னு அவனுக்கு காதம்பரிய கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்லிடாரு..
அதுனால தான் இப்டி ஒரு முடிவு எடுத்தேன். அன்னைக்கு நைட் சித்தப்பா வீட்டுக்கு வர லேட் ஆச்சு, அத சாதகமா பயன்படுத்தி சந்தோஷ வீட்டுக்கு வர சொன்னேன். அவன் வரவும் காதம்பரிய அவன் கூட அனுப்பி வச்சேன்.
நான் வீட்டுக்கு வந்தப்ப சித்தப்பா காதம்பரிய ரொம்ப தீவிரமா தேடிட்டு இருந்தாரு... ஊருக்குள்ள இருந்தா மாட்டிப்பாங்க, அதனால அவுங்கள வேற இடத்துக்கு அனுப்பி வைக்க யோசிச்சு அவுங்கள தேட போறமாதிரி சொல்லிட்டு அங்க இருந்து கிளம்பி போய் அவுங்கள கொடைக்கானல்ல இருக்க எங்க தாத்தாக்கு தெரிஞ்ச ஒரு சொந்தக்காரங்க வீட்டுக்கு அனுப்பி வச்சேன்.”
“சரி நீங்க தான் சந்தோஷ், காதம்பரி ஓடி போக ஹெல்ப் பண்ணுனீங்க... அப்பறம் எதுக்கு கெளதம் வீட்டுக்கு போனீங்க...?”
“சார் நான் கெளதம் பார்த்து மன்னிப்பு கேக்க போனேன்... ஆனா அங்க போகவும் என் மனசு கேக்காம அவன் கிட்ட கொஞ்சம் கடுமையா நடந்து கிட்டேன்..”
“அப்டி அன்னைக்கு என்ன பேசுனீங்க... என்ன நடந்தது கெளதம் வீட்டுல..?”
“சார்... அதுவந்து நான் கெளதம் வீட்டுக்கு போனேன்.. அவன் என்ன பாக்கவும் ரொம்ப சந்தோஷ பட்டான். என் கிட்ட ரொம்ப சாதரணமா பேசினான்...
அத பார்த்து எனக்கு பழசு ஞாபகம் வந்து அவன் கிட்ட என்று கூறி கொண்டிருக்கும் போதே அவனுக்கு கண்களின் முன்பு அன்று நடந்தது நிழலாடியது
முருகன் ‘நான் உன்னை தான் ரொம்ப நம்பினேன்... ஆனா நீ என்னை ரொம்ப கஷ்ட படுத்திட்ட... அதுவும் என்னையே நீ ஏமாத்திட்ட’
கெளதம் ‘நான் எப்போவுமே உன்னை ஏமாத்த நினைச்சது இல்ல...’
முருகன் ‘பொய் சொல்லாதா... உனக்கு சந்தோஷ், காதம்பரிய பத்தி ஏற்கனவே தெரிஞ்சு இருந்தும் என்கிட்டே இருந்து மறைச்சுட்ட...’
கெளதம் ‘நான் வேணும்ன்னு மறைக்கலை... என்னை மன்னிச்சுடு...’
முருகன் ‘நான் சின்ன வயசுள இருந்து அப்பா, தாத்தா அப்டின்னு யார் யார் மேல பாசம் வச்சேனோ அவுங்க எல்லாரும் என்னை ஏமாத்திட்டு போய்ட்டாங்க... அவுங்க எல்லார் போன பின்னாடி உன்னை தான் நான் ரொம்ப நம்பிட்டு இருந்தேன்... ஆனா நீ என்னையே ஏமாத்திட்ட...
பாசம் வைக்க யாரும் இல்லாம அனாதயா தான் நான் இருக்கணும் போல... ‘
கெளதம் ‘நான் உன் மேல பாசம் ரொம்ப வச்சுருக்கேன்...’
முருகன் ‘பொய்... நான் உன்கிட்ட இதுவரைக்கும் எந்த விஷயத்தையும் மறைச்சது இல்ல... ஆனா நீ என்கிட்ட எவ்ளோ பெரிய விஷயத்த மறைச்சுட்ட... இதுல இருந்தே நீ என் மேல எவ்ளோ பாசமா இருந்துருக்கன்னு எனக்கு புரிஞ்சது...
எதுக்கு என்ன ஏமாத்தின... ஏன் இப்டி பண்ண சொல்லு, சொல்லு...