அத்தியாயம் – 19
அவனின் மனம், ‘அவள் வாழ்க்கையில் இத்தனை நடக்க காரணம் என்னோட பிரிவு... நான் அவளோடு இருந்திருந்தால், இப்பொழுது அவள் இந்த நிலையில் இருக்க மாட்டாள்.. அவளை யாரும் தவறாக நினைக்க கூடாது என்று நினைத்த நானே அவளை தவறாக நினைத்துவிட்டேனே..’ என்று மனம் வருந்தியவன், ரோஹித்திற்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது... அவளை விட்டு இனிமேல் தன்னால் இருக்க முடியாது என்று..! தன்னுடைய செல்லை எடுத்து தந்தைக்கு கால் செய்தான்..
தந்தைக்கு போன் செய்தவன் பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருக்க, அப்பொழுது வீட்டின் பின் கதவை சாத்திய மதுவைப் பார்த்தவன் கேள்வியாக புருவம் உயர்த்த அந்த வீட்டின் ஜன்னலும் சாத்தப்பட்டதும் யோசனையுடன்,
“அப்பா நான் சொன்னது எல்லாத்தையும் செய்துவிடுங்கள்.. நான் இன்னும் மூன்று நாளில் வந்துவிடுவேன்..” என்று சொன்னவன் அவனின் அறைக்குள் சென்றான்..
ரஞ்சித், கயல்விழி, அபூர்வா மூவரும் வீட்டின் உள்ளே நுழைய கயலைப் பார்த்த சிவரத்தினம், “வாடா கயல்விழி.. எப்பொழுது வந்தாய்..?! வந்ததும் தாத்தாவைப் பார்க்க உனக்கு தோணவே இல்ல..” என்று புன்னகையுடன் கேட்டவரைப் பார்த்து, ரஞ்சித் குழம்பினான்.. அவனிடம் இருந்த அபூர்வா, அவரிடம் தாவினாள்..
“நான் காலையில் தான் தாத்தா வந்தேன்.. அபூர்வாவைப் பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்தேன்..” என்றவளைப் பார்த்து சிரித்தவர்,
“என்ன ரஞ்சித் ஒன்னும் புரியாமல் நிற்கிறாய்..?!” என்று கேட்டவர், அபூர்வாவைப் பார்த்து, “தாத்தாவைப் பார்க்க ஏன் வரவே இல்லை..?” என்று கேட்டார்..
“தித்தி வந்திருந்தாங்க தாத்தா.. அதுதான் வரவே இல்ல..” என்று சொன்னவளைத் தூக்கிக்கொண்டு காமாட்சியிடம் சென்றவர், “கயல்விழி வந்துவிட்டாள்..” என்று சொன்னார்..
“என்னது கயல்விழி வந்திருக்கிறாளா..?!” என்று வாசலுக்கு விரைந்தவர், “வாடா என்னோட செல்லம்.. இன்னையோட இங்கே நடக்கும் பிரச்னைக்கு எல்லாம் ஒரு முடிவு வந்துவிடும் என்று நினைக்கிறேன்..” என்று அவளைக் கட்டிக்கொள்ள, ரஞ்சித்திற்கு நடப்பது ஒன்றுமே புரியவில்லை.. அவன் குழப்பத்துடன் நின்றிருந்தான்..
அப்பொழுதான் கீழே வந்த கீர்த்தி, ரஞ்சித் அங்கே நிற்பதையும், கயல்விழியை காமாட்சி கட்டியணைத்து நிற்பதையும், சிவரத்தினம் அபூர்வாவைத் தூக்கி வைத்திருப்பதையும் பார்த்தவள்,
“தாத்தா இங்கே என்ன நடக்கிறது..?” என்று கேட்டவள், “வீட்டிற்கு வந்தவங்களை வாசலில் நிற்க வைத்திருக்கிறீங்க.. உள்ளே வாங்க ரஞ்சித்..” என்று அழைத்ததும்,
“வாங்க நானும் லூசு மாதிரி வாசலில் நிற்க வைத்தே பேசுகிறேன்..” என்று அவர்களை உள்ளே அழைத்துவர, கீர்த்தி ரோஹித்தின் அறையை நோக்கிக் குரல் கொடுத்தாள்..
“ரோஹித் இன்னும் உள்ள என்ன பண்ற..? ரஞ்சித் வந்திருக்கிறார்..” என்று கூறினாள்..
ரோஹித் அறையின் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தான்.. நடுஹாலில் ரஞ்சித் மற்றும் கயல்விழி நின்றிருந்தனர், ரோஹித் அங்கே நின்றிருந்த கயல்விழியைப் பார்த்து திகைத்தவன்,
“வா கயல்விழி.. வா ரஞ்சித்..” என்று வரவேற்றபடியே மாடியில் இருந்து இறங்கி வந்தான்.. அவளும் அவனைப் பார்த்தவுடன் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகைக்க முயன்றாள்..
ரஞ்சித் கயலின் முகம் பார்த்து, “என்ன கயல் முகம் ஏன் மாறுகிறது..?” என்று குழப்பத்துடன் கேட்டான்..
“இப்பொழுது உங்களுக்கு இது ரொம்ப தேவையா அண்ணா..? நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது.. இப்பொழுது ராகியை வெளியே அழைத்து வர வேண்டியது உங்களோட பொறுப்பு..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினாள்..
கயல்விழி மனதில் என்ன நினைத்தாளோ அவளே அவரிடம் நேரடியாக அனுமதி கேட்டாள்..
“தாத்தா வித் யுவர் பர்மிஷன்.. நான் ரஞ்சித் அண்ணா, ரோஹித், அப்புறம் இந்த அக்கா எல்லோரும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வருகிறோம்..” என்று சொல்ல, அவரும் அவளின் உள்ளர்த்தம் புரிந்து சரியென்றார்..
கீர்த்தி, ரஞ்சித் இருவரும் ஒன்றும் புரியாமல் நிற்க, ரோஹித் யோசனையுடன் அவளைப் பார்த்தான்.. அவளோ ஜீவாவிற்கு போன் செய்து, “எங்கே இருக்க ஜீவா இன்னும் பத்து நிமிசத்தில் நீ இங்கே இருக்கிறாய்..” என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்தாள்..
“கயல்விழி..” என்று அவளை அழைக்க, ‘என்ன..?’ என்பது போல பார்த்தாள்.. “நீங்க எல்லோரும் இங்கேயே இருங்க நான் இப்பொழுது வந்துவிடுகிறேன்..” என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றான் ரோஹித்..
அனைவரும் அவன் போவதைப் புரியாமல் பார்த்தனர்.. ரோஹித் சென்ற இடம் மதுவின் வீடு.. அவள் வீட்டின் முன் கதவும் சாத்தப்பட்டு இருந்ததும்..
அவனின் மனம் ‘எல்லோரும் இங்கே இருக்கும் பொழுது அவள் எதுக்கு எல்லா கதவையும் சாத்த வேண்டும்..’ என்ற கேள்வி மனதில் எழுந்தது.
“மதுமிதா..” என்று அழைத்தவன் வீட்டின் கதவைத் தட்டினான்.. அவள் திறக்கவே இல்லை..அவன் மனதில் சந்தேகம் தோன்றவே, ஒரு முடிவோடு கதவை உடைத்தான்.. உள்ளே அவள் கேசைத் திறந்துவிட்டு சமையல் அறையில் நின்றிருந்தாள்..
அவன் உள்ளே நுழைவதைப் பார்த்து தீப்பெட்டியை உரச நினைத்தாள்... உள்ளே நுழைந்ததும் கேசை வாசனை வீடு முழுவதும் பரவி இருக்க கேசை ஆப் செய்தவன், அவளின் கையில் இருந்த தீப்பெட்டியை வாங்கித் தூக்கி வெளியே எறிந்தான்.. ஜன்னல் கதவு அனைத்தையும் திறந்து வைத்தவன்,
அவளை நோக்கி வந்து, ‘பளார்..’ என்று ஒரு அரை விட்டான்.. அவள் சமையல் அறையில் இருந்து டைனிங் ஹோலின் டேபிளில் போய் விழுந்தாள்.. அவனுக்கு கோபம் அடங்க மறுத்தது..
அவன் மனம், ‘இன்னும் ஒரு செகண்ட் தாமதமாக வந்திருந்தாலும் என்னோட வாழ்க்கையே இருளிடம் நிரந்தமாக ஒப்படைத்துவிட்டு சென்றிருப்பாள்..’ என்று நினைத்தவன்
மதுவைக் கோபத்தோடு நிமிர்ந்து பார்க்க, அவனது அடியில் பொறி கலங்கி நின்றிருந்தாள் மதுமிதா.. அவளின் காது ‘ங்கொய்’ என்று கேட்டதும் கையை கன்னத்தில் தாங்கிக் கொண்டு, கண்களில் கண்ணீர் வழிய அவனை நிமிர்ந்து பார்த்தாள்..
“இத்தனை நாள் பொறுமையாக இருந்தவள், நான் வந்ததும் சாக நினைக்கிறாய்.. இதுதான் உன்னோட துணிச்சலா..?” என்று கோபத்தோடு கேட்டவன், அவள் அப்படியே அசையாமல் நிற்பதைப் பார்த்து அவனுக்கு கோபம் அதிகரித்தது..
“நீ செய்ய நினைத்த காரியம் என்ன என்று புரிந்துதான் செய்கிறாயா..?” என்று அவளைப் பார்த்துக் கேட்டான்..
“நல்ல யோசித்துதான் இந்த முடிவை எடுத்தேன்..” என்று அவள் அழுத்தத்தோடு சொன்னவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.. அவளின் கண்ணீர் அவனை என்னவோ செய்தது..
அவனின் நெஞ்சில் இருந்த நேசம் அவனின் கண்கள் பிரதிபளித்தது.. காதலிப்பவர்கள் கண்கள் காதலைப் பிரதிபளிக்கும் என்று சொல்வார்கள்..
அவனின் கண்கள் அவளின் மீது கொண்ட நேசத்தை வெளிப்படுத்த, அதில் நொறுங்கிப்போனது அவளின் மனம்.. ‘தன்னுடைய நேசத்திற்கு நிகரானது அவனின் நேசம்..’ நேசம் என்றுமே நஞ்சுடன் இருப்பதில்லை.. அது கறந்த பாலை விடவும் சுத்தமானது..
“எதுக்கு இந்த முடிவு எடுத்தாய் சொல்லு மது..” என்று அவன் கோபத்தைக் கட்டுப்படுத்த, அவனின் விழிகள் சிவந்தது..
“எனக்கு யாரும் இல்லை என்ற நினைவே எனக்கு வராமல் இருந்ததற்கு ஒரே காரணம் உன்னோட காதல்..” என்று அவள் சொல்ல,
“உனக்கு யாரும் இல்லை என்று யார் சொன்னது உனக்கு அத்தனை உறவுகளும் இருக்கிறது..” என்று சொன்னவனைப் பார்த்தவள் கசப்பான புன்னகை ஒன்றை உதிர்க்க அவளின் புன்னகை அவனின் உயிரை உலுக்கியது..
“சிலரது கண்களில் வலியை
உணர்தேன் நேற்று!
சிலரது புன்னகையில் வலியை
உணர்தேன் இன்று!” என்று மனதில் நினைத்தான்..
“நீ என்னைக்காவது திரும்பி வருவாய் என்று எனக்கு தெரியும், அதுதான் துணிச்சலுடன் காத்திருந்தேன்..” என்று சொல்ல அவனின் முகம் கொஞ்சம் மென்மையாக மாறியது..
அவளின் அடுத்த கேள்வியில் அவனின் முகம் வாடியது.. அவள் அவனை நோக்கி வந்தவள் அவனின் சட்டையைப் பிடித்து, “ஆனால் நீ என்னை என்ன கேள்வி கேட்டாய்..?! உன்னால் எப்படிடா என்னை அப்படி..?!” என்று கேட்டவள் கண்கள் கலங்க, அவன் பதில் பேசாமல் நின்றான்..
பத்து வருடம் மனதில் அடக்கி வைத்திருந்த கோபம் அனைத்தும் அவளின் வாய் மூலம் வெளிவந்தது.. அவளைப் பேசவிட்டு அவளின் மனதை அறிந்துக்கொள்ள முற்பட்டான் ரோஹித்..
அவனின் மனம், ‘அவள் வாழ்க்கையில் இத்தனை நடக்க காரணம் என்னோட பிரிவு... நான் அவளோடு இருந்திருந்தால், இப்பொழுது அவள் இந்த நிலையில் இருக்க மாட்டாள்.. அவளை யாரும் தவறாக நினைக்க கூடாது என்று நினைத்த நானே அவளை தவறாக நினைத்துவிட்டேனே..’ என்று மனம் வருந்தியவன், ரோஹித்திற்கு ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது... அவளை விட்டு இனிமேல் தன்னால் இருக்க முடியாது என்று..! தன்னுடைய செல்லை எடுத்து தந்தைக்கு கால் செய்தான்..
தந்தைக்கு போன் செய்தவன் பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருக்க, அப்பொழுது வீட்டின் பின் கதவை சாத்திய மதுவைப் பார்த்தவன் கேள்வியாக புருவம் உயர்த்த அந்த வீட்டின் ஜன்னலும் சாத்தப்பட்டதும் யோசனையுடன்,
“அப்பா நான் சொன்னது எல்லாத்தையும் செய்துவிடுங்கள்.. நான் இன்னும் மூன்று நாளில் வந்துவிடுவேன்..” என்று சொன்னவன் அவனின் அறைக்குள் சென்றான்..
ரஞ்சித், கயல்விழி, அபூர்வா மூவரும் வீட்டின் உள்ளே நுழைய கயலைப் பார்த்த சிவரத்தினம், “வாடா கயல்விழி.. எப்பொழுது வந்தாய்..?! வந்ததும் தாத்தாவைப் பார்க்க உனக்கு தோணவே இல்ல..” என்று புன்னகையுடன் கேட்டவரைப் பார்த்து, ரஞ்சித் குழம்பினான்.. அவனிடம் இருந்த அபூர்வா, அவரிடம் தாவினாள்..
“நான் காலையில் தான் தாத்தா வந்தேன்.. அபூர்வாவைப் பார்த்துவிட்டு வரலாம் என்று நினைத்தேன்..” என்றவளைப் பார்த்து சிரித்தவர்,
“என்ன ரஞ்சித் ஒன்னும் புரியாமல் நிற்கிறாய்..?!” என்று கேட்டவர், அபூர்வாவைப் பார்த்து, “தாத்தாவைப் பார்க்க ஏன் வரவே இல்லை..?” என்று கேட்டார்..
“தித்தி வந்திருந்தாங்க தாத்தா.. அதுதான் வரவே இல்ல..” என்று சொன்னவளைத் தூக்கிக்கொண்டு காமாட்சியிடம் சென்றவர், “கயல்விழி வந்துவிட்டாள்..” என்று சொன்னார்..
“என்னது கயல்விழி வந்திருக்கிறாளா..?!” என்று வாசலுக்கு விரைந்தவர், “வாடா என்னோட செல்லம்.. இன்னையோட இங்கே நடக்கும் பிரச்னைக்கு எல்லாம் ஒரு முடிவு வந்துவிடும் என்று நினைக்கிறேன்..” என்று அவளைக் கட்டிக்கொள்ள, ரஞ்சித்திற்கு நடப்பது ஒன்றுமே புரியவில்லை.. அவன் குழப்பத்துடன் நின்றிருந்தான்..
அப்பொழுதான் கீழே வந்த கீர்த்தி, ரஞ்சித் அங்கே நிற்பதையும், கயல்விழியை காமாட்சி கட்டியணைத்து நிற்பதையும், சிவரத்தினம் அபூர்வாவைத் தூக்கி வைத்திருப்பதையும் பார்த்தவள்,
“தாத்தா இங்கே என்ன நடக்கிறது..?” என்று கேட்டவள், “வீட்டிற்கு வந்தவங்களை வாசலில் நிற்க வைத்திருக்கிறீங்க.. உள்ளே வாங்க ரஞ்சித்..” என்று அழைத்ததும்,
“வாங்க நானும் லூசு மாதிரி வாசலில் நிற்க வைத்தே பேசுகிறேன்..” என்று அவர்களை உள்ளே அழைத்துவர, கீர்த்தி ரோஹித்தின் அறையை நோக்கிக் குரல் கொடுத்தாள்..
“ரோஹித் இன்னும் உள்ள என்ன பண்ற..? ரஞ்சித் வந்திருக்கிறார்..” என்று கூறினாள்..
ரோஹித் அறையின் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தான்.. நடுஹாலில் ரஞ்சித் மற்றும் கயல்விழி நின்றிருந்தனர், ரோஹித் அங்கே நின்றிருந்த கயல்விழியைப் பார்த்து திகைத்தவன்,
“வா கயல்விழி.. வா ரஞ்சித்..” என்று வரவேற்றபடியே மாடியில் இருந்து இறங்கி வந்தான்.. அவளும் அவனைப் பார்த்தவுடன் தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு புன்னகைக்க முயன்றாள்..
ரஞ்சித் கயலின் முகம் பார்த்து, “என்ன கயல் முகம் ஏன் மாறுகிறது..?” என்று குழப்பத்துடன் கேட்டான்..
“இப்பொழுது உங்களுக்கு இது ரொம்ப தேவையா அண்ணா..? நீங்க என்ன செய்வீங்களோ எனக்கு தெரியாது.. இப்பொழுது ராகியை வெளியே அழைத்து வர வேண்டியது உங்களோட பொறுப்பு..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினாள்..
கயல்விழி மனதில் என்ன நினைத்தாளோ அவளே அவரிடம் நேரடியாக அனுமதி கேட்டாள்..
“தாத்தா வித் யுவர் பர்மிஷன்.. நான் ரஞ்சித் அண்ணா, ரோஹித், அப்புறம் இந்த அக்கா எல்லோரும் கொஞ்சம் வெளியே போய்ட்டு வருகிறோம்..” என்று சொல்ல, அவரும் அவளின் உள்ளர்த்தம் புரிந்து சரியென்றார்..
கீர்த்தி, ரஞ்சித் இருவரும் ஒன்றும் புரியாமல் நிற்க, ரோஹித் யோசனையுடன் அவளைப் பார்த்தான்.. அவளோ ஜீவாவிற்கு போன் செய்து, “எங்கே இருக்க ஜீவா இன்னும் பத்து நிமிசத்தில் நீ இங்கே இருக்கிறாய்..” என்று மட்டும் சொல்லிவிட்டு போனை வைத்தாள்..
“கயல்விழி..” என்று அவளை அழைக்க, ‘என்ன..?’ என்பது போல பார்த்தாள்.. “நீங்க எல்லோரும் இங்கேயே இருங்க நான் இப்பொழுது வந்துவிடுகிறேன்..” என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றான் ரோஹித்..
அனைவரும் அவன் போவதைப் புரியாமல் பார்த்தனர்.. ரோஹித் சென்ற இடம் மதுவின் வீடு.. அவள் வீட்டின் முன் கதவும் சாத்தப்பட்டு இருந்ததும்..
அவனின் மனம் ‘எல்லோரும் இங்கே இருக்கும் பொழுது அவள் எதுக்கு எல்லா கதவையும் சாத்த வேண்டும்..’ என்ற கேள்வி மனதில் எழுந்தது.
“மதுமிதா..” என்று அழைத்தவன் வீட்டின் கதவைத் தட்டினான்.. அவள் திறக்கவே இல்லை..அவன் மனதில் சந்தேகம் தோன்றவே, ஒரு முடிவோடு கதவை உடைத்தான்.. உள்ளே அவள் கேசைத் திறந்துவிட்டு சமையல் அறையில் நின்றிருந்தாள்..
அவன் உள்ளே நுழைவதைப் பார்த்து தீப்பெட்டியை உரச நினைத்தாள்... உள்ளே நுழைந்ததும் கேசை வாசனை வீடு முழுவதும் பரவி இருக்க கேசை ஆப் செய்தவன், அவளின் கையில் இருந்த தீப்பெட்டியை வாங்கித் தூக்கி வெளியே எறிந்தான்.. ஜன்னல் கதவு அனைத்தையும் திறந்து வைத்தவன்,
அவளை நோக்கி வந்து, ‘பளார்..’ என்று ஒரு அரை விட்டான்.. அவள் சமையல் அறையில் இருந்து டைனிங் ஹோலின் டேபிளில் போய் விழுந்தாள்.. அவனுக்கு கோபம் அடங்க மறுத்தது..
அவன் மனம், ‘இன்னும் ஒரு செகண்ட் தாமதமாக வந்திருந்தாலும் என்னோட வாழ்க்கையே இருளிடம் நிரந்தமாக ஒப்படைத்துவிட்டு சென்றிருப்பாள்..’ என்று நினைத்தவன்
மதுவைக் கோபத்தோடு நிமிர்ந்து பார்க்க, அவனது அடியில் பொறி கலங்கி நின்றிருந்தாள் மதுமிதா.. அவளின் காது ‘ங்கொய்’ என்று கேட்டதும் கையை கன்னத்தில் தாங்கிக் கொண்டு, கண்களில் கண்ணீர் வழிய அவனை நிமிர்ந்து பார்த்தாள்..
“இத்தனை நாள் பொறுமையாக இருந்தவள், நான் வந்ததும் சாக நினைக்கிறாய்.. இதுதான் உன்னோட துணிச்சலா..?” என்று கோபத்தோடு கேட்டவன், அவள் அப்படியே அசையாமல் நிற்பதைப் பார்த்து அவனுக்கு கோபம் அதிகரித்தது..
“நீ செய்ய நினைத்த காரியம் என்ன என்று புரிந்துதான் செய்கிறாயா..?” என்று அவளைப் பார்த்துக் கேட்டான்..
“நல்ல யோசித்துதான் இந்த முடிவை எடுத்தேன்..” என்று அவள் அழுத்தத்தோடு சொன்னவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.. அவளின் கண்ணீர் அவனை என்னவோ செய்தது..
அவனின் நெஞ்சில் இருந்த நேசம் அவனின் கண்கள் பிரதிபளித்தது.. காதலிப்பவர்கள் கண்கள் காதலைப் பிரதிபளிக்கும் என்று சொல்வார்கள்..
அவனின் கண்கள் அவளின் மீது கொண்ட நேசத்தை வெளிப்படுத்த, அதில் நொறுங்கிப்போனது அவளின் மனம்.. ‘தன்னுடைய நேசத்திற்கு நிகரானது அவனின் நேசம்..’ நேசம் என்றுமே நஞ்சுடன் இருப்பதில்லை.. அது கறந்த பாலை விடவும் சுத்தமானது..
“எதுக்கு இந்த முடிவு எடுத்தாய் சொல்லு மது..” என்று அவன் கோபத்தைக் கட்டுப்படுத்த, அவனின் விழிகள் சிவந்தது..
“எனக்கு யாரும் இல்லை என்ற நினைவே எனக்கு வராமல் இருந்ததற்கு ஒரே காரணம் உன்னோட காதல்..” என்று அவள் சொல்ல,
“உனக்கு யாரும் இல்லை என்று யார் சொன்னது உனக்கு அத்தனை உறவுகளும் இருக்கிறது..” என்று சொன்னவனைப் பார்த்தவள் கசப்பான புன்னகை ஒன்றை உதிர்க்க அவளின் புன்னகை அவனின் உயிரை உலுக்கியது..
“சிலரது கண்களில் வலியை
உணர்தேன் நேற்று!
சிலரது புன்னகையில் வலியை
உணர்தேன் இன்று!” என்று மனதில் நினைத்தான்..
“நீ என்னைக்காவது திரும்பி வருவாய் என்று எனக்கு தெரியும், அதுதான் துணிச்சலுடன் காத்திருந்தேன்..” என்று சொல்ல அவனின் முகம் கொஞ்சம் மென்மையாக மாறியது..
அவளின் அடுத்த கேள்வியில் அவனின் முகம் வாடியது.. அவள் அவனை நோக்கி வந்தவள் அவனின் சட்டையைப் பிடித்து, “ஆனால் நீ என்னை என்ன கேள்வி கேட்டாய்..?! உன்னால் எப்படிடா என்னை அப்படி..?!” என்று கேட்டவள் கண்கள் கலங்க, அவன் பதில் பேசாமல் நின்றான்..
பத்து வருடம் மனதில் அடக்கி வைத்திருந்த கோபம் அனைத்தும் அவளின் வாய் மூலம் வெளிவந்தது.. அவளைப் பேசவிட்டு அவளின் மனதை அறிந்துக்கொள்ள முற்பட்டான் ரோஹித்..