கோபம் இயலாமை தாபத்தில் முடிந்தது.. கூடல் இனிமை தான் ஆனால் அவளின் மீதுள்ள வெறுப்பு இவளின் இல்லற வாழ்வின் பிள்ளையார் சுழியானதே!!.. இன்பத்திலும் , பரஸ்பர காதலிலும் தொடங்க வேண்டிய விஷயம்... தன் கோபத்தின் வடிகாலானதே.. மகிழ் இதில் உங்கள் எவருக்கும் மனதளவில் மகிழ்ச்சி இல்லையே.. அச்சசோ சாக்ஷி யின் விபத்து இவனுக்கு தெரியாமலே போகட்டும்.. பிரிவிலும் கோபத்திலும் கூட அவள் நினைவிலிருந்து தப்பிக்க தெரியாமல் தவிப்பவனால், உண்மை தெரிந்தால் நாணி கூனி விடுவானே..கோபம் கொடியது என்பது எவ்வளவு உண்மை, கோபத்தில் நம்மையறியாமல் நம் உள்மனது பேசிவிடும் இன்று அவளின் காதலை சொன்னது போல்.. சாக்ஷியின் காதலை கேவலப்படுத்த எண்ணி அவன் அவனையே தண்டித்துகொண்டான் ... ஒரே நல்ல விஷயம் அவன் தன் கணவன் என்ற நிலையை நிலை நிறுத்தியுள்ளான்.. கனமான பகுதி மோனி...