Saranya
அமைச்சர்
Super..
sry enaku rommba kastama pochu"மாயா" என்றழைத்தான்.
"போயா" என்று சொல்லிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியேறியவளை "மாயா ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளேன்" என்று அவளை அழைத்தபடி பின்தொடர,
அவள் அவனை கவனிக்காதது
போல் சென்று சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
அந்த நேரம் ஞானசேகரன் சோபாவில் அமர்ந்தபடி "மகிழ்" என்றழைக்க, அவர் குரலை கேட்டு படபடத்தவன்,
"அப்பா" என்று அவர் முன்வந்து அடக்கமாய் நின்றான்.
"என்னடா ஏதாச்சும் பிரச்சனையா ?" என்று கேட்ட மறுகணமே "சேச்சே அப்டி எல்லாம் இல்லப்பா... என் கூலர்ஸை காணும்னு அவளை கேட்டிட்டிருந்தேன்" என்று சமாளித்து அவர்கள் பிரச்சனையை காட்டிக் கொள்ளாமல் இருக்க,
"வேறெதுவும் இல்லையே...?!" என்று அவர் சந்தேகித்து கேட்டார்.
"உம்ஹும்" என்று அவன் வேகமாய் இடமும் புறமுமாய் தலையசைத்து மறுத்தான்.
சற்று யோசனையில் ஆழ்ந்தவர் மீண்டும் "இல்லடா... இத்தனை நாளா நீங்க மாயா வீட்டிலதான் இருந்தீங்க... இப்போ இங்கயே இருக்கீங்க... அது ஏதாச்சும்" என்று அவர் தயக்கத்தோடு கேட்க,
மாயா காபியோடு வந்து "அதேல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை மாமா" என்றவள் காபியை அவர் கரத்தில் கொடுக்க,
"அது சரிதான்... ஆனா நீங்க தீடிர்னு இங்க வந்திட்டீங்க... உங்க அம்மா அப்பா மனசுக்கு கஷ்டமா இருக்கும் ல" என்றுரைத்து காபியை பருக,
மகிழ் அவரிடம் "அதெல்லாம் ஆன்ட்டி ஹங்கிள்கிட்ட நான் பேசிட்டேன் ப்பா.. நீங்க ஒண்ணும் மனசு சங்கடப்பட வேண்டாம்... நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க போதும்" என்றான்.
"ஆமாம் மாமா... நீங்க அந்த கவலையெல்லாம் விடுங்க... உங்க உடம்பை மட்டும் பார்த்துக்கோங்க" என்று அவளும் சேர்ந்து கொண்டு உரைத்தாள்.
அவர் மூச்சை இழுத்துவிட்டபடி "என் உடம்பை பார்த்துக்கிறது இருக்கட்டும்... உங்க அம்மாவை பாரு... சதாசர்வகாலமும் அந்த தரூதலையை பத்தியே நினைச்சி அழுதுட்டிருக்கா ?!"என்றார்.
அத்தனை நேரம் தள்ளிநின்று அவர்கள் சம்பாஷணையை கேட்டு கொண்டிருந்த வள்ளயம்மை அதிர்ந்து "அப்படி எல்லாம் இல்லங்க" என்று மறுக்க
அவரே மேலும் "நீ இராத்திரி எல்லாம் அவனை பத்தி நினைச்சி அழுதிட்டிருக்கிறது எல்லாம் எனக்கு தெரியாதாக்கும்" என்றவர் சொல்ல மகிழ் அந்த நேரம் தன் தாயை நோக்கினான்.
அவர் முகமெல்லாம் வாட்டமுற்றிருந்தது. ஞானசேகரன் மகனிடம்,
"அவன் எங்க என்னன்னு விசாரி... அவன் எங்க இருக்கான் என்னன்னு தெரிஞ்சா... அவ மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும் பாரு" என்க,
மகிழ் தன் தந்தையிடம் "நான் ஆல்ரெடி என் ஆபிஸ் ரிப்போர்ட்டர்ஸ் மூலமா விசாரிச்சிட்டுதான் இருக்கேன்... சரியான க்ளு எதுவும் கிடைக்கல... அண்ணனோட போஃன் ஸ்விட்ச்ட் ஆஃப்லதான் இருக்கு... ஆனா அண்ணன் ரீஸ்ன்ட்டா அவன் பேங்க் அகௌன்ட்ல இருந்து பணம் எடுத்திருக்காருன்னு மட்டும் தெரிஞ்சிது" என்றான்.
ஞானசேகரன் மனைவியை பார்த்து கொஞ்சம் கோபமாக "கேட்டுக்கோ... உன் சீமந்த புத்திரன் எல்லாம் எங்கயோ நல்லபடியாதான் இருக்கான் ?!" என்று சொல்ல உண்மையிலயே வள்ளியம்மைக்கு நிம்மதி பெருமூச்சுவந்தது.
மாயா அவர்கள் உரையாடல்களுக்குள் இடையில் "சரி பேசிட்டு டிபன் சாப்பிட வாங்க" என்று கணவனை பார்த்தும் பார்க்காமல் அழைப்பு விடுத்தாள்.
அவனும் பேசி முடித்த பின் காலை உணவு உண்ண அமர்ந்தவன் தன் மனைவியின் ஒற்றை கடை கண் பார்வைக்காக ஏதேதோ செய்து பார்த்தான்.
ஆனால் அவளோ ஏன் பார்ப்பேன் என்பது போல் பிடிவாதமாய் இருந்தாள்.
அவன் வாசலில் வழியனுப்ப வந்த போதும் அவள் வேண்டா வெறுப்பாய் நிற்க "மாயா ப்ளீஸ்" என்று கெஞ்சலாய் பார்த்தான்.
"ஹ்ம்ம் கிளம்புங்க" என்று அவள் பார்வையை எங்கோ வெறித்தாள்.
அவள் விழியில் நீர் தேங்கியிருந்தது.
அவள் மனதை புரிந்து அவள் கரத்தை பற்றி கொண்டவன்
"புரிஞ்சிக்கோ மாயா... சாக்ஷி இனிமே என் வாழ்க்கையில இல்லைங்கிறது இனிமே யார் நினைச்சாலும் மாற்ற முடியாத உண்மை..." என்று சொல்லியவனை அவள் அந்த சமயம் திரும்பி நோக்க அவன் விழியும் கலங்கியிருந்தது.
அவன் மேலும் "அதே அளவுக்கு இன்னொரு உண்மை இருக்கு" என்க,
அவனை மௌனமாய் ஏறிட்டாள்.
அவள் இருகரத்தையும் கோர்த்தவன், "அது.... நீதான் என் வாழ்க்கையோட எல்லாங்கிறது... நீயில்லாம நானில்லை... இதுக்கு மேல நான் என்ன சொல்ல?" என்று உணர்வுபூர்வமாய் அவன் உரைக்க மாயா நெகிழ்ந்து போனாள். அவள் விழியில் தாரை தாரையாய் கண்ணீர் பெருகி ஓடியது.
அப்போது அவன் அவளிடம் "சரி நான் கிளம்பட்டுமா? ... லேட்டாகுது" என்றான் அவள் கரத்தை விடாமலே !
"ஹ்ம்ம்" என்று தலையசைத்தாள் அவளும் வழியனுப்ப மனமில்லாமலே !
சில நொடி மௌனங்களுக்கு பிறகு "டைமாச்சுங்க" என்று மாயா சொல்லவும் அவள் கரத்தை விட்டு ஏக்கபெருமூச்சை வெளிவிட்டவன்,
புறப்பட யத்தனித்தவன் மீண்டும் அவள் புறம் திரும்பி"நான் கொஞ்ச நாளா ஒரு விஷயத்தை மிஸ் பன்றேன்... அதை நீ தர முடியுமா ?" என்று கேட்க,
"என்னது மகிழ்?" என்று ஆவல் பொங்க பார்த்தாள்.
"என்னோட பெஸ்ட் ப்ரண்ட் மாயாவை... அவளை நான் ரொம்ப மிஸ் பன்றேன்... என் பீஃலிங்க்ஸ் என் கஷ்டம் நஷ்டம் எல்லாத்தையும் அவகிட்டதான் வெளிப்படையா கொட்டுவேன்... " என்றவன், "எனக்காக அவளை கொஞ்சம் தேடி கொடு" என்று மனவருத்தத்தோடு சொல்லிவிட்டு தன் காரில் ஏறி அகன்றுவிட்டான்.
அவன் அவ்விதம் சொல்லிவிட்டு போக அவள் மனம் குற்றவுணர்வில் ஆழ்ந்தது.
அவனின் உயர்வான காதலை பற்றி அறிந்திருந்தும் அவன் வேதனைகளுக்கு ஆறுதலாய் தோள் கொடுக்காமல் தானும் சேர்ந்து அவனை காயப்படுத்துகிறோம் என்று எண்ணிக் கொண்டு அந்த நொடி வருத்தமுற்றாள்.
மாயா மட்டுமே அல்ல.
யாருமே காதலையும் நட்பையும் சரிவிகதத்தில் காட்டுவது சிரமம்தான்.
இரு உறவும் ஒரே கூட்டில் இருக்குமாயின் இரண்டில் எதாவது ஒன்று மட்டுமே இறுதியாய் சஞ்சரிக்கும். அது பலநேரங்களில் காதலாக மட்டுமே இருக்கும்.
ஆனால் டேவிட் சற்று முரண்பட்டு தன் காதலுக்கு பதிலாய் தன் நட்பை காத்து கொள்ள எண்ணிக் கொண்டிருந்தான்.
அதற்கு காரணம் ஜென்னி சென்னை வருவதாகவும் ரூபா தன்னோடு வராததால் தான் அவனோடு தங்கப் போவதாக தகவல் அனுப்ப, அவனுக்கு அந்த செய்தி பலவிதமான குழப்பங்களுக்கிடையிலும் அதீத ஆனந்தமாய் இருந்தது.
அவளை பார்க்க நேராக விமான நிலையத்திற்கே போயிருந்தான்.
அவளிடம் பேசவும் கேட்கவும் நிறைய இருந்தாலும் அவளை இத்தனை நாள் பார்க்காமல் இருந்ததிலேயே அவன் பரிதவித்து போயிருந்தான்.
அவள் இல்லாத நாட்களே அவனுக்கு அத்தனை கொடுமையாக இருக்க, அவள் இல்லாத வாழ்க்கை அத்தனை வெறுமை!
ஜென்னி விமான நிலையத்தில் வெளியேறும் வாயிலின் வழியே காத்திருந்த டேவிடை புன்னகை அரும்ப பார்த்தவள், அவனை நெருங்க எண்ணும் போது பத்திரிக்கை நபர்கள் பலர் அவளை சூழ்ந்து கொண்டு கேள்விகளை எழுப்பினர்.
"ஆக்டர் ராகவ் உங்களை கல்யாணம் பண்ணிக்க போறதா அறிவிச்சிருக்காரே அது உண்மையா?" என்று கேட்க, ஜென்னி இவர்களுக்கு எல்லாம் தான் வரப் போகும் தகவல் எப்படி தெரியும் என்று யோசித்தவாறு மௌனமாய் நின்றாள்.
"பதில் சொல்லுங்க" என்ற அவர்கள் அழுத்தம் கொடுக்க,
ஜென்னி நிமிர்த்திய பார்வையோடு "எஸ்... இட்ஸ் ட்ரூ... ஐம் கோயிங் டூ மேரி மிஸ்டர். ராகவ்" என்றாள்.
பத்திரிக்கையாளர்கள் மேலும் கேள்வி எழுப்ப, அவள் "ப்ளீஸ் நோ மோர் க்வ்ஷ்ன்ஸ்" என்றபடி சிரமப்பட்டு அங்கிருந்த காவலாளி உதவியோடு அவர்களை கடந்துவந்தாள்.
அவளின் அந்த பதில் டேவிடுக்கும் சென்று சேர்ந்தது. அப்போது ஏற்பட்டது அதிர்ச்சியா வேதனையா தவிப்பா என அவனால் விவரிக்க முடியவில்லை. ஆனால் அவள் தன் வாழ்வில் இல்லாமல் போனால் அது பேரிழப்பு என்பது மட்டும் அவனுக்கு தெள்ளத்தெளிவாய் புரிந்தது.
பத்திரிக்கையாளர்கள் முன் அவளை நேரடியாய் சந்திக்காமல் அவன் கார் நிறுத்தத்தில் காத்திருக்க, ஜென்னியும் அவனை கண்டறிந்து வந்து சேர்ந்தாள்.
டேவிட் தன் மனவுணர்வுகளை மறைத்துக் கொண்டு அவளை நலம் விசாரித்தான்.
"எப்படி இருக்க ஜென்னி ?"
"யா பைஃன்" என்றவள், "எதுக்கு டேவிட் நீங்க உங்க வேலையை விட்டுவிட்டு வந்தீங்க... கார் மட்டும் அனுப்பினா போதாதா ?" என்று கேட்க,
அவளை ஏறிட்டவன் "உனக்காக நான் வராம வேற யார் வருவா ?" என்று உரிமையோடு அவன் கேட்க, அவள் சிலாகித்து போனாள்.
அந்த வார்த்தைகளில் வெறும் அக்கறையும் நட்பும் மட்டும் தேங்கியிருக்கவில்லை. அளவிடமுடியாத காதல் இருந்தது.
அது அவளுக்குமே புரிய அதற்கு மேல் அவள் எந்தவித கேள்வியும் அவனிடம் எழுப்பாமல் மௌனமாய் வந்தாள்.
அவனுமே மௌனமாய் தன் சோகத்தை விழுங்கி கொண்டு காரை ஓட்டினான்.
அவர்களுக்கிடையில் வார்த்தை பரிமாறல்கள் நிகழவில்லை என்றாலும் அவ்வப்போது பார்வை பரிமாறல்கள் நிகழ, அதன் மூலம் அவர்கள் இருவரும் ஒருவர் உணர்வை மற்றவர் புரிந்து கொண்டார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
ஆனால் டேவிட் ஒரு விஷயத்தில் உறுதியாய் இருந்தான். அவள் தன் மீது கொண்ட ஆழமான நட்பை காயப்படுத்தி தன்னுடைய காதலை வாழ வைப்பதில்லை என்று.
hi friends,
thank u all for ur great comments, your words are my big support
love u all
Ena sis ipd panitnga ???????"மாயா" என்றழைத்தான்.
"போயா" என்று சொல்லிவிட்டு கதவை திறந்து கொண்டு வெளியேறியவளை "மாயா ஒரு நிமிஷம் நான் சொல்றதை கேளேன்" என்று அவளை அழைத்தபடி பின்தொடர,
அவள் அவனை கவனிக்காதது
போல் சென்று சமையலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.
அந்த நேரம் ஞானசேகரன் சோபாவில் அமர்ந்தபடி "மகிழ்" என்றழைக்க, அவர் குரலை கேட்டு படபடத்தவன்,
"அப்பா" என்று அவர் முன்வந்து அடக்கமாய் நின்றான்.
"என்னடா ஏதாச்சும் பிரச்சனையா ?" என்று கேட்ட மறுகணமே "சேச்சே அப்டி எல்லாம் இல்லப்பா... என் கூலர்ஸை காணும்னு அவளை கேட்டிட்டிருந்தேன்" என்று சமாளித்து அவர்கள் பிரச்சனையை காட்டிக் கொள்ளாமல் இருக்க,
"வேறெதுவும் இல்லையே...?!" என்று அவர் சந்தேகித்து கேட்டார்.
"உம்ஹும்" என்று அவன் வேகமாய் இடமும் புறமுமாய் தலையசைத்து மறுத்தான்.
சற்று யோசனையில் ஆழ்ந்தவர் மீண்டும் "இல்லடா... இத்தனை நாளா நீங்க மாயா வீட்டிலதான் இருந்தீங்க... இப்போ இங்கயே இருக்கீங்க... அது ஏதாச்சும்" என்று அவர் தயக்கத்தோடு கேட்க,
மாயா காபியோடு வந்து "அதேல்லாம் எந்த பிரச்சனையும் இல்லை மாமா" என்றவள் காபியை அவர் கரத்தில் கொடுக்க,
"அது சரிதான்... ஆனா நீங்க தீடிர்னு இங்க வந்திட்டீங்க... உங்க அம்மா அப்பா மனசுக்கு கஷ்டமா இருக்கும் ல" என்றுரைத்து காபியை பருக,
மகிழ் அவரிடம் "அதெல்லாம் ஆன்ட்டி ஹங்கிள்கிட்ட நான் பேசிட்டேன் ப்பா.. நீங்க ஒண்ணும் மனசு சங்கடப்பட வேண்டாம்... நீங்க உங்க உடம்பை பார்த்துக்கோங்க போதும்" என்றான்.
"ஆமாம் மாமா... நீங்க அந்த கவலையெல்லாம் விடுங்க... உங்க உடம்பை மட்டும் பார்த்துக்கோங்க" என்று அவளும் சேர்ந்து கொண்டு உரைத்தாள்.
அவர் மூச்சை இழுத்துவிட்டபடி "என் உடம்பை பார்த்துக்கிறது இருக்கட்டும்... உங்க அம்மாவை பாரு... சதாசர்வகாலமும் அந்த தரூதலையை பத்தியே நினைச்சி அழுதுட்டிருக்கா ?!"என்றார்.
அத்தனை நேரம் தள்ளிநின்று அவர்கள் சம்பாஷணையை கேட்டு கொண்டிருந்த வள்ளயம்மை அதிர்ந்து "அப்படி எல்லாம் இல்லங்க" என்று மறுக்க
அவரே மேலும் "நீ இராத்திரி எல்லாம் அவனை பத்தி நினைச்சி அழுதிட்டிருக்கிறது எல்லாம் எனக்கு தெரியாதாக்கும்" என்றவர் சொல்ல மகிழ் அந்த நேரம் தன் தாயை நோக்கினான்.
அவர் முகமெல்லாம் வாட்டமுற்றிருந்தது. ஞானசேகரன் மகனிடம்,
"அவன் எங்க என்னன்னு விசாரி... அவன் எங்க இருக்கான் என்னன்னு தெரிஞ்சா... அவ மனசுக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருக்கும் பாரு" என்க,
மகிழ் தன் தந்தையிடம் "நான் ஆல்ரெடி என் ஆபிஸ் ரிப்போர்ட்டர்ஸ் மூலமா விசாரிச்சிட்டுதான் இருக்கேன்... சரியான க்ளு எதுவும் கிடைக்கல... அண்ணனோட போஃன் ஸ்விட்ச்ட் ஆஃப்லதான் இருக்கு... ஆனா அண்ணன் ரீஸ்ன்ட்டா அவன் பேங்க் அகௌன்ட்ல இருந்து பணம் எடுத்திருக்காருன்னு மட்டும் தெரிஞ்சிது" என்றான்.
ஞானசேகரன் மனைவியை பார்த்து கொஞ்சம் கோபமாக "கேட்டுக்கோ... உன் சீமந்த புத்திரன் எல்லாம் எங்கயோ நல்லபடியாதான் இருக்கான் ?!" என்று சொல்ல உண்மையிலயே வள்ளியம்மைக்கு நிம்மதி பெருமூச்சுவந்தது.
மாயா அவர்கள் உரையாடல்களுக்குள் இடையில் "சரி பேசிட்டு டிபன் சாப்பிட வாங்க" என்று கணவனை பார்த்தும் பார்க்காமல் அழைப்பு விடுத்தாள்.
அவனும் பேசி முடித்த பின் காலை உணவு உண்ண அமர்ந்தவன் தன் மனைவியின் ஒற்றை கடை கண் பார்வைக்காக ஏதேதோ செய்து பார்த்தான்.
ஆனால் அவளோ ஏன் பார்ப்பேன் என்பது போல் பிடிவாதமாய் இருந்தாள்.
அவன் வாசலில் வழியனுப்ப வந்த போதும் அவள் வேண்டா வெறுப்பாய் நிற்க "மாயா ப்ளீஸ்" என்று கெஞ்சலாய் பார்த்தான்.
"ஹ்ம்ம் கிளம்புங்க" என்று அவள் பார்வையை எங்கோ வெறித்தாள்.
அவள் விழியில் நீர் தேங்கியிருந்தது.
அவள் மனதை புரிந்து அவள் கரத்தை பற்றி கொண்டவன்
"புரிஞ்சிக்கோ மாயா... சாக்ஷி இனிமே என் வாழ்க்கையில இல்லைங்கிறது இனிமே யார் நினைச்சாலும் மாற்ற முடியாத உண்மை..." என்று சொல்லியவனை அவள் அந்த சமயம் திரும்பி நோக்க அவன் விழியும் கலங்கியிருந்தது.
அவன் மேலும் "அதே அளவுக்கு இன்னொரு உண்மை இருக்கு" என்க,
அவனை மௌனமாய் ஏறிட்டாள்.
அவள் இருகரத்தையும் கோர்த்தவன், "அது.... நீதான் என் வாழ்க்கையோட எல்லாங்கிறது... நீயில்லாம நானில்லை... இதுக்கு மேல நான் என்ன சொல்ல?" என்று உணர்வுபூர்வமாய் அவன் உரைக்க மாயா நெகிழ்ந்து போனாள். அவள் விழியில் தாரை தாரையாய் கண்ணீர் பெருகி ஓடியது.
அப்போது அவன் அவளிடம் "சரி நான் கிளம்பட்டுமா? ... லேட்டாகுது" என்றான் அவள் கரத்தை விடாமலே !
"ஹ்ம்ம்" என்று தலையசைத்தாள் அவளும் வழியனுப்ப மனமில்லாமலே !
சில நொடி மௌனங்களுக்கு பிறகு "டைமாச்சுங்க" என்று மாயா சொல்லவும் அவள் கரத்தை விட்டு ஏக்கபெருமூச்சை வெளிவிட்டவன்,
புறப்பட யத்தனித்தவன் மீண்டும் அவள் புறம் திரும்பி"நான் கொஞ்ச நாளா ஒரு விஷயத்தை மிஸ் பன்றேன்... அதை நீ தர முடியுமா ?" என்று கேட்க,
"என்னது மகிழ்?" என்று ஆவல் பொங்க பார்த்தாள்.
"என்னோட பெஸ்ட் ப்ரண்ட் மாயாவை... அவளை நான் ரொம்ப மிஸ் பன்றேன்... என் பீஃலிங்க்ஸ் என் கஷ்டம் நஷ்டம் எல்லாத்தையும் அவகிட்டதான் வெளிப்படையா கொட்டுவேன்... " என்றவன், "எனக்காக அவளை கொஞ்சம் தேடி கொடு" என்று மனவருத்தத்தோடு சொல்லிவிட்டு தன் காரில் ஏறி அகன்றுவிட்டான்.
அவன் அவ்விதம் சொல்லிவிட்டு போக அவள் மனம் குற்றவுணர்வில் ஆழ்ந்தது.
அவனின் உயர்வான காதலை பற்றி அறிந்திருந்தும் அவன் வேதனைகளுக்கு ஆறுதலாய் தோள் கொடுக்காமல் தானும் சேர்ந்து அவனை காயப்படுத்துகிறோம் என்று எண்ணிக் கொண்டு அந்த நொடி வருத்தமுற்றாள்.
மாயா மட்டுமே அல்ல.
யாருமே காதலையும் நட்பையும் சரிவிகதத்தில் காட்டுவது சிரமம்தான்.
இரு உறவும் ஒரே கூட்டில் இருக்குமாயின் இரண்டில் எதாவது ஒன்று மட்டுமே இறுதியாய் சஞ்சரிக்கும். அது பலநேரங்களில் காதலாக மட்டுமே இருக்கும்.
ஆனால் டேவிட் சற்று முரண்பட்டு தன் காதலுக்கு பதிலாய் தன் நட்பை காத்து கொள்ள எண்ணிக் கொண்டிருந்தான்.
அதற்கு காரணம் ஜென்னி சென்னை வருவதாகவும் ரூபா தன்னோடு வராததால் தான் அவனோடு தங்கப் போவதாக தகவல் அனுப்ப, அவனுக்கு அந்த செய்தி பலவிதமான குழப்பங்களுக்கிடையிலும் அதீத ஆனந்தமாய் இருந்தது.
அவளை பார்க்க நேராக விமான நிலையத்திற்கே போயிருந்தான்.
அவளிடம் பேசவும் கேட்கவும் நிறைய இருந்தாலும் அவளை இத்தனை நாள் பார்க்காமல் இருந்ததிலேயே அவன் பரிதவித்து போயிருந்தான்.
அவள் இல்லாத நாட்களே அவனுக்கு அத்தனை கொடுமையாக இருக்க, அவள் இல்லாத வாழ்க்கை அத்தனை வெறுமை!
ஜென்னி விமான நிலையத்தில் வெளியேறும் வாயிலின் வழியே காத்திருந்த டேவிடை புன்னகை அரும்ப பார்த்தவள், அவனை நெருங்க எண்ணும் போது பத்திரிக்கை நபர்கள் பலர் அவளை சூழ்ந்து கொண்டு கேள்விகளை எழுப்பினர்.
"ஆக்டர் ராகவ் உங்களை கல்யாணம் பண்ணிக்க போறதா அறிவிச்சிருக்காரே அது உண்மையா?" என்று கேட்க, ஜென்னி இவர்களுக்கு எல்லாம் தான் வரப் போகும் தகவல் எப்படி தெரியும் என்று யோசித்தவாறு மௌனமாய் நின்றாள்.
"பதில் சொல்லுங்க" என்ற அவர்கள் அழுத்தம் கொடுக்க,
ஜென்னி நிமிர்த்திய பார்வையோடு "எஸ்... இட்ஸ் ட்ரூ... ஐம் கோயிங் டூ மேரி மிஸ்டர். ராகவ்" என்றாள்.
பத்திரிக்கையாளர்கள் மேலும் கேள்வி எழுப்ப, அவள் "ப்ளீஸ் நோ மோர் க்வ்ஷ்ன்ஸ்" என்றபடி சிரமப்பட்டு அங்கிருந்த காவலாளி உதவியோடு அவர்களை கடந்துவந்தாள்.
அவளின் அந்த பதில் டேவிடுக்கும் சென்று சேர்ந்தது. அப்போது ஏற்பட்டது அதிர்ச்சியா வேதனையா தவிப்பா என அவனால் விவரிக்க முடியவில்லை. ஆனால் அவள் தன் வாழ்வில் இல்லாமல் போனால் அது பேரிழப்பு என்பது மட்டும் அவனுக்கு தெள்ளத்தெளிவாய் புரிந்தது.
பத்திரிக்கையாளர்கள் முன் அவளை நேரடியாய் சந்திக்காமல் அவன் கார் நிறுத்தத்தில் காத்திருக்க, ஜென்னியும் அவனை கண்டறிந்து வந்து சேர்ந்தாள்.
டேவிட் தன் மனவுணர்வுகளை மறைத்துக் கொண்டு அவளை நலம் விசாரித்தான்.
"எப்படி இருக்க ஜென்னி ?"
"யா பைஃன்" என்றவள், "எதுக்கு டேவிட் நீங்க உங்க வேலையை விட்டுவிட்டு வந்தீங்க... கார் மட்டும் அனுப்பினா போதாதா ?" என்று கேட்க,
அவளை ஏறிட்டவன் "உனக்காக நான் வராம வேற யார் வருவா ?" என்று உரிமையோடு அவன் கேட்க, அவள் சிலாகித்து போனாள்.
அந்த வார்த்தைகளில் வெறும் அக்கறையும் நட்பும் மட்டும் தேங்கியிருக்கவில்லை. அளவிடமுடியாத காதல் இருந்தது.
அது அவளுக்குமே புரிய அதற்கு மேல் அவள் எந்தவித கேள்வியும் அவனிடம் எழுப்பாமல் மௌனமாய் வந்தாள்.
அவனுமே மௌனமாய் தன் சோகத்தை விழுங்கி கொண்டு காரை ஓட்டினான்.
அவர்களுக்கிடையில் வார்த்தை பரிமாறல்கள் நிகழவில்லை என்றாலும் அவ்வப்போது பார்வை பரிமாறல்கள் நிகழ, அதன் மூலம் அவர்கள் இருவரும் ஒருவர் உணர்வை மற்றவர் புரிந்து கொண்டார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
ஆனால் டேவிட் ஒரு விஷயத்தில் உறுதியாய் இருந்தான். அவள் தன் மீது கொண்ட ஆழமான நட்பை காயப்படுத்தி தன்னுடைய காதலை வாழ வைப்பதில்லை என்று.
hi friends,
thank u all for ur great comments, your words are my big support
love u all