Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
மரணத்துக்கு நிகரான வலி
வீணையை விரல்கள் மீட்டாத போது அங்கே எங்கனம் நாதத்தின் இசை ஒலிக்க முடியும்.
அவர்கள் இருவருமே மீட்டாத வீணை போலவே மௌனிகளாய் நின்றிருந்தனர்.
அலைஅலையாய் அவள் கேசம் கடல்காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்க, பார்வை மட்டும் ஓரே நிலையில் சமுத்திரனோடு சங்கமித்திருந்தது.
ஒரே ஒரு முறை கூட அவள் பார்வை அவன் புறம் திரும்பவில்லை.
அவனாகவே பேசட்டும் என்று அவள் அமைதி காத்திருக்க, இந்தளவுக்கு தன்னை பார்க்க அவள் நிராகரிக்கிறாள் எனும் போது அவளிடம் தான் நினைத்ததை எப்படி கேட்பதென்று அவன் தவித்து கொண்டிருந்தான்.
'மகிழ் பேசு' அவனுக்கு அவனே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டான்.
ஆனால் உதடுகள் இரண்டும் ஓட்டிக் கொண்டு அவனுக்கு உதவமாட்டேன் என்றிருந்தது.
அந்த காத்திருப்பும் மௌனமும் நீண்டு கொண்டே இருக்க, இறுதியாய் அவளே அந்த மௌனத்தை உடைத்தாள்.
"என்னை பேசனும்னு வர சொல்லிவிட்டு இப்படி ஸைலன்டா இருந்தா என்ன அர்த்தம்... டேவிடும் இப்போ இங்கே இல்லை... இன்னும் உங்களை எது தடுக்குது" என்று கேட்டவளை ஆச்சர்யமாய் நோக்கினான்.
அவளோ அப்போதும் அவனை பாராமல் கடலையே பார்த்துக் கொண்டிருக்க,
அவன் கோபத்தோடு "என்னை எதுவும் தடுக்கல... உன்னைதான் ஏதோ தடுக்குது..." என்று நிறுத்தியவன்,
அவளின் பாரா முகத்தை பார்த்தபடி "ஐ திங் யூ ஆர் ஸ்டில் இன் லவ் வித் மீ" என்று உரைத்தான்.
அவள் அதிர்ந்தபடி "மகிழ்" என்று அவனை நேர்கொண்டு பார்த்தாள். அவள் விழிகள் அகண்டு அவனை சீற்றமாய் பார்க்க, அந்த வார்த்தை அவளை நேரடியாய் தாக்கியிருந்தது.
விழிகள் இரண்டும் அழுவதற்கான முதல் படியை எட்டியிருக்க,
மகிழ் நிதானமாகவே அவளை எதிர்கொண்டு "அப்படி எதுவும் இல்லைன்னா என்னை நேரா பார்த்து பேசிறதில உனக்கென்ன தயக்கம் ?" என்றவன் கோபமாய் முடிக்க,
"நீங்க புரிஞ்சிதான் பேசிறீங்களா ? எனக்கும் ஆக்டர் ராகவுக்கும் மேரேஜாகாப் போகுது... அது ஊருக்கே தெரியும்.. ஏன் அது உங்களுக்குமே தெரியுமே ? அப்படி இருக்கும் போது இந்த மாதிரி நேரத்தில உங்களை தனியா மீட் பன்றது சரியா ? ஒரு மீடியா பர்ஸனா என்ன மாதிரியான விளைவுகளை நம்ம மீட்டிங் ஏற்படுத்தும்னு நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை... அப்படி இருக்கும் போது இதை விட என் தயக்கத்துக்கு காரணம் வேறென்ன இருக்க முடியும் ?!" என்று ஆணித்தனமாய் அவன் முகத்துக்கு நேராய் கேட்டாள்.
எந்நிலையிலும் தான் உணர்ச்சிவசப்பட்டு மகிழின் வாழ்க்கையில் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாதே என்கிற அவளின் பயமே அவளை மனோதிடத்தோடு பேச வைக்க, உண்மையிலயே அந்த நொடி மகிழ் குற்றவுணர்வாய் உணர்ந்தான்.
அவள் சொன்னது எதையும் உணர்ச்சிவசத்தால் அவன் யோசிக்க மறந்திருந்தான். ஆனால் இப்போது சிந்தித்தால் தன் தமையனின் அவச்சொல்லை கேட்டு அவளின் வாழ்க்கையில் இடையூறு செய்துவிட்டோமோ என்று தோன்றியது.
அவன் அவளை நிமிர்ந்து பார்த்து "சாக்ஷி ஐம் சாரி... நான் இது எதை பத்தியும் யோசிக்காம ஏதோ ஒரு இமோஷன்ல உன்னை இங்கே வரவைச்சிட்டேன்" என்க,
"எதை பத்தியும் யோசிக்காமன்னா... உங்க மனைவியை பத்தியுமா ?! என்று புருவத்தை ஏற்றி அவள் ஏளனமாய் கேட்டாள்.
"என் மனைவியா ?... அப்போ அவ உனக்கு ப்ரண்ட் இல்லையா ?!" என்று இறங்கிய பார்வையோடு அவன் வினவ,
"முடிஞ்சி போன விஷயங்களை பத்தி நான் பேச விருப்பப்படல... நீங்களும் அதை பத்தி எல்லாம் கேட்க வேண்டாம்னு நினைக்கிறேன்... அதனால எந்த யூஸ்ஸும் இல்ல... ஸோ ப்ளீஸ் நம்ம வாழ்க்கையில நடந்த பழைய விஷயங்களை எல்லாம் மறந்திருவோமே... அதுதான் இரண்டு பேருக்கும் நல்லது" என்று சமார்த்தியாய் பேசி அவனிடமிருந்து அவள் நழுவிக் கொள்ள பார்க்க, மகிழுக்கு அவள் பேசியது எதையும் நம்பமுடியவில்லை.
அத்தனை சுலபமாய் அவள் பழைய விஷயங்களை கடந்துவிட சொல்வதை ஏற்க முடியாமல் பார்த்தவன், மாயாவின் நட்பை கூட உதறுமளவிற்கு அவள் மனம் இறுகி போனதா என்று கோபமானான்.
அவள் மேலும் "டேவிட் வேற ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டிருக்காரு... நான் போகனும் மகிழ்" என்றவள் அவஸ்த்தையோடு உரைக்க,
அவன் அழுத்தமான பார்வையோடு "டேவிட் ஒரு முப்பது நிமிஷமா வெயிட் பண்ணிட்டிருக்கிறதுக்கே உனக்கு இவ்வளவு துடிக்குது... ஆனா நான் உனக்காக மூணு வருஷமா காத்திட்டிருந்தேனே... பையத்திக்காரனாட்டும்... அப்போ உனக்கு துடிக்கல... இன்னைக்கு வந்து ஈஸியா பழசை பத்தி பேச வேண்டாம்னு சொல்ற" உணர்ச்சிவசத்தாலும் கோபத்தாலும் அவன் மனதில் தேக்கி வைத்திருந்த கேள்வியை வார்த்தைகளாக கொட்டிவிட, அவள் பேச்சற்று நின்றுவிட்டாள்.
அவனே மேலும் "சாக்ஷி எப்போ எப்படி ஜென்னித்தா விக்டரா மாறினான்னு நான் தெரிஞ்சிக்கலாமா ?!" என்றவன் கேள்வி எழுப்ப,
அவள் ஒருவாறு சுதாரித்து கொண்டு "அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம்... நான் உங்களுக்கு அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை" என்று மறுத்தவள்,
நிராகரிப்பாய் அவள் பார்வையை அவனிடமிருந்து திருப்பிக் கொண்டாள்.
அவன் நிதானமாக, "ஓகே அந்த கேள்விக்கு நீ பதில் சொல்ல வேண்டாம்... அது எனக்கு தேவையில்லாத விஷயம்னே இருக்கட்டும்... ஆனா எனக்கு தேவையான விஷயம் ஓண்ணு கேட்க வேண்டியிருக்கு... அதுக்கு மேடம் பதில் சொல்வீங்களா ?!" என்று கேட்டு அவளை எகத்தாளமாய் பார்த்தான்.
"என்ன அது ?" அவனை பாரமலே அவள் கேட்க,
"மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்த என் பிறந்த நாள்... நீ நிச்சயம் மறந்திருக்க மாட்ட... " என்று அவன் சொல்லிய உடனே அவள் முகமாற்றமடைந்திருந்தது. பதட்டத்திற்கும் பயத்திற்கும் இடைப்பட்ட உணர்வில் அவள் சிக்கி தவிக்க,
மகிழ் மேலும் "நம்ம இரண்டு பேரும் வெளியே எல்லாம் போயிட்ட பிறகு நானே உன்னை இல்லத்தில கூட்டிட்டு வந்துவிட்டேன்... அதுக்கப்புறமா... நீ மாயாகிட்ட என்ன சொன்ன ?" நிறுத்தி நிதானமாய் அவன் கேட்க, அவள் தடுமாறி நின்றாள்.
"உன்னைதான் கேட்கிறேன்... பதில் சொல்லு" என்றவன் திரும்பி நின்றவளின் தோளை பிடித்து திருப்பினான்.
அவன் செய்கையில் மிரண்டவள் "என்ன பன்றீங்க மகிழ்?" என்று அவன் கரத்தை தட்டிவிட,
அவன் அதீத கோபத்தோடு,
"அப்போ நான் கேட்டுட்டே இருக்கேன்... நீ பாட்டுக்கு பதில் சொல்லாம நின்னுட்டிருந்தா என்னடி அர்த்தம்.. ?" என்றான்.
அவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் "தப்புதான் மகிழ்... என்னை மன்னிச்சிடுங்க... நான் அப்படி சொல்லி இருக்க கூடாது... ஏன் ? உங்க காதலை பத்தி அப்படி நான் நினைச்சி கூட இருக்க கூடாது ?... தப்பு செஞ்சிட்டேன்" என்றவள் அழுகை தொனியில் உரைக்க, அவள் விழிகளில் நீர் ஆறாய் பெருகியது.
அவள் அந்த நொடி முகத்தை மூடிக் கொண்டு வெதும்பி, மகிழின் மனம் இளகிப் போனது.
அவளை அணைத்து கொண்டு சமாதானம் செய்ய வேண்டும் என்று உள்ளம் துடிக்க, அந்த எண்ணத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன்,
"சாக்ஷி ப்ளீஸ் அழாதே..." என்றான்.
அவளோ அமைதியடையாமல் அழுதபடியே இருக்க அவன் பொறுமையாக, "எனக்கு தெரியும் சாக்ஷி... நீயா அப்படி பேசலன்னு..." என்க,
அவள் முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அவனை பார்க்க,
அவன் கூர்ந்து பார்த்தபடி "அந்த பொறுக்கி... அதான் எங்க ண்ணன் உன்கிட்ட என்ன பேசினா?" என்றவன் உக்கிரமாய் கேட்க,
அவனுக்கு எப்படி தெரியும் என்பது போல் அவள் குழப்பமாய் பார்த்தாள்.
மகிழ் அவள் பார்வை புரிந்து "நான் அவனை பார்த்துட்டுதான் வர்றேன்... அவன் சொன்னதை எல்லாம் கேட்டு கொதிச்சி போய் வந்திருக்கேன்" என்க,
ஜென்னி உணர்ச்சியற்ற பார்வையோடு "டூ லேட் மகிழ்" என்றாள்.
அவள் வார்த்தையிலிருந்த வலியை அவள் முகம் பிரதிபலிக்கவில்லை எனினும் அதனை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
அவள் விரக்தியான பார்வையோடு "அதை நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கனுமா ?!" என்று கேட்க,
அவன் ஆம் என்பது போல் தீர்க்கமாக தலையசைத்தான்.
அவனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவள் சில நொடிகள் மௌனத்திற்கு பின் அன்று நடந்ததை அவனிடம்
உரைக்கத் தொடங்கினாள்.
************
வீணையை விரல்கள் மீட்டாத போது அங்கே எங்கனம் நாதத்தின் இசை ஒலிக்க முடியும்.
அவர்கள் இருவருமே மீட்டாத வீணை போலவே மௌனிகளாய் நின்றிருந்தனர்.
அலைஅலையாய் அவள் கேசம் கடல்காற்றில் அலைபாய்ந்து கொண்டிருக்க, பார்வை மட்டும் ஓரே நிலையில் சமுத்திரனோடு சங்கமித்திருந்தது.
ஒரே ஒரு முறை கூட அவள் பார்வை அவன் புறம் திரும்பவில்லை.
அவனாகவே பேசட்டும் என்று அவள் அமைதி காத்திருக்க, இந்தளவுக்கு தன்னை பார்க்க அவள் நிராகரிக்கிறாள் எனும் போது அவளிடம் தான் நினைத்ததை எப்படி கேட்பதென்று அவன் தவித்து கொண்டிருந்தான்.
'மகிழ் பேசு' அவனுக்கு அவனே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டான்.
ஆனால் உதடுகள் இரண்டும் ஓட்டிக் கொண்டு அவனுக்கு உதவமாட்டேன் என்றிருந்தது.
அந்த காத்திருப்பும் மௌனமும் நீண்டு கொண்டே இருக்க, இறுதியாய் அவளே அந்த மௌனத்தை உடைத்தாள்.
"என்னை பேசனும்னு வர சொல்லிவிட்டு இப்படி ஸைலன்டா இருந்தா என்ன அர்த்தம்... டேவிடும் இப்போ இங்கே இல்லை... இன்னும் உங்களை எது தடுக்குது" என்று கேட்டவளை ஆச்சர்யமாய் நோக்கினான்.
அவளோ அப்போதும் அவனை பாராமல் கடலையே பார்த்துக் கொண்டிருக்க,
அவன் கோபத்தோடு "என்னை எதுவும் தடுக்கல... உன்னைதான் ஏதோ தடுக்குது..." என்று நிறுத்தியவன்,
அவளின் பாரா முகத்தை பார்த்தபடி "ஐ திங் யூ ஆர் ஸ்டில் இன் லவ் வித் மீ" என்று உரைத்தான்.
அவள் அதிர்ந்தபடி "மகிழ்" என்று அவனை நேர்கொண்டு பார்த்தாள். அவள் விழிகள் அகண்டு அவனை சீற்றமாய் பார்க்க, அந்த வார்த்தை அவளை நேரடியாய் தாக்கியிருந்தது.
விழிகள் இரண்டும் அழுவதற்கான முதல் படியை எட்டியிருக்க,
மகிழ் நிதானமாகவே அவளை எதிர்கொண்டு "அப்படி எதுவும் இல்லைன்னா என்னை நேரா பார்த்து பேசிறதில உனக்கென்ன தயக்கம் ?" என்றவன் கோபமாய் முடிக்க,
"நீங்க புரிஞ்சிதான் பேசிறீங்களா ? எனக்கும் ஆக்டர் ராகவுக்கும் மேரேஜாகாப் போகுது... அது ஊருக்கே தெரியும்.. ஏன் அது உங்களுக்குமே தெரியுமே ? அப்படி இருக்கும் போது இந்த மாதிரி நேரத்தில உங்களை தனியா மீட் பன்றது சரியா ? ஒரு மீடியா பர்ஸனா என்ன மாதிரியான விளைவுகளை நம்ம மீட்டிங் ஏற்படுத்தும்னு நான் சொல்லி உங்களுக்கு தெரிய தேவையில்லை... அப்படி இருக்கும் போது இதை விட என் தயக்கத்துக்கு காரணம் வேறென்ன இருக்க முடியும் ?!" என்று ஆணித்தனமாய் அவன் முகத்துக்கு நேராய் கேட்டாள்.
எந்நிலையிலும் தான் உணர்ச்சிவசப்பட்டு மகிழின் வாழ்க்கையில் எந்தவித குழப்பத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாதே என்கிற அவளின் பயமே அவளை மனோதிடத்தோடு பேச வைக்க, உண்மையிலயே அந்த நொடி மகிழ் குற்றவுணர்வாய் உணர்ந்தான்.
அவள் சொன்னது எதையும் உணர்ச்சிவசத்தால் அவன் யோசிக்க மறந்திருந்தான். ஆனால் இப்போது சிந்தித்தால் தன் தமையனின் அவச்சொல்லை கேட்டு அவளின் வாழ்க்கையில் இடையூறு செய்துவிட்டோமோ என்று தோன்றியது.
அவன் அவளை நிமிர்ந்து பார்த்து "சாக்ஷி ஐம் சாரி... நான் இது எதை பத்தியும் யோசிக்காம ஏதோ ஒரு இமோஷன்ல உன்னை இங்கே வரவைச்சிட்டேன்" என்க,
"எதை பத்தியும் யோசிக்காமன்னா... உங்க மனைவியை பத்தியுமா ?! என்று புருவத்தை ஏற்றி அவள் ஏளனமாய் கேட்டாள்.
"என் மனைவியா ?... அப்போ அவ உனக்கு ப்ரண்ட் இல்லையா ?!" என்று இறங்கிய பார்வையோடு அவன் வினவ,
"முடிஞ்சி போன விஷயங்களை பத்தி நான் பேச விருப்பப்படல... நீங்களும் அதை பத்தி எல்லாம் கேட்க வேண்டாம்னு நினைக்கிறேன்... அதனால எந்த யூஸ்ஸும் இல்ல... ஸோ ப்ளீஸ் நம்ம வாழ்க்கையில நடந்த பழைய விஷயங்களை எல்லாம் மறந்திருவோமே... அதுதான் இரண்டு பேருக்கும் நல்லது" என்று சமார்த்தியாய் பேசி அவனிடமிருந்து அவள் நழுவிக் கொள்ள பார்க்க, மகிழுக்கு அவள் பேசியது எதையும் நம்பமுடியவில்லை.
அத்தனை சுலபமாய் அவள் பழைய விஷயங்களை கடந்துவிட சொல்வதை ஏற்க முடியாமல் பார்த்தவன், மாயாவின் நட்பை கூட உதறுமளவிற்கு அவள் மனம் இறுகி போனதா என்று கோபமானான்.
அவள் மேலும் "டேவிட் வேற ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டிருக்காரு... நான் போகனும் மகிழ்" என்றவள் அவஸ்த்தையோடு உரைக்க,
அவன் அழுத்தமான பார்வையோடு "டேவிட் ஒரு முப்பது நிமிஷமா வெயிட் பண்ணிட்டிருக்கிறதுக்கே உனக்கு இவ்வளவு துடிக்குது... ஆனா நான் உனக்காக மூணு வருஷமா காத்திட்டிருந்தேனே... பையத்திக்காரனாட்டும்... அப்போ உனக்கு துடிக்கல... இன்னைக்கு வந்து ஈஸியா பழசை பத்தி பேச வேண்டாம்னு சொல்ற" உணர்ச்சிவசத்தாலும் கோபத்தாலும் அவன் மனதில் தேக்கி வைத்திருந்த கேள்வியை வார்த்தைகளாக கொட்டிவிட, அவள் பேச்சற்று நின்றுவிட்டாள்.
அவனே மேலும் "சாக்ஷி எப்போ எப்படி ஜென்னித்தா விக்டரா மாறினான்னு நான் தெரிஞ்சிக்கலாமா ?!" என்றவன் கேள்வி எழுப்ப,
அவள் ஒருவாறு சுதாரித்து கொண்டு "அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லாத விஷயம்... நான் உங்களுக்கு அதுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை" என்று மறுத்தவள்,
நிராகரிப்பாய் அவள் பார்வையை அவனிடமிருந்து திருப்பிக் கொண்டாள்.
அவன் நிதானமாக, "ஓகே அந்த கேள்விக்கு நீ பதில் சொல்ல வேண்டாம்... அது எனக்கு தேவையில்லாத விஷயம்னே இருக்கட்டும்... ஆனா எனக்கு தேவையான விஷயம் ஓண்ணு கேட்க வேண்டியிருக்கு... அதுக்கு மேடம் பதில் சொல்வீங்களா ?!" என்று கேட்டு அவளை எகத்தாளமாய் பார்த்தான்.
"என்ன அது ?" அவனை பாரமலே அவள் கேட்க,
"மூணு வருஷத்துக்கு முன்னாடி வந்த என் பிறந்த நாள்... நீ நிச்சயம் மறந்திருக்க மாட்ட... " என்று அவன் சொல்லிய உடனே அவள் முகமாற்றமடைந்திருந்தது. பதட்டத்திற்கும் பயத்திற்கும் இடைப்பட்ட உணர்வில் அவள் சிக்கி தவிக்க,
மகிழ் மேலும் "நம்ம இரண்டு பேரும் வெளியே எல்லாம் போயிட்ட பிறகு நானே உன்னை இல்லத்தில கூட்டிட்டு வந்துவிட்டேன்... அதுக்கப்புறமா... நீ மாயாகிட்ட என்ன சொன்ன ?" நிறுத்தி நிதானமாய் அவன் கேட்க, அவள் தடுமாறி நின்றாள்.
"உன்னைதான் கேட்கிறேன்... பதில் சொல்லு" என்றவன் திரும்பி நின்றவளின் தோளை பிடித்து திருப்பினான்.
அவன் செய்கையில் மிரண்டவள் "என்ன பன்றீங்க மகிழ்?" என்று அவன் கரத்தை தட்டிவிட,
அவன் அதீத கோபத்தோடு,
"அப்போ நான் கேட்டுட்டே இருக்கேன்... நீ பாட்டுக்கு பதில் சொல்லாம நின்னுட்டிருந்தா என்னடி அர்த்தம்.. ?" என்றான்.
அவள் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் "தப்புதான் மகிழ்... என்னை மன்னிச்சிடுங்க... நான் அப்படி சொல்லி இருக்க கூடாது... ஏன் ? உங்க காதலை பத்தி அப்படி நான் நினைச்சி கூட இருக்க கூடாது ?... தப்பு செஞ்சிட்டேன்" என்றவள் அழுகை தொனியில் உரைக்க, அவள் விழிகளில் நீர் ஆறாய் பெருகியது.
அவள் அந்த நொடி முகத்தை மூடிக் கொண்டு வெதும்பி, மகிழின் மனம் இளகிப் போனது.
அவளை அணைத்து கொண்டு சமாதானம் செய்ய வேண்டும் என்று உள்ளம் துடிக்க, அந்த எண்ணத்தை கட்டுக்குள் கொண்டு வந்தவன்,
"சாக்ஷி ப்ளீஸ் அழாதே..." என்றான்.
அவளோ அமைதியடையாமல் அழுதபடியே இருக்க அவன் பொறுமையாக, "எனக்கு தெரியும் சாக்ஷி... நீயா அப்படி பேசலன்னு..." என்க,
அவள் முகத்தை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அவனை பார்க்க,
அவன் கூர்ந்து பார்த்தபடி "அந்த பொறுக்கி... அதான் எங்க ண்ணன் உன்கிட்ட என்ன பேசினா?" என்றவன் உக்கிரமாய் கேட்க,
அவனுக்கு எப்படி தெரியும் என்பது போல் அவள் குழப்பமாய் பார்த்தாள்.
மகிழ் அவள் பார்வை புரிந்து "நான் அவனை பார்த்துட்டுதான் வர்றேன்... அவன் சொன்னதை எல்லாம் கேட்டு கொதிச்சி போய் வந்திருக்கேன்" என்க,
ஜென்னி உணர்ச்சியற்ற பார்வையோடு "டூ லேட் மகிழ்" என்றாள்.
அவள் வார்த்தையிலிருந்த வலியை அவள் முகம் பிரதிபலிக்கவில்லை எனினும் அதனை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
அவள் விரக்தியான பார்வையோடு "அதை நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கனுமா ?!" என்று கேட்க,
அவன் ஆம் என்பது போல் தீர்க்கமாக தலையசைத்தான்.
அவனை ஆழமாய் ஒரு பார்வை பார்த்தவள் சில நொடிகள் மௌனத்திற்கு பின் அன்று நடந்ததை அவனிடம்
உரைக்கத் தொடங்கினாள்.
************