Aparna
அமைச்சர்
Thanks ka?Super
Thanks ka?Super
Thanks naemi ?kalakureenga aparna...
Inum niraya iruku ka..thanks kaமிகவும் அருமை அபர்ணா
திங்கள், அயில், தவிர மற்ற அனைத்தும் எனக்கு புதிய வார்த்தைகளே...
கற்று கொடுத்தமைக்கு மிக்க நன்றி
Thanks da?Akka romba arumai ka... indha varthaikalailam kettathe illa... unga kuda iruka engaluku kavithaikala mattum kodukkama solliyum kodukaringa... athukaga thanks ka....
Thanks dasuper appukka
Thanks Mani akka??அப்புமா சூப்பர்டா
Thank you ?Nice
Wow ????திங்களேன பார்த்த முதல்
திங்கள் தோறும் என்னுள் வளர்கிறாள்
அவள் விழி அயிலை தாங்க
அந்த அயிலவனாலும் முடியுமோ?
உலவையிடம் தூது சொன்னால்
உலவையை திருப்பி தருவாளோ?
என் கந்தங்கள் செயலாற்ற உன்
காதல் கந்தம் தனை பொழியாயோ?
பூவில் மயங்கிய கழுதேன என்
மனத்தில் கழுதாட்டம் போடுகிறாயே
பேதையின் காதை கேட்காமல் நம்
காதலின் காதை முழுபெறுமா?
தொடரும் இந்த கேவலத்தினால்
பிச்சி கேவலம் ஆவேனோ?
அவளின் தனிமத்தை எண்ணி என்
தனிமங்கள் முள்ளானதேன்?
உனை சூழ்ந்த வல்லை உடைத்து
வல்லையென என் வாழ்வில் வா ஆருயிரே!!!
நாமெனும் ஒரு சொல்லாய் பொருள் தருவோம் நீயும்நானுமாய் !!!
குறிப்பு:-
அழகு தமிழில் ஒரு சொல்லுக்கு பல பொருளுண்டு அதுவே தமிழின் வனப்பு!!! அதை போல் சில சொற்கள்
திங்கள்- நிலா, மாதம்
அயில்-கூர்மை,வேல்
உலவை-காற்று, மறுப்பு
கந்தம்- உறுப்புகள்,கருணை
கழுது-வண்டு,பேய்
காதை-மொழி,கதை
கேவலம்- தனிமை,முத்தி
தனிமம்-அழகு, மெத்தை
வல்லை-மதில், விரைவு