எதனால் எதனால் இந்த ஜென்னி ராகவிற்கு இடம் தருகிறாள்? ஏதோ ஒரு பெரிய காரணம் இருக்கு ஷப்பாபா மண்டை காயுது மோனி.. கார் மற்றும் அவன் பெயர் டாமேஜ் ஆகி இருக்கு ஆனா ஸாருக்கு இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது...
டேவிட் எப்படியாவது உன்னால மட்டும் அடுத்தவங்க இடத்தில் இருந்து அவங்க வலி உணர முடியுது.. ஸிம்பிளி சூப்பர் ?.. தாமஸ் பதில் பேசாத மாதிரி வாயடச்சுட்ட." அவ சுயத்தை இழந்தாள், அவள் வாழ்க்கை, நட்பு , உயிரான காதல்னு" அவளுக்காக வே பேசறீயே டேவிட் உன் காதல் மட்டும் குறைவா?
காதல் பண்டமாற்று அல்ல, அவளின் அடிப்பட்ட மனதிற்கு அமைதி தேவை, ராகவைவை பற்றிய அவளின் எண்ணத்திற்கும் ஏதோ காரணம் உண்டு என்ற அவள் மேல் கொண்ட நம்பிக்கை என்று வைரமென மின்னுகிறாய் டேவிட்.
"காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு "என்ற ஒரு வரியிலே திறக்காத அவள் இதயத்தை திறந்து விட்டாயே மகிழ்.. என்றாவது ஒருநாள் பேசித்தான் ஆக வேண்டும், ஆனால் அதை நீ தாங்குவாயா மகிழ்? உன்னுள் நீ உருக்குலைந்து இரு பெண்களுக்கும் வலி தர போகிறாய்..
சோலையில் சில மலர்கள் நம் கண்ணுக்கு மட்டுமே குளிர்ச்சி தரும் வரம் பெற்றவை..
சூடி கொடுத்து இறைவனடி சேர எத்தனை மலர்களுக்கு விதியோ???