• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 27(5)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அதே சமயம் மதுரா தங்கி இருக்கும் வீட்டின் முன்புறம் நின்று உத்தம் சூர்யா உடன் போனில் பேசி கொண்டு இருந்தான் .

"என்ன உத்தம் ????போய் இவ்வளவூ நேரம் ஆகுது ......."என்றான் சூர்யா -அதாவது மதுராவிடம் பேசி விட்டாயா ,மதுராவின் ரியாக்ஷன் என்ன என்று மறைமுக கேள்வி .
full.jpg

"பாஸ் !மேடம் இங்கு இல்லை .........அவங்க வருவதற்காக தான் வெயிட் செய்துட்டு இருக்கேன் ....விஜய் சார் பிளான் பிளாப் .....கார்த்திக் சேது சார் மகள் பூரணியை விரும்பறார் .....மதுரா மேடம் தான் திருமண ஏற்பாடுகள் செய்து இருகாங்க ......விஜய் லவ் மேட்டர் மேடம் தெரிஞ்சுக்கிட்டாங்க போலெ இருக்கு ....விஜய் சாரை காரில் வைத்து பூட்டி இருக்காங்க என்று ஆட்கள் சொல்ராங்க .........இப்போ கூட விஜய் சார் கூட தான் எங்கேயோ போய் இருக்காங்க ....நம்ம ஆட்கள் பின் தொடர்ந்து போனாங்க ....ட்ராபிக்கில் மிஸ் செய்துட்டாங்க ....."என்று உத்தம் முடிப்பதற்குள் எதிர் முனையில் இருந்து கர்ஜனையாக வெளி வந்தது சூர்யாவின் குரல் .

"FIRE THEM ஆல் ......"என்று .

"ஆல்ரெடி செஞ்சுட்டேன் பாஸ் .......பவானி மேடம் இப்போ தான் போன் செய்தாங்க ...........வந்துட்டே இருப்பதாக சொன்னாங்க .............வந்துட்டாங்க பாஸ் .........."என்ற உத்தம் அழைப்பை துண்டித்தான் .
upendra-in-pawan-trivikram-film_b_2112160620.jpg

உத்தம் மொபைலை அணைத்து வைக்கவும் ,கார் வேகமாக வந்து நிற்கவும் சரியாக இருந்தது .விஜய்யின் மனநிலையை அவன் கார் ஓட்டி வந்த விதத்திலேயே புரிந்து கொண்ட உத்தம் மனதிற்குள் சிரித்து கொண்டான் .கார் நின்ற உடன் முதலில் மதுரா இறங்க ,பின்னால் ஆல்வினும் ,விஜயும் இறங்கி அரண் போலே நின்றனர் .

உத்தமை பார்த்து நெற்றி சுருக்கி யோசித்த மதுரா அவனை அடையாளம் கண்டு கொண்டு ,"தன்வீர் பையா(அண்ணா ) ....."என்று ஓடி சென்று உத்தம் கைகளை பிடித்து கொண்டு குதித்தே விட்டாள் .

ஆல்வினும் ,விஜயும் அதிர்ந்து நின்றனர் .

"பையா (அண்ணா )! எப்படி இருக்கீங்க ............பார்த்து எவ்வளவூ நாள் ஆச்சு .......ஆளே அடையாளம் தெரியாத அளவூ மாறிட்டிங்க ......."என்று ஹிந்தியில் விசாரிக்க ஆரம்பித்து விட ,ஹிந்தி தெரிந்ததால் விஜய்க்கும் ,ஆல்வினுக்கும் அவர்களின் உரையாடலை கவனிக்க முடிந்தது .

"மேரி பெஹென் (என் சகோதரி ).....உங்களை ரொம்பவே மிஸ் செய்தேன் ..........."என்றான் உத்தம் தமிழில் .

"வாரே வா அண்ணா .....நல்ல தமிழ் கத்துட்டு இருக்கீங்க ......என்ன மேட்டர் ?"என்றாள் மதுரா .

"பாஸ் ஆர்டர் .........சிஸ்டர் .........."என்றான் உத்தம் .

"ஐயோ ...........நான் ஒரு லூசு ...........பாருங்க உங்களை வெளியவே நிற்க வைத்து பேசிட்டு இருக்கேன் .....அம்மா உங்களை மீட் செய்யணும் என்று ரொம்ப நாளா சொல்லிட்டே இருந்தாங்க ....எங்கே நீங்க தான் ஆள் அட்ரஸ் இல்லாம .....அப்பீட் ஆகிட்டீங்களே ..........வாங்க ...வாங்க ............அம்மா ..............அம்மா ........யார் வந்து இருக்காங்கன்னு பாருங்க ..........."என்று புள்ளி மானாக உள்ளே குதித்து ஓடினாள் மதுரா .

ஹாலில் இருந்த மற்றவர்கள் ,மதுராவின் இந்த சந்தோசத்திற்கான காரணத்தினை அறியாமல் திகைத்தனர் .

தாயின் கையை பிடித்து கொண்ட மதுரா ,"அம்மா !இவர் யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம் ..........ரொம்ப நாளா இவரை தான் மீட் செய்யணும் என்று சொல்லிட்டே இருந்தீங்க ........யாருன்னு கண்டு பிடிங்க பார்க்கலாம் ....."என்றாள் மதுரா .

மகளின் உற்சாகம்,சுற்றி இருந்தவர்களின் திணறல் எல்லாவற்றையும் கண்ட பவானி என்ன சொல்வது என்று புரியாமல் குழம்பி நின்றார் .

"தெரியலை மதுரா ............சார் யார் ?"என்றார் பவானி .

"அம்மா !..........உன் பிஸிபேளாபாத்,உருளை கிழங்கு fry ,காலிபிளார் 65 தீவிர ரசிகர் மா அண்ணா ........என்னம்மா .........தன்வீர் அண்ணா மா ........."என்றாள் மதுரா .

பவானிக்கு நினைவூ வந்து விட ,"தன்வீர் !சொல்ல கூடாதப்பா .......நான் யாரோ என்னவோன்னு இருந்துட்டேன் ......எப்படி இருக்கே ......"என்றார் பவானி .

"நல்லா இருக்கேன் மாஜி ..........நீங்கோ எப்படி இருக்கீங்கோ ....?"என்றான் உத்தம் .

"கடவுள் புண்ணியத்தில் ஒரு குறையும் இல்லை .........ஆமாம் ஊர் விட்டு போவதாக இருந்தால் சொல்லிட்டு போக மாட்டிங்களா பா ...........இவளை பத்தி தான் தெரியும் ல .....சொல்லாம போயிட்டிங்க ......போலீஸ் கம்பளைண்ட் கொடுக்க போறேன்னு எங்களை ஒருவழி செய்துட்டா ......"என்றார் பவானி ஆற்றாமை உடன் .

"சாரி மாஜி .........urgent வேலை வந்துடுச்சு .........கிளம்பி போக வேண்டியதா போச்சு ........யார் கிட்டேயும் சொல்லிக்க முடியலை ............சாரி பெஹன் .............ரொம்ப சாரி ........அப்போ இருந்த நிலையில் எதை பற்றியும் யோசிக்க கூட முடியலை ............"என்றான் உத்தம் .

"மதுரா !"என்று இடை இட்ட சேது,"சார் ....எப்படி உனக்கு பழக்கம் என்று சொல்லவே இல்லையே ......."என்றார் மகனின் முகம் போகும் போக்கு விரும்பாதவராக

"இவங்க என் பெரியப்பா, தன்வீர் அண்ணா! ...அப்பாவோட அண்ணன் ...........பெரியப்பா தன்வீர் அண்ணா குன்னூரில் என் சீனியர் ..........என் காலேஜ் தான் படிச்சாங்க ............ரகுவை விட தன்வீர் அண்ணா என் பெஸ்ட் friend ........ஆக்ஷன் ஹீரோ ரேஞ்சு fight செஞ்சு இவங்க தான் சில ரவுடி கிட்டே இருந்து என்னை காப்பாத்தினாங்க .....கொட்டும் மழை என்று கூட பார்க்காம இவரும் இன்னொருத்தரும் தான் வீடு வரை துணைக்கு வந்தாங்க ....சோ அப்போ இருந்து இவர் பவானியின் தத்து பிள்ளை ஆகிட்டார் ....அம்மாவின் கை பக்குவத்திற்கு விசிறி இந்த அண்ணா ......அம்மாவும் பிள்ளையும் சேர்ந்து என்னை போர்ட்டர் ஆக்கி இருக்காங்க .....இவ்வளவூ பெரிய குண்டானில் தன்வீருக்கு சாப்பாடு சுமந்து சுமந்து என் கை ஒடிந்தது தான் மிச்சம் . "என்றாள் மதுரா புன்னகையுடன்
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"இப்போ இங்கே என்ன வேலையாய் வந்து இருக்கார் உங்க அண்ணன் ?"என்றார் சேது ஒரு வித குரலில் -ஏன் வந்தாய் என்ற மறைமுக எச்சரிக்கை விடுத்து கொண்டு இருந்தார் .

சேது அப்படி சட்டென்று கேட்பார் என்று எதிர் பார்க்காத பவானி திகைத்து போனார் .தன்வீர் வந்ததில் இருந்து அங்கு நிலவும் ஒரு வித கோல்ட் வார் பவானி உணர்ந்தே இருந்தார் .அவன் வரவை அவர்கள் யாருமே விரும்பவில்லை என்று அவருக்கு புரிந்து தான் இருந்தது .அவன் யார் என்று மகள் சொல்லும் வரை அவரும் அதே மனநிலையில் தான் இருந்தார் .

ஆனால் அவன் மகளின் மானத்தை காப்பாற்றியவன் ,மகள் அண்ணனாக ஏற்று கொண்டு இருந்த ஒருவன் ,தனக்கு மூன்றாவது பிள்ளை என்று உணர்ந்த பவானியால் சேதுவின் இந்த மறைமுக கேள்வியை ஜீரணிக்க முடியவில்லை .வீட்டு பெரியவரை எதிர்த்தும் அவரால் எதுவும் பேசவும் முடியவில்லை .

மதுராவிற்கு அந்த மாதிரி தயக்கம் எல்லாம் எதுவும் இல்லை ."என்ன பெரியப்பா கேள்வி இது ....தங்கையை பார்க்க அண்ணன் வராம .....வேறு யார் வருவா ????"என்றாள் சேதுவின் எச்சரிக்கையை உணர்ந்தும் அதை கண்டும் காணாத மாதிரி இருந்தாள் .

"உன் அண்ணன் உனக்கு அண்ணனாக மட்டும் வந்து இருந்தால் நான் ஏன் கேள்வி கேட்க போகிறேன் மதுரா ????உன் அண்ணன் இப்போ வந்து இருப்பது ஜெய்ப்பூர் ராஜவம்ச பிரதிநிதியாக ......இளவரசர் சூர்யா பிரதாப்பின் பி .ஏ வாக ....அதன் காரணத்தை தான் கேட்கிறேன் ..."என்றார் சேது கடுமையான குரலில் .

மதுரா பதில் சொல்வதற்குள் ,"சாரி பெஹன் ....உன் பெரியப்பா சொல்வது சரி தான் ....நான் இங்கு உன் அண்ணனாக வரவில்லை தான் ......இளவரசரின் பி .ஏ வாக ,அவர் கொடுத்த வேலையை செய்ய தான் வந்து இருக்கிறேன் .....இளவரசர் அனுப்பிய காரணத்தை இத்தனை பேர் மத்தியில் சொல்ல எனக்கு அனுமதி இல்லை ....தனியாக பேச வேண்டும் சிஸ்டர் .........கொஞ்சம் வருகிறாயா ....?"என்றான் உத்தம் சற்றும் அசராமல் .

விஜய்யின் கோபம் எல்லை மீற ,அவனை பிடித்து நிறுத்த ஆல்வினும் ,பாலாஜியும் திணறி தான் போனார்கள் .

மதுரா அங்கு மௌன பாஷையில் நடந்த போரினையும் ,அனைவரின் எண்ணத்தையும் புரிந்து கொண்டவள் ,"அம்மா !அண்ணாவுக்கு பிடித்த பிஸிபேளாபாத் செய்மா ..........நாங்க போய் பேசிட்டு வரோம் ...வாங்க தன்வீர் அண்ணா ."என்றவள் மற்றவர்கள் எதையும் சொல்வதற்கு முன் தன்வீரோடு தோட்டத்திற்கு சென்று விட்டாள் .
MV5BY2M5MTMyNDQtZDBkOC00M2EzLWE1NjItZmZiNGMyMDkxYjAyXkEyXkFqcGdeQXVyMjA4NjIzMTA@._V1_.jpg

மதுராவின் இந்த முடிவூ யாருக்கும் உகந்ததாக இல்லை .மதுராவின் இந்த உதாசீனத்தை தாங்க முடியாத விஜய் சட்டென்று வெளியே சென்று விட ,அவன் பின்னால் ஆல்வின் ,பாலாஜி ,சேது ,கார்த்திக் ,ரகு சென்றனர் .

தோட்டத்தில் இருந்த கல்மேடையில் அமர்ந்த மதுரா ,தன்வீர் அமர நாற்காலி கொண்டு வந்து கொடுத்து ,அவன் அமர்ந்ததும் ,"சாரி அண்ணா .....பெரியப்பா இப்படி பேசுவாங்க என்று நினைக்கலை ....சாரி "என்றாள் .

"அவர் உன் பெரியப்பாவாக மட்டும் இல்லையே பெஹன் ....விஜய் சாரின் அப்பாவாக தானே பேசுகிறார் .....இது எல்லாம் un avoidable ......இதற்கு எல்லாம் worry செய்துக்காதே ..........நாம எல்லோருக்கும் எல்லா சமயமும் நல்லவங்களா இருக்க முடியாது தானே ............இந்தா பிடி ..."என்றவன் சோனாவின் அக்ரீமெண்ட் பேப்பர் எடுத்து கொடுத்தான் .

அதை படித்து பார்த்த மதுரா அதிர்ந்து போனவளாய் நிமிர்ந்து ,"என்ன அண்ணா இது .........இப்போ எதற்கு உங்க பாஸ் இந்த வேலை செய்து இருக்கார் ...........அவர் ஏன் நாலு கோடி எனக்காக அந்த பிசாசிற்கு கொடுக்க வேண்டும் ..........இது தேவையே இல்லையே ...."என்றாள் குழப்பதுடன் .
images (19).jpg

"பாஸ் நாலு கோடி சோனாவிற்கு கொடுத்தார் என்று யார் சொன்னது ????.........."என்றான் உத்தம் புன்முறுவலுடன் .

"அண்ணா !"என்றாள் மதுரா அவன் சொல்வது விளங்காமல் .

"நாலு கோடி இல்லை ..............நாலு அரை தான் கொடுத்தார் பாஸ் ...."என்றான் உத்தம் .

"அதை கூட உங்க பாஸ் எனக்காக எதற்கு செய்யணும் ..........என்று தான் கேட்கிறேன் அண்ணா ?"என்றாள் மதுரா .

"சாரி பெஹன் .........அது தெரியணும் என்றால் நாளை காலை பாசை வந்து மீட் செஞ்சு அவர் கிட்டேயே கேட்டுக்கோ ....சொல்ல எனக்கு அனுமதி இல்லை ......இதையும் பிடி ............என்ன பார்க்றே .....ஆஃப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் தான் .....பாஸ் உங்களுக்கு அவர் பி .ஏ வேலை கொடுத்து இருக்கார் ....சோனா ,அக்ரீமெண்ட் ,இந்த வேலை லிங்க் எதுவும் இல்லை .....இஷ்டம் இருந்தா வேலையில் ஜோயின் செய் ....நோ கம்பல்சன் ......பாஸ் நாளைக்கு மீட் செஞ்சுட்டு எந்த முடிவாக இருந்தாலும் decide செய்மா .....நான் கிளம்பறேன் ......வர விருப்பம் இருந்தா இது தான் என் கார்டு ...இது என் பர்சனல் நம்பர் ....கால் செய்து சொல்லு ....நானே வந்து கூட்டிட்டு போறேன் ......ஓகே நான் கிளம்பறேன் ...."என்றான் உத்தம் .

"இருங்க அண்ணா ....நீங்க பாட்டுக்கு வந்தீங்க ...போறீங்க ..........இந்த bomb வேற சத்தம் இல்லாம வெடிக்க வச்சுட்டு கூல்லா போய்ட்டு வரேன்னு கிளம்பறீங்க ..........அம்மா கிட்டே உங்களுக்கு சாப்பாடு செய்ய சொல்லி இருக்கேன் ........இருந்து சாப்பிட்டுட்டு போங்க ...."என்றாள் மதுரா .

"இல்லை பெஹன் ....இன்றைக்கு வேண்டாம் ..........நிறைய பேருக்கு மனக்கஷ்டம் வரும் ...........இன்னொரு நாள் வந்து சாப்பிடுறேன் ....."என்றான் உத்தம் .

"என்ன உங்க பாஸ்க்கும் விஜய்க்கும் அக்னி நட்சத்திரம் படம் அசோக் ,கெளதம் என்று நினைப்போ ????சூடு ரொம்ப அதிகமா இருக்கு .............உடம்புக்கு ஆகாது ப்ரோ ...."என்றாள் மதுரா .

"மதுரா !"என்றான் உத்தம் அதிர்ந்து .

"விசுவாசத்திற்கு மறு பெயர் உண்டு என்றால் அது நீ தான் தன்வீர் உத்தம் சிங் ...."என்று பாஹுபலி பட டயலாக் விட்டு கலாய்த்த மதுராவின் தலையில் நங்கு என்று கொட்டினான் உத்தம் .

"நீ இன்னும் மாறவேயில்லை பெஹன் .....இன்னும் அதே வால் இல்லா monkey வேலை செய்துட்டு தான் இருக்கே ....."என்றான் உத்தம் .

"நாங்க எல்லாம் மாறிட்டா உலகம் தாங்காது தம்பி .....சரி சரி பொழச்சிப்போ .....பவானி செய்யும் சமையலை விரும்பி ,நல்லா இருக்குன்னு சாப்பிடும் ஒரே ஜீவன் நீ மட்டும் தான் .....போ போ எஸ்கேப் ஆகிக்கோ ....நாளை காலை பிக் up செய்துக்கோ ....."என்றாள் மதுரா .

"என்ன நீ பாட்டுக்கு வரேன்னு சொல்றே .............வீட்டில் கேட்க வேண்டாமா ..........."என்றான் உத்தம் .

"என்னப்பா பண்றது ....எனக்காகவும் ஒரு பாடிகார்ட் வேலை எல்லாம் செய்யும் அந்த லூசு .........அதான் பா உன் பாஸ் .....அந்த அப்பாடக்கர் யாருன்னு பார்க்கணுமே ............அதான் வரேன் ........."என்ற மதுரா ஓட ஆரம்பிக்க உத்தம் வாய் விட்டு சிரித்து விட்டு கிளம்பினான் .
Ram-Charan_6097.jpg

இவர்கள் இங்கே தோட்டத்தில் பேசி கொண்டு இருக்க ,வீட்டின் முன்புறம் அதே சமயம் மற்றொரு மீட்டிங் விஜய் அண்ட் கோ போட்டு கொண்டு இருந்தார்கள் .

PENANCE WILL CONTINUE.....
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
மதுரா புள்ளதான் மீட் பண்ண வரேன்னு வாக்கு கொடுத்திருச்சே.... இப்ப இவங்க கேங் மீட்டிங்க போட்டு என்ன பண்ண போறாங்க????
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,569
Reaction score
7,788
Location
Coimbatore
சூரியா விஜய் யாருடைய மாலை மதுராவை சேரும்
ஆனாலும் மதுரா அடிக்கும் லூட்டி தாங்க முடியவில்லை
எல்லாரையும் நல்லா சமாளிக்கறா.
,
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Ethanai twist sis utham annava .. interesting vijay than paavam sootu vacha auto metre mathiri kothithu poi irukaan ..ivanai verupetha endre madhu suryava pakka porala
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top