ஹலோ பிரண்ட்ஸ்...... கதையோட இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டதால் என்னால முடிந்த அளவு வேகமாக அப்டேட் கொடுக்க முயற்சி பண்ணுறேன்.....
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி.....
அரண்மனை போன்ற அந்த வீடு திருமணத்திற்கான அலங்காரங்களால் ஜொலித்து கொண்டிருக்க மனம் நிறைந்த கனவுகளோடு சரோஜா மற்றும் அஜய் தங்கள் திருமணத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.
பிரமாண்டமான அந்த ஹாலின் நடுவில் மேடை அமைக்கப்பட்டு பூக்களின் தோரணங்கள் அந்த இடத்தை அலங்கரிக்க பூந்தோட்டத்தின் நடுவில் நிற்பது போல ஒரு கணம் எல்லோரும் அந்த இடத்தை வியந்து பார்த்தனர்.
திருமணத்திற்கான சடங்குகள் ஆரம்பித்து விட வேஷ்டி, சட்டை அணிந்து கம்பீரமாக வந்து அமர்ந்த அஜயை பார்த்து கனகா சந்தோஷமாக புன்னகத்து கொண்டார்.
உறவினர்கள் ஒவ்வொரு புறமாக திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்று கொண்டிருக்க அஜய் அய்யர் சொன்ன மந்திரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான்.
"பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ...." என அய்யர் கூறவும் அஜய் ஆவலாக சரோஜா வரும் பாதையை பார்த்து கொண்டு இருந்தான்.
சிவப்பு மற்றும் மெரூன் நிறம் கலந்த பட்டு சேலை அணிந்து இயல்பான அவள் அழகை மேலும் மெருகேற்றும் ஒப்பனையோடு தோழிகள் கேலி செய்யும் போது வெட்கப்பட்டு தலை அசைக்க அந்த அசைவில் அவள் கம்மல்கள் அசைந்தாட அஜயின் மனமும் அந்த கம்மலோடு சேர்ந்து ஆட்டம் கண்டது.
அஜயை பார்த்ததும்
வெட்கம் சரோஜாவை சூழ்ந்து கொள்ள புன்னகையோடு அவன் அருகில் அமர்ந்து கொண்டவள் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
சரோஜா பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல சரோஜாவின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவன் அவள் அவனைப் பார்த்ததும் சிரித்து கொண்டே கண் சிமிட்டினான்.
அஜயின் புன்னகை சரோஜாவையும் தொற்றிக் கொள்ள புன்னகையோடு தலை குனிந்து அமர்ந்தவள் அடுத்த சடங்குகளை செய்யத் தொடங்கினாள்.
அர்ச்சதையை எல்லோரும் எடுத்துக் கொள்ள அஜய் அய்யர் கொடுத்த தாலியை சரோஜாவின் சங்கு கழுத்தில் கட்டி விட கனகா மற்றும் வித்யா சந்தோஷமாக அந்த தருணத்தை பார்த்து கண் கலங்கி நின்றனர்.
"மாமா கங்கிராட்ஸ்....என் அக்காவை பத்திரமாக பார்த்துக்கோங்க..." என கணேஷ் அஜயின் கை பற்றி குலுக்க
புன்னகையோடு அவனைப் பார்த்தவன்
"உங்க அக்காவை என்னை நல்லா பார்த்துக்க சொல்லிடுபா...." என்று கூற
"உங்களை...." என்ற சரோஜா செல்லமாக அஜயின் தோளில் தட்டினாள்.
பெரியவர்கள் அனைவரிடமும் புது மணத் தம்பதி ஆசிர்வாதம் வாங்கி கொள்ள இந்த சந்தோஷம் என்றென்றும் நிலைக்க வேண்டும் என்று வித்யா மனதார வேண்டிக் கொண்டார்.
அஜய் மற்றும் சரோஜாவை ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளமும் சூழ்ந்து கொள்ள அந்த இடமே சந்தோஷத்தில் நிறைந்து இருந்தது.
"அடுத்தது நம்ம கணேஷிற்கு தான் மேரேஜ் போல...பொண்ணு பார்த்துடலாமா கணேஷ்???"
"கணேஷ் தான் ஆல்ரெடி பொண்ண பார்த்து வைச்சுட்டான் தானே...இப்போவே கல்யாணம் பண்ணி வைச்சாலும் அவனுக்கு ஓகே தான் இல்லையா???" என கணேஷின் நண்பர்கள் கணேஷை வம்பிழுக்க கணேஷ் சரோஜாவைப் பார்த்து திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றான்.
"என்ன பொண்ணு பார்த்துட்டானா???" என சரோஜா அதிர்ச்சியாக கணேஷைப் பார்க்க
"அய்யய்யோ சரோஜா அப்படி எல்லாம் எதுவும் இல்லை....அவனுங்க சும்மா என்னை வம்பிழுக்கிறாங்க....வாயை மூடுங்கடா...." என தன் நண்பர்களை அதட்டியவன் அவர்கள் எல்லோரையும் காலில் விழாத குறையாக இழுத்து கொண்டு சென்றான்.
"கேடி எப்படி எஸ் ஆகுறான் பாருங்க...." என சிரித்துக் கொண்டே சரோஜா அஜயின் புறமாக திரும்ப அஜயோ வைத்த கண் வாங்காமல் சரோஜாவைப் பார்த்து கொண்டு இருந்தான்.
அஜயின் பார்வையில் பேச்சு எழாமல் வெட்கம் குடி கொள்ள தலை குனிந்த சரோஜா தன் கை விரல்களைப் பார்த்து கொண்டு இருந்தாள்.
"என்ன பேச்சு நின்னுடுச்சு???" என அஜய் கேட்கவும்
நிமிர்ந்து அவனைப் பார்த்த சரோஜா
"ஒண்ணும் இல்லையே...." என்று கூற அஜய் புன்னகையோடு அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டான்.
"ரோஜா நான் ஒண்ணு கேட்கவா???" என மெல்லிய குரலில் அஜய் கேட்கவும்
அவனது ரோஜா என்ற அழைப்பில் முகம் மலர அவனைப் பார்த்தவள்
"கேளுங்க...." என்று கூறினாள்.
"என்னை உனக்கு பிடிச்சுருக்கா???" என அஜய் கேட்கவும்
கோபமாக அவனை முறைத்து பார்த்தவள்
"கல்யாணம் எல்லாம் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் கேட்குற கேள்வியை பாரு...." என அவன் கைகளை தட்டி விட்டு எழுந்து சென்று விட அஜய் புன்னகையோடு சரோஜாவை பார்த்து கொண்டு இருந்தான்.
சிரித்துக்கொண்டே சரோஜாவை பின் தொடர்ந்து வந்த அஜய் அவளது கையை பற்றி அழைத்து கொண்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்ல
"என்ன பண்ணுறீங்க அஜய்?? கீழே நம்ம தேடப் போறாங்க..." என பதட்டமாக சரோஜா சுற்றிலும் பார்த்து கொண்டே கூறவும்
"அதெல்லாம் தேட மாட்டாங்க...நம்ம புதிதாக கல்யாணம் பண்ணுண யங் கப்பள்....ஷோ நோ ப்ராப்ளம்......நான் உனக்கு முக்கியமான ஒரு விஷயம் காண்பிக்கணும்....இப்போ பார்த்தால் தான் நைட் உனக்கு நான் எக்ஸ்ப்ளைன் பண்ணுற வேலை குறையும்...பேசாமல் வா...." என்றவாறே அவள் கை பிடித்து அழைத்து சென்றான்.
"அங்கே பார்...." என்று அஜய் கூற திரும்பி பார்த்த சரோஜாவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.
அந்த இடத்தை மொட்டை மாடி என்று சொல்வதை விட சிறு நந்தவனம் என்று சொல்லலாம் எனும் அளவில் இருந்தது.
நடுவில் தாமரை மலர் வடிவில் தடாகம் அமைக்கப்பட்டிருக்க அதைச் சூழ பல வகையான ரோஜா பூ மரங்களும், ஓர்கிட் செடிகளும், பல வகையான பூக்களும் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தது.
மொட்டை மாடியின் முழு பரப்பையும் மல்லிகை மற்றும் முல்லைப் பந்தல் மறைந்திருக்க அதன் கீழே ஊஞ்சல் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
இதமான வெயிலோடு இயற்கை காற்று தன் முகத்தில் மோத ஆழ்ந்து அந்த நொடியை ரசித்த சரோஜா ரசனையோடு ஒவ்வொரு மரங்களையும் பார்த்து கொண்டு நின்றாள்.
ஒவ்வொரு இடமாக பார்த்து கொண்டு வந்த சரோஜா அஜயின் புறம் திரும்பி
"அஜய்....இந்த இடம் சூப்பராக இருக்கு....எவ்வளவு அழகாக செய்து இருக்காங்க....இதெல்லாம் எப்படி??? யார் செய்தாங்க??? கொஞ்ச நாள்லயே இவ்வளவு செய்துட்டாங்களா???" என ஆச்சரியமாக கேட்கவும்
அவள் தோளின் இருபுறமும் கை போட்டு அவள் முன்னால் வந்து நின்ற அஜய்
"உனக்கு பிடிச்சுருக்கா???" எனக் கேட்டான்.
"பிடித்து இருக்காவா??? விட்டால் நாள் பூராவும் நான் இங்கேயே இருந்துடுவேன்...." என கண்கள் பளபளக்க சரோஜா கூறவும்
அவளை பார்த்து புன்னகத்து கொண்ட அஜய்
"இது உனக்கே உனக்காக நான் ஏற்பாடு பண்ண சின்ன கல்யாணப் பரிசு...." என்று கூற
"எனக்காகவா????" என சரோஜா ஆச்சரியமாக கேட்டாள்.
"ஆமா நான் உன்னை பொண்ணு பார்க்க வந்த நேரம் உன் வீட்டை சுற்றி பார்த்தேன்....சின்ன இடமாக இருந்தாலும் அவ்வளவு அழகாக மரங்கள் வளர்த்து இருந்தது....கணேஷ் கிட்ட யாரு இதெல்லாம் செய்ததுனு கேட்கவும் சரோஜா தான் இதெல்லாம் பார்ப்பா....அவளுக்கு தான் தோட்டம் செய்யுறது ரொம்ப பிடிக்கும்னு சொன்னான்.....ஷோ கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு வித்தியாசமாக ஒரு கிஃப்ட் பண்ணணும்னு நினைச்சு கிடைக்குற நேரம் எல்லாம் என் தம்பிங்களை சொல்லி இதை பண்ணுணேன்.....உனக்கே உனக்காக....என் ரோஜாவுக்காக இந்த சின்ன ரோஜா தோட்டம்....எப்படி???" என அஜய் கூறவும்
எம்பி அவன் கன்னத்தில் சட்டென்று இதழ் பதித்தவள்
"உங்க கிஃப்ட்டும் உங்களை மாதிரி வித்தியாசமாக தான் இருக்கு..." என்று கூறி சிரிக்க அஜய் சரோஜாவை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
"இன்னைக்கு நைட் நம்ம இங்க தான் இருக்கப் போறோம்.....நைட் பூராவும்...." என அஜய் கண்ணடித்து சிரித்துக் கொண்டே கூற
அவன் கைகளை தட்டி விட்ட சரோஜா
"போங்க அஜய்...." என வெட்கப்பட்டு கொண்டே படியிறங்கி சென்று விட அஜய் உல்லாசமாக விசிலடித்துக் கொண்டே சரோஜாவைப் பின் தொடர்ந்து சென்றான்.
மாலை நேரம் ரிசப்சனுக்காக சரோஜா தயாராகி கொண்டிருந்த வேளை அவளது போன் அடித்தது.
"இந்த நேரத்தில் யார் போன் பண்ணுறா???" என்று யோசனையோடு போனை எடுத்து பார்த்தவள் அன்னவுன் என்று திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்து அதிர்ந்து போனாள்.
அன்னவுன் என்ற பெயரை பார்த்தாலே சரோஜாவிற்கு அன்றைய கனவு கண்ட தருணமே நினைவு வரும்.
பலமுறை இவ்வாறு அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க சரோஜாவின் பயம் மட்டும் இன்னும் மாறவில்லை.
கைகள் நடுங்க சரோஜா போனை அட்டன்ட் செய்து காதில் வைக்க மறுபுறம் போன் கட் செய்யப்பட்டது.
"யார் இது??? அடிக்கடி போன் பண்ணுறாங்க...ஆனா பேசாமல் வைச்சிடுறாங்க....என்ன நடக்கிறது??" என சரோஜா போனை பார்த்து கொண்டு யோசித்து கொண்டிருக்க
"இன்னும் ரெடி ஆகாமல் போனை பார்த்துட்டு என்ன பண்ணுற சரோஜா???" என்றவாறே வித்யா வரவும்
சட்டென்று போனை கீழே வைத்தவள்
"அம்மா கிட்ட இதை சொன்னா அப்புறம் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க.....ஷோ வேண்டாம்...." என்று நினைத்துக் கொண்டு
"இதோ பத்து நிமிஷத்தில் வரேன் மா...." எனக் கூறி விட்டு தயாராக தொடங்கினாள்.
சென்ற பதிவுக்கு லைக், கமெண்ட்ஸ் அளித்த அனைவருக்கும் நன்றி.....
அரண்மனை போன்ற அந்த வீடு திருமணத்திற்கான அலங்காரங்களால் ஜொலித்து கொண்டிருக்க மனம் நிறைந்த கனவுகளோடு சரோஜா மற்றும் அஜய் தங்கள் திருமணத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.
பிரமாண்டமான அந்த ஹாலின் நடுவில் மேடை அமைக்கப்பட்டு பூக்களின் தோரணங்கள் அந்த இடத்தை அலங்கரிக்க பூந்தோட்டத்தின் நடுவில் நிற்பது போல ஒரு கணம் எல்லோரும் அந்த இடத்தை வியந்து பார்த்தனர்.
திருமணத்திற்கான சடங்குகள் ஆரம்பித்து விட வேஷ்டி, சட்டை அணிந்து கம்பீரமாக வந்து அமர்ந்த அஜயை பார்த்து கனகா சந்தோஷமாக புன்னகத்து கொண்டார்.
உறவினர்கள் ஒவ்வொரு புறமாக திருமணத்திற்கு வந்தவர்களை வரவேற்று கொண்டிருக்க அஜய் அய்யர் சொன்ன மந்திரங்களை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான்.
"பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ...." என அய்யர் கூறவும் அஜய் ஆவலாக சரோஜா வரும் பாதையை பார்த்து கொண்டு இருந்தான்.
சிவப்பு மற்றும் மெரூன் நிறம் கலந்த பட்டு சேலை அணிந்து இயல்பான அவள் அழகை மேலும் மெருகேற்றும் ஒப்பனையோடு தோழிகள் கேலி செய்யும் போது வெட்கப்பட்டு தலை அசைக்க அந்த அசைவில் அவள் கம்மல்கள் அசைந்தாட அஜயின் மனமும் அந்த கம்மலோடு சேர்ந்து ஆட்டம் கண்டது.
அஜயை பார்த்ததும்
வெட்கம் சரோஜாவை சூழ்ந்து கொள்ள புன்னகையோடு அவன் அருகில் அமர்ந்து கொண்டவள் மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
சரோஜா பார்ப்பதற்காகவே காத்திருந்தது போல சரோஜாவின் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவன் அவள் அவனைப் பார்த்ததும் சிரித்து கொண்டே கண் சிமிட்டினான்.
அஜயின் புன்னகை சரோஜாவையும் தொற்றிக் கொள்ள புன்னகையோடு தலை குனிந்து அமர்ந்தவள் அடுத்த சடங்குகளை செய்யத் தொடங்கினாள்.
அர்ச்சதையை எல்லோரும் எடுத்துக் கொள்ள அஜய் அய்யர் கொடுத்த தாலியை சரோஜாவின் சங்கு கழுத்தில் கட்டி விட கனகா மற்றும் வித்யா சந்தோஷமாக அந்த தருணத்தை பார்த்து கண் கலங்கி நின்றனர்.
"மாமா கங்கிராட்ஸ்....என் அக்காவை பத்திரமாக பார்த்துக்கோங்க..." என கணேஷ் அஜயின் கை பற்றி குலுக்க
புன்னகையோடு அவனைப் பார்த்தவன்
"உங்க அக்காவை என்னை நல்லா பார்த்துக்க சொல்லிடுபா...." என்று கூற
"உங்களை...." என்ற சரோஜா செல்லமாக அஜயின் தோளில் தட்டினாள்.
பெரியவர்கள் அனைவரிடமும் புது மணத் தம்பதி ஆசிர்வாதம் வாங்கி கொள்ள இந்த சந்தோஷம் என்றென்றும் நிலைக்க வேண்டும் என்று வித்யா மனதார வேண்டிக் கொண்டார்.
அஜய் மற்றும் சரோஜாவை ஒட்டுமொத்த இளைஞர் பட்டாளமும் சூழ்ந்து கொள்ள அந்த இடமே சந்தோஷத்தில் நிறைந்து இருந்தது.
"அடுத்தது நம்ம கணேஷிற்கு தான் மேரேஜ் போல...பொண்ணு பார்த்துடலாமா கணேஷ்???"
"கணேஷ் தான் ஆல்ரெடி பொண்ண பார்த்து வைச்சுட்டான் தானே...இப்போவே கல்யாணம் பண்ணி வைச்சாலும் அவனுக்கு ஓகே தான் இல்லையா???" என கணேஷின் நண்பர்கள் கணேஷை வம்பிழுக்க கணேஷ் சரோஜாவைப் பார்த்து திருதிருவென்று விழித்துக் கொண்டு நின்றான்.
"என்ன பொண்ணு பார்த்துட்டானா???" என சரோஜா அதிர்ச்சியாக கணேஷைப் பார்க்க
"அய்யய்யோ சரோஜா அப்படி எல்லாம் எதுவும் இல்லை....அவனுங்க சும்மா என்னை வம்பிழுக்கிறாங்க....வாயை மூடுங்கடா...." என தன் நண்பர்களை அதட்டியவன் அவர்கள் எல்லோரையும் காலில் விழாத குறையாக இழுத்து கொண்டு சென்றான்.
"கேடி எப்படி எஸ் ஆகுறான் பாருங்க...." என சிரித்துக் கொண்டே சரோஜா அஜயின் புறமாக திரும்ப அஜயோ வைத்த கண் வாங்காமல் சரோஜாவைப் பார்த்து கொண்டு இருந்தான்.
அஜயின் பார்வையில் பேச்சு எழாமல் வெட்கம் குடி கொள்ள தலை குனிந்த சரோஜா தன் கை விரல்களைப் பார்த்து கொண்டு இருந்தாள்.
"என்ன பேச்சு நின்னுடுச்சு???" என அஜய் கேட்கவும்
நிமிர்ந்து அவனைப் பார்த்த சரோஜா
"ஒண்ணும் இல்லையே...." என்று கூற அஜய் புன்னகையோடு அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டான்.
"ரோஜா நான் ஒண்ணு கேட்கவா???" என மெல்லிய குரலில் அஜய் கேட்கவும்
அவனது ரோஜா என்ற அழைப்பில் முகம் மலர அவனைப் பார்த்தவள்
"கேளுங்க...." என்று கூறினாள்.
"என்னை உனக்கு பிடிச்சுருக்கா???" என அஜய் கேட்கவும்
கோபமாக அவனை முறைத்து பார்த்தவள்
"கல்யாணம் எல்லாம் நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம் கேட்குற கேள்வியை பாரு...." என அவன் கைகளை தட்டி விட்டு எழுந்து சென்று விட அஜய் புன்னகையோடு சரோஜாவை பார்த்து கொண்டு இருந்தான்.
சிரித்துக்கொண்டே சரோஜாவை பின் தொடர்ந்து வந்த அஜய் அவளது கையை பற்றி அழைத்து கொண்டு மொட்டை மாடிக்கு அழைத்துச் செல்ல
"என்ன பண்ணுறீங்க அஜய்?? கீழே நம்ம தேடப் போறாங்க..." என பதட்டமாக சரோஜா சுற்றிலும் பார்த்து கொண்டே கூறவும்
"அதெல்லாம் தேட மாட்டாங்க...நம்ம புதிதாக கல்யாணம் பண்ணுண யங் கப்பள்....ஷோ நோ ப்ராப்ளம்......நான் உனக்கு முக்கியமான ஒரு விஷயம் காண்பிக்கணும்....இப்போ பார்த்தால் தான் நைட் உனக்கு நான் எக்ஸ்ப்ளைன் பண்ணுற வேலை குறையும்...பேசாமல் வா...." என்றவாறே அவள் கை பிடித்து அழைத்து சென்றான்.
"அங்கே பார்...." என்று அஜய் கூற திரும்பி பார்த்த சரோஜாவின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தது.
அந்த இடத்தை மொட்டை மாடி என்று சொல்வதை விட சிறு நந்தவனம் என்று சொல்லலாம் எனும் அளவில் இருந்தது.
நடுவில் தாமரை மலர் வடிவில் தடாகம் அமைக்கப்பட்டிருக்க அதைச் சூழ பல வகையான ரோஜா பூ மரங்களும், ஓர்கிட் செடிகளும், பல வகையான பூக்களும் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தது.
மொட்டை மாடியின் முழு பரப்பையும் மல்லிகை மற்றும் முல்லைப் பந்தல் மறைந்திருக்க அதன் கீழே ஊஞ்சல் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
இதமான வெயிலோடு இயற்கை காற்று தன் முகத்தில் மோத ஆழ்ந்து அந்த நொடியை ரசித்த சரோஜா ரசனையோடு ஒவ்வொரு மரங்களையும் பார்த்து கொண்டு நின்றாள்.
ஒவ்வொரு இடமாக பார்த்து கொண்டு வந்த சரோஜா அஜயின் புறம் திரும்பி
"அஜய்....இந்த இடம் சூப்பராக இருக்கு....எவ்வளவு அழகாக செய்து இருக்காங்க....இதெல்லாம் எப்படி??? யார் செய்தாங்க??? கொஞ்ச நாள்லயே இவ்வளவு செய்துட்டாங்களா???" என ஆச்சரியமாக கேட்கவும்
அவள் தோளின் இருபுறமும் கை போட்டு அவள் முன்னால் வந்து நின்ற அஜய்
"உனக்கு பிடிச்சுருக்கா???" எனக் கேட்டான்.
"பிடித்து இருக்காவா??? விட்டால் நாள் பூராவும் நான் இங்கேயே இருந்துடுவேன்...." என கண்கள் பளபளக்க சரோஜா கூறவும்
அவளை பார்த்து புன்னகத்து கொண்ட அஜய்
"இது உனக்கே உனக்காக நான் ஏற்பாடு பண்ண சின்ன கல்யாணப் பரிசு...." என்று கூற
"எனக்காகவா????" என சரோஜா ஆச்சரியமாக கேட்டாள்.
"ஆமா நான் உன்னை பொண்ணு பார்க்க வந்த நேரம் உன் வீட்டை சுற்றி பார்த்தேன்....சின்ன இடமாக இருந்தாலும் அவ்வளவு அழகாக மரங்கள் வளர்த்து இருந்தது....கணேஷ் கிட்ட யாரு இதெல்லாம் செய்ததுனு கேட்கவும் சரோஜா தான் இதெல்லாம் பார்ப்பா....அவளுக்கு தான் தோட்டம் செய்யுறது ரொம்ப பிடிக்கும்னு சொன்னான்.....ஷோ கல்யாணத்துக்கு அப்புறம் உனக்கு வித்தியாசமாக ஒரு கிஃப்ட் பண்ணணும்னு நினைச்சு கிடைக்குற நேரம் எல்லாம் என் தம்பிங்களை சொல்லி இதை பண்ணுணேன்.....உனக்கே உனக்காக....என் ரோஜாவுக்காக இந்த சின்ன ரோஜா தோட்டம்....எப்படி???" என அஜய் கூறவும்
எம்பி அவன் கன்னத்தில் சட்டென்று இதழ் பதித்தவள்
"உங்க கிஃப்ட்டும் உங்களை மாதிரி வித்தியாசமாக தான் இருக்கு..." என்று கூறி சிரிக்க அஜய் சரோஜாவை தன் தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
"இன்னைக்கு நைட் நம்ம இங்க தான் இருக்கப் போறோம்.....நைட் பூராவும்...." என அஜய் கண்ணடித்து சிரித்துக் கொண்டே கூற
அவன் கைகளை தட்டி விட்ட சரோஜா
"போங்க அஜய்...." என வெட்கப்பட்டு கொண்டே படியிறங்கி சென்று விட அஜய் உல்லாசமாக விசிலடித்துக் கொண்டே சரோஜாவைப் பின் தொடர்ந்து சென்றான்.
மாலை நேரம் ரிசப்சனுக்காக சரோஜா தயாராகி கொண்டிருந்த வேளை அவளது போன் அடித்தது.
"இந்த நேரத்தில் யார் போன் பண்ணுறா???" என்று யோசனையோடு போனை எடுத்து பார்த்தவள் அன்னவுன் என்று திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்து அதிர்ந்து போனாள்.
அன்னவுன் என்ற பெயரை பார்த்தாலே சரோஜாவிற்கு அன்றைய கனவு கண்ட தருணமே நினைவு வரும்.
பலமுறை இவ்வாறு அழைப்புகள் வந்த வண்ணம் இருக்க சரோஜாவின் பயம் மட்டும் இன்னும் மாறவில்லை.
கைகள் நடுங்க சரோஜா போனை அட்டன்ட் செய்து காதில் வைக்க மறுபுறம் போன் கட் செய்யப்பட்டது.
"யார் இது??? அடிக்கடி போன் பண்ணுறாங்க...ஆனா பேசாமல் வைச்சிடுறாங்க....என்ன நடக்கிறது??" என சரோஜா போனை பார்த்து கொண்டு யோசித்து கொண்டிருக்க
"இன்னும் ரெடி ஆகாமல் போனை பார்த்துட்டு என்ன பண்ணுற சரோஜா???" என்றவாறே வித்யா வரவும்
சட்டென்று போனை கீழே வைத்தவள்
"அம்மா கிட்ட இதை சொன்னா அப்புறம் கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சுடுவாங்க.....ஷோ வேண்டாம்...." என்று நினைத்துக் கொண்டு
"இதோ பத்து நிமிஷத்தில் வரேன் மா...." எனக் கூறி விட்டு தயாராக தொடங்கினாள்.