• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,838
Location
chennai
கண்கள் நிலை குத்தி நிற்க ,கடைவாயில் ரத்தம் ஒழுகி கிட க்க ,உள்ளங்கை மணிக்கட்டில் கயிறு ஒன்று பலமாய் கட்டப்பட்டு இருக்க , பாயலின் தலை துவண்டு இருந்தது .கண் முன்னே காண்பது என்ன என்று சச்தீப் மூளை சில பல வினாடிகள் உணர முடியாமல் ஸ்தம்பித்து போனது .

“ஓஹ் நோ ....பாயல் ...பாயல் ...கெட் அப் ....பாயல் ..."என்று அவள் கன்னத்தை தட்டி ,தண்ணீர் தெளித்தும் அவளிடம் அசைவூ இல்லை என்றதும் ,அடுத்த நொடி கதவை ஓடி போய் திறந்தவன் ,"சாஸ்ஜீ ...சோராஜீ ...மாதாஜி "என்று அந்த பங்களா அதிரும் விதமாய் அலறினான்.

டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு இரவு பன்னிரெண்டு மணிக்கே உயிர் பிரிந்து இருக்கிறது என்று அணுகுண்டை வெடிக்க வைத்து விட்டு சென்றார் .அதாவது சச்தீப் அந்த அறைக்குள் வருவதற்கு முன்பே பாயல் உயிர் பிரிந்து இருக்கிறது . அடுத்த சில வினாடிகளில் முன் தின கோலாகலம் மறைந்து,துக்கத்தை அணிந்து கொண்டது அந்த வீடு.

உறவு ,நட்பு,சுற்றம் ,அக்கம் ,பக்கம் என்று அந்த வீட்டினை சுற்றி கூடியது மக்கள் கூட்டம் .விஷயம் மீடியாவிற்கு எப்படியோ லீக் ஆகி விடிந்தும் விடியாத அந்த காலை பொழுதில் அந்த வீட்டினை முற்றுகை இட்டனர் . முன் தினத்தில் மணப்பெண்ணாய் இருந்தவள் ,ஒரே இரவில் மரணித்த விஷயம் என்றால் சும்மாவா TRP ரேட்டிங்காக பல கதைகள் திரித்து கூறப்பட்டன .

பிளாஷ் நியூஸ் ஓட ஆரம்பித்தது . காதல் தோல்வி ,காதலன் டார்ச்சர் ,முன்னால் கணவன் ,பாய் பிரெண்ட்ஸ்,வரதட்சணை கொடுமை, கர்ப்பம் ,கௌரவ கொலை என்று ஒவ்வொரு மீடியாவும் சிறந்த கதாசிரியர் ஆகி,"புக்கர் விருது "கொடுக்கும் அளவிற்கு பாயல்-சச்தீப் குடும்பத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்தனர் .ஒரு பெண்ணின் மரணம் என்பது இந்த முகநூல் ,ட்விட்டர் காலத்தில் உலகத்தின் வாய்க்கே அவலாகும் ஒன்று.

ஒரு புறம் பெண்ணின் மரணம் ,இன்னொரு புறம் ஆறுதல் சொல்கிறேன் என்று பெயர் செய்து கொண்டு என்ன நியூஸ் கிடைக்கும் என்று சுற்றி வரும் உறவுகள் ,இன்னொரு புறம் மீடியா என்று நிலைகுலைந்து போனது பாயல் குடும்பம் .

7bm_Film-Review+07_BM_Traffic.jpeg. (1).jpg

அந்த பகுதி இன்ஸ்பெக்டர் சரண்பால் ரப்தார் பாட்டியாவிற்கு தகவல் சொல்லப்பட்டது. பதறி அடித்து ஓடி வந்தான் சரண்பால் -அர்ஜுன் அண்ணா . பாயல் தந்தை பிஷன்பால்(bishonpal) , அர்ஜுன் பெரியப்பாவிற்கு ஆத்ம நண்பர்.

கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்து ,மீடியாவை அந்த குடும்பத்தின் பிரைவசி காக்க வேண்டுதல் விடுத்து ,முதற் கட்ட விசாரணை வீட்டினரிடம் முடிப்பதற்குள் சரண்பால் போலீஸ் துறையை தான் எதற்கு தேர்ந்து எடுத்தோம் என்று ஆயிரம் முறை தன்னை தானே கேட்டு கொள்ளும் அளவிற்கு நொந்து விட்டான் .தெரிந்த குடும்பம் ,சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள்,பிரேத பரிசோதனைக்கு உடலை அனுப்ப மறுப்பது என்பது வேறு அதிக அழுத்தம் கொடுத்தது என்றால் மிகையல்ல.

முதற்கட்ட விசாரணை முடித்த சரண்பால், தன் தாயா/ பெரிய தந்தைக்கு அழைத்து விஷயத்தை கூற அடுத்த அரை மணி நேரத்தில் வந்து நின்றது அந்த போலீஸ் svu.அதில் இருந்து இறங்கினார் சீனியர் சுப்பரின்டென்டென்ட் ஆப் போலீஸ் (SSP-senior superintendent of police )வீரேந்தர் ரப்தார் bhatiya. அர்ஜுன் அர்ஜுன் பெரியப்பா/தாயா ,பதிண்டா நகர SSP.

jdwmFCahcggsi.jpg

ஓடி வந்த சரண்பால் அவருக்கு சலூட் வைத்து நிற்க ,"என்ன ஆச்சு சரண்? நம்ம பாயல்லுக்கா இந்த நிலைமை ? "என்றார் கலங்கிய கண்களை யாருக்கும் தெரியாமல் துடைத்தபடி.

"கடந்த மூன்று மாதத்தில் இது பன்னிரெண்டாவது O.D (ஒவர் டோஸ் ) டெத் சார் .வீட்டில் யாருக்கும் எந்த விவரமும் தெரியலை .ஷாக்ல இருக்காங்க சார் ..எல்லா விசாரணையும் முடிச்சுட்டேன் .போஸ்ட்மார்ட்டம் பாடி எடுத்து போக விட மாட்டேங்கறாங்க .நீங்க கொஞ்சம் ..."என்று இழுத்து நிறுத்தினான் சரண்பால் .

அவர் வீட்டினுள் நுழைய ,"வீர்ஜி /அண்ணா !"என்று கதறிய படி ஓடி வந்து அவரை அணைத்து கொண்டார் பாயல் அன்னை டீனா .

"பாருங்க வீர்ஜி! நீங்க தூக்கி வளர்த்த “தீ /மகள்” எப்படி இருக்கா பாருங்க .இதுக்கா பொத்தி பொத்தி வளர்த்தேன் .ஐயோ ...."என்று கதறிய teena மயங்கி சரிந்தார் .
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,838
Location
chennai
கண்கள் கலங்க நின்றார் வீரேந்தர்.அவர் வீட்டில் வளர்ந்த பெண் .நேற்று காலை ,மாலை அவர் ஆசீர்வதித்த பெண் .இன்று உயிர் அற்ற உடலாய் ,சவமாய்.எந்த இடத்தில் அவளுக்கு திருமண வளையல் அவர் அணிவித்தாரோ அதே இடத்தில் வெள்ளை துணி சுற்றப்பட்டு கிடத்தப்பட்டு இருக்கிறாள் .

East-Indian-Wedding-Photography-Calgary-Sikh-Marriage-Rituals-Canada-Punjabi-Wedding-Pictures-...jpg

அவரை கை தாங்கலாய் உள்ளே அழைத்து சென்று படுக்க வைத்து விட்டு திரும்பினார் பிஷன்பால். வெளியே வந்தவரை அணைத்து கொண்டார் வீரேந்தர்.அது வரை உறைந்து போய் இருந்த அந்த தந்தை ,நண்பனின் அணைப்பில் உடைந்து கதறி அழுதார் .அவரை அழ விட்டு,தானும் கலங்கி நின்றார் வீரேந்தர் .

சிறிது நேரத்தில் தன்னை சமாளித்து கொண்ட பிஷன்பால்,"பார்த்தியாடா நீ தூக்கி வளர்த்த பெண்ணின் நிலையை ?வீடு வீடாய் சென்று சிகரெட் ,குடி ,போதை ,ஓவர் ஸ்பீட் வேண்டாம்,சின்ன பிள்ளைகளின் கையில் வண்டி கொடுக்காதீங்க,ஹெல்மெட் ,சீட் பெல்ட் கட்டாயமாய் அணியுங்கள் என்று காலில் விழாத குறையாய் விழிப்புணர்வூ கிளாஸ் எடுத்தவண்டா நான் .ஆனால் இன்று என் மகள் இருக்கும் கோலம் பார்த்தாயா ?எங்குடா நான் தந்தையாய் தோற்றேன் ?"என்ற பிஷன்பால் கேள்விக்கு வீரேந்தரால் என்ன பதில் சொல்ல முடியும் ?

பெற்றோர்கள் தோற்பதில்லை.தோற்கடிக்க படுகிறார்கள். இது போல் விதவிதமான மரணங்கள் -குடி ,போதை ,rash டிரைவ்விங் ,ஹெல்மெட்/சீட்பெல்ட் அணியாத மெத்தனம் ,கொலை ,கொள்ளை ,பெண் வதை ஏற்படுவதை தினமும் பார்த்து கொண்டு இருக்கும் போலீஸ் உயர் அதிகாரி தான் என்றாலும் ,ஒரு தந்தையாய் நிலைகுலைந்து நின்றார் வீரேந்தர் .

"பிஷன் !ப்ளீஸ் டா கண்ட்ரோல் யுவர் ஸெல்ப் ."என்றார் வீரேந்தர் பிஷன்பாலை அணைத்து கொண்டு .

"உனக்கு ஒண்ணு தெரியுமா வீரேந்தர் ?பசங்க தாண்டா பெத்தவங்களுக்கு கொள்ளி வைத்து, ஈமச்சடங்கு செய்யணும் .ஆனா இப்போ ட்ரெண்ட் என்ன தெரியுமா பிள்ளைங்களுக்கு பெத்தவங்க ஈமச்சடங்கு செய்யறது .அதை விட வேறு நரகம் பெத்தவங்களுக்கு இருக்க முடியுமா என்ன ?இதுக்காடா அத்தனை கோயில் ,குளம் ,டாக்டர் ,ஹாஸ்பிடல் என்று ஏறி இறங்கினோம் ?இவளை போல் நாட்டில் இன்னும் எத்தனை கோடி உயிர் போன பிறகு,என் குடும்பம் போல் எத்தனை சிதைந்த பிறகு தாண்டா இந்த கன்றாவி எல்லாம் உற்பத்தி ஆகாமல் நிறுத்துவீங்க ?பணம் சம்பாதிக்க ஆயிரம் நேர்மையான வழி இருக்கும் போது ஒவ்வொரு குடும்பத்தில் ஏற்படும் மரணத்தை ,பிணத்தை வைத்து ஏண்டா பிழைக்கிறாங்க ?"என்று கதறிய அந்த தந்தையின் மனகுமுறலுக்கு வீரேந்தரிடம் பதில் இல்லை என்பது தான் உண்மை .

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்

சாராய கங்கை காயாதடா

ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்

காசுள்ள பக்கம் பாயாதடா

குடிச்சவன் போதையில் நிப்பான்

குடும்பத்தை வீதியில் வைப்பான்

தடுப்பது யார் என்று கொஞ்சம் நீ கேளாடா

கள்ளு கடை காசிலே தான்டா கட்சி கோடி ஏறுது போடா

கள்ளு கடை காசிலே தான்டா கட்சி கோடி ஏறுது போடா

மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்த செய்யணும்



தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு பல தீர்த்தக்கடையால் மது ஆறாய் ஓடுகிறது என்றால் பஞ்சாபில் அடிப்பது மாபெரும் சுனாமி -போதை என்ற ஆழிப்பேரலை . இந்த போதை வஸ்து சில மில்லிகிராம் அதிகமாகினாலே இன்ஸ்டன்ட் மரணம் தான் ,கள்ளச்சாராயம் போல் .தெரியாமல் இந்த பேரலையில் போகும் உயிர்கள் சில என்றால் ,தெரிந்தே போய் சிக்கி போகும் உயிர்கள் தான் இங்கே மிக அதிகம் .

தமிழ்நாட்டில் மது,கள்ள சாராயம் பிரச்சனை என்றால் சர்வதேச எல்லை கோட்டுக்கு ,பாகிஸ்தான் எல்லைக்கு அருகே இருக்கும் பஞ்சாபில் -கஞ்சா ,cocaine ,ஹெரோயின் என்று 237 முகம் கொண்ட போதை என்னும் அரக்கன் பிடியில் சிக்கி இருக்கும் நூதன நிலை . எங்கோ பஞ்சாபில் நடக்கிறது என்று இருந்து விட முடியாத படி கடை கோடியில் இருக்கும் தமிழ்நாட்டில் பல்வேறு நகரங்களுக்கும் ,இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் இங்கு இருந்து தான் போதை மருந்துகள் அனுப்பபடுகிறது.
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,838
Location
chennai
இந்த அரக்கனின் முக்கிய பலி ஆண்கள் மட்டும் இல்லை ,பாயல் போன்ற இல்லதரசிகள் ,கல்லூரி,வேலைக்கு செல்லும் பெண்கள் ,பள்ளி செல்லும் சிறார்கள் .இவர்களை புதை குழியில் விழ வைப்பது மட்டும் இல்லாமல் இவர்களை “மரணத்தின் தேவதைகளாய்” மாற்றுவதும் உண்டு .

p04rkrxp.jpg

2015 AIIMS டெல்லி ஆய்வூ அறிக்கையின் படி வருடத்திற்கு 200,000 மக்கள் ஏதாவது ஒருவித போதைக்கு அடிமையாகும் நிலை உயர்ந்து வருவதாக சொல்கிறது .மருந்துகள் மற்றும் குற்றங்களின் ஐக்கிய நாடுகள் அலுவலகம் (UNODC-United Nations Office on Drugs and Crime ) மற்றும் சமூக நீதி அமைச்சகம் 732 லட்சம் இந்தியாவில் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் அளிக்கிறது.

_104364381_gettyimages-492567510.jpg

(உண்மையான எண்ணிக்கை கோடிகளை தாண்டுவதாகவும் ,பல மரணங்கள் வெளியே தெரியாமல் மறைக்கப்படுவதாகவும் ஒரு உயர் அதிகாரியின் வாக்குமூலம் சொல்கிறது)

48c59487-71a8-4466-bd30-703c40e3f306.jpg

டெல்லியில் மட்டும் 70,000 குழந்தைகள் ஏதாவது ஒருவகையான போதைக்கு அடிமையாகி இருப்பதாய் அறிக்கை சொல்கிறது . 9-10 வயது குழந்தைகள் புகையிலை ,மதுவிற்கு அடிமையாகி இருக்க,12-13வயது பிள்ளைகள் ஹெரோயின் ,ஓபியம் பயன்படுத்துகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவின் நிலை ?

main-qimg-cb5f8a663796a7b76ef42428c6054866.jpg


இந்த கொடிய அரக்கனின் அடுத்த பலி பாயல் . காதல் கணவனுடன் இதய ராணியாய் வாழ்ந்து இருக்க வேண்டி payal, பிரேத பரிசோதனை செய்யபட்டு,அன்று மாலை வைக்க பட்ட சிதையில் பிடி சாம்பலாய் ஆகி , FIRரில் ஒரு எண்ணாக மாறி போனாள்


நாள் -ஏப்ரல் 12

நேரம் -நள்ளிரவூ 1.30PM

web-haunted-night.jpg

பதிண்டா நகர தெருக்கள் அந்த நள்ளிரவூ பொழுதில், ஆள் நடமாட்டமே இல்லாத ஏதோ ஒரு பேய் பட செட் போல்,அமானுஷயம் நிறைந்ததாய் இருந்தது.அழுது வடியும் தெரு விளக்குகள்.காற்றில் யாரும் இல்லா இடத்தில் நர்த்தனம் ஆடி கொண்டு இருக்கும் வயல் வெளிகள்.
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,029
Reaction score
49,882
Location
madurai
இன்னைக்கு எபி படிக்க ரொம்ப கஸ்ட்டம் தான்??... பாயலோட முடிவுக்கு எல்லோரும் ஃபீல் பண்றது??.... இந்த மீடியா எப்போ தான் திருந்துவாங்க??... பெற்றோர்கள் தோற்பதில்லை... தோற்கடிக்க படுகிறார்கள்.... ??உண்மை தான்....??????
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,838
Location
chennai
empty-paths-3-56ac77f5c2fe9_hires.jpg

எப்படி குழந்தைகள் முகத்தை மூடி கொண்டு திகில் படத்தை பார்க்குமோ அதே போல் மேகம் என்னும் போர்வை கொண்டு நிலா மகள் நடப்பதை பார்க்க விரும்பாமல் முகத்தை மூடி ஆடும் கண்ணாமூச்சி.காற்றில் ஆடி கொண்டு இருக்கும் மரங்களின் நிழல்கள் “ராட்சசன்” நின்று தலையை ஆட்டி “வா அருகில் வா வாவென்று” நம்மை உயிரோடு விழுங்க கூப்பிடுவது போன்ற பிரமை.

தினமும் தான் உறங்குகின்றோம்,என்றாவது முழு இரவூ தனிமையில் மொட்டை மாடியில்,ஆள் நடமாட்டமே இல்லாத தெருவில்,ஏரிக்கரை ஓரம் அமர்ந்து இயற்கை அன்னை ஏதோ தேர்ந்த மந்திரவாதியின் திறமையோடு நம்மை மிரட்டும் அழகை ரசித்து இருக்கீறீர்களா?

அப்படி ஒரு இரவில்,பதிந்தாவின்/bathinda அருகே இருந்த அந்த சின்ன கிராமத்தை தாண்டி வந்து வந்து நின்றது அந்த லாரி.அதில் இருந்து இறங்கிய இருவர்,இயற்கை அன்னையின் இந்த உயிரோட்டமான திகில் படத்தை நின்று ரசிக்கும் மனநிலையில் இல்லை.இருவரும் முகத்தை துணியால் மூடி இருந்தனர்.

(ஆள் நடமாட்டம் இல்லாத நட்ட நடு இரவில்,எவன் இருக்கான் இவங்க முகத்தை பார்க்க என்று இந்த அளவூ built அப்பு ?)

10.jpg

முதல் இறங்கியவன் நல்ல உயரம்,ஆகுருதி.நின்ற தோரணையே அவன் எதற்கும் அஞ்சாத மனிதன் என்பதை பிரகடனம் செய்து கொண்டு இருந்தது.அவன் நடை “ராஜநடை” என்று சொல்வார்களே அதற்கு ஈடாக இருந்தது.அவன் அணிந்து இருந்த குர்தாவை மீறி வெளியே தெரிந்த புஜங்கள் அவன் கடின உழைப்பாளி என்று பறை அறிவித்து கொண்டு இருந்தது.உழைப்பே அவனுக்கு செதுக்கி வைத்த கிரேக்க போர் வீரன் போன்ற உடல் அமைப்பை கொடுத்து இருந்தது. நிச்சயம் சிக்ஸ் பேக்.

எந்த வித பதட்டமும் இல்லாமல் ,உலகத்திற்கே தான் ஒரு சக்கரவர்த்தி என்ற தோரணையுடன் அவன் நடந்த விதம் நெஞ்சை அள்ளி கொண்டு தான் போனது .முகத்தை காட்டாமலே உடல் அசைவால் ,தோரணையால் ஒருவரை கவர முடியுமா ?முடியும் என்று சொல்லாமல் சொல்லி கொண்டு இருந்தான் முதலாமவன் .

பின்னால் வந்தவனுக்கு உயரம்,உடல் அமைப்பு அந்த அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . திரும்பி திரும்பி யாராவது பார்க்கிறார்களா என்று நொடிக்கு ஒரு முறை பின்னால் பார்த்து கொண்டு இருந்தான்.முதலாமவனுக்கு அது மாதிரி எந்த பயம்,தயக்கம் இல்லை.

vn-medium-night-sky-safari-sml.jpg

அவர்கள் கண் முன்னே சட்டென்று தெரிந்தது ஒரு கோடௌன் பின்புறம்.சுற்றிலும் வேலி போட பட்டு இருந்தது.

பயணம் தொடரும் ...

(மேலே குறிப்பிட பட்டு இருக்கும் மரணம் உண்மையில் இந்தியாவில் நடந்த ஒன்று .அந்த அந்த பெண்ணிற்கு அன்று காலை தான் திருமணம் நடந்து இருந்தது )
 




Last edited:

Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,074
Location
Trichy
ஹீரோ அறிமுகமா !!அடுத்த ud க்காக காத்திருக்கேன்.:eek::eek:.
9வயசு பிள்ளைகளுக்கு எப்படி குடுக்க மனசு வருது... :cry::cry:
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,838
Location
chennai
Super ani. Natila natakaratha alaga soleerikinga. Evalo vilipunaru mugam nadanthalum namma makkal thiruntha mattangal. Last vara rendu perukum build up partha heroo intro mathiri irruku
போன தடவை "என்ன தவம் செய்தேன்" னில் ஹியூமன் ட்ராபிக்கிங் ,இந்த தடவை போதை மருந்து கடத்தல்;);) .சும்மா இருக்க முடியாம ஒவ்வொரு ஸ்டோரிக்கும் ஒவ்வொரு கான்செப்ட்ன்னு கையை வைக்கிறேன் .ஆப்கான்ல இருந்து யாரு வர போறாங்களோ :unsure::unsure::unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top