இரவு விளக்கின் ஒளியில் ,மலர்களின் வாசத்தில் நிரம்பி இருந்த அறையின் அலங்காரங்களை ரசித்தவாறு நின்றான் .மனதிற்கு இதம் தரும் பூக்களின் மணம் ,அறையின் அலங்காரம் ,இருந்தும் இல்லாத இரவு விளக்கின் ஒளி ,அங்கு காத்து இருந்த அவன் காதல் மனைவி -ஒரு வித படபடப்பு ,அடுத்து நிகழ போவதற்கான இனிய எதிர்பார்ப்பு மனதிற்குள் ஆயிரம் மெட்ரோ ரயில்கள் ஓட ஆரம்பித்தது அவனுக்கு .
(உங்க மைண்ட் வாய்ஸ் எந்த சடங்கு என்று சொல்லுதோ ,இது அதே தான் )
அன்று காலை தான் திருமணம் முடித்து இருந்த சச்தீப் "பேக் பாரா /Pag Phera" திருமண இரவின் சடங்கிற்காக மனைவி பாயல் உடன் அவள் வீட்டிற்கு வந்து இருந்தான் .
"டார்லிங் !...ஒட்டி(மனைவி) .....மேரா பியாரி ....கொஞ்சம் உன் கர்வாலா (கணவன் )மேல் கருணை காட்டுங்கள் மகாராணி ...உன் சச்தீப் பாவம் இல்லையா?"என்றவன் கேள்விக்கு,காதலுக்கு ,தேடலுக்கு பாயலிடம் பிரதிபலிப்பு சுத்தமாய் இல்லை .
சற்று நேரத்தில் பொறுமை இழந்தவன் ,அவளை விட்டு விலகி எழுந்து நின்று "என்ன தான் உனக்கு பிரச்சனை பாயல் ?.இந்த திருமணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா என்ன ?வேறு யாரைவது லவ் செய்துட்டு ,உன் ப்ரெண்ட்ஸ் வற்புறுத்தலின் பேரில் என்னை மணந்து கொண்டாயா?எதுவாக இருந்தாலும் பேசிடு பாயல் .நானும் இந்த ஒரு மாதமாய் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் .உன்னிடம் திருமணத்திற்கான பூரிப்பே இல்லை .என்னை அவொய்ட் செய்வது போலவே நடந்துட்டு இருந்தே "நேத்து உனக்கு வந்தது டையர்டா இல்லை விலகளுக்கான நாடகமா ? ?"என்றான் பொறுமையை இழுத்து பிடித்து .
(ஒருவேளை இந்த பாயல் ,நம்ம அர்ஜுனை லவ் செய்துச்சோ ?கொளுத்தி போடுவோம் )
பயணம் தொடரும் ...
(உங்க மைண்ட் வாய்ஸ் எந்த சடங்கு என்று சொல்லுதோ ,இது அதே தான் )
அன்று காலை தான் திருமணம் முடித்து இருந்த சச்தீப் "பேக் பாரா /Pag Phera" திருமண இரவின் சடங்கிற்காக மனைவி பாயல் உடன் அவள் வீட்டிற்கு வந்து இருந்தான் .
"டார்லிங் !...ஒட்டி(மனைவி) .....மேரா பியாரி ....கொஞ்சம் உன் கர்வாலா (கணவன் )மேல் கருணை காட்டுங்கள் மகாராணி ...உன் சச்தீப் பாவம் இல்லையா?"என்றவன் கேள்விக்கு,காதலுக்கு ,தேடலுக்கு பாயலிடம் பிரதிபலிப்பு சுத்தமாய் இல்லை .
சற்று நேரத்தில் பொறுமை இழந்தவன் ,அவளை விட்டு விலகி எழுந்து நின்று "என்ன தான் உனக்கு பிரச்சனை பாயல் ?.இந்த திருமணத்தில் உனக்கு விருப்பம் இல்லையா என்ன ?வேறு யாரைவது லவ் செய்துட்டு ,உன் ப்ரெண்ட்ஸ் வற்புறுத்தலின் பேரில் என்னை மணந்து கொண்டாயா?எதுவாக இருந்தாலும் பேசிடு பாயல் .நானும் இந்த ஒரு மாதமாய் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் .உன்னிடம் திருமணத்திற்கான பூரிப்பே இல்லை .என்னை அவொய்ட் செய்வது போலவே நடந்துட்டு இருந்தே "நேத்து உனக்கு வந்தது டையர்டா இல்லை விலகளுக்கான நாடகமா ? ?"என்றான் பொறுமையை இழுத்து பிடித்து .
(ஒருவேளை இந்த பாயல் ,நம்ம அர்ஜுனை லவ் செய்துச்சோ ?கொளுத்தி போடுவோம் )
பயணம் தொடரும் ...
Last edited: