• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thaalikayiru -17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

paulrasaiya

நாட்டாமை
Joined
Jun 5, 2018
Messages
36
Reaction score
206
Location
Irenepuram
அத்தியாயம் 17

இரவு மணி பனிரெண்டு ஆகியிருந்தது. ஊர் உறங்கிக் கிடந்தது. எல்லா வீடுகளும் நித்திரை கொண்டிருந்தன. நாய்களின் குரைப்பின்றி வீடுகள் அமைதியாக இருந்தது.

சூர்யாவின் காரை வாங்கி வந்திருந்தான் பிரபாகரன். வண்டியை முளங்குழி திருப்பு முன்பு நிறுத்தி விட்டு வசந்தியின் எண்ணுக்கு டயல் செய்தான்,

அவனது அழைப்புக்கு காத்திருந்த வசந்தி இரண்டாவது ஒலிச்சத்தம் அடங்குவதற்குள் எடுத்தாள்.

”எல்லாம் ஓகே தானே, பிரச்சனை எதுவும் இல்லையே!”

”இல்ல...!”

”கார முளங்குழியில நிப்பாட்டி இருக்கேன், நீ ரெடியாகி வாசல்படிக்கு வந்ததும் எனக்கு மிஸ்டுகால் குடு, நான் உன் வீட்டு முன்னால கொஞ்சம் தூரம் போய் வண்டிய திருப்பிகிட்டு வந்து நிப்பாட்டுவேன், வண்டி வர்ற சத்தம் கேட்டதும் நீ வீட்ட விட்டு இறங்கி வண்டியில வந்து ஏறுற...எல்லாமே மின்னல் வேகத்துல நடக்கணும் ஓகே!’

”ஓகே!” அவளது குரலில் மகிழ்ச்சியின் ஆரவாரம் மிதந்தது.

”வசந்தி ஏற்கனவே துணி மணிகள் எடுத்து வைத்து, சேலை மாற்றி. முகம் கழுவி, தலை வாரிக்கட்டி அதில் மல்லிகைப் பூக்களை நிறைய தொங்க விட்டிருந்தாள்.

கேடி ஜோசப் அவள் கழுத்தில் தாலி கட்டிய பிறகு அவள் சிவந்த முகத்து நெற்றியில் பொட்டு வைக்காமல் தலையில் பூ வைக்காமல், கைகளில் வளையல் அணியாமல் இருந்தாள்,

முகம் கலை இழந்து இருந்தது. இன்று முதல் தடவையாக மாலையில் வந்த பூக்காரியிடம் பூ வாங்கி இருந்தாள்..

தலை நிறைய பூக்கள் வைத்து பூக்கள் இருந்த பின்பக்க முடிகளை அவள் மார்புகளில் படர்த்தியபோது கண்ணாடியில் அவள் முகம் பார்க்க அவளுக்கே வெட்கம் வந்தது.

அவள் திருமணம் ஆகி வருவதற்கு முன்பு என்றோ வாங்கி மீதமாகிப் போன ஸ்டிக்கர் பொட்டு அவள் பேக்கின் சைடு அறையில் இருந்தது நினைவுக்கு வந்தது.

அதை எடுக்க பேகை திறந்த போது ஒரு செட் பச்சை நிற பேன்சி வளையல்கள் அப்படியே இருந்தன. வசந்தி பொட்டு எடுத்து வந்து நெற்றியில் வைத்தாள். வளையல்கள் எடுத்து கைகளில் அணிந்து கொண்டாள்.

அவள் இதழ்கள் ஓரம் புன்னகை படர்ந்திருந்தது. இந்தக் கோலத்தில் பிரபாகரன் தன்னைப் பார்த்தால் அவளைப் பார்த்தபடி தாறுமாறாய் வண்டி ஓட்டப்போறான். உள்மனது சொன்ன போது புன்னகை அவள் இதழ்களிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

இறுதியாக பாத்றூம் சென்று விட்டு வந்தாள் முகத்தை கண்ணாடியில் ஒரு முறைகூட பார்த்தாள். அவள் முகம் பிரகாசமாய் தெரிந்தது.

எடுத்துச் செல்ல வேண்டிய பேகை தூக்கி வந்து வாசல் அருகே வைத்தாள். பிரபாகரனுக்கு மிஸ்டுகால் கொடுக்க அலைபேசியை உயிர்பித்தாள்.

சட்டென்று ஒரு சத்தம் அவள் காதில் விழுந்தது. டுபுக் டுபுக் என்ற புல்லட் சத்தம் பெரிதாக வளர்ந்து கொண்டே போனது.

கேடி ஜோசப் புல்லட்டில் வந்து வீட்டின் வாசலருகே நிறுத்தி ஸ்டேண்டு போட்டு வாசல் படிக்கு வந்த போது வாசல் திறந்து கிடக்க வசந்தி சிலையாய் நின்றிருந்தாள்.

அந்த இரவில் அவள் அணிந்த மல்லிகைப்பூக்களின் மணம் அவன் நாசியைத் துளைத்தெடுத்தது. வாசல்படியில் வைத்த காலை எடுக்காமல் அவளை பார்த்தபடியே நின்றான்.

அவளது அருகே பச்சை நிற பேக் ஒன்று தலை நீட்டியபடி இருந்தது. இரவு நேரத்தில் நைட்டி அணிந்து பழக்கப்பட்ட வசந்தி இன்று புடவை அணிந்து கைகளில் வளையல் அணிந்து, தலை நிறைய பூக்கள் வைத்து நெற்றியில் பொட்டு வைத்து நின்ற கோலம் கண்டு ஒரு கணம் அதிர்ந்தான்.

வாசல்படி கடந்து உள்ளே வந்து அறையில் வெளிச்சம் சேர்த்து அவளைப் பார்த்தபோது வசந்தி நின்ற நிலையில் தரையில் குத்த வைத்து அமர்ந்து ஓ வென அழ ஆரம்பித்தாள்.

”போச்சு...எல்லாமே போச்சு, நான் ஒரு ராசியில்லாதவ, மனசுக்கு புடிக்காத உன்கூட குடும்பம் நடத்துறத விட மனசுக்குப் பிடிச்ச பிரபாகரன் கூட குடும்பம் நடத்தலாமுன்னு நினச்சி உனக்கு தெரியாம இந்த ஊர விட்டே ஓடிப் போலாமுன்னு நினைச்சேன், எல்லாமே வீணாப் போச்சு, என் வாழ்க்கையும் பாழாப்போச்சு!” அந்த இரவு நேரத்திலும் தலை சாய்த்து குமுறிக் குமுறி அழுதாள் வசந்தி.

அவள் நின்ற கோலம் பார்த்ததுமே புரிந்தது கேடி ஜோசப்பிற்கு. அவள் ஊரை விட்டு போக தயாராக நிற்கிறாள் என்று. நிலமையைப் புரிந்து கொண்டு அவள் அருகில் வந்து குனிந்து அழுது கொண்டிருந்த அவள் கைகளைப் பிடித்து தூக்கி நிறுத்தினான்..

”இப்ப எதுவுமே வீணாகிப் போகல...உன் வாழ்க்கையும் பாழாப் போகாது, நீ ஆசைப்பட்டது மாதிரியே அந்த பிரபாகரன் கூட போய் சந்தோஷமா குடும்பம் நடத்து..!” அருகிலிருந்த பேகை எடுத்து அவள் கைகளில் திணித்தான்.

வசந்தி அவன் முகத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடியே நின்றாள். அவள் காண்பது கனவா அல்லது நிஜமா என்று பிரம்மை பிடித்தபடி நின்றாள்.

மிரட்டும் முகம், அதட்டும் பார்வை, கடவா மீசை, பார்க்கவே பயங்கர தோற்றத்துடன் ரவுடியாக இருக்கும் அவன் தனது கஷ்டடியில் இருக்கும் தாலி கட்டிய மனைவி தன்னை விட்டு ரகசியமாக தப்பித்து ஓடுகிறாள் அவளை கையும் களவுமாக பிடித்தான் என்றால் அவள் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்து அவளை மயக்கமடைய செய்திருக்க வேண்டும்.

கேடி ஜோசப் அப்படிச் செய்யாமல் நீ ஆசைப்பட்டவன்கூடவே ஓடிப்போய் சந்தோஷமா குடும்பம் நடத்து என்று சொல்கிறானே. இவனை புரிஞ்சிக்கவே முடியல என்று அந்த பிரம்மையிலும் அவனை நினைத்தபடி நின்றாள்.

”வசந்தி என்ன அப்பிடிப் பார்க்கிற..? என்னடா இவன் புறப்படுற நேரம் பார்த்து சிவ பூஜையில கரடி நுழையிறது மாதிரி புகுந்து காரியத்த கெடுத்துட்டானேன்னு பார்க்கிறியா..? இண்ணைக்கு காலையில பிரபாகரன் இந்த வீட்டுக்கு வந்தது, அவன்கூட நீ கோயம்பத்தூருக்கு ஓடிப் போக நினைச்சது எல்லாமே பக்கத்து வீட்டு அபிலாஷ்சோட அப்பா எனக்கு போன் பண்ணிச் சொல்லீட்டார்!” அவன் நிதானமாய் சொன்ன போது அதிர்ந்து அவன் பேசுவதையே கேட்டபடி நின்றாள்,

””எந்த புருஷனுமே தாலி கட்டின பொண்டாட்டி இன்னொரு ஆம்பிள கூட ஓடிப் போறத விரும்பமாட்டான். ஆனா இந்த கேடி ஜோசப் அப்பிடி இல்ல, நீ என்கிட்டயிருந்து ஓடிப்போறதுக்காகவே உன் கழுத்துல நான் தாலி கட்டினேன்!” அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்கக் கேட்க அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.

”பிரபாகரன் உன்ன காதலிச்சது, அவனோட அப்பா தீப்பொறி திவாகருக்கு புடிக்காம என்னக் கூப்பிட்டு உன்ன தீர்த்துக் கட்டச் சொன்னார். நானும் உன்ன கொல பண்ணியிடலாம்ங்கிற முடிவில தான் இருந்தேன். இந்த விஷயம் தெரிஞ்ச பிரபாகரன் என் கால்ல விழாத குறையா என் வசந்திய எதுவும் பண்ணியிடாதன்னு கெஞ்சினான், உன்ன நான் எதுவுமே பண்ணாம இருந்தா அந்த தீப்பொறி திவாகர் சும்மா இருக்க மாட்டார், என்ன மாதிரி வேற யாரையாவது செட் பண்ணி உன்ன கொலை பண்ணியிருப்பார், நீ உயிரோட வாழணுமுன்னா உனக்கு கண்டிப்பா ஒரு பாதுகாப்பு தேவையின்னு தோணிச்சு, உனக்கு எப்பிடி பாதுகாப்பு தரணுமுன்னு எவ்வளவு யோசிச்சும் எந்த முடிவும் வரல, உன்ன பாதுகாக்க எனக்குத் தெரிஞ்ச ஒரே வழி உன் கழுத்துல தாலி கட்டுறது தான், அதனால தான் உன் கழுத்துல தாலியக் கட்டிட்டேன்!” கேடி ஜோசப் சொன்னபோது அதிர்ச்சியில் மீளாமல் அப்படியே சிலையாகி நின்றாள். வார்த்தைகள் தொண்டைக் குழியிலிருந்து தோண்டி எடுக்க வேண்டியதாக இருந்தது.

” நீயும் பிரபாகரனும் மறுபடியும் சந்திப்பீங்க, வாழ்க்கையில ஒண்ணு சேர்வீங்கன்னு எதிர் பார்த்து கிட்டே இருந்தேன், நான் நினைச்சது மாதிரியே நடந்திடிச்சி, நீ சந்தோஷமா போய் பிரபாகரன் கூட குடும்பம் நடத்து, நான் லைட்ட ஆப் பண்றேன் நீ கிளம்பிப் போயிடு.. ம்..!” கேடி ஜோசப் லைட்டை ஆப் செய்தான்.

வசந்தி விரல் நடுங்கியபடி அவளது அலைபேசியில் கடைசியாக வந்த காலை மறுபடியும் டச் செய்ய கால் போகவும் கட் செய்தாள், அந்த இருட்டில் அவனைப் பார்த்தபடியே நின்றாள். சற்று நேரத்திற்கெல்லாம் கார் ஒன்று வந்து வேகமாய் கடந்து போனது.

”போறேன்!” என்று சொல்லத் தோன்றியது ஆனால் வார்த்தை உதடுகளை அனக்கியதோடு நின்று கொண்டது வெளியே வரவே இல்லை.

கார் திரும்பி வரும் சத்தம் கேட்க பேகைத் தூக்கியபடி காருக்கு நடந்தாள், அவள் பார்வை திரும்பிக் கொண்டே இருந்தன. கார் வந்து நின்றது வசந்தி பின்பக்க டோரைத் திறந்து உள்ளே விழுந்தாள்.

பிரபாகரன் காரை வேகமாய் ஓட்ட ஆரம்பித்தான். வழியில் அவன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டினான். அவனது வார்த்தைகள் எதுவும் அவள் காதுகளில் விழவில்லை. வசந்தியின் மனது கேடி ஜோசப்பின் வீட்டிலிருந்து புறப்படவில்லை. அவன் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளில் நிலைத்திருந்தது.

”என்ன வசந்தி..எதுவும் பேசாம இருக்கிற..!” வண்டிய ஓட்டியபடியே கேட்டான் பிரபாகரன்.

”தலை வலிக்குது...நீ பேசாம வண்டிய ஓட்டு!” அவள் பின் சீட்டில் கண் அயர்ந்தாள். கார் மிதமான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது,
 




N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
அத்தியாயம் 17

இரவு மணி பனிரெண்டு ஆகியிருந்தது. ஊர் உறங்கிக் கிடந்தது. எல்லா வீடுகளும் நித்திரை கொண்டிருந்தன. நாய்களின் குரைப்பின்றி வீடுகள் அமைதியாக இருந்தது.

சூர்யாவின் காரை வாங்கி வந்திருந்தான் பிரபாகரன். வண்டியை முளங்குழி திருப்பு முன்பு நிறுத்தி விட்டு வசந்தியின் எண்ணுக்கு டயல் செய்தான்,

அவனது அழைப்புக்கு காத்திருந்த வசந்தி இரண்டாவது ஒலிச்சத்தம் அடங்குவதற்குள் எடுத்தாள்.

”எல்லாம் ஓகே தானே, பிரச்சனை எதுவும் இல்லையே!”

”இல்ல...!”

”கார முளங்குழியில நிப்பாட்டி இருக்கேன், நீ ரெடியாகி வாசல்படிக்கு வந்ததும் எனக்கு மிஸ்டுகால் குடு, நான் உன் வீட்டு முன்னால கொஞ்சம் தூரம் போய் வண்டிய திருப்பிகிட்டு வந்து நிப்பாட்டுவேன், வண்டி வர்ற சத்தம் கேட்டதும் நீ வீட்ட விட்டு இறங்கி வண்டியில வந்து ஏறுற...எல்லாமே மின்னல் வேகத்துல நடக்கணும் ஓகே!’

”ஓகே!” அவளது குரலில் மகிழ்ச்சியின் ஆரவாரம் மிதந்தது.

”வசந்தி ஏற்கனவே துணி மணிகள் எடுத்து வைத்து, சேலை மாற்றி. முகம் கழுவி, தலை வாரிக்கட்டி அதில் மல்லிகைப் பூக்களை நிறைய தொங்க விட்டிருந்தாள்.

கேடி ஜோசப் அவள் கழுத்தில் தாலி கட்டிய பிறகு அவள் சிவந்த முகத்து நெற்றியில் பொட்டு வைக்காமல் தலையில் பூ வைக்காமல், கைகளில் வளையல் அணியாமல் இருந்தாள்,

முகம் கலை இழந்து இருந்தது. இன்று முதல் தடவையாக மாலையில் வந்த பூக்காரியிடம் பூ வாங்கி இருந்தாள்..

தலை நிறைய பூக்கள் வைத்து பூக்கள் இருந்த பின்பக்க முடிகளை அவள் மார்புகளில் படர்த்தியபோது கண்ணாடியில் அவள் முகம் பார்க்க அவளுக்கே வெட்கம் வந்தது.

அவள் திருமணம் ஆகி வருவதற்கு முன்பு என்றோ வாங்கி மீதமாகிப் போன ஸ்டிக்கர் பொட்டு அவள் பேக்கின் சைடு அறையில் இருந்தது நினைவுக்கு வந்தது.

அதை எடுக்க பேகை திறந்த போது ஒரு செட் பச்சை நிற பேன்சி வளையல்கள் அப்படியே இருந்தன. வசந்தி பொட்டு எடுத்து வந்து நெற்றியில் வைத்தாள். வளையல்கள் எடுத்து கைகளில் அணிந்து கொண்டாள்.

அவள் இதழ்கள் ஓரம் புன்னகை படர்ந்திருந்தது. இந்தக் கோலத்தில் பிரபாகரன் தன்னைப் பார்த்தால் அவளைப் பார்த்தபடி தாறுமாறாய் வண்டி ஓட்டப்போறான். உள்மனது சொன்ன போது புன்னகை அவள் இதழ்களிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

இறுதியாக பாத்றூம் சென்று விட்டு வந்தாள் முகத்தை கண்ணாடியில் ஒரு முறைகூட பார்த்தாள். அவள் முகம் பிரகாசமாய் தெரிந்தது.

எடுத்துச் செல்ல வேண்டிய பேகை தூக்கி வந்து வாசல் அருகே வைத்தாள். பிரபாகரனுக்கு மிஸ்டுகால் கொடுக்க அலைபேசியை உயிர்பித்தாள்.

சட்டென்று ஒரு சத்தம் அவள் காதில் விழுந்தது. டுபுக் டுபுக் என்ற புல்லட் சத்தம் பெரிதாக வளர்ந்து கொண்டே போனது.

கேடி ஜோசப் புல்லட்டில் வந்து வீட்டின் வாசலருகே நிறுத்தி ஸ்டேண்டு போட்டு வாசல் படிக்கு வந்த போது வாசல் திறந்து கிடக்க வசந்தி சிலையாய் நின்றிருந்தாள்.

அந்த இரவில் அவள் அணிந்த மல்லிகைப்பூக்களின் மணம் அவன் நாசியைத் துளைத்தெடுத்தது. வாசல்படியில் வைத்த காலை எடுக்காமல் அவளை பார்த்தபடியே நின்றான்.

அவளது அருகே பச்சை நிற பேக் ஒன்று தலை நீட்டியபடி இருந்தது. இரவு நேரத்தில் நைட்டி அணிந்து பழக்கப்பட்ட வசந்தி இன்று புடவை அணிந்து கைகளில் வளையல் அணிந்து, தலை நிறைய பூக்கள் வைத்து நெற்றியில் பொட்டு வைத்து நின்ற கோலம் கண்டு ஒரு கணம் அதிர்ந்தான்.

வாசல்படி கடந்து உள்ளே வந்து அறையில் வெளிச்சம் சேர்த்து அவளைப் பார்த்தபோது வசந்தி நின்ற நிலையில் தரையில் குத்த வைத்து அமர்ந்து ஓ வென அழ ஆரம்பித்தாள்.

”போச்சு...எல்லாமே போச்சு, நான் ஒரு ராசியில்லாதவ, மனசுக்கு புடிக்காத உன்கூட குடும்பம் நடத்துறத விட மனசுக்குப் பிடிச்ச பிரபாகரன் கூட குடும்பம் நடத்தலாமுன்னு நினச்சி உனக்கு தெரியாம இந்த ஊர விட்டே ஓடிப் போலாமுன்னு நினைச்சேன், எல்லாமே வீணாப் போச்சு, என் வாழ்க்கையும் பாழாப்போச்சு!” அந்த இரவு நேரத்திலும் தலை சாய்த்து குமுறிக் குமுறி அழுதாள் வசந்தி.

அவள் நின்ற கோலம் பார்த்ததுமே புரிந்தது கேடி ஜோசப்பிற்கு. அவள் ஊரை விட்டு போக தயாராக நிற்கிறாள் என்று. நிலமையைப் புரிந்து கொண்டு அவள் அருகில் வந்து குனிந்து அழுது கொண்டிருந்த அவள் கைகளைப் பிடித்து தூக்கி நிறுத்தினான்..

”இப்ப எதுவுமே வீணாகிப் போகல...உன் வாழ்க்கையும் பாழாப் போகாது, நீ ஆசைப்பட்டது மாதிரியே அந்த பிரபாகரன் கூட போய் சந்தோஷமா குடும்பம் நடத்து..!” அருகிலிருந்த பேகை எடுத்து அவள் கைகளில் திணித்தான்.

வசந்தி அவன் முகத்தை வைத்த கண் எடுக்காமல் பார்த்தபடியே நின்றாள். அவள் காண்பது கனவா அல்லது நிஜமா என்று பிரம்மை பிடித்தபடி நின்றாள்.

மிரட்டும் முகம், அதட்டும் பார்வை, கடவா மீசை, பார்க்கவே பயங்கர தோற்றத்துடன் ரவுடியாக இருக்கும் அவன் தனது கஷ்டடியில் இருக்கும் தாலி கட்டிய மனைவி தன்னை விட்டு ரகசியமாக தப்பித்து ஓடுகிறாள் அவளை கையும் களவுமாக பிடித்தான் என்றால் அவள் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்து அவளை மயக்கமடைய செய்திருக்க வேண்டும்.

கேடி ஜோசப் அப்படிச் செய்யாமல் நீ ஆசைப்பட்டவன்கூடவே ஓடிப்போய் சந்தோஷமா குடும்பம் நடத்து என்று சொல்கிறானே. இவனை புரிஞ்சிக்கவே முடியல என்று அந்த பிரம்மையிலும் அவனை நினைத்தபடி நின்றாள்.

”வசந்தி என்ன அப்பிடிப் பார்க்கிற..? என்னடா இவன் புறப்படுற நேரம் பார்த்து சிவ பூஜையில கரடி நுழையிறது மாதிரி புகுந்து காரியத்த கெடுத்துட்டானேன்னு பார்க்கிறியா..? இண்ணைக்கு காலையில பிரபாகரன் இந்த வீட்டுக்கு வந்தது, அவன்கூட நீ கோயம்பத்தூருக்கு ஓடிப் போக நினைச்சது எல்லாமே பக்கத்து வீட்டு அபிலாஷ்சோட அப்பா எனக்கு போன் பண்ணிச் சொல்லீட்டார்!” அவன் நிதானமாய் சொன்ன போது அதிர்ந்து அவன் பேசுவதையே கேட்டபடி நின்றாள்,

””எந்த புருஷனுமே தாலி கட்டின பொண்டாட்டி இன்னொரு ஆம்பிள கூட ஓடிப் போறத விரும்பமாட்டான். ஆனா இந்த கேடி ஜோசப் அப்பிடி இல்ல, நீ என்கிட்டயிருந்து ஓடிப்போறதுக்காகவே உன் கழுத்துல நான் தாலி கட்டினேன்!” அவன் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளையும் கேட்கக் கேட்க அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது.

”பிரபாகரன் உன்ன காதலிச்சது, அவனோட அப்பா தீப்பொறி திவாகருக்கு புடிக்காம என்னக் கூப்பிட்டு உன்ன தீர்த்துக் கட்டச் சொன்னார். நானும் உன்ன கொல பண்ணியிடலாம்ங்கிற முடிவில தான் இருந்தேன். இந்த விஷயம் தெரிஞ்ச பிரபாகரன் என் கால்ல விழாத குறையா என் வசந்திய எதுவும் பண்ணியிடாதன்னு கெஞ்சினான், உன்ன நான் எதுவுமே பண்ணாம இருந்தா அந்த தீப்பொறி திவாகர் சும்மா இருக்க மாட்டார், என்ன மாதிரி வேற யாரையாவது செட் பண்ணி உன்ன கொலை பண்ணியிருப்பார், நீ உயிரோட வாழணுமுன்னா உனக்கு கண்டிப்பா ஒரு பாதுகாப்பு தேவையின்னு தோணிச்சு, உனக்கு எப்பிடி பாதுகாப்பு தரணுமுன்னு எவ்வளவு யோசிச்சும் எந்த முடிவும் வரல, உன்ன பாதுகாக்க எனக்குத் தெரிஞ்ச ஒரே வழி உன் கழுத்துல தாலி கட்டுறது தான், அதனால தான் உன் கழுத்துல தாலியக் கட்டிட்டேன்!” கேடி ஜோசப் சொன்னபோது அதிர்ச்சியில் மீளாமல் அப்படியே சிலையாகி நின்றாள். வார்த்தைகள் தொண்டைக் குழியிலிருந்து தோண்டி எடுக்க வேண்டியதாக இருந்தது.

” நீயும் பிரபாகரனும் மறுபடியும் சந்திப்பீங்க, வாழ்க்கையில ஒண்ணு சேர்வீங்கன்னு எதிர் பார்த்து கிட்டே இருந்தேன், நான் நினைச்சது மாதிரியே நடந்திடிச்சி, நீ சந்தோஷமா போய் பிரபாகரன் கூட குடும்பம் நடத்து, நான் லைட்ட ஆப் பண்றேன் நீ கிளம்பிப் போயிடு.. ம்..!” கேடி ஜோசப் லைட்டை ஆப் செய்தான்.

வசந்தி விரல் நடுங்கியபடி அவளது அலைபேசியில் கடைசியாக வந்த காலை மறுபடியும் டச் செய்ய கால் போகவும் கட் செய்தாள், அந்த இருட்டில் அவனைப் பார்த்தபடியே நின்றாள். சற்று நேரத்திற்கெல்லாம் கார் ஒன்று வந்து வேகமாய் கடந்து போனது.

”போறேன்!” என்று சொல்லத் தோன்றியது ஆனால் வார்த்தை உதடுகளை அனக்கியதோடு நின்று கொண்டது வெளியே வரவே இல்லை.

கார் திரும்பி வரும் சத்தம் கேட்க பேகைத் தூக்கியபடி காருக்கு நடந்தாள், அவள் பார்வை திரும்பிக் கொண்டே இருந்தன. கார் வந்து நின்றது வசந்தி பின்பக்க டோரைத் திறந்து உள்ளே விழுந்தாள்.

பிரபாகரன் காரை வேகமாய் ஓட்ட ஆரம்பித்தான். வழியில் அவன் பேசிக்கொண்டே வண்டி ஓட்டினான். அவனது வார்த்தைகள் எதுவும் அவள் காதுகளில் விழவில்லை. வசந்தியின் மனது கேடி ஜோசப்பின் வீட்டிலிருந்து புறப்படவில்லை. அவன் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளில் நிலைத்திருந்தது.

”என்ன வசந்தி..எதுவும் பேசாம இருக்கிற..!” வண்டிய ஓட்டியபடியே கேட்டான் பிரபாகரன்.

”தலை வலிக்குது...நீ பேசாம வண்டிய ஓட்டு!” அவள் பின் சீட்டில் கண் அயர்ந்தாள். கார் மிதமான வேகத்தில் போய்க் கொண்டிருந்தது,
ம் ம் நல் மணிதன் கேடியாருந்தாலும்.
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
ஜோசப்பிற்குள் இப்படி ஒரு நல்ல மனிதனா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top