niceஅவன் அவளை பார்க்காமலே அவள் எண்ண ஓட்டத்தை அறிந்து "கிஃப்ட் பிடிச்சிருக்கா ஜென்னி ?!" என்று கேட்டான்.
அவள் கண்களில் நீர் சூழ்ந்து கொண்டது.
அவன் மீண்டும் "ஜென்னி" என்றழைக்க "ஹ்ம்ம்ம்" என்றாள்.
"ஹ்ம்ம்னா... பதில் சொல்லு" என்றான்.
அவள் உடனே விழி நீரை துடைத்தபடி "எனக்கு இந்த கிஃப்ட் வேணா? நான் திருப்பி அனுப்பிடிறேன்" என்றாள்.
"இது ஒண்ணும் என் காதல் பரிசில்ல... ஒரு நண்பனோட பரிசு... நம்ம பெயரையும் பெற்ற குழந்தைகளையும் கூட மறக்கலாம் ... ஆனா நாம கத்துகிட்ட கலை... மரணம் வரைக்கும் மறக்காது... நீ இந்த கிஃப்டை திருப்பி அனுப்பினா அது என் நட்பை நிராகரிக்கிற மாதிரி... அப்புறம் உன் இஷ்டம்" என்று அழுத்தமாய் சொல்ல,
ஜென்னி வேதனையோடு "ஏன் இப்படி என்னை எல்லா விஷயத்திலயும் லாக் பன்றீங்க ? ப்ளீஸ் இந்த க்ஃப்ட் எனக்கு வேண்டாம்... நான் பழைய விஷயங்கள் எதையும் நினைச்சு பார்க்க கூட விருப்பப்படல" என்று வினவினாள்.
"நீ சாக்ஷி இல்லன்னு சொன்னாலும் சாக்ஷியோட நினைவுகள் உன்னை விட்டு போகாது... அதை நீ சுமந்துதான் ஆகனும்... அதுவும் இல்லாம இது நீ ஆசைப்பட்டு கத்துகிட்ட கலை... இதை நீ நிராகரிக்க கூடாது ?" என்று அவன் அதிகாரமாய் உரைக்க, அவள் மனமெல்லாம் வேதனை சூழ்ந்து கொண்டது.
"ஏன் டேவிட் என்னை இப்படி இமோஷனலா வீக்காகிறீங்க ?" என்று அவள் அழாத குறையாக கேட்க,
"நிச்சயமா இல்ல... உன் பலம் எது பலவீனம் எதுன்னு நீ புரிஞ்சிக்கனும்னு நினைக்கிறேன்... முக்கியமா நான் எது பண்ணாலும் உனக்காகவும் உன் நல்லதுக்காகவும்தான்"
"வேண்டாம்... எனக்காக நீங்க எதுவும் பண்ண வேண்டாம்" எரிச்சல் மிகுதியோடு அவள் சொல்ல,
"உனக்காகன்னா அது எனக்காகவும்தான்... அதை நீ எப்போ புரிஞ்சிக்க போற" என்று அவன் சூசகமாக சொல்ல,
"டேவிட்" என்று அவள் கோபமாய் பல்லை கடித்தாள்.
"உன் ப்ரண்ட் மாயாவுக்காக உன் உயிருக்குயிரான உன் காதலனை விட்டு கொடுத்த... எனக்காக உன் காதலை கொடுக்க கூடாதா ?!"
அவன் சொன்னதை கேட்டவள் தலையில் கைவைத்தபடி அமர்ந்து கொள்ள அவன் மேலும் "எனக்கு பெரிசா ஆசையெல்லாம் இல்லை ஜென்னி... நீ நான் நமக்குன்னு ஒரு அஞ்சு ஆறு பசங்க... அவ்வளவுதான்" என்றதும் அதிர்ந்தவள்,
"வாட் ? அஞ்சு ஆறா" என்று கேட்க,
"சரி... அப்போ ஒரு நாலு மூணு"
"ரொம்ப ஓவரா போறீங்க"
"அப்போ இரண்டே போதுங்கிறியா?!" என்று கேட்க அவள் "டேவிட் என்னை டென்ஷன் படுத்தாம போஃனை வைக்கிறீங்களா ?" என்று கேட்க,
"சரி நான் வைக்கிறேன்... ஆனா நீ யோசிச்சி சொல்லு..." என்றான்.
"என்ன யோசிக்கனும் ?"
"எத்தனை பசங்கன்னுதான் ?"
"அய்யோ டேவிட்... ப்ளீஸ்" என்று அவள் கடுப்பாக,
"ஓகே ஒகே... ஐ வில் கால் யூ லேட்டர்" என்று சிரித்தபடி அழைப்பை துண்டித்தான்.
அவள் பார்வை அந்த நொடி வீணையின் புறம் திரும்பியது.
'நான் விரும்பின எல்லாத்தையும் உதறிட்டேன்... நீ மட்டும் என் கூட இருந்து என்ன பண்ண போற ?' என்று அவள் விரக்தியான பார்வையோடு கேட்க, அது ஊமையாகவே இருந்தது.
'நீ பேச மாட்ட... ஏன்னா உன்னை நான் தொட மாட்டேன்.' என்றாள்.
அவளுக்கு தெரியும், அவள் தொட்டால் மட்டுமே அது உயிர் பெறும்.
தொட மாட்டேன் என்று சவாலாய் உரைத்தவளுக்கு தெரியாது. சில மணிநேரங்கள் கூட அவளின் சாவலை அவளால் காப்பாற்ற முடியாமல் போகும் என்று.
இரவு படுத்துறங்கும் போது அவளால் ஏனோ உறங்க முடியவில்லை.
அவள் அறையிலிருந்த வீணை அவளை அழைக்காமல் அழைத்துக் கொண்டிருந்தது.
பெற்ற குழந்தையை கண்ட தாய் அதனை எத்தனை நேரம் நிராகரிக்க முடியும்.
ஆரத்தழுவி கொள்ள துடித்த அவள் மனதை கட்டுக்குள் வைக்க முடியாமல் தவிப்புற்றாள்.
அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல் அவள் எழுந்து வந்து அந்த வீணையின் தந்திகளை விரலால் மீட்ட அது ரீங்காமரிட்டு அவள் உணர்வுகளை எழுப்பிவிட்டது.
அந்த நொடியே அமர்ந்து தன் மடியில் அந்த வீணையை கிடத்தினாள்.
வெகு நாட்கள் பிரிந்த குழந்தையை மடியில் கிடத்தி முளைப்பால் தரும் போது அது அந்த தாய்க்கு எத்தகைய இன்பத்தை நல்கும் என்று வார்த்தைகளால் சொல்லி புரிய வைக்க முடியாது.
அப்படிதான் இருந்தது அவள் உணர்வுகளும்...
உயிரற்ற அந்த வீணையை அவள் மீட்டிய நொடி அது உயிர்பெற்று அவளுக்குள் மூழ்கியிருந்த உணர்வுகளை வெளிக் கொணர, காதலும் சோகமும் ஏக்கமும் தீராத ஆசைகளும் தவிப்புகளும் அவள் விரலின் வழியே அந்த வீணையின் நரம்புகளில் ஊடுருவி உருவாக்கிய இசையை கேட்போர் யாராயினும் உருகி மருகிதான் போவர்.
Hi friends,
உங்க கருத்துக்களை எல்லாம் படித்தேன்.
நன்றி நன்றி நன்றி.
உங்கள் பயம் எனக்கு நன்கு புரிகிறது.
அடுத்த அடுத்த பதிவுகள் இன்னும் விறுவிறுப்பாக வந்து சேரூம்.
அதே நேரம் வரும் பதிவுகளை குறித்து எந்த வித யூகங்களும் கொள்ள வேண்டாம்.
வரும் பதிவுகள் எங்கே தொடங்கி எங்கே முடியுமென்று நீங்கள் நிச்சயம் யூகிக்க முடியாது.
Its unpredictable!
Thank u all,
Pls click like buttons
song for maya and magizh