• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Naan aval illai - 39

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
Best a na kashtam
Vena fast a kuduthran
செல்லாது செல்லாது மோனி இப்படி எல்லாம் நழுவக் கூடாது. சரி சரி நீ நல்லாதான் தருவே இதுக்கு மேல நான் ஏதாவது சொல்ல போயி எபி டிலே ஆச்சுன்னா காவ்யா கோபத்துக்கு ஆளாக வேண்டி இருக்கும்
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
அவர்களின் துன்பம் எங்களையும் தாக்கிய அத்தியாயம்.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
"உயிருக்கு உயிரா காதலிக்கிறானா? லூசா நீ... போனா போதுன்னு பாவம் பார்த்து உனக்கு வாழ்க்கை கொடுக்கிறேங்கிறான்... அது வெறும் பச்சாதாபம்... காதல் இல்லை... இன்னும் கேட்டா அவன் உனக்கு போட போறது பிச்சை" என்க,

அந்த வார்த்தை மரணத்துக்கு நிகரான வலியை அவளுக்கு கொடுத்ததென்றே சொல்ல வேண்டும்.

கோபத்தோடு, "நீங்க சொல்ற எதையும் நான் நம்ப மாட்டேன்" என்றாள்.

"நீ நம்பலன்னாலும் அவனுக்கு உன் மேல இருக்கிறது பச்சாதாபம்தான் டி.. அவன் போடிற பிச்சைக்கு நான் பெட்டர் இல்ல... நீ யோசிச்சி சொல்லு... நானே உனக்கு கால் பன்றேன்... கனடா போறதுக்கு முன்னாடி" என்று அவன் சொல்லி முடித்த சில கணத்தில் அந்த இடமே நிசப்தமாய் மாறியது.

ஏதோ ஒரு கோரமான கனவை கண்டது போன்ற உணர்வு. அந்த மூழ்கிய இருளுக்குள் எது கனவு நிஜம் என்று பிரித்தறிய முடியாத நிலை.

யாரென்றே அறியாத ஒருவன் இந்தளவுக்கு தன்னிடம் பேச முடியுமா ?!

அங்கே இன்னும் அவன் இருப்பதான உணர்வு மட்டும் அவளுக்கு நீங்கவில்லை. தன் செவிகளை தீட்டி கேட்டவளுக்கு அங்கே எந்த சத்தமும் ஒலிக்காமல் அமைதியாயிருக்க, கால்களை தரையில் இறக்கியவள்
அமர்ந்திருந்த இடத்தை விட்டு இம்மியளவும் நகராமல், எழிலும் மகிழும் வரும் வரையில் அதிர்ச்சியில் அசைவின்றி கிடந்தாள்.


****************

மகிழுக்கு அவள் சொன்னதை கேட்க கேட்க நிறுத்தாமல் கண்ணீர் வழிந்தோடியபடியே இருக்க அவன் மொத்தமாய் நனைந்திருந்தான்.

ஆனால் அவள் திடமாய் நின்று கொண்டிருக்க,

அவன் வேதனை தாளாமல் "என்கிட்ட அப்பவே சொல்லி இருக்கலாம் இல்லடி" என்றவன் கோபம் கலந்த தொனியில் கேட்க,

"இந்த கண்ணு தெரியாதவ சொல்றதை நீங்க நம்பியிருப்பீங்களா மகிழ்?" என்று ஏளனமாய் கேட்க,

"சமாளிக்காதடி... நீயென்ன நம்பலன்னு சொல்லு" என்றவன் பார்வையில் கோபம் எரிமலையாய் வெடித்திருக்க,

"ஆமா... நம்பலதான்... எல்லோருமே ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லும் போது நான் என்ன பண்ண முடியும்... ?" என்று தன்னிலையை அவள் எடுத்துரைக்க,

அவளை விழி இடுங்க பார்த்தபடி "எல்லோருமேன்னா ?" என்று கேட்கவும்

"உங்க பெஸ்ட் ப்ரண்ட் ஷாலினி... உங்க கூட பிறந்த அண்ணன்... ஏன் மாயா உட்பட... ? இதெல்லாம் இப்படின்னா... நான் உங்ககிட்ட என்னை முதல்ல முதல்ல பார்த்ததும் என்ன நினைச்சிங்கன்னு கேட்டேன்னே... அதுக்கு என்ன சொன்னிங்க... ஞாபகம் இருக்கா ?!"

"என்ன சொன்னேன் ?"

"ஹ்ம்ம்... அழகு அறிவு திறமை எல்லா இருக்கிற உனக்கு கண் பார்வையில்லைன்னு நம்ப முடியல... மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சுன்னு சொன்னிங்க"

"அய்யோ... அதை நீ பரிதாபம்னு எடுத்துக்கிறதா ?"

"வேறெப்படி எடூத்துக்கிறதாம்"

"ஏ பையத்திக்காரி... நான் உன்னை உண்மையா காதலிச்சன்டி... உன் கவிதையில ஆரம்பிச்சி உன் புத்திசாலித்தனமான பேச்சில நீ என்கிட்ட பிரப்போஸ் பண்ண விதத்தில... உன் வீணையோடு இசையில.. முக்கியமா உன்னை நான் முதல் தடவை பார்த்த போது என் குரலை கேட்டதும் நீங்க மகிழ்தானேன்னு கேட்டியே... அப்போ... அந்த நிமிஷம்" என்றவன் வரிசையாய் சொல்லிக் கொண்டே போக

"போதும் மகிழ் நிறுத்துங்க" என்றவளின் கண்ணீர் கிட்டதட்ட உடைப்பெடுக்க,

அவள் உணர்வுகள் அவன் சொன்னதை கேட்டு எத்தகைய நிலையை எட்டியதென்று சொல்வதற்கு வார்த்தையில்லை.

இதையெல்லாம் முன்னமே கேட்டிருக்க கூடாதா என்று ஏங்கிய மனதிற்கு எத்தகைய சமாதானம் உரைப்பாள்.

அந்த மாயக்கண்ணாடிதிரை கொஞ்சம் விட்டால் உடைந்து போயிருக்க கூடும்.

அவள் அவனிடம் கெஞ்சிய நிலையில் "ப்ளீஸ் மகிழ்... இதெல்லாம் பத்தி நாம இப்போ பேசி என்னவாக போகுது..." என்றாள்.

"ஆமாம் இப்போ பேசி என்னவாக போகுது... பேச வேண்டிய நேரத்தில எதையும் பேசாம விட்டதினால வந்த வினை... உன்னை போய் நான் உண்மையா நேசிச்சேன் பாரு... போயும் போயும் உன்னை நினைச்சிட்டு என்னை உண்மையா நேசிச்சவளை புரிஞ்சிக்காம இருந்தேன் பாரு" என்று தன்னை தானே அவன் கடிந்து கொள்ள 'நானும் உங்களை உண்மையாதான் நேசிச்சேன் மகிழ்' என்று சொல்ல வாயெடுத்தெவள் அதை சொல்லாமலே நிறுத்திக் கொண்டாள்.

அவளை அடங்காத கோபத்தோடு பார்த்தவன் "அன்னைக்கே நீ எங்க அண்ணனை பத்தி சொல்லி இருந்தேன்னா ?!" என்று கேட்டவனை

அவள் கோபத்தோடு பார்த்து "சொல்லி இருந்தேன்னா நீங்க நம்பி இருப்பீங்களாக்கும்... அன்னைக்கு நான் ஷாலினி உங்களை காதலிக்கிறாங்கன்னு சொன்ன போது ... நீங்க என்ன சொன்னிங்க ? ஷாலினி என்னோட பெஸ்ட் ப்ரண்ட்டு... யார் என்ன சொன்னாலும் பரவாயில்லை நீ எங்க நட்டை கலங்கப்படுத்தன்னு என்கிட்ட கோபப்பட்டீங்க... நட்புக்கே அப்படின்னா கூடபிறந்த அண்ணனை பத்தி எப்படி ? அதுவும் அவர் என் மேல விருப்பப்படிறாருன்னு சொன்னா......" தவிப்போடு நிறுத்தி மீண்டும் பேசியவள்

"நல்லா யோசிச்சி பாருங்க மகிழ்... உங்க அண்ணன் வீட்டிலிருந்ததே உங்களுக்கு தெரியல.. நான் எதை சொல்லி எப்படி உங்களை நம்ப வைப்பேன்... " என்றவள் கேட்க அவன் தன் உணர்வுகளை கட்டுபடுத்த முடியாமல் மண்டியிட்டபடி மணல் மீது தன் கரத்தால் குத்தினான்.

பகைமையை விட துரோகம் வலி மிகுந்தது.

உடன் பிறந்த தமையனே தன் உணர்வோடு விளையாடியிருக்கிறேன் என்பதை எவ்விதம் அவனால் தாங்கி கொள்ள முடியும் ?

இயலாமையும் கோபமும் அவனை ஒருசேர ஆட்டிவித்தது.

ஜென்னிக்கு அவன் நிலையை பார்த்து உள்ளூர துடிக்க, எப்படி அவனை தேற்றுவது என்று புரியாமல் தவித்திருந்தாள்.

உயிர் உடலுக்கு பாரமாகுமா ? ஆனால் அந்த கணம் அவன் தேகத்திற்கு உயிர் பாரமாய் தோன்றியது என்றே சொல்ல வேண்டும்.

மனதை கொன்றுவிட்டு வாழ்வதை விட மரணித்து போவதே மேல் என்ற எண்ணம் தோன்ற இன்னும் உக்கிரமாய் தன் கரத்தை அழுத்தி குத்தினான்.

அவனாக அமைதியடைவான் என்று எண்ணியவளுக்கோ அவன் இன்னும் தீவிரமாய் மாறுகிறானே என்பதை பார்த்து அச்சம் தொற்றிக் கொண்டது.

இதற்கு மேல் அமைதியை இருத்தல் சரியல்ல என்றெண்ணி, "மகிழ் வேண்டாம் ப்ளீஸ்..." என்றவள் அவனை சமாதானப்படுத்த வேண்டி அவன் தோளினை தொட்டாள்.

அதே சமயம் அவனுக்காக அவள் வடித்த கண்ணீரும் அவன் மீது விழுந்து அவன் உணர்வுகளை தொட்டுச் சென்றது.

அவளின் வார்த்தைக்கும் கண்ணீருக்கும் மதிப்பு கொடுத்து ஒருவாறு அமைதியானவன்,

அவளை நிமிர்ந்து பார்த்த பார்வையில்,

நடந்ததை இனி மாற்றவே முடியாதா... ? என்று கேள்வி இருக்க,

அவன் பார்வையின் பொருளூணர்ந்தவள், முடியாது என்பது போல் பார்வையாலயே சமிஞ்சை செய்தாள்.

அவன் மனம் இன்னும் அமைதி நிலையை எட்டாமல் அவள் தோள்மீதிருந்த கரத்தை அவன் பிடித்து கொள்ள, அவள் தவிப்புற்றாள்.

வாழ்க்கை பூராவும் பற்றி கொள்ள அவள் விரும்பிய கரம் அது.

ஆனால் அந்த கனவெல்லாம் கானல்நீராய் போனப்பின், காலம் தாழ்ந்த அவனின் பிடியை ஏற்கமுடியாமல் அவள் அவதியுற, அவனோ குற்றவுணர்வோடு அவள் கரத்தை தன் விழிநீரால் நனைத்தான்.

"மகிழ் என்ன பன்றீங்க" என்றவள் அவஸ்த்தையோடு கேட்க,

அவள் கரத்தை விடாமலே "நான் பெரிய முட்டாளா இருந்திருக்கேன்டி.. என்னை நம்பி வந்த உனக்கு நான் அநியாயம் செஞ்சிட்டேன் சாக்ஷி" என்று சொல்லி கதறினான்.

அவள் கனத்த மனதோடு அவனருகில் அமர்ந்து, "ப்ளீஸ்... அழாதீங்க மகிழ்... இதுல உங்க மிஸ்டேக்னு எதுவும் இல்லை... நாம சேரக் கூடாதுன்னு விதி இருக்கு... அது நடந்திடுச்சு... ஆனா உண்மையை சொல்லனும்னா அதை விட பெட்டரான லைஃப்... பெட்டரான வொய்ஃப் உங்களுக்கு கிடைச்சிருக்கா... நீங்க லக்கிதான்" என்க,

அப்போது அவளை அவனை நிமிர்ந்து பார்க்க இரு விழிகளும் முதல் முறையாய் ஒரு சேர சங்கமித்து கொண்டன.

உணர்வுகளோடு மட்டுமே பேசியவர்கள் முதல் முறையாய் விழியோடு பேசிக் கொள்ள, அது மடிந்துவிட்ட அவர்களின் காதலுக்காக அவர்கள் செலுத்திய மௌன அஞ்சலி.

ஏக்க பெரூமூச்சொன்றை வெளிவிட்டவன் மெல்ல அவள் கரத்தை விடுவிக்க,
அப்போது அவனை முழுவதுமாய் மூழ்கடித்திருந்த சோகத்திலிருந்து அவள் விழியின் விசையால் கரையேறியிருந்தான்.


மெல்ல தன் அழுகையை உள்வாங்கி கொண்டவன்,

"நீ சந்தோஷமா இருக்கியா சாக்ஷி ?" என்று கேட்டவனின் பார்வையில் அக்கறையோடு மீதமாய் கொஞ்சம் காதலும் ஓட்டிக் கொண்டிருந்ததை மறுக்க முடியாது.

அவள் உடனே தன் முகத்தில் தேங்கியிருந்த சோகத்தை எல்லாம் வடித்துவிட்டு அவனை புன்முறுவலோடு நோக்கியபடி,

"என்ன மகிழ் ? இப்படி கேட்டீங்க? இன்னைக்கு இந்த உலகத்திலயே ஹேப்பியஸ்ட் உமன் நான்தான்னு சொல்வேன்... டேவிட் மாதிரி ஒரு ப்ரண்ட்... விக்டர் ஜென்னிஃபர் மாறி ஒரு அம்மா அப்பா.. அப்புறம் ராகவ் மாதிரி ஒரு பியாஃன்ஸின்னு கடவுள் எனக்கு கொடுத்ததெல்லாமே தி பெஸ்ட்தான்" என்று பூரிப்போடு உரைப்பது போல் காட்டிக் கொள்ள,

"கேட்கவே சந்தோஷமா இருக்கு சாக்ஷி" என்றவன் சொன்ன போதும், மனதில், அவள் சொன்னதெல்லாம் உண்மைதானா என்ற சந்தேகம் துளிர்விட்டது.

இருவருமே மேலே என்ன பேசுவது என்று யோசித்த வண்ணம் இருக்க அந்த கணம் அவர்களுக்கிடையில் ஓர் அழுத்தமான மௌனம் குடியேறியது.

நேரம் கடந்து செல்வதை அவனுக்கு உணர்த்த ஜென்னி தன் கைகடிகாரத்தை பார்த்தவாறு,

" நான் கிளம்பட்டுமா மகிழ்?" என்று தயக்கதோடு கேட்டாள்.

அவளை விழி இடுங்க பார்த்தவன்,

"நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவே இல்லை ஜென்னித்தா விக்டர்" என்க, அவன் பேச்சு தோரணை மாறியிருந்ததை அதிர்ச்சியாய் கவனித்தாள்.

இத்தனை தூரம் வந்த பின் உண்மையை தெரிந்து கொள்ளாமல் விடுவதா என்றெண்ணத்தோடு,

மகிழ் அவளிடம்"ஏன்... சாக்ஷி ... ஜென்னித்தாவா மாறனும் ? ? ?

சாக்ஷிக்கு என்னாச்சு?

தட்ஸ் தி மில்லியன் டாலர் க்விஷின்... ரைட்.... "

என்று கேட்டவன் தீர்க்கமான பார்வையோடு அவள் பதிலை எதிர்நோக்க,

அவளோ அந்த கணம் அவனிடம் எதை சொல்லி சமாளிப்பது என்று தீவிரமாய் யோசிக்கலானாள்.
Hi friends,
பிழைகள் இருப்பின் பொறுத்தருளூங்கள்.
உங்கள் கருத்தை மறவாமல் தந்தருளுங்கள்.


அடூத்த பதிவும் விரைவாக தருகிறேன். ஆனால் அடூத்த பதிவு இதுவாகதான் என்ற எதிர்பார்ப்புகளோடு படிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.
Its unpredictable! !!


இந்த Ud a பழைய பதிவுகளோட வர சீன்களோட ஒத்துப்பாருங்கள். இறுதிதியாய் ஜென்னி மகிழிடம் சொன்னது, வேந்தன் மகிழ் பிறந்த நாளன்று சந்தித்தது எல்லாமே கனெக்ட் ஆகும். அதை படிச்சி இதை செக் உங்களுக்கு குழப்பம் சரியாகும். எல்லாமே 10 ud kullla than irukum



(y):)
 




Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
அந்த வேந்தன் மாதிரி ஒரு கேவலமான கேரக்டர் ஏஹ் இருக்காதுல.... 😡😡

அவங்க ரெண்டு பேர் வலி புரிஞ்சிக்க முடியுது.... 😔

பட் இப்போ என்ன ஆகும்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top