umasundaram
மண்டலாதிபதி
Super Bro.....சகோதரி,
பலாத்காரத்தினால்
கெடுக்கப்படும் ஒரு பெண்
கற்பு இழந்தவள் அல்ல!
அவளையும், அவள் வயிற்று
சிசுவையும் ஏற்றுக்கொள்பவனே
தைரியமுள்ள இந்திய இளைஞன்.
_ மகாத்மா காந்தியடிகள் _
என்ற கூற்றை மெய்ப்பது போல், சந்தர்ப்பத்தினால் கெடுக்கப்படும் பெண், அதையே நினைத்து கண்ணீர் சிந்தாமல் பீனிக்ஸ் பறவையாய் உயிர் கொண்டு வாழ வா என்று உரைந்த இந்த நாவல் அருமை சகோ.
முதலில் கொஞ்சம் தயக்கம் போலவே படித்தேன். பதிவு வர வர அடுத்து என்ன என்ன என்ற ஆர்வம் கொள்ளும் நாவல். நாவலில் அங்கங்கே வந்த கருத்து குவியலும், உரையாடலும் எனக்கு மிக பிடித்தம்.
பொது கருத்து போல் வந்த, இந்த உலகம் வஞ்சகமானது, சுயநலமானது, வியாபாரம் என்ற மாய விலங்கை பூட்டி மக்களே அறியாமல் அடிமையாக்குவது / நீ நல்லவனா இருக்கணும் என்று நினைத்தால் இந்த உலகம் உன்னை சிலுவையில் அறைஞ்சிட்டுதான் மறு வேலை பார்க்கும் என்று ஆரம்பித்து பெண்ணுக்கு மானமும், ஆணுக்கு கண்ணியமும் முக்கியம் என்று சென்று, சமூக சாடல் போல் மெத்த படித்த வேலைக்கு போகும் பெற்றோர் வளர்ப்பில் கண்டிப்பு இருந்தாலும் கவனிப்பு குறைவாய் இருக்கும் என்பது போன்றும், கலைஞனுக்கு பரிசை விட பாராட்டும் கைத்தட்டலுமே முக்கியம் என்றும், எவ்வளவு நல்லவராக இருந்தாலும் எதோ ஒரு விதத்தில் அவர்கள் சுயநலம் பெரிதாக போய்விடுகிறது என்று படிக்கும்போது உண்மை உண்மை என்றே கூறதோன்றுகிறது சகோ. எவ்வளவு அழகான கருத்துகள். நிறைய ரொம்ப நிறைய இடம் ரசித்தேன் சகோதரி.
நாவலில் உரையாடல் தான் சகோ மிக அற்புதம், பார்மூலா மாதிரி வாழவேண்டாம், அதே நேரத்தில் இவ்வளவு பாஃர்மலாவும் வாழ வேண்டாம், நீ கடலை பார்த்த, நான் உன்னை பார்த்தேன் {என் கடல் நீயல்லவா}, சில விஷயங்கள் ஒரே மாதிரி தெரியலாம், ஆனா ஒன்னு இல்ல என்று பல பல இடங்கள் அருமை சகோ.
பதிவுக்கு பதிவு ஒரு எதிர்பார்ப்பு வைத்து, புள்ளி, புள்ளியா வைத்து கடைசியில் கோலத்தை அருமையாக முடித்தது போல் அருமையாக எல்லா மூடிச்சியையும் அவிழ்த்து நாவலை ஒரு நிறைவு செய்த விதம் அருமை சகோதரி. வாழ்த்துகள்.
Awesome story ...Monisha