"உண்மைக்குத் தான் இந்த உலகத்துல்ல மதிப்பு இல்லையே. அப்போ பொய்யா வாழறதல என்ன தப்பு?" அருமையான சிந்திக்க வைக்கும் கேள்வி... போலிகளுக்கான களமிதில் நிஜங்கள் நசுக்க படுகின்றன...தன்னை காத்துக்கொள்ள நிஜமும் நிழலாக மாற வேண்டிய கொடுமை..
தாய்மையும் காதலும் ஒன்றுதான்.. எவ்வளவு தடுத்தாலும்.. அன்பென்ற ஜீவநதி. வெளியே பொழியத்தான் செய்யும்,..
விணையடி நீ எனக்கு இந்த பாட்டு ரொம்ப பாதிக்குது மோனி... அவ கண் இல்லாமலே இருந்திருக்கலாம்...
இருள் அவள் கண்களை சூழ்ந்த நொடி அவள் மனதில் ஆயிரம் ஆயிரம் மத்தாப்பூக்கள்.. இன்று காண்கிறாள் வானவேடிக்ககை இருளான மனதுடன்..
அவளை கவர்ந்த குரல், அவளால் மகிழ்ந்த குரல், காந்தமாய் அவள் காதலை ஈர்தத குரல், அவளை அவளாக நேசித்த குரல்..நெகிழியாய் அவள் மனதில் மக்காமல் நெகிழ்வோடு கலந்த மகிழின் நினைவுகள்... நான் அவள் இல்லை என்றது வாய் மட்டுமே... நான் அவனின் அவள் என்றது அத்தனை செல்களும்..
இதே எத்தனை கொடுமை..
காதலை தவற விட்ட தவிப்பில் ஒரு மனம்
தவறிய காதலை எண்ணி தவிக்கின்ற ஒர் மனம்
தன் காதலே தன்னை தவிர்த்து விடுமோ என தவிப்புடனே ஒர் மனம்...
இவர்களின் தவிப்பில் தவிக்கிறது என் மனம்..
பாரதி இவர்களை நினைத்து தான் எழுதினானோ?
"வெண்ணிலவு நீ எனக்கு,மேவு கடல் நானுனக்கு" ஆமாம் கடலோடு வாழும் வெண்ணிலா, அதன் தாக்கம் கண்டு பொங்கும் ஆழி.. ஆனால் ஆழியால் அந்த நிலவின் பிம்பத்தை மட்டுமே தொட முடியும் நிஜத்தையல்லவே..
அருமை மோனி...