நீங்களே இப்படி தெரியா எண்டு சொன்னால் நான் யாரிடம் கேட்க முடியும்???????????theriya niranjana sister.. thanks for your comment
நீங்களே இப்படி தெரியா எண்டு சொன்னால் நான் யாரிடம் கேட்க முடியும்???????????theriya niranjana sister.. thanks for your comment
நீங்களே மதுவிடம் கேளுங்கள் சிஸ்டர்...நீங்களே இப்படி தெரியா எண்டு சொன்னால் நான் யாரிடம் கேட்க முடியும்???????????
ithu koota nalla iruke...... nice epi sis. apoovava avanga grandparents.i mean ohit parents idam alaithu selkirarkalaஜீவா வெங்காயத்தை கையில் வைத்துக் கொண்டு, “ரஞ்சித் இந்த வீட்டுப்பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணம் வைத்திருப்பவர்கள் கையில் வெங்காயத்தை கொடுத்தால் கதை கந்தல்..!” என்று சொல்லியபடியே கண்களை துடைத்துக்கொண்டு வெங்காயம் உரித்தான்..
“அதுதான் உன்னோட கையில் வெங்காயத்தை கொடுத்திருக்கிறாள் கயல்விழி..”
nalla idea than sister.. pennirkku porumai irukka enru kedparkal kaiyil vengayaththai koduththaal avarkalin porumai entha alavu enru therinthuvidumithu koota nalla iruke...... nice epi sis. apoovava avanga grandparents.i mean ohit parents idam alaithu selkirarkala
thanksMadhu vai thaniyaga vitu selkirargale..
Sooo lovely ?????ஜீவா - கயல்விழி இருவரும் பேசுவதை சுவாரசியமாக வேடிக்கைப் பார்த்த கீர்த்தியின் தலையில் நறுக்கென்று கொட்டினான் ரஞ்சித்..
அவன் கொட்டியதும், “ஸ்ஸ்ஸ்..” என்று தலையைத் தேய்த்துக் கொண்டவள், “டேய் எதுக்குடா இப்படி கொட்டினாய்..?!” என்று கேட்டாள்..
“அவங்க இருவரும் பேசுவதைப் பார்த்து ஆஆ என்று பார்த்துக்கொண்டு இருக்கிறாய்..?” என்று கேட்டவனின் அருகில் குனிந்து,
“அது இல்ல ரஞ்சித் எங்க ஊரில் லவ் என்றதும் லிப் டூ லிப் கிஸ் அடிப்பதைப் பார்த்து பார்த்து வளர்ந்தவள்..” என்று சொன்னவளை ஒரு மார்க்கமாகப் பார்த்தான் ரஞ்சித்..
அவனது பார்வையின் பொருள் உணர்ந்த கீர்த்தி, “எனக்கு என்று ஒரு வரைமுறை வைத்து வளர்ந்தவள்..” என்ற வாக்கியத்தையும் சேர்த்துச் சொன்னாள்..
அவளின் முகத்தைப் பார்த்தவன், ‘நான் உன்னை விளக்கம் கேட்டேனா..?’ என்று விழிகளில் வினாவினான்..
‘நீ கேட்கவில்லை என்றாலும் சொல்வது என்னோட கடமை..’ என்று அவனுக்கு விழிகளால் பதில் கொடுத்தவள்,
“அங்கே இருக்கும் காதலுக்கு இங்கே இருக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என்ன என்று பட்டியல் போட்டுக் கொண்டிருந்தேன்..” என்று அவள் சிரிக்காமல் சொல்ல,
“இப்பொழுது இந்த பட்டியல் ரொம்ப முக்கியம்..” என்று சொன்னவன் சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டவன்,
“உன்னோட அமெரிக்கா குறும்பை எல்லாம் அங்கே வைத்துக்கொள் கீர்த்தி.. இங்கே வேண்டாம்..” என்று எச்சரிக்கைச் செய்தான் ரஞ்சித்..
“உன்னோட எச்சரிக்கையை நீயே வைத்துக்கொள்..” என்று அவனிடம் சொன்னவள், “ஐயோ எத்தனை வித்தியாசம் என்பதை மறந்துவிட்டேன்..” என்று அவள் தலையில் அடித்துக்கொள்ள சிரிப்பை அடக்க நினைத்தவன் சிரித்தே விட்டான்..
அவன் மனம் விட்டு சிரிப்பதை எதர்ச்சியாக பார்த்த மதுமிதா, “இவன் இப்படி சிரித்து பார்த்து எத்தனை நாள் ஆகிறது..” என்று வாய்விட்டு கூறியவள், அபூர்வாவை தயார் செய்தாள்..
“அம்மா நம்ம எங்கே போகிறோம்..?!” என்று கேட்டவளுக்கு,
“நீ தாத்தா, பாட்டி எல்லோரும் கோவிலுக்கு போறீங்க செல்லம்.. அம்மா மட்டும் வரமாட்டேன்.. நீங்க ரொம்ப நல்ல பிள்ளையாம்.. சேட்டை செய்யாமல், பாட்டி, தாத்தாவை தொந்தரவு செய்யாமல் அவங்களோடு போய்ட்டு வருவீங்களாம்..” என்று சொன்னாள்
“ம்ம் சரிங்க அம்மா..” என்று சொன்னவள், அன்னையின் கன்னத்தில் இதழ் பதிக்க மகளின் கன்னத்திலும் இதழ் பதித்தாள் மதுமிதா..
அவளை தயார் செய்வதற்குள் இங்கே சமையல் வேலை வெகுவிரைவாக நடந்தது.. ஜீவா, ரஞ்சித் இருவரும் காய்கறிகள் நறுக்க, கயல்விழி, கீர்த்தி இருவரும் சமையலறைக்குள் புகுந்தனர்..
ஜீவா வெங்காயத்தை கையில் வைத்துக் கொண்டு, “ரஞ்சித் இந்த வீட்டுப்பெண்ணைத் திருமணம் செய்ய வேண்டும் என்று எண்ணம் வைத்திருப்பவர்கள் கையில் வெங்காயத்தை கொடுத்தால் கதை கந்தல்..!” என்று சொல்லியபடியே கண்களை துடைத்துக்கொண்டு வெங்காயம் உரித்தான்..
“அதுதான் உன்னோட கையில் வெங்காயத்தை கொடுத்திருக்கிறாள் கயல்விழி..” என்று ரஞ்சித் சிரிப்புடன் சொன்னான்..
அவன் சொன்னதை உள்ளிருந்து கேட்டவள், “இஞ்சி அண்ணா நீங்க எப்படி சரியாக கண்டுபிடிச்சீங்க..?” என்று கேட்டவள் வேலையைத் தொடர,
“அக்கா தங்கை இருவரும் மாப்பிள்ளை செலக்சன் இப்படித்தான் செய்வீங்க என்று தெரியும்..” என்று அவளுக்கு பதில் கொடுத்தவன்,
“ஜீவா என்ன கண்ணெல்லாம் கலங்குது..!” என்று சிரிப்புடன் கேட்டவனைப் பார்த்து முறைத்த ஜீவா,
“இந்த பொண்ணுங்களுக்கு இதுவே வேலையாக போய்விட்டது.. பசங்களை கண்கலங்க வைப்பதில் இவங்களை அடித்துக்கொள்ள ஆள் இல்லை..” என்று கண்களைப் பாவமாக துடைத்தான்.. அவன் செய்கை பார்த்து சிரித்தான் ரஞ்சித்,
“ஏய் என்ன நக்கலா..?” என்று உள்ளிருந்து கேட்டது கயலின் குரல்..
“பசங்களுக்கு பேச்சு உரிமையும் தடை செய்யப்படுகிறது ஜீவா..” என்று காய்களை நறுக்கியவண்ணம் கூறியவனை முறைத்தாள் கீர்த்தி..
அவன் அமைதியாக காயை நறுக்க, “என்ன ரஞ்சித் உங்களுக்கும் பேச்சு உரிமை போய்விட்டதா..?!” என்று நக்கலாகக் கேட்டான் ஜீவா..
“எல்லாம் என்னோட நேரம்!” என்று தலையில் அடித்துக் கொண்டான் ரஞ்சித்.. சமையல் வேலை முடிந்ததும் அபூர்வாவை அழைத்து வந்தவள்,
“அடப்பாவிகளா..?! என்னோட கிச்சனையும் ஆக்குபை பண்ணிட்டீங்களா..?” என்று கேட்டவள் அனைவரையும் அமரவைத்து பரிமாற, அனைவரும் சாப்பிட்டுவிட்டுப் பெரியவர்கள் மற்றும் அபூர்வா மூவரும் மதுரை செல்ல, சிறியவர்கள் ஆளுக்கு ஒரு காரணம் சொல்லிவிட்டு ஒரு ஜோடி சென்னை செல்ல, ஒரு ஜோடி தஞ்சாவூர் சென்றது..!