இன்னும் இரண்டு பகுதி இருக்கு, ஆனாலும் என்னால பதிவு போடாம இருக்க முடியல.. அதான் போட்டுட்டேன் மக்களே...
“தேடிச் சோறு நிதம் தின்று;
அதில் திண்ணைக் கதைகள்பல பேசி மனம் வாடித் துன்பம் மிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவம் எய்தி கொடும் கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத் தாயோ? ”
இது வெறும் பாரதி கவிதை மட்டும் இல்லைங்க, நமக்கான உந்துதல் சக்தி..
அந்த மாதிரி ஒரு நல்ல உந்துதலா, பெண் என்பவள் ஆக்க சக்தி..ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற அழகான கருவோடு , தேடலில் நம்மை தேடி வந்து "நான் அவள் இல்லை" என்றவளை பற்றி பகிர விளைகிறேன்..
நான் அவள் இல்லை தலைப்பை பார்த்து தான் ,தலையை நுழைத்தேன்.. தலைக்குப்புற இக்கதைக்குள் விழுவேன் என்று எண்ணவுமில்லை..
கதை தொடங்குவதே ஒரு விபத்தில்.. சாக்ஷி , பிரம்மன் அவளை செதுக்கிய பிறகு பிரம்மித்து நின்றதில், அவள் நயனங்களை நயமாய் விரிய செய்ய மறந்தான் போல.. ஒளி பொருந்திய முகத்தில் விழிக்கு மட்டும் அப் புகழ் கிட்டவில்லை... ஆமாம் சாக்ஷி ஒரு கண்பார்வை அற்றவர்...
குறை என்பது நாம் நம்மில் ஒடுங்கினால் தான்.. சாக்ஷி பாரதி கண்ட புதுமைபெண்.. வீணையின் வாணி.. கச்சேரிகளில் வீணை வாசிப்பவர்..
இவரை சுற்றிய நகரும் கதை.. இவருக்கு ஏற்படும் விபத்து எத்தனை பேயருடைய வாழ்வை பந்தாட போகிறது.. ஏன் விபத்து, எதனால், யாரால், என்ன ஆனது அவளுக்கு?என்று பல பல கேள்விக்குறிகளோடு நம்மை உள்ளிளுக்கிறார் ஆசிரியர்...
இக்கதையில் 3 முக்கியமான கதைமாந்தர்கள்.. டேவிட், மகிழ், சையித் இவர்கள் சாக்ஷியின். காவலன்,காதலன்,கேண்மை..
டேவிட்- சிறந்த மனிதன் , புடம் போட்ட தங்கம்.. டேவிட் தாமஸ் பிரபல ஜெ தொலக்காட்சியின் தலைமை பொறுப்பு வகிப்பவர்.. இவரால் தான் நம் சாக்ஷியின் வாழ்வு தலைகீழாய் மாறும், அது நன்மையான மாற்றம்.. அவளின் ஒவ்வொரு அசைவையும் நட்புடன் ரசிக்கும் இதயத்தில் எங்கோ அவர் அறியாமல் அவள் மேல் காதல் பூ மொட்டுவிடும்.. அது மலர்ந்து மணம் வீசியதா ??
மகிழ் ஒர் ஆர்.ஜெ.. சாக்ஷியை அவளாகவே விரும்பியவன்.. அவளுக்காக உயிர் துறக்கும் காதலன்.. அவளை அணு அணுவாய் உள்வாங்கி.. அவள் பிரிவில் நரக துயில் கொண்டு.. சந்தர்ப வசத்தால் அடுத்தவள் கரம் பிடித்து.. மன அளர்ச்சியில் அளன்று கொண்டிருக்கும் உருக்கமான அன்பு காதலன்..எதனால் இவர்களுக்குள் இப்பிரிவு???
சையித் மத்திய வகுப்பை சார்ந்து இயக்குனர் என்ற ஒரே கனவில் லாடம் கட்டிய குதிரையாய் பயணிக்கும் ஒர் லட்சிய இளைஞன்.. அவன் லட்சியம் நிறைவேறியதா?? சாக்ஷிக்கும் அவனுக்கும் எப்படி நட்பு மலர்ந்து???
வேந்தன் ,ராகவ் .. கதையில் ஹிரோ என்று இருந்தால் வில்லன் வேண்டுமே.. இவர்கள் தான் அந்த அற்ப பதர்கள்..சாக்ஷியின் வாழ்வை சின்னாபின்னமாகி சிதைத்த மகானுபாவர்கள்.. ஆனால் ஏன்??
இப்படி பல கேள்விக்கு பதில் சொல்லுவாள் சாக்ஷி அல்ல மிஸ் ஜென்த்தா விக்டர் (எ) ஜென்னி..
யாரிந்த ஜென்னி? இவள் யாரை ஆக்கினாள்? யாரை அழித்தாள்? எதற்காக இவள் இதை செய்தாள்? இந்த கேள்விகளின் பதில் என்னிடம் இல்லை ஏன்னென்றால் நான் அவள் இல்லை?? நீங்களே கேளுங்கள்...
கண் தெரியாத சாக்ஷி ஒரு விபத்தில் சிக்கி டேவிடின் மூலமாக மருத்துவமனையில் சேர்க்கபடுகிறாள்..கவலைகிடமான நிலையில்.. அவள் இறந்தாள் என்ற செய்தி அவளை விரும்பிய மகிழையும் அவள் உயிர்த்தோழி மாயாவையும் நிலை குலைய செய்கிறது..சந்தர்ப்ப வசத்தால் மாயாவின் கரம் பிடிக்கும் மகிழுக்கு அவன் தமையன் வேந்தனின் திருமணத்திற்கு அழைப்பு வருகிறது.. அப்போது தான் அவன் வாழ்வில் சூராவளி வீச தொடங்குகிறது..
சையித் அவன் கனவை ராகவ் என்ற பிரபல நடிகர் மூலம் மெய்பிக்கிறான்.. தன் கனவு படத்தை எடுக்க தன் மனம் செதுக்கிய பெண்ணை வரைய சொல்ல அதில் சிரிக்கிறாள் அத் தேவதை.. அதை கண்டு ஒருவனுக்கு காம வெறி,ஒருவனுக்கு காதல் நெடி..
அத் தேவதை வரவு யார் யாருக்கு வரம் யார் யாருக்கு சாபம்.. என்பதே இக்கதை..
ஏன் இந்த கதையை படிக்கணும்..
1. பாரதிக்காக.. லவ் ப்ரபோஸல் பண்ணணுமா? அதுவும் புத்திசாலிதனமா? இந்த எழுத்தாளர் அதற்கு வழி சொல்லி கொடுத்து இருக்காங்க.. உபயோகித்து பயன் பெறுக??
2. பெண் என்றால் வெறும் பேதையல்ல ,அவள் ஆணி வேர் அன்பூட்டிய கை ஆஸிட் வீசவும் தயங்காது என்று ஒரு தைரியமான பெண்ணை காம்மிச்சு இருக்காங்க
3. பெண் வன்கொடுமை அவளை எவ்வளவு உருகுலைக்கும், அதில் எப்படி வெளி வருகிறாள்.. சுற்றத்தின் நம்பிக்கை வார்த்தை அத் தருணத்தில் எவ்வளவு தெம்பு தரும் என்பதற்காக..
4.ஆத்திரம் ,அகம்பாவம்,கர்வம் ஒருவனை எவ்வளவு இழி நிலைக்கு இட்டு செல்லும், எந்த வகை போதையும் எவ்வளவு ஆபத்தானது என்ற கூற்றிற்காக..
5. ஆண்மகன் என்ற இலக்கணத்தை வகுத்து , இவர்கள் நிஜத்தில் காண மாட்டோமா என்று ஒரு நிமிட எண்ணத்தை ஏற்படுத்தியதற்காக..
6. ஸிட்டுவேஷன் சாங்ஸ் காக..
7.ப்ராக்டிகல் நரேஷன் காக..
8. காமம் தாண்டி காதலை காதலாகவும், காதலின் வலியை நய் கண்முன் நிறுத்தியதர்காக..
நான் அவளில்லை கண்டிப்பா படிச்சு முடித்ததும் உங்களுள் ஒரு திருப்தியை தருவாள் என்று நம்புகிறேன் என்னை போல..
" வீணையின் நாதம் சுருதி சேர்த்தது
அவன் குரலின் கீதம்..
கண்காணா கண்ணனை காதோடு அணைத்து வைத்தேன்..
காலனுக்குத்தான் கண்ணயில்லையோ?
காமுகனால் கசக்கபட்டேன்
தேவதூதன் வந்தான் இருண்ட வானில் விடிவெள்ளியாய்..
அகபுற ரணங்களில் உந்துதலால் உயிர்பித்தேன் ஃபினிக்ஸ் பறவையாய்
நட்புக்குள் காதல் வந்தால் கடவுளும் ஊமையாவாரோ?
புயலில் சிக்கிய என்னை தென்றலாய் தீண்டினான்..
குடியிருந்த தெய்வம் பிறர் கையில் கண்டு..
கண்கண்ட தெய்வத்தை இருத்தவா கர்பகிரக்த்தில்?
உடல் புசிக்க பறந்த வல்லூரை கொன்று குவிக்க திராணியில்லை
சாமர்த்திய சாமரம் வீசி
சடுதியில் காய்கள் வீழ்த்த
இதோ என் வானில் விடியல்
என் போன்ற பெண்களுக்கும் கடைக்குமா , இத்தகைய விடியல்????"