கண்கள் நிலை குத்தி நிற்க ,கடைவாயில் ரத்தம் ஒழுகி கிட க்க ,உள்ளங்கை மணிக்கட்டில் கயிறு ஒன்று பலமாய் கட்டப்பட்டு இருக்க , பாயலின் தலை துவண்டு இருந்தது .கண் முன்னே காண்பது என்ன என்று சச்தீப் மூளை சில பல வினாடிகள் உணர முடியாமல் ஸ்தம்பித்து போனது .
“ஓஹ் நோ ....பாயல் ...பாயல் ...கெட் அப் ....பாயல் ..."என்று அவள் கன்னத்தை தட்டி ,தண்ணீர் தெளித்தும் அவளிடம் அசைவூ இல்லை என்றதும் ,அடுத்த நொடி கதவை ஓடி போய் திறந்தவன் ,"சாஸ்ஜீ ...சோராஜீ ...மாதாஜி "என்று அந்த பங்களா அதிரும் விதமாய் அலறினான்.
டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு இரவு பன்னிரெண்டு மணிக்கே உயிர் பிரிந்து இருக்கிறது என்று அணுகுண்டை வெடிக்க வைத்து விட்டு சென்றார் .அதாவது சச்தீப் அந்த அறைக்குள் வருவதற்கு முன்பே பாயல் உயிர் பிரிந்து இருக்கிறது . அடுத்த சில வினாடிகளில் முன் தின கோலாகலம் மறைந்து,துக்கத்தை அணிந்து கொண்டது அந்த வீடு.
உறவு ,நட்பு,சுற்றம் ,அக்கம் ,பக்கம் என்று அந்த வீட்டினை சுற்றி கூடியது மக்கள் கூட்டம் .விஷயம் மீடியாவிற்கு எப்படியோ லீக் ஆகி விடிந்தும் விடியாத அந்த காலை பொழுதில் அந்த வீட்டினை முற்றுகை இட்டனர் . முன் தினத்தில் மணப்பெண்ணாய் இருந்தவள் ,ஒரே இரவில் மரணித்த விஷயம் என்றால் சும்மாவா TRP ரேட்டிங்காக பல கதைகள் திரித்து கூறப்பட்டன .
பிளாஷ் நியூஸ் ஓட ஆரம்பித்தது . காதல் தோல்வி ,காதலன் டார்ச்சர் ,முன்னால் கணவன் ,பாய் பிரெண்ட்ஸ்,வரதட்சணை கொடுமை, கர்ப்பம் ,கௌரவ கொலை என்று ஒவ்வொரு மீடியாவும் சிறந்த கதாசிரியர் ஆகி,"புக்கர் விருது "கொடுக்கும் அளவிற்கு பாயல்-சச்தீப் குடும்பத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்தனர் .ஒரு பெண்ணின் மரணம் என்பது இந்த முகநூல் ,ட்விட்டர் காலத்தில் உலகத்தின் வாய்க்கே அவலாகும் ஒன்று.
ஒரு புறம் பெண்ணின் மரணம் ,இன்னொரு புறம் ஆறுதல் சொல்கிறேன் என்று பெயர் செய்து கொண்டு என்ன நியூஸ் கிடைக்கும் என்று சுற்றி வரும் உறவுகள் ,இன்னொரு புறம் மீடியா என்று நிலைகுலைந்து போனது பாயல் குடும்பம் .
அந்த பகுதி இன்ஸ்பெக்டர் சரண்பால் ரப்தார் பாட்டியாவிற்கு தகவல் சொல்லப்பட்டது. பதறி அடித்து ஓடி வந்தான் சரண்பால் -அர்ஜுன் அண்ணா . பாயல் தந்தை பிஷன்பால்(bishonpal) , அர்ஜுன் பெரியப்பாவிற்கு ஆத்ம நண்பர்.
கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்து ,மீடியாவை அந்த குடும்பத்தின் பிரைவசி காக்க வேண்டுதல் விடுத்து ,முதற் கட்ட விசாரணை வீட்டினரிடம் முடிப்பதற்குள் சரண்பால் போலீஸ் துறையை தான் எதற்கு தேர்ந்து எடுத்தோம் என்று ஆயிரம் முறை தன்னை தானே கேட்டு கொள்ளும் அளவிற்கு நொந்து விட்டான் .தெரிந்த குடும்பம் ,சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள்,பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்ப மறுப்பது என்பது வேறு அதிக அழுத்தம் கொடுத்தது என்றால் மிகையல்ல.
முதற்கட்ட விசாரணை முடித்த சரண்பால், தன் தாயா/ பெரிய தந்தைக்கு அழைத்து விஷயத்தை கூற அடுத்த அரை மணி நேரத்தில் வந்து நின்றது அந்த போலீஸ் svu.அதில் இருந்து இறங்கினார் சீனியர் சுப்பரின்டென்டென்ட் ஆப் போலீஸ் (SSP-senior superintendent of police )வீரேந்தர் ரப்தார் bhatiya. அர்ஜுன் அர்ஜுன் பெரியப்பா/தாயா ,பதிண்டா நகர SSP.
ஓடி வந்த சரண்பால் அவருக்கு சலூட் வைத்து நிற்க ,"என்ன ஆச்சு சரண்? நம்ம பாயல்லுக்கா இந்த நிலைமை ? "என்றார் கலங்கிய கண்களை யாருக்கும் தெரியாமல் துடைத்தபடி.
"கடந்த மூன்று மாதத்தில் இது பன்னிரெண்டாவது O.D (ஒவர் டோஸ் ) டெத் சார் .வீட்டில் யாருக்கும் எந்த விவரமும் தெரியலை .ஷாக்ல இருக்காங்க சார் ..எல்லா விசாரணையும் முடிச்சுட்டேன் .போஸ்ட்மார்ட்டம் பாடி எடுத்து போக விட மாட்டேங்கறாங்க .நீங்க கொஞ்சம் ..."என்று இழுத்து நிறுத்தினான் சரண்பால் .
அவர் வீட்டினுள் நுழைய ,"வீர்ஜி /அண்ணா !"என்று கதறிய படி ஓடி வந்து அவரை அணைத்து கொண்டார் பாயல் அன்னை டீனா .
"பாருங்க வீர்ஜி! நீங்க தூக்கி வளர்த்த “தீ /மகள்” எப்படி இருக்கா பாருங்க .இதுக்கா பொத்தி பொத்தி வளர்த்தேன் .ஐயோ ...."என்று கதறிய teena மயங்கி சரிந்தார் .
“ஓஹ் நோ ....பாயல் ...பாயல் ...கெட் அப் ....பாயல் ..."என்று அவள் கன்னத்தை தட்டி ,தண்ணீர் தெளித்தும் அவளிடம் அசைவூ இல்லை என்றதும் ,அடுத்த நொடி கதவை ஓடி போய் திறந்தவன் ,"சாஸ்ஜீ ...சோராஜீ ...மாதாஜி "என்று அந்த பங்களா அதிரும் விதமாய் அலறினான்.
டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு இரவு பன்னிரெண்டு மணிக்கே உயிர் பிரிந்து இருக்கிறது என்று அணுகுண்டை வெடிக்க வைத்து விட்டு சென்றார் .அதாவது சச்தீப் அந்த அறைக்குள் வருவதற்கு முன்பே பாயல் உயிர் பிரிந்து இருக்கிறது . அடுத்த சில வினாடிகளில் முன் தின கோலாகலம் மறைந்து,துக்கத்தை அணிந்து கொண்டது அந்த வீடு.
உறவு ,நட்பு,சுற்றம் ,அக்கம் ,பக்கம் என்று அந்த வீட்டினை சுற்றி கூடியது மக்கள் கூட்டம் .விஷயம் மீடியாவிற்கு எப்படியோ லீக் ஆகி விடிந்தும் விடியாத அந்த காலை பொழுதில் அந்த வீட்டினை முற்றுகை இட்டனர் . முன் தினத்தில் மணப்பெண்ணாய் இருந்தவள் ,ஒரே இரவில் மரணித்த விஷயம் என்றால் சும்மாவா TRP ரேட்டிங்காக பல கதைகள் திரித்து கூறப்பட்டன .
பிளாஷ் நியூஸ் ஓட ஆரம்பித்தது . காதல் தோல்வி ,காதலன் டார்ச்சர் ,முன்னால் கணவன் ,பாய் பிரெண்ட்ஸ்,வரதட்சணை கொடுமை, கர்ப்பம் ,கௌரவ கொலை என்று ஒவ்வொரு மீடியாவும் சிறந்த கதாசிரியர் ஆகி,"புக்கர் விருது "கொடுக்கும் அளவிற்கு பாயல்-சச்தீப் குடும்பத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்தனர் .ஒரு பெண்ணின் மரணம் என்பது இந்த முகநூல் ,ட்விட்டர் காலத்தில் உலகத்தின் வாய்க்கே அவலாகும் ஒன்று.
ஒரு புறம் பெண்ணின் மரணம் ,இன்னொரு புறம் ஆறுதல் சொல்கிறேன் என்று பெயர் செய்து கொண்டு என்ன நியூஸ் கிடைக்கும் என்று சுற்றி வரும் உறவுகள் ,இன்னொரு புறம் மீடியா என்று நிலைகுலைந்து போனது பாயல் குடும்பம் .
அந்த பகுதி இன்ஸ்பெக்டர் சரண்பால் ரப்தார் பாட்டியாவிற்கு தகவல் சொல்லப்பட்டது. பதறி அடித்து ஓடி வந்தான் சரண்பால் -அர்ஜுன் அண்ணா . பாயல் தந்தை பிஷன்பால்(bishonpal) , அர்ஜுன் பெரியப்பாவிற்கு ஆத்ம நண்பர்.
கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்து ,மீடியாவை அந்த குடும்பத்தின் பிரைவசி காக்க வேண்டுதல் விடுத்து ,முதற் கட்ட விசாரணை வீட்டினரிடம் முடிப்பதற்குள் சரண்பால் போலீஸ் துறையை தான் எதற்கு தேர்ந்து எடுத்தோம் என்று ஆயிரம் முறை தன்னை தானே கேட்டு கொள்ளும் அளவிற்கு நொந்து விட்டான் .தெரிந்த குடும்பம் ,சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள்,பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்ப மறுப்பது என்பது வேறு அதிக அழுத்தம் கொடுத்தது என்றால் மிகையல்ல.
முதற்கட்ட விசாரணை முடித்த சரண்பால், தன் தாயா/ பெரிய தந்தைக்கு அழைத்து விஷயத்தை கூற அடுத்த அரை மணி நேரத்தில் வந்து நின்றது அந்த போலீஸ் svu.அதில் இருந்து இறங்கினார் சீனியர் சுப்பரின்டென்டென்ட் ஆப் போலீஸ் (SSP-senior superintendent of police )வீரேந்தர் ரப்தார் bhatiya. அர்ஜுன் அர்ஜுன் பெரியப்பா/தாயா ,பதிண்டா நகர SSP.
ஓடி வந்த சரண்பால் அவருக்கு சலூட் வைத்து நிற்க ,"என்ன ஆச்சு சரண்? நம்ம பாயல்லுக்கா இந்த நிலைமை ? "என்றார் கலங்கிய கண்களை யாருக்கும் தெரியாமல் துடைத்தபடி.
"கடந்த மூன்று மாதத்தில் இது பன்னிரெண்டாவது O.D (ஒவர் டோஸ் ) டெத் சார் .வீட்டில் யாருக்கும் எந்த விவரமும் தெரியலை .ஷாக்ல இருக்காங்க சார் ..எல்லா விசாரணையும் முடிச்சுட்டேன் .போஸ்ட்மார்ட்டம் பாடி எடுத்து போக விட மாட்டேங்கறாங்க .நீங்க கொஞ்சம் ..."என்று இழுத்து நிறுத்தினான் சரண்பால் .
அவர் வீட்டினுள் நுழைய ,"வீர்ஜி /அண்ணா !"என்று கதறிய படி ஓடி வந்து அவரை அணைத்து கொண்டார் பாயல் அன்னை டீனா .
"பாருங்க வீர்ஜி! நீங்க தூக்கி வளர்த்த “தீ /மகள்” எப்படி இருக்கா பாருங்க .இதுக்கா பொத்தி பொத்தி வளர்த்தேன் .ஐயோ ...."என்று கதறிய teena மயங்கி சரிந்தார் .
Last edited: