Chitrasaraswathi
முதலமைச்சர்
Nice
Wow... Antha kadaisi kavithai semma aparna...பல நாள் அழுத்தம், பல நாள் வேதனை எல்லாம் மடை திறந்த வெள்ளம் என பிரவாகம் எடுத்தது.. யாரை நோக சதி செய்த விதியையா? சூழ்நிலை கைதியாகிய சாக்ஷியையா? கண்மூடி உலகம் இருள் என்று இருந்துவிட்ட மகிழையா? காதலில் கள்ளம் வந்தால் கனங்களும் கூட வந்து விடுமே.. ஒருவர் வார்த்தைக்கு செவி சாய்த்தல் சிறந்த செயல் அதுவும் நுண்ணிய உறவுக்களுக்கு அது தான் அடி நாதம்..பிசறிய வீணையின் தந்திகளை நேர் செய்யாமல் வீணையை துறந்து வீண் செய்தனரே இரு அழகு அகமுடையோர்..இருவருக்கும் மனதில் உதிரம் தான் கொட்டுகிறது என்ன மௌனமாக.. தேடி தொலைத்தனர் இருவரும்.. சற்று உருக்கமான பகுதி தான்..
"யாரை நோக என் சகி..
கண் திரையால் காயமடைந்தாய் என
கண்ணிருந்தும் காட்சி பிழையாய் நான்
கடந்துவிட்ட காலங்கள் திரும்பி வாராதா கண்ணம்மா..
முண்டாசு கவியுடன் மூழ்கி போகமாட்டோமா..
ஆவி தழுவ எழுந்த ஆவலும் நீர்த்ததேனோ?
இன்னும் ஒர் பிறவி வாய்க்காதோ??
வாய்த்தால் பாரதியின் பா போல்
அந்த காணி நிலத்தில் நீயும் நானும் மட்டும்!!!"