அருமையான கதைக்களம்.....அழகான நடை....
ஆரம்பம் முதலே ஏனோ ருத்ரதேவனை என்னால் வெறுக்க முடியவில்லை..... ஆகச்சிறந்த குணாளனாய், திறமையானவனவனாய், உண்மையான அன்பு கொண்டவனாய் பதிந்த அவனின் தலைகீழ் மாற்றம் அக்னீஸ்வரியின் பெயரால் விதி ஆடிய விளையாட்டு....
ருத்ரதேவன் அக்னீஸ்வரியை சந்திக்காமல் இருந்திருந்தால், அவன் சிறந்த அரசனாகி இருந்திருப்பான்...
அக்னீஸ்வரி ருத்ரதேவனைக் கண்டு மயக்கம் கொள்ளாமல் இருந்திருந்தால், அவளது வாழ்வு வேறு கோணத்தில் பயணித்திருக்கும்...
அவள் பெற்றோரிடம் ஒரே ஒரு முறை தன் நிலையை கூறி இருந்திருந்தால், அவர்கள் திருமணத்தைப் பற்றி யோசித்து இருந்திருக்கலாம்...
விஷ்ணுவர்தன் அக்னீஸ்வரி திருமணத்தை ருத்ரதேவன் ஏற்க முற்பட்டு இருந்திருந்தால், மூவரது வாழ்வும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்....
இது இப்படித்தான் என்று புரிந்தாலும், இந்த எண்ணங்கள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.....
இதே போல் நம் மக்களும் நம் சிறப்பை வளத்தை அறிந்து அவற்றை காக்க முயன்றிருந்தால், நாம் இவ்வுலகிற்கே இன்று வழிகாட்டியாய் இருந்திருப்போம்....
இருந்திருந்தால் என்ற வார்த்தை
மட்டும் இல்லாமல் போயிருந்தால் பல ஏமாற்றங்களை தவிர்த்திருக்கலாம் அல்லவா ....
ஆசைகளோடு மாண்டு, அதை அடைய மீண்டும் உயிர்த்தெழுந்து
சந்திரனாய் குளிர்வித்து
சூரியனாய் அவளை சுழற்றும் இந்த முடிவு மிக அருமை..... அவளின் காதலும் அவனே... அவளின் எதிரியும் அவனே....
உங்கள் எழுத்துகளிலிருந்து மீள விரும்பவில்லை..... இன்னும் மூழ்கிடவே ஆசை கொள்கிறேன்.... படைப்புகள் பல இயற்ற வாழ்த்துக்கள் மோனி டியர்