• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 28(5)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Akila saravanan

இணை அமைச்சர்
Joined
Oct 12, 2018
Messages
586
Reaction score
662
Location
Sattur
அத்தனை அன்பு ,கருணை .மனிதருள் காணக்கிடைக்காத மாணிக்கம் அவர் .கோடி கோடியாய் பணம் இருந்தும் ,ஒற்றை பிள்ளை பெற்று இருந்தும் ,அந்த குன்னூரில் பணக்கார ஏழையாய் இருந்து கொண்டு இருக்கிறார் .அன்புக்கு மிகவும் ஏங்கி போய் இருந்தார் .அவருக்கு உடம்பு சரி இல்லாமல் போகவே கூடவே இருந்து நான் தான் பார்த்து கொண்டேன் .அவர் குணமானதும் கூட என்னை போக விடவில்லை .அவரின் அன்புக்கு கட்டுப்பட்டு மேலும் இரண்டு நாட்கள் தங்கி இருந்த போது தான் என் வாழ்வு ஒரு விபத்தால் மாறியது .

யார் அது என்று தெரியவில்லை ........குடித்து விட்டு வண்டி ஒட்டி என்னை பரலோகத்திற்கு அனுப்ப முடிவு செய்தவன் .ஆனால் எனக்கு கிடைத்தது சுவர்க்கம் .அடி பட்டு ரத்த வெள்ளத்தில் நடு ரோட்டில் துடித்து கொண்டு இருந்தேன் .கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தார்களே ஒழிய துணித்து யாரும் உதவ முன்வரவில்லை .மருத்துவ துறையில் "கோல்டன் டைம் "என்று ஒன்று உண்டு .டாக்டர் கூட சொல்வாரே "கொஞ்ச நேரத்திற்கு முன் கொண்டு வந்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று " அந்த முதல் உதவி நேரத்தை ,உயிரை காப்பாற்றும் அந்த நொடியை தான் "கோல்டன் டைம் "என்பார்கள் .இதற்குள் நோயாளிகளை ,விபத்தில் சிக்கியவர்களை கொண்டு சென்றால் காப்பாற்றி விடலாம் .ஆனால் யாருமே முன்வரவில்லை .மரணபயத்தில் துடித்து கொண்டு இருந்தேன் .வலி ....வலி ..........வலி மட்டுமே தெரிந்தது .

அப்பொழுது தான் அது நடந்தது ......கூட்டத்தை விளக்கி கொண்டு வந்தாள் அவள் .அவளை கண்ட அந்த நொடி நான் இறந்து விட்டேனா என்று கூட குழம்பி விட்டேன் .என் உயிரை கொண்டு செல்ல வந்த வானத்து தேவதை தான் அவளோ என்று........அவ்வளவூ அழகு அவள் ........அடிபட்டு நினைவு தப்பி கொண்டு இருந்த வேளையில் சைட் அடித்தவன் நான் ஒருவனாக தான் இருப்பேன் .அதுவும் அந்த பெண் பார்ப்பதற்கு ஸ்கூல் கேர்ள் போல் இருந்தாள் .

View attachment 4622

அவளுக்கு பத்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவம் கண் முன்னே விரிந்தது .அடிபட்டு உயிர்க்கு போராடிய ஒருவனை தான் காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்த்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது .ரத்த வெள்ளத்தில் இருந்த அவன் முகம் அன்று அவளுக்கு சரியாக தெரியவில்லை .அன்று தான் காப்பாற்றிய நபர் விஜய் தான் என்று இன்று அவன் எழுதியதை படித்த பின் தான் அவளுக்கு தெரிய வந்தது .

அங்கு இருந்தவர்களை சரமாரியாக திட்டி தீர்த்தவள் ,பெரிய towel ஒன்றை வைத்து அழுத்தி அதனை அவள் தாவணி கிழித்து கட்டி என் ரத்த பெருக்கை நிறுத்தியவள் என்னை மடி தாங்கி கொண்டாள் .

"சார் ...........சார் ..............உங்களுக்கு ஒன்றும் ஆகாது ......சீக்கரம் ஹாஸ்பிடல் போய்டலாம் ........."---ஒஹ்ஹஹ் குயில் கூவியதோ ...........அவள் தான் என் கன்னத்தை தட்டி பேசி கொண்டு இருந்தாள் .

(உயிர் இருக்கான்னு நான் பயந்துட்டு இருந்தா ...........குயிலாம் குயில் )

அவள் மடியில் சொகுசாக படுத்து கொண்டு ,அவளையே சைட் அடித்து கொண்டு இருந்தேன் .அவளோ என் உயிரை காக்க போராடி கொண்டு இருந்தாள் .

"angel "----அவள் பெயர் தெரியாது .ஆனால் அவள் தான் என் angel .என்னை காப்பாற்ற வந்த தேவதை பெண் .எனக்காகவே கடவுள் படைத்த மறுபாதி ....என்னவள் ............தவம் செய்யாமலே எனக்கு கிடைத்த தேவதை .....

ஆட்டோ மூலம் என்னை ஹாஸ்பிடல் கொண்டு சென்றாள் .அன்னையாய் என் மடி தாங்கி இருந்தாள் .இப்படியே என் உயிர் போனாலும் எனக்கு கவலை இருந்து இருக்காது .அத்தனை அமைதி அவள் அருகே இருக்கும் போது .

(அடப்பாவி நீ நிம்மதியா உயிர் விட்டு இருப்பே ....நான் அல்லவா ஒரு உயிரை காப்பாற்ற முடியவில்லையே என்று வாழ்க்கை முழுதும் அழுது இருப்பேன் ....தத்து பித்துன்னு உளறுது எருமை .)

அவள் தொடுகை .....அவள் வாசம் ....அவளின் எனக்கான தவிப்பு ..........எனக்கு பிடித்து இருந்தது .எனக்கே எனக்காக ஒரு உயிர் துடிக்கிறது அது எனக்கு அடிபட்டதால் தான் என்றாலும் ........காதல் கொண்ட மனம் அதற்கு பிடித்த வர்ணம் பூசி கொண்டது .

காதல் ..............அவன் அவனுக்கு எப்படி எப்படியோ காதல் வரும் ...........எனக்கு நடு ரோட்டில் ....ரத்த வெள்ளத்தில் உயிர்க்கு போராடும் சமயத்தில் காதல் வந்தது .....அதுவும் நல்லதிற்கு தான் .....அவளை கரம் பிடிக்க வேண்டும் என்ற வெறியே "பூட்ட கேஸ் "என்ற நிலையில் இருந்த என்னை மீட்டு வந்தது என்பது தான் நிஜம் .....நான் உயிர் பிழைத்தது அந்த தேவதையால் தான் .....அந்த தேவதைக்காக மட்டும் தான் ........அவளோடு வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே என் உயிர் பிழைத்ததோ என்று இன்று தோன்றுகிறது .

PENANCE WILL CONTINUE......
Really you are iron man Vijay
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
''வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே
மானம் உள்ள ஊமைப்போல
தானம் கேட்க கூசி நின்றேனே
நிறங்கண்டு முகம் கண்டால்
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன்

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

எனை கட்டி வைத்தாள்
அன்னையே..........

நிறங்கண்டு முகங்கண்டால்
நேசம் கொண்டேன்
அவள் நிழல் கண்டு நிழல் கண்டேன்
நான் பாசம் கொண்டேன் (இசை)

வெண்ணிலாவின் தேரில் ஏறி
காதல் தெய்வம் நேரில் வந்தாளே

கால் அழகு மேல் அழகு
கண் கொண்டு கண்டேன்
அவள் நூல் அவிழும் இடையழகை
நோகாமல் தின்றேன்
கத்தி மூக்கில் காதல் நெஞ்சை
காயம் செய்து மாயம் செய்தாளே (இசை)

அவள் சிக்கெடுக்கும் கூந்தலுக்கு
சீப்பாக இருப்பேன்
இல்லை செந்தாமரை பாதத்தில்
செருப்பாக பிறப்பேன்
அண்டமெல்லாம் விண்டு போகும்
கொண்ட காதல் கொள்கை மாறாது (இசை)

எனை கட்டி வைத்தாள்
அன்னையே...........''
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஏன் மதுரா அமைதியா இருக்கா விஜய் லவ் தெரிந்த பிறகும் கூட என்று நிறைய பேர் கேள்வி கேட்கிறார்கள் .

மதுரா கேரக்டர் அப்படி பட்டது .எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்பவள் இல்லை .....உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுத்து விட்டு ,பின் வருந்துவது இல்லை .....முடிவு எடுத்தால் அது சரவெடி தான் ....இது வரை மதுரா விஜய்யின் காதலை மட்டுமே அறிந்து கொள்வதாக தான் கதை போகிறது .....அந்த காதலை அறிந்த பிறகு மதுராவின் ரியாக்ஷன் என்ன என்ற ஆழ்ந்த அசலில் இறங்கவில்லை .

ஏனென்றால் நடை முறை சாத்தியம் அதற்க்கு மிகவும் குறைவு ......உலகத்திற்கு விஜய் சோனாவின் கணவன் enpathu நெருப்பு வளையம் ......மீறினால் இவர்கள் காதல் வேறு அர்த்தம் கொடுத்து விடும் .மதுராவிற்கு அந்த ஒன்றே சீன பெருஞ்சுவராய் இருக்கிறது ....அதனால் அவள் மனதை வெளிப்படுத்தாமல் வாய் மூடி இருக்கிறாள் ......

விஜய் மதுரா காரில் ஏற்பட்ட நெருக்கத்தை கூட சூர்யா சோனாவிடம் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அதை பதிவு செய்த பிறகே என்னால் எழுத முடிந்தது .இல்லை என்றால் இவர்களின் நெருக்கம் வேறு அர்த்தம் ஆகி விடும் .

இப்போதைக்கு தன் அம்மாவிடம் இரண்டு பேர் தன்னை காதலிப்பதை கோடிட்டு காட்டி விட்டாள் ...தன் ரூட்டில் விஜய்யால் அனுப்ப பட்ட கார்திக்க்கை பூரணி பக்கம் திருப்பி விட்டாள் .....விஜய்யோடு சூர்யாவும் அவளை விரும்பி இருக்கிறான் ...ஆனால் இருவராலும் முதல் முறை இவளை கை பிடிக்க முடியாமல் போனது ....ஏன்...அதை எல்லாம் இன்னும் அறியவில்லை ....தடைகளை அழித்தால் மட்டுமே யாருடன் மதுரா இணைவதாக இருந்தாலும் அது சமூகத்தின் பார்வையில் மதிப்பு பெரும் .
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
இந்த யூடி படித்த பின்னே விஜய் இன்னும் பத்து படி மேலே புடிக்குது என்ன ஒரு டெடிகேட் ஆனா காதல் மெரிசல் ஆயிட்டேன் டா விஜய் பையா???????? u touch my ? heart baby
மதுரா அந்த சின்ன வயசிலேயே என்ன ஒரு நல்ல மனிதனேயம் மா உனக்கு எனக்கு என்ன வந்தாது என்று போகாம ஒரு உயிரோட மதிப்பு தெரிஞ்சு காப்பாத்த துடிச்சு இருக்கே விஜய் உன்னை வெறி தனமா காதலிக்குறது தப்பே இல்லாமா
செம்மா???????
Nice ud ani ma?????
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,569
Reaction score
7,788
Location
Coimbatore
அருமையான பதிவு
மதுரா சின்ன பிள்ளையாக இருந்த போது பார்த்து இருக்கிறான்
அப்பவே லவ்ஸ்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top