• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Marcus Weds Chaitanya-4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
ஹாய் பிரெண்ட்ஸ்...ஐம் பேக்...சில மன கஷ்டத்தாலும் என் பெற்றோரின் அறுபதாம் திருமண நிகழ்ச்சியாலும் இத்தனை நாட்கள் எழுதாமல் இருந்தேன்... உங்கள் அன்பு என்னை மீண்டும் எழுத உற்சாகம் அளித்தது...இனி எழுதுவதை எப்போதும் நிறுத்தப் போவதில்லை... உங்கள் அன்பிற்கு கோடானுகோடி நன்றிகள்.




பார்ட்டி முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது.தீரா தலைவலியோடு சோர்வும் சேர சைதன்யா தன் வீட்டு அறையிலேயே முடங்கியிருந்தாள்.மூன்றாம் நாள் சிறிது தெம்பாக உணர்ந்தவள் தோழியின் வீட்டிற்கு பறந்துவிட்டாள்.இந்த இரண்டு நாட்களாக அர்ச்சனா போனை எடுக்காதது வேறு அவள் கவலையை வானாளவு உயர்த்தியிருந்தது.


அர்ச்சனாவின் வீட்டை அவள் அடைந்தப் போது அந்த வீட்டின் தோற்றமே அவளை பயம் கொள்ள செய்தது.வேலையாட்கள் நான்கைந்து பேர் வீட்டை சுத்தம் செய்ய மீதி ஆட்கள் சாமான்களை தூக்கிக் கொண்டு பரபரப்பாக போய் வந்தனர்.


அதில் ரொம்ப வருடங்களாக அங்கே வேலை செய்யும் சமையல்கார காமாட்சி சைதன்யா வாயிலிலேயே நிற்பதைக் கண்டு முகம் கொள்ளா சந்தோஷத்தோடு இவள் அருகே வந்தவர்,


"சைதன்யா கண்ணு!ஏன்மா இரண்டு நாளா வரல?இந்த நேரத்துல நம்ப பாப்பா கூட நீதானே இருக்கனும்!"என்றார்.


அவர் பேச்சு ஒருவித சந்தேகத்தை கிளப்ப,


"அக்கா!என்ன விஷயம்?அச்சுவுக்கு என்ன?"


"என்ன கண்ணு உனக்கு விஷயமே தெரியாதா? நாளைக்கு பாப்பாக்கு நிச்சியதார்த்தமாச்சே!"


'நிச்சியதார்த்தமா!'என்று அதிர்ந்து நின்று விட்டாள் சைதன்யா.ஏனோ அர்ச்சனா மார்கஸ் இணைவதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.சொல்ல முடியாத வலி இதயத்தில் எழுவதை அடக்கியபடி தோழியின் அறை நோக்கி விரைந்தாள்.


அங்கே போனில் உற்சாகமாக பேசியபடி இருந்த அர்ச்சனா வாயிலில் நிழலாடவதைக் கண்டு காலை கட் செய்து நிமிர்ந்துப் பார்த்தவள் கோபத்தின் உச்சியில் முகம் சிவக்க நின்றத் தோழியை கண்டுத் திடுக்கிட்டாள்.


"சைத்து அது வந்து..."என்று தொடங்கியவளை வேண்டாம் என கைக்காட்டி தடுத்தவள்


"அச்சு நீ இப்படி பண்ணுவேன்னு நா நெனைக்கவேயில்லை...விக்கி அண்ணாவுக்கு இப்படி துரோகம் பண்ணிட்டியே!இது நியாயமா?"


அவள் குற்றச்சாட்டிற்கு ஏதோ பதில் கூற விழைந்த அர்ச்சனா மனதை மாற்றியவளாக மவுனமானாள்.


"ஏன் பேசாம இருக்கே அச்சு!பதில் சொல்லு...அந்த மாக்கு ஏதாவது மந்திரம் கிந்திரம் பண்ணிட்டானா?இத்தன நாளு விக்கி அண்ணாதான் எல்லாம் தெய்வீக காதல் அப்பிடி இப்பிடின்னுட்டு இப்ப அதையெல்லாம் தூக்கி எறிஞ்சிட்டு லண்டன் மருமகளாக கிளம்பிட்ட இல்ல..."


அப்போதும் அவள் மவுனம் சாதிக்கவே வெறுத்துப் போனவளாக அங்கிருந்து வெளியேறினாள் சைதன்யா.அவள் தீனதயாளனின் அறையைத் தாண்டும் முன் அங்கிருந்து வெளியே வந்த மதுரா சைதன்யாவை கண்டு முகம் கொள்ளா புன்னகையோடு அவள் அருகில் வந்தவர்,


"சைத்தும்மா!ஏன்டா இரண்டு நாளா வரல...?நம்ம அச்சுக்கு நாளைக்கு நிச்சியதார்த்தம் தெரியும்ல.. நீதான் முன்ன நின்னு நடத்தனும்... நாளைக்கு சீக்கிரம் வந்திடு என்ன...மார்கஸோட அம்மா நாளை காலை ப்ளைட்டுக்கு வராங்களாம்"


அவள் நிலை புரியாமல் உற்சாகத்தோடு பேசிக் கொண்டே போனார் அந்த அன்புத் தாய்.மேலே அவர் நிச்சியத்தைப் பற்றி விவரிக்கத் தொடங்கிய போது,


"ஆன்ட்டி!எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு...நா கிளம்பறேன்... நாளைக்கு சீக்கிரம் வந்திட்றேன்"என்று அவர் மேலே பேசும் முன் அங்கிருந்து விரைந்து விட்டாள்.


படிகளில் அவள் வேகமாக இறங்கிய போது மேலே ஏறி வந்த மார்கஸை கண்டு திகைத்து நின்று விட்டாள்.மெரூன் நிற டீ சர்ட்டில் ஆண்மையின் இலக்கணமாக இருந்தவனை கண்கொட்டாமல் பார்த்தாள்.அவனும் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான்.முதலில் தன்னிலை அடைந்த சைதன்யா அவனை தாண்டிக் கொண்டு கீழிறங்கும் முன்,


"ஹாய் மிஸ் சைதன்யா!ஹவ் ஆர் யூ?தலைவலி எல்லாம் சரியாயிடுச்சா?"என்று அக்கறையோடு விசாரித்தான்.


'எனக்கு தலைவலின்னு இவனுக்கு எப்பிடி தெரியும்?இருக்குன்னு சொன்னா சன்டு பாம் தேச்சிவிடப் போறவன் மாதிரி கேக்றத பாரு...மாங்கா மாக்கு'


"என்னமோ மனசுக்குள்ள என்னை திட்றா மாதிரி தெரியுதே..ம்... போகட்டும் நாளைக்கு உங்க பெஸ்ட் பிரண்ட் என்கேஜ்மெண்ட்க்கு வந்திடுங்க..இல்லேன்னா அவங்க ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க"


"இரண்டே நாள்ல எதையோ பண்ணி அர்ச்சனா மனச கெடுத்துட்டீங்க இல்ல!"
 




Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
"நானா!...பண்ண வேண்டியவங்களுக்கே ஒண்ணும் பண்ணாம இருக்கேன்"என்று முணுமுணுத்தான்.


"என்ன சொன்னீங்க?"


"ஒண்ணுமில்ல...நடக்கறது நடந்தே தீரும்... யாரும் தடுக்க முடியாது..."


"அவ மனச மாத்தின தைரியம் தானே இப்படி உங்கள பேச சொல்லுது..."


"கூல் பேபி கூல்... ஏற்கெனவே சென்னை வெயில் அதிகமா இருக்கு...உன் கோவத்துல சரோன்டிங்கெல்லாம் இன்னும் ஹீட் ஆகுது...ப்ளீஸ் பீ கூல்"


அவனை வேண்டிய மட்டும் கோபமாக முறைத்தவள் அங்கிருந்து விரைந்துச் சென்று விட்டாள்.அவளையும் அறியாமல் கண்கள் குளமாயின.தன் தோழி தன் காதலை மறந்து மார்கஸை மணக்க முடிவெடுத்ததை எண்ணி அழுதாளா?இல்லை மார்கஸ் அர்ச்சனாவின் மனதை எப்படியோ மாற்றி அவளை மணப்பதை எண்ணி வருந்தினாளா?அவளுக்கே புரியவில்லை.


மார்கஸ் அர்ச்சனா இருவரின் நெருங்கியத் தோற்றத்தை கற்பனை செய்து மேலும் மேலும் மனதை புண்படுத்திக் கொண்டாள்.மறுநாள் நடக்கவிருக்கும் அந்த பாழும் நிச்சயதார்த்தத்திற்கு போகாமலே இருந்துவிடத்தான் நினைத்தாள்.ஆனால் அர்ச்சனாவுடனான இத்தனை வருட நட்பு மற்றும் மதுராவின் அன்பான வேண்டுகோள் இரண்டையும் மனதில் கொண்டு வெதும்பிய மனதை அடக்கியபடி மஞ்சள் வண்ண லெஹங்காவில் தயாரானவள் நிச்சயம் நடக்கும் ஹாலை வந்தடைந்தாள்.


பலவண்ண பூக்கள் மற்றும் விளக்குகளால் அந்த இடமே கண்களுக்கு விருந்தானது.சுற்றிலும் கண்களை சுழற்றியபடி சென்ற சைதன்யா யார் மீதோ லேசாக இடித்துக் கொண்டாள்.அங்கே அழகிய காட்டன் புடவையில் லேசாக நரைத்த கூந்தலோடு அதிக சுருக்கமில்லாத அழகிய முகத்தோடு நின்றிருந்தார் ஒரு பெண்மணி.அவரின் கூர்கண்களை சில நொடி பார்த்தவள் யாரும் கூறாமலே அவர் மார்கஸின் தாய் மேரி என்பதை அறிந்தாள்.


இவளை முதலிலேயே தெரிந்தவர் போல பளீரென மலர்ந்தது அவர் முகம்.இவள் கைகளை மென்மையாகப் பிடித்துக் கொண்டவர்,


"நீ சைதன்யா தானே?எப்படிம்மா இருக்க?அப்பாம்மா வரலையா?"என்றார் அன்போடு.


"ஆமா...ஆனா உங்களுக்கு எப்படி தெரியும் என்னை?"


"ஏன் தெரியாம மார்..."என்று வாக்கியத்தை முடிக்கும் முன் எங்கிருந்தோ வேகமாக அவரருகே வந்த மார்கஸ்,


"அம்மா!இங்க என்ன பண்றீங்க?அங்க மதுரா ஆன்ட்டி உங்களை தேடிட்டி இருக்காங்க...போங்க"என்று அவரை அங்கிருந்து அனுப்பி விட்டான்.மகனின் கண்களில் எதை கண்டாரோ சைதன்யவை நோக்கி பாசமாக புன்னகைத்தவர் உள்ளே சென்று விட்டார்.


தன் எதிரே நின்ற பேரழகை அவன் கண்கள் திகட்ட திகட்ட பருகியது.அவனின் பார்வையில் பெண்ணவளின் முகம் செவ்வானமாக சிவந்தது.நாணம் கொண்டாலும் மனத்தின் மறுபாதி கோபத்தில் கொந்தளித்தது அவளுக்கு.


'நிச்சயம் அர்ச்சனாவோட பண்றான்...அவ பிரண்டான என்னை முழுங்கறத போல பாக்குறான்...கண்ணு எங்கெங்கோ போகுது..சே என்ன மனுஷன் இவன்..‌?'என்று மனதிற்குள் அவனைத் திட்டித் தீர்த்தாள்.அவன் பார்வையை பார்த்தால் இன்னும் சில நொடி சைதன்யா அங்கேயே நின்றால் இழுத்தணைத்து முத்தமிட்டுவிடுவான் போல தோன்றவே வேகமாக அங்கிருந்து அகன்றாள்.


இப்போது இருக்கும் மனநிலையில் அர்ச்சனாவோடு பேச பிடிக்காதவளாக ஹாலில் சுற்றி வந்தவள்.ஏனோ மனம் தாங்க முடியாத துக்கத்தில் வலித்தது.தான் அங்கே வந்திருக்கவே கூடாது என தோன்றியது அவளுக்கு.மார்கஸை சந்தித்தது முதல் நடந்தவைகளை அவள் மனம் ஓட்டிப் பார்த்தது.அப்போது தீனதயாளனின் குரலில் அங்கே சென்று நின்றாள்.


"லேடிஸ் அண்ட் ஜென்டில்மேன்!என் பொண்ணு அர்ச்சனாவோட என்கேஜ்மெண்ட்க்கு நீங்கள்லாம் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு...மணமகன உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரியும்...லெட்ஸ் வெல்கம் மை டியர் டாடர் அர்ச்சனா அண்ட் மை சன் இன் லா விக்னேஷ்"என்று அவர் கூறியதும் மயக்கம் வரும் போல் ஆனது நம் சைதன்யாவிற்கு.


மணமகன் மார்கஸ் அல்ல விக்னேஷ் என்ற விஷயத்தை அனைவரும் தன்னிடம் மறைத்துவிட்டனரே என்று அவளுக்கு தாங்க முடியாத கோபத்தைக் கொடுத்தது.


'இந்த அச்சுக் கூட எங்கிட்ட உண்மைய மறச்சிட்டாளே!என்னை எல்லாரும் சேர்ந்து முட்டாளடிச்சுட்டாங்க...எல்லா மாக்குவோட வேலையால் தான் இருக்கும்...டேய் மாக்கு‌ உன்னை அப்புறம் பாத்துக்கறேன்!'என்று கருவியவள் தன் தோழியின் நிச்சியதார்த்ததில் சந்தோஷமாக கலந்துக் கொண்டாள்.


எல்லா விசேஷமும் முடிந்து தனிமையில் அர்ச்சனாவை சந்தித்த போது அவள் நடந்ததைக் கூறினாள்.


"சாரிடி சைத்து!மார்கஸ் தான் உங்கிட்ட எதுவும் சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டாரு... அன்னிக்கு பார்ட்டி முடிஞ்ச மறுநாள் என்னை பார்க்குக்கு வர சொன்னார்..என்னவாயிருக்கும்னு போனா அங்க விக்கியும் இருந்தார்...லவ் பண்ண தைரியம் இருக்கிறவங்க அத பேரண்ட்ஸ்கிட்ட சொல்லவும் தைரியமா இருக்கனும்னு ரொம்ப திட்டினார்... அவருக்கு இந்த மேரெஜ்ல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்லையாம் அப்பா கேட்டப்போது பாக்கலாம்னு மட்டும் தான் சொன்னாராம்...ஊருக்கு போறதுக்கு முன்ன எல்லாம் சொல்லிட்டு போலாம்னு நினைச்சிருந்தாராம்... இதையெல்லாம் சொல்லி அப்பாகிட்ட அவரே பேசறேன்னு சொன்னாரு...அதே போல‌ எங்க லவ்வ பத்தி சொல்லி அப்பாவை எப்படியோ கன்வின்ஸ் பண்ணிட்டாரு...ஆனா உங்கிட்ட மட்டும் சொல்லக் கூடாது உனக்கு இத சப்ரைஸா தெரியனும்னு சொன்னாரு...அதனால தான் நான் உங்கிட்ட நேத்திக்கி எதுவும் சொல்லல...ஐம் வெரி சாரி டி...இவ்வளவு செஞ்ச அவர் கேட்டத இல்லேன்னு சொல்ல முடியல... நீயும் அவர தப்பா நினைக்கறத விட்டுடு அவர் ரொம்ப நல்லவர்டி...பர்ஃபெக்ட் ஜென்டில்மேன்"


தோழியின் விளக்கத்தில் சைதன்யாவின் மனம் சிறிது சமாதனமடைந்தது.அவன் செய்த உதவிக்காக மார்கஸிடம் நன்றி கூற நினைத்தாள்.அதே போல் அவள் அவனை தேடிய போது மாடி பால்கனியில் தனியாக நின்றிருந்தவன் தென்பட்டான்.


இவளின் மெல்லிய கொலுசொலியில் திரும்பிப் பார்த்தான் அவன்.பால்கனி வழியாக வீசிய நிலவொளியில் பொற்பாவையாக மிளிர்ந்த சைதன்யாவை விட்டு அவன் பார்வையை அவனால் விலக்கவே முடியவில்லை.


அவன் பார்வையில் கூற வந்ததெல்லாம் மறந்துவிடுமோ என்று பயந்தாள் அவள்.படபடத்த இதயத்தை அழுத்தியபடி அவனருகே சென்றவள்,


"ரொம்ப தேங்க்ஸ் உங்களுக்கு...அச்சுக்காக இவ்ளோ செஞ்சிருக்கீங்க... அன்னிக்கு ஏதோ தெரியாம சில விஷயம் பண்ணிட்டேன்... அதுக்கு ரொம்ப சாரி...ஒன்ஸ் அகைன் தேங்க் யூ சோ மச்"என்றவள் திரும்பி செல்லத் தொடங்கிய போது சட்டென அவள் கையைப் பிடித்து இழுத்து சுவற்றில் சாய்த்த மார்கஸ் அவள் நகர முடியாமல் தன் இரு கைகளை அவளின் இருபுறமும் வைத்து அவளை சிறை செய்தான்.அவள் முகத்தருகில் தன் முகத்தை கொண்டுச் சென்றவன் ரகசிய குரலில்,


"எங்க ஊர்ல இந்த மாதிரி தேங்க்ஸ் சொல்ல மாட்டாங்க... உனக்கு நிஜமாவே தேங்க்ஸ் சொல்லனும்னா எனக்கு எங்க ஊர்ல சொல்ற மாதிரிதான் வேணும்"என்றவனின் கண்கள் அவள் பட்டு இதழில் நிலைத்தது.


அவன் கூறியதை புரிந்துக் கொண்ட சைதன்யா செங்கொழுந்தாகிப் போனாள்.
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Firstuu...??
Paaahh oru valiya markum saithum vanthachu....??

Makku mummy ta sollitaya..super..??

Correct love panna mattum pathathu vetla thairiyaama solli k vanganum super ah sonna marcus..???

Achoo saithu mattikiteye??
 




Last edited:

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
Firstuu...??
Paaahh oru valiya markum saithum vanthachu....??

Makku mummy ta sollitaya..super..??

Correct love panna mattum pathathu vetla thairiyaama solli k vanganum super ah sonna marcus..???

Achoo saithu mattikiteye??
நீ தேடிய தேடலலில் முதலில் வந்துவிட்டாய் happy யா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top