~7~
பெங்களூர்: சுறுசுறுவென எந்நேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் மாநகரம். ஹை-க்ளாஸ் சிட்டி என நம்மால் சொல்லப்படும் நகரம்... அங்கிருந்து ஒரு பேருந்தில் ஏறிய கண்ணா, தேவஹல்லி என்ற கோட்டையை நோக்கி தனது பயணத்தைத் தொடர்ந்தான். பெங்களூரு வாசிகளுக்கு இந்த இடத்தைப் பற்றி சொல்லத் தேவையில்லை.. மைசூரின் சிங்கம் திப்பு சுல்தான் பிறந்த இடம்.வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை பெங்களூர்-கர்நாடக ஹைவேயில், விமான நிலையம் அருகாமையில் அமைந்துள்ளது. அங்கே தான் இப்போது சர்வா அமர்ந்திருந்தது.
தூரத்தை வெறித்து கண்களில் வழியும் நீரைக் கூட துடைக்காமல் அமர்ந்திருந்தவனை நெருங்கிய கண்ணன்..அரவமின்றி அவனது அருகில் அமர்ந்து கொண்டான். பல நிமிடம் கடந்தும் நண்பன் ஏதும் பேசாமல் சர்வா அமர்ந்திருப்பதால்,
“மச்சி..என்ன டா ஆச்சு..?” என்றான் கேள்வியாய்.
நண்பனின் தோளில் சாய்ந்தவன் அனைத்தையும் முழு மூச்சாய் சொல்லி முடிக்க, கண்ணனுக்கே என்ன சொல்வது எனத் தெரியவில்லை..ஆனால் சிவா இதில் என்ன பாவம் செய்தான்? என்று நினைத்தவன் அதை அப்படியே சர்வாவிடமும் கேட்க, ஆமோதிப்பாய் தலையசைத்தானே தவிர வேறெதுவும் அவன் பேசவில்லை.
அவனே தெளிவாகட்டும் என நினைத்த கண்ணன், தனது தந்தையும் கிருஷ்ணாவின் நண்பருமான வாசனுக்கு அழைத்து நடந்தவற்றை உரைத்து அவனை என்ன செய்யலாம் என்று வினவினான்..வாசனிடம் இதுவரையில் கிருஷ்ணா எதையுமே மறைத்தில்லை அதே போல் தான் சர்வா மற்றும் கண்ணனின் நட்பும்..ஆரம்ப பள்ளியிலிருது இதோ கல்லூரி வரையிலும் ஒன்றாய் பயின்றனர்.கண்ணனுக்குச் சிவா என்றால் உயிர் தனக்கு தம்பியில்லை என்பதால் அவனை மிகுந்த அக்கறையோடு கவனித்து கொள்வான்.
கண்ணனுக்கு ஒரு தங்கை உண்டு ஐந்து வருட இடைவெளியில் பிறந்தவள் தான் சாரா.அவளுக்குக் கண்ணன் என்றால் உயிர் அதே சர்வா என்றால் கொஞ்சம் பயம் தான்.
சர்வா எப்போதும் பெண் பிள்ளைகளுடன் தள்ளியே நிற்பான்..உடன் பிறப்பும் ஆணாய் போனதால் தன்னைவிட ஐந்து வயது சிறியவளான சாராவிடம் பேசத் தான் தயங்குவானே தவிர சண்டையிட இல்லை. கண்ணனுக்குச் சின்ன சின்ன விசயங்களிலும் சர்வா மற்றும் தந்தையின் ஆலோசனை தேவை இன்றும் அதே தான் சர்வாவிற்காக தனது தந்தையை நாடினான்.
அவனது பேச்சில் இருந்தே சர்வாவின் மனநிலை கணித்துவிட்ட வாசன் தான் நிதானவாதி என்பதை நிரூபித்தார்.சர்வாவை அழைத்துக் கொண்டு சென்னையிலிருக்கும் தங்களது வீட்டுக்கு வருமாறு பணித்தவர், அடுத்த அழைப்பைக் கிருஷ்ணாவிற்கு விடுத்து அவரையும் வருமாறு சொன்னார்.மூவரும் இதோ வெவ்வேறு மனநிலையில் வாசனின் முன் அமர்ந்திருந்தனர் அவர்களுடன் மருத்துவர் வில்லியம் என்பவரும் அமர்ந்திருந்தார்.
அனைத்தையும் பார்த்தாலும் யாரிடமும் ஏதும் பேச முனையவில்லை ஒருவித இறுக்கத்துடன் தோட்டத்தில் அமர்ந்திருந்தான் சர்வா..
பள்ளி கிளம்பி வெளியே வந்த சாரா கூட சர்வாவின் கலங்கிய தோற்றத்தைக் கண்டு அவனருகே அடி மேல் அடி வைத்துச் செல்ல, அவளின் கால் கொலுசின் ஓசையில் நிமிர்ந்து பார்த்தவனை நோக்கி பேந்த பேந்த முழித்தவாறு சென்றாள்.
அவன் என்ன என்பது போல் அவளையே பார்த்து நிற்க அவனுக்கு வெகு அருகில் சென்றவள், தனது இரட்டை ஜடையை இருக் கைகளாலும் பிடித்தபடி, “உன்னை என் அப்பா தேடுறாரு நீ இங்க என்ன பண்ணுற..?” என்றாள் கேள்வியாய்.
மற்ற நேரமாய் இருந்திருந்தால் மரியாதையில்லாமல் அழைத்ததிற்கு அவளைத் தூக்கி வீட்டின் சுவரின் மீது அமர வைத்து அழ வைத்திருப்பான் ஆனால் இன்றோ அதைக் கவனிக்கும் நிலையில் அவன் இல்லை.
அவன் தன்னை இன்னும் தூக்கி மேலே வைக்கவில்லை என்பதைக் குறித்து கொண்டவள் துணிந்து அவனைப் பெயரிட்டு அழைத்து, “டேய் உன்கிட்ட தானே கேட்குறேன்..” என்றாள் சத்தமாய்.
இப்போது அவளது பேச்சை நன்றாகக் கவனித்தவனுக்கு சிவாவின் நினைப்பு பின்னே சென்றிருக்க, “என்னது டாவா..?” என்றான் உறுத்து விழித்து. அவன் வாயைத் திறக்கும் போதே இரண்டடி பின் சென்றிருந்தவள், அவன் பிடிக்கும் முன் விரைந்து ஓடி தந்தையின் பின் ஒளிந்து கொண்டாள்.
மகளைப் பிடித்து தன் பின்னே நிற்க வைத்த வாசன், “சர்வா..வா அங்க உனக்குத் தானே எல்லோரும் காத்திருக்காங்க..?” வாசனின் அதட்டலான கேள்வியை சட்டை செய்யாதவன்
“அங்கிள், ப்ளீஸ் லீவ் மீ அலோன்..ஐ கான்ட்..” என்றவனின் கண்களின் இரு துளி நீர்..அவனை தோளோடு அணைத்து கொண்டவர், “சர்வா, இன்றைக்குச் சிவா ஆப்பரேஷன்க்கு அப்ராட் போகனும் உனக்குத் தெரியுமா..? இப்போ நீ இப்படி இருந்தா அவங்களால எப்படி நிம்மதியா போக முடியும்,அதுமட்டுமில்லாம சிவா ரொம்ப சின்னவன் டா..ஓடைஞ்சிடுவான்..” அவரது பேச்சுக்கு ஒப்புதலாய் தலையசைத்து ஆழ முச்செடுத்தவன்,
“ஓகே அங்கிள்..லெட்ஸ் கோ..” வேகமாய் நுழைந்தவன், தனது தந்தையின் அருகே அமர்ந்து கொள்ள, அவனைப் பார்த்திருந்த டாக்டர் வில்லியமிற்கு லேசாய் உதட்டை வளைத்து புன்னகை செய்து, தனது விரல்களை ஆராயத் தொடங்கியவனுக்குப் புரிய வேண்டுமே என்ற தவிப்புடன் அவனையே பார்த்திருந்தார் கிருஷ்ணா.
தனது பின்னே ஒளிந்து நின்ற சாராவை கண்ணனிடம் சொல்லி பள்ளியில் விட்டு வரச் சொல்ல, அவனும் தங்கையின் பையை வாங்கி பைக்கை கிளப்பிய நொடி நேரத்தில் வேகமாய் சர்வா அமர்ந்திருந்த அறை வாயிலுக்குச் சென்று நிலையைப் பிடித்தவள், “டேய்..பை டா..” அவளின் கீச் குரலில் சர்வா நிமிர்ந்து பார்க்கும் முன் சிட்டாய் பறந்தவளை அடிக்க முடியாமல் இருக்கும் இடம் கருதி அமைதி காத்தான் சர்வா.
அவனைக் கோபப்படுத்திவிட்டு தனது பைக்கின் பின்னால் ஏறும் தனது தங்கையில் தலையில் குட்டியவன், “ஏன்டி அவன் கிட்ட எப்போ பாரு வம்புஇழுக்க..?” அண்ணனின் பேச்சை புறம் தள்ளிய சின்னவள்,
“எதுக்கு டா உன் பிரெண்ட் இப்படி இருக்கான்..?”
“எப்படி டி..?” சைட் மிரரில் தனது தங்கையின் முகம் பார்த்து கண்ணன் கேட்க,
“ஒன்னுமில்லை டா..” என்றுவிட்டாள் வேகமாக
அவனும் அதன் பின் அப்பேச்சை இழுக்கவில்லை, கண்ணனின் மனம் எங்கிலும் சர்வா இதை எப்படி எடுத்துக் கொள்வான் என்பதிலே இருந்தது.
சீக்கிரமாய் அவளைப் பள்ளியில் விட்டவன் வீட்டுக்கு விரைந்து விட்டான்.
இவன் வரும் வரையில் உணவு மேஜையில் காத்திருந்த மூவரின் முகத்திலிருந்தே இன்னும் பேசத் தொடங்கவில்லை என்பதைக் குறித்து கொண்டவன், அங்கிருந்த சமையல் காரரை உள் அனுப்பிவிட்டுத் தானே மூவருக்கும் பரிமாறி அவர்களுடன் அமர்ந்தான் கண்ணன்.
வாசனுக்கு மனைவி கிடையாது, சாரா பிறந்த சில மாதங்களில் விசக் காய்ச்சலின் தாக்கத்தால் இறந்துவிட்டார். சாராவும் நினைவு தெரிந்து ராதையிடமே ஒட்டுதலாய் இருந்தமையால் அவளுக்கும் அன்னையின் நினைவும் மறைவும் பெரிதாக வாட்டவில்லை. மாலை ஐந்து மணிக்குச் சென்னையிலிருந்து கிளம்பும் விமானத்தில் தாய்லாந்து செல்ல வேண்டும், இப்போதே மணி பத்து..நேரமாகுவதை மூளை அறிவுறுத்தினாலும் மனம் பெரிய மகனின் நிலையிலே நின்றது.
ஒரு கவளம் கூட உண்ணாமல் தன்னையே உறுத்து பார்க்கும் தந்தையை நினைக்கையில் அவனுக்குமே பாவமாய் தோன்ற, “அப்பா, நீங்க கிளம்புங்க உங்களுக்கு டைம் ஆகிட்டுல..” என்றான் வரவழைத்த சிரிப்புடன்.
“இல்ல தம்பி, இன்னும் டைம் இருக்கே..” தனது தந்தையின் தயக்கம் எதனால் எனப் புரிந்தவனுக்கு, யாரை நினைத்து இப்போது வருந்துவது என்ற குழப்பத்தில் அவனுக்கும் அடுத்த வாய் உணவு இறங்கவில்லை.
சாப்பிட்டுக் கொண்டிருந்த தட்டில் கையை கழுவி, தனது இருக்கைகளாலும் தலையைத் தாங்கியவனின் மனம் நிலையில்லாமல் தவித்தது. தம்பியாய் பிறந்தவன் இன்று ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் இந்த நிலையில் இருக்கிறான் என்பதை மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.இனி சுற்றத்தார் என்னவெல்லாம் பேசுவார்கள் என்ற பயம் அவனையும் விடவில்லை.நண்பர்கள் என எவரையும் காண மனம் கூசியது.
ஒருவேளை தனக்கு அப்பிரச்சனை இருக்குமோ என்ற எண்ணம் தோன்ற, அப்பயத்திலே இரு துளி நீர் அவனையும் மீறி கன்னங்களில் வழிந்தது. ஆனால் தனது சந்தேகத்தை எவ்வாறு தீர்த்து கொள்ள வேண்டும் எனவும் தெரியவில்லை. இப்போது அவனது மனம் செல்லும் திசை அவனுக்கே புரியாமல் இருக்க,தான் தன்னை நினைத்து வருந்துகிறோமா இல்லை சிவாவை நினைத்து கவலை கொள்கிறோமா..? என்ற குழப்பமே மிச்சமானது.
“அப்பா..எனக்கு இதை ஏத்துக்க கொஞ்ச டைம் வேணும் பா..இப்போ என்னால வீட்டுக்கு வர முடியாது..ப்ளீஸ் ஏதாச்சும் சொல்லி சமாளிங்க..நீங்க ஊருக்கு திரும்புறதுக்கு முன்னாடி என்னை எப்படியாச்சும் மாத்தி வைக்கிறேன்..இப்போ இப்படியே நான் சிவாவ பார்த்தா கண்டிப்பாஅவனை ஏதாச்சும் ஹர்ட் பண்ணிடுவேன் பா..” சர்வா சொல்வது வாசனுக்கு சரியென பட, கலக்கமாய் அமர்ந்திருந்த கிருஷ்ணாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
கிருஷ்ணா கிளம்பியதும் அமைதியாகத் தான் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தவன், சோர்வாகப் படுத்து கொண்டான். இவர்களின் மனநிலையைப் புரிந்த மருத்துவர் வில்லியம், தான் பிறகு வருவதாக சொல்லிச் சென்றுவிட்டார்.
ஒரு மணி வாக்கில் முகப்பேரில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பினுள் நுழைந்து வண்டியை நிறுத்திய கிருஷ்ணா, மேலே தனது அப்பார்மென்டினுள் நுழைய, வாயிலிலே இவரது வரவைத் தெரிந்து காத்திருந்தான்(ள்) சிவா.
லிப்டின் கதவைத் திறந்து வெளிவந்தவரை ஆர்வமாய் பார்த்த சிவா, அவரின் முதுகின் பின்னால் சர்வாவை தேடியவனை நெருங்கியவர், “என்ன டா இங்க நின்னுட்டு இருக்க,,?”என்றார் வரவழைத்துக் கொண்ட சிரிப்புடன்.
“அப்பா..சர் வரலையா..?” என்றவனிடம்
“இல்லைபா..அவனுக்குப் படிக்க நிறைய இருக்காம் சோ கண்ணா கூட கொஞ்சம் ஸ்டடி பண்ணிட்டு வாரேன்னு சொல்லிருக்கான் பா.. நாம இந்தியா வந்ததும் நம்மல வந்து பார்க்கிறதா சொல்லிருக்கான்.. நீங்க வாங்க நமக்கு ப்ளைட்டுக்கு டைம் ஆகிட்டுல..” காரில் வரும் போது மனதிற்குள் குறித்து வைத்த பொய்யை சரளமாய் பேசியவரிடம் சரியெனத் தலையசைத்த சிவா, தனது பேக்கில் அனைத்தையும் எடுத்து வைக்கச் சென்றுவிட்டான்.
சிவா அகன்றதும் சமையல் அறையிலிருந்து வெளி வந்த ராதைக்கு கணவனிடம் என்ன கேட்பது? எனப் புரியாமல் குழம்பி நின்றார். சிலையெனச் சமைந்து கண்களில் கண்ணீர் வழிய நிற்கும் மனைவியை நெருங்கியவர், நேற்றிலிருந்து இன்று சர்வா பேசியது வரை சின்ன குரலில் சொல்லியவர், “சீக்கிரமே நம்ம பையன் புரிஞ்சிப்பான் டி..” என்றார் நம்பிக்கையாய்.
எவ்வளவு தான் கணவன் சொன்னாலும் தனது இரு மகன் இரு வேறு திசையில் நிற்பது ஒரு தாயாய் அவரின் மனதை வருத்த, ஒரு மூச்சு அழுது தீர்த்தவளை, மார்பில் சாய்த்து ஆறுதல் படுத்தி கொண்டிருந்தார் கிருஷ்ணா.
தனது பையில் அனைத்தையும் எடுத்து வைத்தவன், அறையை விட்டு வெளியே வரக் கிருஷ்ணாவின் பேச்சும் ராதையின் அழுகையும் அவனது கவனத்தில் எட்டியதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லையே. தனது பிறப்பால் இவர்களுக்கு இவ்வளவு அசிங்கமா..? என்று நினைத்தவனுக்கு இப்போது அக்கம்பக்கத்தினரின் கேலிகளும் தனது அன்னையின் அழுகையும் எதனால் என்று ஸ்திரமாய் புரிந்தது.
உயிரை மாய்த்துக் கொள்ள கூடப் பயம் கொள்ளும் வயதிலிருப்பவனுக்குச் சாக வேண்டும் என்று தோன்றினாலும் அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறியாத நிலை. உடல் ஊனமுற்றொரை பாவமாய் பார்க்கும் இச்சமூகத்தில் என்று உணர்வுகளால் ஊனமுற்றொரை அங்கீகரிக்க போகிறதோ..?
மூன்று மணிக்கெல்லாம் விமான நிலையத்தை அடைந்தவர்கள் உள்ளே செல்ல முனைய, தங்களுடன் வராமல் தூரத்தில் எதையோ உற்றுப் பார்த்து கொண்டிருந்த சிவாவின் தோளைத் தட்டியவர், “என்ன டா பார்க்கிற..டைம் ஆகிட்டு..” என்று கூறிக் கொண்டே அவனது பார்வைச் சென்ற திசையில் பார்த்தவரும் கண்களில் கண்ணீர் வடிய நின்றார்.
ருத்ராங்கி வருவாள்..