அத்தனை அன்பு ,கருணை .மனிதருள் காணக்கிடைக்காத மாணிக்கம் அவர் .கோடி கோடியாய் பணம் இருந்தும் ,ஒற்றை பிள்ளை பெற்று இருந்தும் ,அந்த குன்னூரில் பணக்கார ஏழையாய் இருந்து கொண்டு இருக்கிறார் .அன்புக்கு மிகவும் ஏங்கி போய் இருந்தார் .அவருக்கு உடம்பு சரி இல்லாமல் போகவே கூடவே இருந்து நான் தான் பார்த்து கொண்டேன் .அவர் குணமானதும் கூட என்னை போக விடவில்லை .அவரின் அன்புக்கு கட்டுப்பட்டு மேலும் இரண்டு நாட்கள் தங்கி இருந்த போது தான் என் வாழ்வு ஒரு விபத்தால் மாறியது .
யார் அது என்று தெரியவில்லை ........குடித்து விட்டு வண்டி ஒட்டி என்னை பரலோகத்திற்கு அனுப்ப முடிவு செய்தவன் .ஆனால் எனக்கு கிடைத்தது சுவர்க்கம் .அடி பட்டு ரத்த வெள்ளத்தில் நடு ரோட்டில் துடித்து கொண்டு இருந்தேன் .கூட்டம் கூடி வேடிக்கை பார்த்தார்களே ஒழிய துணித்து யாரும் உதவ முன்வரவில்லை .மருத்துவ துறையில் "கோல்டன் டைம் "என்று ஒன்று உண்டு .டாக்டர் கூட சொல்வாரே "கொஞ்ச நேரத்திற்கு முன் கொண்டு வந்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்று " அந்த முதல் உதவி நேரத்தை ,உயிரை காப்பாற்றும் அந்த நொடியை தான் "கோல்டன் டைம் "என்பார்கள் .இதற்குள் நோயாளிகளை ,விபத்தில் சிக்கியவர்களை கொண்டு சென்றால் காப்பாற்றி விடலாம் .ஆனால் யாருமே முன்வரவில்லை .மரணபயத்தில் துடித்து கொண்டு இருந்தேன் .வலி ....வலி ..........வலி மட்டுமே தெரிந்தது .
அப்பொழுது தான் அது நடந்தது ......கூட்டத்தை விளக்கி கொண்டு வந்தாள் அவள் .அவளை கண்ட அந்த நொடி நான் இறந்து விட்டேனா என்று கூட குழம்பி விட்டேன் .என் உயிரை கொண்டு செல்ல வந்த வானத்து தேவதை தான் அவளோ என்று........அவ்வளவூ அழகு அவள் ........அடிபட்டு நினைவு தப்பி கொண்டு இருந்த வேளையில் சைட் அடித்தவன் நான் ஒருவனாக தான் இருப்பேன் .அதுவும் அந்த பெண் பார்ப்பதற்கு ஸ்கூல் கேர்ள் போல் இருந்தாள் .
View attachment 4622
அவளுக்கு பத்து வருடங்களுக்கு முன் நடந்த அந்த சம்பவம் கண் முன்னே விரிந்தது .அடிபட்டு உயிர்க்கு போராடிய ஒருவனை தான் காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்த்தது அவளுக்கு நினைவுக்கு வந்தது .ரத்த வெள்ளத்தில் இருந்த அவன் முகம் அன்று அவளுக்கு சரியாக தெரியவில்லை .அன்று தான் காப்பாற்றிய நபர் விஜய் தான் என்று இன்று அவன் எழுதியதை படித்த பின் தான் அவளுக்கு தெரிய வந்தது .
அங்கு இருந்தவர்களை சரமாரியாக திட்டி தீர்த்தவள் ,பெரிய towel ஒன்றை வைத்து அழுத்தி அதனை அவள் தாவணி கிழித்து கட்டி என் ரத்த பெருக்கை நிறுத்தியவள் என்னை மடி தாங்கி கொண்டாள் .
"சார் ...........சார் ..............உங்களுக்கு ஒன்றும் ஆகாது ......சீக்கரம் ஹாஸ்பிடல் போய்டலாம் ........."---ஒஹ்ஹஹ் குயில் கூவியதோ ...........அவள் தான் என் கன்னத்தை தட்டி பேசி கொண்டு இருந்தாள் .
(உயிர் இருக்கான்னு நான் பயந்துட்டு இருந்தா ...........குயிலாம் குயில் )
அவள் மடியில் சொகுசாக படுத்து கொண்டு ,அவளையே சைட் அடித்து கொண்டு இருந்தேன் .அவளோ என் உயிரை காக்க போராடி கொண்டு இருந்தாள் .
"angel "----அவள் பெயர் தெரியாது .ஆனால் அவள் தான் என் angel .என்னை காப்பாற்ற வந்த தேவதை பெண் .எனக்காகவே கடவுள் படைத்த மறுபாதி ....என்னவள் ............தவம் செய்யாமலே எனக்கு கிடைத்த தேவதை .....
ஆட்டோ மூலம் என்னை ஹாஸ்பிடல் கொண்டு சென்றாள் .அன்னையாய் என் மடி தாங்கி இருந்தாள் .இப்படியே என் உயிர் போனாலும் எனக்கு கவலை இருந்து இருக்காது .அத்தனை அமைதி அவள் அருகே இருக்கும் போது .
(அடப்பாவி நீ நிம்மதியா உயிர் விட்டு இருப்பே ....நான் அல்லவா ஒரு உயிரை காப்பாற்ற முடியவில்லையே என்று வாழ்க்கை முழுதும் அழுது இருப்பேன் ....தத்து பித்துன்னு உளறுது எருமை .)
அவள் தொடுகை .....அவள் வாசம் ....அவளின் எனக்கான தவிப்பு ..........எனக்கு பிடித்து இருந்தது .எனக்கே எனக்காக ஒரு உயிர் துடிக்கிறது அது எனக்கு அடிபட்டதால் தான் என்றாலும் ........காதல் கொண்ட மனம் அதற்கு பிடித்த வர்ணம் பூசி கொண்டது .
காதல் ..............அவன் அவனுக்கு எப்படி எப்படியோ காதல் வரும் ...........எனக்கு நடு ரோட்டில் ....ரத்த வெள்ளத்தில் உயிர்க்கு போராடும் சமயத்தில் காதல் வந்தது .....அதுவும் நல்லதிற்கு தான் .....அவளை கரம் பிடிக்க வேண்டும் என்ற வெறியே "பூட்ட கேஸ் "என்ற நிலையில் இருந்த என்னை மீட்டு வந்தது என்பது தான் நிஜம் .....நான் உயிர் பிழைத்தது அந்த தேவதையால் தான் .....அந்த தேவதைக்காக மட்டும் தான் ........அவளோடு வாழ வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே என் உயிர் பிழைத்ததோ என்று இன்று தோன்றுகிறது .
PENANCE WILL CONTINUE......