அத்தியாயம் – 25
அவன் வீடியோ பார்த்துக் கொண்டிருக்க, அவனின் அலைபேசி அடிக்க, அதை எடுத்துப் பேசினான்.. அவனின் மனம் குழப்பத்துடன் இருக்க,
“ஹலோ ரோஹித் எங்கப்பா இருக்கிறாய்..?!” என்று கேட்டார் சிவரத்தினம்..
அவரின் குரல் கேட்டவன், “தாத்தா நான் மருத்துவமனையில் இருக்கிறேன்..” என்று கூற, அவருக்கும் பதட்டம் வந்தது..
“டேய் ரோஹித் அபூர்வாக்கு என்னடா ஆச்சு..?! மதுமிதா அவளை விட்ட்டுவிட்டு இருக்க மாட்டாள்.. என்னோட பேத்திக்கு என்னடா ஆச்சு..?” என்று கேட்டார்..
அவர் பேசுவதைக் கேட்ட காமாட்சி, “என்னங்க ஆச்சு அபூர்வாவிற்கு..?!” என்று கேட்டவரின் கண்களும் கலங்கியது.. அவர்கள் இருவரும் பத்திரிக்கை கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்..
அவர் தவறாக நினைத்துக் கொண்டதை புரிந்துக் கொண்ட ரோஹித், “தாத்தா அபூர்வாவிற்கு ஒன்றும் இல்லை..” என்று சொல்லவும்
“அவளுக்கு எதுவும் இல்லையா..?” என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர், அடுத்த நொடியே, “அவளுக்கு எதுவும் இல்லை என்றால் உனக்கு ஏதாவது பலத்த அடியா கண்ணா..?!” என்று கேட்டதும் அவரின் பாசத்தில் அவனின் கண்கள் கலங்கியது..
“தாத்தா எங்க இருவருக்கும் எந்த அடியும் ஆபத்தும் இல்லை.. ஆனால்..” என்று அவன் இழுக்கவும்,
“உங்கள் இருவருக்கும் இல்லை என்றால் வேற யாருக்கு என்ன நடந்தது..?!” என்று கேட்டார்.. காமாட்சி அழுதுக்கொண்டு வந்தார்..
“மது..” என்று சொல்லவும் அவரின் புருவம் முடிச்சிட, “மதுமிதாவிற்கு என்ன ஆச்சு..?” என்று கேட்டார் சிவரத்தினம்..
“தாத்தா அவளை யாரோ கத்தியால் குத்திட்டாங்க.. நாங்க அவளைப் பார்த்துவிட்டு இங்கே இருக்கும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்..” என்று சொல்லவும் அவரது மனம் வலித்தது..
அவன் பேசுவதைக் கேட்டு கண் கலங்கியவர், ‘இன்னும் இந்த பொண்ணு எத்தனை சோதனை தான் அனுபவிக்குமோ..?!’ என்று அவர் மனதில் வருந்தினார்..
ரோஹித் பேசியதை கேட்ட காமாட்சி, “அந்த சாமிக்கு கண்ணே இல்லையா..? என்னோட குடும்பத்தில் இன்னும் எத்தனை பேரை நான் இழக்கணுமோ..?” என்று கேட்டு அழுக ஆரமித்தார்..
“என்னங்க அவன் எந்த மருத்துவமனையில் இருக்கிறான் என்று கேளுங்க..” என்று சொன்னவர் தனது முந்தானையில் கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தார்..
“எந்த மருத்துவமனை கண்ணா..?!” என்று கேட்டது விவரம் சொன்னவன் அலைபேசியை வைத்துவிட்டு மடியில் துங்கிய மகளைப் பார்த்தான்.. அப்பொழுது ‘வீட்டிற்கு செல்ல வேண்டும்..’ என்று சொல்ல வந்த டிரைவரிடம்,
“அண்ணா பாப்பாவிற்கு கடையில் சென்று இட்லி வாங்கிட்டு வந்து தரீங்களா..?!” என்று கேட்டதும், அவர் அவனைப் பார்த்துவிட்டு, அமைதியாக நின்றார்..
“என்ன அண்ணா அமைதியாக நிக்கிறீங்க..?” என்று அவரைப் பார்த்துக் கேட்டான் ரோஹித்..
“தம்பி நீங்க இப்படி கேட்பீங்க என்று தான் நான் கையோடு வாங்கிட்டு வந்தேன்..” என்று சொல்லி பார்சலைக் கொடுத்தவரை பார்த்தவன்,
“எல்லோரும் வேலைக்காரங்க என்று வேறுபாடு காட்டுகின்றனர்.. ஆனால் உங்களுக்கு உள்ள மனிதாபிமானம் கூட சிலருக்கு இருப்பதில்லை..” என்று பார்சலை வாங்கியதும் செல்லாமல் நின்றிருந்தார் அவனின் கார் டிரைவர்..
“என்னங்க அண்ணா..?!” என்று கேட்டான் ரோஹித்.. அவர் அவனைப் பார்த்துவிட்டு, “தம்பி இந்த பொண்ணு பெயர் மதுமிதா தானே..?!” என்று மதுவைக் கைகாட்டி சந்தேகமாக கேட்டார்..
“ஆமாம் அண்ணா..” என்று சொன்னவன், “எதுக்கு இப்பொழுது இவளைப் பற்றி கேட்கிறீங்க..” என்று கேட்டான் ரோஹித்..
“இந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு தம்பி.. அன்னைக்கும் இந்த பொண்ணு உயிருக்கு போராடிய பொழுது நான்தான் இந்த பொண்ணை மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தேன்..” என்று சொன்னார் வேலுசாமி..
அவர்களின் அறைக்குள் நுழைத்தனர் சிவரத்தினமும், காமாட்சியும்..! அவர்கள் உள்ளே வருவதை பார்த்து வெளியே சென்றார் வேலுசாமி..
“ரோஹித் இப்பொழுது இவளுக்கு எப்படி இருக்கிறது.. டாக்டர் என்ன சொன்னாங்க..?!” என்று கேட்டார் காமாட்சி.. அவளின் அருகில் சென்றவர், “இவளின் சிரித்த முகம் பார்த்தாலே மனதில் இருக்கும் கவலை எல்லாம் மறந்து விடுமே.. இவளுக்கா இத்தனை சோதனை..?” என்று மதுவின் முகத்தை தனது கைகளால் வருடினார்..
அவனிடம் இருந்து அபூர்வாவை வாங்கிய சிவரத்தினம், “ரோஹித் காலையில் நாங்க அங்கிருந்து கிளம்பும் போது அங்கே இருந்தவள் மதுரை வர காரணம் என்ன..?” என்று பேரனைப் பார்த்து கேட்டார்..
“அதற்கு நான் பிறகு பதில் சொல்கிறேன் தாத்தா.. இவளை என்னால் இப்படி பார்க்கவே முடியவில்லை.. இவளுக்கு இப்படி ஆனது பற்றி நீங்க யாருக்காவது தகவல் சொன்னீங்களா..?!” என்று நேரடியாகக் கேட்டான் ரோஹித்..
“இன்னும் இல்லடா நான் யாருக்கும் எதுவும் சொல்லவில்லை..” என்று சொன்னதும் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன், “தாத்தா நீங்க யாருக்கும் எந்த தகவலும் சொல்லாதீங்க..” என்று சொன்னதும் பெரியவர்கள் அவனை கேள்வியாக பார்த்தனர்..
“இவளுக்கு இப்படி ஆனது தெரிந்தால் அபசகுணம் என்று சொல்லி திருமணத்தை நிறுத்திவிடுவார்கள்.. அதனால் அவர்கள் திருமண வேலையைப் பார்க்கட்டும்.. நீங்க அபூர்வாவையும் மதுவையும் பார்த்துக் கொள்ளுங்கள்..” என்று முக இறுக்கத்துடன் கூறினான் ரோஹித்..
“நீ என்னப்பா பண்ண போகிறாய்..?!” என்று பேரனைப் பார்த்து கேட்டார் சிவரத்தினம்..
“இவளை இந்த நிலைக்கு கொண்டு வந்தவனை கூண்டில் ஏற்றிவிட்டு வருகிறேன்..” என்று சொல்லவும்,
“டேய் யார் என்று தெரியாமல் நீ அவனை எப்படி கண்டுபிடிப்பாய்..?” என்று கேட்டார் சிவரத்தினம்.. அவரை நிமிர்ந்து பார்த்தவன்,
“என்னோட மதுவை இப்படி செய்தவனை நானே கண்டுபிடித்து அவனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு வந்து இவளின் கழுத்தில் தாலி கட்டுகிறேன்.. இது என்னோட சவால் தாத்தா..” என்றவன் அவளின் அருகில் சென்று அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு அவளின் தலையை வருடிக் கொடுத்துவிட்டு, மகளின் நெற்றியில் இதழ் பதித்தவன்,
“இவர்கள் இருவரையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் தாத்தா..” என்று சொன்னவன் அறையை விட்டு வெளியே வந்தான்.. அவனின் கையில் மதுவின் செல்லும் ஒரு வீட்டின் சாவியும் இருந்தது..
மருத்துவமனை விட்டு வெளியே வந்தவன், “அண்ணா நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க.. ஆனால் அதை கேட்கும் பொறுமை எனக்கு இப்பொழுது இல்லை.. எதுவாக இருந்தாலும் காலையில் நானே உங்களின் வீட்டிற்கு வந்து தெரிந்துக் கொள்கிறேன்..” என்று சொன்னவன், காரில் ஏறி அமர்ந்தான்..
அவரிடம் திரும்பியவன், “உங்களின் வீட்டின் முன்னே காரை நிறுத்தி இறங்கிக் கொள்ளுங்கள்..” என்று சொன்னதும் அவர் சரி என்று தலையை மட்டும் ஆட்டினார்...!
அவர் காரை ஓட்ட அதில் அமர்ந்திருந்தவன் மதுவின் செல்லில் இருந்த குறுந்தகவலை ஆராய்ந்தான்... அதில் அவனுக்கு தேவையானது ஒன்று கிடைத்தது.. அதற்குள் கார் டிரைவர் வீட்டின் முன்னே நிற்க,
“சரிங்க தம்பி நான் கிளம்புகிறேன்..” என்று காரை விட்டு இறங்க, “நான் நாளை காலையில் உங்களுக்கு கூப்பிடுகிறேன் அண்ணா.. நீங்க நான் சொல்லும் இடத்திற்கு வந்துவிடுங்கள் நாம் அங்கே பேசலாம்..” என்று சொன்னவன், காரை விட்டு இறங்கி டிரைவிங் சீட்டில் ஏறி அமர்ந்தான்..
அவன் காரை எடுத்துக் கொண்டு சென்றதும் வீட்டின் உள்ளே சென்றார் வேலுச்சாமி..!
அவன் வீடியோ பார்த்துக் கொண்டிருக்க, அவனின் அலைபேசி அடிக்க, அதை எடுத்துப் பேசினான்.. அவனின் மனம் குழப்பத்துடன் இருக்க,
“ஹலோ ரோஹித் எங்கப்பா இருக்கிறாய்..?!” என்று கேட்டார் சிவரத்தினம்..
அவரின் குரல் கேட்டவன், “தாத்தா நான் மருத்துவமனையில் இருக்கிறேன்..” என்று கூற, அவருக்கும் பதட்டம் வந்தது..
“டேய் ரோஹித் அபூர்வாக்கு என்னடா ஆச்சு..?! மதுமிதா அவளை விட்ட்டுவிட்டு இருக்க மாட்டாள்.. என்னோட பேத்திக்கு என்னடா ஆச்சு..?” என்று கேட்டார்..
அவர் பேசுவதைக் கேட்ட காமாட்சி, “என்னங்க ஆச்சு அபூர்வாவிற்கு..?!” என்று கேட்டவரின் கண்களும் கலங்கியது.. அவர்கள் இருவரும் பத்திரிக்கை கொடுத்துவிட்டு வீட்டை நோக்கி வந்துக் கொண்டிருந்தனர்..
அவர் தவறாக நினைத்துக் கொண்டதை புரிந்துக் கொண்ட ரோஹித், “தாத்தா அபூர்வாவிற்கு ஒன்றும் இல்லை..” என்று சொல்லவும்
“அவளுக்கு எதுவும் இல்லையா..?” என்று பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர், அடுத்த நொடியே, “அவளுக்கு எதுவும் இல்லை என்றால் உனக்கு ஏதாவது பலத்த அடியா கண்ணா..?!” என்று கேட்டதும் அவரின் பாசத்தில் அவனின் கண்கள் கலங்கியது..
“தாத்தா எங்க இருவருக்கும் எந்த அடியும் ஆபத்தும் இல்லை.. ஆனால்..” என்று அவன் இழுக்கவும்,
“உங்கள் இருவருக்கும் இல்லை என்றால் வேற யாருக்கு என்ன நடந்தது..?!” என்று கேட்டார்.. காமாட்சி அழுதுக்கொண்டு வந்தார்..
“மது..” என்று சொல்லவும் அவரின் புருவம் முடிச்சிட, “மதுமிதாவிற்கு என்ன ஆச்சு..?” என்று கேட்டார் சிவரத்தினம்..
“தாத்தா அவளை யாரோ கத்தியால் குத்திட்டாங்க.. நாங்க அவளைப் பார்த்துவிட்டு இங்கே இருக்கும் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம்..” என்று சொல்லவும் அவரது மனம் வலித்தது..
அவன் பேசுவதைக் கேட்டு கண் கலங்கியவர், ‘இன்னும் இந்த பொண்ணு எத்தனை சோதனை தான் அனுபவிக்குமோ..?!’ என்று அவர் மனதில் வருந்தினார்..
ரோஹித் பேசியதை கேட்ட காமாட்சி, “அந்த சாமிக்கு கண்ணே இல்லையா..? என்னோட குடும்பத்தில் இன்னும் எத்தனை பேரை நான் இழக்கணுமோ..?” என்று கேட்டு அழுக ஆரமித்தார்..
“என்னங்க அவன் எந்த மருத்துவமனையில் இருக்கிறான் என்று கேளுங்க..” என்று சொன்னவர் தனது முந்தானையில் கண்ணீரை துடைத்துக் கொண்டு நிமிர்ந்தார்..
“எந்த மருத்துவமனை கண்ணா..?!” என்று கேட்டது விவரம் சொன்னவன் அலைபேசியை வைத்துவிட்டு மடியில் துங்கிய மகளைப் பார்த்தான்.. அப்பொழுது ‘வீட்டிற்கு செல்ல வேண்டும்..’ என்று சொல்ல வந்த டிரைவரிடம்,
“அண்ணா பாப்பாவிற்கு கடையில் சென்று இட்லி வாங்கிட்டு வந்து தரீங்களா..?!” என்று கேட்டதும், அவர் அவனைப் பார்த்துவிட்டு, அமைதியாக நின்றார்..
“என்ன அண்ணா அமைதியாக நிக்கிறீங்க..?” என்று அவரைப் பார்த்துக் கேட்டான் ரோஹித்..
“தம்பி நீங்க இப்படி கேட்பீங்க என்று தான் நான் கையோடு வாங்கிட்டு வந்தேன்..” என்று சொல்லி பார்சலைக் கொடுத்தவரை பார்த்தவன்,
“எல்லோரும் வேலைக்காரங்க என்று வேறுபாடு காட்டுகின்றனர்.. ஆனால் உங்களுக்கு உள்ள மனிதாபிமானம் கூட சிலருக்கு இருப்பதில்லை..” என்று பார்சலை வாங்கியதும் செல்லாமல் நின்றிருந்தார் அவனின் கார் டிரைவர்..
“என்னங்க அண்ணா..?!” என்று கேட்டான் ரோஹித்.. அவர் அவனைப் பார்த்துவிட்டு, “தம்பி இந்த பொண்ணு பெயர் மதுமிதா தானே..?!” என்று மதுவைக் கைகாட்டி சந்தேகமாக கேட்டார்..
“ஆமாம் அண்ணா..” என்று சொன்னவன், “எதுக்கு இப்பொழுது இவளைப் பற்றி கேட்கிறீங்க..” என்று கேட்டான் ரோஹித்..
“இந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு தம்பி.. அன்னைக்கும் இந்த பொண்ணு உயிருக்கு போராடிய பொழுது நான்தான் இந்த பொண்ணை மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தேன்..” என்று சொன்னார் வேலுசாமி..
அவர்களின் அறைக்குள் நுழைத்தனர் சிவரத்தினமும், காமாட்சியும்..! அவர்கள் உள்ளே வருவதை பார்த்து வெளியே சென்றார் வேலுசாமி..
“ரோஹித் இப்பொழுது இவளுக்கு எப்படி இருக்கிறது.. டாக்டர் என்ன சொன்னாங்க..?!” என்று கேட்டார் காமாட்சி.. அவளின் அருகில் சென்றவர், “இவளின் சிரித்த முகம் பார்த்தாலே மனதில் இருக்கும் கவலை எல்லாம் மறந்து விடுமே.. இவளுக்கா இத்தனை சோதனை..?” என்று மதுவின் முகத்தை தனது கைகளால் வருடினார்..
அவனிடம் இருந்து அபூர்வாவை வாங்கிய சிவரத்தினம், “ரோஹித் காலையில் நாங்க அங்கிருந்து கிளம்பும் போது அங்கே இருந்தவள் மதுரை வர காரணம் என்ன..?” என்று பேரனைப் பார்த்து கேட்டார்..
“அதற்கு நான் பிறகு பதில் சொல்கிறேன் தாத்தா.. இவளை என்னால் இப்படி பார்க்கவே முடியவில்லை.. இவளுக்கு இப்படி ஆனது பற்றி நீங்க யாருக்காவது தகவல் சொன்னீங்களா..?!” என்று நேரடியாகக் கேட்டான் ரோஹித்..
“இன்னும் இல்லடா நான் யாருக்கும் எதுவும் சொல்லவில்லை..” என்று சொன்னதும் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவன், “தாத்தா நீங்க யாருக்கும் எந்த தகவலும் சொல்லாதீங்க..” என்று சொன்னதும் பெரியவர்கள் அவனை கேள்வியாக பார்த்தனர்..
“இவளுக்கு இப்படி ஆனது தெரிந்தால் அபசகுணம் என்று சொல்லி திருமணத்தை நிறுத்திவிடுவார்கள்.. அதனால் அவர்கள் திருமண வேலையைப் பார்க்கட்டும்.. நீங்க அபூர்வாவையும் மதுவையும் பார்த்துக் கொள்ளுங்கள்..” என்று முக இறுக்கத்துடன் கூறினான் ரோஹித்..
“நீ என்னப்பா பண்ண போகிறாய்..?!” என்று பேரனைப் பார்த்து கேட்டார் சிவரத்தினம்..
“இவளை இந்த நிலைக்கு கொண்டு வந்தவனை கூண்டில் ஏற்றிவிட்டு வருகிறேன்..” என்று சொல்லவும்,
“டேய் யார் என்று தெரியாமல் நீ அவனை எப்படி கண்டுபிடிப்பாய்..?” என்று கேட்டார் சிவரத்தினம்.. அவரை நிமிர்ந்து பார்த்தவன்,
“என்னோட மதுவை இப்படி செய்தவனை நானே கண்டுபிடித்து அவனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு வந்து இவளின் கழுத்தில் தாலி கட்டுகிறேன்.. இது என்னோட சவால் தாத்தா..” என்றவன் அவளின் அருகில் சென்று அவளின் முகத்தைப் பார்த்துவிட்டு அவளின் தலையை வருடிக் கொடுத்துவிட்டு, மகளின் நெற்றியில் இதழ் பதித்தவன்,
“இவர்கள் இருவரையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் தாத்தா..” என்று சொன்னவன் அறையை விட்டு வெளியே வந்தான்.. அவனின் கையில் மதுவின் செல்லும் ஒரு வீட்டின் சாவியும் இருந்தது..
மருத்துவமனை விட்டு வெளியே வந்தவன், “அண்ணா நீங்க ஏதோ சொல்ல வந்தீங்க.. ஆனால் அதை கேட்கும் பொறுமை எனக்கு இப்பொழுது இல்லை.. எதுவாக இருந்தாலும் காலையில் நானே உங்களின் வீட்டிற்கு வந்து தெரிந்துக் கொள்கிறேன்..” என்று சொன்னவன், காரில் ஏறி அமர்ந்தான்..
அவரிடம் திரும்பியவன், “உங்களின் வீட்டின் முன்னே காரை நிறுத்தி இறங்கிக் கொள்ளுங்கள்..” என்று சொன்னதும் அவர் சரி என்று தலையை மட்டும் ஆட்டினார்...!
அவர் காரை ஓட்ட அதில் அமர்ந்திருந்தவன் மதுவின் செல்லில் இருந்த குறுந்தகவலை ஆராய்ந்தான்... அதில் அவனுக்கு தேவையானது ஒன்று கிடைத்தது.. அதற்குள் கார் டிரைவர் வீட்டின் முன்னே நிற்க,
“சரிங்க தம்பி நான் கிளம்புகிறேன்..” என்று காரை விட்டு இறங்க, “நான் நாளை காலையில் உங்களுக்கு கூப்பிடுகிறேன் அண்ணா.. நீங்க நான் சொல்லும் இடத்திற்கு வந்துவிடுங்கள் நாம் அங்கே பேசலாம்..” என்று சொன்னவன், காரை விட்டு இறங்கி டிரைவிங் சீட்டில் ஏறி அமர்ந்தான்..
அவன் காரை எடுத்துக் கொண்டு சென்றதும் வீட்டின் உள்ளே சென்றார் வேலுச்சாமி..!