அத்தியாயம் – 18
காலையில் வேகமாக கிளம்பிய மதுமிதா, “அம்மா என்னோட தோழி ஷீலாவின் அக்காவின் திருமணம்.. ஷீலா என்னை வரச்சொல்லி இருக்கிறாள்.. நான் போய்ட்டு வரட்டுமா..?!” என்று தன்மையாகக் கேட்டாள்..
“அவளோட அக்காவின் திருமணத்திற்கு நீ எதுக்கு மது போகணும்..?” என்று கேட்ட அன்னையை சமாளிக்க நினைத்தவள்,
“அவளுக்கு அங்கே கம்பெனி கொடுக்க ஆள் இல்லையாம்.. அதுதான் அம்மா..” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் மதுமிதா..
அந்த நேரம் அங்கே வந்த சேகர், “என்னடா எங்கே செல்கிறாய்..?” என்று கேட்டார்.. “அப்பா என்னோட தோழி ஷீலாவின் அக்கா திருமணம் என்னை வரச்சொல்லி சொன்னாள்..” என்று சொல்ல,
“சரிடா நீ போயிட்டு வா..” என்று சொல்ல, “அப்பா நான் கிளம்புகிறேன்..” அவள் அவரிடம் இருந்து விடை பெற,
அவரோ, “மது இந்த செல்லை கையில் வைத்துக்கொள்.. ஏதாவது என்றால் அப்பாவிற்கு ஒரு போன் கால் பண்ணு..” அவளை வழி அனுப்பி வைத்தார்..
“என்னங்க அவள் சின்ன பொண்ணு.. அவளைத் தனியாக அனுப்புவது உங்களுக்கு தவறாகவே தெரியவில்லையா..?” அமுதா அவரைப் பார்த்துக் கேட்டார்
“சின்ன பொண்ணு என்று வீட்டில் வைத்திருந்தால், வெளியுலகம் எப்படி தெரியும் அமுதா..? அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் என்றும் தனித்தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும்..” என்று சொல்ல அவரை முறைத்துவிட்டு தன்னுடைய வேலையைத் தொடங்கினார் அமுதா..
தோழியின் அக்காவின் திருமணத்திற்கு போகிறேன் என்று சொல்லிய மதுமிதா, அந்த வீதியைக் கடந்து வந்து பஸ் ஏறியவள், அடுத்த ஸ்டாப்பில் இறங்கி நின்றிருந்தாள்.. ரோஹித் அவளைப் பார்க்க பஸ் ஸ்டாப்பில் காத்திருக்காமல், ஆற்றங்கரைக்கு வரச் சொன்னான்..
“மது நீ நேர நாம் அன்று சந்தித்த இடத்திற்கே வந்துவிடு!” என்று சொன்னதும் சரி என்று பஸ் பிடித்து, அவன் சொன்ன இடத்திருக்கு வந்து சேர்ந்தாள்..
மழை தொடர்ந்து பொழிவதால், அந்த இடம் மிகவும் எழிலுடன் காட்சி அளித்தது.. அவள் வந்து படித்துறையில் அமர அவனும் அவளுடன் வந்து சேர்ந்தான்..
அவன் வருவதை அவனின் காலடி தடம் கொண்டு கணித்தவள், சிரிப்புடன் நிமிர்ந்தாள்.. அவன் மிகவும் சந்தோசமாக இருந்தான்.. அவனின் முகம் புன்னகையில் இருக்க, அந்த முகத்தை மனப்பெட்டகத்தில் சேமித்தாள்
“மது என்னை மனதில் சேமிப்பது போல தெரிகிறது..?” என்று அவளை வம்பிற்கு இழுத்தான் ரோஹித்..
“என்னோட மனதில் உன்னை சேமிக்காமல் வேறு யாரை சேமிப்பது..?” என்று கேட்டாள் மதுமிதா.. அவளின் பதிலில் அவளைப் பார்வையால் அளந்தான் ரோஹித்..
அவனின் கண்களுக்கு தேவதை போல காட்சி அளித்தாள் மதுமிதா.. அவளை பெயர்க்கு ஏற்றது போல அவளின் மீது காதல் கொண்ட ரோஹித், அந்த மாதுவிடம் மனத்தைக் கொடுத்தான்..
அவனின் பார்வையைக் கலைப்பது போல, “என்ன பார்வை ராகி..?!” என்று கிண்டலாகக் கேட்டாள்..
“என்னோட பெயரை எதுக்கு இப்பொழுது கொலை செய்கிறாய் எம்.கே..?” என்று கேட்டான் ரோஹித்
“இந்த எம்.கே என்ன அர்த்தம் ரோஹித்..?” என்று கேட்டாள்
“அதெல்லாம் இருக்கட்டும் வீட்டில் என்ன பொய் சொன்னாய்..?!” என்று கேட்டான் ரோஹித்..
“என்னோட தோழியின் அக்காவின் திருமணம் என்று சொன்னேன்.. அப்பா எனக்கு பர்மிஷன் வாங்கிக் கொடுத்தார்.. நான் வந்துவிட்டேன்.. செய்கின்ற வேலையைத் திருத்தமாக செய்ய வேண்டும்.. அதனால் நான் பொய் சொல்லவில்லையே..” என்றவள், அவன் கேள்வியாக புருவம் உயர்த்தவும்,
“நிஜத்திலேயே என்னோட தோழியின் அக்காவின் திருமணம் இன்றுதான்..” என்று அவனிடம் சொன்னாள்..
“மதுமிதா உன்னிடம் ஒரு உண்மையைச் சொல்ல போகிறேன்..” என்று சொன்னவன், அவள், ‘என்ன..?’ என்பது போல பார்க்க,
“என்னோட பாட்டி தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை.. அதனால்..” என்று அவன் நிறுத்திவிட்டு அவளின் முகம் பார்க்க, அவள் சிந்தனையுடன் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்..
“என்னோட பாட்டி, தாத்தாவின் வீட்டில் தங்கிப்படிக்க நான் ஊருக்கு போகிறேன்.. அடுத்து நாம் சந்திப்பது உன்னோட படிப்பு முடிந்த பிறகுதான் என்று நினைக்கிறேன்..” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க,
“நீங்க அங்கே போய் விட்டால் நான் உங்களைப் பார்க்கவே முடியாதா..?!” என்று சோகமாகக் கேட்டாள்..
“நான் உன்னைப் பார்க்க கண்டிப்பாக வருவேன்.. அதுவரை உன்னோட படிப்பை நன்றாக படித்து முடிக்க வேண்டும்..” என்று அவன் கண்டிப்புடன் சொன்னான்..
“என்ன ரோஹித் இப்படி சொல்கிறாய்..? நான் நன்றாகவே படிப்பேன்..” என்று குழந்தை தனம் மாறாமல் கூறினாள்.. அவளின் குழந்தை தனம் அவனை இன்னமும் கவர்ந்தது..
“இல்லம்மா கொஞ்சம் புரிந்துக்கொள் மதுமிதா..” அவன் அவளை சமாதானம் செய்ய நினைத்தான்.. அவள் முகம் வாடியது போல ஆனது.. அதற்குள் அவளின் செல் அடித்தது..
அவள் அதில் வந்த நம்பர் தோழியின் நம்பர் என்று எடுத்தாள் அதில் வந்த செய்தியில் அவளின் முகம் மாறியது.. அவளின் முக மாற்றம், ‘ஏதோ சரியில்லை..’ என்று அறிந்துக் கொண்டான் ரோஹித்.. அவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்..
அவள் போன் பேசி வைத்த பிறகு, “என்ன மது..? என்ன விஷயம்..?” என்றவனின் முகம் பார்த்தவள்,
“என்னோட தோழியின் அக்கா, திருமணம் மண்டபத்தில் இருந்து ஓடிப் போய்ட்டாங்க.. அவங்க காதலித்த நபரையே திருமணம் செய்துட்டு வந்து அவங்க அம்மாவைப் பார்க்க வந்திருக்காங்க.. அவங்க அம்மா அவமானம் தாங்க முடியாமல், மண்டபத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்..” என்று ஒருவிதமான கோபத்தோடு சொன்னாள்
“அவங்களோட வாழ்க்கையை அவங்க தேர்ந்தேடுத்துடாங்க.. அதுக்கு யார் என்ன செய்வது..? ஆனால் அவங்க செய்தது சரியென்று நான் சொல்லலை.. வீட்டில் சொல்லியிருந்தால் எதாவது தீர்வு கிடைத்திருக்கும்..” என்று இருபக்கமும் யோசித்து சொன்னான் ரோஹித்..
“என்ன ரோஹித் இத்தனை வருடம் பெற்று வளர்த்திய அவங்களுக்கு தெரியாத எது நல்லது..? எது கெட்டது..? என்று நம்மைவிட அவங்களுக்குதான் தெரியும்..” என்று சொன்னாள் மதுமிதா.. அவளின் கோபம் குறையவே இல்லை..
“நீ சொல்வது சரிதான் இல்லை என்று சொல்லல.. ஆனால் மனதில் காதல் வந்துவிட்டால் யாரையும் மனதார ஏற்றுக்கொள்ள முடியாது.. அவள் அப்படியே திருமணம் செய்திருந்தால், அவளோட அப்பா, அம்மாவை ஏமாற்றி, காதலித்தவனை ஏமாற்றி, கணவனையும் ஏமாற்றி அனைவரும் அமைதி இழந்த வாழ்வு தான் வாழ வேண்டும்..” என்று எடுத்துச் சொன்னான்..
“நீங்க சொல்வது சரிதான்.. ஆனால் நாளைக்கு புகுந்த வீட்டில் பிரச்சனை என்று வந்தால், அவளோட அம்மா, அப்பா வந்து கேள்வி கேட்க முடியாது.. ஆனால் இதுவே அவங்களின் விருப்பபடி திருமணம் செய்தால், அவங்க அவளுக்கு உறுதுணையாக இருப்பார்கள்..” என்று கோபத்தில் என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் பேசிக்கொண்டிருந்தாள்.. அவனுக்கும் முகத்தில் மாற்றம் வந்தது.. அவனின் முகம் மாறியதை அவள் கவனிக்கவே இல்லை..
“அதுக்கு அவள் காதலிக்காமல் இருந்திருக்கணும்.. அதேபோல காதலித்து திருமணம் செய்பவர்கள் அனைவரும் ஏமாற்றி செல்வார்கள்.. அவளைக் கொடுமை படுத்துவார்கள் என்று சொல்வதும், நினைப்பதும் தவறு.. அவங்க அவங்க வாழ்க்கையின் புரிதலை வைத்து அவர்களின் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க முடியும்..” என்று அவனும் கோபத்தோடு சொன்னான்..
“இப்பொழுது ஒரு உயிர் போய்விட்டதே அதை காதலால் திரும்ப கொடுக்க முடியுமா..? என்னோட கருத்தில் அந்த அக்கா செய்தது தவறுதான்..” என்று சொன்னாள் அவள்
காலையில் வேகமாக கிளம்பிய மதுமிதா, “அம்மா என்னோட தோழி ஷீலாவின் அக்காவின் திருமணம்.. ஷீலா என்னை வரச்சொல்லி இருக்கிறாள்.. நான் போய்ட்டு வரட்டுமா..?!” என்று தன்மையாகக் கேட்டாள்..
“அவளோட அக்காவின் திருமணத்திற்கு நீ எதுக்கு மது போகணும்..?” என்று கேட்ட அன்னையை சமாளிக்க நினைத்தவள்,
“அவளுக்கு அங்கே கம்பெனி கொடுக்க ஆள் இல்லையாம்.. அதுதான் அம்மா..” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் மதுமிதா..
அந்த நேரம் அங்கே வந்த சேகர், “என்னடா எங்கே செல்கிறாய்..?” என்று கேட்டார்.. “அப்பா என்னோட தோழி ஷீலாவின் அக்கா திருமணம் என்னை வரச்சொல்லி சொன்னாள்..” என்று சொல்ல,
“சரிடா நீ போயிட்டு வா..” என்று சொல்ல, “அப்பா நான் கிளம்புகிறேன்..” அவள் அவரிடம் இருந்து விடை பெற,
அவரோ, “மது இந்த செல்லை கையில் வைத்துக்கொள்.. ஏதாவது என்றால் அப்பாவிற்கு ஒரு போன் கால் பண்ணு..” அவளை வழி அனுப்பி வைத்தார்..
“என்னங்க அவள் சின்ன பொண்ணு.. அவளைத் தனியாக அனுப்புவது உங்களுக்கு தவறாகவே தெரியவில்லையா..?” அமுதா அவரைப் பார்த்துக் கேட்டார்
“சின்ன பொண்ணு என்று வீட்டில் வைத்திருந்தால், வெளியுலகம் எப்படி தெரியும் அமுதா..? அவர்கள் வாழ்க்கையில் அவர்கள் என்றும் தனித்தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும்..” என்று சொல்ல அவரை முறைத்துவிட்டு தன்னுடைய வேலையைத் தொடங்கினார் அமுதா..
தோழியின் அக்காவின் திருமணத்திற்கு போகிறேன் என்று சொல்லிய மதுமிதா, அந்த வீதியைக் கடந்து வந்து பஸ் ஏறியவள், அடுத்த ஸ்டாப்பில் இறங்கி நின்றிருந்தாள்.. ரோஹித் அவளைப் பார்க்க பஸ் ஸ்டாப்பில் காத்திருக்காமல், ஆற்றங்கரைக்கு வரச் சொன்னான்..
“மது நீ நேர நாம் அன்று சந்தித்த இடத்திற்கே வந்துவிடு!” என்று சொன்னதும் சரி என்று பஸ் பிடித்து, அவன் சொன்ன இடத்திருக்கு வந்து சேர்ந்தாள்..
மழை தொடர்ந்து பொழிவதால், அந்த இடம் மிகவும் எழிலுடன் காட்சி அளித்தது.. அவள் வந்து படித்துறையில் அமர அவனும் அவளுடன் வந்து சேர்ந்தான்..
அவன் வருவதை அவனின் காலடி தடம் கொண்டு கணித்தவள், சிரிப்புடன் நிமிர்ந்தாள்.. அவன் மிகவும் சந்தோசமாக இருந்தான்.. அவனின் முகம் புன்னகையில் இருக்க, அந்த முகத்தை மனப்பெட்டகத்தில் சேமித்தாள்
“மது என்னை மனதில் சேமிப்பது போல தெரிகிறது..?” என்று அவளை வம்பிற்கு இழுத்தான் ரோஹித்..
“என்னோட மனதில் உன்னை சேமிக்காமல் வேறு யாரை சேமிப்பது..?” என்று கேட்டாள் மதுமிதா.. அவளின் பதிலில் அவளைப் பார்வையால் அளந்தான் ரோஹித்..
அவனின் கண்களுக்கு தேவதை போல காட்சி அளித்தாள் மதுமிதா.. அவளை பெயர்க்கு ஏற்றது போல அவளின் மீது காதல் கொண்ட ரோஹித், அந்த மாதுவிடம் மனத்தைக் கொடுத்தான்..
அவனின் பார்வையைக் கலைப்பது போல, “என்ன பார்வை ராகி..?!” என்று கிண்டலாகக் கேட்டாள்..
“என்னோட பெயரை எதுக்கு இப்பொழுது கொலை செய்கிறாய் எம்.கே..?” என்று கேட்டான் ரோஹித்
“இந்த எம்.கே என்ன அர்த்தம் ரோஹித்..?” என்று கேட்டாள்
“அதெல்லாம் இருக்கட்டும் வீட்டில் என்ன பொய் சொன்னாய்..?!” என்று கேட்டான் ரோஹித்..
“என்னோட தோழியின் அக்காவின் திருமணம் என்று சொன்னேன்.. அப்பா எனக்கு பர்மிஷன் வாங்கிக் கொடுத்தார்.. நான் வந்துவிட்டேன்.. செய்கின்ற வேலையைத் திருத்தமாக செய்ய வேண்டும்.. அதனால் நான் பொய் சொல்லவில்லையே..” என்றவள், அவன் கேள்வியாக புருவம் உயர்த்தவும்,
“நிஜத்திலேயே என்னோட தோழியின் அக்காவின் திருமணம் இன்றுதான்..” என்று அவனிடம் சொன்னாள்..
“மதுமிதா உன்னிடம் ஒரு உண்மையைச் சொல்ல போகிறேன்..” என்று சொன்னவன், அவள், ‘என்ன..?’ என்பது போல பார்க்க,
“என்னோட பாட்டி தாத்தாவிற்கு உடம்பு சரியில்லை.. அதனால்..” என்று அவன் நிறுத்திவிட்டு அவளின் முகம் பார்க்க, அவள் சிந்தனையுடன் அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள்..
“என்னோட பாட்டி, தாத்தாவின் வீட்டில் தங்கிப்படிக்க நான் ஊருக்கு போகிறேன்.. அடுத்து நாம் சந்திப்பது உன்னோட படிப்பு முடிந்த பிறகுதான் என்று நினைக்கிறேன்..” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க,
“நீங்க அங்கே போய் விட்டால் நான் உங்களைப் பார்க்கவே முடியாதா..?!” என்று சோகமாகக் கேட்டாள்..
“நான் உன்னைப் பார்க்க கண்டிப்பாக வருவேன்.. அதுவரை உன்னோட படிப்பை நன்றாக படித்து முடிக்க வேண்டும்..” என்று அவன் கண்டிப்புடன் சொன்னான்..
“என்ன ரோஹித் இப்படி சொல்கிறாய்..? நான் நன்றாகவே படிப்பேன்..” என்று குழந்தை தனம் மாறாமல் கூறினாள்.. அவளின் குழந்தை தனம் அவனை இன்னமும் கவர்ந்தது..
“இல்லம்மா கொஞ்சம் புரிந்துக்கொள் மதுமிதா..” அவன் அவளை சமாதானம் செய்ய நினைத்தான்.. அவள் முகம் வாடியது போல ஆனது.. அதற்குள் அவளின் செல் அடித்தது..
அவள் அதில் வந்த நம்பர் தோழியின் நம்பர் என்று எடுத்தாள் அதில் வந்த செய்தியில் அவளின் முகம் மாறியது.. அவளின் முக மாற்றம், ‘ஏதோ சரியில்லை..’ என்று அறிந்துக் கொண்டான் ரோஹித்.. அவன் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்..
அவள் போன் பேசி வைத்த பிறகு, “என்ன மது..? என்ன விஷயம்..?” என்றவனின் முகம் பார்த்தவள்,
“என்னோட தோழியின் அக்கா, திருமணம் மண்டபத்தில் இருந்து ஓடிப் போய்ட்டாங்க.. அவங்க காதலித்த நபரையே திருமணம் செய்துட்டு வந்து அவங்க அம்மாவைப் பார்க்க வந்திருக்காங்க.. அவங்க அம்மா அவமானம் தாங்க முடியாமல், மண்டபத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டார்..” என்று ஒருவிதமான கோபத்தோடு சொன்னாள்
“அவங்களோட வாழ்க்கையை அவங்க தேர்ந்தேடுத்துடாங்க.. அதுக்கு யார் என்ன செய்வது..? ஆனால் அவங்க செய்தது சரியென்று நான் சொல்லலை.. வீட்டில் சொல்லியிருந்தால் எதாவது தீர்வு கிடைத்திருக்கும்..” என்று இருபக்கமும் யோசித்து சொன்னான் ரோஹித்..
“என்ன ரோஹித் இத்தனை வருடம் பெற்று வளர்த்திய அவங்களுக்கு தெரியாத எது நல்லது..? எது கெட்டது..? என்று நம்மைவிட அவங்களுக்குதான் தெரியும்..” என்று சொன்னாள் மதுமிதா.. அவளின் கோபம் குறையவே இல்லை..
“நீ சொல்வது சரிதான் இல்லை என்று சொல்லல.. ஆனால் மனதில் காதல் வந்துவிட்டால் யாரையும் மனதார ஏற்றுக்கொள்ள முடியாது.. அவள் அப்படியே திருமணம் செய்திருந்தால், அவளோட அப்பா, அம்மாவை ஏமாற்றி, காதலித்தவனை ஏமாற்றி, கணவனையும் ஏமாற்றி அனைவரும் அமைதி இழந்த வாழ்வு தான் வாழ வேண்டும்..” என்று எடுத்துச் சொன்னான்..
“நீங்க சொல்வது சரிதான்.. ஆனால் நாளைக்கு புகுந்த வீட்டில் பிரச்சனை என்று வந்தால், அவளோட அம்மா, அப்பா வந்து கேள்வி கேட்க முடியாது.. ஆனால் இதுவே அவங்களின் விருப்பபடி திருமணம் செய்தால், அவங்க அவளுக்கு உறுதுணையாக இருப்பார்கள்..” என்று கோபத்தில் என்ன சொல்கிறோம் என்று தெரியாமல் பேசிக்கொண்டிருந்தாள்.. அவனுக்கும் முகத்தில் மாற்றம் வந்தது.. அவனின் முகம் மாறியதை அவள் கவனிக்கவே இல்லை..
“அதுக்கு அவள் காதலிக்காமல் இருந்திருக்கணும்.. அதேபோல காதலித்து திருமணம் செய்பவர்கள் அனைவரும் ஏமாற்றி செல்வார்கள்.. அவளைக் கொடுமை படுத்துவார்கள் என்று சொல்வதும், நினைப்பதும் தவறு.. அவங்க அவங்க வாழ்க்கையின் புரிதலை வைத்து அவர்களின் வாழ்க்கையில் சந்தோசமாக இருக்க முடியும்..” என்று அவனும் கோபத்தோடு சொன்னான்..
“இப்பொழுது ஒரு உயிர் போய்விட்டதே அதை காதலால் திரும்ப கொடுக்க முடியுமா..? என்னோட கருத்தில் அந்த அக்கா செய்தது தவறுதான்..” என்று சொன்னாள் அவள்