Sripathi
அமைச்சர்
Very nice ud akka ???
தேங்க்ஸ் சிஸ்டர் மதுராவின் கேரக்டர் அப்படி பட்டது .அவள் முதலில் திணறிய ஒரே இடம் சோனாவின் தவறான வார்த்தைகளுக்கு மட்டும் தான் .அதுவும் INITIAL ஷாக் மட்டுமே .அதன் பின் அவள் யோசிக்க ஆரம்பித்து ,சுய அலசல் தான் அதிகம் மேற்கொண்டது .Nice epi dear, intha madhura kku evalavu ranagalathilaiyum yevalavu cool erukku
Arumai dear, keep rocking dear?தேங்க்ஸ் சிஸ்டர் மதுராவின் கேரக்டர் அப்படி பட்டது .அவள் முதலில் திணறிய ஒரே இடம் சோனாவின் தவறான வார்த்தைகளுக்கு மட்டும் தான் .அதுவும் INITIAL ஷாக் மட்டுமே .அதன் பின் அவள் யோசிக்க ஆரம்பித்து ,சுய அலசல் தான் அதிகம் மேற்கொண்டது .
எந்த விதமான SITUATION தனக்கு சாதகமாக சிரித்தே மாற்றும் தன்மை கொண்டவள் .சிறு பிள்ளை போல் விளையாடி கொண்டு இருந்தாலும் அவளின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் அடுத்த பிளான்னுக்கு தேவையான நடவடிக்கைகள் இருந்து கொண்டே தான் இருக்கும் .
தோல்வி என்றால் சோர்ந்தோ ,வெற்றி என்றால் குதித்தோ இல்லாமல் அனைத்தையும் சமநிலையில் பார்ப்பவள்.
ஜான்சியுடன் அவள் சந்திப்பு ஒரு சிறு உதாரணம் .அங்கு அவளுக்கு தேவையான விவரங்களை சேகரித்து கொண்டவள் ,ஜான்சியின் பாட்டி வரும் வரை அவளை விட்டு நகரவும் இல்லை ....விஜய்யின் தனக்கான காதல் தெரிந்த பின் அதற்காக ஓவர் EXCITE ஆகவோ ,விஜயையை CONFRONT செய்து சட்டையை பிடிக்கவும் இல்லை .....அதே சமயம் மிருதுளாவிற்கும் ,ஆல்வினுக்கும் வழிகாட்டவும் மறக்கவில்லை .
ரொம்ப PRACTICAL .நிதர்சனம் புரிந்து நடப்பவள் .அதே சமயம் பாரதி கண்ட புதுமை பெண் .
HOPE ROMBA BLADE PODALAINU
Mam super turning point"இப்போ இங்கே என்ன வேலையாய் வந்து இருக்கார் உங்க அண்ணன் ?"என்றார் சேது ஒரு வித குரலில் -ஏன் வந்தாய் என்ற மறைமுக எச்சரிக்கை விடுத்து கொண்டு இருந்தார் .
சேது அப்படி சட்டென்று கேட்பார் என்று எதிர் பார்க்காத பவானி திகைத்து போனார் .தன்வீர் வந்ததில் இருந்து அங்கு நிலவும் ஒரு வித கோல்ட் வார் பவானி உணர்ந்தே இருந்தார் .அவன் வரவை அவர்கள் யாருமே விரும்பவில்லை என்று அவருக்கு புரிந்து தான் இருந்தது .அவன் யார் என்று மகள் சொல்லும் வரை அவரும் அதே மனநிலையில் தான் இருந்தார் .
ஆனால் அவன் மகளின் மானத்தை காப்பாற்றியவன் ,மகள் அண்ணனாக ஏற்று கொண்டு இருந்த ஒருவன் ,தனக்கு மூன்றாவது பிள்ளை என்று உணர்ந்த பவானியால் சேதுவின் இந்த மறைமுக கேள்வியை ஜீரணிக்க முடியவில்லை .வீட்டு பெரியவரை எதிர்த்தும் அவரால் எதுவும் பேசவும் முடியவில்லை .
மதுராவிற்கு அந்த மாதிரி தயக்கம் எல்லாம் எதுவும் இல்லை ."என்ன பெரியப்பா கேள்வி இது ....தங்கையை பார்க்க அண்ணன் வராம .....வேறு யார் வருவா ????"என்றாள் சேதுவின் எச்சரிக்கையை உணர்ந்தும் அதை கண்டும் காணாத மாதிரி இருந்தாள் .
"உன் அண்ணன் உனக்கு அண்ணனாக மட்டும் வந்து இருந்தால் நான் ஏன் கேள்வி கேட்க போகிறேன் மதுரா ????உன் அண்ணன் இப்போ வந்து இருப்பது ஜெய்ப்பூர் ராஜவம்ச பிரதிநிதியாக ......இளவரசர் சூர்யா பிரதாப்பின் பி .ஏ வாக ....அதன் காரணத்தை தான் கேட்கிறேன் ..."என்றார் சேது கடுமையான குரலில் .
மதுரா பதில் சொல்வதற்குள் ,"சாரி பெஹன் ....உன் பெரியப்பா சொல்வது சரி தான் ....நான் இங்கு உன் அண்ணனாக வரவில்லை தான் ......இளவரசரின் பி .ஏ வாக ,அவர் கொடுத்த வேலையை செய்ய தான் வந்து இருக்கிறேன் .....இளவரசர் அனுப்பிய காரணத்தை இத்தனை பேர் மத்தியில் சொல்ல எனக்கு அனுமதி இல்லை ....தனியாக பேச வேண்டும் சிஸ்டர் .........கொஞ்சம் வருகிறாயா ....?"என்றான் உத்தம் சற்றும் அசராமல் .
விஜய்யின் கோபம் எல்லை மீற ,அவனை பிடித்து நிறுத்த ஆல்வினும் ,பாலாஜியும் திணறி தான் போனார்கள் .
மதுரா அங்கு மௌன பாஷையில் நடந்த போரினையும் ,அனைவரின் எண்ணத்தையும் புரிந்து கொண்டவள் ,"அம்மா !அண்ணாவுக்கு பிடித்த பிஸிபேளாபாத் செய்மா ..........நாங்க போய் பேசிட்டு வரோம் ...வாங்க தன்வீர் அண்ணா ."என்றவள் மற்றவர்கள் எதையும் சொல்வதற்கு முன் தன்வீரோடு தோட்டத்திற்கு சென்று விட்டாள் .
View attachment 4517
மதுராவின் இந்த முடிவூ யாருக்கும் உகந்ததாக இல்லை .மதுராவின் இந்த உதாசீனத்தை தாங்க முடியாத விஜய் சட்டென்று வெளியே சென்று விட ,அவன் பின்னால் ஆல்வின் ,பாலாஜி ,சேது ,கார்த்திக் ,ரகு சென்றனர் .
தோட்டத்தில் இருந்த கல்மேடையில் அமர்ந்த மதுரா ,தன்வீர் அமர நாற்காலி கொண்டு வந்து கொடுத்து ,அவன் அமர்ந்ததும் ,"சாரி அண்ணா .....பெரியப்பா இப்படி பேசுவாங்க என்று நினைக்கலை ....சாரி "என்றாள் .
"அவர் உன் பெரியப்பாவாக மட்டும் இல்லையே பெஹன் ....விஜய் சாரின் அப்பாவாக தானே பேசுகிறார் .....இது எல்லாம் un avoidable ......இதற்கு எல்லாம் worry செய்துக்காதே ..........நாம எல்லோருக்கும் எல்லா சமயமும் நல்லவங்களா இருக்க முடியாது தானே ............இந்தா பிடி ..."என்றவன் சோனாவின் அக்ரீமெண்ட் பேப்பர் எடுத்து கொடுத்தான் .
அதை படித்து பார்த்த மதுரா அதிர்ந்து போனவளாய் நிமிர்ந்து ,"என்ன அண்ணா இது .........இப்போ எதற்கு உங்க பாஸ் இந்த வேலை செய்து இருக்கார் ...........அவர் ஏன் நாலு கோடி எனக்காக அந்த பிசாசிற்கு கொடுக்க வேண்டும் ..........இது தேவையே இல்லையே ...."என்றாள் குழப்பதுடன் .
View attachment 4519
"பாஸ் நாலு கோடி சோனாவிற்கு கொடுத்தார் என்று யார் சொன்னது ????.........."என்றான் உத்தம் புன்முறுவலுடன் .
"அண்ணா !"என்றாள் மதுரா அவன் சொல்வது விளங்காமல் .
"நாலு கோடி இல்லை ..............நாலு அரை தான் கொடுத்தார் பாஸ் ...."என்றான் உத்தம் .
"அதை கூட உங்க பாஸ் எனக்காக எதற்கு செய்யணும் ..........என்று தான் கேட்கிறேன் அண்ணா ?"என்றாள் மதுரா .
"சாரி பெஹன் .........அது தெரியணும் என்றால் நாளை காலை பாசை வந்து மீட் செஞ்சு அவர் கிட்டேயே கேட்டுக்கோ ....சொல்ல எனக்கு அனுமதி இல்லை ......இதையும் பிடி ............என்ன பார்க்றே .....ஆஃப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் தான் .....பாஸ் உங்களுக்கு அவர் பி .ஏ வேலை கொடுத்து இருக்கார் ....சோனா ,அக்ரீமெண்ட் ,இந்த வேலை லிங்க் எதுவும் இல்லை .....இஷ்டம் இருந்தா வேலையில் ஜோயின் செய் ....நோ கம்பல்சன் ......பாஸ் நாளைக்கு மீட் செஞ்சுட்டு எந்த முடிவாக இருந்தாலும் decide செய்மா .....நான் கிளம்பறேன் ......வர விருப்பம் இருந்தா இது தான் என் கார்டு ...இது என் பர்சனல் நம்பர் ....கால் செய்து சொல்லு ....நானே வந்து கூட்டிட்டு போறேன் ......ஓகே நான் கிளம்பறேன் ...."என்றான் உத்தம் .
"இருங்க அண்ணா ....நீங்க பாட்டுக்கு வந்தீங்க ...போறீங்க ..........இந்த bomb வேற சத்தம் இல்லாம வெடிக்க வச்சுட்டு கூல்லா போய்ட்டு வரேன்னு கிளம்பறீங்க ..........அம்மா கிட்டே உங்களுக்கு சாப்பாடு செய்ய சொல்லி இருக்கேன் ........இருந்து சாப்பிட்டுட்டு போங்க ...."என்றாள் மதுரா .
"இல்லை பெஹன் ....இன்றைக்கு வேண்டாம் ..........நிறைய பேருக்கு மனக்கஷ்டம் வரும் ...........இன்னொரு நாள் வந்து சாப்பிடுறேன் ....."என்றான் உத்தம் .
"என்ன உங்க பாஸ்க்கும் விஜய்க்கும் அக்னி நட்சத்திரம் படம் அசோக் ,கெளதம் என்று நினைப்போ ????சூடு ரொம்ப அதிகமா இருக்கு .............உடம்புக்கு ஆகாது ப்ரோ ...."என்றாள் மதுரா .
"மதுரா !"என்றான் உத்தம் அதிர்ந்து .
"விசுவாசத்திற்கு மறு பெயர் உண்டு என்றால் அது நீ தான் தன்வீர் உத்தம் சிங் ...."என்று பாஹுபலி பட டயலாக் விட்டு கலாய்த்த மதுராவின் தலையில் நங்கு என்று கொட்டினான் உத்தம் .
"நீ இன்னும் மாறவேயில்லை பெஹன் .....இன்னும் அதே வால் இல்லா monkey வேலை செய்துட்டு தான் இருக்கே ....."என்றான் உத்தம் .
"நாங்க எல்லாம் மாறிட்டா உலகம் தாங்காது தம்பி .....சரி சரி பொழச்சிப்போ .....பவானி செய்யும் சமையலை விரும்பி ,நல்லா இருக்குன்னு சாப்பிடும் ஒரே ஜீவன் நீ மட்டும் தான் .....போ போ எஸ்கேப் ஆகிக்கோ ....நாளை காலை பிக் up செய்துக்கோ ....."என்றாள் மதுரா .
"என்ன நீ பாட்டுக்கு வரேன்னு சொல்றே .............வீட்டில் கேட்க வேண்டாமா ..........."என்றான் உத்தம் .
"என்னப்பா பண்றது ....எனக்காகவும் ஒரு பாடிகார்ட் வேலை எல்லாம் செய்யும் அந்த லூசு .........அதான் பா உன் பாஸ் .....அந்த அப்பாடக்கர் யாருன்னு பார்க்கணுமே ............அதான் வரேன் ........."என்ற மதுரா ஓட ஆரம்பிக்க உத்தம் வாய் விட்டு சிரித்து விட்டு கிளம்பினான் .
View attachment 4520
இவர்கள் இங்கே தோட்டத்தில் பேசி கொண்டு இருக்க ,வீட்டின் முன்புறம் அதே சமயம் மற்றொரு மீட்டிங் விஜய் அண்ட் கோ போட்டு கொண்டு இருந்தார்கள் .
PENANCE WILL CONTINUE.....