• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஒரு புறம் மகிழ்ந்தாலும் இன்னொரு புறம் நொந்து போய் இருந்தார் அமர்நாத்.இவன் " ஊரை திருத்தறேன், ,நாட்டை திருத்தறேன்" என்று இப்படி போக,யாரும் பெண் கொடுக்க வரவில்லை என்றால் இவரால் என்ன செய்ய முடியும்? வீட்டில் உள்ளார்கள் இவர் தலையை தானே போட்டு உருட்டுகிறார்கள்.ஊருக்கே திருமணம் நடத்தி வைப்பவர்,சொந்த சகோதரி மகனுக்கு திருமணம் நடத்த அவரும் தலையால் தண்ணீர் குடித்து கூட பார்க்கிறார்...ஹ்ம்ம்....எதுவும் வேலைக்கு ஆகவேயில்லை.

அடுத்தவர் வீட்டில் நாட்டுக்காக உழைக்கிறார்கள் என்றால் ஆஹா,ஓஹோ என்று கொண்டாடும் சமுதாயம்,அதே உழைப்பாளர்களை,நிஜ சமுதாய சீத்திருத்தவாதிகளை,தங்கள் வீட்டிற்குள் என்று வரும் போது ஏற்று கொள்வதில்லை.இது போல் போராடும் இவர்களும் அமைதியாக தங்கள் வேலையை செய்து விட்டு போய் விடுகிறார்கள்.யாருடைய பாராட்டு,பரிசு பட்டம் இவர்கள் எதிர்பார்ப்பதில்லை.

"அதான் மாமா...இரவோடு இரவாக அமன் அண்ணா கோடௌனில் இருந்த எல்லா விலங்குகளையும் ஜூவில் விட்டு விட்டோம்.இதுங்க மூன்று மட்டும் அடிபட்டு இருந்தது என்று வேட்டெனரி டாக்டர் கிட்டே காட்டினோம்.ஆனா நாங்க எதையும் கொளுத்தவில்லை.அதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தம் இல்லை. யார் செய்தாங்களோ தெரியாது."என்றான் கியான்தீப்.

தலையை உலுக்கி தன்னை மீட்டு கொண்ட அமர்நாத்,"இங்கே வேலை முடிஞ்சுதா அர்ஜுன்.வீட்டுக்கு போகணும்.வா.இந்த தடவை புது ப்ரோபோசல் கொண்டு வந்து இருக்கேன்.அதை பத்தி பேசணும்.கிளம்பு...கிளம்பு"என்றவர் அர்ஜுன் இழுக்காத குறையாய் அவன் ரேஞ்சு ரோவர் வண்டியில் ஏற்றி விட,அவர்களை சுமந்த கார் அவர்கள் வீட்டை நோக்கி சென்றது.

(யப்பா ஹீரோயின் இப்போவது கண்ணுல காட்டுவீயா ஹனி ?அமர் மாமா ப்ரோபோசல் கொண்டு வந்து இருக்கார் .நினைப்பே வயத்தை கலக்குது .இதுல என்ன செஞ்சி, அர்ஜுனை வச்சி செய்ய போறாரோ!!!)

அர்ஜுன் ,அமர்நாத்தை சுமந்த கார் அவர்கள் வீட்டை நோக்கி செல்ல ,நாம் தமிழ்நாட்டில் இப்போ என்ன நடக்குது என்று ட்ரிப் அடிப்போம் .


இடம் -நுங்கம்பாக்கம் ,தாஜ் கோரோமோண்டல் ஹோட்டல் அருகே

அது கோடீஸ்வரர்கள் மட்டுமே வாழும் பகுதி . ஒவ்வொரு பங்களாவும் வான் உயர்ந்து நின்றது .அந்த தெருவில் "குரு நிவாஸ் "என்ற எழுத்துக்கள் மின்னும் வீட்டிற்குள்/bungalow தான் செல்ல போகிறோம் .

b_730_ddf7c2a7-5d92-4c9d-86a8-1427d7c47005.jpg

கார் ஓடுபாதை தாண்டி சென்றால் நம்மை வரவேற்பது வீட்டு வாயில் முன் இருந்த மிக பெரிய நீச்சல் குளம் .அப்புறமாய் நீச்சல் அடிக்கலாம் .வாங்க மாபெரும் ஹால் தாண்டி படி ஏறினால் எந்த பக்கம் போவது என்ற குழப்பம் .ரெண்டாவது மாடியில் தான் பாட்டு சத்தம் கேட்கிறது அங்கே போவோம் .

stairs-design-for-indian-houses-1.jpg
ரெண்டாவது தளம் முழுவதையும் ஆக்ரமித்து இருந்து ஒரு அறை .அதை திறந்து உள்ளே போனால் இளவரசிகளின் படுக்கை அறை அமைப்பில் அதுவே சிறு பங்களா அளவிற்கு ஹால் ,மூன்று நன்கு படுக்கை அறை ,சமையல் அறை ,டிவி ரூம் ,பால்கனி என்ற அமைப்பு எங்கும் பணம் தண்ணீராய் செலவு செய்ய பட்டு இருப்பதை சொன்னது .

good-class-bungalow09_0 (1).jpg

பால்கனி கதவு திறந்து வெளியே சென்றால் அந்த தளத்தில் ஒரு நீச்சல் குளம் நம்மை வரவேற்றது .ஒரு புறம் லான் வேறு .அந்த நீச்சல் குளத்தில் வெண்ணை ,strawberry கலந்து செய்த தங்க மீனாய் நீந்தி கொண்டு இருந்தாள் அவள் .

பார்ப்பதற்கு sonal சவுஹான் என்ற ஹிந்தி நடிகை போல் இருந்தாள் ."ஜன்னத்" படத்தில் இம்ரான் ஆஸ்மியுடன் நடித்த பாலிவுட் பெண் .5 அடி 7 அங்குல உயரம் .52 கிலோ எடை .34-26-34.பிரவுன் நிற கண்கள்.மாசு மருவற்ற சருமம் .செம அழகி .நிச்சயம் லவ் லெட்டர் மழை பொழிந்து இருக்கும் .

maxresdefault (2).jpg

"வெள்ளாவி வச்சி தான் வெளுத்தாங்களா ,
உன்னை வெயிலுக்கு காட்டாம வளத்தாங்களா
"
என்று தான் பாட தோன்றும் அளவிற்கு வெண்ணை டால் .

(இரு இது நம்ம ப்ரீத்தி இல்லையே ! இது யாரு புது என்ட்ரி ? வீடு மாறி வந்துட்டியா ஹனி ?)

 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
நீந்தி கொண்டு இருந்தவளின் மொபைல் ஒலி எழுப்ப அதை வந்து அட்டென்ட் செய்தவள் ,எதிர் புறம் என்ன சொன்னார்களோ , இந்த வெண்ணை கேக் சில்லி பிரை போல் கோபத்தில் பொரிய ஆரம்பித்தது .

(யாருப்பா இந்த பேபியை கோபப்படுத்துவது .கோபத்திலும் கூட ஹாட் அண்ட் spicey ...)

"மாம் வாட் தி ஹெல் டூ யு அண்ட் பப்பா (daddy)திங்கிங்...என்னை கேட்காம எப்படி நீங்க ப்ரோபோசல் பேசலாம்....யாரை கேட்டு நாளை அந்த பையனை வர சொன்னீர்கள் ?'என்று தமிழில் பொரிந்து கொண்டு இருந்தாள்.

"கண்ணா...சடன் ப்ரோபோசல்டா..நீ அங்கே பதிண்டாவிற்கு உன் தோழி திருமணத்திற்கு போவதை பேச்சுவாக்கில் அப்பா ஹர்பிர் அங்கிள் கிட்டே சொல்லி இருக்கார்....பையன் அங்கே தானே இருக்கான் என்று அவர் நண்பரிடம் சொல்லி இருக்கார்....இது எல்லாம் சகஜம் என்று உனக்கு தெரியாதா dolly....போய் பாரு உன் "'ட்ரீம் மேன்" என்று அடிக்கடி சொல்வாயே அது அவன் தான் என்றால் நெஸ்ட் பேசலாம்...இல்லைன்னா அங்கேயே சாரினு சொல்லிட்டு யு கோ யுவர் வே டாலி...இதுக்கு ஏன் இத்தனை டென்ஷன்...ரிலாக்ஸ்..."என்றார் அவள் தாய் லலிதா.

"யெஸ் மாம் யு ஆர் கரெக்ட்.போய் பார்க்கிறேன்.பிடிக்கலை என்றால் அதற்கு மேல் போர்ஸ் செய்யாதீங்க."

"கண்ணா....அவங்க ஏற்கனவே உனக்காக டிக்கெட் புக் செய்து இருக்காங்க....spice ஜெட் பிளையிட்....இன்று இரவூ 8 மணிக்கு மீனம்பாக்கத்தில் இருந்து கிளம்புது டெல்லிக்கு.டெல்லியில் இருந்து பதிண்டா மறுநாள் காலை 10.40க்கு ரீச் ஆகும்.ட்ராவல் டைம் 14 மணி நேரம்....எல்லாம் பேக் செய்து சரி பார்த்துக்கோ.."என்றார் லலிதா.

"என்ன மாம் இது...பிளையிட் டிக்கெட் எடுக்க நம்மிடம் பணமே இல்லையா என்ன...எதுக்கு இந்த வேலை எல்லாம் ?எனக்கு சுத்தமா பிடிக்கலை...ரொம்ப ரஷ் அப் செய்யறா மாதிரி பீல் ஆகுது....இதை நான் ஆன்லைனில் செய்து இருக்க மாட்டேனே என்ன ?"என்றாள் அவள் வெறுப்புடன்.

(போச்சுடா ...ஆரம்பமே கோணல்லா இருக்கே !இந்த டாலி வேண்டா வெறுப்பா கிளம்புதே "இந்த டாலியின் ட்ரீம் மேன் யாரோ ?". )

""டாலி...இது அங்கிள்க்கு அவங்க கொடுக்கும் மரியாதை மா....உனக்கு தெரியாத என்ன பஞ்சாபி எவ்வளவூ கேரிங் என்று....அங்கிள் வீட்டு பிள்ளை என்றதும் நீ பத்திரமா வருவதற்கு எல்லா ஏற்படும் செய்து இருக்காங்க....இது அவங்க மகனை பார்க்க நீ போகவில்லை என்றாலும் செய்வாங்க....உனக்கு பையனை பிடிக்கலை என்றால் திரும்பி வந்து அங்கிள் கிட்டே பணம் கொடுத்துடு...ஈசி....ஒகே டைம் ஆகுது பாரு...ரெடி ஆகு. " என்றார் லலிதா.

"ஒகே மா...அண்ணா அண்ணியை கேட்டதா சொல்லுங்கோ...டேக் கேர்....அங்கே ரீச் ஆனதும் ஐ கால் யு."என்றவள் அழைப்பை துண்டித்து விட்டு பயணத்திற்கு தேவையான உடைகளை பேக் செய்ய ஆரம்பித்தாள்.

நடுவே தன் லேப்டாப் ஓபன் செய்தவள் அதில் இருந்த வீடியோ ஒன்றை ஓட விட ஒருவன் காலேஜ் ஹாக்கியை வெறித்தனமாய் விளையாடி கொண்டு இருந்தான் .

"எங்கே இருக்கே மை ஸ்வீட் பிரின்ஸ் சார்மிங் ?இப்போ எப்படி இருக்கே .என்னை உனக்கு ஞாபகம் இருக்குமா ?"என்றாள் லேப்டாப் ஸ்க்ரீன்னில் தெரிந்த உருவத்தின் முகத்தை தடவியவாறு .


(இந்த ஹனிக்கு இருக்கும் லொள்ளை பாருங்க மக்கா . "பிரின்ஸ் சார்மிங் "யார் என்று தெரிய கூடாது என்று கார்ட்டூன் கேரக்டர் வரும் பாட்டை தேடி எடுத்து போடுது .உஷாரு அய்யா உஷாரு )

என்னைச் சுற்றி இருங்கள் எப்போதும் என்னைச் சுற்றியுள்ள காற்று போல

நான் உன்னை மட்டுமே சுவாசிக்கிறேன்

எனவே தயவுசெய்து என் அன்பே இந்த வேண்டுகோளைக் கேளுங்கள்

உன்னைப் பார்க்க முடியாத அந்த தருணம் என் இதயம் துடிப்பதை நிறுத்துகிறது

அன்பே என் கண்கள் உன்னை மட்டுமே பார்க்க விரும்புகின்றன

கண்கள் உன் முகத்தை மட்டுமே பார்க்க விரும்புகின்றன

நான் உன்னைப் பார்த்து திரும்பி வந்ததிலிருந்து

என்னைச் சுற்றியுள்ள நேரம் நிறுத்தப்படுகிறது

நீங்கள் இல்லாமல் வாழ நான் ஒருவித காரணங்கள் அன்றிலிருந்து நான் சோகமாக இருக்கிறேன்

கடல் ஆழத்தைக் கொண்டிருப்பது போல் உன் மேல் நான் கொண்ட இந்த காதல் மிக மிக ஆழமானது .

நீ என்றென்றும் என் துணை

நீங்கள் என் அன்பே

உன்னை என்னால் கண்டுபிடிக்க முடியாத தருணம் என் இதயம் துடிப்பதை நிறுத்துகிறது

அன்பே என் கண்கள் உன்னை மட்டுமே பார்க்க விரும்புகின்றன கண்கள் உன் முகத்தைப் பார்க்க மட்டுமே விரும்புகின்றன


என்று படத்தின் பாடலோடு பாடி கொண்டு இருந்தாள் அவள் .


(டாலி யாருமா அந்த ஹாக்கி பார்ட்டி ?எங்க அர்ஜுன் இல்லை தானே !ஒருவேளை அர்ஜுன் தானோ ? )

டாலி தன் பஞ்சாப் பயணத்திற்கு தேவையான துணிகளை எடுத்து வைக்கும் அதே சமயம் சரண் பால் ஜீப் பதிண்டா ரயில் நிலையம் பின்புறம் வந்து நின்றது .

அங்கு ஏற்கனவே நின்று இருந்தார் சீனியர் சுப்பரின்டென்டென்ட் ஆப் போலீஸ் (SSP-senior superintendent of police )வீரேந்தர் ரப்தார் bhatiya. அர்ஜுன் அர்ஜுன் பெரியப்பா/தாயா ,பதிண்டா நகர SSP.
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
download (1).jpg

"சர்ஜீ "என்று சலூட் வைத்த சரண் அவர் அருகே வந்தார்.

"இது இந்த மாதத்தில் நடக்கும் எட்டாவது மரணம்.எல்லாமே சின்ன வயசு பசங்க...டீனேஜ்..போதை மருந்து ஓவர் டோஸ்.அதே "பிளாக் ஸ்கார்பியோன்/கறுப்பு தேள் " பாக்கெட் இவங்க கிட்டே இருக்கு."என்றவர் அந்த சிறு பாக்கெட் ஒன்றை சரண் இடம் கொடுக்க,"கடவுளே !"என்று கண்கள் கலங்க நின்றார்.

drugs-overdose-16620144.jpg
2016-05-27_new_21426812_I1.jpg

மலரும் முன்பே மொட்டுக்களை கருக்கிய அந்த தேள் அவரை பார்த்து தன் விகார முகத்தை காட்டி சிரிப்பது போல் இருந்தது.

"கோல்டன் CRESCENT -தங்க பிறை" என்று ""மருந்துகள் மற்றும் குற்றம் பற்றிய ஐக்கிய நாடுகள் அலுவலகம்/UN Office of Drugs and Crime-- ஆப்கானிஸ்தான் ,ஈரான்,பாகிஸ்தான்,பஞ்சாப் பகுதிகளில் நடைபெறும் போதை மருந்து நெட்ஒர்க் அழைப்பார்கள்.

எப்படி பிறையையானது c வடிவில் இருக்குமோ அதே போல் இந்த மருந்துகள் கடத்தல் அதிகம் நடக்கும் இடம் இந்த நாடுகள். இந்த தொழில் "சிட்டா எகானமி/CHITTA ECONOMY "என்று அழைக்க படும் உலக அளவூ நெட்ஒர்க்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிராமங்களில்,ஏறக்குறைய 328,000 ஹெக்டர் நிலப்பரப்பில் ஓபியம் பயிர் இடப்பட்டு,9000 டன் 2017 மட்டும் அறுவடை செய்ய பட்டு உள்ளது .

map2_1465552238.jpg

ஒரு கிலோகிராம் 5 கோடி மதிப்பு பெற்றது.பல வழிகளில் இந்தியாவிற்குள் அனுப்பப்பட்டு இந்திய இளைஞ்சர்களின் உயிரை எடுத்து கொண்டு இருக்கும் "கண்ணுக்கு தெரியாத போர்"/INVISIBLE WAR இது என்கிறார் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் ஆஃபீஸ்ர் கமாண்டர் ஆர்.கே.அரோரா.

ஒரு நாட்டின் முதுகெலும்பான இளைஞ்சர்களை போதைக்கு அடிமையாக்கி விட்டால் போதும், ஒரு நாடு அழிந்து விடும் என்பது புது மாதிரியான தீவிரவாதம்.

முதலில் காதல் என்னும் ஆயுதம்,அடுத்து போதை என்னும் ஆயுதம் இந்தியாவை குறி வைத்து கொண்டு இருக்கிறது. இதன் பெயரே “narco terrorism -போதை பயங்கரவாதம்.ஒழுங்கமைக்கப்பட்ட எல்லை தாண்டிய குற்றம்

CIA_Map_of_International_illegal_drug_connections.gif
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
முதல் வழி ஆப்கானிஸ்தான் இருந்து -பாகிஸ்தான் வழியாக -இந்தியா -பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைகிறது.இன்னொரு வழி ஆப்பிரிக்கா சென்று,பாகிஸ்தான் வழியாக மற்ற மாநிலத்திற்கு செல்கிறது

000_del6403011_1465557115.jpg

சுதந்திரத்தின் போது,இந்தியா பாகிஸ்தான் பிரிந்தது போலே,பஞ்சாப் ரெண்டாக பிரிக்கப்பட்டு,இந்தியா பஞ்சாப்,பாகிஸ்தான் பஞ்சாப் என்று பிரிந்தது.இந்தியா பாகிஸ்தான் எல்லை கோட்டுக்கு அருகே பூமிக்கு அடியில் சுரங்கம் தோண்டி பைப்பை உள்ளே விட்டு அதன் மூலம் இந்த பாக்கெட்டுகள் இந்தியாவிற்குள் போட படும்.

“கூரியர்/courrier” எனப்படும் ஆட்கள் இவற்றை சேகரித்து நகரத்திற்குள் கொண்டு சென்று விற்பார்கள்.இதில் முக்கியமாய் இந்த போதை மருந்தினை எடுத்து கொள்ளும் மக்களே,தங்களுக்கு போதை தேவை என்று விற்க ஆரம்பித்து விடுவார்களாம்.

ஒரு நாளைக்கு 2000 ரூபாய் அளவுக்கு செலவூ செய்ய வேண்டி இருக்கும் போது,ஒரு மாதத்திற்கு 60,000 ரூபாய்க்கு எங்கே செல்வார்கள் ?சுலப வழி இன்னொருத்தருக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்தி விட்டு,அவர்களுக்கு இவர்களே விற்று தங்கள் பழக்கத்திற்கு பயன்படுத்தி கொள்வார்கள். ஒரு பக்கம் தாங்கள் அழிவது இல்லாமல் மற்றவர்களையும் இதில் இழுத்து விட்டு அவர்கள் உயிரையும் எடுக்கும் காலனாய் இவர்களே மாறி விடுகிறார்கள்.

2484C27C00000578-2902530-image-a-2_1420768794688.jpg

இங்கு இருந்து சவுத் இந்தியா -தமிழ்நாடு,கர்நாடகா,கேரளா என்று எல்லா மூலைக்கும் செல்கிறது.இது எங்கோ நடக்கும் ஒன்று இல்லை.தமிழ்நாட்டில் மட்டும் 115 கிலோகிராம் ஹெரோயின் 2018-19 கைப்பற்ற பட்டு உள்ளது.

lysergic acid diethylamide (LSD, )ketamine and pseudoephedrine போன்றவை சாக்லேட் மாதிரி விற்கப்படுகிறது.இவர்கள் குறி காலேஜ்,பள்ளிகள்.பிள்ளைகள் ஒருமுறை பழகி விட்டால் அவர்களை திருடர்களாய் மாற்றுவது,பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது சைடு பிசினஸ் என்று நடக்கும் -பின் பழகி விட்ட போதை மருந்து வாங்க இவர்களுக்கு பணம் வேண்டும் இல்லையா!

சென்னை ரெட்ஹில்,tiruchy பகுதியில் இருந்து மட்டும் 90கேஜி ஹெரோயின், 56kg of pseudoephedrine and 11kg of methamphetamine வருவாய் புலனாய்வு இயக்குநர்/Director of Revenue Intelligence (டிஆர்ஐ) பிடித்து உள்ளனர்.

Punjab_0.jpg

பாகிஸ்தான் விட்டு எங்கோ இருக்கும் தமிழ்நாட்டின் உள்ளேயே இவ்வளவூ என்றால்,பாகிஸ்தான் எல்லை கோட்டுக்கு மிக அருகில் உள்ள பஞ்சாப் நிலை ?அங்கு உள்ள பள்ளி குழந்தைகள்,காலேஜ் மாணவர்கள்,குடும்ப தலைவர்கள்,இல்லத்தரசிகள் கதி ?

வாழ்வை எந்த அளவுக்கு விரும்பி,ரசித்து வாழ்கிறார்களோ,வீரத்திற்கும்,காதலுக்கும்,உழைப்பிற்கும்,நாட்டுப்பற்றுக்கும் எந்த அளவூ முக்கியத்தும் கொடுக்கிறார்களோ, அதே அளவிற்கு இவர்கள் வாழ்வில் குடி,போதை என்னும் அரக்கன் நுழைந்து குடும்பங்களை சிதைத்து கொண்டு இருக்கிறது.இல்லை சிதைக்க பட்டு வருகிறது

தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள்,பிசினஸ் மென் எப்படி "சாராய அரசியல் "நடத்துகின்றனரோ அதே போல் பஞ்சாப் மாநிலத்தில்,"போலீஸ்,அரசியல்வாதிகள் "சேர்ந்து இந்த போதை கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் உண்டு.ஏறக்குறைய 61.1% பேர் மாநிலத்தில் பாதிக்க பட இவர்கள் காரணம்.அதன் EXTREME இதோ இது போன்ற 3 குழந்தைகளின் மரணம் என்று நினைத்து பார்த்த சரண் கண்கள் சிவந்து நின்றார்.

"போன தடவை மரணத்தின் போதே இங்கு விற்கிறான் என்று அர்ரெஸ்ட் செய்தோம் அவனை மீண்டும் மீண்டும் விசாரியுங்க சரண்....இதற்கு முற்றுப்புள்ளி வைக்கணும் அதுவும் உடனே.....CM கிட்டே நான் பேசறேன்....கோ ஹெட்..."என்றவர்கிளம்ப,மூன்று பிள்ளைகளின் உடலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டது.

அவர்கள் யார் என்ன என்று பாக்கில் இருந்த போன்,ID வைத்து தெரிந்து கொண்டு,வீட்டுக்கு தகவல் சொல்ல மூன்று கான்ஸ்டபிள் நியமித்து விட்டு,சரண் போதை அந்த பகுதியில் சப்ளை செய்தவனை நொங்கு எடுக்க கிளம்பினார்.

பயணம் தொடரும் ....


(வெள்ளிக்கிழமை போட வேண்டிய பதிவு இன்றே போட்டு விட்டேன் நட்பூஸ் .முடிந்தால் நடுவே UD தரேன் .இல்லை என்றால் அடுத்த வாரம் திங்கள் சந்திப்போம் .)
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிதா ராஜ்குமார் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top