நட்பு மலர்கள்!
ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு நிறங்கள்..
ஒவ்வொரு மலருக்கும் ஒவ்வொரு மணங்கள்..
மலரின் நிறங்கள் வேறாக இருக்கலாம்..
மலரின் மணங்கள் வேறாக இருக்கலாம்..
மலர் மலர்ந்த இடம் கூட வேறாக இருக்கலாம்..
மலரின் மனம் என்றும் ஒன்றுதானே..
மலரின் மணம் வேறு..
மலரின் நிறம் வேறு..
மலர்ந்த இடமும் வேறு..
நாம் சேரும் இடம் மட்டும்..
கதம்பம் என்ற மலர் தொகுப்பாக
இணைந்து இறைவனின் தோள்களில்
மலராக மணம் வீசுகிறோம்..
இந்த மலர்களுக்கு முகம் தெரியாது..
இந்த மலர்களுக்கு நிறம் தெரியாது..
இந்த மலர்களுக்கு மணம் தெரியாது..
மனதில் முதல் விதையாக விழுந்து..
செடியாக முளைத்து மலராக மலர்ந்து..
மனம் முழுவதும் சோலையாக மாற்றுகிறது..
நமது மனதில் விழுந்த முதல் விதை
இன்று சோலையாக மாறி மலர்கள் மலர்ந்து
மனம் எங்கும் மணம் வீசுகிறது..
எனது மனதில் விழுந்த
முதல் விதை..
உன் மீதான நட்பு விதை..
உன் மீது கொண்ட நட்புக்கு
மணம் வேண்டாம்..
நிறம் வேண்டாம்..
நட்பு மட்டும் போதும்..
- சந்தியா ஸ்ரீ
அனைத்து நட்பூக்களுக்கும் எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்..
Last edited: