Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
34
சூர்யாவின் அச்சம்
கார் சரமாரியாய் திரும்பி சாலையோர ஒரு பெரிய மரத்தின் மீது மோதி நிற்க, ஈஷ்வர் அந்த விபத்தை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் விழிகளை மூடி ஆசுவாசப்படுத்தி கொண்டு, "தப்பிச்சோம்" என்றான்.
மதி அவன் தோள்களை தொட்டு "பாஸ், ஆர் யூ ஆல் ரைட்" என்று ஈஷ்வரிடம் கேட்டான். கண்களை மூடிக் கொண்டே தலையசைத்தவன் சட்டென்று அவசரமாய் சூர்யாவின் புறம் பார்வையை திருப்பினான்.
அவளோ முன்புறம் தலையை கவிழ்ந்தபடி வீழ்ந்திருக்க உடனடியாக அவள் தலையை தூக்கி இருக்கையில் சாய்த்து படுக்க வைத்தான். வலதுபுறம் நெற்றியில் குருதி வழிந்தபடி இருக்க அவளோ மயக்க நிலையில் இருந்தாள்.
இத்தனை கலட்டாவிலும் சூர்யா அவள் கையில் பிடித்திருந்த கைப்பேசியை விடாமல் பிடித்தபடி இருக்க ஈஷ்வர் அதை கவனித்த மாத்திரத்தில் மெதுவாய் வாங்கி அதனை அணைத்து தன் பேக்கட்டில் நுழைத்து கொண்டான்.
மதி சூர்யாவின் நிலைமையை பார்த்து, "இப்ப என்ன பன்றது பாஸ்... ஹாஸ்ப்பெட்டில் அழைச்சிட்டு போலாமா ?" என்று வினவ,
ஈஷ்வர் தன் கைக்குட்டையால் அவள் நெற்றியில் வழிந்த இரத்தை மெல்ல துடைத்தான்.
பின்னர் மதியிடம் "அவசியமில்ல மதி... பெரிய அடி எல்லாம் இல்ல.. ஜஸ்ட் ஷாக்கில அன்கான்ஸியாயிட்டா?... நீ வந்து டிரைவ் பண்ணு... ஐ வில் டேக் கேர் ஆஃப் ஹெர்" என்று உரைத்துவிட்டு அவளை அந்த சீட்டிலிருந்து லாவகமாய் தூக்கி பின்புற இருக்கையில் சாய்வாய் படுக்க வைத்துவிட்டு அருகில் அமர்ந்து கொள்ள முதல் முறையாய் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவனின் அத்தனை அருகாமையில் அவள் சிலையென கிடக்க அப்படி அரிதாய் கிடைத்த வாய்ப்பில் அவன் அவளின் அழகை திகட்டாமல் ரசித்தபடி இருந்தான்.
அவள் மீதான காதல் ஏற்கனவே அவன் மூளையை மழுங்கடித்திருக்க இப்போது அவளின் மீதான மோகம் அவனை கிறுகிறுக்க செய்து கொண்டிருக்க எப்படியாவது அவளை சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவனை அப்போது முழுமையாய் ஆட்கொண்டிருந்தது.
*******
எங்கும் இருள் தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்க உடலெல்லாம் உஷ்ணம் பரவிய உணர்வு அவளுக்கு. நெருப்பு தன் கோரப்பிடியில் அவளை சிறையெடுக்க நெருங்கி வந்து கொண்டிருக்க விலகிப் போக முடியாமல் கட்டுண்டு கிடக்க அந்த தீ அவளை விடுவாதாயில்லை. உடலெல்லாம் தீ பரவி பற்றி எரிய வேதனையா வலியா என்று சொல்ல முடியாத உணர்வால் கதறலோடு அவசரமாய் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் சூர்யா. தான் இன்னும் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை உண்டாக்க தன் தேகத்தை தடவி தடவி பார்த்தாள். அந்த நெருப்பின் உஷ்ணத்தின் தாக்கம் அவளை நீங்காமல் இருக்க மேல் மூச்சும் ,கீழ் மூச்சும் வாங்க தொண்டையெல்லாம் வரண்டு போக தொடங்கியிருந்தது.
சூர்யா "தண்ணி... தண்ணி" என்று கேட்ட நொடி அவள் முன்னாடி நீண்ட அந்த டம்ளரின் தண்ணீரை அவசரமாய் வாங்கி மடமடவென குடித்தாள்.
அப்போது மரணத்திவிட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து வந்ததை போல் எண்ணி லேசாய் அச்சம் நீங்கியபடி அமர்ந்திருக்க அந்த நொடி வெகுதூரத்திலிருந்து ஒரு குரல் "சூர்யா ஆர் யூ ஆல்ரைட் நவ்?" என்று கேட்டு கொண்டிருந்தது.
அந்த குரல் மீண்டும் மீண்டும் சூர்யா என்று அழைப்பு விடுக்க அப்போதே அவள் தன் நினைவுகளை மெல்ல மெல்ல மீட்டெடுக்க தொடங்கினாள். சட்டென்று அவளுக்கு அதிர்ச்சி தரும் விதமாய் அவளின் தோள்களை இரு வன்மையான கரங்கள் உலுக்கியபடி "என்னாச்சு சூர்யா... வாட் ஹேப்பன் ?" என்றதும் அவள் உணர்வுகள் உயிர்ப்பெற அவளை உலுக்கியது ஈஷ்வரின் கரங்கள் என்று அறிந்து நொடி வெடுக்கென அவன் கரத்தை தள்ளிவிட்டு பின்னோடு நகர்ந்தாள்.
அவனின் தொடுகையை விடவும் அப்போது உண்டான நெருப்பின் உஷ்ணமே பரவாயில்லை என்று அந்த நிமிடம் தோன்ற அப்போதுதான் அந்த இடத்தை அவள் விழிகள் ஆராயத் தொடங்கின.
அந்த விசாலமான அறையில் சுற்றிலும் வெள்ளை நிறத் திரைசீலைள் அசைந்து கொண்டிருக்க, கண்ணாடி ஜன்னல்கள் வழியாக மங்கலான சூர்யனின் கதிர்கள் எட்டிப்பார்த்திருந்தது. அப்போதுதான் தான் அகலமான மெத்தையின் மீது அமர்ந்திருக்கிறோம் என்பதை பற்றி அறிந்ததும் இது எந்த இடம் என அவள் யோசிக்க, அப்போது எதிரே நின்று ஈஷ்வர் கைகட்டியபடி "என்னாச்சு சூர்யா... ஏதாச்சும் கனவு கண்டியா ?" என்று வினவினான்.
சூர்யாவும் அப்போது தான் கண்டது கனவா என்று சிந்தித்திபடி நெற்றியில் கைவைக்க லேசான வலி உண்டானது. ஒட்டியிருந்த பிளாஸ்ட்ரியை உணர்ந்தவள் அவள் நெற்றியில் காயம்பட்டிருப்பதை அறிந்தவுடன் அவர்கள் வந்து கார் விபத்துக்குள்ளனதை நினைவுப்படுத்தி கொண்டாள்.
உடனடியாக எதிரே நின்ற ஈஷ்வரை அவள் கோபமாய் முறைக்க சூர்யாவின் பார்வையின் பொருளை புரிந்தவன் அவசரமாய் அவளிடமிருந்து தப்பிக்க, "ஒகே நீ ரெஸ்ட் எடு... அப்புறம் பார்க்கலாம்" என்று சொல்லி அறைக் கதவை நோக்கி நடக்க "ஈஷ்வர் நில்லு" என்ற அவளின் அழுத்தமான அழைப்பிற்கு அவன் கால்கள் வேறுவழியின்றி நகராமல் நின்றன.
சூர்யா படுக்கையில் இருந்து எழுந்து நின்றபடி "உன்னை நம்பி வந்ததுக்கு நீ நல்லா செஞ்சிட்ட ஈஷ்வர்...ஆனா நான் எதிர்பார்த்தேன்... நீ இப்படி ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணுவேன்னு" என்று கேட்டதுமே அவனும் அதே கோபத்தோடு
"இப்ப என்னாயிடுச்சுன்னு இந்த குதி குதிக்கிற... " என்றான்.
சூர்யா வெறுப்பாய் பார்த்து, "என்னை ஏன்டா அபிகிட்ட பேச விடாம பண்ண... எங்கடா என் போஃன்... ஒழுங்கா என் போஃனை கொடுத்துட்டு போ" என்றாள்.
"உன் போஃனை என்கிட்ட கேட்டா ?" என்று அவன் அலட்டிக் கொள்ளாமல் பதில் சொல்ல சூர்யாவின் கோபம் அதிகரித்தது.
"நீதானடா கார்ல இருக்கும் போது அபியோட பேசவிடாம என் போஃனை பிடுங்கின... ராஸ்கல்... "
ஈஷ்வர் அவளின் வார்த்தைகளை தாங்க இயலாமல் "என்னடி திமிரா? " என்று கோபத்தோடு அவன் கை ஓங்கி கொண்டு வர அவள் கைகட்டிக் கொண்டு அசராமல் நின்றிருந்தாள்.
ஏனோ ஓங்கிய கை அவளை அடிக்க மறுக்க சூர்யா அவனை முறைத்தபடி "அடி... இன்னும் அது ஒண்ணுதான் நீ செய்யல அதையும் செஞ்சிரு" என்றாள்.
ஈஷ்வர் ஓங்கிய கையை இறக்கிவிட்டு
"ஆமாம்... நான்தான்டி உன் போஃனை வைச்சிருக்கேன்... என்னடி பண்ண முடியும் உன்னால" என்று திமிராய் கேட்க
சூர்யா எரிச்சலோடு "நீ ரொம்ப ஓவரா போயிட்டிருக்க ஈஷ்வர்" என்று சொன்ன நொடி அவனும் கோபமாய் அவளை நோக்கி
"யாருடி ஓவரா போறது.... நானா இல்ல நீயா ?!... என்னை பத்தி எங்க மாமுக்கு கால் பண்ணி கம்பிளைன்ட் பன்ன இல்ல... அதுக்காகவே நீ என்ன கெஞ்சினாலும் உனக்கு உன் போஃன் கிடைக்காதுடி... " என்றான்.
"நீ செஞ்சதைதானே சொன்ன... அது தப்பா ?"
" ஆமாம் தப்புதான்டி.. நீ செஞ்ச வேலையால எங்க அம்மாவை நான் ரொம்ப கஷ்டபடுத்தி பேசிட்டேன்.. இதுவரைக்கும் அவங்க சொல்லி நான் எதையும் மறுத்ததில்லை... முதல் தடவையா... எல்லாம் உன்னாலதான்டி..." என்றான்.
"ஸ்டாப் இட் ஈஷ்வர்... தப்பை எல்லாம் நீ செஞ்சிட்டு பழியை தூக்கி என் மேல போடிறியா..." அவர்களுக்கான இடையிலான விவாதம் எல்லையை மீற ஈஷ்வர் அதை தவிர்க்க எண்ணி
"உன்கிட்ட சண்டை போடற மூட்ல நான் இல்ல... நான் கிளம்பிறேன்" என்றான்.
"நீ எங்கயாச்சும் போய் தொலை... பட் என் போஃனை கொடுத்துட்டு போ" என்று அவள் கேட்க அவன் திரும்பாமலே
"நாட் பாஸ்ப்பிள்... நீ அந்த அபிமன்யுகிட்ட பேசிறதுக்கு நான் விடமாட்டேன்" என்று அவன் தீர்க்கமாய் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேற போக சூர்யாவால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அபிமன்யு அழைத்தும் தான் அவனிடம் பேச முடியாமல் போனதே என மனதெல்லாம் பாரமாய் அழுத்த
"ஈஷ்வர் ஜஸ்ட் அ மினிட்..." என்றதும் அவன் நகராமல் அவளை நோக்கி தன் பார்வையை வீச சூர்யா தவிப்போடு தயங்கி நின்றாள்.
அவனிடம் இரங்கிப் போவதை காட்டிலும் உயிரையும் விட்டுவிடாலும் என்ற போதும் அபிமன்யுவுக்காக என்ற எண்ணத்தை மனதில் கொண்டு "ஒகே ஈஷ்வர்... நான் உன் வழிக்கே வர்றேன்... நீ என் போஃனை தர வேண்டாம்... நானும் அபிகிட்ட பேசல... பட் அபியோட வாய்ஸை மட்டும் கேட்டுக்கிறேன்... ஜஸ்ட் அபி ஹெலோன்னு சொல்றதை மட்டுமாச்சும்" என்று அவள் கெஞ்சலாய் கேட்க அந்த நொடி ஈஷ்வருக்கு எந்தளவுக்கு கோபமும் எரிச்சலும் உண்டானதெனில் அதனை அவளிடம் காண்பிக்க முடியாமல் அந்த அறைகதவினை படாரென மூடிவிட்டு வெளியேறினான்.
அவனுக்காக அவள் யாருக்காகவும் விட்டுகொடுத்திடாத கர்வத்தையும் விட்டு இறங்கிவருகிறாள் எனில் அப்படி என்ன அவன் மீது அவளுக்கு என்று வெறுப்பு உண்டானது. அவன் அவளின் மனதில் இந்தளவுக்கு இடம்பிடித்திருப்பான் என்பதை ஈஷ்வர் ஏற்று கொள்ள இயலாமல் அவனுக்குள் பொறாமை தீ வேகமாய் படர தொடங்கியது.
எல்லாவற்றையும் கடந்து அபியிடம் சூர்யா கொண்டுள்ள காதலை உணர்ந்த அந்த கணம் தான் அபிமன்யுவாக பிறந்திருக்க கூடாதா? என்ற ஏக்கம் ஏற்பட்டதை அவனால் தவிர்க்கவே முடியவில்லை.
ஈஷ்வர் அந்த சமயத்தில் அவன் பேன்ட் பாக்ட்டில் இருந்த சூர்யாவின் கைப்பேசியை எடுத்து ஆன் செய்தவன் அதில் கடைசி அழைப்பின் எண் இடியட் என்றிருப்பதை பார்த்து யோசிக்கலானான்.
பின் அது அபிமன்யுவோட எண்தான் என்பதாக யூகித்தபடி அழைப்பு விடுக்க
எதிர்புறத்தில் அபிமன்யு பதட்டத்தோடு "ஹெலோ சூர்யா... என்னாச்சு... என் போஃனை எடுக்கல... அப்புறம் கொஞ்ச நேரத்தில ஸ்விட்ச்ட் ஆஃப்னு வந்துச்சு... ஏதாச்சும் பிரச்சனையா" என்று கேட்க
"நீதான்டா ஒரே பிரச்சனை" என்று ஈஷ்வர் உரைக்க அந்த குரல் யாருடையதென உணர சற்று தாமதமானாலும் அபிமன்யு அடையாளம் கண்டுகொண்டான்.
இவன் ஏன் சூர்யாவின் கைப்பேசியில் பேசுகிறான் என்று சிந்தனையில் அவன் மௌனமாய் இருக்க மீண்டும் ஈஷ்வர் "சூர்யாவோட போஃன்ல இருந்து இவன் ஏன் பேசிறான்னு யோசிக்கிறியா ?" என்று கேட்க
அபிமன்யு கோபமான தொனியில் "போஃனை சூர்யா கிட்ட கொடு... நான் பேசனும்" என்றான்.
"சூர்யாகிட்ட இப்ப பேசெல்லாம் முடியாது... " என்றான்.
அவன் பேச்சும் தொனியும் அபிமன்யுவிற்கு பிடிபடாமல் இருக்க "ஏன் பேச முடியாது... சூர்யா இப்போ எங்க ?" என்று அவன் மீண்டும் அழுத்தமாய் கேட்க
"இதென்ன கேள்வி... என் கூடதான் இருக்கா ... ஊட்டில கெஸ்ட் ஹவுஸ்ல..." என்று ஈஷ்வர் சொன்ன தொனியில் அபிமன்யு ஏதேனும் ஆபிஸ் வேலையா. தன்னிடம் ஒருவார்த்தை சொல்லிருக்கலாமே என எண்ணியபடி அவன் மௌனமாய் இருக்க ஈஷ்வர் மேலும் "ஆபிஸ் வொர்க் எல்லாம் இல்ல அபிமன்யு ... பெர்ஸனலா வந்திருக்கோம்... நானும் சூர்யாவும் மட்டும்... சூப்பர் லொக்கஷன்... கூலான க்ளைம்ட்... செம ரொமான்ட்டிக்கான பிளேஸ்..." என்று சொன்னதும் அபிமன்யுவிற்கு ஒரு கணம் இதயம் நின்றுவிட்டதாய் தோன்ற அவன் சீறியபடி "நிறுத்து ஈஷ்வர்... இந்த கதையெல்லாம் வேறு யார்க்கிட்டாயச்சும் போய் சொல்லு... நான் இதெல்லாம் நம்ப மாட்டேன்... " என்றான்.
ஈஷ்வர் ரொம்பவும் சாதாரணமாக "சரி நம்பாதே... நீ வேணா நேர்லயே வந்து பாத்து தெரிஞ்சிக்கோ" என்று சொன்னதும் அபிமன்யு கோபத்தின் மிகுதியால்"வர்றேன் ஈஷ்வர்... ஆனா இது நீ சொன்ன கதையெல்லாம் நம்பி இல்ல... என் சூர்யாவை நான் பார்க்கனும்... உன்னால மட்டும் அவளுக்கு எதாவது ஆச்சு... நான் உன்னை கொன்னுடுவேன்" என்றான்.
ஈஷ்வர் கலகலவென சிரித்துவிட்டு"நீ போய் என்னை கொல்லப் போறியா... சரி வா.. அதையும்தான் பார்க்கலாம்" என்றான்.
ஈஷ்வரிடம் பேசிவிட்ட பிறகு அபிமன்யுவின் மனம் இருப்பு கொள்ளவில்லை. சூர்யாவிற்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று அவன் கவலையில் மூழ்கியிருக்க சூர்யாவும் அவனை குறித்த சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தாள். அபியிடம் பேச முடியாமல் போன ஏமாற்றத்தை நினைத்து நினைத்து வேதனை கொள்ள அப்போது அவளின் விழிகளின் வழியே எட்டி பார்த்த நீர்துளிகளை வெளிவரவிடாமல் துடைத்தபடி மனதை தேற்றி கொண்டாள்.
சூர்யாவின் அச்சம்
கார் சரமாரியாய் திரும்பி சாலையோர ஒரு பெரிய மரத்தின் மீது மோதி நிற்க, ஈஷ்வர் அந்த விபத்தை எதிர்பார்க்காமல் அதிர்ச்சியில் விழிகளை மூடி ஆசுவாசப்படுத்தி கொண்டு, "தப்பிச்சோம்" என்றான்.
மதி அவன் தோள்களை தொட்டு "பாஸ், ஆர் யூ ஆல் ரைட்" என்று ஈஷ்வரிடம் கேட்டான். கண்களை மூடிக் கொண்டே தலையசைத்தவன் சட்டென்று அவசரமாய் சூர்யாவின் புறம் பார்வையை திருப்பினான்.
அவளோ முன்புறம் தலையை கவிழ்ந்தபடி வீழ்ந்திருக்க உடனடியாக அவள் தலையை தூக்கி இருக்கையில் சாய்த்து படுக்க வைத்தான். வலதுபுறம் நெற்றியில் குருதி வழிந்தபடி இருக்க அவளோ மயக்க நிலையில் இருந்தாள்.
இத்தனை கலட்டாவிலும் சூர்யா அவள் கையில் பிடித்திருந்த கைப்பேசியை விடாமல் பிடித்தபடி இருக்க ஈஷ்வர் அதை கவனித்த மாத்திரத்தில் மெதுவாய் வாங்கி அதனை அணைத்து தன் பேக்கட்டில் நுழைத்து கொண்டான்.
மதி சூர்யாவின் நிலைமையை பார்த்து, "இப்ப என்ன பன்றது பாஸ்... ஹாஸ்ப்பெட்டில் அழைச்சிட்டு போலாமா ?" என்று வினவ,
ஈஷ்வர் தன் கைக்குட்டையால் அவள் நெற்றியில் வழிந்த இரத்தை மெல்ல துடைத்தான்.
பின்னர் மதியிடம் "அவசியமில்ல மதி... பெரிய அடி எல்லாம் இல்ல.. ஜஸ்ட் ஷாக்கில அன்கான்ஸியாயிட்டா?... நீ வந்து டிரைவ் பண்ணு... ஐ வில் டேக் கேர் ஆஃப் ஹெர்" என்று உரைத்துவிட்டு அவளை அந்த சீட்டிலிருந்து லாவகமாய் தூக்கி பின்புற இருக்கையில் சாய்வாய் படுக்க வைத்துவிட்டு அருகில் அமர்ந்து கொள்ள முதல் முறையாய் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவனின் அத்தனை அருகாமையில் அவள் சிலையென கிடக்க அப்படி அரிதாய் கிடைத்த வாய்ப்பில் அவன் அவளின் அழகை திகட்டாமல் ரசித்தபடி இருந்தான்.
அவள் மீதான காதல் ஏற்கனவே அவன் மூளையை மழுங்கடித்திருக்க இப்போது அவளின் மீதான மோகம் அவனை கிறுகிறுக்க செய்து கொண்டிருக்க எப்படியாவது அவளை சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அவனை அப்போது முழுமையாய் ஆட்கொண்டிருந்தது.
*******
எங்கும் இருள் தன் ஆதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்க உடலெல்லாம் உஷ்ணம் பரவிய உணர்வு அவளுக்கு. நெருப்பு தன் கோரப்பிடியில் அவளை சிறையெடுக்க நெருங்கி வந்து கொண்டிருக்க விலகிப் போக முடியாமல் கட்டுண்டு கிடக்க அந்த தீ அவளை விடுவாதாயில்லை. உடலெல்லாம் தீ பரவி பற்றி எரிய வேதனையா வலியா என்று சொல்ல முடியாத உணர்வால் கதறலோடு அவசரமாய் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள் சூர்யா. தான் இன்னும் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வை உண்டாக்க தன் தேகத்தை தடவி தடவி பார்த்தாள். அந்த நெருப்பின் உஷ்ணத்தின் தாக்கம் அவளை நீங்காமல் இருக்க மேல் மூச்சும் ,கீழ் மூச்சும் வாங்க தொண்டையெல்லாம் வரண்டு போக தொடங்கியிருந்தது.
சூர்யா "தண்ணி... தண்ணி" என்று கேட்ட நொடி அவள் முன்னாடி நீண்ட அந்த டம்ளரின் தண்ணீரை அவசரமாய் வாங்கி மடமடவென குடித்தாள்.
அப்போது மரணத்திவிட்டு மீண்டும் உயிர்த்தெழுந்து வந்ததை போல் எண்ணி லேசாய் அச்சம் நீங்கியபடி அமர்ந்திருக்க அந்த நொடி வெகுதூரத்திலிருந்து ஒரு குரல் "சூர்யா ஆர் யூ ஆல்ரைட் நவ்?" என்று கேட்டு கொண்டிருந்தது.
அந்த குரல் மீண்டும் மீண்டும் சூர்யா என்று அழைப்பு விடுக்க அப்போதே அவள் தன் நினைவுகளை மெல்ல மெல்ல மீட்டெடுக்க தொடங்கினாள். சட்டென்று அவளுக்கு அதிர்ச்சி தரும் விதமாய் அவளின் தோள்களை இரு வன்மையான கரங்கள் உலுக்கியபடி "என்னாச்சு சூர்யா... வாட் ஹேப்பன் ?" என்றதும் அவள் உணர்வுகள் உயிர்ப்பெற அவளை உலுக்கியது ஈஷ்வரின் கரங்கள் என்று அறிந்து நொடி வெடுக்கென அவன் கரத்தை தள்ளிவிட்டு பின்னோடு நகர்ந்தாள்.
அவனின் தொடுகையை விடவும் அப்போது உண்டான நெருப்பின் உஷ்ணமே பரவாயில்லை என்று அந்த நிமிடம் தோன்ற அப்போதுதான் அந்த இடத்தை அவள் விழிகள் ஆராயத் தொடங்கின.
அந்த விசாலமான அறையில் சுற்றிலும் வெள்ளை நிறத் திரைசீலைள் அசைந்து கொண்டிருக்க, கண்ணாடி ஜன்னல்கள் வழியாக மங்கலான சூர்யனின் கதிர்கள் எட்டிப்பார்த்திருந்தது. அப்போதுதான் தான் அகலமான மெத்தையின் மீது அமர்ந்திருக்கிறோம் என்பதை பற்றி அறிந்ததும் இது எந்த இடம் என அவள் யோசிக்க, அப்போது எதிரே நின்று ஈஷ்வர் கைகட்டியபடி "என்னாச்சு சூர்யா... ஏதாச்சும் கனவு கண்டியா ?" என்று வினவினான்.
சூர்யாவும் அப்போது தான் கண்டது கனவா என்று சிந்தித்திபடி நெற்றியில் கைவைக்க லேசான வலி உண்டானது. ஒட்டியிருந்த பிளாஸ்ட்ரியை உணர்ந்தவள் அவள் நெற்றியில் காயம்பட்டிருப்பதை அறிந்தவுடன் அவர்கள் வந்து கார் விபத்துக்குள்ளனதை நினைவுப்படுத்தி கொண்டாள்.
உடனடியாக எதிரே நின்ற ஈஷ்வரை அவள் கோபமாய் முறைக்க சூர்யாவின் பார்வையின் பொருளை புரிந்தவன் அவசரமாய் அவளிடமிருந்து தப்பிக்க, "ஒகே நீ ரெஸ்ட் எடு... அப்புறம் பார்க்கலாம்" என்று சொல்லி அறைக் கதவை நோக்கி நடக்க "ஈஷ்வர் நில்லு" என்ற அவளின் அழுத்தமான அழைப்பிற்கு அவன் கால்கள் வேறுவழியின்றி நகராமல் நின்றன.
சூர்யா படுக்கையில் இருந்து எழுந்து நின்றபடி "உன்னை நம்பி வந்ததுக்கு நீ நல்லா செஞ்சிட்ட ஈஷ்வர்...ஆனா நான் எதிர்பார்த்தேன்... நீ இப்படி ஏதாச்சும் ஏடாகூடமா பண்ணுவேன்னு" என்று கேட்டதுமே அவனும் அதே கோபத்தோடு
"இப்ப என்னாயிடுச்சுன்னு இந்த குதி குதிக்கிற... " என்றான்.
சூர்யா வெறுப்பாய் பார்த்து, "என்னை ஏன்டா அபிகிட்ட பேச விடாம பண்ண... எங்கடா என் போஃன்... ஒழுங்கா என் போஃனை கொடுத்துட்டு போ" என்றாள்.
"உன் போஃனை என்கிட்ட கேட்டா ?" என்று அவன் அலட்டிக் கொள்ளாமல் பதில் சொல்ல சூர்யாவின் கோபம் அதிகரித்தது.
"நீதானடா கார்ல இருக்கும் போது அபியோட பேசவிடாம என் போஃனை பிடுங்கின... ராஸ்கல்... "
ஈஷ்வர் அவளின் வார்த்தைகளை தாங்க இயலாமல் "என்னடி திமிரா? " என்று கோபத்தோடு அவன் கை ஓங்கி கொண்டு வர அவள் கைகட்டிக் கொண்டு அசராமல் நின்றிருந்தாள்.
ஏனோ ஓங்கிய கை அவளை அடிக்க மறுக்க சூர்யா அவனை முறைத்தபடி "அடி... இன்னும் அது ஒண்ணுதான் நீ செய்யல அதையும் செஞ்சிரு" என்றாள்.
ஈஷ்வர் ஓங்கிய கையை இறக்கிவிட்டு
"ஆமாம்... நான்தான்டி உன் போஃனை வைச்சிருக்கேன்... என்னடி பண்ண முடியும் உன்னால" என்று திமிராய் கேட்க
சூர்யா எரிச்சலோடு "நீ ரொம்ப ஓவரா போயிட்டிருக்க ஈஷ்வர்" என்று சொன்ன நொடி அவனும் கோபமாய் அவளை நோக்கி
"யாருடி ஓவரா போறது.... நானா இல்ல நீயா ?!... என்னை பத்தி எங்க மாமுக்கு கால் பண்ணி கம்பிளைன்ட் பன்ன இல்ல... அதுக்காகவே நீ என்ன கெஞ்சினாலும் உனக்கு உன் போஃன் கிடைக்காதுடி... " என்றான்.
"நீ செஞ்சதைதானே சொன்ன... அது தப்பா ?"
" ஆமாம் தப்புதான்டி.. நீ செஞ்ச வேலையால எங்க அம்மாவை நான் ரொம்ப கஷ்டபடுத்தி பேசிட்டேன்.. இதுவரைக்கும் அவங்க சொல்லி நான் எதையும் மறுத்ததில்லை... முதல் தடவையா... எல்லாம் உன்னாலதான்டி..." என்றான்.
"ஸ்டாப் இட் ஈஷ்வர்... தப்பை எல்லாம் நீ செஞ்சிட்டு பழியை தூக்கி என் மேல போடிறியா..." அவர்களுக்கான இடையிலான விவாதம் எல்லையை மீற ஈஷ்வர் அதை தவிர்க்க எண்ணி
"உன்கிட்ட சண்டை போடற மூட்ல நான் இல்ல... நான் கிளம்பிறேன்" என்றான்.
"நீ எங்கயாச்சும் போய் தொலை... பட் என் போஃனை கொடுத்துட்டு போ" என்று அவள் கேட்க அவன் திரும்பாமலே
"நாட் பாஸ்ப்பிள்... நீ அந்த அபிமன்யுகிட்ட பேசிறதுக்கு நான் விடமாட்டேன்" என்று அவன் தீர்க்கமாய் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேற போக சூர்யாவால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அபிமன்யு அழைத்தும் தான் அவனிடம் பேச முடியாமல் போனதே என மனதெல்லாம் பாரமாய் அழுத்த
"ஈஷ்வர் ஜஸ்ட் அ மினிட்..." என்றதும் அவன் நகராமல் அவளை நோக்கி தன் பார்வையை வீச சூர்யா தவிப்போடு தயங்கி நின்றாள்.
அவனிடம் இரங்கிப் போவதை காட்டிலும் உயிரையும் விட்டுவிடாலும் என்ற போதும் அபிமன்யுவுக்காக என்ற எண்ணத்தை மனதில் கொண்டு "ஒகே ஈஷ்வர்... நான் உன் வழிக்கே வர்றேன்... நீ என் போஃனை தர வேண்டாம்... நானும் அபிகிட்ட பேசல... பட் அபியோட வாய்ஸை மட்டும் கேட்டுக்கிறேன்... ஜஸ்ட் அபி ஹெலோன்னு சொல்றதை மட்டுமாச்சும்" என்று அவள் கெஞ்சலாய் கேட்க அந்த நொடி ஈஷ்வருக்கு எந்தளவுக்கு கோபமும் எரிச்சலும் உண்டானதெனில் அதனை அவளிடம் காண்பிக்க முடியாமல் அந்த அறைகதவினை படாரென மூடிவிட்டு வெளியேறினான்.
அவனுக்காக அவள் யாருக்காகவும் விட்டுகொடுத்திடாத கர்வத்தையும் விட்டு இறங்கிவருகிறாள் எனில் அப்படி என்ன அவன் மீது அவளுக்கு என்று வெறுப்பு உண்டானது. அவன் அவளின் மனதில் இந்தளவுக்கு இடம்பிடித்திருப்பான் என்பதை ஈஷ்வர் ஏற்று கொள்ள இயலாமல் அவனுக்குள் பொறாமை தீ வேகமாய் படர தொடங்கியது.
எல்லாவற்றையும் கடந்து அபியிடம் சூர்யா கொண்டுள்ள காதலை உணர்ந்த அந்த கணம் தான் அபிமன்யுவாக பிறந்திருக்க கூடாதா? என்ற ஏக்கம் ஏற்பட்டதை அவனால் தவிர்க்கவே முடியவில்லை.
ஈஷ்வர் அந்த சமயத்தில் அவன் பேன்ட் பாக்ட்டில் இருந்த சூர்யாவின் கைப்பேசியை எடுத்து ஆன் செய்தவன் அதில் கடைசி அழைப்பின் எண் இடியட் என்றிருப்பதை பார்த்து யோசிக்கலானான்.
பின் அது அபிமன்யுவோட எண்தான் என்பதாக யூகித்தபடி அழைப்பு விடுக்க
எதிர்புறத்தில் அபிமன்யு பதட்டத்தோடு "ஹெலோ சூர்யா... என்னாச்சு... என் போஃனை எடுக்கல... அப்புறம் கொஞ்ச நேரத்தில ஸ்விட்ச்ட் ஆஃப்னு வந்துச்சு... ஏதாச்சும் பிரச்சனையா" என்று கேட்க
"நீதான்டா ஒரே பிரச்சனை" என்று ஈஷ்வர் உரைக்க அந்த குரல் யாருடையதென உணர சற்று தாமதமானாலும் அபிமன்யு அடையாளம் கண்டுகொண்டான்.
இவன் ஏன் சூர்யாவின் கைப்பேசியில் பேசுகிறான் என்று சிந்தனையில் அவன் மௌனமாய் இருக்க மீண்டும் ஈஷ்வர் "சூர்யாவோட போஃன்ல இருந்து இவன் ஏன் பேசிறான்னு யோசிக்கிறியா ?" என்று கேட்க
அபிமன்யு கோபமான தொனியில் "போஃனை சூர்யா கிட்ட கொடு... நான் பேசனும்" என்றான்.
"சூர்யாகிட்ட இப்ப பேசெல்லாம் முடியாது... " என்றான்.
அவன் பேச்சும் தொனியும் அபிமன்யுவிற்கு பிடிபடாமல் இருக்க "ஏன் பேச முடியாது... சூர்யா இப்போ எங்க ?" என்று அவன் மீண்டும் அழுத்தமாய் கேட்க
"இதென்ன கேள்வி... என் கூடதான் இருக்கா ... ஊட்டில கெஸ்ட் ஹவுஸ்ல..." என்று ஈஷ்வர் சொன்ன தொனியில் அபிமன்யு ஏதேனும் ஆபிஸ் வேலையா. தன்னிடம் ஒருவார்த்தை சொல்லிருக்கலாமே என எண்ணியபடி அவன் மௌனமாய் இருக்க ஈஷ்வர் மேலும் "ஆபிஸ் வொர்க் எல்லாம் இல்ல அபிமன்யு ... பெர்ஸனலா வந்திருக்கோம்... நானும் சூர்யாவும் மட்டும்... சூப்பர் லொக்கஷன்... கூலான க்ளைம்ட்... செம ரொமான்ட்டிக்கான பிளேஸ்..." என்று சொன்னதும் அபிமன்யுவிற்கு ஒரு கணம் இதயம் நின்றுவிட்டதாய் தோன்ற அவன் சீறியபடி "நிறுத்து ஈஷ்வர்... இந்த கதையெல்லாம் வேறு யார்க்கிட்டாயச்சும் போய் சொல்லு... நான் இதெல்லாம் நம்ப மாட்டேன்... " என்றான்.
ஈஷ்வர் ரொம்பவும் சாதாரணமாக "சரி நம்பாதே... நீ வேணா நேர்லயே வந்து பாத்து தெரிஞ்சிக்கோ" என்று சொன்னதும் அபிமன்யு கோபத்தின் மிகுதியால்"வர்றேன் ஈஷ்வர்... ஆனா இது நீ சொன்ன கதையெல்லாம் நம்பி இல்ல... என் சூர்யாவை நான் பார்க்கனும்... உன்னால மட்டும் அவளுக்கு எதாவது ஆச்சு... நான் உன்னை கொன்னுடுவேன்" என்றான்.
ஈஷ்வர் கலகலவென சிரித்துவிட்டு"நீ போய் என்னை கொல்லப் போறியா... சரி வா.. அதையும்தான் பார்க்கலாம்" என்றான்.
ஈஷ்வரிடம் பேசிவிட்ட பிறகு அபிமன்யுவின் மனம் இருப்பு கொள்ளவில்லை. சூர்யாவிற்கு என்னாச்சோ ஏதாச்சோ என்று அவன் கவலையில் மூழ்கியிருக்க சூர்யாவும் அவனை குறித்த சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தாள். அபியிடம் பேச முடியாமல் போன ஏமாற்றத்தை நினைத்து நினைத்து வேதனை கொள்ள அப்போது அவளின் விழிகளின் வழியே எட்டி பார்த்த நீர்துளிகளை வெளிவரவிடாமல் துடைத்தபடி மனதை தேற்றி கொண்டாள்.