ஹாய் பிரெண்ட்ஸ்...ஐம் பேக்...சில மன கஷ்டத்தாலும் என் பெற்றோரின் அறுபதாம் திருமண நிகழ்ச்சியாலும் இத்தனை நாட்கள் எழுதாமல் இருந்தேன்... உங்கள் அன்பு என்னை மீண்டும் எழுத உற்சாகம் அளித்தது...இனி எழுதுவதை எப்போதும் நிறுத்தப் போவதில்லை... உங்கள் அன்பிற்கு கோடானுகோடி நன்றிகள்.
பார்ட்டி முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது.தீரா தலைவலியோடு சோர்வும் சேர சைதன்யா தன் வீட்டு அறையிலேயே முடங்கியிருந்தாள்.மூன்றாம் நாள் சிறிது தெம்பாக உணர்ந்தவள் தோழியின் வீட்டிற்கு பறந்துவிட்டாள்.இந்த இரண்டு நாட்களாக அர்ச்சனா போனை எடுக்காதது வேறு அவள் கவலையை வானாளவு உயர்த்தியிருந்தது.
அர்ச்சனாவின் வீட்டை அவள் அடைந்தப் போது அந்த வீட்டின் தோற்றமே அவளை பயம் கொள்ள செய்தது.வேலையாட்கள் நான்கைந்து பேர் வீட்டை சுத்தம் செய்ய மீதி ஆட்கள் சாமான்களை தூக்கிக் கொண்டு பரபரப்பாக போய் வந்தனர்.
அதில் ரொம்ப வருடங்களாக அங்கே வேலை செய்யும் சமையல்கார காமாட்சி சைதன்யா வாயிலிலேயே நிற்பதைக் கண்டு முகம் கொள்ளா சந்தோஷத்தோடு இவள் அருகே வந்தவர்,
"சைதன்யா கண்ணு!ஏன்மா இரண்டு நாளா வரல?இந்த நேரத்துல நம்ப பாப்பா கூட நீதானே இருக்கனும்!"என்றார்.
அவர் பேச்சு ஒருவித சந்தேகத்தை கிளப்ப,
"அக்கா!என்ன விஷயம்?அச்சுவுக்கு என்ன?"
"என்ன கண்ணு உனக்கு விஷயமே தெரியாதா? நாளைக்கு பாப்பாக்கு நிச்சியதார்த்தமாச்சே!"
'நிச்சியதார்த்தமா!'என்று அதிர்ந்து நின்று விட்டாள் சைதன்யா.ஏனோ அர்ச்சனா மார்கஸ் இணைவதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.சொல்ல முடியாத வலி இதயத்தில் எழுவதை அடக்கியபடி தோழியின் அறை நோக்கி விரைந்தாள்.
அங்கே போனில் உற்சாகமாக பேசியபடி இருந்த அர்ச்சனா வாயிலில் நிழலாடவதைக் கண்டு காலை கட் செய்து நிமிர்ந்துப் பார்த்தவள் கோபத்தின் உச்சியில் முகம் சிவக்க நின்றத் தோழியை கண்டுத் திடுக்கிட்டாள்.
"சைத்து அது வந்து..."என்று தொடங்கியவளை வேண்டாம் என கைக்காட்டி தடுத்தவள்
"அச்சு நீ இப்படி பண்ணுவேன்னு நா நெனைக்கவேயில்லை...விக்கி அண்ணாவுக்கு இப்படி துரோகம் பண்ணிட்டியே!இது நியாயமா?"
அவள் குற்றச்சாட்டிற்கு ஏதோ பதில் கூற விழைந்த அர்ச்சனா மனதை மாற்றியவளாக மவுனமானாள்.
"ஏன் பேசாம இருக்கே அச்சு!பதில் சொல்லு...அந்த மாக்கு ஏதாவது மந்திரம் கிந்திரம் பண்ணிட்டானா?இத்தன நாளு விக்கி அண்ணாதான் எல்லாம் தெய்வீக காதல் அப்பிடி இப்பிடின்னுட்டு இப்ப அதையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு லண்டன் மருமகளாக கிளம்பிட்ட இல்ல..."
அப்போதும் அவள் மவுனம் சாதிக்கவே வெறுத்துப் போனவளாக அங்கிருந்து வெளியேறினாள் சைதன்யா.அவள் தீனதயாளனின் அறையைத் தாண்டும் முன் அங்கிருந்து வெளியே வந்த மதுரா சைதன்யாவை கண்டு முகம் கொள்ளா புன்னகையோடு அவள் அருகில் வந்தவர்,
"சைத்தும்மா!ஏன்டா இரண்டு நாளா வரல...?நம்ம அச்சுக்கு நாளைக்கு நிச்சியதார்த்தம் தெரியும்ல.. நீதான் முன்ன நின்னு நடத்தனும்... நாளைக்கு சீக்கிரம் வந்திடு என்ன...மார்கஸோட அம்மா நாளை காலை ப்ளைட்டுக்கு வராங்களாம்"
அவள் நிலை புரியாமல் உற்சாகத்தோடு பேசிக் கொண்டே போனார் அந்த அன்புத் தாய்.மேலே அவர் நிச்சியத்தைப் பற்றி விவரிக்கத் தொடங்கிய போது,
"ஆன்ட்டி!எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு...நா கிளம்பறேன்... நாளைக்கு சீக்கிரம் வந்திட்றேன்"என்று அவர் மேலே பேசும் முன் அங்கிருந்து விரைந்து விட்டாள்.
படிகளில் அவள் வேகமாக இறங்கிய போது மேலே ஏறி வந்த மார்கஸை கண்டு திகைத்து நின்று விட்டாள்.மெரூன் நிற டீ சர்ட்டில் ஆண்மையின் இலக்கணமாக இருந்தவனை கண்கொட்டாமல் பார்த்தாள்.அவனும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.முதலில் தன்னிலை அடைந்த சைதன்யா அவனை தாண்டிக் கொண்டு கீழிறங்கும் முன்,
"ஹாய் மிஸ் சைதன்யா!ஹவ் ஆர் யூ?தலைவலி எல்லாம் சரியாயிடுச்சா?"என்று அக்கறையோடு விசாரித்தான்.
'எனக்கு தலைவலின்னு இவனுக்கு எப்பிடி தெரியும்?இருக்குன்னு சொன்னா சன்டு பாம் தேச்சிவிடப் போறவன் மாதிரி கேக்றத பாரு...மாங்கா மாக்கு'
"என்னமோ மனசுக்குள்ள என்னை திட்றா மாதிரி தெரியுதே..ம்... போகட்டும் நாளைக்கு உங்க பெஸ்ட் பிரண்ட் என்கேஜ்மெண்ட்க்கு வந்திடுங்க..இல்லேன்னா அவங்க ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க"
"இரண்டே நாள்ல எதையோ பண்ணி அர்ச்சனா மனச கெடுத்துட்டீங்க இல்ல!"
பார்ட்டி முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது.தீரா தலைவலியோடு சோர்வும் சேர சைதன்யா தன் வீட்டு அறையிலேயே முடங்கியிருந்தாள்.மூன்றாம் நாள் சிறிது தெம்பாக உணர்ந்தவள் தோழியின் வீட்டிற்கு பறந்துவிட்டாள்.இந்த இரண்டு நாட்களாக அர்ச்சனா போனை எடுக்காதது வேறு அவள் கவலையை வானாளவு உயர்த்தியிருந்தது.
அர்ச்சனாவின் வீட்டை அவள் அடைந்தப் போது அந்த வீட்டின் தோற்றமே அவளை பயம் கொள்ள செய்தது.வேலையாட்கள் நான்கைந்து பேர் வீட்டை சுத்தம் செய்ய மீதி ஆட்கள் சாமான்களை தூக்கிக் கொண்டு பரபரப்பாக போய் வந்தனர்.
அதில் ரொம்ப வருடங்களாக அங்கே வேலை செய்யும் சமையல்கார காமாட்சி சைதன்யா வாயிலிலேயே நிற்பதைக் கண்டு முகம் கொள்ளா சந்தோஷத்தோடு இவள் அருகே வந்தவர்,
"சைதன்யா கண்ணு!ஏன்மா இரண்டு நாளா வரல?இந்த நேரத்துல நம்ப பாப்பா கூட நீதானே இருக்கனும்!"என்றார்.
அவர் பேச்சு ஒருவித சந்தேகத்தை கிளப்ப,
"அக்கா!என்ன விஷயம்?அச்சுவுக்கு என்ன?"
"என்ன கண்ணு உனக்கு விஷயமே தெரியாதா? நாளைக்கு பாப்பாக்கு நிச்சியதார்த்தமாச்சே!"
'நிச்சியதார்த்தமா!'என்று அதிர்ந்து நின்று விட்டாள் சைதன்யா.ஏனோ அர்ச்சனா மார்கஸ் இணைவதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.சொல்ல முடியாத வலி இதயத்தில் எழுவதை அடக்கியபடி தோழியின் அறை நோக்கி விரைந்தாள்.
அங்கே போனில் உற்சாகமாக பேசியபடி இருந்த அர்ச்சனா வாயிலில் நிழலாடவதைக் கண்டு காலை கட் செய்து நிமிர்ந்துப் பார்த்தவள் கோபத்தின் உச்சியில் முகம் சிவக்க நின்றத் தோழியை கண்டுத் திடுக்கிட்டாள்.
"சைத்து அது வந்து..."என்று தொடங்கியவளை வேண்டாம் என கைக்காட்டி தடுத்தவள்
"அச்சு நீ இப்படி பண்ணுவேன்னு நா நெனைக்கவேயில்லை...விக்கி அண்ணாவுக்கு இப்படி துரோகம் பண்ணிட்டியே!இது நியாயமா?"
அவள் குற்றச்சாட்டிற்கு ஏதோ பதில் கூற விழைந்த அர்ச்சனா மனதை மாற்றியவளாக மவுனமானாள்.
"ஏன் பேசாம இருக்கே அச்சு!பதில் சொல்லு...அந்த மாக்கு ஏதாவது மந்திரம் கிந்திரம் பண்ணிட்டானா?இத்தன நாளு விக்கி அண்ணாதான் எல்லாம் தெய்வீக காதல் அப்பிடி இப்பிடின்னுட்டு இப்ப அதையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு லண்டன் மருமகளாக கிளம்பிட்ட இல்ல..."
அப்போதும் அவள் மவுனம் சாதிக்கவே வெறுத்துப் போனவளாக அங்கிருந்து வெளியேறினாள் சைதன்யா.அவள் தீனதயாளனின் அறையைத் தாண்டும் முன் அங்கிருந்து வெளியே வந்த மதுரா சைதன்யாவை கண்டு முகம் கொள்ளா புன்னகையோடு அவள் அருகில் வந்தவர்,
"சைத்தும்மா!ஏன்டா இரண்டு நாளா வரல...?நம்ம அச்சுக்கு நாளைக்கு நிச்சியதார்த்தம் தெரியும்ல.. நீதான் முன்ன நின்னு நடத்தனும்... நாளைக்கு சீக்கிரம் வந்திடு என்ன...மார்கஸோட அம்மா நாளை காலை ப்ளைட்டுக்கு வராங்களாம்"
அவள் நிலை புரியாமல் உற்சாகத்தோடு பேசிக் கொண்டே போனார் அந்த அன்புத் தாய்.மேலே அவர் நிச்சியத்தைப் பற்றி விவரிக்கத் தொடங்கிய போது,
"ஆன்ட்டி!எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு...நா கிளம்பறேன்... நாளைக்கு சீக்கிரம் வந்திட்றேன்"என்று அவர் மேலே பேசும் முன் அங்கிருந்து விரைந்து விட்டாள்.
படிகளில் அவள் வேகமாக இறங்கிய போது மேலே ஏறி வந்த மார்கஸை கண்டு திகைத்து நின்று விட்டாள்.மெரூன் நிற டீ சர்ட்டில் ஆண்மையின் இலக்கணமாக இருந்தவனை கண்கொட்டாமல் பார்த்தாள்.அவனும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.முதலில் தன்னிலை அடைந்த சைதன்யா அவனை தாண்டிக் கொண்டு கீழிறங்கும் முன்,
"ஹாய் மிஸ் சைதன்யா!ஹவ் ஆர் யூ?தலைவலி எல்லாம் சரியாயிடுச்சா?"என்று அக்கறையோடு விசாரித்தான்.
'எனக்கு தலைவலின்னு இவனுக்கு எப்பிடி தெரியும்?இருக்குன்னு சொன்னா சன்டு பாம் தேச்சிவிடப் போறவன் மாதிரி கேக்றத பாரு...மாங்கா மாக்கு'
"என்னமோ மனசுக்குள்ள என்னை திட்றா மாதிரி தெரியுதே..ம்... போகட்டும் நாளைக்கு உங்க பெஸ்ட் பிரண்ட் என்கேஜ்மெண்ட்க்கு வந்திடுங்க..இல்லேன்னா அவங்க ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க"
"இரண்டே நாள்ல எதையோ பண்ணி அர்ச்சனா மனச கெடுத்துட்டீங்க இல்ல!"