• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Rudragi - 21(3) V.Short Epi

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
ஹாய் டார்லிங்க்ஸ்....

உங்களோட எல்லா கருத்துகளுக்கும் நன்றிகள் பல...தனித்தனியா பதிலளிக்க நினைச்சேன் ஆனா என் மொபைல் இன்னைக்கு ரொம்ப சேட்டை பண்ணுது... சோ மன்னிச்சு..

@anitha1984 நன்றி சகோதரி உங்களது பதிவில் மெய் சிலிர்த்தது.... அரவாணிகளுக்கென்ற மையங்கள் விசாரித்த வரையில் எங்கும் இல்லை...சில நம்பத்தகுந்தவர்களிடம் மேலும் இதைப்பற்றி விசாரிக்க சொல்லியிருக்கிறேன்... இந்த கருவை எடுக்கும் சமயமும் இப்போது முடிக்கும் தருணத்திலும் பல விஷயங்களை நான் தொட்டு எழுதாமல் மறைத்திருக்கிறேன்... சமூகம் அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் போது சராசரி பெண்ணாய் என்னால் யாருடைய கேள்விக்கும் பதிலளிக்க வலு இல்லை என்பதே காரணம்...

அதே போல சில விஷயங்களை உடனே மக்களை ஏற்று கொள்ள வைப்பது சிரமமாக இருக்கிறது...

உங்களைப் போன்ற சிலர் இக்கதையின் மூலம் எங்களின் பார்வை மாறியிருக்கிறது எனச்சொல்லும் போது எதையோ எழுதிவிட்டேன் என்ற நிறைவு வந்தாலும் உண்மைகளை இன்னும் உடைத்திருக்கலாமோ என்ற எண்ணமும் வருகிறது...

நன்றி சகோதரி...

எழுத தொடங்கியதில் இருந்து இன்று வரை அதிகம் துணை நிற்கும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்...

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனது மற்றைய கதையை விட இந்த கதைக்கு வியூஸ் மிக குறைவு ஆனால் உங்களது உணர்வுகளை பார்க்கும் போது அந்த சின்ன விஷயம் கூட தூசி தான்...

நன்றிகள் பல சகோதரிகளே...

இறுதி அத்தியாயம் பதியும் போது உங்களுக்கு தனித்தனியாக பதிலிட்டு உரையாடுகிறேன்... இவ்வளவு நாட்கள் பதிலிடாமல் இருந்ததற்கு மன்னிக்கவும்...

அடுத்தப் பதிவை படித்துவிட்டு வாருங்கள்..நன்றி...
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
21(3)

தன்னையே பார்த்திருக்கும் மொத்தக் கூட்டத்தை தாண்டி ரவியையும் ருத்ராவையும் ஒன்றாய் பார்த்து கண்ணைச் சிமிட்டியவன், “எங்க ரெண்டு பேருக்கும் என்ன உறவுன்னு எங்களைச் சார்ந்தவங்களுக்குத் தெரிஞ்சா போதும்...அன்ட் ஒன் மோர்..நான் மேஜர் சோ எங்க இருக்கணும் என்னப் பண்ணனும்னு..?” பேச்சை அதோடு நிறுத்தியவன்..

“அதனால் ருத்ராங்கி மேல கொடுத்திருக்க பழி வீண்...இந்தக் கேஸை சம்பந்தப்பட்ட என்னோட அம்மா கோமு வாபஸ் வாங்கலைனா பரவாயில்லை… ஒரு பொய் கேஸ் கொடுத்து எனக்கு மனவுளைச்சல் கொடுத்ததுக்கு நான் அவங்க மேல மானநஷ்ட வழக்கு போடலாம் தானே..” என்றவன் முடித்து நிமிர்கையில் கோமு இருந்த இருக்கை காலியாக இருந்தது…

அரவாண் மகிழ் மையத்தின் கேஸுக்கும் சாட்சியம் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட, வழக்கில் சாதகமான தீர்ப்பு என்றாலும் போன கெளரவம் இனி கேள்வி குறிதானே..?

கோர்ட்டைவிட்டு வெளியே வந்தவர்களை மீடியாக்கள் பிடித்து கொள்ள, ராக்கி அக்கூட்டத்தினரைவிட்டு விலகி ஒருமரத்தின் மறைவில் நின்றிருந்த கோமுவிடம் சென்றான்..

“என்னைவிட உனக்கு அவன் தான் முக்கியமா போயிட்டான் இல்ல…?” ஆங்காரமாய் நிற்கும் அன்னையின் இத்தனை செயலுக்கும் தன்மீதுள்ள பாசமே காரணம் என்பதை உணர்ந்தவன்..

“அம்மா..ப்ளீஸ் ஒரு ஐந்து நிமிஷம் நான் சொல்றத கேளுங்க..?” என்றவனுக்கு தாயிடம் சொல்ல ஒரு சின்ன தயக்கம் இருந்த போதும் இனி மறைக்க ஒன்றுமில்லை என்பதால், கோமுவின் அமைதியை சாதகமாக எடுத்து கொண்டு,

“அம்மா, நான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னதுக்கு காரணம் சிவா’வோ அவன் குடும்பமோ இல்ல...நான் தான்...எனக்கு அப்..அப்பா ஆகுற தகுதி இல்லன்னு டாக்டர் சொல்லிட்டாங்க அதனால மட்டும் தான்..” என்றவன் முடிக்கும் முன்னே குறுக்கிட்டவர்..

“பொய் சொல்லாத ராக்கி...நீ பொய் சொல்லுற...அந்த பொட்டைப் பயலுக்காக நீ பொய் சொல்லுற..” என்றவரின் நிற்காமல் வழியும் கண்ணீரைக் கண்டவன்..

“ஆமா...அவன் பொட்டைத் தான்...அவனை அப்படி சொல்லி சொல்லியே இப்போ கடவுள் உங்க பையனையும் அப்படி பொட்டையா ஆக்கிட்டார்…” கோபத்தில் கர்ஜித்தவன்

“நான் சொல்றத நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம்..எனக்கு இந்தப் பிரச்சனை இருக்க போய் தான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்...நீங்க இத்தனை நாள் சர்வாவோட குடும்பத்துக்கு செஞ்சதுக்கு கடவுள் இந்த ஜென்மத்துலே நம்ம பாவக் கணக்கை தீர்த்துட்டார்...இதுக்கு அப்புறம் ஆச்சும் தயவு செஞ்சு அந்தக் குடும்பத்தை விட்டிருங்க…” என்றவனின் கண்கள் கலங்கியிருக்க..

குலுங்கி அழுது கொண்டிருந்த கோமு, “எத்தனையோ அநாதை குழந்தை இருக்கப்போ அதை தத்தெடுத்து வளர்க்கலாமே...நான் பார்க்கும் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ…” இன்னும் தான் சொல்லியதை நம்ப முடியாமல் பேசும் தாயை வெறித்தவன்..

“நல்லா இருக்க பொண்ணை கல்யாணம் பண்ணி அவளோட வாழ்க்கைய சீரழிக்கிறதுக்கு நான் ருத்ராவை கல்யாணம் பண்ணிக்கலாமே..” என்றவனின் பேச்சில் கோமு ஆவேசமாய் நிமிர, அவனுக்கு பின்னாடி வந்து கொண்டிருந்த ரவியும் அப்ஷராவும் அதிர்ந்து நின்றனர்…
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
ஆதிரா டியர்
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Nice epi sis athu thane vazhakil vetri petralum pona kowram ponathu thane rakkiyin ennathai ruthra ethu pala waiting sis
 




Saranya

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,524
Reaction score
1,341
Location
Coimbatore
Nice epi Aadhira.. Komu senjathukku kadavul intha jenmathilaye thandanai kuduthuttar aanalum rudhra va ethukka mudiyala.. Raki sonnathu thappu illa but athai rudhra ethukanume..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top