• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nesitha Iru Nenjangal -Epilogue

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
என்னதான் பணம் காசு இருந்தாலும் அவர்கள் குழந்தைகளின் வழியே சென்றனர்.. இப்பொழுது கூட குழந்தைகளை அழைத்துக் கொண்டு ரயிலில் செல்ல முடிவெடுத்தனர்..

ரோஹித் தொடங்கிய கம்பெனி எக்ஸ்போர்ட் பொருட்கள் வெளிநாட்டில் நல்ல வரவு இருக்கவே கம்பெனி வளர்ச்சி அதிகரித்தது.. ரோஹித் தொழிலில் முழுகவனம் செலுத்த அவனுக்கு உறுதுணையாக இருந்தாள்.

அவர்கள் தொழில் நல்ல முன்னேற்றம் பெற, அந்த நேரத்தில் தாய்மை அடைய அவளை அந்த குடும்பமே தாங்கியது.. ரோஹித் சொல்லவே தேவையில்லை அவள் மனதில் நினைப்பதைக் கூட நிறைவேற்றி வைத்தான்..

அவள் பிரசவ வலியில் துடித்த பொழுது அவளை விடவும் அதிகம் அழுதது ரோஹித்தாக மட்டுமே இருக்கும் குழந்தை பிறந்ததும் குழந்தையை முதலில் அபூர்வா கையில் கொடுக்க குழந்தையை வாங்கிய அபூர்வா,

“சக்திம்மா..” என்று அழைக்க ரோஹித் அண்ணன் சக்திவேல் ஞாபகமாக அவனுக்கு அதே பெயரை வைத்தனர் ரோஹித்தும் மதுவும்..!

ஆனால் அவர்கள் இருவரும் காதல் செய்வதில் பிஹச்டி செய்யும் அளவிற்கு தேறியிருக்க, அடுத்ததாக ரஞ்சித் காதலில் தாய்மை அடைந்தாள் கீர்த்தி.. அவளிற்கும் அனைவரும் எல்லாம் செய்ய கல்யாணி, மாணிக்கம் இருவரும் தங்கள் மகளைப் பார்ப்பது போல பார்த்துக் கொண்டனர்..

அவளிற்கு முதலில் பிறந்தது பெண் குழந்தை அதை வாங்கிய மதுமிதா, “ரக்சிதா..” என்று ராதியின் நினைவாக அவளின் பெயரைச் சூட்டினர்..

ஜீவா – கயல்விழி எப்பொழுதும் போல கலகலப்பிற்கு முதலிடம் என்று இருக்க அந்த நேரம் கயல்விழியும் தாய்மை அடைய, ஜீவா வீட்டில் இருந்தவர்கள் அவளைத் தாங்கினர்..

மதுவின் பெற்றோர் என்னதான் மகள்களைப் பார்த்தாலும் கூட புகுந்த வீட்டில் அனைவரும் அவர்கள் குணத்தை முழுவதுமாக புரிந்து வைத்திருந்தனர்..

அவளிற்கு முதலில் பிறந்தது ஆண் குழந்தை என்பதால் அவனிற்கு, “ராகவ்..” என்று பெயர் சூட்ட, கீர்த்திக்கு இரண்டாவது பிறந்த பெண் குழந்தைக்கு, “சஞ்சனா” என்றும் பெயர் சூட்டி மகழ்ந்தனர்..

அதில் ரஞ்சித்திற்கும் பங்கு கொடுக்க, கீர்த்தி ரஞ்சித் இருவரும் சேர்ந்து மற்ற வேலைகளைக் கவனிக்க, மதுமிதா தனது மேல் படிப்பை தொடங்கி ஆடிட்டர் ஆனதும் கம்பெனியின் கணக்கு வழக்குகள் அனைத்தும் அவளின் கீழ் வந்தது..

ரஞ்சித் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ரோஹித் உடன் சேர்ந்து ஒரு சாப்ட்வேர் கம்பெனியை தொடங்க அதில் முக்கிய வேலையில் ரோஹித், கீர்த்தி இருவரும் கவனிக்க ஜீவா, கயல்விழி இருவரும் முக்கிய பங்கு வகித்தனர்..

அபூர்வா எல்லோருக்கும் பெரியவள், சக்திக்கும் அவளிற்கும் இரண்டு வருடம் வித்தியாசம்.. அவள் சக்தியை விட ஒரு வருடம் சிறியவள்.. ராகவ்வும், ரக்சிதாவும் ஒரே வயதை உடையவர்கள்.. சஞ்சனா ராகவ் விட ஒரு வருடம் சிறியவள்..

அபூர்வா எல்லோருக்கும் பெரியவள் என்பதால் அவர்களை அதிகம் மிரட்டுவது அவளே.. அவள் அனைவரின் மேலும் பாசமாக இருப்பாள்..

அவளுக்கு தம்பியை அவ்வளவு பிடிக்கும்.. அவனுக்காக எதையும் செய்வாள்.. அதேபோல தான் சக்தியும்.. அவனுக்கு ராகவ் என்றால் அவனின் உடன்பிறந்த தம்பி போலத்தான் பார்ப்பான்..

சக்திக்கு ரக்சிதாவை ரொம்பவும் பிடிக்கும்.. அவளிடம் இருக்கும் அந்த அமைதி அவன் எப்பொழுதும் ரசிப்பான்.. அதே போல ராகவிற்கு சஞ்சனா என்றால் ரொம்பவும் விருப்பம்..

ராகவ்விற்கு ரக்சிதா உயிர் தோழி.. அபூர்வா சொன்னால் அனைவரும் கேட்பார்கள் அந்த அளவிற்கு அவர்களுக்கு பாசத்தைக் கற்றுக் கொடுத்திருந்தனர் அவர்களின் பெற்றோர்கள்!

இப்பொழுது மூன்று குடும்பத்தினரும் மதுரையில் தான் இருக்கின்றனர்.. அவர்கள் மூவரும் தனித்தனியாக வீடு கட்டி ஒரே இடத்தில் இருக்கின்றனர்..

அபூர்வா லீவ் விட்டால் போதும், திருநெல்வேலி, திருச்சி என்று சுத்திக் கொண்டிருப்பாள்.. ஆமாம் மதுவின் பெற்றோர் இப்பொழுது திருச்சியில் இருக்கின்றனர்.. ஜீவா பெற்றோர் மதுரையில் தான் இருக்கின்றனர்..

ரோஹித்தின் பெற்றோர், மதுவின் பெற்றோர், ரோஹித் தாத்தா- பாட்டி, ஜீவாவின் பெற்றோர்கள் ஆன்மீகச் சுற்றுலா சென்றிருக்க, மற்ற ஜோடிகள் மூன்றும் ஆக்ரா சென்று சேர்ந்தனர்..

டெல்லியில் ரூம் எடுத்துக் கொண்டு தங்கியவர்கள் ஆக்ரா யமுனை நதிக்கரையில் இருக்கும் தாஜ்மஹாலைக் காண சென்றனர். யமுனை நதிக்கரையில் கம்பீரமாக நின்றிருந்தது காதலின் சின்னமான தாஜ்மகால்.

ரோஹித் ரக்சிதாவைத் தூக்கிக்கொள்ள அபூர்வா மதுவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.. ராகவ்வை ரஞ்சித் தூக்கிக் கொள்ள, சஞ்சனாவைத் தூக்கிக்கொண்டான் சக்தியைத் தூக்கி கொண்டாள் கீர்த்தி...

ஜீவா கயலிடம், “முதல் முதலாக இந்த இடத்திற்கு வந்த பொழுது எவ்வளவு மனவலியுடன் வந்தோம்.. ஆனால் இன்று நாம் இருவரும் நமது பிள்ளைகளுடன் வந்திருக்கிறோம் என்று எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது..” என்று சொல்ல அதைக் கேட்ட ரோஹித்,

“அப்படி என்ன மனவலி..?” என்று கிண்டலாகக் கேட்டதும், அபூர்வா ரோஹித்திடன், “சித்தி சித்தப்பாவை அடித்துவிட்டார்கள் அப்பா அதுதான் மனவலி..” என்று சொல்ல, ராகவ் வாய் பொத்தி சிரிக்க, அவனைப் பார்த்து சிரித்தனர்..

“இங்கே வருவதற்கு முன்னாடியே அடி வாங்கிட்டியா..?” என்று கிண்டலாகக் கூறிவிட்டு சிரித்தான் ரஞ்சித்..

“ரஞ்சித் நான் உன்னோடு இங்கே வரணும் என்று நினைத்தேன்.. ஆனால் அது இன்றுதான் நடந்திருக்கிறது.. ரொம்ப அழகாக இருக்கிறது..” என்று தாஜ்மகாலைப் பார்த்துக் கொண்டே ரஞ்சித்தின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் கீர்த்தி..

“அதெல்லாம் சரி மாமா பிள்ளைகளை இங்கே அழைத்துவர யார் ஐடியா கொடுத்தது..?” என்று ரோஹித்திடம் குறும்பாகக் கேட்டாள் கயல்விழி..

அவளைப் பார்த்தவன் மதுவைப் பார்த்துவிட்டு, “கண்டிப்பாக சொல்லியே ஆகணுமா..?” என்று கேட்டதும், “ம்ம் சொல்லு ரோஹித்..” என்று கீர்த்தியும் கயலுடன் கூட்டணி அமைக்க, மது இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு,

“அதுதான் உங்களின் தங்கையும், என்னோட தங்கையும் கேட்கிறார்கள் இல்ல.. சொல்லுங்க..” என்று சொல்ல, ரோஹித் அவளைப் பார்த்து பொய் கோபத்தோடு முறைத்தான்..

“அப்பா இது ரொம்ப ரகசியம் இல்ல சொல்லுங்கப்பா.. என்னோட மனைவிக்கு பிடித்தது என்று..” என்று சக்தி சொல்ல, “என்னோட மானத்தை வாங்க நீங்க இருவரும் போதும்..” என்று ரோஹித் தலையில் கைவைக்க அனைவரும் சிரிக்க, அங்கே வந்த ஒரு அமெரிக்கன் ஜோடி அவர்கள் அருகில் வந்து,

“நீங்கள் எல்லோரும் ஒரே குடும்பமா..?” என்று கேட்டதும் அவர்களிடம் பேசியவர்கள், கடைசியில் அவர்கள் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து போட்டோ எடுத்தனர்..

அவர்கள் அவர்களை வாழ்த்திவிட்டு செல்ல, பிள்ளைகள் எல்லோரும் கைகள் கோர்த்து நிற்க, ஜீவாவின் தோளில் சாய்ந்து நின்றாள் கயல்விழி..

ரஞ்சித், கீர்த்தி இருவரும் கைகளைக் கோர்த்துக் கொள்ள, அவர்களைப் பார்த்த ரோஹித் மதுமிதா இருவரும், தங்களுக்குள் சிரித்துவிட்டு,

“ஐ லவ் யூ டா..” என்று மதுமிதா சொல்ல, ரோஹித் அவளின் இடையோடு கைகொடுத்து அவளை வளைத்துக் கொள்ள, அவர்கள் அங்கே இருந்த தாஜ்மகாலை ரசிக்க இவர்கள் காதலில் இன்னும் நிமிர்ந்து நின்றது காலத்தைக் கடந்த அந்த காதல் பொக்கிஷமான தாஜ்மஹால்...

நேசித்த நெஞ்சங்கள் என்றும் தான் நேசித்த நெஞ்சத்தை என்றும் மறந்து செல்லாது.. காலம் என்ன செய்தாலும், காலம் கடந்தாலும் நேசித்த நெஞ்சங்கள் இணைத்தே இருக்கும்..
Superrr sis lovely story ???????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top