• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal - 18

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 18
காலையில் வேகமாக கிளம்பிய மதுமிதா, “அம்மா என்னோட தோழி ஷீலாவின் அக்காவின் திருமணம்.. ஷீலா என்னை வரச்சொல்லி இருக்கிறாள்.. நான் போய்ட்டு வரட்டுமா..?!” என்று தன்மையாகக் கேட்டாள்..
“அவளோட அக்காவின் திருமணத்திற்கு நீ எதுக்கு மது போகணும்..?” என்று கேட்ட அன்னையை சமாளிக்க நினைத்தவள்,
“அவளுக்கு அங்கே கம்பெனி கொடுக்க ஆள் இல்லையாம்.. அதுதான் அம்மா..” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் மதுமிதா..
அந்த நேரம் அங்கே வந்த சேகர், “என்னடா எங்கே செல்கிறாய்..?” என்று கேட்டார்.. “அப்பா என்னோட தோழி ஷீலாவின் அக்கா திருமணம் என்னை வரச்சொல்லி சொன்னாள்..” என்று சொல்ல,
“சரிடா நீ போயிட்டு வா..” என்று சொல்ல, “அப்பா நான் கிளம்புகிறேன்..” அவள் அவரிடம் இருந்து விடை பெற,
அவரோ, “மது இந்த செல்லை கையில் வைத்துக்கொள்.. ஏதாவது என்றால் அப்பாவிற்கு ஒரு போன் கால் பண்ணு..” அவளை வழி அனுப்பி வைத்தார்..
“என்னங்க அவள் சின்ன பொண்ணு.. அவளைத் தனியாக அனுப்புவது உங்களுக்கு தவறாகவே தெரியவில்லையா..?” அமுதா அவரைப் பார்த்துக் கேட்டார்
“சின்ன பொண்ணு என்று வீட்டில் வைத்திருந்தால், வெளியுலகம் எப்படி தெரியும் அமுதா..? அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் என்றும் தனித்தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும்..” என்று சொல்ல அவரை முறைத்துவிட்டு தன்னுடைய வேலையைத் தொடங்கினார் அமுதா..
தோழியின் அக்காவின் திருமணத்திற்கு போகிறேன் என்று சொல்லிய மதுமிதா, அந்த வீதியைக் கடந்து வந்து பஸ் ஏறியவள், அடுத்த ஸ்டாப்பில் இறங்கி நின்றிருந்தாள்.. ரோஹித் அவளைப் பார்க்க பஸ் ஸ்டாப்பில் காத்திருக்காமல், ஆற்றங்கரைக்கு வரச் சொன்னான்..
“மது நீ நேர நாம் அன்று சந்தித்த இடத்திற்கே வந்துவிடு!” என்று சொன்னதும் சரி என்று பஸ் பிடித்து, அவன் சொன்ன இடத்திருக்கு வந்து சேர்ந்தாள்..
மழை தொடர்ந்து பொழிவதால், அந்த இடம் மிகவும் எழிலுடன் காட்சி அளித்தது.. அவள் வந்து படித்துறையில் அமர அவனும் அவளுடன் வந்து சேர்ந்தான்..
அவன் வருவதை அவனின் காலடி தடம் கொண்டு கணித்தவள், சிரிப்புடன் நிமிர்ந்தாள்.. அவன் மிகவும் சந்தோசமாக இருந்தான்.. அவனின் முகம் புன்னகையில் இருக்க, அந்த முகத்தை மனப்பெட்டகத்தில் சேமித்தாள்
“மது என்னை மனதில் சேமிப்பது போல தெரிகிறது..?” என்று அவளை வம்பிற்கு இழுத்தான் ரோஹித்..
“என்னோட மனதில் உன்னை சேமிக்காமல் வேறு யாரை சேமிப்பது..?” என்று கேட்டாள் மதுமிதா.. அவளின் பதிலில் அவளைப் பார்வையால் அளந்தான் ரோஹித்..
அவனின் கண்களுக்கு தேவதை போல காட்சி அளித்தாள் மதுமிதா.. அவளை பெயர்க்கு ஏற்றது போல அவளின் மீது காதல் கொண்ட ரோஹித், அந்த மாதுவிடம் மனத்தைக் கொடுத்தான்..
அவனின் பார்வையைக் கலைப்பது போல, “என்ன பார்வை ராகி..?!” என்று கிண்டலாகக் கேட்டாள்..
“என்னோட பெயரை எதுக்கு இப்பொழுது கொலை செய்கிறாய் எம்.கே..?” என்று கேட்டான் ரோஹித்
“இந்த எம்.கே என்ன அர்த்தம் ரோஹித்..?” என்று கேட்டாள்
“அதெல்லாம் இருக்கட்டும் வீட்டில் என்ன பொய் சொன்னாய்..?!” என்று கேட்டான் ரோஹித்..
“என்னோட தோழியின் அக்காவின் திருமணம் என்று சொன்னேன்.. அப்பா எனக்கு பர்மிஷன் வாங்கிக் கொடுத்தார்.. நான் வந்துவிட்டேன்.. செய்கின்ற வேலையைத் திருத்தமாக செய்ய வேண்டும்.. அதனால் நான் பொய் சொல்லவில்லையே..” என்றவள், அவன் கேள்வியாக புருவம் உயர்த்தவும்,
“நிஜத்திலேயே என்னோட தோழியின் அக்காவின் திருமணம் இன்றுதான்..” என்று அவனிடம் சொன்னாள்..
“மதுமிதா உன்னிடம் ஒரு உண்மையைச் சொல்ல போகிறேன்..” என்று சொன்னவன், அவள், ‘என்ன..?’ என்பது போல பார்க்க,
“என்னோட பாட்டி தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை.. அதனால்..” என்று அவன் நிறுத்திவிட்டு அவளின் முகம் பார்க்க, அவள் சிந்தனையுடன் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்..
“என்னோட பாட்டி, தாத்தாவின் வீட்டில் தங்கிப்படிக்க நான் ஊருக்கு போகிறேன்.. அடுத்து நாம் சந்திப்பது உன்னோட படிப்பு முடிந்த பிறகுதான் என்று நினைக்கிறேன்..” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க,
“நீங்க அங்கே போய் விட்டால் நான் உங்களைப் பார்க்கவே முடியாதா..?!” என்று சோகமாகக் கேட்டாள்..
“நான் உன்னைப் பார்க்க கண்டிப்பாக வருவேன்.. அதுவரை உன்னோட படிப்பை நன்றாக படித்து முடிக்க வேண்டும்..” என்று அவன் கண்டிப்புடன் சொன்னான்..
“என்ன ரோஹித் இப்படி சொல்கிறாய்..? நான் நன்றாகவே படிப்பேன்..” என்று குழந்தை தனம் மாறாமல் கூறினாள்.. அவளின் குழந்தை தனம் அவனை இன்னமும் கவர்ந்தது..
“இல்லம்மா கொஞ்சம் புரிந்துக்கொள் மதுமிதா..” அவன் அவளை சமாதானம் செய்ய நினைத்தான்.. அவள் முகம் வாடியது போல ஆனது.. அதற்குள் அவளின் செல் அடித்தது..
அவள் அதில் வந்த நம்பர் தோழியின் நம்பர் என்று எடுத்தாள் அதில் வந்த செய்தியில் அவளின் முகம் மாறியது.. அவளின் முக மாற்றம், ‘ஏதோ சரியில்லை..’ என்று அறிந்துக் கொண்டான் ரோஹித்.. அவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்..
அவள் போன் பேசி வைத்த பிறகு, “என்ன மது..? என்ன விஷயம்..?” என்றவனின் முகம் பார்த்தவள்,
“என்னோட தோழியின் அக்கா, திருமணம் மண்டபத்தில் இருந்து ஓடிப் போய்ட்டாங்க.. அவங்க காதலித்த நபரையே திருமணம் செய்துட்டு வந்து அவங்க அம்மாவைப் பார்க்க வந்திருக்காங்க.. அவங்க அம்மா அவமானம் தாங்க முடியாமல், மண்டபத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்..” என்று ஒருவிதமான கோபத்தோடு சொன்னாள்
“அவங்களோட வாழ்க்கையை அவங்க தேர்ந்தேடுத்துடாங்க.. அதுக்கு யார் என்ன செய்வது..? ஆனால் அவங்க செய்தது சரியென்று நான் சொல்லலை.. வீட்டில் சொல்லியிருந்தால் எதாவது தீர்வு கிடைத்திருக்கும்..” என்று இருபக்கமும் யோசித்து சொன்னான் ரோஹித்..
“என்ன ரோஹித் இத்தனை வருடம் பெற்று வளர்த்திய அவங்களுக்கு தெரியாத எது நல்லது..? எது கெட்டது..? என்று நம்மைவிட அவங்களுக்குதான் தெரியும்..” என்று சொன்னாள் மதுமிதா.. அவளின் கோபம் குறையவே இல்லை..
“நீ சொல்வது சரிதான் இல்லை என்று சொல்லல.. ஆனால் மனதில் காதல் வந்துவிட்டால் யாரையும் மனதார ஏற்றுக்கொள்ள முடியாது.. அவள் அப்படியே திருமணம் செய்திருந்தால், அவளோட அப்பா, அம்மாவை ஏமாற்றி, காதலித்தவனை ஏமாற்றி, கணவனையும் ஏமாற்றி அனைவரும் அமைதி இழந்த வாழ்வு தான் வாழ வேண்டும்..” என்று எடுத்துச் சொன்னான்..
“நீங்க சொல்வது சரிதான்.. ஆனால் நாளைக்கு புகுந்த வீட்டில் பிரச்சனை என்று வந்தால், அவளோட அம்மா, அப்பா வந்து கேள்வி கேட்க முடியாது.. ஆனால் இதுவே அவங்களின் விருப்பபடி திருமணம் செய்தால், அவங்க அவளுக்கு உறுதுணையாக இருப்பார்கள்..” என்று கோபத்தில் என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் பேசிக்கொண்டிருந்தாள்.. அவனுக்கும் முகத்தில் மாற்றம் வந்தது.. அவனின் முகம் மாறியதை அவள் கவனிக்கவே இல்லை..
“அதுக்கு அவள் காதலிக்காமல் இருந்திருக்கணும்.. அதேபோல காதலித்து திருமணம் செய்பவர்கள் அனைவரும் ஏமாற்றி செல்வார்கள்.. அவளைக் கொடுமை படுத்துவார்கள் என்று சொல்வதும், நினைப்பதும் தவறு.. அவங்க அவங்க வாழ்க்கையின் புரிதலை வைத்து அவர்களின் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க முடியும்..” என்று அவனும் கோபத்தோடு சொன்னான்..
“இப்பொழுது ஒரு உயிர் போய்விட்டதே அதை காதலால் திரும்ப கொடுக்க முடியுமா..? என்னோட கருத்தில் அந்த அக்கா செய்தது தவறுதான்..” என்று சொன்னாள் அவள்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
“இழப்புதான் மது.. ஆனால் நடந்ததை மாற்ற முடியாது.. இனிமேல் நடப்பதை மற்ற முடியும் இல்லையா..?!” என்று அவன் சொல்ல, அவனின் முகத்தை பார்த்தவள்
“காலம் முழுக்க என்னோட அம்மாவை நானே கொன்றுவிட்டேனே.. என்ற குற்ற உணர்வை மற்ற முடியுமா..?!” என்று கேட்டாள்..
“இப்பொழுது நீ என்னதான் சொல்ல வருகிறாய்..?!” என்று அவனும் கோபத்தோடு கேட்டான்..
“எனக்கு அந்த அக்கா செய்தது தவறுதான்.. அவங்க அவங்க அம்மா சொன்னவனைத் திருமணம் செய்திருந்தால், இப்பொழுது அநியாயமாக ஒரு உயிர் போயிருக்காது..” என்று சொன்னாள்..
“நாளைக்கு இதே தப்பை நீ செய்ய மாட்டாயா மது..?” என்று உள் அர்த்தத்துடன் கேட்டான்.. அவனின் முகம் செந்தணலின் நிறம் கொண்டு காணப்பட்டது..
“கண்டிப்பாக செய்ய மாட்டேன்.. எனக்கு என்னோட அப்பா, அம்மா உயிர் தான் முக்கியம்.. நாளைக்கு எனக்கு இந்த நிலை வந்தால், நான் என்னோட அம்மா, அப்பா கட்டும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்துக் கொள்வேன்..” என்று கொஞ்சமும் யோசிக்காமல் பதிலைச் சொல்லிவிட்டாள் அடுத்து நடக்கவிருப்பது தெரியாமல்..!
அவள் சொன்னது கேட்டு அவனின் இதயம் சுக்குநூறாக உடைந்து போனது.. ‘தான் காதலிக்கும் ஒரு பெண், தன் முன்னாடியே வேறொரு நபரை மணந்துக் கொள்வேன்’ என்று சொல்லும் பொழுது அதை கேட்கும் நிலை எந்த காதலனுக்கும் வரவே கூடாது..
அவள் தெரியாமல் சொல்லிவிட்டால் என்று அறிவு அவனுக்கு அறிவுரை சொன்னாலும், மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தது.. அவனுக்கு அவள் மேல் இருந்த காதல் தொலைந்துவிட்டது போல ஒரு உணர்வு வரவே அவன் எழுந்து நின்றான்..
“மது திரும்பவும் கேட்கிறேன் நீ இப்பொழுது சொன்னது தவறு.. அதாவது என்னிடம் இப்படி சொன்னது தவறு என்று உனக்கு புரியவில்லையா..?!” என்று இழுத்துப் பிடித்த பொறுமையுடன் கேட்டான்..
“ஒரு சதவிதம் கூட தவறு என்று எனக்கு தோணவே இல்லை..” என்று சொன்னவள், அவனின் முகம் பார்க்க, அவன் அவளை விட்டு விலகிச்செல்ல, அப்பொழுதான் நடப்பு அவளுக்கு புரிந்தது..
“ரோஹித் நான் வேண்டும் என்றே சொல்லல.. ஸாரி தெரியாமல் சொல்லிவிட்டேன்..” அவனின் பின்னோடு சென்றவள் மெதுவாக சொல்ல, அவளைப் பார்த்தவன்,
“அது எப்படி எல்லோரும் ஒரே மாதிரி இருக்கீங்க.. சொல்வதை சொல்லிவிட்டு ஸாரி கேட்டால், மனதில் ஏற்பட்ட காயம் மாறிவிடுமா..?! மனசு வலிக்குதுடி..!” என்று கூறியவன்,
“உனக்கு எல்லாம் உன்னோட குடும்பம் என்று எனக்கு புரியவைத்தற்கு ரொம்ப நன்றிம்மா..!” என்று அவளைக் கையெடுத்து கும்பிட்டவன், மது அவனைப் புரியாமல் பார்க்க,
“என்னோட வாழ்க்கையில் நீ இருப்பாய் மது.. ஆனால் அது கடந்த காலமா..? நிகழ் காலமா..? எதிர்காலமா..? என்பது எனக்கு தெரியாது..” என்று சொன்னவன் நிறுத்தி நிதானமாக,
“இனிமேல் நான் உன்னைப் பார்க்கவே கூடாது என்று நினைக்கிறேன்.. ஒரு வேளை உன்னை நான் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், உன்னை நான் விரும்பியதும், விரும்புவதும் உண்மை என்றால் எனக்காக நீ காத்திருப்பாய்..!” என்றவன், அவளின் முகம் பார்த்து,
“வாழ்க்கை நமக்கு என்ன வைத்திருக்கிறது என்று தெரியாது..” என்று சொன்னவன், அவள் கண் கலங்குவதைப் பார்த்தான்.. “இது தேவை இல்லை மது.. இப்பொழுதும் சொல்கிறேன்.. நீ நினைக்கும் அந்த குடும்பம் என்ற அஸ்திவாரம் ஒருநாள் ஆட்டம் கண்டே தீரும்.. யாரும் இல்லாமல் தனிமரமாக நிற்கும் போது என்னோட வார்த்தை நிஜம் என்று நீ அறிந்துக் கொள்வாய்.. நீ உணரும் போது நான் அருகில் இருக்க மாட்டேன்..” என்று சொன்னவன்,
“இப்போழுது நீ சொன்ன அதே பதிலை இன்னும் ஒரு ஏழுவருடம் கழித்தும் சொல்லு..” என்று கூறியவனை அவள் கண்ணீரோடு பார்க்க வாய் இருந்தும் ஊமையாக நின்றிருந்தாள்..
“நீ சொல்லும் போது உனக்கு அந்த குடும்பம் பரிசு என்று கொடுப்பது கண்ணீர் மட்டுமே.. உனக்கு இந்த பிரிவை தண்டனையாக கொடுக்க மனசு வரவில்லை.. இந்த தண்டனை என்னோட காயத்திற்கு மருந்து..” என்று சொன்னவன் அவனோட வழியில் சென்றான்.. அவளின் வயதில் அவளுக்கு அது புரியவில்லை..
அவளை அங்கே விட்டுவிட்டு வந்த ரோஹித்திற்கு மட்டுமே தெரிந்த ஒரே விஷயம், தன்னோட காதலி தனக்காக காத்திருப்பாள்.. அது எத்தனை வருடம் என்றாலும் அவள் காத்திருப்பாள் என்று தெரியும். அந்த நம்பிக்கையுடன் திருச்சியை விட்டு சென்றான் ரோஹித்..
அவன் அங்கிருந்து சென்றதும் எதற்கு என்று அறியாமல் ஆத்தங்கரையில் அமர்ந்து அழுதவள், மெல்ல வீடு வந்து சேர்ந்தாள்.. அந்த வீட்டில் அடுத்து அவனைப் பார்ப்போம் என்ற நம்பிக்கையில் மனதில் வைத்த நேசத்தை வளர்த்தவள், நன்றாக படித்தாள்.. பிளஸ் டூவில் நல்ல மதிப்பெண் பெற்றாள்.. அருண் அவளிடம் கேட்டும், அவள் எதுவும் சொல்லவே இல்லை.. காலங்கள் உருண்டோட மறுபடியும் அவனைக் கண்டாள்.. ஆனால் அந்த நாள் அவள் அவனுக்கு கொடுத்த வலியை மறக்க முடியவில்லை..
இந்த பத்து வருடத்தில் அவன் சொன்ன அனைத்தும் நடந்தது.. அவளும் அனைத்தையும் முறியடித்து வந்துவிட்டாள்.. ஆனால் அவளின் மேல் சுமத்தப்பட்ட அவப்பெயர் மட்டும் அப்படியே இருந்தது..
அவர்களின் நேசம் மாறவே இல்லை.. இதயம் இரண்டும் இணைத்தே பயணிக்க, காலங்கள் மாறினாலும், காதல் மாறாமல் இருந்தது..
கடந்த காலம் சென்ற இரு மனமும், நேசத்தில் இணைந்தே இருந்தது.. ஆனால் காலம் அவர்களை இணைக்குமா..?!
கடந்த காலம் சென்ற மதுவின் கவனத்தை கலைத்தாள் கயல்விழி..
“அக்கா என்ன ஒரே யோசனையில் இருக்கிறாய்..?!” என்றவளைப் பார்த்து சிரித்தவள்,
“ஒன்னும் இல்ல..”
“சரிக்க நான் கொஞ்சம் வெளியே போட்டு வரட்டுமா..?! இந்த இடத்தை சுற்றிப்பார்க்க வேண்டும் போல இருக்கிறது..” மதுவிடம் கூறியவள் குளிக்க சென்றாள்..
மாலை அவர்களுக்கு காபி போட்டுக் கொடுத்தவள், “ஏய் ரஞ்சி எழுந்திரிடா..” மது அவனை எழுப்ப, எழுந்து அமர்ந்த ரஞ்சித்
“நான் வந்தது இன்னும் அவனுக்கு தெரியலை என்று நினைக்கிறேன்.. நான் அவனைப் பார்த்துவிட்டு வருகிறேன் மது..” என்று சொல்ல,
“அண்ணா யாரைப் பார்க்க போறீங்க..?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் கயல்விழி..
“உன்னோட ராகியைப் பார்க்க போகிறார்..” என்று மது சிரிப்புடன் சொல்ல, அவள் யாரைச் சொல்கிறாள் என்று புரியாமல் விழித்தான் ரஞ்சித்..
“ராகி இங்கே இருக்கிறானா..?!” சந்தோஷத்துடன் கேட்டவளை முறைத்தாள் மதுமிதா..
அவள் முறைப்பதைப் பார்த்து, “ஸாரி” என்று சொன்னவள், “அண்ணா என்னையும் அங்கே கூப்பிட்டுட்டு போறீங்களா..?!” என்று கெஞ்சாத குறையாக கேட்டாள்..
“நீங்க இருவரும் இந்நேரம் வரையில் ரோஹித் பற்றிதான் பேசிட்டு இருந்தீங்களா..?”
“நாங்க அவரோட நிக் நேம் சொல்லி கூப்பிட்டது கூட தெரியல நீங்கெல்லாம் என்னதான் செய்ய போறீங்களோ..?” என்று தலைமேல் கைவைத்து அமர்ந்தாள்
இவள் சொன்னதைக் கேட்டு அவன் தெளிவாக இருக்க, மதுமிதா இவர்களைப் பார்த்து சிரிப்புடன் அமர்ந்திருந்தாள்..
“சரி வா போகலாம்..” என்று அவளை உடன் அழைத்தான் ரஞ்சித்..
எங்க போறீங்க தித்தி..” என்று எழுந்து வந்தாள் மதுமிதா..
“அவங்க தாத்தா பாட்டியைப் பார்க்க போறாங்க..” என்று அவளைத் தூக்கிக்கொண்டாள் மதுமிதா..
“நானும் வருவேன்.. நான் இன்னும் தாத்தா, பாட்டியைப் பார்க்கல..” என்று சொல்ல அவளுக்கு உடையை மாற்றி விட்டாள் மதுமிதா..
ரஞ்சித் எழுந்து அபூர்வாவைத் தூககிக் கொள்ள, கயல்விழி அவனோடு சென்றாள்.. மதுமிதா தனது வேலையைத் தொடர சென்றாள்..
ரோஹித் கடந்த காலம் விட்டு வெளியே வரும் பொழுது நேரம் மாலை மணி ஐந்து ஆகியிருந்தது.. அவனுக்கு இன்னமும் ரஞ்சித் [சரவணன்] வரவில்லை என்று யோசனையில் இருந்தான்.. அவனுக்கு மதுவின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று அறிய வேண்டும் என்று தீவிரத்தோடு இருந்தான்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top