ஆனந்தமான எபிஸோட்.. சாக்ஷி என்கிற ஆதவன் ஜென்னியாக மேகத்தால் மூடி மேகமூட்டமாகி இருந்த நிலை மெது மெதுவாய் விலகுகிறது...
மன்னிப்பை தவிர சிறந்த தண்டனை இல்லை என்பதை நிருப்பித்தாள் சாக்ஷி ..வேந்தன் ஆத்திரம், தீய எண்ணங்களின் எடுத்துக்காட்டு.. கர்மா என்பது கப்பைஸ் இல்லலையே.. உருக வைத்த ஆண்டவனுக்கு இருக்க தெரியாதா என்ன???
ராகவ் ,விநாச காலத்தில் விபரீத புத்தி என்பதை உன் விஷயத்தில் உண்மை.. சிறுக சிறுக உன்னவர்களை இழந்தாய்..யாருக்காக?? யார் என்ன என்று தெரியாமல் பழகிய ஒருவளுக்கா?.. அவளின் யவ்வனம் குருடாக்கியது உன்னை.. விதைத்தை ஆறுவடை செய்ய காத்திரு.. நாங்களும் ஆவலுடன் காண விழைகிறோம் அவ் ஆருவடை திருநாளை...
டேவிட் உன் தூய அன்பிற்கு முன் எதுவும் தூசியே.. தாம்பத்தியம் என்ற செடிக்கு உரம் வேண்டுமானால் மட்டும் உடல் தேடல் இருக்கலாம்.. உயிர் ஊற்று அன்பு மட்டும் மனம்கனிந்த அன்பு மட்டுமே.. அடி மேல் அடி வைத்தால் அம்மியே நகரும் .. இந்த சாக்ஷி எம்மாத்திரம்.. கவலை படாத நாங்க எல்லாம் மோனியை நச்சரிச்சாவது உன்ன சேர்த்து வைச்சுடரோம் சாக்ஷியோடு ??