A
Anna Sweety
Guest
View attachment 2226
அன்று நான் கிளம்றப்பவே கொஞ்சம் லேட். அடுத்தும் ஸ்ட்ரெய்ட் பஸ் கிடைக்காம ரெண்டு பஸ் மாறி மாறி போய் அந்த பஸ் ஸ்டாப்ல இறங்கிறப்ப ரொம்பவே லேட். எனக்கு முதல் ஜாப் அது. அதுவும் முதல் நாள். நான் இப்ப படு டென்ஷனாகிட்டேன்.
எதிர்ல இருக்ற சிக்னலை தாண்டி இன்னும் 500 மீட்டர் வேற போகனும் ஆஃபீஸுக்கு. சுற்று முற்றும் கவனித்தபடி சிக்னலில் இறங்கி ஓடினேன்.
க்ரீச் க்ர்க் இஷ்க்…. சுத்தி கேட்ட சில சத்தங்கள், அதோடு இடுப்பில் சின்னதாய் விழுந்த இடியில் நான் மிரண்டு போய், கீழே விழும் போது படு பயங்கரமாய் பயந்து போய்!
பின்ன அடுத்த நொடி எத்தனை வண்டி என் மேல ஏறும்னு யாருக்கு தெரியும்….???
இதற்குள் அருகில் நின்ற அந்த வெள்ளைக் கார் கதவை திறந்து கொண்டு வந்தவன் என்னை கை பிடித்து தூக்கினான்.
“ஆர் யூ ஆல் ரைட்…?”
கையில் உண்டாகியிருந்த சிராய்ப்பை மட்டும் தடவிக் கொண்டு எழுந்துவிட்டேன்.
“ஒன்னுமில்ல சார்…தேங்க் யூ” சொல்லிவிட்டேனே தவிர பயத்தில் இன்னுமாய் நடுங்கிக் கொண்டிருக்கிறது உடல்.
ஆனால் அதுவரை அத்தனை அக்கறையாய் கேட்ட அவன் இப்போது “அறிவிருக்கா உனக்கு, கிறுக்கா நீ? இப்படிதான் ரோடை கிராஸ் பண்ணுவியா…? ” என ஏகத்துக்கு ஏற தொடங்கி இருந்தான்.
என்ட்ட எப்பயாவது வீட்ல யாரவது கோபப் பட்டது உண்டு. ஆனா இவ்ளவு கோபம் அதுவும் ஒரு ஆணோட கோபம் இப்போதைக்கு நான் பார்த்ததே இல்ல. அதுவும் முன்ன பின்ன தெரியாத இவனோட கோபம் என்னை ஏனோ எப்போதையும் விட அதிகமாகவே பாதித்தது.
“ஒரு செகண்ட்ல நீ இப்ப சட்னி ஆகி இருப்ப, அடுத்து நான் அலையனும் கோர்ட்டு கேஸுன்னு…” அவன் நிறுத்துவதாக இல்லை.
என்னதான் என் பக்கம்தான் தப்பு என்றாலும், என் நடுங்கும் உடலும் அவனுடைய கோபமும் என் சாப்பிடாத வயிறும், எல்லாமுமாக சேர்ந்து இப்போது நான் அவனை முறைத்தேன்.
“போடா லூசு” முகம் நோக்கி சொல்லிவிட்டு கட கடவென கிளம்பி வந்துவிட்டேன்.
“ஹேய்….” அவன் ஏதோ சொல்ல தொடங்கியதை நான் கண்டு கொள்ளவே இல்லை.
கால் சென்ட்டர் அது.
அங்க யூகேலயும் யூஎஸ்லயும் எப்ப ஹாலிடேவோ அப்ப மட்டும்தான் லீவு இருக்குமாம். ட்ரெய்னிங் ஹாலில் என் பக்கத்தில் இருந்த பெண் அதைத்தான் சொல்லிக்கொண்டு இருந்தாள். அவ பேரு சுஜிதா
எனக்கெல்லாம் பேசாமல் இருந்தால் தான் வாய் வலிக்கும். அப்படி பார்டி நான்.
ஆனாலும் முதல் வேலை, முதல் நாள் வேலைனதும் கொஞ்சம் கபகபன்னு டென்ஷனா இருந்தது.
அதுக்கு என்னை மாதிரியே இப்டி ஒரு வாய் பார்டி வாகா பக்கத்தில் உட்கார்ந்தது ரொம்பவே உதவியா இருந்துச்சு.
சுஜியும் நானும் நல்லா மொக்கை போட்டு நட்புல முன்னேறிகிட்டு இருந்தப்ப
“ஹாய் ஐ’ம்….” அப்டின்னு ஆரம்பிச்சு அவன் பேரை சொல்லிகிட்டே வந்தான்.
எங்களுக்கு லேங்குவேஜ் ஃபெசிலிடேடராம். அவன் குரலை கேட்கவும் தூக்கி வாரிப் போட்டது எனக்கு.
அவன்ன்ன்ன்ன்ன்…. அந்த கார்காரன்.
போச்சு, வேலை போச்சு, நான் மிரண்டு போய் முழிக்க,
ஆனால் அவனோ என்னை அடையாளம் கண்டு கொள்ளவே இல்லை.
நிஜமாவா?????
அடுத்து அவன் பேச பேச இது எல்லாத்தையும் மறந்துட்டு நான் பே….ன்னு பார்த்துட்டு இருந்தேன். ஏன்னா அவன் இங்க்லீஷ் அப்படி!
அடுத்து ஒரு குட்டி ப்ரேக். என்னையும் அவனையும் தவிர எல்லோரும் வெளிய போய்ட்டாங்க.
கிடச்ச டைம்ம நாம வேஸ்ட்டாக்க கூடாது, காலத்த ப்ரயோஜனப் படுத்தனும்னு, ப்ரேக்க சரியா யூஸ் செய்யனும்னு முடிவு செய்து,
சரி நாம இன்னையோட பேப்பரை போட்ற வேண்டியதான், அதுக்கு என்ன ப்ரொசீசர்னு யோசிச்சுகிட்டு இருந்தேன் நல்ல பிள்ளையா!
பின்னே ‘அவன மாதிரி நான் என்னைக்கு பேசவாம்? வெளிநாட்டுகாரங்களுக்கு நான் பேசுறது இங்க்லீஷ்னு எப்ப புரியவாம்…?’
வேலைய விடனும்னு நினச்சாலும் வீட்டை நினச்சு டென்ஷனாவும் இருக்கு.
எல்லோரும் கிண்டல் செய்வாங்கல்ல, போன அன்னைக்கே பயந்து ஓடி வந்துட்டன்னு. நம்மளால நாலு பேருக்கு நஷ்டமாக கூடாதுன்னு நினைக்கிற நல்ல மனச அவங்களுக்கு எப்படி புரியும்?
அப்படி ஆறு பக்கத்தையும் அலசி ஆராஞ்சு யோசிச்சுட்டு இருக்கப்ப, அவன் என்னைக் கூப்பிட்டான்.
சரி தனியா வச்சு சங்கு ஊதப் போறான் போலருக்கு, இட்ஸ் ஓகேமா, நாம எப்படியும் பேப்பர் போடத்தான போறோம்னு நான் கெத்தாவே அவன்ட்ட போனேன்.
நான் அருகில் போனதும்
“என் பேர் என்ன?” என ஆரம்பித்தான் அவன்.
நான் லூசுன்னு சொன்னத அவன் இன்னும் மறக்கலைனு சொல்றானாம். நான் பாதி சமரசமும் மீதி சடசடபுமாக பார்த்துக் கொண்டு நின்றேன். பதில் ஏதும் சொல்லவில்லை.
அவன் என்னை திட்டுற அளவைப் பொறுத்து முழு சமரசமா இல்லை முழு சடசடப்பா என முடித்துக் கொள்ளலாம் என்பது என் ப்ளான்.
அவன் என்னை திட்டி இருந்தா கூட எவ்ளவோ நல்லாருந்திருக்கும். ஆனா அடுத்த கேள்வியா அவன்
“சாப்டியா?” என்றான்.
எனக்கு அப்பவே எதோ தப்பா போகப் போகுதுன்னு தெரிஞ்சிட்டு. உள்ளுக்குள் எனை மீறிய அந்த உதறல்!
அதற்குள் அவன் “கேன்டீண்ல போய் சாப்டுட்டு வா…” என்றபடி ஒரு 100 ரூபாய் நோட்டை எடுத்து என் முன் வைத்தே இருந்தான்.
நான் செத்தே போயிருந்தேன். என் கண் சிவந்து, அழக் கூடாது என்ற நினைவையும் தாண்டி கண்ணில் இருந்து கொட்டுகிறது நீர்.
“போடா லூசு…”
இப்பொழுது அழுத்தம் திருத்தமாய் அவனைப் பார்த்து சொல்லிவிட்டு என் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டேன்.
இன்னும் கூட என்னால் மூச்சுவிட முடியவில்லை. நான் வேலைய விடப் போறது இல்ல, எனக்கு வேலை வேணும் கொதிக்குது உள்ளே.
என்னால் அடுத்து அவன் முன்னிலையில் இயல்பாய் இருக்க முடியவில்லை. திரும்பவும் ட்ரெய்னிங். அவன் பேசுவதை கேட்டு அவன் சொல்வதை செய்து என எல்லாம் அச்சு பிசகாமல் நான் பின்பற்றினாலும் என் மனம் இறுகிப் போய் இருந்தது.
திடீரென என்னை சுட்டிக் காட்டி எழும்ப சொன்னவன்
“எல்லோரும் இன்ட்ரடக்க்ஷன் கொடுத்தாங்கல்ல, அதை கவனிச்சல்ல, இங்க இருக்க எல்லோரோட நேம், அவங்க தங்களைப் பத்தி என்ன சொன்னாங்க, இதையெல்லாம் சொல்லு..” என்றான்.
அதாவது 20 பேரைப் பத்தி!
இதுதான் எங்களுக்கு முதல் நாள், யாரையும் பெர்சனால தெரியாது.
‘எனக்கு இவன் என்னை படுத்தி எடுக்கனும்னு முடிவு செய்துட்டான்னு மட்டும் தான் புரிஞ்சுது’
வந்த கோபம், கொஞ்சமான அழுகை எல்லாத்தையும் அடக்கிக் கொண்டு அவன் கேட்ட கேள்விக்கு பதில்சொல்ல தொடங்கினேன்.
கடகடவென எல்லோரைப் பத்தியும் சொல்லி முடித்துவிட்டேன்.
ஒரு ஸ்பெல்பாண்ட் சைலன்ஸ்.
அடுத்து எல்லோரும் க்ளாப் பண்ணிட்டாங்க!
ஏன்னா நேம் மட்டுமில்ல, யார் யார் எங்க படிச்சாங்க, அவங்க வர்க் எக்ஸ்பீரியன்ஸ்னு எல்லாத்தையுமே பெர்ஃபெக்ட்டா சொல்லி இருக்கேன் போல!
அவனோ பதில் ஏதும் சொல்லாமல் செஷன் ஓவர்னு சொல்லிவிட்டு போய்விட்டான்.
அடுத்து வந்த நாட்களும் இப்படித்தான் கழிந்தன. எல்லோரிடமும் அவன் கலகல. கூடவே எதோ ஒரு வகை அக்கறை வேறு. இது எல்லாமுமாக சேர்ந்து மொத்த டீமும் அவனுக்கு ஃபேன் கிளப்பாகிட்டுது.
ஆனால் என்னிடம் மட்டும் எப்பவும் வித்யாசமாய்தான். என்னை சட்டை செய்யவே மாட்டான். நானும் அவன் முகம் கூட நேருக்கு நேராய் பார்க்க மாட்டேன்.
இதில் எல்லோருக்கும் வெறும் லாங்குவேஜ் ட்ரெய்னிங் என்றால் எனக்கு மட்டும் இன்னுமாய் வேலை.
கஸ்டமரோடு எம்ளாயி பேசிய வாய்ஸ் ரெக்கார்டை கவனிக்க சொல்வான்.
எல்லோருக்கும் டிஸ்கஷன் டைம், மூவி பார்க்ற டைம் என சில இலகுவான நேரங்கள் உண்டு.
அது எதுவும் எனக்கு கிடையாது, அப்பல்லாம் நான் இந்த கால்ஸை கவனிக்க போக வேண்டும்.
அவன் தன் கோபத்தை இப்படி காண்பிக்கிறான் என புரிந்தது எனக்கு.
அன்று எங்கள் டீம் சுரேஷுக்கு வீட்டிலிருந்து கால்.
அவனோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம், ஹாஸ்பிடலைஸ்டு. எங்களுக்கு வேலை நேரத்துல மொபைல் ஆஃப்ல இருக்கனும்னு ரூல்.
அதனால சுரேஷ் வீட்ல இருந்து ஆஃபீஸ் நம்பர் வழியா தகவல் சொல்லி இருந்தாங்க. அதுல எங்க எல்லோருக்கும் விஷயம் தெரிஞ்சிட்டு.
சுரேஷ்க்கு டென்ஷன்ல என்ன செய்யன்னு கூட தெரியலை.
ஆனால் இவர்தான் முதல்ல தன் முழு சம்பளத்தையும் வித்ட்ரா செய்து கொடுத்தார்.
சுரேஷே “சார் உங்களுக்கு இந்த மாசத்துக்கு என்ன செய்வீங்க”ன்னு பதறிட்டான்.
“இல்ல கொஞ்சம் சேவிங்க்ஸ் இருக்கு சமாளிச்சுப்பேன்” னு சொல்லிட்டு எங்க எல்லாரையும் நிமிர்ந்து பார்த்தார்.
அன்னைக்கு தான் சம்பள நாள், எல்லோரும் என்ன முடியுமோ அதை கொடுத்தாங்க.
எனக்கு ஃபர்ஸ்ட் சம்பளம், முதல் முதலா நான் அடுத்தவங்களுக்குன்னு அன்னைக்கு கொடுத்தேன்.
சாயந்தரம் நாங்க ஹாஸ்பிட்டல் போனோம்.
இவர் சுரேஷ் கூட காலைலயே போய்ட்டார். அங்க தான் இருந்தார். நாங்க போறப்ப சுரேஷ் அம்மா இவர்ட்ட ஏதோ பேசிட்டு இருந்தாங்க.
சுரேஷ் அப்பாக்கு ஆஞ்சியோ ப்ளாஸ்டி முடிஞ்சு, அதுலயே சரியாகிட்டாம். ஸ்டேபிளா இருக்காங்கன்னு சொன்னாங்க, என்னமோ எல்லாமே நிம்மதியா பட்டுது.
அன்னைக்கு எனக்கு அவர் சாப்ட பணம் கொடுத்தது கூட இப்படித்தான் இருக்குமோன்னு சின்னதே சின்னதா ஒரு தாட். ஆனாலும்…??!!!
அடுத்தும் அவன் என்னிடம் பாரா முகம்தான். எனக்கு ரெட்டை வேலைதான். நானும் முறைத்துக் கொண்டுதான் இருந்தேன்.
ஆனால் உள்ளுக்குள் அவனோடு எனது அறிமுகம் நல்லபடியாய் இருந்திருக்க கூடாதா என ஏங்கத் தொடங்கி இருந்தேன். அப்படின்னா இப்படி ப்ரச்சனையே வந்திருக்காதே!
என்னை காலை கவனிக்க சொல்லிவிட்டு சில நேரங்களில் அவன் எனக்கு அடுத்து ஒரு சேரில் அமர்ந்து தன் லாப்டாபை குடைந்து கொண்டிருப்பான்.
முன்பெல்லாம் மகா கோபமாய் வரும் எனக்கு இதில், ஆனால் இப்போதோ ஏனோ பாதுகாப்பாக உணர தொடங்கினேன்.
எந்த வகையிலேயோ அந்த தருணங்களை ஆசிக்க தொடங்கினேன்.
அன்று நான் கிளம்றப்பவே கொஞ்சம் லேட். அடுத்தும் ஸ்ட்ரெய்ட் பஸ் கிடைக்காம ரெண்டு பஸ் மாறி மாறி போய் அந்த பஸ் ஸ்டாப்ல இறங்கிறப்ப ரொம்பவே லேட். எனக்கு முதல் ஜாப் அது. அதுவும் முதல் நாள். நான் இப்ப படு டென்ஷனாகிட்டேன்.
எதிர்ல இருக்ற சிக்னலை தாண்டி இன்னும் 500 மீட்டர் வேற போகனும் ஆஃபீஸுக்கு. சுற்று முற்றும் கவனித்தபடி சிக்னலில் இறங்கி ஓடினேன்.
க்ரீச் க்ர்க் இஷ்க்…. சுத்தி கேட்ட சில சத்தங்கள், அதோடு இடுப்பில் சின்னதாய் விழுந்த இடியில் நான் மிரண்டு போய், கீழே விழும் போது படு பயங்கரமாய் பயந்து போய்!
பின்ன அடுத்த நொடி எத்தனை வண்டி என் மேல ஏறும்னு யாருக்கு தெரியும்….???
இதற்குள் அருகில் நின்ற அந்த வெள்ளைக் கார் கதவை திறந்து கொண்டு வந்தவன் என்னை கை பிடித்து தூக்கினான்.
“ஆர் யூ ஆல் ரைட்…?”
கையில் உண்டாகியிருந்த சிராய்ப்பை மட்டும் தடவிக் கொண்டு எழுந்துவிட்டேன்.
“ஒன்னுமில்ல சார்…தேங்க் யூ” சொல்லிவிட்டேனே தவிர பயத்தில் இன்னுமாய் நடுங்கிக் கொண்டிருக்கிறது உடல்.
ஆனால் அதுவரை அத்தனை அக்கறையாய் கேட்ட அவன் இப்போது “அறிவிருக்கா உனக்கு, கிறுக்கா நீ? இப்படிதான் ரோடை கிராஸ் பண்ணுவியா…? ” என ஏகத்துக்கு ஏற தொடங்கி இருந்தான்.
என்ட்ட எப்பயாவது வீட்ல யாரவது கோபப் பட்டது உண்டு. ஆனா இவ்ளவு கோபம் அதுவும் ஒரு ஆணோட கோபம் இப்போதைக்கு நான் பார்த்ததே இல்ல. அதுவும் முன்ன பின்ன தெரியாத இவனோட கோபம் என்னை ஏனோ எப்போதையும் விட அதிகமாகவே பாதித்தது.
“ஒரு செகண்ட்ல நீ இப்ப சட்னி ஆகி இருப்ப, அடுத்து நான் அலையனும் கோர்ட்டு கேஸுன்னு…” அவன் நிறுத்துவதாக இல்லை.
என்னதான் என் பக்கம்தான் தப்பு என்றாலும், என் நடுங்கும் உடலும் அவனுடைய கோபமும் என் சாப்பிடாத வயிறும், எல்லாமுமாக சேர்ந்து இப்போது நான் அவனை முறைத்தேன்.
“போடா லூசு” முகம் நோக்கி சொல்லிவிட்டு கட கடவென கிளம்பி வந்துவிட்டேன்.
“ஹேய்….” அவன் ஏதோ சொல்ல தொடங்கியதை நான் கண்டு கொள்ளவே இல்லை.
கால் சென்ட்டர் அது.
அங்க யூகேலயும் யூஎஸ்லயும் எப்ப ஹாலிடேவோ அப்ப மட்டும்தான் லீவு இருக்குமாம். ட்ரெய்னிங் ஹாலில் என் பக்கத்தில் இருந்த பெண் அதைத்தான் சொல்லிக்கொண்டு இருந்தாள். அவ பேரு சுஜிதா
எனக்கெல்லாம் பேசாமல் இருந்தால் தான் வாய் வலிக்கும். அப்படி பார்டி நான்.
ஆனாலும் முதல் வேலை, முதல் நாள் வேலைனதும் கொஞ்சம் கபகபன்னு டென்ஷனா இருந்தது.
அதுக்கு என்னை மாதிரியே இப்டி ஒரு வாய் பார்டி வாகா பக்கத்தில் உட்கார்ந்தது ரொம்பவே உதவியா இருந்துச்சு.
சுஜியும் நானும் நல்லா மொக்கை போட்டு நட்புல முன்னேறிகிட்டு இருந்தப்ப
“ஹாய் ஐ’ம்….” அப்டின்னு ஆரம்பிச்சு அவன் பேரை சொல்லிகிட்டே வந்தான்.
எங்களுக்கு லேங்குவேஜ் ஃபெசிலிடேடராம். அவன் குரலை கேட்கவும் தூக்கி வாரிப் போட்டது எனக்கு.
அவன்ன்ன்ன்ன்ன்…. அந்த கார்காரன்.
போச்சு, வேலை போச்சு, நான் மிரண்டு போய் முழிக்க,
ஆனால் அவனோ என்னை அடையாளம் கண்டு கொள்ளவே இல்லை.
நிஜமாவா?????
அடுத்து அவன் பேச பேச இது எல்லாத்தையும் மறந்துட்டு நான் பே….ன்னு பார்த்துட்டு இருந்தேன். ஏன்னா அவன் இங்க்லீஷ் அப்படி!
அடுத்து ஒரு குட்டி ப்ரேக். என்னையும் அவனையும் தவிர எல்லோரும் வெளிய போய்ட்டாங்க.
கிடச்ச டைம்ம நாம வேஸ்ட்டாக்க கூடாது, காலத்த ப்ரயோஜனப் படுத்தனும்னு, ப்ரேக்க சரியா யூஸ் செய்யனும்னு முடிவு செய்து,
சரி நாம இன்னையோட பேப்பரை போட்ற வேண்டியதான், அதுக்கு என்ன ப்ரொசீசர்னு யோசிச்சுகிட்டு இருந்தேன் நல்ல பிள்ளையா!
பின்னே ‘அவன மாதிரி நான் என்னைக்கு பேசவாம்? வெளிநாட்டுகாரங்களுக்கு நான் பேசுறது இங்க்லீஷ்னு எப்ப புரியவாம்…?’
வேலைய விடனும்னு நினச்சாலும் வீட்டை நினச்சு டென்ஷனாவும் இருக்கு.
எல்லோரும் கிண்டல் செய்வாங்கல்ல, போன அன்னைக்கே பயந்து ஓடி வந்துட்டன்னு. நம்மளால நாலு பேருக்கு நஷ்டமாக கூடாதுன்னு நினைக்கிற நல்ல மனச அவங்களுக்கு எப்படி புரியும்?
அப்படி ஆறு பக்கத்தையும் அலசி ஆராஞ்சு யோசிச்சுட்டு இருக்கப்ப, அவன் என்னைக் கூப்பிட்டான்.
சரி தனியா வச்சு சங்கு ஊதப் போறான் போலருக்கு, இட்ஸ் ஓகேமா, நாம எப்படியும் பேப்பர் போடத்தான போறோம்னு நான் கெத்தாவே அவன்ட்ட போனேன்.
நான் அருகில் போனதும்
“என் பேர் என்ன?” என ஆரம்பித்தான் அவன்.
நான் லூசுன்னு சொன்னத அவன் இன்னும் மறக்கலைனு சொல்றானாம். நான் பாதி சமரசமும் மீதி சடசடபுமாக பார்த்துக் கொண்டு நின்றேன். பதில் ஏதும் சொல்லவில்லை.
அவன் என்னை திட்டுற அளவைப் பொறுத்து முழு சமரசமா இல்லை முழு சடசடப்பா என முடித்துக் கொள்ளலாம் என்பது என் ப்ளான்.
அவன் என்னை திட்டி இருந்தா கூட எவ்ளவோ நல்லாருந்திருக்கும். ஆனா அடுத்த கேள்வியா அவன்
“சாப்டியா?” என்றான்.
எனக்கு அப்பவே எதோ தப்பா போகப் போகுதுன்னு தெரிஞ்சிட்டு. உள்ளுக்குள் எனை மீறிய அந்த உதறல்!
அதற்குள் அவன் “கேன்டீண்ல போய் சாப்டுட்டு வா…” என்றபடி ஒரு 100 ரூபாய் நோட்டை எடுத்து என் முன் வைத்தே இருந்தான்.
நான் செத்தே போயிருந்தேன். என் கண் சிவந்து, அழக் கூடாது என்ற நினைவையும் தாண்டி கண்ணில் இருந்து கொட்டுகிறது நீர்.
“போடா லூசு…”
இப்பொழுது அழுத்தம் திருத்தமாய் அவனைப் பார்த்து சொல்லிவிட்டு என் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டேன்.
இன்னும் கூட என்னால் மூச்சுவிட முடியவில்லை. நான் வேலைய விடப் போறது இல்ல, எனக்கு வேலை வேணும் கொதிக்குது உள்ளே.
என்னால் அடுத்து அவன் முன்னிலையில் இயல்பாய் இருக்க முடியவில்லை. திரும்பவும் ட்ரெய்னிங். அவன் பேசுவதை கேட்டு அவன் சொல்வதை செய்து என எல்லாம் அச்சு பிசகாமல் நான் பின்பற்றினாலும் என் மனம் இறுகிப் போய் இருந்தது.
திடீரென என்னை சுட்டிக் காட்டி எழும்ப சொன்னவன்
“எல்லோரும் இன்ட்ரடக்க்ஷன் கொடுத்தாங்கல்ல, அதை கவனிச்சல்ல, இங்க இருக்க எல்லோரோட நேம், அவங்க தங்களைப் பத்தி என்ன சொன்னாங்க, இதையெல்லாம் சொல்லு..” என்றான்.
அதாவது 20 பேரைப் பத்தி!
இதுதான் எங்களுக்கு முதல் நாள், யாரையும் பெர்சனால தெரியாது.
‘எனக்கு இவன் என்னை படுத்தி எடுக்கனும்னு முடிவு செய்துட்டான்னு மட்டும் தான் புரிஞ்சுது’
வந்த கோபம், கொஞ்சமான அழுகை எல்லாத்தையும் அடக்கிக் கொண்டு அவன் கேட்ட கேள்விக்கு பதில்சொல்ல தொடங்கினேன்.
கடகடவென எல்லோரைப் பத்தியும் சொல்லி முடித்துவிட்டேன்.
ஒரு ஸ்பெல்பாண்ட் சைலன்ஸ்.
அடுத்து எல்லோரும் க்ளாப் பண்ணிட்டாங்க!
ஏன்னா நேம் மட்டுமில்ல, யார் யார் எங்க படிச்சாங்க, அவங்க வர்க் எக்ஸ்பீரியன்ஸ்னு எல்லாத்தையுமே பெர்ஃபெக்ட்டா சொல்லி இருக்கேன் போல!
அவனோ பதில் ஏதும் சொல்லாமல் செஷன் ஓவர்னு சொல்லிவிட்டு போய்விட்டான்.
அடுத்து வந்த நாட்களும் இப்படித்தான் கழிந்தன. எல்லோரிடமும் அவன் கலகல. கூடவே எதோ ஒரு வகை அக்கறை வேறு. இது எல்லாமுமாக சேர்ந்து மொத்த டீமும் அவனுக்கு ஃபேன் கிளப்பாகிட்டுது.
ஆனால் என்னிடம் மட்டும் எப்பவும் வித்யாசமாய்தான். என்னை சட்டை செய்யவே மாட்டான். நானும் அவன் முகம் கூட நேருக்கு நேராய் பார்க்க மாட்டேன்.
இதில் எல்லோருக்கும் வெறும் லாங்குவேஜ் ட்ரெய்னிங் என்றால் எனக்கு மட்டும் இன்னுமாய் வேலை.
கஸ்டமரோடு எம்ளாயி பேசிய வாய்ஸ் ரெக்கார்டை கவனிக்க சொல்வான்.
எல்லோருக்கும் டிஸ்கஷன் டைம், மூவி பார்க்ற டைம் என சில இலகுவான நேரங்கள் உண்டு.
அது எதுவும் எனக்கு கிடையாது, அப்பல்லாம் நான் இந்த கால்ஸை கவனிக்க போக வேண்டும்.
அவன் தன் கோபத்தை இப்படி காண்பிக்கிறான் என புரிந்தது எனக்கு.
அன்று எங்கள் டீம் சுரேஷுக்கு வீட்டிலிருந்து கால்.
அவனோட அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம், ஹாஸ்பிடலைஸ்டு. எங்களுக்கு வேலை நேரத்துல மொபைல் ஆஃப்ல இருக்கனும்னு ரூல்.
அதனால சுரேஷ் வீட்ல இருந்து ஆஃபீஸ் நம்பர் வழியா தகவல் சொல்லி இருந்தாங்க. அதுல எங்க எல்லோருக்கும் விஷயம் தெரிஞ்சிட்டு.
சுரேஷ்க்கு டென்ஷன்ல என்ன செய்யன்னு கூட தெரியலை.
ஆனால் இவர்தான் முதல்ல தன் முழு சம்பளத்தையும் வித்ட்ரா செய்து கொடுத்தார்.
சுரேஷே “சார் உங்களுக்கு இந்த மாசத்துக்கு என்ன செய்வீங்க”ன்னு பதறிட்டான்.
“இல்ல கொஞ்சம் சேவிங்க்ஸ் இருக்கு சமாளிச்சுப்பேன்” னு சொல்லிட்டு எங்க எல்லாரையும் நிமிர்ந்து பார்த்தார்.
அன்னைக்கு தான் சம்பள நாள், எல்லோரும் என்ன முடியுமோ அதை கொடுத்தாங்க.
எனக்கு ஃபர்ஸ்ட் சம்பளம், முதல் முதலா நான் அடுத்தவங்களுக்குன்னு அன்னைக்கு கொடுத்தேன்.
சாயந்தரம் நாங்க ஹாஸ்பிட்டல் போனோம்.
இவர் சுரேஷ் கூட காலைலயே போய்ட்டார். அங்க தான் இருந்தார். நாங்க போறப்ப சுரேஷ் அம்மா இவர்ட்ட ஏதோ பேசிட்டு இருந்தாங்க.
சுரேஷ் அப்பாக்கு ஆஞ்சியோ ப்ளாஸ்டி முடிஞ்சு, அதுலயே சரியாகிட்டாம். ஸ்டேபிளா இருக்காங்கன்னு சொன்னாங்க, என்னமோ எல்லாமே நிம்மதியா பட்டுது.
அன்னைக்கு எனக்கு அவர் சாப்ட பணம் கொடுத்தது கூட இப்படித்தான் இருக்குமோன்னு சின்னதே சின்னதா ஒரு தாட். ஆனாலும்…??!!!
அடுத்தும் அவன் என்னிடம் பாரா முகம்தான். எனக்கு ரெட்டை வேலைதான். நானும் முறைத்துக் கொண்டுதான் இருந்தேன்.
ஆனால் உள்ளுக்குள் அவனோடு எனது அறிமுகம் நல்லபடியாய் இருந்திருக்க கூடாதா என ஏங்கத் தொடங்கி இருந்தேன். அப்படின்னா இப்படி ப்ரச்சனையே வந்திருக்காதே!
என்னை காலை கவனிக்க சொல்லிவிட்டு சில நேரங்களில் அவன் எனக்கு அடுத்து ஒரு சேரில் அமர்ந்து தன் லாப்டாபை குடைந்து கொண்டிருப்பான்.
முன்பெல்லாம் மகா கோபமாய் வரும் எனக்கு இதில், ஆனால் இப்போதோ ஏனோ பாதுகாப்பாக உணர தொடங்கினேன்.
எந்த வகையிலேயோ அந்த தருணங்களை ஆசிக்க தொடங்கினேன்.