Monisha
அமைச்சர்
- Joined
- Jan 17, 2018
- Messages
- 3,233
- Reaction score
- 58,772
Hi friends,
உங்க லைக்ஸ் கமெண்ட்ஸ் எல்லாம் எனக்கு ரொம்ப ஊக்கமாயிருந்தது. போனமுறை தலைப்பை பார்த்து எல்லாரும் ஏமாந்துவிட்டதாக சொன்னிங்க. இது நான் தெரிஞ்சி ப்ளான் பண்ணி பண்ணல. அத்தியாயம் எழுதி முடித்ததும் பொருத்தமான வார்த்தையை தலைப்பாய் சூட்டிடுவேன். இதுல இப்படி ஒரு குழப்பமிருக்கும்னு நானே எதிர்பார்க்கல.
அதுக்கு சாரி...
அது போகட்டும். இந்த பதிவையும் படிச்சி எப்படி இருந்துதுன்னு உங்க கருத்தை எழுதுங்க..
திருமண அரங்கேற்றம்
சையத்தின் திருமண சடங்கு எளிமையான முறையில் நடந்தேறின.
இஸ்லாமிய பாணியில் அந்த திருமணம் நிகழ்ந்து கொண்டிருக்க, மீடியாக்கள் எல்லாம் அவனின் திருமணத்தை நேரடியாக படம்பிடித்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
அதுவும் பெரிய பிரச்சனைக்கு பிறகு நிகழும் திருமணம் வேறு. ஆதலால் அவனின் திருமணம் மக்களிடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது
அதுவும் அல்லாமல் சையத் சொன்னபடியே மதுவை திருமணம் செய்து கொண்டதும், அது கலப்பு திருமணம் என்பதாலும் அவனின் மீதிருந்த தவறான அபிப்பிராயம் சற்று மாறியிருந்தது.
ஜென்னியும் அவன் திருமணத்தை தொலைகாட்சியில்தான் பார்த்தாள்.
அவளுக்கு சையத்தின் திருமணத்தை நேரில் பார்க்க அத்தனை ஆவலாய் இருந்த போதும் அவள் வருவதை அவனே விரும்பவில்லை எனும் போது எப்படி போக முடியும் ?
சையத்தை ஒரு வாரம் முன்பு அவன் வீட்டிற்கே சென்று பார்க்க போயிருந்தாள் ஜென்னி.
சாஜியும் அப்சானாவும் அவளிடம் இயல்பாகவே பேசினர்.
அதே நேரம் சையத் அவளை நிமிர்ந்து கூட பாராமல் "எப்ப வந்தீங்க ஜென்னி ?" என்று கேட்க,
"இப்பதான்" என்றாள்.
"அப்படியா ?!" என்றவன் அவளிடம்
"கொஞ்சம் வேலை இருக்கு... நான் வெளியே கிளம்பிறேன்... அப்புறம் மீட் பண்ணுவோமா ?!" என்று அவளை தவிர்க்க,
"நான் உங்ககிட்ட பேசனும் சையத்" என்றாள் அழுத்தமாக !
"கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு" என்றவன் தப்பி கொள்ள பார்க்க,
ஜென்னி கூர்ந்த பார்வையோடு "இப்படி சொல்றதுக்கு பதிலா என்கிட்ட பேச முடியாதுன்னு நேரடியாவே சொல்லிடலாமே" என்று அவள் புறப்பட யத்தனித்தாள்.
சாஜி இவர்களின் சம்பாஷணையை கவனித்து கொண்டுதான் இருந்தார்.
சையத் ஏன் அவளிடம் அப்படி நடந்து கொள்கிறான் என்று அவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
அப்போது இருக்கும் நிலையில் மகனையும் எதுவும் அவரால் கேட்கவும் முடியவில்லை.
ஜென்னி வெளியேறி கொண்டிருக்க சாஜி அவளை அழைத்து நிற்க சொல்லி "சையத்துக்கு வர பதினைந்தாம் தேதி நிக்காஹா வைச்சிருக்கோம்... அவசர அவசரமாய் முடிவாயிடுச்சு... யாரையும் சரியா கூப்பிட கூட முடியல... ஆனா நீ கண்டிப்பா வந்திடனும்" என்க,
அவள் சையத்தை நோக்கி
"சையத் என்னை கூப்பிடவேயில்லை ம்மா" என்றவள் கேட்க, அவன் மௌனமாய் நின்றிருந்தான்.
தான் மனதார நேசித்தவள். அவளை தன் திருமணத்தில் பார்க்குமளவுக்காய் அவன் மனதிற்கு சக்தியில்லை.
அதுவும் அல்லாமல் ஜென்னியை அவன் நேசித்தது அவளுக்கு தெரியவில்லை எனினும் மதுவுக்கு தெரியுமே !
மதுவிற்கும் அப்படி ஒரு சங்கடமான சூழலை தோற்றுவிக்க அவன் விரும்பாத காரணத்தால் அவனை அழைக்க விருப்பமில்லாதவன் போல் காட்டிக் கொள்ள அப்சானாவிற்கு ஒரளவுக்கு தன் தமையனின் மனநிலை நன்றாகவே புரிந்தது.
ஆனால் சாஜிக்கு அதிர்ச்சிகரமாய் இருந்தது.
அவர் மகனை நெருங்கி "ஜென்னியை உன் நிக்காஹாவுக்கு கூப்பிடு சையத்" என்றுரைக்க,
ஜென்னி இடைமறித்து "வேண்டா ம்மா அவருக்கு விருப்பமில்லன்னும் போது கம்பெல் பண்ணாதீங்க" என்று சொல்லிவிட்டு அவள் வெளியேறினாள்.
அந்த கணம் அவனின் மனமும் சுக்குநூறாய் உடைந்திருந்தது. இருப்பினும் அதை காட்டி கொள்ளாமல் உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடு நின்றிருக்க,
"என்ன சையத் நீ? இப்படி பண்ணிட்ட" என்றவர் மகனிடம் வருத்தத்தோடும் கோபத்தோடும் சொல்லிவிட்டு அகன்றார்.
அந்த சமயம் சையத் ஏதோ நினைவுவந்தவனாய் ஜென்னியின் பின்னோடு சென்று அவளை அழைக்க, அவளும் ஆவலாய் திரும்பினாள்.
"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்" என்றவன் சொல்ல, அப்போதும் அவன் பார்வை அவளிடம் நிற்கவில்லை.
"என்ன விஷயம் ?" என்று அவள் குழப்பமுற
"நாம பேசிட்டிருந்தோமே... அந்த மூவி... இனி அதை நான் பன்ற ஐடியா ல இல்ல..."
அவள் அதில்ச்சியோடு "ஏன் சையத்?" என்று கேள்வி எழுப்ப,
"அந்த படத்தை நான் பண்ணனும்னு ஆரம்பிச்சதில இருந்து எல்லாமே தப்பாவே நடக்குது... அதான் டிராப் பண்ணிட்டேன்..." என்று இறுக்கமான பார்வையோடு உரைத்தான்.
"இது உங்களோட சொந்த முடிவா ?" என்றவள் கேட்டு சந்தேகித்து பார்க்க பார்க்க, அவள் தெரிந்துதான் கேட்கிறாளோ என லேசாய் தடுமாறியவன் பதில் சொல்லாமல் ஆம் என்பது போல் தலையை மட்டும் அசைத்தான்.
சையத் இருக்கும் நிலையில் ராகவ் குறித்து எதுவும் பேச முடியாத சூழ்நிலையில் இருந்தான்.
ராகவின் மூலமாக மீண்டும் வேறு வேறு பிரச்சனைகளை தூக்கி சுமக்க அவன் விரும்பவில்லை. மதுவுக்கு நேர்ந்தது போல தன் தம்பி தங்கைகளுக்கும் ஏதேனும் நேர்ந்து விடுமோ என்று உள்ளூர அச்சப்பட்டு கொண்டிருந்தான்.
தவறான சேர்க்கையும் நட்பும் என்றாக இருந்தாலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியே தீரும் என்பதை சையத் அப்போது நன்றாக உணர்ந்திருக்க,
ராகவை எதிர்த்து கொண்டு ஜென்னியை அந்த படத்தில் நடிக்க வைக்க அவனுக்கு துணிவில்லை.
அதே நேரம் ஜென்னி அல்லாத வேறு ஒரு பெண்ணை அந்த படத்தின் கதாநாயகியாக அவனால் பொருத்தி பார்க்கவும் முடியாது.
இதனாலயே ஜென்னியிடம் இருந்து விலகி இருக்க யத்தனித்தான்.
ஆனால் ஜென்னி சையத்தின் நடவடிக்கை பேச்சின் மூலமாக அவன் பிரச்சனையை ஒரளவுக்கு கணித்தாலும் அதை அவனிடம் கேட்டு கொள்ளவில்லை.
ஆனால் அவள் சையத்தை பார்த்த செய்தியையும் அவன் நடந்து கொண்ட விதத்தையும் ராகவிடம் தெரிவிக்க, அவனுக்கு மிதந்திடாத குறை.
அதுவும் அவன் அந்த படத்தை இயக்க போவதில்லை என்று சொன்னதை ஜென்னி ராகவிடம் சொன்னதில் அவன் மனமெல்லாம் இன்பத்தில் மூழ்கி திளைத்திருந்தது.
ஆனால் அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் சாமர்த்தியமாய் அவன் வருத்தமுறுவது போல் நடிக்க,
"இப்ப என்ன பன்றது ராகவ் ?" என்றவள் கேட்க ஆழ்ந்து யோசிப்பது போல் பாவனை செய்தவன் "நான் வேணா சையத்கிட்ட பேசி பார்க்கிறேன்... ஆனா அவன் நான் சொல்றது கேட்பானான்னு தெரியல... அவனுக்கு என் மேல கொஞ்ச மனவருத்தம்" என்றான்.
"எதனால. ?" என்றவள் ஆர்வமாக கேட்க,
"நான் மது விஷயத்தில அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசல இல்ல.. அதான் அவனுக்கு கோபம்" என்றான்.
புத்திசாலித்தனமாக அவன் காய்களை நகர்த்த ஜென்னி அவனையே ஆழமாய் பார்த்து கொண்டிருந்தாள்.
அவன் மேலும் "ஆனா சையத் சொல்றதிலயும் பாயின்ட் இருக்கு... அந்த படத்தை பண்ணலாம்ன்னு ஆரம்பிச்சதில இருந்து எதுவுமே பாஸிட்டிவ்வா நடக்கல ஜென்னி... ஸோ அந்த படத்தை டிராப் பன்றதுதான் எனக்கும் சரின்னு படுது" என்க,
"ப்ச்... ஒகே " என்றவள் வருத்தத்தோடு சமாதனமடைய,
அதற்கு பிறகு இருவரும் அதை தவிர்த்து வேறு சில விஷயங்களை பற்றி அளவளாவினர்.
அவள் புறப்படும் தருவாயில் ராகவ் அவளிடம் "சையத் மூவிதான் டிராப்பாகிடுச்சே... இப்பையாச்சும் நம்ம மேரேஜ் பத்தி நீ ஒரு முடிவுக்கு வரலாமே" என்றதும் அவனை கூர்மையாய் நோக்கினாள்.
அவள் பார்வையில் இருப்பது கோபமா அல்லது குழப்பமா என்பதை உணர்ந்து கொள்ள முடியாமல் "உன்னோட டெசிஷன்தான் பைஃனல்... நீ யோசிச்சி சொல்லு" என்று பின்வாங்கினாலும் அவளுக்கு இம்முறை மறுக்க வேறு காரணமில்லை. சம்மதித்தே தீர வேண்டும் என்று எண்ணி கொண்டான்.
அவனின் எண்ணத்திற்கு ஏற்றாற் போல் ஜென்னியும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். ஆனால் திருமணம் கிறிஸ்துவ முறைப்படி வெகுவிமர்சையாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு!
அவனும் அவளின் எந்த விருப்பத்திற்கும் மறுப்பு தெரிவிக்காமல் உடன்பட்டான். அதே நேரம் இந்து முறைப்படியும் நடத்தி கொள்ளலாம் என அவனிடம் அவள் உரைத்திருக்க, அவனோ எம்மதமும் சம்மதம் என்றாகியிருந்தான்.
அவனுக்கு தேவை அவள். அது எப்படி எவ்வாறாக நிகழ்ந்தால் என்ன ?
அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணம் வெறியாய் மாறி வெகுநாளாகியிருந்தது. அவளுக்காக எதையும் செய்யவும் அவன் துணிந்திருந்தான்.
திருமண ஏற்பாடுகளுக்காக தண்ணியாக செலவாகும் பணம் குறித்து எல்லாம் அவன் கவலை கொள்ளவில்லை. அவளை மணம் புரிய வேண்டும் என்ற எண்ணமே திண்ணமாயிருந்தான்.
சிலந்தி தன் வலையாய் அழகாக பின்னுவது அதன் இரையை பிடிக்கத்தானே ?
இங்கே இறையாக மாற போவது யார் என்பதுதான் பெரும் சுவராஸ்ஸியத்திற்குரிய ஒன்று.
************
உங்க லைக்ஸ் கமெண்ட்ஸ் எல்லாம் எனக்கு ரொம்ப ஊக்கமாயிருந்தது. போனமுறை தலைப்பை பார்த்து எல்லாரும் ஏமாந்துவிட்டதாக சொன்னிங்க. இது நான் தெரிஞ்சி ப்ளான் பண்ணி பண்ணல. அத்தியாயம் எழுதி முடித்ததும் பொருத்தமான வார்த்தையை தலைப்பாய் சூட்டிடுவேன். இதுல இப்படி ஒரு குழப்பமிருக்கும்னு நானே எதிர்பார்க்கல.
அதுக்கு சாரி...
அது போகட்டும். இந்த பதிவையும் படிச்சி எப்படி இருந்துதுன்னு உங்க கருத்தை எழுதுங்க..
திருமண அரங்கேற்றம்
சையத்தின் திருமண சடங்கு எளிமையான முறையில் நடந்தேறின.
இஸ்லாமிய பாணியில் அந்த திருமணம் நிகழ்ந்து கொண்டிருக்க, மீடியாக்கள் எல்லாம் அவனின் திருமணத்தை நேரடியாக படம்பிடித்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தன.
அதுவும் பெரிய பிரச்சனைக்கு பிறகு நிகழும் திருமணம் வேறு. ஆதலால் அவனின் திருமணம் மக்களிடையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது
அதுவும் அல்லாமல் சையத் சொன்னபடியே மதுவை திருமணம் செய்து கொண்டதும், அது கலப்பு திருமணம் என்பதாலும் அவனின் மீதிருந்த தவறான அபிப்பிராயம் சற்று மாறியிருந்தது.
ஜென்னியும் அவன் திருமணத்தை தொலைகாட்சியில்தான் பார்த்தாள்.
அவளுக்கு சையத்தின் திருமணத்தை நேரில் பார்க்க அத்தனை ஆவலாய் இருந்த போதும் அவள் வருவதை அவனே விரும்பவில்லை எனும் போது எப்படி போக முடியும் ?
சையத்தை ஒரு வாரம் முன்பு அவன் வீட்டிற்கே சென்று பார்க்க போயிருந்தாள் ஜென்னி.
சாஜியும் அப்சானாவும் அவளிடம் இயல்பாகவே பேசினர்.
அதே நேரம் சையத் அவளை நிமிர்ந்து கூட பாராமல் "எப்ப வந்தீங்க ஜென்னி ?" என்று கேட்க,
"இப்பதான்" என்றாள்.
"அப்படியா ?!" என்றவன் அவளிடம்
"கொஞ்சம் வேலை இருக்கு... நான் வெளியே கிளம்பிறேன்... அப்புறம் மீட் பண்ணுவோமா ?!" என்று அவளை தவிர்க்க,
"நான் உங்ககிட்ட பேசனும் சையத்" என்றாள் அழுத்தமாக !
"கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு" என்றவன் தப்பி கொள்ள பார்க்க,
ஜென்னி கூர்ந்த பார்வையோடு "இப்படி சொல்றதுக்கு பதிலா என்கிட்ட பேச முடியாதுன்னு நேரடியாவே சொல்லிடலாமே" என்று அவள் புறப்பட யத்தனித்தாள்.
சாஜி இவர்களின் சம்பாஷணையை கவனித்து கொண்டுதான் இருந்தார்.
சையத் ஏன் அவளிடம் அப்படி நடந்து கொள்கிறான் என்று அவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
அப்போது இருக்கும் நிலையில் மகனையும் எதுவும் அவரால் கேட்கவும் முடியவில்லை.
ஜென்னி வெளியேறி கொண்டிருக்க சாஜி அவளை அழைத்து நிற்க சொல்லி "சையத்துக்கு வர பதினைந்தாம் தேதி நிக்காஹா வைச்சிருக்கோம்... அவசர அவசரமாய் முடிவாயிடுச்சு... யாரையும் சரியா கூப்பிட கூட முடியல... ஆனா நீ கண்டிப்பா வந்திடனும்" என்க,
அவள் சையத்தை நோக்கி
"சையத் என்னை கூப்பிடவேயில்லை ம்மா" என்றவள் கேட்க, அவன் மௌனமாய் நின்றிருந்தான்.
தான் மனதார நேசித்தவள். அவளை தன் திருமணத்தில் பார்க்குமளவுக்காய் அவன் மனதிற்கு சக்தியில்லை.
அதுவும் அல்லாமல் ஜென்னியை அவன் நேசித்தது அவளுக்கு தெரியவில்லை எனினும் மதுவுக்கு தெரியுமே !
மதுவிற்கும் அப்படி ஒரு சங்கடமான சூழலை தோற்றுவிக்க அவன் விரும்பாத காரணத்தால் அவனை அழைக்க விருப்பமில்லாதவன் போல் காட்டிக் கொள்ள அப்சானாவிற்கு ஒரளவுக்கு தன் தமையனின் மனநிலை நன்றாகவே புரிந்தது.
ஆனால் சாஜிக்கு அதிர்ச்சிகரமாய் இருந்தது.
அவர் மகனை நெருங்கி "ஜென்னியை உன் நிக்காஹாவுக்கு கூப்பிடு சையத்" என்றுரைக்க,
ஜென்னி இடைமறித்து "வேண்டா ம்மா அவருக்கு விருப்பமில்லன்னும் போது கம்பெல் பண்ணாதீங்க" என்று சொல்லிவிட்டு அவள் வெளியேறினாள்.
அந்த கணம் அவனின் மனமும் சுக்குநூறாய் உடைந்திருந்தது. இருப்பினும் அதை காட்டி கொள்ளாமல் உணர்ச்சிகள் துடைத்த முகத்தோடு நின்றிருக்க,
"என்ன சையத் நீ? இப்படி பண்ணிட்ட" என்றவர் மகனிடம் வருத்தத்தோடும் கோபத்தோடும் சொல்லிவிட்டு அகன்றார்.
அந்த சமயம் சையத் ஏதோ நினைவுவந்தவனாய் ஜென்னியின் பின்னோடு சென்று அவளை அழைக்க, அவளும் ஆவலாய் திரும்பினாள்.
"உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லனும்" என்றவன் சொல்ல, அப்போதும் அவன் பார்வை அவளிடம் நிற்கவில்லை.
"என்ன விஷயம் ?" என்று அவள் குழப்பமுற
"நாம பேசிட்டிருந்தோமே... அந்த மூவி... இனி அதை நான் பன்ற ஐடியா ல இல்ல..."
அவள் அதில்ச்சியோடு "ஏன் சையத்?" என்று கேள்வி எழுப்ப,
"அந்த படத்தை நான் பண்ணனும்னு ஆரம்பிச்சதில இருந்து எல்லாமே தப்பாவே நடக்குது... அதான் டிராப் பண்ணிட்டேன்..." என்று இறுக்கமான பார்வையோடு உரைத்தான்.
"இது உங்களோட சொந்த முடிவா ?" என்றவள் கேட்டு சந்தேகித்து பார்க்க பார்க்க, அவள் தெரிந்துதான் கேட்கிறாளோ என லேசாய் தடுமாறியவன் பதில் சொல்லாமல் ஆம் என்பது போல் தலையை மட்டும் அசைத்தான்.
சையத் இருக்கும் நிலையில் ராகவ் குறித்து எதுவும் பேச முடியாத சூழ்நிலையில் இருந்தான்.
ராகவின் மூலமாக மீண்டும் வேறு வேறு பிரச்சனைகளை தூக்கி சுமக்க அவன் விரும்பவில்லை. மதுவுக்கு நேர்ந்தது போல தன் தம்பி தங்கைகளுக்கும் ஏதேனும் நேர்ந்து விடுமோ என்று உள்ளூர அச்சப்பட்டு கொண்டிருந்தான்.
தவறான சேர்க்கையும் நட்பும் என்றாக இருந்தாலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியே தீரும் என்பதை சையத் அப்போது நன்றாக உணர்ந்திருக்க,
ராகவை எதிர்த்து கொண்டு ஜென்னியை அந்த படத்தில் நடிக்க வைக்க அவனுக்கு துணிவில்லை.
அதே நேரம் ஜென்னி அல்லாத வேறு ஒரு பெண்ணை அந்த படத்தின் கதாநாயகியாக அவனால் பொருத்தி பார்க்கவும் முடியாது.
இதனாலயே ஜென்னியிடம் இருந்து விலகி இருக்க யத்தனித்தான்.
ஆனால் ஜென்னி சையத்தின் நடவடிக்கை பேச்சின் மூலமாக அவன் பிரச்சனையை ஒரளவுக்கு கணித்தாலும் அதை அவனிடம் கேட்டு கொள்ளவில்லை.
ஆனால் அவள் சையத்தை பார்த்த செய்தியையும் அவன் நடந்து கொண்ட விதத்தையும் ராகவிடம் தெரிவிக்க, அவனுக்கு மிதந்திடாத குறை.
அதுவும் அவன் அந்த படத்தை இயக்க போவதில்லை என்று சொன்னதை ஜென்னி ராகவிடம் சொன்னதில் அவன் மனமெல்லாம் இன்பத்தில் மூழ்கி திளைத்திருந்தது.
ஆனால் அதனை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் சாமர்த்தியமாய் அவன் வருத்தமுறுவது போல் நடிக்க,
"இப்ப என்ன பன்றது ராகவ் ?" என்றவள் கேட்க ஆழ்ந்து யோசிப்பது போல் பாவனை செய்தவன் "நான் வேணா சையத்கிட்ட பேசி பார்க்கிறேன்... ஆனா அவன் நான் சொல்றது கேட்பானான்னு தெரியல... அவனுக்கு என் மேல கொஞ்ச மனவருத்தம்" என்றான்.
"எதனால. ?" என்றவள் ஆர்வமாக கேட்க,
"நான் மது விஷயத்தில அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசல இல்ல.. அதான் அவனுக்கு கோபம்" என்றான்.
புத்திசாலித்தனமாக அவன் காய்களை நகர்த்த ஜென்னி அவனையே ஆழமாய் பார்த்து கொண்டிருந்தாள்.
அவன் மேலும் "ஆனா சையத் சொல்றதிலயும் பாயின்ட் இருக்கு... அந்த படத்தை பண்ணலாம்ன்னு ஆரம்பிச்சதில இருந்து எதுவுமே பாஸிட்டிவ்வா நடக்கல ஜென்னி... ஸோ அந்த படத்தை டிராப் பன்றதுதான் எனக்கும் சரின்னு படுது" என்க,
"ப்ச்... ஒகே " என்றவள் வருத்தத்தோடு சமாதனமடைய,
அதற்கு பிறகு இருவரும் அதை தவிர்த்து வேறு சில விஷயங்களை பற்றி அளவளாவினர்.
அவள் புறப்படும் தருவாயில் ராகவ் அவளிடம் "சையத் மூவிதான் டிராப்பாகிடுச்சே... இப்பையாச்சும் நம்ம மேரேஜ் பத்தி நீ ஒரு முடிவுக்கு வரலாமே" என்றதும் அவனை கூர்மையாய் நோக்கினாள்.
அவள் பார்வையில் இருப்பது கோபமா அல்லது குழப்பமா என்பதை உணர்ந்து கொள்ள முடியாமல் "உன்னோட டெசிஷன்தான் பைஃனல்... நீ யோசிச்சி சொல்லு" என்று பின்வாங்கினாலும் அவளுக்கு இம்முறை மறுக்க வேறு காரணமில்லை. சம்மதித்தே தீர வேண்டும் என்று எண்ணி கொண்டான்.
அவனின் எண்ணத்திற்கு ஏற்றாற் போல் ஜென்னியும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாள். ஆனால் திருமணம் கிறிஸ்துவ முறைப்படி வெகுவிமர்சையாக ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையோடு!
அவனும் அவளின் எந்த விருப்பத்திற்கும் மறுப்பு தெரிவிக்காமல் உடன்பட்டான். அதே நேரம் இந்து முறைப்படியும் நடத்தி கொள்ளலாம் என அவனிடம் அவள் உரைத்திருக்க, அவனோ எம்மதமும் சம்மதம் என்றாகியிருந்தான்.
அவனுக்கு தேவை அவள். அது எப்படி எவ்வாறாக நிகழ்ந்தால் என்ன ?
அவளை அடைந்தே தீர வேண்டும் என்ற எண்ணம் வெறியாய் மாறி வெகுநாளாகியிருந்தது. அவளுக்காக எதையும் செய்யவும் அவன் துணிந்திருந்தான்.
திருமண ஏற்பாடுகளுக்காக தண்ணியாக செலவாகும் பணம் குறித்து எல்லாம் அவன் கவலை கொள்ளவில்லை. அவளை மணம் புரிய வேண்டும் என்ற எண்ணமே திண்ணமாயிருந்தான்.
சிலந்தி தன் வலையாய் அழகாக பின்னுவது அதன் இரையை பிடிக்கத்தானே ?
இங்கே இறையாக மாற போவது யார் என்பதுதான் பெரும் சுவராஸ்ஸியத்திற்குரிய ஒன்று.
************