நாம் வாழும் இவ்வுலகைக் காடாக உருவகப்படுத்தி அதில் சில மனிதர்களின் வாழ்வில் ஒரு காலக்கட்டத்தில் நிகழும் நிகழ்வுகளை சொல்லும் கதை என்பதால் பிடி காடு என்று தலைப்பிட்டேன்.
பிடி என்ற சொல்லுக்குப் பெண் யானை என்ற பொருளும் உண்டு. யானைக்கு நீர்நிலையை உணர்ந்து கொள்ளும் திறன் இருப்பதால் மற்ற மிருகங்களுக்கு வாழ்வாதாரத்தைச் சுட்டிக் காட்டி வழிநடத்திச் செல்கிறது. ஒரு பெண்ணின் வாழ்வை மையமாக வைத்து எழுதியதாலும் இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.