View attachment 12832
எப்படி குழந்தைகள் முகத்தை மூடி கொண்டு திகில் படத்தை பார்க்குமோ அதே போல் மேகம் என்னும் போர்வை கொண்டு நிலா மகள் நடப்பதை பார்க்க விரும்பாமல் முகத்தை மூடி ஆடும் கண்ணாமூச்சி.காற்றில் ஆடி கொண்டு இருக்கும் மரங்களின் நிழல்கள் “ராட்சசன்” நின்று தலையை ஆட்டி “வா அருகில் வா வாவென்று” நம்மை உயிரோடு விழுங்க கூப்பிடுவது போன்ற பிரமை.
தினமும் தான் உறங்குகின்றோம்,என்றாவது முழு இரவூ தனிமையில் மொட்டை மாடியில்,ஆள் நடமாட்டமே இல்லாத தெருவில்,ஏரிக்கரை ஓரம் அமர்ந்து இயற்கை அன்னை ஏதோ தேர்ந்த மந்திரவாதியின் திறமையோடு நம்மை மிரட்டும் அழகை ரசித்து இருக்கீறீர்களா?
அப்படி ஒரு இரவில்,பதிந்தாவின்/bathinda அருகே இருந்த அந்த சின்ன கிராமத்தை தாண்டி வந்து வந்து நின்றது அந்த லாரி.அதில் இருந்து இறங்கிய இருவர்,இயற்கை அன்னையின் இந்த உயிரோட்டமான திகில் படத்தை நின்று ரசிக்கும் மனநிலையில் இல்லை.இருவரும் முகத்தை துணியால் மூடி இருந்தனர்.
(ஆள் நடமாட்டம் இல்லாத நட்ட நடு இரவில்,எவன் இருக்கான் இவங்க முகத்தை பார்க்க என்று இந்த அளவூ built அப்பு ?)
View attachment 12836
முதல் இறங்கியவன் நல்ல உயரம்,ஆகுருதி.நின்ற தோரணையே அவன் எதற்கும் அஞ்சாத மனிதன் என்பதை பிரகடனம் செய்து கொண்டு இருந்தது.அவன் நடை “ராஜநடை” என்று சொல்வார்களே அதற்கு ஈடாக இருந்தது.அவன் அணிந்து இருந்த குர்தாவை மீறி வெளியே தெரிந்த புஜங்கள் அவன் கடின உழைப்பாளி என்று பறை அறிவித்து கொண்டு இருந்தது.உழைப்பே அவனுக்கு செதுக்கி வைத்த கிரேக்க போர் வீரன் போன்ற உடல் அமைப்பை கொடுத்து இருந்தது. நிச்சயம் சிக்ஸ் பேக்.
எந்த வித பதட்டமும் இல்லாமல் ,உலகத்திற்கே தான் ஒரு சக்கரவர்த்தி என்ற தோரணையுடன் அவன் நடந்த விதம் நெஞ்சை அள்ளி கொண்டு தான் போனது .முகத்தை காட்டாமலே உடல் அசைவால் ,தோரணையால் ஒருவரை கவர முடியுமா ?முடியும் என்று சொல்லாமல் சொல்லி கொண்டு இருந்தான் முதலாமவன் .
பின்னால் வந்தவனுக்கு உயரம்,உடல் அமைப்பு அந்த அளவிற்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும் . திரும்பி திரும்பி யாராவது பார்க்கிறார்களா என்று நொடிக்கு ஒரு முறை பின்னால் பார்த்து கொண்டு இருந்தான்.முதலாமவனுக்கு அது மாதிரி எந்த பயம்,தயக்கம் இல்லை.
View attachment 12837
அவர்கள் கண் முன்னே சட்டென்று தெரிந்தது ஒரு கோடௌன் பின்புறம்.சுற்றிலும் வேலி போட பட்டு இருந்தது.
பயணம் தொடரும் ...
(மேலே குறிப்பிட பட்டு இருக்கும் மரணம் உண்மையில் இந்தியாவில் நடந்த ஒன்று .அந்த அந்த பெண்ணிற்கு அன்று காலை தான் திருமணம் நடந்து இருந்தது )