Vijiya lakshmi jagan
மண்டலாதிபதி
- Joined
- Jan 17, 2018
- Messages
- 193
- Reaction score
- 4,743
Chapter 19 Continuation
அதற்க்காக சூர்யாவின் மனநிலை அறிய கேட்க பட்ட கேள்வி சரியாகவே அவர்களுக்கு புரிந்தது என்பது போல் விக்ரம் சூர்யாவை பார்த்தான்.
சூர்யாவும் …”இப்போ எனக்கு எந்த வித அட்டென்ஷனும் இல்ல, இவங்க சேபா இருக்கனும் அது மட்டும் தான்.” என்று சொன்னதும்.
சூர்யாவின் மனவிருப்பம் தெரிந்தே….”அப்படியா….?” என்று கேட்டவர். “எனக்கு ஒரு சந்தேகம் மிஸ்டர் சூர்ய பிரகாஷ்.” என்ற அவர் பேசும் தோரணையில் இருந்தே ஏதோ வில்லங்கமா தான் கேட்க போகிறார் என்று அறிந்து.
“ஒ தாராளமா கேளுங்க சார். சென்னையில் புகழ் பெற்ற ஒரு லாயருக்கு நான் சந்தேகம் தீர்த்து வைத்தேன் என்றால்….? கேளுங்க. கேளுங்க.”
அவரை விட தெனவெட்டாக பேசும் சூர்யாவை சிரித்துக் கொண்டே…. “உங்க குடும்பத்தில் ஒரு இழப்பு ஏற்படுவதற்க்கு சுடர் காரணமாய் இருக்கும் போது அவங்க குடும்பத்தின் மீது ஏன் இவ்வளவு அக்கறைன்னு தெரிஞ்சிக்கலாமா….?” கேட்டதுக்கு.
“ஆ சொல்லலாம் தான். ஆனா தெரிஞ்சிவங்களுக்கு என்ன சொல்றதுன்னு தான் புரியல.” என்று இருவரின் வழக்காடலை ஒரு வித சலிப்போடு பார்த்திருந்த விக்ரம்.
அப்போது தான் தங்கியிருந்த அறையில் இருந்து வெளிவந்த சூர்ய கலாவை பார்த்ததும் இருந்த சலிப்பு பறந்தோட முகத்தில் தெளசன்ட் வாலா வெளிச்சத்தோடு பல பலத்தது.
ஆனால் சூர்ய கலாவோ இருவரையும் பார்த்ததும் ஒரு வித பதட்டம் தான் வந்ததே ஒழிய வேறு எதுவும் அவளிடத்தில் பிரதிபலிப்பு இல்லை.
இத்தனையும் பார்த்திருந்த வேதாச்சலத்துக்கு கொஞ்சம் கஷ்டம் தான் என்று தான் நினைக்க தோன்றியது.
எப்போதும் போல் சுடர்…..சூர்யா பிரகாஷை நேர்க் கொண்டு பார்த்து….”நாங்க வேதாச்சலம் சார் கூடவே போயிடறோம். “ என்று சொல்லி முடித்ததும்.
“இல்ல அங்கு எல்லாம் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை .” என்று சூர்யா சொல்லி இருந்தால் என்ன சொல்லி இருப்பாளோ...அதை வேதாச்சலம் சொல்ல.
இங்கு அவரை அழைத்ததே...அவருடன் செல்வதற்க்கு தான். என்ன இவரே இப்படி சொல்கிறார் என்று அவரை பார்க்க.
“இல்லேம்மா இவங்க நினைப்பது சரி தான். அங்கு அஸ்வின் அப்பா வெறி கொண்டு தேடிட்டு இருக்காரு. உங்களுக்கு நான் உதவி செய்வேன் என்று முதலில் தேடுறது என் இடங்களா தான் இருக்கும். இந்த இடம் தான் உங்களுக்கு பாதுகாப்பானது.” என்று சொன்னவர்.
பின் எழுந்து சூர்யாவின் கை பற்றியவர்…. “உங்க மனசு போல் எல்லாம் நடக்க வாழ்த்துகள்” என்று சொல்லி வாழ்த்தியவர்.
விக்ரமின் கைய் குலுக்கலோடு நிறுத்தியதும்… “ஏன் எங்களுக்கு அந்த வாழ்த்து சொல்ல கூடாதா….?” என்று சிறு பிள்ளை போல் சொல்லும் விக்ரமை பார்க்க வேதாச்சலத்துக்கு சிரிப்பு தான் வந்தது.
நீதிமன்றத்தில் எப்போதும் விக்ரமுக்கு எதிராக வேதாச்சலம் தான் நிற்பார். விக்ரமுக்கு பணம் படைத்தவர்கள் செய்த தவறை சொல்லி விட்டு நின்றால் போதும் அவர்களை தன் வாய் ஜாலத்தில் வெளியே எடுத்து விடுவான்.வேதாச்சலமோ ஏழைகளுக்கு அநியாயம் என்றால்….? அதுவும் பணம் படைத்த முதலைகளுக்கு எதிராக என்றால் வெல்லம் கடிப்பது போல் விக்ரமுக்கு எதிராக இருப்பார்.
அப்படி பட்டவன் தன்னிடம் சிறுபிள்ளை போல் பேசியதை பார்த்து. “ அது எப்படி அனைத்திலும் வெற்றி என்று உன்னை வாழ்த்துவேன். அது எனக்கு நானே வைத்துக் கொள்ளும் ஆப்பு அல்லவா….?” என்று கிண்டலுடன் சொன்னவர்.
சூர்ய கலாவை பார்த்துக் கொண்டே…”கொஞ்சம் கஷ்டம் தான்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இவர்கள் மூவரின் அருகில் வந்த சுடர் வேதச்சலத்தை பார்க்க.
அவளின் முகத்தில் என்ன தெரிந்ததோ…..”பயப்படாதே சுடர்.” என்று தைரியம் மூட்டியவர்.
அவளின் கைய் பற்றி….” உனக்கு இன்னொரு அப்பாவா நான் எப்போதும் இருப்பேன்.” என்று சொல்லி விட்டு.
“எது என்றாலும் ஒரு போன் போடு.” என்றதும்.
பதட்டத்துடம் சூர்யா, விக்ரம் இருவரும் ஒரு சேர…”வேண்டாம் வேண்டாம். இங்கு இருக்கும் போனை ட்ரேசர் செய்ய மாட்டாங்க.” வேதாச்சலத்தை பார்த்து…”உங்க போன ட்ரேசர் செய்யவாங்க….” என்று சொல்லிக் கொண்டே இருந்தவன்.
மின்னல் வெட்டியது போல்...சுடரை பார்த்து.” இப்போ நீங்க இங்கு இருப்பது எப்படி இவருக்கு தெரிய வந்தது. போன் போட்டியா….” என்று பதட்டத்துடன் சூர்யா கேட்க.
சுடரும், வேதாச்சலமும், செய்த புன்னகை பறிமாற்றத்தில் ஏதோ விளங்கியது
அதற்க்காக சூர்யாவின் மனநிலை அறிய கேட்க பட்ட கேள்வி சரியாகவே அவர்களுக்கு புரிந்தது என்பது போல் விக்ரம் சூர்யாவை பார்த்தான்.
சூர்யாவும் …”இப்போ எனக்கு எந்த வித அட்டென்ஷனும் இல்ல, இவங்க சேபா இருக்கனும் அது மட்டும் தான்.” என்று சொன்னதும்.
சூர்யாவின் மனவிருப்பம் தெரிந்தே….”அப்படியா….?” என்று கேட்டவர். “எனக்கு ஒரு சந்தேகம் மிஸ்டர் சூர்ய பிரகாஷ்.” என்ற அவர் பேசும் தோரணையில் இருந்தே ஏதோ வில்லங்கமா தான் கேட்க போகிறார் என்று அறிந்து.
“ஒ தாராளமா கேளுங்க சார். சென்னையில் புகழ் பெற்ற ஒரு லாயருக்கு நான் சந்தேகம் தீர்த்து வைத்தேன் என்றால்….? கேளுங்க. கேளுங்க.”
அவரை விட தெனவெட்டாக பேசும் சூர்யாவை சிரித்துக் கொண்டே…. “உங்க குடும்பத்தில் ஒரு இழப்பு ஏற்படுவதற்க்கு சுடர் காரணமாய் இருக்கும் போது அவங்க குடும்பத்தின் மீது ஏன் இவ்வளவு அக்கறைன்னு தெரிஞ்சிக்கலாமா….?” கேட்டதுக்கு.
“ஆ சொல்லலாம் தான். ஆனா தெரிஞ்சிவங்களுக்கு என்ன சொல்றதுன்னு தான் புரியல.” என்று இருவரின் வழக்காடலை ஒரு வித சலிப்போடு பார்த்திருந்த விக்ரம்.
அப்போது தான் தங்கியிருந்த அறையில் இருந்து வெளிவந்த சூர்ய கலாவை பார்த்ததும் இருந்த சலிப்பு பறந்தோட முகத்தில் தெளசன்ட் வாலா வெளிச்சத்தோடு பல பலத்தது.
ஆனால் சூர்ய கலாவோ இருவரையும் பார்த்ததும் ஒரு வித பதட்டம் தான் வந்ததே ஒழிய வேறு எதுவும் அவளிடத்தில் பிரதிபலிப்பு இல்லை.
இத்தனையும் பார்த்திருந்த வேதாச்சலத்துக்கு கொஞ்சம் கஷ்டம் தான் என்று தான் நினைக்க தோன்றியது.
எப்போதும் போல் சுடர்…..சூர்யா பிரகாஷை நேர்க் கொண்டு பார்த்து….”நாங்க வேதாச்சலம் சார் கூடவே போயிடறோம். “ என்று சொல்லி முடித்ததும்.
“இல்ல அங்கு எல்லாம் உங்களுக்கு பாதுகாப்பு இல்லை .” என்று சூர்யா சொல்லி இருந்தால் என்ன சொல்லி இருப்பாளோ...அதை வேதாச்சலம் சொல்ல.
இங்கு அவரை அழைத்ததே...அவருடன் செல்வதற்க்கு தான். என்ன இவரே இப்படி சொல்கிறார் என்று அவரை பார்க்க.
“இல்லேம்மா இவங்க நினைப்பது சரி தான். அங்கு அஸ்வின் அப்பா வெறி கொண்டு தேடிட்டு இருக்காரு. உங்களுக்கு நான் உதவி செய்வேன் என்று முதலில் தேடுறது என் இடங்களா தான் இருக்கும். இந்த இடம் தான் உங்களுக்கு பாதுகாப்பானது.” என்று சொன்னவர்.
பின் எழுந்து சூர்யாவின் கை பற்றியவர்…. “உங்க மனசு போல் எல்லாம் நடக்க வாழ்த்துகள்” என்று சொல்லி வாழ்த்தியவர்.
விக்ரமின் கைய் குலுக்கலோடு நிறுத்தியதும்… “ஏன் எங்களுக்கு அந்த வாழ்த்து சொல்ல கூடாதா….?” என்று சிறு பிள்ளை போல் சொல்லும் விக்ரமை பார்க்க வேதாச்சலத்துக்கு சிரிப்பு தான் வந்தது.
நீதிமன்றத்தில் எப்போதும் விக்ரமுக்கு எதிராக வேதாச்சலம் தான் நிற்பார். விக்ரமுக்கு பணம் படைத்தவர்கள் செய்த தவறை சொல்லி விட்டு நின்றால் போதும் அவர்களை தன் வாய் ஜாலத்தில் வெளியே எடுத்து விடுவான்.வேதாச்சலமோ ஏழைகளுக்கு அநியாயம் என்றால்….? அதுவும் பணம் படைத்த முதலைகளுக்கு எதிராக என்றால் வெல்லம் கடிப்பது போல் விக்ரமுக்கு எதிராக இருப்பார்.
அப்படி பட்டவன் தன்னிடம் சிறுபிள்ளை போல் பேசியதை பார்த்து. “ அது எப்படி அனைத்திலும் வெற்றி என்று உன்னை வாழ்த்துவேன். அது எனக்கு நானே வைத்துக் கொள்ளும் ஆப்பு அல்லவா….?” என்று கிண்டலுடன் சொன்னவர்.
சூர்ய கலாவை பார்த்துக் கொண்டே…”கொஞ்சம் கஷ்டம் தான்.” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இவர்கள் மூவரின் அருகில் வந்த சுடர் வேதச்சலத்தை பார்க்க.
அவளின் முகத்தில் என்ன தெரிந்ததோ…..”பயப்படாதே சுடர்.” என்று தைரியம் மூட்டியவர்.
அவளின் கைய் பற்றி….” உனக்கு இன்னொரு அப்பாவா நான் எப்போதும் இருப்பேன்.” என்று சொல்லி விட்டு.
“எது என்றாலும் ஒரு போன் போடு.” என்றதும்.
பதட்டத்துடம் சூர்யா, விக்ரம் இருவரும் ஒரு சேர…”வேண்டாம் வேண்டாம். இங்கு இருக்கும் போனை ட்ரேசர் செய்ய மாட்டாங்க.” வேதாச்சலத்தை பார்த்து…”உங்க போன ட்ரேசர் செய்யவாங்க….” என்று சொல்லிக் கொண்டே இருந்தவன்.
மின்னல் வெட்டியது போல்...சுடரை பார்த்து.” இப்போ நீங்க இங்கு இருப்பது எப்படி இவருக்கு தெரிய வந்தது. போன் போட்டியா….” என்று பதட்டத்துடன் சூர்யா கேட்க.
சுடரும், வேதாச்சலமும், செய்த புன்னகை பறிமாற்றத்தில் ஏதோ விளங்கியது