Aparna
அமைச்சர்
நிழற்படத்தில் மூலமாக நிஜமென உயிர்கலந்தோம் நீயும் நானும்
கணிணி உலகத்தினரின் கண்ணாடியாய்
களிப்பினுடனும் களிம்புகளுடனும்
நீயும் நானும்..
குருஞ்செய்தி குறுகுறுக்க
முதல் சந்திப்பில்
வேறு உலகத்தில்
நீயும் நானும்..
மணமாக மணமாலை
மனதோடு பேசிய மனங்களாக
நீயும் நானும்..
நாணமோ நானுமா இதில்
பல்வேறு நிற,புற மாற்றத்தில்
நீயும் நானும்..
வண்ணமயமான வாழ்க்கை
வானுயுர வெற்றியை நோக்கி
நீயும் நானும்..
விடியாத இரவுகளுடனும்
விலகாத நம் நினைவுகளுடனும்
நீயும் நானும்..
உலகம் மறந்த உன் உறக்கம்
தொலைபேசியில் தானா நம் கிரக்கம்
நீயும் நானும்..
முன்னேற்ற பாதையில் நீ ஓட
தனிமை துயரில் நான்வாட
நீயும் நானும்..
நாம் என்ன சந்திப்பிழையா?
நாம் சந்தித்ததே பிழையா?
தெரியாத விடைகளுடன்
நீயும் நானும்..
அழற்சி ஒருபுறம்
இயக்குநீரின் இடக்கல் மறுபுறம்
அகவெம்மையை உணர்ந்தபடி
நீயும் நானும்..
வார்த்தைகள் பக்கமில்லாமல்
மெளனத்தின் மொழியாற்றலில் சிக்குண்டு சில நாட்கள்
நீயும் நானும்..
பிரிவு தான் பரிவு தருமா?
பொறிகளை பொரி வைத்து பிடிக்க எண்ணும்
நீயும் நானும்
காரணமில்லா அழுகை
கசங்கி துடிக்கும் இதயத்துடன்
நீயும் நானும்..
தாயறியா சூல்லுண்டோ
நம் தவிப்புக்கு மருந்தாய் நம் காதலுடன்
நீயும் நானும்..
மௌனமும் அழகுதான் முழுதாய் நம்மை வெற்றி கொண்டவர் தோள்மீது தலைசாய்வது என்றூணர்ந்த
நீயும் நானும்..
உயிரோட்டமாய் நம் உயிர்நாதமாய் நம்
உயிர் கலந்த உயிருடன்
நீயும் நானும்..
காலங்கள் நம் நாட்களை கழித்தாலும்
காதலால் பெருக்கிடுவோம் நம் வாழ்வை
நீயும் நானும்..
நீயும் நானும்
நானும் நீயும்
நாமும் ஆவோம் உயிர்சேர்ந்தன்பே வா
நீயும் நானும்?
கணிணி உலகத்தினரின் கண்ணாடியாய்
களிப்பினுடனும் களிம்புகளுடனும்
நீயும் நானும்..
குருஞ்செய்தி குறுகுறுக்க
முதல் சந்திப்பில்
வேறு உலகத்தில்
நீயும் நானும்..
மணமாக மணமாலை
மனதோடு பேசிய மனங்களாக
நீயும் நானும்..
நாணமோ நானுமா இதில்
பல்வேறு நிற,புற மாற்றத்தில்
நீயும் நானும்..
வண்ணமயமான வாழ்க்கை
வானுயுர வெற்றியை நோக்கி
நீயும் நானும்..
விடியாத இரவுகளுடனும்
விலகாத நம் நினைவுகளுடனும்
நீயும் நானும்..
உலகம் மறந்த உன் உறக்கம்
தொலைபேசியில் தானா நம் கிரக்கம்
நீயும் நானும்..
முன்னேற்ற பாதையில் நீ ஓட
தனிமை துயரில் நான்வாட
நீயும் நானும்..
நாம் என்ன சந்திப்பிழையா?
நாம் சந்தித்ததே பிழையா?
தெரியாத விடைகளுடன்
நீயும் நானும்..
அழற்சி ஒருபுறம்
இயக்குநீரின் இடக்கல் மறுபுறம்
அகவெம்மையை உணர்ந்தபடி
நீயும் நானும்..
வார்த்தைகள் பக்கமில்லாமல்
மெளனத்தின் மொழியாற்றலில் சிக்குண்டு சில நாட்கள்
நீயும் நானும்..
பிரிவு தான் பரிவு தருமா?
பொறிகளை பொரி வைத்து பிடிக்க எண்ணும்
நீயும் நானும்
காரணமில்லா அழுகை
கசங்கி துடிக்கும் இதயத்துடன்
நீயும் நானும்..
தாயறியா சூல்லுண்டோ
நம் தவிப்புக்கு மருந்தாய் நம் காதலுடன்
நீயும் நானும்..
மௌனமும் அழகுதான் முழுதாய் நம்மை வெற்றி கொண்டவர் தோள்மீது தலைசாய்வது என்றூணர்ந்த
நீயும் நானும்..
உயிரோட்டமாய் நம் உயிர்நாதமாய் நம்
உயிர் கலந்த உயிருடன்
நீயும் நானும்..
காலங்கள் நம் நாட்களை கழித்தாலும்
காதலால் பெருக்கிடுவோம் நம் வாழ்வை
நீயும் நானும்..
நீயும் நானும்
நானும் நீயும்
நாமும் ஆவோம் உயிர்சேர்ந்தன்பே வா
நீயும் நானும்?