அந்த நள்ளிரவில் அந்த கோடௌன்,அதன் சுற்றுப்புறம்அழுது வடியும் விளக்குகள் ஏதோ "demonte காலனி "பட எபெக்ட் கொடுத்து கொண்டு இருந்தது .சுற்றி இருந்த வயல் வெளிகளில் சுழன்று வரும் காற்று பின்னணி இசை அமைத்து கொண்டு இருந்தது .பின்புறம் மண்டி கிடந்த புதரில் கவிழ்ந்து கிடந்த இருட்டு நிச்சயம் திட மனதையும் அச்சுறுத்தி விடும் .
படிக்கும் நமக்கே அந்த சூழ்நிலை ஒருவித பயத்தை கொடுக்கிறது என்றால் அந்த உயரமானவன் இந்த திகில் பட செட்டை அலட்சியம் செய்தவனாய் ,புதரின் நடுவே நடந்து சென்று அங்கு போட பட்டு இருந்த வேலியினை அசைத்து பார்த்தான் .
குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு அந்த இரும்பு வேலி மிக கனமானதாக இல்லை என்பதை கண்டவன் தன் குர்தாவிற்குள் இருந்து கட்டிங் பிளேயர் எடுத்து அந்த இரும்பு வேலியை வெட்ட ஆரம்பித்தான்.10 -15 நிமிடத்தில் ஒரு லாரி உள்ளே நுழையும் அளவூ,வழி உண்டாக்கியவன் தலை அசைக்க ரெண்டாவது ஆள் மீண்டும் தாங்கள் வந்த லாரி நோக்கி சென்று, அதை உயிர்ப்பித்து,கோடௌன் பின்புற வாயிலை நோக்கி நிறுத்தினான்.இவர்களை தடுக்க இரவூ காவலாளியோ,cctv கேமராவோ அங்கு இல்லாதது அதிசயமே.
(இந்த காலத்துல செக்யூரிட்டி இல்லாத கோடௌன் ?சம்திங் நாட் ரைட் )
லாரி உள்ளே வருவதற்குள் உயரமானவன் உள்ளே நடந்து சென்று பின்புற வாயில் கதவின் பூட்டை உடைத்து கதவை திறந்து இருந்தான்.எதையும் பேசாது, வெறும் தலை அசைப்புடன் உள்ளே நுழைந்த இருவரும்,உள்ளே இருந்த பொருட்களை, கொண்டு வந்த பெட்டிகளில் வைத்து மூடி லாரியில் ஏற்ற ஆரம்பித்தனர்.ஏறக்குறைய அரை மணி நேரத்தில் அந்த கோடௌன் முழுவதும் காலி.
(அடப்பாவிகளா! களவாணி கூட்டமா நீங்க ?)
"ஸ்ஸ்....ஸ்ஸ்ஸ் "என்று சத்தம் எழுப்பினான் ரெண்டாவது ஆள்.
"என்ன.?இங்கே தான் யாருமே இல்லையே?. சொல்லவந்ததை சத்தமாய் சொல்லு."என்றான் உயரமானவன்.
"இல்லை வீர்ஜி (வயதில் மூத்தவர்களை /உடன் பிறந்த பெரியவர்களை இப்படி தான் அழைப்பார்கள் )இங்கே வந்து பாருங்க."என்று ஒரு அறையை அவன் காட்ட உள்ளே பார்த்தவனின் கண்கள்,பார்ப்பதை நம்ப முடியாமல் விரிந்தது.
கண் முன் இருப்பதை மூளையால் சற்று நேரம் கிரகிக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
"அவனை கொல்ல போறேன்.தெரிஞ்சு செய்யறானா.இல்லை லூசு ஆகிட்டானா அவன்?முட்டாள், முட்டாள்."என்று கர்ஜித்தான் மூத்தவன்.
"இப்போ என்ன செய்யறது....."என்றான் இளையவன்
"வண்டியில் ஏற்று.வேறு வழி."என்றான் மூத்தவன்.
(என்னத்தை டா ரெண்டு பேரும் smuggling செய்யறீங்க )
மூன்று பெட்டிகளை மிகுந்த சிரமப்பட்டு தூக்கி லாரி ஏற்றியவர்ககளுக்கு மூச்சு முட்டி போனது என்றால் மிகையல்ல.அந்த அளவுக்கு கணம் அந்த மூன்று பெட்டி மட்டும்.
"எல்லாம் சோதித்து விட்டாய் அல்லவா? எதுவும் விட்டு போகலை தானே...கிளம்பலாமா?"என்றான் முதலாமவன்.
"பார்த்துட்டேன் வீர்ஜி.அடுத்த அறையில் கம்ப்யூட்டர் பெட்டிங்க மட்டும் தான் இருக்கு.அதையும் திறந்து பார்த்துட்டேன். நிறைய கம்ப்யூட்டர் வாங்கி வச்சி இருக்கார் .புது பிசினஸ் போல் இருக்கு .கிளம்பலாம்."என்றான் ரெண்டாவது ஆள்.
கம்ப்யூட்டர் அட்டை பெட்டியை திறந்து பார்த்தவனுக்கோ ,இல்லை அவன் சொன்னதை கேட்டு கிளம்பிய மூத்தவனுக்கோ தெரிய வாய்ப்பு இல்லை ,அந்த அட்டை பெட்டிக்குள் இருந்த கம்ப்யூட்டருக்குள் தான் இவர்கள் தங்கள் லாரியில் ஏற்றிய விவகாரமான வஸ்துக்களை விட மிக ஆபத்தான பொருள் இருப்பது . தெரிந்து இருந்தால் ஒருவேளை பிற்காலத்தில் பலரின் தலைவிதி மாறாமல் இருந்து இருக்குமோ? !"கம்ப்யூட்டருக்குள் ஒரு பூகம்பம்" இருக்கும் என்று இந்த இருவரும் கனவா கண்டு இருக்க போகிறார்கள் ?
படிக்கும் நமக்கே அந்த சூழ்நிலை ஒருவித பயத்தை கொடுக்கிறது என்றால் அந்த உயரமானவன் இந்த திகில் பட செட்டை அலட்சியம் செய்தவனாய் ,புதரின் நடுவே நடந்து சென்று அங்கு போட பட்டு இருந்த வேலியினை அசைத்து பார்த்தான் .
குறிப்பிட்டு சொல்லும் அளவிற்கு அந்த இரும்பு வேலி மிக கனமானதாக இல்லை என்பதை கண்டவன் தன் குர்தாவிற்குள் இருந்து கட்டிங் பிளேயர் எடுத்து அந்த இரும்பு வேலியை வெட்ட ஆரம்பித்தான்.10 -15 நிமிடத்தில் ஒரு லாரி உள்ளே நுழையும் அளவூ,வழி உண்டாக்கியவன் தலை அசைக்க ரெண்டாவது ஆள் மீண்டும் தாங்கள் வந்த லாரி நோக்கி சென்று, அதை உயிர்ப்பித்து,கோடௌன் பின்புற வாயிலை நோக்கி நிறுத்தினான்.இவர்களை தடுக்க இரவூ காவலாளியோ,cctv கேமராவோ அங்கு இல்லாதது அதிசயமே.
(இந்த காலத்துல செக்யூரிட்டி இல்லாத கோடௌன் ?சம்திங் நாட் ரைட் )
லாரி உள்ளே வருவதற்குள் உயரமானவன் உள்ளே நடந்து சென்று பின்புற வாயில் கதவின் பூட்டை உடைத்து கதவை திறந்து இருந்தான்.எதையும் பேசாது, வெறும் தலை அசைப்புடன் உள்ளே நுழைந்த இருவரும்,உள்ளே இருந்த பொருட்களை, கொண்டு வந்த பெட்டிகளில் வைத்து மூடி லாரியில் ஏற்ற ஆரம்பித்தனர்.ஏறக்குறைய அரை மணி நேரத்தில் அந்த கோடௌன் முழுவதும் காலி.
(அடப்பாவிகளா! களவாணி கூட்டமா நீங்க ?)
"ஸ்ஸ்....ஸ்ஸ்ஸ் "என்று சத்தம் எழுப்பினான் ரெண்டாவது ஆள்.
"என்ன.?இங்கே தான் யாருமே இல்லையே?. சொல்லவந்ததை சத்தமாய் சொல்லு."என்றான் உயரமானவன்.
"இல்லை வீர்ஜி (வயதில் மூத்தவர்களை /உடன் பிறந்த பெரியவர்களை இப்படி தான் அழைப்பார்கள் )இங்கே வந்து பாருங்க."என்று ஒரு அறையை அவன் காட்ட உள்ளே பார்த்தவனின் கண்கள்,பார்ப்பதை நம்ப முடியாமல் விரிந்தது.
கண் முன் இருப்பதை மூளையால் சற்று நேரம் கிரகிக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
"அவனை கொல்ல போறேன்.தெரிஞ்சு செய்யறானா.இல்லை லூசு ஆகிட்டானா அவன்?முட்டாள், முட்டாள்."என்று கர்ஜித்தான் மூத்தவன்.
"இப்போ என்ன செய்யறது....."என்றான் இளையவன்
"வண்டியில் ஏற்று.வேறு வழி."என்றான் மூத்தவன்.
(என்னத்தை டா ரெண்டு பேரும் smuggling செய்யறீங்க )
மூன்று பெட்டிகளை மிகுந்த சிரமப்பட்டு தூக்கி லாரி ஏற்றியவர்ககளுக்கு மூச்சு முட்டி போனது என்றால் மிகையல்ல.அந்த அளவுக்கு கணம் அந்த மூன்று பெட்டி மட்டும்.
"எல்லாம் சோதித்து விட்டாய் அல்லவா? எதுவும் விட்டு போகலை தானே...கிளம்பலாமா?"என்றான் முதலாமவன்.
"பார்த்துட்டேன் வீர்ஜி.அடுத்த அறையில் கம்ப்யூட்டர் பெட்டிங்க மட்டும் தான் இருக்கு.அதையும் திறந்து பார்த்துட்டேன். நிறைய கம்ப்யூட்டர் வாங்கி வச்சி இருக்கார் .புது பிசினஸ் போல் இருக்கு .கிளம்பலாம்."என்றான் ரெண்டாவது ஆள்.
கம்ப்யூட்டர் அட்டை பெட்டியை திறந்து பார்த்தவனுக்கோ ,இல்லை அவன் சொன்னதை கேட்டு கிளம்பிய மூத்தவனுக்கோ தெரிய வாய்ப்பு இல்லை ,அந்த அட்டை பெட்டிக்குள் இருந்த கம்ப்யூட்டருக்குள் தான் இவர்கள் தங்கள் லாரியில் ஏற்றிய விவகாரமான வஸ்துக்களை விட மிக ஆபத்தான பொருள் இருப்பது . தெரிந்து இருந்தால் ஒருவேளை பிற்காலத்தில் பலரின் தலைவிதி மாறாமல் இருந்து இருக்குமோ? !"கம்ப்யூட்டருக்குள் ஒரு பூகம்பம்" இருக்கும் என்று இந்த இருவரும் கனவா கண்டு இருக்க போகிறார்கள் ?